கிறிஸ்தவ வாழ்வு என்பது செபம், விடாமுயற்சி என்ற இரு ஆயுதங்களால் மட்டுமே வெற்றி அடைய முடியும் என்பதை உணர்த்துகின்றது இன்றைய வார்த்தை வழிபாடு. செபம் என்பது மனித உறவை வளர்க்கும் ஓர் உன்னதமான கலை. இறைவன் முன்னிலையில் வாழ்வின் அர்த்தத்தைத் தேடுவதே செபம். இறை-மனித உறவில் நிலைத்திருக்கச் செபமும், விடாமுயற்சியும் இரண்டு கண்கள் போன்றது. இறைவனின் துணையில்லாமல், நமது முயற்சி மட்டும் பயனளிக்காது.
இன்றைய முதல் வாசகம் (விப. 17:8-13) செபத்தின் வல்லமைக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு. இஸ்ரயேல் மக்கள் அமலேக்கியரோடு யோசுவா தலைமையில் போர் புரிந்தனர். மோசே கடவுளின் கோலை கையில் பிடித்தவாறு தன் கையை உயர்த்தியிருக்கும் போதெல்லாம், இஸ்ரயேல் மக்களுக்கு வெற்றி கிடைத்தது. கையைத் தளர விட்டபோதெல்லாம் பகைவர்கள் வெற்றியடைந்தனர். இதனால் தளர்வுற்ற மோசேயின் கைகளை ஆரோன், கூர் இருவரும் தாங்கிப் பிடிக்க வெற்றி கிட்டியது. அதேபோல் நமது கைகளை உயர்த்திச் செபிக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது இந்த வாசகம்: தளர்ந்து போன கைகளைத் திடப்படுத்துங்கள். தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள் (எபி. 12:12).
நாம் மனந்தளராமல் செபிக்க வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தியில், நேர்மையற்றவரும், கைம்பெண்ணும் என்ற உவமை வாயிலாக இயேசு உணர்த்துகிறார்.
நீதி கேட்டு, நடுவரிடம் சென்ற கைம்பெண்ணை நடுவர் இழுத்தடிக்கிறார். ஆனால் கைம்பெண் விடாது நச்சரித்ததால், அவளுடைய தொல்லை தாங்க முடியாமல், அப்பெண்ணுக்கு நீதி வழங்குகிறார். நேர்மையற்ற நடுவரே தொல்லை தாங்காமல் நீதி வழங்கினாரென்றால், நீதியுள்ள, இரக்கமுள்ள கடவுள் தம்மிடம் இடைவிடாது மன்றாடுவோரின் மன்றாட்டை நிச்சயமாகக் கேட்பார் என்பது உறுதி (மூன்றாம் வாசகம்).
இயேசு தனது பணி வாழ்வு முழுவதும், தந்தையோடு உள்ள செப உறவில் நிலைத்திருந்தார். விடியற்காலையில் கருக்கலோடு எழுந்து செபித்தார். மாலையானதும் தனிமையாய் மலைக்குச் சென்று செபித்தார் (லூக். 6:12). ஒவ்வொரு நிகழ்ச்சியைத் தொடங்கு முன்பும், முழந்தாளிட்டும், கைகளை விரித்தும், கண்களை வான் நோக்கியும், முகம் குப்புற விழுந்தும் செபித்தார் என விவிலியம் தருகிறது. எனவேதான் திருத்தூதர் பவுல் கூறுகிறார், இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் (1 தெச. 5:17) என்று.
ஒரு துறவியிடம் சீடர்கள், “மிகப் பெரிய பாவம் எது?” என்று கேட்டார்கள். துறவி சிரித்துக் கொண்டே, “திருடுவது, பொய் சொல்வது, ஏமாற்றுவது அல்ல. மாறாக, கிறிஸ்தவர்களாக வாழ்ந்து கொண்டு செபிக்காமல் இருப்பதுதான் மிகப் பெரிய பாவம்? என்றார். ஆனால் மன்றாடுவது மட்டும் போதாது, மனம் தளராமல் தொடர்ந்து மன்றாட வேண்டும். எனவேதான் என் நாட்டிற்கு ஆற்றும் முதல் தொண்டு என் தேசத்திற்காக செபிப்பதுதான்; அதுவும் இடைவிடா செபத்தின் மூலம்தான் தேசத்தை வெற்றிகரமாக வழி நடத்த முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார் மன்னரான புனித 9ஆம் லூயி. செபம் மனித வாழ்வை நிலைப்படுத்தி, பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. முயற்சிக்கு நல்ல முடிவினைத் தருகிறது. கடவுள் கொடுப்பதை மனிதர் தடுக்க முடியாது; கடவுள் தடுப்பதை மனிதர் கொடுக்க முடியாது. முடிவாக, கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இணைந்து செல்ல, கடவுள் உதவி செய்வார்.
“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்” (குறள் 619).
மனமே மயங்காதே !
நற்செய்தியிலே வருகின்ற கைம்பெண் நீதி கேட்டு நகர நடுவரிடம் மன்றாடூகின்றார். நெடூங்காலமாகியும், கைம் பண்ணின் எதிரியைத் தண்டித்து, நீதி வழங்க நடூவர் மறுத்துவிடுகின்றார். விதவைகள் புறக்கணிக்கப்பட்ட காலமது. விதவை விடவில்லை. அவரது தொல்லையைத் தாங்கிக்கொள்ள சக்தியற்றவராய் நேர்மையற்ற நடூவர் நீதி வழங்குகின்றார். இந்த உவமையின் வழியாக இயேசு நமக்குக் கற்பிக்கும் பாடம், மனந்தளராமல் எப் பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் (லூக் 18:1) என்பதாகும்.
இடைவிடாது தொடர்ந்து மோசே செபித்தபோது இஸ்ரயேலர் போரில் வெற்றி பெற்றதாக முதல் வாசகம் கூறுகின்றது.
நமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நாம் இடைவிடாது, மனம் தளராமல் மன்றாட வேண்டும்.
நமது மனத்தைத் தளர விடாமல் வைத்துக்கொள்ள நாம் செய்ய வேண்டியவை எவை?
மனம் என்பது ஒரு காசு போன்றது. மனத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன : ஒன்று அறிவு, மற்றொன்று ஆசை.
புலன்கள் வழியாகக் கிடைக்கக்கூழய அனைத்துச் செய்திகளையும் ஒருங்கிணைத்து, அவற்றை அறிவு ஆசைக்கு முன் வைக்கும். ஆசையின் முடிவை அறிவு பின்பற்றும். ஆசை இதைச் செய் என்றால், அறிவு புலன்களுக்குக் கட்டளை பிறப்பிக்கும்; புலன்கள் செயல்படும். ஆசை இதைச் செய்யாதே என்றால் அறிவு அமைதியாக இருந்துவிடும்.
அறிவு மன்றாட்டைப் பற்றிய நேர்மறையான எண்ணங்களை ஆசைக்கு முன்னால் வைக்கும்போது ஆசை பச்சைக்கொடி காட்ட நமது மனம் தொடர்ந்து மன்றாடத் துவங்கும்.
முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஆன் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் ஓர் ஆன்மிகவாதி. அவரை மக்கள் நேசித்தார்கள். அவர் எந்த வேலையையும் செய்வதில்லை. மக்கள் அவருக்கு உண்ண உணவு கொடுத்தார்கள் ; உடுக்க உடை கொடுத்தார்கள்.
ஒரு நாள் ஆனிடம், நீங்கள் நாள் முழுவதும் என்ன வேலை செய்கின்றீர்கள் ? என்று ஒருவர் கேட்டார்.
நான் காளைமாட்டைப் பராமரிக்கின்றேன் என்றார். நீங்கள் காளைமாட்டை எப்படிப் பராமரிக்கின்றீர்கள்? என்றார் கேள்வி கேட்டவர். ஆன்,காளைமாடு புல்லில் வாய் வைக்கப்போகும் போதல்லாம் மூக்கணாங்கயிற்றைப் பிடித்து பின்னால் இழுத்து விடுவேன் என்றார். கேள்வி கேட்ட கியூ இஷான், நீங்கள் காளைமாட்டைச் சரியாகப் பராமரிக்கின்றீர்கள் என்றார். ஆன் காளைமாடு என்று குறிப்பிட்டது அவரது சுயத்தை.
நமக்குள்ளிருக்கும் அறிவு உடலைச் சார்ந்தது. ஆகவே, உலகச் சூழ்நிலைகளாலும் அனுபவங்களாலும் கல்வி முறைகளாலும் பாதிக்கப்படூம்போது அறிவு பாதிக்கப்படும். பல சமயங்களில் பாதிக்கப்பட்ட உடலால் களைப்பு, வெறுப்பு, அவநம்பிக்கை போன்ற விதைகள் அறிவு என்னும் நிலத்தில் விதைக்கப்படலாம். அப்படி விதைக்கப்படும்போது அவற்றை ஒரு வினாழகூட தாமதிக்காது அப்புறப்படுத்திவிடவேண்டும். அப்புறப்படூத்தப்பட்ட இடத்திலே இறையன்பு, இறை நம்பிக்கை, உற்சாகம் போன்ற விதைகளை, எண்ணங்களை விதைக்க வேண்டும்.
அறிவு நல்லனவற்றை ஆசையின் அழகளில் வைத்தாலும் பல சமயங்களில், சரியானதைத் தேர்ந்தெடுக்கக்கூஜய ஆற்றல் இல்லாமல் ஆசை தத்தளிக்கக் கூடும். அப்படிப்பட்ட நேரங்களிலே நமக்குள் வாழும் [உரோ 8:9-11] இயேசுவின் ஆவியாரை நாம் உதவிக்கு அழைக்க வேண்டூம். அவர் நமது பயணத்தில் நம் சோர்வைப் போக்கி நமது பயணத்தை உற்சாகத்தோடு தொடர உதவுவார். தூய ஆவியாரின் துணை கேட்பவர்களுக்குக் கிடைக்கும் [லூக் 11:9-13]. தூய ஆவியாருக்கு அடூத்தபடியாக நமக்கு ஞானத்தை அளித்து, நாம் நேர்மையாக வாழ நம்மைப் பயிற்றுவிக்கும் ஆற்றல் கடவுளின் தூண்டுதல் பெற்ற மறைநூலுக்கு உண்ட (இரண்டாம் வாசகம்]. மேலும் அறிவோம் :
எண்பொருள வாகச் செலச்சால்லித் தான்பிறர்லாய்
நுண்எபாருள் காண்பது) அறிவு (குறள் : 424).
பொருள் : அரிய செய்தியை எளிமையாக எவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் தெளிவாகக் கூறுவது அறிவின் ஒரு கூறு. பிறர் கூறும் நுணுக்கமான பொருளையும் எளிதாகக் கண்டு தெளிவது அறிவின் மற்றொரு கூறு ஆகும்.
ஆர்க்கமெடிஸ் என்ற அறிவியல்மேதை நெம்புகோல் என்னும் தத்துவத்தைக் கண்டுபிடித்தார், இந்தத் தத்துவத்தைக் கொண்டு மிகவும் சனமான பொருள்களை அவற்றின் மையப்புள்ளி மூலம் மிகவும் உயரத்தில் தூக்க முடியும், ஆர்க்கமெடிஸ் ஒருமுறை கூறினார்: “உலகின் மையப் புள்ளியை எனக்குக் காட்டுங்கள். நான் என்னுடைய நெம்புகோல் மூலம் உலகையே உயர்த்திக் காட்டுகிறேன்.” ஆனால் அவர் அவ்வாறு செய்து காட்டவில்லை. உலகையே உயர்த்தும் நெம்புகோல் செபம் என்பதை இன்றைய அருள்வாக்கு வழிபாடு எடுத்துரைக்கிறது.
இன்றைய முதல் வாசகம் (விப 17:8-13) செயத்தின் வல்லமைக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு. இஸ்ரயேல் மக்கள் அமலேக்கியர் என்ற இனத்தாருடன் யோசுவா தலைமையில் போர் புரிந்தனர். அப்போது மோசே கடவுளின் கோலை கையில் பிடித்தவாறு தம் கையை உயர்த்தியிருக்கும் போதெல்லாம், இஸ்ரயேல் மக்களுக்கு வெற்றி கிடைத்தது. ஆனால் அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் பகைவர்கள் வெற்றியடைந்தனர். மோசேயின் கைகள் தளர்வுறாது அவரது இரு கைகளையும் ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமும் தாங்கிக் கொண்டனர். யோசுவா அமலேக்கியரை அழித்தொழித்தார்..
