பூமிக்கு வந்த முதல் நாளில்

ஆ. அல்போன்ஸ்

மீட்பின் வரலாறு சொல்லும் கவிதை

இறைமகன் இயேசுவின் மீட்பின் வரலாறு சொல்லும் கவிதை
லூக்காஸ் நற்செய்தியில் இயேசுவின் பிறப்பை இரண்டாம் அதிகாரத்தில் நம் உள்ளம் உணரும் வண்ணம் விளக்குகின்றார். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் உணர்ச்சின் தொடுவான்களை ஆசிரியர் அளந்து சொல்கின்றார்.
வாழ்க்கையின் உயரங்களுக்கும் ஆழங்களுக்கும் நம்மை அழைத்துச் சென்று அனுபவ செழுமையை வழங்குகின்றார்.
இரண்டாம் அதிகாரத்தில் (8-20) பதிமூன்று வரிகளில் வரும் இடையர்களின் செய்தி. இவை மூன்றும் தனித்தனியே மூன்று தளங்களில் விரிவாகப் பார்க்கலாம்.
1.   கதைத்தளம் 2. கருத்துதளம்  3. ஆன்மீகத்தளம்.
அவள் தலைபேறான மகனை ஈன்றெடுத்து துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தினாள் (லூக் 2:7) தங்கள் பெயரைப் பதிவு செய்யவந்த யோசேப்பும் மரியாளும் பிறந்த குழந்தையை முன்னிட்டியில் கிடத்தினார்கள்.

கதைத்தளம்

முதலில் கதைத்தளத்தைப் பார்ப்போம்.
இயேசுவை துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்திய கணமே லூக்காஸ் அடுத்த வரியிலேயே முதன்முதலாய் ஆண்டவரின் தூதர் விண்ணெளிசுடர் சூழ மீட்பர் பிறந்ததை இடையர்களுக்கு அறிவிக்கின்றார்.
உன்னதரின் மகனை ஆண்டவராகிய மெசியாவை, இயேசு பிறப்பை ஏரொது அரசனுக்கோ, தலைமை குருக்களுக்கோ, படித்தாறிஞர் பரிசேயர்களுக்கோ, அறிவிக்கவில்லை. முதன் முதலாய் இடையர்களுக்குத்தான் அறிவிக்கப்படுகின்றது.
விடுதலையை எதிர்பார்த்து தேவாலயத்தில் வாழ்ந்து வந்த அன்னா என்ற இறைவாக்குரைப்பவளுக்கும், மீட்பரை பார்க்காமல் சாகமாட்டேன் என்று வரம் வாங்கி காத்திருக்கும் சிமியோனுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
பொதுவாகப் பழைய ஏற்பாட்டில் பக்கங்களைப் புரட்டினால் மோசஸ், தாவீது போன்ற ஆடுகளை மேய்த்தவர்களுக்கே அந்தப் பாக்கியம் கிடைக்கின்றது.
இந்த இடையர்கள் யார்?
இரவெல்லாம் விழித்திருந்து ஆடுகளை ஓநாய்களிடம் இருந்தும், திருடர்களிடமிருந்தும், காவல் காத்துக்கொண்டிருப்பவர்கள்.
வானதூதர் தோன்றி இடையர்களுக்கு “அஞ்சாதீர் மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கின்றேன். இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா. குழந்தை ஒன்றை துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தி இருப்பதை காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அறிகுறியாகும்.” என்றார். (லூக் 2:10-12) பின் புகழ் பாடல் பாடி வானகம் சென்றனர். வானதூதர் அறிகுறியை மட்டும் கூறினார்; ஆனால் அவர்களைப் போய்ப் பாருங்கள் என்று கூறவில்லை.
இடையர்கள் செய்ததென்ன?
இடையர்களோ ஒருவரையெருவர் நோக்கி வாருங்கள் போய் நமக்கு அறிவித்த நிகழ்ச்சியைக் காண்போம் (லூக் 2:15) என்று கூறிக்கொண்டே விரைந்துசென்று துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தியிருந்த குழந்தையைக் கண்டனர்.
இங்கே நாம் கவனிக்கவேண்டியது: இரவுமுழுவதும் காவல் காத்துக் கொண்டிருப்பவர்கள் அப்படியே ஆடுகளை விட்டுவிட்டு விரைந்து சென்றதை
அங்குச் சென்றவர்கள் தமக்கு கூறப்பட்டதை கண்டு சுற்றியுள்ள அனைவருக்கும் அறிவித்தனர். பின் தாம் கண்டதை, கேட்டதெல்லாம் நினைத்துக் கடவுளை மகிமைப்படுத்திக் கொணடே திரும்பினர். வெள்ளை மனம் படைத்த இடையர்கள்.
தொழுவத்தில் துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தியிருந்த குழந்தை, ஆண்டவராகிய மெசியா என்பதை இடையர்கள் எந்தவித சந்தேகமோ, கேள்வியோ இல்லாமல், கண்டு வியந்ததோடு மட்டுமல்லாமல், சுற்றியுள்ளானைவருக்கும் அறிவித்த அந்த வெள்ளை உள்ளங்கள் கடவுளின் பிள்ளைகள்தான்.
வானதூதரின் செய்தி என்ன?

மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி

ஆம். இறைமகன் இயேசு இஸ்ரயேல் குலத்திற்கு மட்டும் அல்ல மக்களுக்கெல்லாம் என்பதை அறிய வேண்டும். அவர் உலகமீட்பர் ஆண்டவராகிய மெசியா
அப்படிபட்ட தெய்வமகன் பிறந்த இடம் தொழுவம்.
அதில் துணிகளில் சுற்றப்பட்ட குழந்தைதான் மெசியா என்றால் பொதுவாக யாரலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இடையர்கள்; யாரும் அதில் சிறிதளவேனும் சந்தேகம் கொள்ளாமல்
அரசாகப்போகின்றவர், மெசியாவானவர் உயர்ந்த மாடமாளிகையில் ஊரே விழாகோலகொண்டு கொண்டாடுகின்ற நிகழ்ச்சிக்கு முற்றிலுமாக எதிராக ஒரு தொழுவத்தில் பிறந்துள்ளார் என்பதை விசுவசித்துசென்றார்.
இதுவரையில் பார்த்த கதையின் போக்கில் நடக்கின்ற சம்பவங்கள். இந்தச் சம்பவங்களின் மூலமாக நமக்கு என்ன சேதி; சொல்லுகின்றார்கள் என்பதை படித்து உணர வேண்டும்.
இயேசு பிறந்தபொழுது : மகனை ஈன்றெத்து, துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தினாள். (லூக் 2:7)
இடையர்களுக்கு அறிகுறியாகக் குழந்தை ஒன்றை துணிகளில் பொதிந்து இருப்பதை காண்பீர்கள். (2:12)
விவிலியத்தில் ஒரு வார்த்தை பயன்படுத்தியை வேறொரு இடத்தில் மீண்டும் பொதுவாகப் பயன்படுத்துவது கிடையாது. அப்படி மீண்டும் மீண்டும் வரும்பொழுது அதைச் சற்று ஆழமாய் சிந்திக்க வேண்டும்.
துணிகளில் பொதிந்து என்று இருமுறை காணப்படுகிறது. அக்காலத்தில் ஊர்விட்டு ஊர் செல்லும்பொழுது ஆண்கள் தன்னுடைய உடம்பில் ஒரு துணியைச் சுற்றிக்கொண்டு அதன் மேல் தன் ஆடையை அணிந்து கொள்வார்கள. தூரதேசங்களில் செல்லும்பொழுது வழியில் யாராவது இறந்து போனால்
அப்பொழுது அந்தத் துணியை எடுத்து இறந்தவரின் மேல் முழுவதுமாக் சுற்றிபயணம் முடியும் வரையில் பாதுகாப்பாகக் கொண்டுவந்து அதை அடக்கம் பண்ணுவார்கள்.
சூசையானவர் தான் கொண்டுவந்திருந்த அந்த இறந்தவர்களுக்கு சுற்றும் துணியைதான் இயேசு பிறந்தபொழுது எடுத்து அதில் சுற்றி வைத்தார்.
இயேசு தெய்வமாக இருந்து மானிடனாகப் பிறந்தபொழுது துணியைச் சுற்றி குழந்தையைக் கிடத்தினார்கள். துணி மானுடத்திற்கு உருவமாக உள்ளது.
அவரை முதன் முதலில் தரிசித்த இடையர்கள் யார் தெரியுமா?
பொதுவாகப் பலியிடப்போகும் ஆடுகளை மேய்ச்சல் பார்த்துக் கொண்டிருப்பவர்கள், பலியிடுவதற்கான ஆடுகளைத் தேவாலயத்திற்க்கு கொண்டுவருபவர்கள் - அதற்காகக் காத்துகொண்டிருப்பவர்கள்.
குழந்தையைச் சுற்றியது சாவுக்குரிய ஆடை.
வந்து பார்த்தவர்கள் பலியிடும் ஆட்டைக் காப்பவர்கள் என்ன பொருத்தம்.

