மலரடி வணங்குவோம்..

திரு.அல்போன்ஸ்
Poondi Madha


மரியாள்
இதயம் விழித்து இறைமையை
தனிமையில் தவம் செய்த பெண்மை

மழைத்துளி பருகும் சாதக புல்
இறையருள் பருகும் மறைநாயகி

மரியே
இதோஉன் அடிமை எனக் கூறிய
சம்மதத்தின் மதிப்பு என்ன தெரியுமா?

உயிருள்ள நீர் தாழ்ந்து, பணிந்து, உன்னிடம்
உயிர் உருக உட்புகுந்து கொண்டது

காத்திருந்த சூரியோதயம் கருவறையில் உதித்தது
பூமி தன் தூக்கம் கலைய இறந்தோர் உயிர்க்க
மண்ணும் விண்ணும் கைகோர்த்து கொண்டது

இது வெறும் நிகழ்ச்சியல்ல வரலாற்று திருப்பம்
நீ சரியென்ற பொழுதான்
கிமு கிபி காலம் தொடங்கியது

சிங்கார வனத்தை ஆதி பெற்றோர்க்கு
திறந்த வைத்தான் ஆண்டவன்
அந்த வாசல் வழியே
பாம்பல்லவா படி ஏறி வந்தது

மரத்தில் அமர்ந்து மந்திரம் பேசி
கனியை தந்து தந்திரம் செய்தது
முடிவில் ஆதாம் ஏவாள்
அந்த அலகை குதிகாலில்
அழுத்தியவள் நீ

மூர்ச்சை தெளிவிக்கும் மூலிகையே
கிழக்காக வந்தவளே விளக்காக நின்றவளே

கூண்டுகள் திறந்து வைத்த பறவைகள் போல்
குதுகலத்துடன் உந்தன் மலரடி வருகிறோம்

இது உன்னுடைய ஆலயம்
எங்கள் ஆன்ம பறவைகளின் சரணாலயம்

இனி நாங்கள் என்றும் உன் ஆலயத்தில் ...
எம் வாழ்வு என்றும் மலரும் ஆனந்தத்தில் ...

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு மரியாளின் பக்கங்கள்