மோசே கையிலிருந்த கடவுளின் கோல்தான் செபம் என்னும் நெம்புகோல். அதை மோசே உயர்த்தியபோது கிடைத்தது வெற்றி: அக்கோலைத் தளர விட்டபோது கிடைத்தது தோல்வி, எனவே நாமும் நம் கைகளை உயர்த்திச் செபிக்க வேண்டும். எபிரேயர் திருமுகம் நமக்கு விடுக்கும் அழைப்பு; “தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள், தள்ளாடும் முழங்கால்களை உறுதிப் படுத்துங்கள்” (எபி.12:12.)
இன்றைய பதிலுரைப்பாடல் கூறுகிறது: “எங்கிருந்து எனக்கு உதவி வரும்? விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும்" (திபா 121:1-2). ஆம், உதவி நமக்குக் கடவுளிடமிருந்து வரும். அவர் நாம் வெளியே போகும் போதும் உள்ளே வரும் போதும், எப்போதும் காக்கின்றார் (திபா 121:8),
ஒர் இறையியல் கருத்தரங்கில் பங்கேற்ற ஓர் அருள்சகோதரிமிடம், “கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட மையக்கருத்து என்ன?” என்று கேட்டதற்கு அவர் கூறினார்: "செபத்தில் வாழ்க்கையை வீணாக்காமல் மடத்தைவிட்டு வெளியே வாருங்கள். களப்பணியில் குதியுங்கள். ” செபத்தை விட்டு களப்பணியில் குதிப்பவர்கள் பெரும்பாலும் வன்முறையில் இறங்குவார்கள். விழித்திருந்து செயிக்கும்படி பேதுருவை இயேசு கேட்டார். ஆனால் அவர் செபிக்கவில்லை. கத்தியை எடுத்து மால்கு என்னும் படைவீரரின வலது காதை வெட்டினார். போலி இறையியலார் குறித்து விழிப்பாய் இருக்க வேண்டும். இறையியலார் யார்? அவர்கள் எப்போதும் கடவுளைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் ஒருபோதும் கடவுளிடம் பேசமாட்டார்கள். எல்லா இறையியலாரும் அவ்வாறில்லை என்பதையும் நாம் அறிவோம்!
நாம் மனந்தளராமல் செபிக்க வேண்டும் என்று இன்றைய நற்செய்தியில் " நேர்மையற்றவரும் கைம்பெண்ணும்” என்ற உவமை வாயிலாகக் கிறிஸ்து உணர்த்துகின்றார்.
ஓர் ஊரில் அண்ணன் மற்றும் தம்பி ஆகிய இருவருடைய வயல்களின் நடுவில் ஒரு தென்னைமரம் இருந்தது. அதன் மீது உரிமைகோரி நீதிமன்றத்தில் இருவரும் வழக்குத் தொடர்ந்தனர். நீதிபதி வழக்கை நீண்ட காலமாகத் தள்ளிப் போட்டார். இறுதியாகத் தீர்ப்பு வருமுன் தென்னைமரம் பட்டுப்போய்விட்டது. நீதிமன்றத்தில் வழக்கு மெகா சீரியல்! போன்று இழுத்துக்கொண்டே போகும். இயேசு கிறிஸ்து கூறும் உ.வமையிலும் நீதி கேட்டு நடுவரிடம் சென்ற கைம்பெண்ணை நடுவர் இழுத்தடிக்கின்றார். இறுதியாக அந்தக் கைம்பெண் விடாது அவரை நச்சரித்ததால் அவருடைய தொல்லை தாங்க முடியாமல் அப்பெண்ணுக்கு நீதி வழங்குகின்றார். இவ்வுவமை வாயிலாகக் கிறிஸ்து வழங்கும் செய்தி: நேர்மையற்ற நடுவரே தொல்லை தாங்காமல் நீதி வழங்கினார் என்றால், நீதியுள்ள கடவுள் தமமிடம் இடைவிடாமல் மன்றாடுவோரின் மன்றாட்டை நிச்சயமாகக் கேட்பார் என்பது உறுதி.
ஆனால், இயேசு கிறிஸ்து மீண்டும் இவ்வுலகிற்கு வரும்போது மக்களிடம் நம்பிக்கை இருக்குமா? என்ற கேள்வியை எழுப்புகிறார் கிறிஸ்து, அறிவியல் வளர வளர கடவுள் நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் அறிவியலுக்கு ஒரு வரையறை உண்டு, ஒர் அறிஞர் கூறுகிறார்: “மனிதனின் அறிவு அவனுடைய அறியாமையை உணர்த்தும்போது, மனிதனின் ஆற்றல் அவனின் ஆற்றலின்மையைக் காட்டும்போது, அவன் இதயத்தைக் கிழித்துப் பார்த்தால் அங்கே இறைவன் தோன்றுவார்." ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கூற்று இது.
செபத்தினால் எல்லாம் கைகூடும் என்று எண்ணி மனித முயற்சியைக் கைவிடக்கூடாது. இன்றைய முதல் வாசகத்தில் மலைமீது மோசே கைகளை உயர்த்திச் செபிக்க, மண்மீது யோசுவா வாளை உயர்த்தி எதிரிகளுடன் போராடி அவர்களை வெட்டி வீழ்த்துகிறார். கடவுளே எல்லாம் பார்த்துக் கொள்வார் என்று முயற்சி எடுக்காமல் இருப்பது கடவுள் நம்பிக்கையாகாது. அது கடவுளை சோதிப்பதாகும்.
கடவுளும் கைவிடுவது போலத் தேரன்றினாலும் மனித முயற்சிக்குத் தக்க பயன் கிடைக்கும் என்று வள்ளுவர் கூறியுள்ளது. நினைவில் நிறுத்த வேண்டிய ஒன்றாகும்,
தெய்வத்தான் ஆகாது எனிலும் முயற்சிதன்
மெய்லருத்தக்கூலிதரும் (குறள் 019).
அதே நேரத்தில் பின்வரும் கூற்றிலும் உண்மை உண்டா என்பதைச் சற்றுச் சிந்திப்போம்! “கடவுள் கொடுப்பதை மனிதர் தடுக்க முடியாது: கடவுள் தடுப்பதை மனிதர் கொடுக்க மூடியாது." முடிவாக, கடவுள் நம்பிக்கையுடன் தன்னம்பிக்கையும் இணைந்து செல்ல வேண்டும். “தங்களுக்குத் தாங்களே உதவி செய்பவர்களுக்குத்தான் கடவுளும் உதவி செய்கிறார்.”
விடுமுயற்சி வேண்டாம்
வெற்றிக்கும் சாதனைக்கும் விடாமுயற்சிபோல என்பவர் உறுதுணையாக இருப்பது வேறு எதுவுமில்லை. கால்வின் கூலிட்ஜ் 11 கூறுவார்: “மேலே செல்லுங்கள். விடா முயற்சிக்கு ஈடாக இவ்வுலகில் எதுவுமில்லை. திறமை ஈடாகாது. திறமை இருந்தாலும் வெற்றியடையாத மனிதர்கள் உலகில் நிறையப்பேர். அறிவு ஈடாகாது. வீணாய்ப் போன அறிவாளிகள் இந்த உலகில் நிறையபேர். விடாமுயற்சியும் மனஊறுதியும் மட்டுமே அளப்பரிய ஆற்றல் படைத்தவை”.
எட்மன்ட் ஹில்லாரி எவரெஸ்ட் சிகரத்தை எட்டும் முயற்சியில் மூன்று முறை தோற்றவர். தோல்வியடைந்து திரும்பும்போது வானத்தை முட்டிக் கொண்டு நின்ற எவரெஸ்ட் சிகரத்தைப் பார்த்துக் கையை மடைக்கிச் சவால்விட்டார்:
“எவரெஸ்ட் சிகரமே, இந்த முறையும் நீ என்னை தோற்கடித்துவிட்டாய். நான் இப்போது போகிறேன். ஆனால் மீண்டும் வருவேன். உன்னால் இதற்கு மேல் வளர முடியாது. ஆனால் என்னால் முடியும். தினமும் ஒவ்வொரு நொடியும் ஆற்றலால் என்னை வளர்க்க முடியும். வளர்வேன். அந்த வளர்ச்சியால் உன்னைத் தோற்கடிப்பேன்
எட்மன்ட் குறிப்பிடும் வளர்ச்சி உருவ வளர்ச்சியல்ல. தோல்விகளைக் கண்டு துவளாத மன உறுதியின் வளர்ச்சி. சொன்னபடி எட்மன்ட் ஹில்லாரி எவரெஸ்டைத் தோற்கடித்தார். எவரெஸ்ட் எட்டு வைத்தார். உலகமே அவர் பெயரை இதயத்தில் நட்டு.
விடா முயற்சி மனித வாழ்க்கையை உயர்வு நோக்கி நகர்த்தும் நெம்புகோல். ஆல்வா எடிசன் மின் விளக்கைக் கண்டுபிடிக்க ஆயிரம் தடவைக்கு மேல் முயன்றாராம். “அத்தனை தடவையும் தோல்வி அடைந்தீரே ” என்று ஒருவர் கேட்க, எடிசன் சொன்ன பதில் “எப்படியெல்லாம் ஒரு பல்பைச் செய்யக்கூடாது என்பதை ஆயிரம் தோல்விகளில் கற்றுக் கெண்டேன் ” என்பதுதான். ஆயிரம் தடவை முயன்றுவிட்டோமே என்று மனந்தளர்ந்து முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தால் உலகம் மின் விளக்கைப் பார்த்திருக்க முடியாது.
எறும்பு ஊறக் கல்லும் தேயும். அடிக்க அடிக்க அம்மியும் நகரும். செப வாழ்வுக்கும் இது பொருந்தும். உண்மை ஆன்மீகம் அங்குதான் உணரப்படும்.
“திக்கற்றோருக்கு அவர்கள் நீதி வழங்குவதில்லை. கைம்பெண்ணின் வழக்குகளைத் தீர்ப்பதில்லை” (எசா. 1:23) இறைவாக்கினர் எசாயா குறிப்பிடும் அத்தகைய கடவுளுக்கு அஞ்சாத, மனிதரை மதிக்காத, மனித நேய உணர்வற்ற, மனச்சாட்சி மழுங்கிய, நேர்மையற்ற நடுவரே கைம்பெண்ணின் தொல்லை தாங்காமல் நீதி வழங்கினார் என்றால் நீதியும் இரக்கமும் உள்ள அன்புக் கடவுள் தம்மிடம் இடைவிடாமல் மன்றாடுவோரின் குரலுக்கு நிச்சயமாகச் செவிகொடுப்பார் என்பதுதானே இன்றைய நற்செய்தி! இறைவேண்டலில் மனத் தளர்ச்சிக்கு இடமேது? அதனால்தான் இறைவனால் எல்லாம் கூடும் என்ற உறுதியோடு “எங்கிருந்து எனக்கு உதவி வரும்? விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும்” (தி.பா. 121:1-2) என்று தன் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் திருப்பாடல் ஆசிரியர்.
அமலேக்கியருக்கும் இஸ்ரயேலருக்கும் இடையே போர். அமலேக்கியரை எதிர்த்துப் போரிட மோசே யோசுவாவை அனுப்பிவிட்டு, கடவுள் கொடுத்த கோலைக் கையில் பிடித்தவாறு, குன்றின் உச்சியில் கைகளை உயர்த்தி இறை வேண்டல் செய்து கொண்டிருந்தார். “மோசே தன் கையை உயர்த்தி இருக்கும்போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர். அவர் தன் கையைத் தளரவிட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர் ” (வி.ப. 17:11).. மோசேயின் கைகள் தளர்ந்துபோன நிலையில் அவரை ஒரு கல்லின்மேல் உட்கார வைத்து அவரது இரு கைகளையும். இருவர் தாங்கிப் பிடித்துக் கொண்டனர். அதன் பயனாக வெற்றி இஸ்ரயேலருக்கே! தளராத செபத்தின் வல்லமைக்குச் சான்று இந்த நிகழ்வு!
