merry christmas to all

இறைவனின் திட்டம்


இயேசுவின் பிறப்பு ஒரு விபத்து அல்ல. மாறாக ஒரு நிகழ்வு. மனுக்குலத்தை பற்பல இறைவாக்கினர்கள் நீதிமான்கள் துறவியர் குலமுதுவர்கள் மூலமாக, மீட்கப் பலதிட்டங்களை இறைவன் ஏற்படுத்தி, மனிதனின் சிந்தனைகளைப் பக்குவப்படுத்தியபின், தமது ஒரே பேறான மகனை இவ்வுலகுக்கு அளித்த நிகழ்ச்சி தான் கிறிஸ்துமஸ். இயேசுவின் பிறப்பை "துநளரளஅயள" என்று சொல்லாமல் "ஊhசளைவஅயள" என்று ஏன் சொல்லவேண்டும்? உயிர்த்த இயேசுவின் பெயர் தான் கிறிஸ்து. நாம் இயேசுவாக மாறமுடியாது. ஆனால் கிறிஸ்துவாக மாறமுடியும்.

இயேசு கிபி 1 ஆம் ஆண்டில் பிறந்தார் என வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் இயேசு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஏன் பிறக்கவில்லை? மெசியா பிறப்பார், பிறப்பர் என்று பல இறைவாக்கினர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் கூறி வந்தார்கள். கடைசியாக ஒரு இறைவாக்கினர் மீட்பர் பிறப்பார் என அறிவித்தார். அதற்குப்பின் 400 ஆண்டுகள், இதைப்பற்றிய பேச்சே இல்லை. புயலுக்கு முன் அமைதி என்பது போல மீட்பர் பிறப்பதற்கு முன் யாரும் அவருடைய பிறப்பைப் பற்றிப் பேசவில்லை என்ன காரணம்?

மெசியா எனும் மீட்பர் பிறப்பதற்கு ஒரு தாய் தேவை. புராணங்களில் வரும் தெய்வமல்ல நம் இயேசு. நம்மைப் போலப் பிறந்தார். மனித உருவில் மானிடனுக்காகப் பிறந்தார். இயேசுவைப் பெற்றெடுப்பதற்கு ஒரு சரியான, புனிதமான, பக்தியான, நேர்மையான, அன்பு செய்யும் ஒரு தாய் தேவை - மகனை அனுப்ப கடவுள் தயார். ஆனால் ஒரு தாய் மண்ணகத்தில் கிடைக்கவில்லை. இறுதியாக ஒரு பெண் கிடைத்தார். அவர் தான் மரியா.

'கன்னி ஒருத்தி கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்" என்ற இறைவாக்கிக்கு ஏற்ப பல ய10தப் பெண்கள் கன்னிமை காத்து 'நம் வயிற்றில் மீட்பர் உருவாக வேண்டும்" எனக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் மற்ற எல்லாப் பெண்களும் உடலால் கன்னிமைக் காத்துக் கொண்டர்களே தவிர, ஆன்மாவால் ஆவிக்குரிய வாழ்வால் கன்னிமை காக்கவில்லை

கன்னிமை 3 வகைப்படும். 1. உடல் சார்ந்த கன்னிமை 2. ஆன்மாவுக்கு ஏற்ற கன்னிமை 3. ஆவிக்குரிய கன்னிமை. உடல்சார்ந்த கன்னிமையை நாம் அறிவோம். உலகைப் படைத்த இறைவன், படைப்புத்தொழிலை பெண்ணுக்குக் கொடுத்து விட்டு ஓய்வெடுத்தார். உடல் சார்ந்த கன்னிமை தாய்மைப் பேற்றினால் புனிதமாகிறது. அதுவே அலகையின் தூண்டுதலால் பாவமாகிறது.

ஆன்ம கன்னிமைத் தன்மை என்றால் என்ன? அறிவின் வழி கன்னிமைக் காத்துக் கொள்ளுதல். 'தூய ஆவி உம்மீது நிழலிடும். நீ கருத்தாங்குவீர்" எனும் வானத்தூதரின் மொழிகேட்டு 'இதோ ஆண்டவரின் அடிமை" எனத் தாழ்ச்சியுடன் இறைத்திட்டத்தை ஏற்றுக் கொண்டவர் மரியா.

ஆவிக்குறிய கன்னிமை என்பது ஆவியின் கனிகளை அப்பழுக்கின்றி பின்பற்றி இறைவனின் திட்டத்திற்கு ஏற்ப வாழ்வை அமைத்துக் கொள்ளுதல். எண்ணத்தாலும் கூட தீயவற்றை நினைக்காதவள்.

இம்மூன்று நிலைகளிலும் கன்னிமை காத்து புனித வாழ்க்கை வாழ்ந்துவந்த மரியாவை இறைவன் தேர்ந்தெடுத்தார். பழைய ஏற்பாட்டு நூல்களை பலமுறை வாசித்து, தியானித்து, தாம் பெற்றெடுக்கும் ஆண்மகனின் சிந்தனைகளில் தடம்பதித்து அவரைப் பெற்றெடுத்தவர்தாம் மரியா. மரியா தன் மகனின் பிறப்பு, வளர்ப்பு, பாடுகள், இறப்பு, உயிர்ப்பை முன் அறிந்தவர். எனவே தான் பழைய ஏற்பாட்டுக்காலம், இயேசுவின் காலம், புதிய ஏற்பாட்டுக்காலம் ஆகிய முக்காலங்களிலும் இருந்து மீட்பரோடு இணைந்து மகிழ்ந்தார். அவர் எதற்கும் அஞ்சியதில்லை. தன்னந்தனியராய் மாட்டுத் தொட்டிலிலே பெற்றெடுக்கும் தைரியம் யாருக்கு வரும்? தன்மகனுக்கு திருமணம் செய்து வைத்து வாரிசு பார்க்கும் குறுகிய புத்தியுள்ளவள் அல்ல நம் அன்னை. தம் ஒரே மகனே மீட்புத்திட்டத்தில் ஈடுபடச் செய்து உலகையே மீட்ட தாய் மரியா, சேய் இயேசு.

இயேசுவைப் பெற்றெடுக்கும் வரை மரியாவின் வாழ்வில் ஏற்பட்ட சோதனைகளை, சாதனைகளாக மாற்றியவர். இப்படிப்பட்ட இயேசுவைப்போல நாமும் உருவாகிடமுடியும். அது எப்படி? இயேசுவின் சொற்களை வாழ்வாக்கி, அவர்காட்டிய வழியில் சென்றால் நாமும் மீட்பராகலாம். தனிமனிதன் மீட்பு, சமுதாய மீட்பு இவ்விரண்டையும் நாம் பெற்றிட பாலகன் இயேசு நம்மை ஆசீர்வதிப்பாராக.



கிறிஸ்துமஸ் மடல்-2010

santa
home

வழங்கியவர்:
பேராசிரியர் அ.குழந்தைராஜ்
காரைக்குடி

 

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com