மண்ணகம் பிறந்த மாபரனே!

பிலோமினா அமலன்‌-திருச்சி

இயேசு பாலன்‌ பிறந்தாரே
மண்ணின்‌ மாந்தரை மீட்டிடவே
விண்ணின்‌ மகிமை துறந்தாரே
விடுதலை நாமும்‌ பெற்றிடவே!

மார்கழி மாதக்‌ குளிரினிலே
மாமரியின்‌ மடிதனிலே
வானவர்‌ கீதம்‌ முழங்கிடவே
வள்ளல்‌ இயேசு பிறந்தாரே!

வறியவர்‌ வாழ்வு வளம்‌ பெறவே
ஏழை எளியோர்‌ மகிழ்ந்திடவே
மனிதம்‌ மண்ணில்‌ மலர்ந்திடவே
மன்னன்‌ இயேசு பிறந்தாரே!

அன்பை நாமும்‌ உணர்ந்திடவே
ஆவியின்‌ அருளைப்‌ பெற்றிடவே
அமைதி நம்மில்‌ நிலைத்திடவே
நம்முள்‌ இயேசு பிறந்துவிட்டார்‌!
நன்றி-ஜெகன்‌ மாதா மலர்
 மேலே செல்ல
மேலே செல்ல
 கிறிஸ்மஸ்மலர்
கிறிஸ்மஸ் மலர்
 அன்பின்மடல்-முகப்பு
அன்பின் மடல்

xmas