நம்பிக்கை, வாழ்வு என்பது போராட்டம் நிறைந்தது. யாக்கோபின் உறுதியான செபத்தில் உணரலாம். இரவு முழுவதும் ஆண்டவருடைய தூதனோடு போராடுகிறார். “நீர் எனக்கு ஆசி வழங்கினாலொழிய உம்மைப் போக விடேன்” (தொ.நூ. 32:26).இறைவனைப் பலவந்தம் பண்ணி இறுகப் பற்றிக் கொள்ளும் முயற்சி அது:
- தன்னைத் தாழ்த்தி தனது தகுதியின்மையை உணர்ந்தவராகச் செபிக்கிறார் (தொ.நூ. 32:10).
- இறைவனின் வாக்குறுதிகளை நினைவுபடுத்தி உரிமை பாராட்டிச் செபிக்கிறார் (தொ.நூ. 28:15).
- ஆற்றின் அக்கரையில் உறவுகள், உடைமைகள் அனைத்தையும் விட்டுவிட்டு இங்கே தனித்துப் போராடி செபிக்கிறார் (தொ.நூ. 32:24).
- கடவுள் அருள்புரிந்து விட்டார் என்பதை அறியும் வரை உறுதிப் பாட்டோடு செபிக்கிறார் (தொ.நூ. 32:24).
ஆற்றல் மிக்க அவரது செபத்தால் பெற்ற ஆசீர்கள்:
- பெயர் மாற்றம் - எத்தன், ஏமாற்றி வாழ்பவன் என்ற பொருளில் யாக்கோபு என்று இதுவரை அழைக்கப்பட்டவர், இனி முதல் இஸ்ரயேல் அதாவது கடவுளின் பிள்ளை என்று அழைக்கப்படுவார்.
- இஸ்ரயேல் என்ற பெயரில் இனி ஒரு பெரிய இனத்துக்கே தனது பன்னிரென்டு குலங்களுக்குமே தலைவர்.
- ஏசாவின் பழிவாங்கும் இதயம் பாசமும் அன்பும் நிறைந்த இதயமாக மாறுகிறது. (தொ.நூ. 33:4).
- நிறைவாக இனி கடவுளே யாக்கோபின் கடவுள் என்று அறிமுகமாகும் அளவுக்கு, இனம் காட்டும் அளவுக்கு யாக்கோபு மாட்சி பெறுகிறார்.
“பிரார்த்தனையின் மூலமாகக் கடவுளின் மன உணர்வை என்னால் மாற்ற முடியும் என்றால், நான் தொடர்ந்து பிரார்த்தனை செய்து கடவுளைத் தொல்லைப்படுத்தியாவது என்னுடைய காரியத்தை நிறைவேற்றிக் கொள்வேன் '' என்பார் மில்ட்டன்.
ஆனால் உண்மை என்னவன்றால் வீடாமுயற்சி கடவுளின் மனத்தை அல்ல, நம் மன உணர்வுகளை மாற்றுகிறது - அவரின் திட்டத்தை, திருவுளத்தைப் புரிந்து ஏற்றக் கொள்ள. அங்கு தான் செபத்தின் தேவை தெரிகிறது. அதனால்தகான் “ஆயினும் மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” (லூக். 18:8) என்ற கேள்வியை எழுப்புகிறார் இயேசு.
கெத்சமணித் தோட்டத்தில் இயேசு செய்த செபம் நமக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டு. வியர்வை பெரும் இரத்தத் துளிகளாகத் தரையில் விழ ““என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னைவிட்டு அகலட்டும்”” (மத். 26:39). முடிந்தாலா? செவி கொடுக்கப்பட்டதா. அந்த செபம்? இல்லை. ஆனால் கடவுளின் விருப்பத்தை ஏற்கத் தேவையான ஆற்றலைத் தந்தது. “அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை வலுப்படுத்தினார்”” (லூக். 22:43).
வாழ்க்கை என்ற சொல் ஒருவருக்குச் சொல்லிக் கொள்ளும்படி அமைய வேண்டுமா? விடாமுயற்சி என்ற சொல் தாரக மந்திரமாக வேண்டும்.
விடாமுயற்சி நம்பிக்கைப் பயணத்தில் வீறு நடை போடட்டும் முயற்சியோடு ஒடுகிறவனுக்குக் கால்களும் சிறகாகும். பறக்க மறுக்கும் பறவைக்குச் சிறகுகளும் சுமையாகும். பறந்து செல்லும் பறவைகள் ஆறுகளை எப்படிக் கடப்பது என்று திகைக்கிறதில்லை. செபிக்கத் தெரிந்த மனிதர்கள் வெள்ளம் போன்ற துன்பங்களைக் கண்டு மலைக்கிறதில்லை.
இடைவிடாது புகைப்பிடிக்கும் கணவனிடம் மனைவி: “எப்படியாவது விடாமுயற்சி செய்து சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிடுங்களேன்.”
கணவன்: “விடாமுயற்சி செய்தால் எப்படி நிறுத்த முடியும். விடு(ம்) முயற்சியைத்தான் செய்கிறேன். ஆனால் முடியவில்லை ”.
தீமைக்கு விடும் முயற்சி வேண்டும். நன்மைக்கு விடா முயற்சி வேண்டும்.
முழந்தாள் படியிட்டால் முழுமையான நிம்மதி
2010ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி சிலே நாட்டின் Atacama பகுதியில் தாமிரம், மற்றும் தங்கம் வெட்டியெடுக்கும் சுரங்கம் ஒன்றில் 33 தொழிலாளர்கள் தங்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட ஒரு நிலச்சரிவால் ஏழு இலட்சம் டன் எடையுள்ள பாறைகள் சுரங்கப் பாதையை அடைத்துவிட்டன. அந்த 33 தொழிலாளர்களும் நிலத்திற்கடியில் 2,500 அடி ஆழத்தில் உயிரோடு புதைக்கப்பட்டனர். போராட்டம் ஆரம்பமானது. அவர்களைக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் தோற்றுப்போயின. 17 நாட்கள் கழித்து, ஆகஸ்ட் 22ம் தேதி அவர்கள் அனைவரும் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் ஆரம்பமாயின. 50 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகளின் சிகரமாக, அக்டோபர் 12 நள்ளிரவு துவங்கி, அக்டோபர் 14ம் தேதி அதிகாலை வரை 33 தொழிலாளர்களும் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். இந்த நிகழ்வை இவ்வளவு விவரமாகக் கூறுவதற்குக் காரணம் இன்றைய ஞாயிறு வாசகங்களே.
மனம்தளராமல், நம்பிக்கையுடன் செபிப்பதைக் குறித்து சிந்திக்க இந்த ஞாயிறன்று அழைக்கப்பட்டுள்ளோம். கடுகளவு நம்பிக்கை இருந்தால், அந்த நம்பிக்கையுடன் செபங்கள் எழுப்பப்பட்டால், மலைகள் பெயர்ந்துவிடும், மரங்கள் வேருடன் எடுக்கப்பட்டு, கடலில் நடப்படும். எரிக்கோவின் மதில்கள் இடிந்துவிழும் என்ற நம்பிக்கை தரும் சொற்கள் விவிலியத்தில் உள்ளன.
செபத்தின் வல்லமையால், இஸ்ரயேல் மக்கள், போரில் வெற்றிகொண்டதை, விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் (விடுதலைப் பயணம் 17: 8-13) நமக்குக் கூறுகிறது. மத்தியக் கிழக்குப் பகுதியின் பல நாடுகளுக்கும், கனவிலும், நனவிலும் அச்சமூட்டுபவர்களாக இருந்தவர்கள் அமலேக்கியர்கள். அவர்களை எதிர்க்க யாருக்கும் துணிவு இல்லை. அவர்கள் இஸ்ரயேல் மக்களுக்கு எதிராகப் போர் தொடுக்க வந்தனர். இச்செய்தியே இஸ்ரயேலரின் நம்பிக்கையைக் குலைத்து, அவர்களது தோல்வியை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், மோசேயின் செபம் அவர்களை வெற்றியடையச் செய்தது.
செபத்தின் வலிமையால் எதிர்வரும் சக்திகளை முறியடிக்கலாம் என்பதை விடுதலைப் பயண நூல் வாசகம் சொல்கிறது. மனம் தளராமல் செபிப்பதால், நீதியை நிலை நிறுத்த முடியும் என்பதை லூக்கா நற்செய்தி (லூக்கா 18: 1-8) சொல்கிறது. தொடர்ந்து செபியுங்கள், தளராது செபியுங்கள், உடல் வலிமை, மன உறுதி இவை குலைந்தாலும், பிறர் உங்களைத் தாங்கிப் பிடிக்க, தொடர்ந்து செபியுங்கள்... என்ற சவால்கள் நிறைந்த பாடங்கள், இன்றைய வாசகங்கள் வழியே, நமக்குச் சொல்லித்தரப்படுகின்றன.
”அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்” என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது (லூக்கா 18: 1) இறைவனுக்கு அஞ்சாமல், மனிதர்களை மதிக்காமல், ஊழலில் ஊறிப்போன ஒரு நடுவரிடம், ஒரு கைம்பெண் நீதி பெறுகிறார்... இலஞ்சம் கொடுத்துப் பெறவேண்டியதை, இலட்சிய வெறிகொண்டு பெறுகிறார். நல்லது கெட்டது என்பதையெல்லாம் பார்க்க மறுத்து, பாறையாகிப்போன நடுவரின் மனதைத் தன் தொடர்ந்த வேண்டுதல் முயற்சிகளால் கரைத்துவிடுகிறார் அந்தக் கைம்பெண்.
மனம் தளராமல் செபிப்பதால் விழையும் நன்மைகளைக் கூறும் பல நூறு கதைகளில், என் மனதில் இடம் பிடித்த ஒரு கதை இது:
டாக்டர் அகமத், தலைசிறந்த மருத்துவர். பல ஆண்டுகள் அவர் மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவுகள் மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியதால், அகில உலக மருத்துவர் கழகம் அவருக்கு விருது ஒன்றை அறிவித்தது. பக்கத்து நாட்டில் நடைபெறும் அகில உலக கருத்தரங்கில் அவ்விருதை வழங்க, அக்கழகம் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது.
விருது நாளன்று காலை, அவர் தன் நாட்டிலிருந்து விமானத்தில் பயணம் மேற்கொண்டார். விமானம் கிளம்பி, ஒரு மணி நேரத்தில் விமானத்தில் பிரச்சனை ஒன்று உருவானதால், அருகிலிருந்த ஓர் ஊரில் விமானம் தரையிறக்கப்பட்டது. டாக்டர் அகமத் அவர்கள், விமான நிலைய அதிகாரிகளிடம் சென்று, தன் மாநாட்டைப் பற்றிக் கூறி, எப்படியாவது அங்குச் செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கேட்டார்.
அடுத்த 10 மணி நேரத்திற்கு வேறு விமானங்கள் அவ்வழியே செல்லாது என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். இருப்பினும், டாக்டர் அகமத் விரும்பினால், ஒரு வாடகைக் காரில் அந்த ஊருக்குச் செல்லலாம் என்றும், அதற்கு நான்கு மணி நேரங்கள் எடுக்கும் என்றும் குறிப்பிட்டனர்.
வேறு வழியின்றி, டாக்டர் அகமத் அவர்கள், வாடகைக் கார் ஒன்றை பதிவுசெய்து, செல்லவேண்டிய ஊருக்கு வழியைக் கேட்டுக்கொண்டு, காரை ஓட்டிச் சென்றார். வழியில், திடீரென, எவ்வித முன்னறிவிப்புமின்றி, புயல் ஒன்று உருவானது. கனமழை பெய்ததால், அவர் செல்லவேண்டிய பாதையைத் தவறவிட்டார். அந்தப் பாதையில் இரண்டு மணி நேரங்கள் ஒட்டியபின், களைப்பாலும், பசியாலும் சாலையின் ஓரமாகக் காரை நிறுத்தினார். அருகில் ஏதாவது தொலைபேசி வசதி இருந்தால், விருது விழாவை ஏற்பாடு செய்தவர்களிடம் தகவல் தெரிவிக்கலாம் என்று எண்ணினார்.
