நமது நன்றியை இறைவனுக்கு அர்ப்பணிப்போம்
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகர்க்கு” என்பது குறள் .
“உன்னை அன்பு செய்வதுபோல உன் அயலானையும் அன்பு
செய் ” என்பது இறைவாக்கு.
நம்மைப் படைத்து, காத்து, பராமரித்து வருகின்ற கடவுளுக்கு நாம் நமது நன்றியை முதலில் காணிக்கையாக்க வேண்டும் . எங்ஙனம் நமது நன்றியை இறைவனுக்கு அர்ப்பணிப்பது என்பதை விளக்குவதுதான் இன்றைய இறைவார்த்தைகள் .
நான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று எண்ணுவது சுயநலம் . பிறர் மட்டும் நலமுடன் வாழ்ந்தால் போதும் என்று எண்ணுவது பொறுப்பற்ற செயல் . நானும் வாழ்ந்து பிறரும் வாழவேண்டும் என்று எண்ணி, செயல்படுவது பொது நலமாகும் ; அதுவே உலக நலமுமாகும் . இவ்வுலக நலம் பேணுதலில் நாம் ஒருவர் மற்றவருக்கு உறுதுணையாக, ஊன்றுகோலாக இருக்க வேண்டும் . “தோள் கொடுப்பான் தோழன் ” என்பார்கள் . ஆதியில் “எங்கே உன் சகோதரன் ” (தொநூ. 4 :9) என்று வினவப்பட்டபோது “அவனுக்கு நான் என்ன காவலாளியா?” (தொநூ. 4:9) என்ற பொறுப்பற்ற பதில் வந்தது. அது தொடக்கம் . அதிலிருந்து இறைவன் மனிதக் குலத்தைப் பண்படுத்தி, பக்குவப்படுத்தி வாழ்விக்க முயலுகின்றார் . அதன் பரிணாம வளர்ச்சிதான் பிறரைத் தீங்கிலிருந்து விலகி வாழ அறிவுறுத்தும் கடமையை ஒவ்வொரு மனிதனும் பெற்றுள்ளான் என்று இறைவாக்கினர் வழியாக விளக்கப்படுகிறது.
திருச்சட்டங்கள் ஆயிரம் இருந்தாலும் , இயேசுவின் ஒரே சட்டம் அனைத்தையும் முழுமைக்கு அழைத்துச் செல்கிறது. அதைத்தான் புனித பவுல் அடிகளார் , “பிறரிடத்தில் அன்புகூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவர் ” (உரோ.. 13:8) என்கிறார் .
கிறிஸ்துவினுடைய போதனைகளைக் கிரகித்துக்கொண்டு, அவரின் உயிர்ப்பின் மகிமையில் வாழ விழைந்த ஆதித் திருச்சபையில் ஒருவர் மற்றவருக்கிடையேயோான பிரச்சனைகளையும் , மனத்தாங்கல்களையும் எங்ஙனம் சுமூகமாகத் தீர்த்து வைப்பது என்பதை விளக்குவது நற்செய்தி. குறைகள் இல்லா மனிதர்கள் இல்லை. ஆனால் , குறைகளைச் சுட்டிக்காட்டும் பொழுது அதை நிவர்த்தி செய்கிறவர் உண்மையான சமூகப் பிரச்சினையுள்ள, உறவுகளை மதிக்கின்ற மனிதராகிறார் . பிரச்சனைகளுக்கு மேல் தனி மனித மாண்பு போற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நற்செய்தியின்படி வாழ முற்படுவோம் .
- வழி. தவறினோரை வாஞ்சையுடன் அணுகுவோம் .
- வன்சொல் தவிர்த்து வழிகாட்டி
- வாழ்வுக்கு இலக்கணமாம் ஆண்டவரிடம் இணைந்து செல்வோம் !
இருளைப் பழிக்காதே, ஒளியை ஏற்றிவை.