கருத்துதளம்

வானதூதர்கள் - இடையர்கள் குழந்தை இயேசுவின் சந்திப்பு கதைதளம்.
இந்தத் தளத்திற்கு அடுத்தாற்போல் இடையர்களின் செய்தி கூறும் கருத்து தளத்திற்கு செல்வோம்.
இடையர்களுக்கு கூறிய அடையாளங்கள் சொல்லும் செய்திகளின் கருத்தைக் கொஞ்சம் கவனமாகப் பார்ப்போம்.
லூக்காஸின் வரிகளை மறுவாசிப்பு செய்வோம்.
துணிகளில் பொதிந்துமுன்னிட்டியில் கிடத்தி” (லூக் 2:7)
துணிகளில் பொதிந்துமுன்னிட்டியில் கிடத்தி” (லூக் 2:12)
முன்னிட்டியில் கிடத்தியிருந்த” (லூக் 2:16)
லூக்காஸ் பத்து வசனங்களுக்குள் மூன்று தடவை முன்னிட்டியும், இரண்டுதடவை துணிகளையும் தெளிவாகக் கூறிவிடுகின்றார்.
துணி மானுடத்திற்கு உருவமாகவும் உள்ளது.
லூக்காஸ் தன் நற்செய்தியில் பிறப்பின் பொழுது தொழுவத்தில் முன்னிட்டியில் துணிகளையும் அடையாளமாகக் கூறி, அதனால் குழந்தை மெசியா எனாறிந்து வியப்படைந்து அனைவரும் அறிவித்து மகிழ்ந்து திரும்பினர். மீண்டும் மீண்டும் கூறி இங்கே ஒரு முடிச்சு போடப்படுகின்றது.
லூக்காஸ் போட்ட முடிச்சு அவிழதொடங்கும் இடம் இயேசுவின் கல்லறை.
இயேசு பிறக்கும்பொழுது கூறுபவைகளை பார்த்தோம்.
தொழுவத்திற்கும் கல்வாரிக்கும் தொடர்பூண்டு.
இப்பொழுது லூக்காஸ் இயேசு இறக்கும்பொழுது கூறுபவைகளை கவனிப்போம்.
நற்செய்திகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மிக நுணுக்கம் வாய்ந்தவை.
இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கிக் கோடிதுணியில் சுற்றி பாறை குடைந்த கல்லறையில் அடக்கம் செய்தார். (லூக் 23:54)
வந்திருந்த பெண்களும் கல்லறையையும், உடலை அங்கு வைத்த விதத்தையும் கவனித்தனர். (லூக் 23:55)
பேதுருவோ எழுந்து கல்லறைக்கு ஓடினார் குனிந்து பார்க்கையில் துணிகள் மட்டும் கிடக்க கண்டார். (லூக் 24:12)
இங்கேயும் மூன்றுதடவை கல்லறையையும், இரண்டுதடவை துணிகளையும் கூறுகின்றார். இங்குத் துணிகளும் கல்லறையும் மீண்டும் மீண்டும் காணப்படுகின்றது.

