anbinmadal

சிலுவையும் ஒரு சிறகு தான்


அ.அல்போன்ஸ் - பெங்களுர்
corss

அருவியின் பயணம்
ஆற்றை நோக்கி

ஆற்றின் பயணம்
கடலை நோக்கி

கடலின் பயணம்
வானம் நோக்கி

கடவுளின் மைந்தன் பயணமோ
தந்தையை நோக்கி

தந்தையின் விருப்பமோ
கல்வாரி நோக்கி

இறை விருப்பம்
வகுக்கப்பட்ட வியூகங்களில்
பாடுகளின் விளிம்புதடவி
நெகிழ்ந்த அனுபவம்
சிலுவை பாதை

சிலுவையே
நீ கல்வாரி மலையில்
நின்றபிறகுதான்
இருண்ட ஆன்மாவிற்கு
இயேசு எனும் ஒளி
சுள்ளென்று உரைத்தது

உன்னை ஊன்றினார்கள்
பூமி வானத்தை
உரசி எடுத்தது
உன்னில்
இயேசுவை அறைந்தார்கள்
பூமி நடுங்கியது

உன்னால் தான்
உயிர்ப்பு எங்களுக்கு
அறிமுகம் ஆனது

உயிர்விட்டபொழுது
நீ ஓரு சிறுகதை
நாட்பட நாட்பட
அனைவருக்கும்
நீ ஒரு விடுகதை

சிலுவை சிந்திய
இயேசுவின் மொழிகள்
உள்ளத்தை வருடியது

சிலுவை வழியே
மரணம் அழிந்தது
மானுடம் உயர்ந்தது

விசுவாசம் இல்லாதபோது
சிலுவை ஒரு சுமைதான்

நம்பிககைமட்டுமிருந்தால்
சிலுவையும் ஒரு சிறகு தான்......

3kings
 


sunday homily



A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com