ஒரு நாள் குரு ஒருவர் தனது சீடர்களையெல்லாம் அழைத்து, அவர்களுள் மிகவும் சிறந்த சீடன் ஒருவனையும் , மிகவும் மோசமான சீடன் ஒருவனையும் தேர்ந்தெடுத்து, நீங்கள் இருவரும் நாட்டுக்குள் சென்று, மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து வாருங்கள் எனச் சொல்லி அவர்களை நாட்டுக்குள் அனுப்பி வைத்தார் .
மக்களைச் சந்தித்து பத்து நாள்கள் கழித்து இருவரும் துறவற மடத்திற்குத் திரும்பினர் . நல்லவன் , நான் சந்தித்த எல்லாருமே நல்லவர்கள் என்றான் . தீயவனோ, நான் சந்தித்த எல்லாருமே தீயவர்கள் என்றான் . குருவோ, யாரும் நூற்றுக்கு நூறு நல்லவருமல்ல; நூற்றுக்கு நூறு தீயவருமல்ல. ஒவ்வொரு நல்ல மனிதருக்குள்ளிருக்கும் தீயதை நீக்குவதும் , தீய மனிதருக்குள்ளிருக்கும் நல்லதை வெளிக்கொண்டு வருவதும் துறவிகளாகிய நமது கடமையாகும் என்றார் .
கடவுள் தாம் படைத்த உலகத்தை நல்லது என்று கண்டார் [தொநூ 1:25]; தம் உருவிலே மானிடரைப் படைத்தார் [தொநூ 1:27]. மனிதர்கள் சோதனைக்கு உட்பட் டுத் தங்களது சுதந்தரத்தைத் தவறாகப் பயன்படுத்திய போது அவர்கள் மனம் காயப்பட்டது; அவர்களுக்குள் பாவம் புகுந்தது. அவர்களின் பாவம் அவர்களை ஆட்டிப்படைக்கத் தொடங்கியது. இயேசு கிறிஸ்துவினால் நேருக்கு நேர் தடுத்தாட் கொள்ளப்பட்ட பவுலடிகளாரைக் கூட பாவச் சோதனை விட்டு வைக்கவில்லை. அவர் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலே, நான் ஊனியல்பினன் ; பாவத்திற்கு அடிமையாக விற்கப்பட்டவன் ; நான் செய்வது என்னவென்று எனக்கே தெரிவதில்லை; எதைச் செய்ய விரும்புகின்றேனோ அதை நான் செய்வதில்லை : எதை வெறுக்கின்றேனோ அதையே செய்கின்றேன் [உரோ 7:14-15] என்கின்றார் .
ஆகவே நம்மில் யாரும் , நான் நூற்றுக்கு நூறு புனிதமானவன் , புனிதமானவள் என்று பெருமை பாராட்மக் கொள்ள முடியாது. நாம் அத்தனைபேரும் பாவிகளே [உரோ 3:9-18].
நாம் செய்ய வேண்டியிதல்லாம் ஒன்றே. இன்றைய நற்செய்தியும் , முதல் வாசகமும் சுட்டிக்காட்டுது போல, நம்மைச் சுற்றியுள்ள பாவிகள் , தங்களது பாவங்களிலிருந்து வி டுதலை பெற அவர்களுக்கு உதவி செய்யவேண்டும் . இருளைப் பழிப்பதை விட விளக்கேற்றிவைப்பது நல்லது. இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் ' இறைவாக்கினர் எசேக்கியேலிடம் , மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்குக் காவலாளியாக ஏற்ப டுத்தியுள்ளேன் . என் வாயினின்று வரும் வாக்கைக் கேட்கும்போதெல்லாம் நீ என் பொருட்டு அவர்களை
எச்சரிக்க வேண் டும் [எசே 33:7] என்கின்றார் . நற்செய்தியிலே இயேசு, நமது சகோதர, சகோதரிகளின் குற்றங்களை எடுத்துக்காட்ட நம்மை அழைக்கின்றார் [மத் 18:15].
நாம் நம்மீது அன்புகூர்வது போல் , நம் அயலார் மீதும் அன்பு கூர வேண்டும் [இரண்டாம் வாசகம் ].
