அற்புத குழந்தை இயேசு

திருமதி சகாயம்‌ லியோ திருச்சி.

பரிசுத்த ஆவியால்‌ கருவாகி, உருவாகி - தன்‌
உயிரையும்‌ தருவதற்கென்றே - மனிதனாக
கன்னி மரியின்‌ மடியில்‌ அற்புதமாக
பிறந்த அதிசய, அழகிய குழந்தைதான்‌
இயேசு பாலன்‌! உமது நாமம்‌ வாழ்க!!

மண்ணக மாந்தர்களின்‌ பாவங்களிலிருந்து
மீட்டு, மீட்பைக்‌ கொணர
உலக மீட்பராக, இரட்சகராக
நள்ளிரவில்‌, மாட்டுக்‌ கொட்டிலில்‌ -
அவதரித்த அன்புப்‌ பாலனே! நீவீர்‌ வாழி!! 

உலக ஜீவராசிகளின்‌ அதிபதியே!
அண்ணலே! உமது படைப்பில்தான்‌
எத்தனை எத்தனை அதிசயங்கள்‌!
அனைத்தும்‌ உம்‌ புகழ்‌ சாற்றட்டும்‌! - உமது
பிறப்பு எத்திக்கிலும்‌ பரவட்டும்‌!

உண்மையை நிலைநாட்டவே - தந்தையின்‌
திருவுளப்படி பிறந்து, மானிடர்களை நேசித்து
பிறரன்பில்‌ வாழ, வாழ்ந்து காட்டிடவும்‌
மன்னிப்பில்தான்‌ 'வாழ்வு' என்பதை உணர்த்தவே
குழந்தையாய்‌ இம்மண்ணில்‌ பிறந்தீரே!

அமைதியையும்‌ சமாதானத்தையும்‌ நிலைநாட்ட
அருளின்‌ ஊற்றாய்‌, இரு கரம்‌ விரித்து
இமைப்‌ பொழுதும்‌ பிரியாது உன்னோடிருந்து
வழிநடத்துவேன்‌ என்று கரம்‌ பிடிக்கும்‌
கருணை வள்ளலே! கொடையே! நீர்‌ போற்றப்படுவீராக!!
ஜெகன் மாதா மலர்
 மேலே செல்ல
மேலே செல்ல
 கிறிஸ்மஸ்மலர்
கிறிஸ்மஸ் மலர்
 அன்பின்மடல்-முகப்பு
அன்பின் மடல்

xmas