இளைஞர் ஆண்டு - ஒரு முன்னேட்டம்.

செ.சில்வியா, சென்னை-84.

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் பல பருவங்களைக் கடந்து செல்கிறோம்.அதில் இளமைப் பருவம் தான் விலையேறப்பட்டது. ஒவ்வொரு இளைஞனும் இறைவார்த்தையின்படி வாழ்ந்தால் ஒரு நல்ல கிறிஸ்து அவன் - கிறிஸ்துவனாக வாழ முடியும். இதைத் தான் 'நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்" என்கிறார். (யோவான் 15: 7-8) புனித சாவியோகிறிஸ்து அவன் - கிறிஸ்தவன் என்கிறோம். ஆனால் மானிட உலகிற்கு அர்த்தம் தருவது அன்பு ஒன்று தான். இதைத்தான் விவிலியத்தில் (மாற்கு 12: 28-34) குறிப்பிடுகிறார். என்னை நீ அன்பு செய்வது போலப் பிறரை அன்புச் செய்தால் இறையாட்சியில் என்னோடு பங்குக் கொள்ளலாம் என்ற உன்னை அழைக்கிறார். (திருபா 71:17)
புனித சாவியோபுனித சாவியோகிறிஸ்து அவன் - கிறிஸ்தவன் என்கிறோம். ஆனால் மானிட உலகிற்கு அர்த்தம் தருவது அன்பு ஒன்று தான். இதைத்தான் விவிலியத்தில் (மாற்கு 12: 28-34) குறிப்பிடுகிறார். என்னை நீ அன்பு செய்வது போலப் பிறரை அன்புச் செய்தால் இறையாட்சியில் என்னோடு பங்குக் கொள்ளலாம் என்ற உன்னை அழைக்கிறார். (திருபா 71:17)

இளைஞர்களின் பாதுகாவலரான தூய டாமினிக் சாவியோவின் வழிமுறைகளான தூய்மை, இறைபக்தி, அன்பு, படிப்பு, கீழ்ப்படிதல், பெற்றோர்களை மதித்தல் ஆகிய நற்பண்புகளைப் பின்பற்றி வாழ்ந்து வர வேண்டும்.

இந்த இளமைப் பருவத்தில் பிள்ளைகள் இறைவனை விட்டு விலகி உலக நாட்டங்களான தீய நாட்டங்களை நாடி வழித் தவறிப் போவதுண்டு. இளம் உள்ளங்கள் தம் தவற்றை உணர்ந்து மன மாற்றம் பெற்று வாழ வேண்டும். இளைஞர்கள் இறைவேண்டலைப் பக்தியோடு விசுவசித்துப் பரிசுத்த ஆவியிடம் வேண்டினால், ஆவியின் கனிகளான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பரிவு, பொறுமை, தன்னலம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் பெற்று, பகைவருக்கு அன்பு, வெறுப்பவருக்கு நன்மை, சபிப்பவருக்கு ஆசீர், இகழ்பவர்க்கு இறைவேண்டல் செய்து தாழ்ச்சியும், ஞானமும் நிறைந்த உண்மையான நேர்மை வீரராகத் திகழ்ந்து இயேசுவைப் பின் பற்றி வாழ்ந்து ஒவ்வொரு செயலிலும் ஆர்வம், எழுச்சி, துடிப்புள்ள வேகம், விவேகம், பளிச்சிடப் பிரதிப் பலன் எதிர்பாராமல் செய்ய வேண்டும். மத்.7:6,12-14 அருள்வாக்கின்படி வாழாமல் இளைஞயுடன் இயேசு இருப்போர் கட்டுவோர் புறக்கணித்த கல்லேயே கட்டிடத்தின் மூலைக்கல்லாக மாறுவோம். அதற்காக இறைவனிடம் இளைஞர்களை ஒப்படைத்து அவர்களுக்காக வேண்டும். இளைஞயுடன் இயேசு

இளமையில் சுமை சுமப்பது எளிது. இளங்கன்றுப் பயமறியாது என்ற சொல்லிற்கேற்ப இளைஞர்கள் இளமைத் துள்ளும் தங்கள் ஆற்றலால் நல்லதொரு சமுதயத்தை, நல்லதொரு குடும்பத்தை, நல்லதொரு நாட்டைக் கட்டி எழுப்பும் பணியிலே வாழ வேண்டும். இறைவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ்ந்து நிலையான விண்ணக வாழ்வைப் பெற்றுக் கொள்ளுவோம்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  இளைஞர் ஆண்டு


sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்





A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com