பக்கத்தில் ஒரு வீடு இருந்தது. அங்குச் சென்று கதவைத் தட்டினார். வயதான ஒரு பெண் கதவைத் திறந்தார். அங்குத் தொலைபேசி ஏதும் உண்டா என்று டாக்டர் கேட்டதற்கு, தன்னிடம் அந்த வசதி இல்லை என்று கூறிய அப்பெண், டாக்டர் அகமத் அவர்கள், இருந்த நிலையைக் கண்டு, உள்ளே வந்து ஏதாவது சூடாகக் குடியுங்கள் என்று அழைத்தார்.
அந்த அழைப்பை ஏற்று, டாக்டர் உள்ளே சென்றார். அவருக்கு வேண்டிய உணவையும், தேநீரையும் பரிமாறிய அந்தப் பெண், தான் துவங்கிய செபத்தை முடித்துவிட்டு வருவதாகக் கூறி, அருகிலிருந்த ஒரு தொட்டில் அருகில், முழந்தாள் படியிட்டு தன் செபத்தைத் தொடர்ந்தார்.
மனமுருகி, கண்ணீருடன் அவர் செபித்ததைப் பார்த்துக் கொண்டிருந்த டாக்டர், அவருக்கு உதவி செய்ய எண்ணினார். அவர் செபத்தை முடித்துவிட்டு வந்ததும், அவரது கண்ணீருக்கும், செபத்திற்கும் காரணம் கேட்டார். அந்த வயதானப் பெண், "இறைவன் என் வேண்டுதல்கள் அனைத்திற்கும் பதில் வழங்கியுள்ளார். ஒரே ஒரு செபத்திற்கு மட்டும் இறைவன் இன்னும் பதில் தரவில்லை" என்று கூறினார்.
அந்தச் செபம் என்ன, அந்தத் தொட்டிலில் இருப்பது யார் என்று கேள்விகள் எழுப்பிய டாக்டரிடம், அவர் விவரங்கள் சொன்னார்: "தொட்டிலில் உறங்குவது என் பேரக்குழந்தை. அவனுடைய பெற்றோர் இருவரும் அண்மையில் ஒரு விபத்தில் இறந்துவிட்டனர். என் பேரனுக்கு வினோதமான ஒரு புற்றுநோய் உள்ளது. அந்தப் புற்றுநோயைக் குணமாக்கும் திறமை கொண்டவர், பக்கத்து நாட்டில் உள்ள ஒரே ஒரு மருத்துவர். அவர் பெயர் டாக்டர் அகமத் என்பது மட்டும் தெரியும். அவரைச் சென்று பார்க்கும் அளவுக்கு எனக்கு வசதி இல்லை. அதனால், ‘இறைவா, அந்த டாக்டரிடம் எப்படியாவது எங்களைக் கொண்டு சேர்த்துவிடு’ என்பது ஒன்றே, நான் தினமும் எழுப்பும் வேண்டுதல்" என்று கூறி முடித்தார் அந்தப் பெண்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த டாக்டர் அகமத் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. அவர் தன் கதையைச் சொன்னார்... தான் விருது வாங்கப் புறப்பட்டது, விமானம் பழுதடைந்தது, புயலால் தான் வழியைத் தவறவிட்டது, அந்த இல்லத்தின் கதவைத் தட்டியது என்று, அன்று காலை முதல் தனக்கு நிகழ்ந்ததையெல்லாம் கூறிய டாக்டர் அகமத், அந்தப் பெண்ணிடம், "நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் டாக்டர் அகமத் நான்தான்" என்று கூறினார். செபத்தைக் குறித்து, தொடர்ந்து செபிப்பதைக் குறித்து நமது எண்ணங்களைத் தெளிவுபடுத்த, உள்ளங்களை உறுதிபடுத்த, செபம் நமது வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதியாக மாற இறைவனிடம் வரம் வேண்டுவோம்.
பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (வி.ப. 17:8-13)
அமலேக்கியர்கள், இஸ்ராயேலரின் விடுதலைப் பயணத்தைத் தடுத்தவர்கள். அமலேக்கியவர்கள் ஒழுங்கற்றவர்களும், மிருகத்தனம் உள்ளவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். இந்த அமலேக்கியர் இஸ்ராயேலரின் உறவினர்களாகவும் கருதப்படு- கின்றனர். இவர்கள் எசாவின் வழிமரபினராகக் கூறப்படுகின்றது. (ஏசா, யாக்கோபின் சகோதரர்) இஸ்ராயேலர்கள் மட்டுமல்ல மாறாகத் தங்களின் அகம்பாவம், தற்பெருமை, வணங்காகழுத்துதனம், இவையே அவர்களின் மிகப்பெரிய எதிரியென விவிலியம் நமக்கு எடுத்துரைக்கின்றது. இங்கே மோசேயின் செபம் வெறும் புற எதிரி- களுக்கு எதிராக மட்டுமன்று. மாறாகத் தங்களின் அக எதிரிகளுக்கு எதிராகவும், மோசே தன் கைத்தடியை உயர்த்தி செபித்தார். கைத்தடி இறைவனின் வல்லமையை உணர்த்தியதால்தான் அவர்களால் வெல்ல முடிந்தது எனச் சில இறையியல் வல்லுநர்கள் விளக்குகின்றனர்.
இரண்டாம் வாசகப் பின்னணி (2திமோ. 3:14-4:2)
தூய ஆவி மட்டுமே நமக்கு ஆசான். நமக்குச் செபிக்கத் தெரியாது. ஆவியே நம்மை உந்துகிறது, ஆவியானவர் நம் கைகளில் ஒரு செப வழிகாட்டியை வைத்துள்ளார். அதுவே விவிலியம். இதையே தூய பவுல் திமொத்தேயுவுக்கும் எடுத்துரைக்- கின்றார். திமொத்தேயு எல்லாத் துன்பச் சூழ்நிலைகளிலும் விசுவாசத்துடன் விளங்க வேண்டும் என்பதே பவுலடிகளாரின் விருப்ப மாகத் தெரிகிறது. இதற்கு அவர் இறைவார்த்தையைக் கையிலெடுக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறார். இறைவார்த்- தையை அறிவது தம் சொந்த வளர்ச்சிக்காக மட்டுமன்று மாறாக மக்களை வழிநடத்துவதற்காக, இறைத்திருவுளத்தை உணர்வதற்- காக, அதையே மற்றவர்களுக்கும் எடுத்துரைக்க, தம் பிழை- களையும் கண்டு அதனைத் திருத்திக்கொள்ள, இறைவர்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்பதே இவ்வாசகத்தின் கருப்பொருள்.
நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 18:1-8)
தூய லூக்கா தன் நற்செய்தியில் பெரும் பகுதியைச் செபத்திற்காக ஒதுக்கிருக்கிறார். எனினும், அப்போதையக் கிறிஸ்த- வர்கள் காத்திருந்துக் களைப்புற்றவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்- கின்றனர். இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றது.
🕇 இயேசுவின் இரண்டாம் வருகையின் தாமதம்,
🕇 வேதக் கலாபனைகளின் தீவிரம்.
இவை இரண்டும் சேர்ந்து விசுவாசிகளை அவிசுவாசிகளாக மாற்றிவிட்டதாகக் கூறப்படுகின்றது. அவர்களின் விசுவாசம் பலவீனமடைந்ததற்கு அவர்களின் செபம் பலவீனமடைந்துவிட்டதே காரணம், இவர்களுக்குச் செபத்தின் வலிமையையும், செபம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவும் லூக்கா இந்தப் பகுதியைச் செபத்திற்காக அர்ப்பணித்திருப்பதாகக் கூறலாம்.
மறையுரை
கேளுங்கள் கொடுக்கப்படும். இன்றைய நற்செய்தியில் நாம் காண்பது என்ன? நிராதரவான ஒரு விதவையின் வெற்றி! ஆம் அவள் வெற்றி அவள் எதிரியின் மீது மட்டுமல்ல, மாறாக எதற்கும் இணங்காத நடுவரின் மீதும் தான்! தளராத ஒரு முயற்சியின் வெற்றி. "அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்”, என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
நம் நடைமுறை வாழ்க்கையில் விதவை என்பவள் யார்? கணவனை இழந்தவள், நிராதரவானவள், பெரும்பாலும் பெற்றோரின் பாதுகாவலில் தன் வாழ்க்கையை முடிக்கும் பரிதாபமான பிறவிகள். இவ்வளவு வளர்ச்சி அடைந்த இன்றைய சமூகத்தில் கூட பாதிக்கப்பட்ட நம் சகோதரியை நாம் மதிப்பதில்லை, இப்படிப்பட்ட பெண்கள் பெரும்பாலும் சுமைகளாகக் கருதப்படுகின்றார்கள்.
இப்படி இருக்க இயேசுவின் காலத்தை நினைத்துப் பாருங்கள், அது ஒரு ஆண் ஆதிக்கச் சமூகம், பெண் பிறவி பாவப்பிறவியெனக் கருதிய சமூகம், அங்கே விதவைகள் பெரும்- பாலும் எந்தச் சலுகைகளும் கிடைக்காமல், பிறர் கையை எதிர் நோக்கியே வாழ்ந்து வந்தனர், இவர்களில் ஏழைகளின் நிலை இன்னும் கீழ். இப்படிப்பட்ட ஏழைக் கைம்பெண்ணின் வெற்றியை வைத்துச் செபத்தின் மேன்மையை விளக்குகிறார் இயேசு.
எந்தச் செபத்திலும் இதேப் போன்ற ஒரு விடாமுயற்சி வேண்டும், நீதி கிடைக்கும் வரை ஓயாது கேட்ட அந்தப் பெண்ணை போல, நாமும் நம் செபம் கேட்கப்படும் வரை தொடர்ந்துச் செபிக்க வேண்டும், என்பதே நமக்கு இந்த நற்செய்தி விடுக்கும் செய்தி. இதேப் போன்ற ஒரு விடாமுயற்சியை நாம் லூக்கா 11:5-8-இல் காணலாம். அங்கே ஒருவர் விருப்பமில்லாதத் தன் நண்பரிடமிருந்து அப்பம் பெறும் பகுதி. அதிலும் விடாமுயற்சியானது எடுத்துரைக்கப்- பட்டுள்ளது. இதனைத் தூய லூக்கா, இயேசு இறைவேண்டல் பற்றி கூறும் பகுதிகளில் பொருத்தியுள்ளார். “விதவையின் வெற்றி", பகுதியை மத்தேயு விண்ணரசு பற்றிய போதனைகளில் பொருத்தி- யுள்ளார். இரண்டு வெவ்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்தப் போதிலும், அவை நமக்கு வழங்கும் செய்தி ஒன்றே.
உண்மையான, ஆழமான, நீதியான செபம் எப்பொழுதும் கேட்கப்படும். இதற்குச் சிறந்த உதாரணமாக முதல் வாசகம் நமக்கு வழங்கப்பட்டுள்ளது, மோசேயின் செபம் அன்று அமலேக்கியர் இடமிருந்து இஸ்ராயேலைக் காத்தது. அதோடு மட்டுமல்லாது உண்மையான செபத்தின் பலன் என்ன என்பதையும் நமக்கு உணர்த்தியுள்ளது.
மோசேயின் செபம் இஸ்ராயேலருக்கு வலிமை தந்தது. இன்று நமக்கு ஒரு அங்கீகாரம் தந்திருக்கின்றது. எந்த ஒரு செபமும் நமக்குக் கேட்டதை மட்டும் தருவதில்லை, மாறாக அதற்கு மேலாகவும் நமக்குத் தருகின்றது. அந்தக் கைம்பெண்ணின் செயலில் அப்படி என்ன மேன்மை? அவள் தன் எதிரியின் மீது வெற்றி கொண்டாள் அவ்வளவு தானே! என்று நினைத்தால் அது சராசரியான பார்வை. அங்கே ஒரு சுய ஆய்வே நிகழ்ந்து, நாம் அனைவரும் கற்றுக் கொள்ள சில வழிமுறைகள் தரப்பட்டுள்ளன.