இயேசு உயிர்ப்பின் பொழுதுத் துணிகள் மட்டும் தனியே கிடக்கின்றது. மானுடத்தை விட்டுவிட்டு தெய்வமகனாக விண்ணகம் சென்றார்.
துணிகள் மானுடத்திற்கு உருவகம்.
இங்கும் வானதூதர் வருகின்றார்.
சீடர்கள் துணிகளையும் காலியான கல்லறையும் பார்த்து இயேசு உயிர்த்தார் என்று விசுவசித்து வியந்துகொண்டே வீடு திரும்பினர். (24:12)
பிறப்பிலும் உயிர்ப்பிலும் சம்பவங்கள் இணையாகக் காண்கின்றன.
பிறப்பின் பொழுது இடையர்கள் முன்னிட்டியில் துணிகளில் பொதிந்து இருக்க குழந்தையைக் காணுகின்றனர்.
உயிர்ப்பிலே சீடர்களும் பெண்களும் கல்லறையில் துணிகள் மட்டும் காண்கின்றனர்.
தொழுவத்திற்கும் கல்வாரிக்கும் தொடர்பு உண்டு.
இடையர்கள் மெசியாவாகக் காண்கின்றனர்.
சீடர்கள் உயிர்த்த கிறிஸ்துவாகக் காண்கின்றனர்.
இடையர்கள் இயேசுவை கண்டு மெசியாவாக உணருகின்றனர்.
சீடர்கள் கிறிஸ்துவை காணாமல் உயிர்ப்பை விசுவசிக்கின்றனர்;
அதாவது தேடுங்கள் கண்டடைவீர்கள் என்ற இயேசுவின் வார்த்தை இடையர்களிடம் தொடங்கி தேடுங்கள் காணமாட்டிர்கள் என்றுசீடர்கள் நிலைவரை.
அதாவது காண்பதில் தொடங்கி காணாததில் நிறைவு என்பதை
லூக்காஸ் தொழுவத்தில் தொடங்கி கல்வாரியில் நிறைவுசெய்கின்றார்
பிறந்தபொழுது யோசேப்பு கொண்டுவந்திருந்த ஆடையைச் சுற்றிவைத்தனர்.
இறந்த பொழுதோ யோசேப்பு என்பவருடைய கல்லறையில் அடக்கம் பண்ணினார்கள்.
கல்வாரியில் பின் நிகழ உள்ளதை, முன் உணர்ந்து இடையர்களுக்கு அடையாள செய்தியாகக் கூறுவதை காண்கிறேம்.
லூக்காஸ் சொல்லவரும் செய்திஎன்ன?
காண்பவற்றையல்ல காணாதவற்றை நோக்கிய வண்ணம் நாம் வாழ்தல் வேண்டும். (ரோம 8:25)
நற்செய்தி மூன்று தளங்கள் உடையது இவை மூன்று தனித்தனியே எண்ணரும் நலங்கள் உடையவை.
இடையர்கள் கதையை கண்டோம்.
இந்த கதையின் வாயிலாக வாழ்க்கை அலசல்கள் விசுவாசத்தின் செயல்கள் எண்ணற்ற சிந்தனை தீபங்களை, கருத்துக்ளை, தெளிவுபடுத்தியது.
இப்பொழுது மூன்றாவது தளமான ஆன்மீகத்தளத்திற்கு செல்வோம்.
இறுதியாக மீண்டும் எழிலோடும் ஏற்றத்தோடும் அதை வாசிப்போம்.