மேலும் அறிவோம் :
அறிவினான் ஆகுவ(து) உண்டா பிறிதின் நோய்
தம்சநாய்கபோல் போற்றாக் கடை (குறள் : 315).
பொருள் : பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பமாகக் கருதிப் பேணிப் போற்றாவிட்டால் ஒருவர் பெற்றுள்ள அறிவினால் பயன் எதுவும் இல்லை!
உங்கள் எதிரிகளோடு உடன்பாடு
பயங்கரக் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட இளைஞனுடைய அப்பாவிடம் அவர் நண்பர் கேட்டார், "உங்கள் பையன் பயங்கரமாகக் குடிக்கிறானே அவனைக் கேட்டால் என்னr?" அதற்கு அப்பா கூறினார். "நான் கேட்டால் அவன் கொடுக்கமாட்டான்." மகனைத் திருத்த வேண்டிய அப்பாவே மகனிடம் மதுபானத்தை எதிர்பார்க்கிறார். இது எப்படி இருக்குது?
பல தீய பழக்க வழக்கங்களில் ஈடுபட்டிருந்த ஒரு பையனை அனுடைய அப்பா திருந்தவில்லை. இறுதியில் அவன் சிறையில் அடைக்கப்பட்டான் அப்பா அவனைச் சிறையில் பார்க்கச் சென்றபோது மகன் அப்பாவிடம் சொன்னது
துள்ளி திரிகின்ற பருவத்தில் -என்
துடுக்கு அடக்கி -என்னைப்
பள்ளிக்கு அனுப்பாத - என்
தந்தையாகிய பாதகனே
உரிய காலத்தில் தன்னுடைய தவறுகளைச் கட்டிக்காட்டித் தன்னைத் திருந்தாத தகப்பனை அவனுடைய மகன் "பாதகனே" என்று அழைத்தான்.
தவறு செய்கிறவர்களைத் திருத்துவது நம்முடைய கடமை பெற்றோர்கள் பிள்ளைகளையும் நண்பர்கள் நண்பர்களையும் திருத்த வேண்டும். கூடிக் குடித்து கும்மாளம் அடிப்பதற்காக நட்பு இல்லை. நண்பன் தவறு செய்யும்போது அவன் தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவதற்கே நட்பு உள்ளது
நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற்பொருட்டு (குறள் 784)
இவ்வுலகம் தீயவர்களால் கெடுவதில்லை. தீயவர்களின் தீச்செயல்களைக் கண்டு, கண்டனக் குரல் எழுப்பாமல் இருப்பவர்களால் தான் உலகம் கெடுகிறது. இன்றைய அருள்வாக்கு வழிபாடு நாம் தீமை செய்பவர்களைத் திருத்த வேண்டும் என்று அறிவுறத்துகிறது. முதல் வாசகத்தில் கடவுள் இறைவாக்கினர் எசேக்கியேல் வாயிலாகக் கூறுகிறார். தீயவர்களை நாம் எச்சரித்தும் அவர்கள் தீமையில் செத்தால் அவர்கள் அழிவுக்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல. மாறாக தீயவர்களை நாம் எச்சரிக்காமல் அவர்கள் தீமையில் இறந்தால், அவர்களுடைய அழிவுக்கு நாம் பொறுப்பாளிகள் .
இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து நாம் தீமை புரிபவர்களை எவ்வாறு திருத்த வேண்டுமென்று அறிவுறுத்துகிறார். தவறு இழைப்போரைத் தனிப்பட்ட முறையில் திருத்த வேண்டும் அது இயலவில்லை என்றால், ஒன்று அல்லது இரண்டு பேர் முன்னிலையில் அவரைத் திருத்த வேண்டும். அதுவும் நடக்கவில்லை என்றால், வழக்கைத் திருச்சபைக்குக் கொண்டுவரவேண்டும் திருச்சபையின் தீர்ப்புக்குக் கட்டுப்படாதவர் பிற இனத்தவருக்குச் சமம்! திருச்சபைக்குத தீர்ப்பு வழங்கும் அதிகாரம் உண்டு. அத்தீர்ப்புக்குக் கிறிஸ்தவர்கள் கட்டுப்பட்டவர்கள் என்பதை இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து வலியுறுத்துகிறார் கிறிஸ்தவர்களிடையே ஏற்படும் வழக்குகளைச் சிவில் நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்வதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறார் திருத்தூதர் பவுல் (1கொரி 6:1-8). மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய திருப்பணியாளர்களும் துறவறத்தாரும் சொத்துரிமைக்காக இன்று நீதிமன்றம் செல்வது நீதிபதிகளுக்கே அதிர்ச்சியூட்டுகிறது.
இருவர் ஒரு பொருள்மீது உரிமை பாராட்டி வழக்குமன்றம் செல்வதால் யார் பயனடைகின்றனர்? ஒரு பசுமாட்டின் மீது இருவர் உரிமை பாராட்டி நீதிமன்றம் செல்கின்றனர். ஒருவர் இது என் மாடு என்றுகூறிப் பசுவின் கொம்பைப் பிடித்து இழுக்கிறார். மற்றவர் "இது என் மாடு" என்றுகூறிப் பசுவின் வலைப் பிடித்து இழுக்க நடுவில் வழக்குரைஞர் பசுவின் மடியிலிருந்து பால் கரந்து குடித்துக் கொண்டிருக்கிறார்!. இருவர் நீதிமன்றத்துக்குப் போவதால் வழக்குரைஞர்களுக்குத் தான் இலாபம் இது தேவையா? நீங்கள் உங்கள் எதிரிகளோடு உடன்பாடு செய்யாமல் நீதிமன்றம் சென்றால், நடுவர் சிறையில் உங்களை அடைப்பார் கடைசிக் காசுவரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டர்கள்" (மத் 525-26) என்று கிறிஸ்து எச்சரித்துள்ளார் ஒரு காதலன் தன் காதலிக்கு எழுதிய கடிதத்தில் கொஞ்சம் தலைமுடியை வைத்து அனுப்பினான். ஏன்? என்று கேட்டதற்கு அவன் கூறினான் "என் காதலி என் கடிதத்தை மொட்டைக் கடிதம் என்று நினைக்கக்கூடாது" என்றான். இன்று திருச்சபையில் திருப்பணியாளர்கள் கூட ஒருவர் மற்றவருடைய பெயர் களங்கப்படும் விதத்தில் மொட்டைக் கடிதங்கள் எழுதுகின்றனர்; சுவரொட்டிகளில் பிறருடைய அந்தரங்க வாழ்வை அம்பலத்திற்குக் கொண்டுவந்து ஆனந்தம் அடைகின்றனர். இவர்களுடைய வக்கிரப் புத்தியால் தூய ஆவியாருக்கே மன உளைச்சல் ஏற்பட்டு மருந்துவ விடுப்பில் சென்று விட்டாராம்!
கிறிஸ்தவர்களிடையே தலைதூக்கும் பொறமை, மனக்கசப்பு கட்சி மனப்பான்மை பேய்த்தன்மை வாய்ந்தது என்கிறார் திருத்தூதர் யாக்கோபு (யாக் 3:13-16). திருச்சபையில் இடறலை உருவாக்கும அலகையின் கையாட்களின் "கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டித் தொங்கவிட்டு ஆழ்கடலில் அமிழ்த்துவது அவர்களுக்கு நல்லது" என்கிறார் ஆண்டவர் (மத் 18:6-7). ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் அமைதிக்குழு இருக்க வேண்டும் இக்குழு சமரச முயற்சியில் இடுபட வேண்டும் இக்குழுவின் நியாமான தீர்ப்புக்குக் கட்டுப்படாதவர்களைத் திருச்சபையிலிருந்து நீக்கிவிட வேண்டும். எத்தனை சட்டங்கள் இயற்றினாலும் அன்புதான் உச்சச் சட்டம். இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறுகிறார் "அன்பே திருச்சட்டத்தின் நிறைவு (உரோ 13:10, பிறரைக் குறை கூறுவதிலும் பிறரை விமர்சனம் செய்வதிலும் அன்பே முதலிடம் பெற வேண்டும்.