அந்தக் கைம்பெண் முதலில் தன்னை உணர்ந்தாள். எந்தச் செபத்திற்கு முன்பும் நாம் யார் என்றும், நம் நிலை என்னவென்றும் உணர வேண்டும். இதற்குச் சிறந்த எடுத்துகாட்டாக நற்செய்தியில் நல்ல கள்வனைக் கூறலாம். தான் யார் என்பதை உணர்ந்து தன் தகுதிக்கேற்பக் கேட்டார். ஆனால் இயேசுவின் இரக்கம் அவர் எதிர் பாராத அளவிற்கு அருள் தந்துக் காக்கிறது.
இரண்டாவதாக, யாரை அணுக வேண்டும் என்ற அறிவு. அந்தக் கைம்பெண், தன் நடுவர் எதற்கும் அஞ்சுவதில்லை, யாரையும் மதிப்பதுமில்லை என்று உணர்ந்திருந்து தன் நிலை அறிந்தவளாய், அவரையும் விட்டால் வேறுயாரையும் தான் அணுக முடியாது என்று அவரைத் தொடர்ந்து கேட்டுத் தன் முயற்சியில் வெற்றியும் கண்டாள். இப்படிப்பட்ட ஒரு சிறந்த முயற்சியை மற்றுமொரு கைம்பெண்ணும் மேற்கொள்ளுகிறாள். கனானியப் பெண்ணின் தளராத நம்பிக்கை (மத்தேயு 15:21-28). தான் யாரை அணுகுகிறோம் என்று தெரிந்து, அவரிடமிருந்து தனக்குச் சாதகமாக எதும் வரவில்லை என்று உணர்ந்தும் நம்பிக்கையோடு கேட்டு பெற்று கொண்டாள்.
மூன்றாவதாக, விட்டுக் கொடுக்காத மனநிலை. இங்கு நாம் கவனிக்க வேண்டியது: தடைகள், சங்கடங்கள், அவமானங்கள் என்று எதுவரினும் தளராமல் தன் வாழ்வில் வந்த அத்தனை தடைகளையும், சவால்களையும், தண்டனைகளையும் பொருட்படுத்- தாது முன்னேறித் தன் இலக்கைத் தனதாக்கிக் கொண்டார் என்பதுதான்.
இத்தகையப் பண்புகள் நமது செபத்திலும் இருக்குமாயின் நமது செபமும் உறுதியாகக் கேட்கப்படும். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும், "எல்லாமே இறைவனால் தான் இருகின்றது என்பது போலச் செபிக்க வேண்டும், மற்றும், எல்லாமே நம்மைச் சார்ந்து இருப்பது போல உழைக்க வேண்டும். "உழைப்பு இல்லாத எந்த ஒரு செபமும் உண்மையான செபமாக இருக்க முடியாது, செபமில்லாத எந்த ஒரு உழைப்பும் முழுமையான வெற்றி பெற முடியாது."
ஏனெனில், "என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரேயெனச் சொல்வோரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக விண்ணுலகில் உள்ள என் தந்தையின் திருவுளப்படிச் செயல்படுபவரே செல்லுவர்," (மத்தேயு 7:21). இது செப வாழ்விற்கும் பொருந்தும். எல்லாமே இறைவன் என எண்ணி சோம்பித் திரிந்து விட்டுச் செபம் கேட்கப்படவில்லை என்பதில் பயன் என்ன? எப்பொழுது செபமும், நம் வாழ்வும் ஒத்துப்போகிறதோ, அங்கே கண்டிப்பாய்ச் செபம் கேட்கப்படுகின்றது. இதற்குத் தூய ஜான் மரிய வியான்னி சிறந்த எடுத்துக்காட்டு. தன் செபத்தினால் வல்லமை பெற்று தன் உழைப்பினால் திருச்சபைக்குப் பலன் தந்தவர். இப்படிப்பட்ட ஒரு ஒருங்கிணைப்பு நம்மிடமிருக்கிறதா?
நம் வாழ்வும், செபமும் ஒத்துப் போகிறதா? இறைவன் எல்லாம் வல்லவர் அவரால் எதுவும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை நம்மிடமிருக்கிறதா? நம் குடும்பங்களில் குடும்ப செபமிருக்கிறதா? நம் வாழ்க்கை நம் வார்த்தைகளோடு ஒத்துப்போகிறதா? நம் பணித்தளங்களில் நம்மால் இறைபிரசன்னத்தை உணர முடிகிறதா? நாம் மேற்கொள்ளும் அனைத்து பணிகளையும் இறைவனிடம் சமர்ப்பிக்க முடிகிறதா? நம் துன்ப நேரங்களில் இறைத்திருவுளத்தை நாம் காண முடிகிறதா? அல்லது தப்பிக்க விழைகிறோமா?
இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் நாம் சரியான பதில் தரும்பொழுது நம் செபங்களும் கண்டிப்பாகக் கேட்கப்படும். நம் செபங்கள் கேட்கப்பட வேண்டுமெனில் நம் வாழ்வு இறைவனுக்கு உகந்ததாக அமைய வேண்டும். இறைவன் புதுமை செய்யட்டும் எனக் காத்திருக்கும் மனிதர்களின் வாழ்வில் இறைவன் புதுமை செய்தாலும், அவர்களின் வாழ்க்கை மாறுவதில்லை. இறைவனால் தேர்ந்துக் கொள்ளப்பட்ட நமது வாழ்வு அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாய் அமைய வேண்டும், நமது செபம் இறைவனுக்கு உகந்ததாக அமைய வேண்டும்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
🕇 இயேசுவின் வருகையின்போது மண்ணில் விசுவாசம் வளர்ந்திருக்குமா, வதங்கியிருக்குமா?
🕇 இறைவேண்டல் எதையும் சாதிக்கக் கூடியது.
🕇 நம் செபம் மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவா? அல்லது கடவுளின் மகிமைக்காகவா?
பின்னணி
இன்றைய இறைவார்த்தை, குறிப்பாக முதல் வாசகமும் நற்செய்தியும், செபத்தின் மாண்பினை, அதிலும் குறிப்பாக தளர் வின்றி செபிக்க வேண்டுவதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. அமலேக்கியருக்கு எதிரான போரில் மோசேவின் கரங்கள் உயர்த்திருக்கும் போதெல்லாம் - செபித்த போதெல்லாம் - இஸ்ரயேலர் வெற்றி கண்டனர். அதை தளரவிட்ட போது அவர்கள் தோல்வி கண்டனர். எனவே வாழ்வில் தொடர் வெற்றி காண தொடர் செபம் அவசியம் என்பதை இந்த விடுதலைப் பயண நூல் நிகழ்வு நமக்கு வலியுறுத்துகன்றது. நற்செய்தியில் உவமையின் நோக்கம் “அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாடவேண்டும்” (வச. 1) என்பதை லூக்கா உவமையை துவங்குவதற்கு முன்னமே வலியுறுத்தி, தெளிவு படுத்திவிடுகின்றார். இந்த நற்செய்திப் பகுதியின் பிற கருத்துக்களை அறிந்து கொள்ளுமுன் அதற்கான பின்னணி விவரங்களைத் தெரிந்து கொள்வோம்.
பதினேழாம் அதிகாரத்தின் இறுதியில் இயேசு இறுதிக் காலத்தைப் பற்றி பேசுகின்றார். அதைத் தொடர்ந்து இந்த கைம் பெண்ணும் பொல்லாத நடுவனின் உவமையையும், இறை வேண்டலுக்காய் ஆலயம் சென்ற பரிசேயர், வரிதண்டுபவர் உவமையையும் கூறுகின்றார். இவற் றுள் முதல் உவமை அதற்கு முந்தைய இறுதிக் காலத்தைப் பற்றிய போதனையோடு பொருந்தி வருகின்றது. இன்றைய நற்செய்திக்கு முந்தைய அதிகாரத்தில் “ஒரு காலம் வரும்; அப்போது மானிட மகனுடைய நாள்களில் ஒன்றையாவது காண நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் காண மாட்டீர்கள்” (லூக் 17:22) என தம் சீடர்களுக்கு அறி வுறுத்துவார். இந்தக் காத்திருப்பின் காலத்தை எப்படி மேற் கொள்வது, இந்தக் காலத்தில் என்ன செய்யவேண்டும் என்பதை விளக்குவதற்காக சீடர்களுக்கு சொல்லப்பட்டதுதான் இந்த உவமை. ஆகவே மனுமகனுடைய வருகையின் காலம்வரை இடை விடா இறை வேண்டலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது இயேசுவின் எதிர்பார்ப்பாகும்.
இந்த உவமையைத் தொடர்ந்து வரும் இறைவேண்டல் செய்த இருவர் உவமை “தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலருக்குச் (லூக் 18:9) சொல்லப்பட்டது என லூக்கா குறிப்பிடுோர். இறுதிக் காலத்திற்காக காத்திருக்கும் காலத்தில் செய்யப்படும் இறை வேண்டல் ஒரு வெளிவேடமாகவும், அடுத்தவரை இகழ்ந்து ஒதுக்கப் பயன்படுத்தப்படும் ஒரு காரணியாகவும் அமைந்துவிடக் கூடாது என இயேசு எச்சரிக்கின்றார். எனவே இறைவேண்டல் ஒரு நுட்பமான செயல்பாடு அதை நாம் சரியாகக் கையாள வேண்டும்.
1. கைம்பெண்ணின் நிலை
எந்த ஓர் ஆணாதிக்கச் சமுதாயத்தையும் போலவே யூதச் சமூகத்திலும் விளிம்புநிலை மக்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் சிலர் இருந்தனர். குறிப்பாக அனாதைகள், அன்னியர், விதவைகள் ஆகியோர் இதில் அடங்குவர். இவர்கள் சமூகத்தின் அடக்கு முறைகளுக்கு ஆளானவர்கள். இவர்களுக்குப் பலவேளைகளில் நீதி மறுக்கப்படும் அல்லது தள்ளிப்போடப்படும். எனவே இவர்கள் நம்பிக்கையும் உற்சாகமும் இழந்து தங்களின் போராட்டத்தைக் கைவிட்டுவிடும் நிலைக்குத் தள்ளப்படுவர். ஆனால் இந்நிலைக்கு மாறாக கடவுளுக்கு அஞ்சி நடக்கும் ஒரு நீதிபதி இத்தகையோருக்கு சிறப்புக் கவனம் செலுத்தி நீதி வழங்க வேண்டும் என்பது சட்டத்தின் எதிர்பார்ப்பு (காண். இச 10:18; 14:29; 16:11, 14; 24:19-21; 26:12-13). “அன்னியர் அல்லது அனாதைக்கு உரிய நீதியைப் புரட்டாதே. கைம்பெண்ணின் ஆடையை அடகாக வாங்காதே” (இச 24:17), என்பதும் “அன்னியருக்கும், அனாதைக்கும், கைம்பெண்ணுக்கும் உரிய நீதியைப் புரட்டெபவர் சபிக்கப்படட்டும்” (இச 27:19) என்பதும் யூதச் சட்டம். இறை வாக்கினர்களின் போதனையில் கைம்பெண்களுக்கு நீதி வழங்குவது உடன்படிக்கைக்குப் பிரமாணிக்கமாயிருப்பதன் அடையாளமாகும் (காண். மலா 3:5; எசா 1:17, 23; 10:2; எரே 5:28; 7:6; 22:3; எசே 22:7; திபா 93:6). இவர்களுக்கான நீதி மறுக்கப்படும்போது இறைவனே அவர்களுக்காக நீதி வழங்குவார் என்றும் எண்ணப்பட்டது (காண். திபா 145:9, மேலும் காண். சீராக்கின் ஞானம் 35:14-18). இத்தகைய கைம்பெண்கள் சார்பான நிலைப்பாடுகள் இறைச்சட்டத்தில் இருந்தாலும் அந்த நீதிபதி கடவுளுக்கு அஞ்சுவதில்லை, மக்களையும் மதிப்பதில்லை (வச. 2,4) என்பதால் அவருக்குநீதிவழங்ககாலம்தாழ்த்திக்கொண்டிருந்தார்.