ஆன்மீகத் தளம்

ஆன்மா என்றால் என்ன? அதைஎப்படிஅறிவது?
அதன் அனுபவஎல்லைக்கு எப்படிசொல்வது?
இடையர்கள் வரவால் அன்னைமரியின் அனுபவங்களை லூக்காஸ் தெரிவிக்கின்றார்.
அவர் கூறும் செய்தி இதுதான்.
இடையர்கள் எல்லோரும் கண்டதை, சொன்னதை எல்லோருக்கும் அறிவித்தார்கள். குழந்தையைச் சுற்றியுள்ள அனைவரும் இடையர்களின் மொழிகேட்டு வியப்படைந்தனர்.
மரியாளும் வியப்படைந்திருக்க வேண்டும் லூக்காஸ் தெளிவாக எழுதுவார்.
கேட்டயாவரும் தங்களுக்கு இடையர்கள் கூறியதுபற்றி வியப்படைந்தனர் மரியாளே இந்நிகழ்ச்சிகளையெல்லாம் உள்ளத்தில் இருத்தி சிந்தித்து வந்தாள்.(லூக் 2:20)
ஆன்மீகம் என்பது அகத்தில் ஒடுங்கும் அனுபவமாக விளக்கப்பட்டாலும் அது அகத்தில் விரிந்து எல்லையற்றதாகிறது.
அனைவரையும் தன் மக்களாக ஏற்றுக்கொள்ளும் தாய் தன் ஆன்மீக பயணத்தில் செல்லும் நிலையைக் காட்டுகின்றார்.
புலன் சார்ந்த மனத்தளத்திலிருந்து ஆன்மதளத்திற்கு எடுத்துசெல்லும் முயற்சியில் நற்செய்திகள் சிகரநிலை பெறுகின்றது அனைத்தையும் தன் உள்ளத்தில் சிந்திக்கும்
மௌனமாய் ஒரு தவத்தைசெய்யும் - மரியாளை தொடர்ந்துவாசிப்போம்.
இன்றைக்கு எல்லோருக்கும் தாயாகிய மரியாளின் ஆன்மீக வாழ்வை அழகாக எடுத்துரைக்கின்றார். ஏனெனில் லூக்காஸ் தனது இரண்டாம் அதிகாரத்தில் இருபதாவதுவரியில் கூறிய அதேவார்த்தைகளை அதிகார முடிவில் 52வது வரியில்
“தாய் இந்நிகழ்ச்சிளையெல்லாம் தன்னுள்ளத்தில் கொண்டிருந்தாள்” என்பதை கூறுகின்றார்.
மரியாள் இயேசுக்கு தாயானவள் இனிமேல் உலகோர் அனைத்தும் தாயாக போகின்றவள் அவள் செல்லும் அந்த ஆன்மீகதளத்தை நோக்கிப் பயணம் காட்டபடுகின்றது. தனக்காக வந்த செய்திகளை உள்வாங்கிக் கொண்டு சிந்தித்துவந்தாள்.
அப்படி என்ன சிந்தனைகள்.?
கபிரியேலின் வாழ்த்து - கன்னிதாயானது.
எலிசபெத்தின் வாழ்த்து - மலடி எலிசபெத்து தாயானது - சந்திக்கும்பொழுது குழந்தை துள்ளியது.
யோசேப்பின் சந்தேகமும் தெளிவும்
ஊமை சக்கரியாசு பேசதொடங்கியது.
ஆகஸ்து அரசரின் ஆணை - பெத்லேகம் பயணம் - தொழுவத்தில் பெற்ற குழந்தை - ஆண்டவராகிய மெசியா தாவீது அரியணையில் அமரபோகிறவர் என்ற இடையர்களின் செய்தி.
இவையெல்லாம் மீறித் தேவாலயத்தில் கண்ட இயேசு
அப்பொழுதும் லூக்காஸ் இதே வரிகளை மீண்டும் எழுதுகிறார்.
மரியாள் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தன்னுள்ளத்தில் கொண்டிருந்தாள். (லூக் 2:51)
மரியாள் தன் எல்லாகாலமும் கடவுள் சிந்னையோடு தியானித்தவளாய் தவமாற்றினாள். தவம் என்பது ஒருபயணம். அதுவே இலக்கு அல்ல.
தொடர்முயற்சிதான் தவம்.;
மனத்தவத்தின் மாண்பால் தான் இதோ உன் மகன் என்று கிறிஸ்து நம்மைக் காட்டும்பொழுது ஏற்றுக்கொள்கின்றாள்.
உள்ளத்தில் செய்ததவம் தான் உலகனைத்துமான தாய்மை உணர்வு உருகியது. இயேசு பிறந்தபொழுது உள்ளத்தில் மகிழ்ந்து மொட்டாக அரும்பி காயாகிகனிந்து மலர்ந்து கல்வாரி சிலுவையடியில் பரிமளிக்கின்றது.
இடையர்கள் வரவால் அவர்கள் கூறிய அடையாள சொல்லும் கதையைப் பார்த்தோம்.
கருத்தைப் பார்த்தோம்.
அவர்கள் சொல்லை உள்ளத்தில் சிந்தித்த மரியாளைப் ஆன்மீகத்தில் பார்த்தோம்.
நாமும் உள்ளத்தில் சிந்திப்போம்

 மேலே செல்ல
மேலே செல்ல
 கிறிஸ்மஸ்மலர்
கிறிஸ்மஸ் மலர்
 அன்பின்மடல்-முகப்பு
அன்பின் மடல்

xmas