header

மண்ணகம் வந்த இறைமகன்

கவிதை : கவிஞர் நெஞ்சத்தரசு
hands
விண்ணில் இருந்து
மண்ணகம் வந்து
மனுமகன் ஆனவர் இயேசு!-நம்
மன்னவன் ஆனவர் இயேசு!

அன்னையும் ஆகி
தந்தையும் ஆகி
ஆறுதலானவர் இயேசு!-நம்
ஆதரவானவர் இயேசு!

தொழுவில் பிறந்து
சிலுவை சுமந்து
ஆலயம் ஆனவர் இயேசு!-நம்
ஆண்டவர் ஆனவர் இயேசு!

கருவில் தொடங்கும்
வாழ்வைத் தொடர்ந்து
மேய்ப்பரும் ஆனவர் இயேசு!- நம்
மீட்பரும் ஆனவர் இயேசு!

தீபமும் ஆகி
பாதையும் ஆகி
தோழனும் ஆனவர் இயேசு!-நம்
தேவனும் ஆனவர் இயேசு!

வார்த்தையும் ஆகி
வாழ்க்கையும் ஆகி
வெற்றியும் ஆனவர் இயேசு!-நம்
வேதமும் ஆனவர் இயேசு!


நன்றி :மலர்க மனிதம் டிசம்பர் 2004

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com