2. சீடர்களின் நிலையுடன் ஓப்பீடு
இந்த உவமை சீடர்களுக்குக் கூறப்பட்டதால் அவர்களை அந்தகைம்பெண்ணுடன் ஒப்பிட்டுநோக்க வேண்டும். அவர்களும் அப்பெண்ணைப்போல அடக்குமுறைக்கு ஆளாகக்கூடும், நீதி அவர்களுக்கு மறுக்கப்படலாம், அல்லது காலம் தாழ்த்தப் படலாம், இழுத்தடிக்கப்படலாம், நம்பிக்கை இழந்துபோறெ, போராட்டத்தில்தளர்ந்துபோகின்றகூழல்கள் எழலாம்.ஆனாலும் அவர்கள் அந்தக் கைம்பெண்ணைப் போல மனந்தளராமல் தங்கள் விண்ணப்பத்தைக் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். (வச. 3, 5).
3. நீதியதியும் - கடவுளும் ஓப்பீடு
கைம்பெண்ணைச் சீடர்களுக்கு ஒப்பிட்டால், நீதிபதியை இறைவேண்டல் சூழலில் இறைவனுக்கு ஒப்பிட வேண்டி மிருக்றெது. ஆனால் இங்கு நீதிபதிக்கும் இறைவனுக்கும் ஒரு சிறு மாறுபாடு உள்ளது. அதை இயேசுவே தெளிவுபடுத்தி விடுகின்றார்: “தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக்காலம் தாழ்த்துவாரா?” (வச. 7). ஆக, இவ்வுலக நீதியற்ற நீதிபதிகள்தான் கடவுளுக்கு அஞ்சாமல், மனிதரை மதிக்காமல் ஏழையருக்கு நீதி வழங்கக் காலம் தாழ்த்துவர். ஆனால் விண்ணுலக நீதிபதியாகிய இறைவன் தன் மக்கள் தொடர்ந்து தம்மை நோக்கிக் கூக்குரலிடும் போது விரைந்து வந்து அவர்களுக்கு நீதிவழங்குவார்.
எனவே இறைவன் விரைந்து வந்து நம் விண்ணப்பத்தைக் கேட்பார் எனும் நம்பிக்கையுடன் தொடர்ந்து நம்பிக்கையோடு மன்றாட வேண்டும்.
பொதுக்காலம் - இருபத்தொன்பதாம் ஞாயிறு மூன்றாம் ஆண்டு
முதல் வாசகம் : விப. 17:8 - 13
கடத்தல் பயணத்தின்போது இறைவன் இஸ்ரயேல் மக்களோடு இருந்து அவர்களுடைய இன்ப துன்பங்களில் பங்குகொண்டார். அவர்கள் துன்புற்று நலிந்தபோது அருஞ்செயல்கள் வழித் தன் வாக்குறுதிகளை நிறைவேற்றினார். இத்தகைய அருஞ்செயல்களில் ஒன்று அமலேக்கியர் மீது இஸ்ரயேலர் கொண்ட வெற்றியாகும். நம்பிக்கையோடு செபித்தலின் பலனைப் பற்றி இன்றைய வாசகம் கூறுகிறது.
செயல்பட வேண்டும்
இறைவன் இஸ்ரயேல் மக்களோடு இருந்தாலும், அவருடைய வல்லமையே அவர்களை எதிரிகளிடமிருந்து பாதுகாத்து வழி நடத்தினாலும், எதிரிகள் மீது இறைவன் கொண்ட வெற்றியில் அவர்களும் பங்குகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். எனவே யோசுவாவும் இஸ்ரயேல் மக்களும் அமலேக்கியர்மீது போர் தொடுக்கின்றனர். அயராது, சளைக்காது காலையிலிருந்து மாலைவரை போரிடுகின்றனர். வெற்றியும் காண்கின்றனர். ஆன்ம எதிரியாகிய சாத்தானோடு நாமும் போரிட வேண்டும். தளர்ந்துவிடக் கூடாது. சோதனைகளை மன உறுதியோடு தாங்குபவன் பேறு பெற்றவன்.... அவனே வெற்றி வாகை சூடுவான்" (யாக் 1:2) என்பதை மறக்கக் கூடாது.
செபம் செய்ய வேண்டும்
"எல்லாம் தன் செயலாலே, தன் முயற்சியாலே செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு ஒருவன் செயலாற்ற வேண்டும். அதே வேளையிலே எல்லாம் இறைவனாலே மட்டும் தான் முடியும் என்ற நம்பிக்கையோடு செபத்திலே ஈடுபட வேண்டும்" என்பது இஞ்ஞாசியார் கூற்று. எனவே ஒரு பக்கம் நமது முயற்சிகள், மறுபக்கம் நமது செபங்கள் என்ற முறையிலே நம் வாழ்வு அமைய வேண்டும்.
யோசுவா கீழே போர்க்களத்திலே சண்டையிடுகிறார். மோசே, ஆரோன், ஊர் ஆகியோர் மேலே மலை உச்சியில் செபித்துக் கொண்டிருக்கின்றனர். மோசேயின் செபமே இஸ்ரயேலருக்கு வெற்றி கொணர்ந்தது. “மோசே செபத்தில் தம் கையை உயர்த்தியிருக்கையில் இஸ்ரயேலர் வெற்றி பெறுவர். அவர் சிறிதேனும் தம் கையைத் தாழ்த்தி விட்டாலோ, அந்நேரத்தில் அமலேக்கியர் வெற்றி பெறுவர்" (17: 11) என்ற வார்த்தைகள் செபத்தின் வல்லமைக்குச் சான்று பகர்கின்றன. தளர்வுற்று மோசேயின் கைகள் கீழே விழுந்தபோது "ஆரோனும் ஊரும் இருபக்கமும் அவர் கைகளைத் தாங்கிக் கொண்டனர்" (17:12) என்பதிலிருந்து தொடர்ந்த, நிலைத்த, இடைவிடாத செபம் எத்துணை வல்லமையுள்ளது என்பது புலனாகின்றது.
செபிக்க வேண்டும்; தொடர்ந்து செபிக்க வேண்டும் என்பதுதான் நம் ஆண்டவருடைய கட்டளையும் கூட. "கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்" (மத் 7:7 - 11) என்று ஆண்டவர் கூறியுள்ளது நாம் விடாது செபிக்க வேண்டும் என்பதற்காகவே. நள்ளிரவில் நண்பனிடம் அப்பம் கேட்கச் சென்றவனுடைய உவமையும் (லூக். 115-13) பொல்லாத நடுவனிடம் நீதி கேட்டுச் சென்ற கைம்பெண்ணின் உவமையும் (லூக். 18:1-8) வலியுறுத்தும் பாடமும் இதுவன்றோ? "செபத்திலே இறைவன் தோல்வியுறுகிறார்; செபிப்பவன் வெற்றி பெறுகிறான்" என்ற கூற்று எவ்வளவு உண்மையானது? தொடர்ந்து செபிப்போம்; தளராது அயராது செபிப்போம். வெற்றி நமதே. செபத்தை ஒரு போராட்டமென்றே பவுல் குறிப்பிடுவதும் (காண் உரோ. 15:30) காணத்தக்கது. எனவே "உறுதியாய் நிலைத்திருந்து, விழிப்பாயிருங்கள்” (எபே. 6 18). "எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்" (1 தெச. 5: 16 -17). "எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள்" (பிலி. 4 : 6). இவையன்ன அறிவுரைகள் நமக்கு, நம் செப வாழ்வுக்கு வழித்துணையாய் அமைவனவாக.
மோசே தம் கையை உயர்த்தியிருக்கையில் இஸ்ரயேலர் வெற்றி பெற்றனர். இரண்டாம் வாசகம் 2 திமொ. 3:14-4:2
தம் “அன்பு மகன் திமொத்தேயுவுக்கு" பவுல் இறைவார்த்தை பற்றி அறிவுரை கூறுகிறார். திருநூலை அறிவது மட்டுமன்று, அதைப் பிறருக்கு அறிவிக்கவும் வேண்டும் என்பது பவுலின் கட்டளை. இதுவே இன்றைய வாசகத்தின் சுருக்கம்.
வேதாகமம் (மறை நூல்) இறை ஏவுதல் பெற்றது
விவிலியம் இறை ஏவுதலாலும் உந்துதலாலும் எழுதப்பட்டது. ப.ஏ. இல் “ஆண்டவர் பேசினார்", “ஆண்டவர் கூறுகிறார்", "ஆண்டவர் வார்த்தை” என்பது, "நான் உனக்குத் தருகின்ற இச்சுருளேட்டைத் தின்று உன் வயிற்றை நிரப்பு" (எசே. 3:3), "ஆகவே, இப்போதே போ! நானே உன் நாவில் இருப்பேன்; நீ பேச வேண்டியதை உனக்குக் கற்பிப்பேன்" (விய. 4 : 12) என்பதெல்லாம் ப.ஏ. இறைவன் ஏவுதல் பெற்றது என்பதைக் காட்டுகின்றன. "தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள் கடவுள் அருளியதை உரைத்ததே இறைவாக்கு. அது ஒருபோதும் மனித விருப்பத்தால் உண்டானது அல்ல" (2 பேது 1: 21); "மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது" (2 திமொ. 3: 18) என்பவை பு.ஏ வேதாகம நூல்கள் இறைவனுடைய ஏவுதலுக்கு உட்பட்டவை என்று கூறுவதைச் சுட்டுகின்றன. விவிலியத்தை நாம் இந்த இறைக் கண்ணோக்கோடு படிக்கின்றோமா? நாம் அன்றாடம் படிக்கும் செய்தித்தாள்கள், வார மாத ஏடுகளுக்கும் வேதாகமத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிகிறோமா? விவிலியம் இறைவனின் வார்த்தையாயின் வேதாகமம் வாசிக்கும்போது இறைவனைச் சந்திக்கிறோமா?
மறைநூல் சக்தி வாய்ந்தது
இறைவனின் வார்த்தைகள் வல்லமை மிக்கவை. ஆண்டவர் ஆணை யிட்டார், உலகம் உண்டானது (தொநூ. 1-2); ஆண்டவர் கட்டளையிட்டார், பார்வோன் மன்னன் இஸ்ரயேலரை விடுவித்தான் (விப), ஆண்டவர் பணித்தார்; புயலும் பூசலும் அடங்கின (மாற். 4:35-41); நோய் நோக்காடுகள் நீங்கின (மாற். 1:40 45). பேய்கள் அகன்றன (மாற். 1:21-28). பாவங்கள் பறந்தன (மாற்.2:1-12). "கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது. ஆற்றல் வாய்ந்தது" (எபி.4:12). குழந்தைப் பருவம் முதல் திமொத்தேயு மறைநூலைக் கற்றறிந்திருந்தார் (2 திமொ. 4:14-15). அதுதான் அவருக்கு ஞானத்தையும் நன்னடத்தையையும் அளித்தது (4:18). தாய்ப்பாலோடு மறைநூலறிவையும் நம் பிள்ளைகளுக்குப் புகட்டுகிறோமா? வெறும் வாசகத்தோடு நின்றுவிடாது, மழைநீர் நிலத்துள் சென்று செத்துக்கிடக்கும் விதைகளுக்கு உயிரளித்து ஊட்டமளித்து வளரச் செய்து பலன் தரச் செய்வது போன்று (காண்: எசா. 55:10-11), விவிலிய வாசகமும் நம் உள்ளத்தின் அடியாழத்திற்குச் சென்று நம் வாழ்வைச் சீர்படுத்தி வளமாக்கி, நமது வாழ்வுப் பாதையின் வழித்துணையாக அமைகிறதா? வாழ்வுதரும் வார்த்தைகள் நம்மை, நம் நடத்தையை அன்றாடம் கேள்விகேட்டுத் துளைக்கின்றனவா? நமக்குச் சவால்விட இறை வார்த்தைக்கு நாம் சுதந்திரம் தருகிறோமா?
இறைவார்த்தைக்கு நாம் அடிமைகள்
இறைவார்த்தை இறைவனுக்கு ஏற்புடைய நல்வாழ்வில் மக்களைப் பயிற்றுவிக்க வல்லது (4 : 17). வாழ்வும், அவ்வாழ்வை அடையும் வழியும் இறைவனின் வார்த்தைகள். எனவே நாம் இறை வார்த்தையின் தூதுவர்களாக வேண்டும். இறைவார்த்தையின் பணியாளர்கள் ஆக வேண்டும். இறைவார்த்தையைப் பிறருக்கு எடுத்துரைப்பது நம் ஒவ்வொருவரின் மேல் சுமத்தப்பட்ட கடமையாகும். "ஆனால் அவர்மீது நம்பிக்கை கொண்டிருந்தாலன்றி, அவர்கள் எவ்வாறு அவரை நோக்கி மன்றாடுவார்கள்? தாங்கள் கேள்வியுறாத ஒருவர்மீது எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்? அறிவிக்கப்படாத ஒன்றுபற்றி அவர்கள் எவ்வாறு கேள்வியுறுவார்கள்" (உரோ. 10 : 14) என்பதன் மூலம் நாம் எல்லோரும் இறைவார்த்தையைப் பிறருக்கு அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பது புலன் ஆகிறது. "நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் நான் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!" (1 கொரி. 9 : 16).
