அன்பு

இயேசுவின் இனிய நாமத்தில் என் இனிய நெஞ்சங்களே!

டிசம்பர் மாதம் இறையண்ணல் இயேசு இவ்வுலகில் ஒரு குழந்தையாக பிறந்த பெரும் வைபவத்தைக் கொண்டாடுகின்றோம். மனிதன் கடவுளாகும் பொருட்டு கடவுளே மனிதனானார் என்று கூறுகிறார் புனித அத்தனாசியார்.

டவுளுக்கு ஒரே ஒரு மகன்தான் இருந்தார்.அவரை மனிதனின் மகனாக மாற்றினார். அவர் வழியாக மனிதனின் மக்களாகிய நம்மை கடவுளின் மக்களாக மாற்றியுள்ளார். இதைவிட மிகப்பெரிய கிருபை கடவுளிடமிருந்து வேறேதுவும் உதயமாயிருக்க முடியுமா? என்று எண்ணிப்பாருங்கள் என்கிறார் புனித அகுஸ்தினார்.


 
ம். இந்த நிகழ்வு நமது சிந்தனைக்கு எட்டா ஒன்று. நமக்கு மீட்புதர வேண்டுமென்று இறைமகன் இயேசு. மனிதனின் மகனாகப் பிறக்கின்றார் இந்த மண்ணுலகில். நாம் பாவப்பழியிலிருந்து விடுபட இயேசு பாவ நாட்டமுள்ள மனித சதையைத் தன்மேல் ஏற்று நம்மைப் பாவத்திலிருந்து மீட்க மனிதனானார். இந்தப் பெரிய பரம இரகசியத்தைத்தான் நாம் கிறிஸ்து பிறப்பு விழாவில் கொண்டாடுகிறோம். அமைதியின் அரசராக இயேசு இவ்வுலகில் பிறந்தார். இன்றைய சுர்;நிலையில் கடவுளை ஏற்றுக்கொள்ளாது விண்ணரசின் மதிப்பீடுகளின்படி மக்கள் நடவாததினால் இவ்வுலகும் அமைதி குலைந்து இருக்கின்றது.

ழ்மையில் தாழ்மையில் வந்த இயேசு இன்றும் நமது இதயத்தில் மீண்டும் பிறக்க வேண்டும். மரியாவைப்போல் நாமும் இயேசுவைக் கருதரிக்க வேண்டும். நாமும் அவரை இவ்வுலகிற்க்குத் தரவேண்டும். உலகம் இன்னும் அவரை முழுமையாக அறியாமலிருக்கின்றது. நாம்தான் திறந்த நற்செய்தி நூல். நாம் நமது வார்த்தைகளால் ஏழை எளியோர்க்குப் பணி புரிவோமாயின் இயேசு மீண்டும் இவ்வுலகில் நமது இதயத்தில், பிறரது இதயத்திலும் பிறப்பார்.

மைதியின் அரசாம் இயேசுவைத் தாங்கும் புனித கலங்களாக நாம் திகழ்வோமாக. இறையாசீர் என்றும் உங்களோடு இருப்பதாக.

divider

இயேசுவின் அன்பில்
தந்தை தம்புராஜ் சே.ச.
நன்றி - ஆவியின் அனல் டிசம்பர் 2002
 

a tamil catholic website based on the scripture acts 4:20 to share your experience in jesus and mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | email id: anbinmadal at gmail.com