மறைநூலில் உள்ளதெல்லாம் கடவுளால் ஏவப்பட்டுள்ளது.
நற்செய்தி: லூக். 18 : 1 - 8
ஏழைகள், ஆதரவற்றோர் ஆகியோரின் சின்னமாகவே கைம்பெண் எண்ணப்பட்டாள். அந்நியரை ஆண்டவர் காப்பாற்றுகிறார். அநாதை களையும், விதவைகளையும் ஆதரிக்கிறார் (திபா. 146 : 7). இன்றைய நற்செய்தியில் ஓர் ஏழைக் கைம்பெண்ணைக் கதாநாயகியாக வைத்து நமதாண்டவர் செபம் பற்றிய ஓர் உவமையைக் கூறுகிறார். அவளது விடாமுயற்சியும் நம்பிக்கையும் அவள் கேட்டதை அளித்தன. ஏற்கெனவே கூறப்பட்ட உண்மை (லூக்.11 5 - 13) இங்கு மீண்டும் வலியுறுத்தப் பட்டுள்ளது.
விடாது வேண்டுதல் வேண்டும்
இப்பொல்லாத நடுவன் கடவுளுக்கு அஞ்சாதவன், மனிதனையும் மதிக்காதவன் (1 : 13). இத்தகையோரைப் பற்றி எசாயா குறிப்பிடுகின்றார்: "உன் தலைவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்; திருடருக்குத் தோழராய் இருக்கின்றனர், கையூட்டு வாங்குவதற்கு ஒவ்வொருவனும் ஏங்குகிறான்; நீதி வழங்குவதில்லை; கைம்பெண்ணின் வழக்குகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை" (எசா.1:23).
உவமையில் வரும் நீதிபதி இறைவனுக்குப் பயந்தோ, அல்லது மற்றவர்களை மதித்தோ அன்று, இக்கைம்பெண் மீண்டும் மீண்டும் வந்து தொந்தரை செய்ததால் அவளது வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து நீதி வழங்கினான். இந்தப் பொல்லாத நீதிபதிக்கு மாறானவர் நமது பரம தந்தை. "ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்; அவரிடம் ஒருதலைச் சார்பு என்பதே கிடையாது. அவர் ஏழைகளுக்கு எதிராய் எவரையும் ஒருதலைச் சார்பாய் ஏற்கமாட்டார்; தீங்கிழைக்கப்பட்டோரின் மன்றாட்டைக் கேட்பார். கைவிடப்பட்டோரின் வேண்டுதலைப் புறக்கணியார். தம்மிடம் முறையிடும் கைம்பெண்களைக் கைவிடார்" (சீஞா. 35:15 - 18).
கடவுள் நம் குரல் கேட்பார்
இறைவன் நமது நல்ல தந்தை. அன்புடன் நம்மைப் பராமரிப்பவர் (மத். 6:25 - 31). பொல்லாத நடுவனே ஏழையின் மன்றாட்டைக் கேட்கும் பொழுது, நமது நல்ல தந்தை நமது மன்றாட்டைத் தட்டாது கேட்பார் என்பது உறுதி. நாம் அப்பம் கேட்க, கல்லைக் கொடுக்கும் தந்தை அல்லர் அவர். தீயோராகிய நாமே நமது பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்து இருந்தால், நமது அன்புத் தந்தை நாம் கேட்பதை அளிப்பார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.
தண்ணீர்த் தட்டுப்பாடு நீங்க இறைவனது சந்நிதானத்தை மீண்டும் மீண்டும் தட்டியும் மழை இல்லையே! குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய தலைமகனின் பிணி தீர வேண்டியும், குடும்பத்தை அநாதையாக விட்டு விட்டுப் போய்விட்டானே! கடவுள் என் மன்றாட்டைக் கேட்கவில்லையே என்று கடவுளைப் பழிப்பதோ, செபத்தைக் கைவிடுவதோ தவறு என்பதை இவ்வுவமை சுட்டிக்காட்டுகிறது. நாம் கேட்பது கிடைக்கக் கால தாமதம் ஆகும்பொழுது நமது பொறுமை சோதிக்கப்பட்டு, அது யோபுவின் பொறுமைபோல் சுடர் வீசுகிறது. கனனேயப் பெண்ணின் நீண்ட நேர மன்றாட்டிற்குப் பிறகே அவளது வேண்டுகோள் அருளப்பட்டது. எனவே நம்மை விசுவாசத்தில் வலுப்படுத்தவே சில சமயங்களில் இறைவன் நமது மன்றாட்டுகளுக்குச் செவிசாய்க்கக் கால தாமதம் செய்கிறார். எக்காலமும் அறியும் இறைவன் நமது நன்மைக்காகவே நாம் கேட்பதை அளிக்காதும் இருக்கலாம். எனினும் செபம் என்றுமே வீண்போவதில்லை என்பதை உணர்ந்து தொடர்ந்து செபிக்க வேண்டும் (காண் : எபே. 6: 8; உரோ. 12: 12). அநீதியும் அநியாயமும், கையூட்டும் கண்ணீரும் நிறைந்த இவ்வுலகில் மக்கள் அனைத்துத் தொல்லைகளினின்று விடுதலை பெறத் தனிமனிதன் மட்டுமல்ல, திருச்சபையும் தொடர்ந்து செபிக்க வேண்டும்.
தாம் தேர்ந்து கொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை கூப்பிடும்பொழுது கடவுள் நீதி வழங்காமல் இருப்பாரோ?
இறை மின்னேற்றிகள்
சில ஆண்டுகளுக்கு முன் டுவிட்டரில் வந்த கீச்சு இது: ‘நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் முன்பெல்லாம் நினைவுகளை விட்டுச் சென்றார்கள், இன்றோ வெறும் சார்ஜர்களை மட்டுமே விட்டுச்செல்கிறார்கள்.’
‘சார்ஜர்கள்’ அல்லது ‘மின்னேற்றிகள்’ அல்லது ‘மின்மாற்றிகள்’ – இவை இன்று பல வீடுகளில் மின்பகிர்வுப் பெட்டியின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன. இன்று நம்முடைய மடிக்கணினி, ஐபேட், ஸ்மார்ட்ஃபோன் போன்றவை இயங்க வேண்டுமெனில் ஆற்றல் தேவை. இந்த ஆற்றல் மின்சாரம் வழியாக நமக்குக் கிடைத்தாலும், மின்சாரத்தை குறைந்த அழுத்தத்திற்கு மாற்றி அவற்றை நம் கருவிகளுக்குக் கொடுப்பவை சார்ஜர்களே. சார்ஜர்கள் தங்களில் பயனற்றவை. ஆனால், அவை தங்களை மின்சாரத்தோடும் கருவிகளோடும் இணைத்துக்கொண்டால்தான் அவற்றால் கருவிகளுக்குப் பயனுண்டு.
நம்மையும், இறைவனையும் இணைக்கும் மூன்று சார்ஜர்களைப் பற்றிப் பேசுகின்றன இன்றைய வாசகங்கள்.
இன்றைய முதல் வாசகம் (காண். விப 17:8-13) நம்மை ஒரு போர்க்களத்திற்கு அழைத்துச் செல்கிறது. இஸ்ரயேலர் செங்கடலைக் கடந்துவிட்டனர். அவர்கள் வாக்களித்த நாட்டிற்குப் பயணம் செய்கின்றனர். அவர்கள் செல்லும் வழியில் அமலேக்கியர் என்னும் நாடோடிக் குழுவினர் குடியிருக்கின்றனர். அவர்களுடைய எல்கையையும் பாதையையும் பயன்படுத்த அவர்கள் இஸ்ரயேலர்களை அனுமதிக்கவில்லை. எனவே, போர் அவசியமாகிறது. அமலேக்கியர்கள் ஏற்கெனவே போர்ப்பயிற்சி பெற்றவர்கள். இஸ்ரயேலர்கள் ஏறக்குறைய 400 ஆண்டுகளாக செங்கல் தயாரித்துக்கொண்டிருந்தவர்கள். அவர்களுக்குப் போரைப் பற்றி ஒன்றும் தெரியாது. கடவுள்தாமே இங்கே குறுக்கிட்டு அவர்களுக்கு அமலேக்கியர்மேல் வெற்றியைத் தருகின்றார். யோசுவாவின் தலைமையில் ஒரு குழுவினர் – கொஞ்சம் குச்சி, மட்டை பிடிக்கத் தெரிந்தவர்கள் – அமலேக்கியருக்கு எதிராகப் போரிடுகின்றனர். இவற்றால் வெல்ல முடியாது என்று நினைக்கின்ற மோசே, ஆரோன், மற்றும் கூர் என்பவர்கள் குன்றின் உச்சிக்கு ஏறிச்செல்கின்றனர். மோசே வானத்தை நோக்கிக் கைகளை உயர்த்துகின்றார். எப்போதெல்லாம் அவருடைய கைகள் உயர்ந்து இருந்தனவோ அப்போதெல்லாம் இறைவல்லமை கீழே போரிட்டுக்கொண்டிருக்கும் யோசுவா மற்றும் வீரர்களுக்குப் பாய்கிறது. கைகள் தளர்வுறும்போதெல்லாம் படையும் பின்வாங்குகிறது. இதைக் காண்கின்ற ஆரோனும் கூரும் உடைந்த சார்ஜருக்குச் ஸெல்லோ டேப் போடுவதுபோல, தளர்ந்து போன மோசேயை ஒரு பாறையில் அமரச் செய்து இரு கைககளையும் ஆளுக்கொன்றாகப் பிடித்துக்கொள்கின்றனர். இஸ்ரயேலர் போரில் வெற்றிபெறுகின்றனர்.
இங்கே வெற்றி என்பது கடவுளின் செயலாற்றலால் நடந்தேறுகிறது. கடவுளின் செயலாற்றல் இங்கே எப்படி நடக்கிறது? ஒரு குழுமத்தின் வழியாக அல்லது கூட்டுமுயற்சியின் வழியாக. யோசுவா, அவருடைய தலைமையில் வீரர்கள், மோசே, ஆரோன், மற்றும் கூர் ஆகியோரின் கூட்டுமுயற்சி அவர்களைக் கடவுளையும் மக்களையும் இணைக்கும் மின்னேற்றியாக (சார்ஜராக) மாற்றுகிறது.
ஆக, நாம் வாழும் குழுமம் அல்லது சமூகம் அல்லது குடும்பம் இறைமின்னேற்றியாக இருக்கிறது.
இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 2 திமொ 3:14-4:2) பவுல் திமொத்தேயுவுக்கு வழங்கும் அறிவுரைகளைக் கொண்டிருக்கிறது. இந்த அறிவுரைப் பகுதியில்தான் மறைநூலைப் பற்றிய ஒரு முக்கியமான உண்மையை வெளியிடுகிறார் பவுல்: ‘மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது.’ எபேசுத் திருச்சபையில் நிறைய போலிப் போதகர்களும் போலிப் போதனைகளும் இருந்தன. மக்கள் எளிதாக மற்ற போதனைகளால் ஈர்க்கப்பட்டனர். மேலும், இயேசு கிறிஸ்துவைப் பற்றி பவுல் மற்றும் திமொத்தேயு போதித்தவற்றை அவர்கள் எதிர்க்கவும் செய்தனர். இத்தகைய போலிப் போதனைகளுக்கு எதிராக திமொத்தேயு என்ற இளவல் துணிவாக நிற்க வேண்டுமென்றால், அவர் மறைநூலை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். இந்த மறைநூலை திமொத்தேயு அவருடைய இளமைப் பருவம் முதலாகக் கற்றிருக்கின்றார். இந்த மறைநூல் நான்கு நிலைகளில் பயன்படுவதாக பவுல் எழுதுகிறார்: (அ) கற்பிப்பதற்கு – புதிய நம்பிக்கையாளர்களுக்குக் கற்பிக்கவும், பழையவர்களுக்கு கற்பித்தலை நினைவூட்டவும், (ஆ) கண்டிப்பதற்கு – தவறான போதனையைப் போதிப்பவர்களை, போதனையில் பிறழ்வுகளை ஏற்படுத்துபவர்களை, (இ) சீராக்குவதற்கு – நேரிய வழியில் செல்லும் ஒருவரைத் தொடர்ந்து நேரிய வழியில் நடக்கச் செய்வதற்கும், வழி தவறுபவர்களைச் சரியான வழிக்குக் கொண்டுவந்து சேர்க்கவும், மற்றும் (ஈ) நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கு – அறநெறி வாழ்வுப் பயிற்சிக்கு.
இப்படியாக மறைநூலை சிறுவயதிலிருந்தே கற்றிருக்கின்ற, அதன் பயன்களை அறிந்திருக்கின்ற திமொத்தேயு, ‘இறைவார்த்தையை அறிவிக்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் கருத்தாய் இருக்க வேண்டும். கண்டித்துப் பேசவும், கடிந்துகொள்ளவும் அறிவுரை கூறவும், பொறுமையோடு கற்றுக்கொடுக்கவும் வேண்டும்.’
ஆக, பவுலைப் பொருத்தவரையில் மறைநூல் அல்லது விவிலியம் இறைமின்னேற்றியாக இருக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 18:1-8) இயேசு தன்னுடைய இரண்டாம் வருகையை முன்னறிவித்தலின் பின்புலத்தில் இருக்கின்றது. அதையொட்டியே இன்றைய நற்செய்திப் பகுதியின் இறுதியில், ‘மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?’ எனக் கேட்கின்றார். தன்னுடைய சீடர்களும் அவர்களுக்குப் பின் வருகின்ற நம்பிக்கையாளர்களும் தன்மேல் நம்பிக்கையை இழந்துவிடுவார்களோ என்ற ஐயம் இயேசுவுக்கு இருக்கவே செய்தது. அப்படி நம்பிக்கை இழப்பதற்கான வாய்ப்பும் இயேசுவின் சமகாலத்திலேயே நிறைய இருந்தது. இந்த அபாயத்தை அவர்கள் எதிர்கொள்ள இயேசுவே ஓர் உவமையைச் சொல்கின்றார்.
இந்த உவமையில் வரும் நடுவர் ‘கடவுளுக்கும் அஞ்சுவதில்லை. மனிதர்களையும் மதிப்பதில்லை.’ திருச்சட்டத்தின் முதன்மையான மற்றும் இரண்டாவது கட்டளைகளான இறையன்பும், பிறரன்பும் இவரிடம் அறவே இல்லை. யாருக்கும் எதிலும் கடன்படாதவராக, யாருக்கும் பயப்படாதவராக, யாரையும் திருப்திப்படுத்த விரும்பாதவராக இருக்கிறார். ‘இதைச் செய்’ என்று இவரிடம் யாரும் வற்புறுத்தவோ, பரிந்துபேசவோ, விரும்பிக் கேட்கவோ முடியாது. தன்னுடைய வாடிக்கையாளரான ஒரு கைம்பெண்ணுக்கு நீதி வழங்கும் கடமையையும் அவர் செய்யவில்லை. யாருக்கும் அஞ்சாத அவர் ஒரு கைம்பெண் என்ற பிள்ளைப்பூச்சிக்கா அஞ்சுவார்? இல்லை. ஆனாலும், கைம்பெண்ணின் தொல்லையின்பொருட்டு அவருக்கு நீதி வழங்குகிறார்.
இந்தப் பின்புலத்தில் நீதியற்ற நடுவரோ நீதி வழங்கினார் என்றால் நீதியும் இரக்கமுமான கடவுள் நீதி வழங்கத் தாமதம் செய்வாரோ? என்ற கேள்வியை எழுப்புகின்றார் இயேசு.
இயேசு இறந்து உயிர்த்து விண்ணேற்றம் அடைந்தபின் திருத்தூதர்கள் ஏறக்குறைய இக்கைம்பெண் போல நிர்க்கதியாக நின்றனர். அவர்களுக்கென்று எந்தவொரு உடைமையும், உறவும் இல்லை. நீதியும் இல்லை என்றால் அவர்கள் இன்னும் அதிகம் அவதிப்படுவார்கள். கைம்பெண்ணுடைய விடாத வேண்டுதல் அவருடைய விண்ணபத்தை நிறைவேற்றியதுபோல, விடாமுயற்சியுடன்கூடிய இறைவேண்டல் நம்பிக்கையைக் காத்துக்கொள்ள உதவும் என்று அறிவுறுத்துகிறார் இயேசு.
ஆக, விடாமுயற்சியுடன் கூடிய இறைவேண்டல் இறைமின்னேற்றியாக இருக்கிறது.
இவ்வாறு, இறைமின்னேற்றியாக இன்றைய முதல் வாசகம் குழுமத்தையும், இரண்டாம் வாசகம் மறைநூலையும், நற்செய்தி வாசகம் விடாமுயற்சியுடன் கூடிய இறைவேண்டலையும் முன்வைக்கிறது.
இந்த மூன்று சார்ஜர்களை – குழுமம், மறைநூல், இறைவேண்டல் – நம்முடைய இறைமின்னேற்றிகளாக வைத்துக்கொள்வது எப்படி?
- குழுமமும் கூட்டு முயற்சியும்
இஸ்ரயேல் மக்கள் அமலேக்கியரோடு போரிட்டு பெற்ற வெற்றி இறைவனின் அருள் மற்றும் மனித முயற்சி ஆகியவற்றின் இனிய கலவையாக இருக்கிறது. மேலும், சிறிய குழுமத்தின் முயற்சி பெரிய குழுமத்திற்கு வெற்றியைத் தருகின்றது. ஆக, நாம் வாழும் நம்முடைய குடும்பம், சமூகம், குழுமம், பங்கு, ஊர், நகரம் ஆகிய அனைத்தும் குழுமங்களே. இவை அனைத்துமே இறைமின்னேற்றிகளே. இவை அனைத்தின் வழியாகவும் இன்று நாம் நம்மையே ஆற்றல்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், இதற்கு மாற்றாக இன்றைய உலகம் தனிநபர் வாழ்வை அதிகமாக முதன்மைப்படுத்துகிறது. ஒவ்வொருவரும் தன்னுடைய வீடியோ கேம், காணொளி, சமூக வலைதளம் என்று மூடிக்கிடக்கவும், அல்லது எல்லா மனிதர்களையும் துறந்துவிடும் பின்நவீன சந்நியாசிகளை உருவாக்குவதையும் இன்றைய உலகம் விரும்புகிறது. ஆனால், ‘யாரும் எனக்கு வேண்டாம்’ என்று எல்லாரையும் இயல்பு வாழ்க்கையில் துறந்துவிட்டு, செயற்கையான எண்ணியல் வாழ்வில் நண்பர்கள் வட்டத்தைப் பெருக்கிக் கொள்ளும் அதிநவீன சந்நியாசிகள் தங்களுடைய குழுமங்களுக்குத் திரும்ப வேண்டும். ஏனெனில், ஒருவர் மற்றவரை அன்பு செய்யும் குழுமத்தில் அவர்கள் தங்களையே இணைத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்திலும், குழுமத்திலும்தான் ஒருவருக்கு முதல் இறைமின்னேற்றி கிடைக்கிறது.
- மறைநூல் அல்லது இறைவார்த்தை
‘மறைநூல் அனைத்தும் கடவுளால் தூண்டப்பட்டது’ என்று பவுல் சொல்லும்போது அவர் முதல் ஏற்பாட்டு மறைநூலையே மனத்தில் வைத்திருக்கிறார். ஏனெனில் பவுல் இத்திருமுகத்தை எழுதும் காலத்தில் இரண்டாம் ஏற்பாட்டு நூல்களும் திருமுறையும் முழுமை பெறவில்லை. இயேசு நிகழ்வில் வார்த்தையே மனிதராக நம்மோடு குடிகொண்டுள்ளது. விவிலியத்தை நாம் வாசிக்கும்போது நாம் இறையறிவில் வளர்வதோடு, நம்மைப் பற்றிய, உலகைப் பற்றிய, மற்றவர்களை பற்றிய அறிவும் நமக்கு வளர்கிறது. இன்று நாம் மறைநூலை இறைமின்னேற்றியாகப் பயன்படுத்துகிறோமா? நாம் மறைநூல் அறிவைப் பெற விரும்புகிறோமா? கற்பிக்கவும், கண்டிக்கவும், சீராக்கவும், நேரிய வழியில் நடக்கப் பயிற்றுவிக்கவும் மறைநூலைப் பயன்படுத்துகிறோமா? அல்லது ஆலயத்திலும் செபக்கூட்டங்களிலும் மட்டுமே வாசிக்கப்படும் நூலாக நாம் அந்நியப்படுத்திடுவிடுகிறோமா?
- விடாமுயற்சியுடன்கூடிய இறைவேண்டல்
நாம் செபிக்கின்றோம். சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி, முறைப்படுத்தப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி செபிக்கின்றோம். ஆனால், வேண்டுவது கிடைக்கும் வரை செபிப்பதில்லை. பல நேரங்களில் மனம் தளர்ந்து போகின்றோம். நம்முடைய தவறான வாழ்க்கை முறை, மற்றவர்களைப் பற்றிய எண்ணம், கடவுளைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் ஆகியவற்றால் இறைவேண்டலைக் கைவிடுகிறோம். கைம்பெண்ணுக்கு வேறு வழியே இல்லை. ஆகையால் நடுவரை உறுதியாகப் பற்றிக்கொண்டாள். இந்த இறைச்சார்பு நிலை என்னிடத்தில் இருக்கிறதா? சில நேரங்களில் கடவுளை நான் என் வாழ்வில் இறுதியான தேடுபொருளாகவே வைத்துள்ளேன். என்னுடைய மனமும் கால்களும் தளர்வதற்கான காரணிகள் எவை? கைகள் செய்யாததை முழங்கால்கள் செய்யும் என்றால் நான் அவர்முன் எத்தனை முறை மண்டியிடத் தயாராக இருந்துள்ளேன்? இறைவேண்டலை நான் ஆற்றல்பெறும் இடமாக பார்க்கிறேனா?
உலக மறைபரப்பு ஞாயிறு
இன்றைய நாளை நாம் உலக மறைபரப்பு ஞாயிறு எனக் கொண்டாடுகிறோம். ‘மக்கள் நடுவே எதிர்நோக்கின் தூதர்கள்’ என்னும் தலைப்பில் நாம் இந்த நாளைச் சிறப்பிக்கிறோம். திருமுழுக்கு பெற்ற அனைவருமே நற்செய்தி அறிவிப்புக்கான அழைப்பைப் பெற்றுள்ளோம் என்னும் நிலையில் இந்த நாளில் நற்செய்திப் பணி ஆர்வத்தை உருவாக்குவோம், வளர்த்துக்கொள்வோம், புதுப்பித்துக்கொள்வோம்.
இறுதியாக,
இன்று நம்மைச் சுற்றி நிறைய போலி சார்ஜர்கள் இருக்கின்றன. இவை நம்மை சார்ஜ் செய்வதுபோல செயல்பட்டு நம் உடலில் எஞ்சியிருக்கும் ஆற்றலையும் உறிஞ்சிவிடுகின்றன. குழுமமும், இறைவார்த்தையும், இறைவேண்டலும் நம்மை உற்சாகப்படுத்தும், நமக்கு வெற்றியைக் கொடுக்கும் மின்னேற்றிகள்.
இதை அறிந்ததால்தான் திருப்பாடல் ஆசிரியர், ‘மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன். விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும்’ (121:1) என்று முழங்குகின்றார். இறைமின்னேற்றிகளோடு நாம் தொடர்பு கொண்டிருந்தால், ‘போகும் போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் நம்முடைய வாழ்வு என்னும் அலைபேசியும் மடிக்கணினியும் இயக்கத்தில் இருக்கும்!’