அன்பே இல்லாத விமர்சனம் தவறு. விமர்சனமே இல்லாத அன்பும் தவறு. அன்போடு கூடிய விமர்சனமே சரியாகும்!
குற்றமும் சுற்றமும்
கற்பனைக் கதையல்ல. நடந்ததாகச் சில ஆண்டுகளுக்கு முன் நாளிதழ் சொன்ன செய்தி இது!
கொலைக்களத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறான் இளைஞன் முத்து. தூக்கிலிடுமுன்பு அங்கிருந்த நீதியரசர் அவனிடம் “கடைசி ஆசை என்று ஏதாவது இருந்தால் சொல்” என்கிறார். அதற்கு அவன் ஒரு முறை தன் தாயைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல, நீதியரசர் அவனது தாய்ப்பாசத்தை எண்ணி நெகிழ்ந்துபோய் தாயை அழைத்துவர ஏற்பாடு செய்கிறார். தாயைக் கண்டதும் தூக்குமேடை விட்டு ஓடிச் செல்கிறான். தன் தாயைக் கட்டியணைத்து முத்தமிடுவான் என்று நினைத்த அனைவரும் அதிர்ச்சியடைய, முத்து தன் தாயின் கழுத்தை நெறித்துக் கொல்ல முயல்கிறான். அருகில் இருந்தவர்கள் உடனே ஓடிச் சென்று மகனையும் தாயையும் பிரிக்கின்றனர். “ஏன் இப்படிச் செய்தாய்?” என்று நீதியரசர் வினவ, “நான் இந்த அளவுக்கு கொலை, கொள்ளை பாலியல் வன்முறை என்று குற்றங்களுக்கு ஆளாகக் காரணமே என் தாய்தான். பள்ளியில் நான் முதன்முறை திருடியபோது என் தாய் என்னைக் கண்டித்திருந்தால், திருந்தி இருப்பேன். இவ்வளவு தூரம் நான் சென்றிருக்க மாட்டேன். எனவே என்னோடு அவளும் செத்து ஒழியட்டும்” என்கிறான் உறுதிப்பட.
“துள்ளித் திரிகின்ற பருவத்தில் என் துடுக்கடக்கி - என்னை பள்ளிக்கு அனுப்பிலனே என் தந்தையாகிய பாதகனே” என்ற பட்டினத்தாரின் பாடல் அடிகள் ஆழ்ந்த சிந்தனைக்குரியவை. உரிய காலத்தில் தவறுகளைச் சுட்டிக்காட்டாத, தட்டிக் கேட்காத பெற்றோர்களோ, நண்பர்களோ பாதகர்களே!
இந்த உலகம் கெட்டுச் சீரழிவது தீயவர்களால் அல்ல, தீயவர்களின் தீச்செயல்களைக் கண்டு கண்டிக்காமல் கண்டனம் செய்யாமல் மௌனமாக இருப்பவர்களால்தான்.
திருத்துவது என்பது இறைவாக்குப்பணி என்கிறது இன்றைய வழிபாடு.
யோபு 5:17-18 கூறுகிறது : “இதோ கடவுள் திருத்தும் மனிதர் பேறுபெற்றோர். ஆகவே வல்லவரின் கண்டிப்பை வெறுக்காதீர். காயப்படுத்தினாலும் கட்டுப்போடுபவர் அவரே. அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரதே”. “பிள்ளாய் ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் என்று தள்ளி விடாதே; அவர் கண்டிக்கும்போது அதைத் தொல்லையாக நினையாதே. தந்தை தன் அருமை மகனைக் கண்டிப்பது போல் ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ, அவர்களைக் கண்டிக்கிறார்” என்ற நீதிமொழிகளை (3:11-12) மேற்கோள் காட்டி எபிரேயர் (12:5-6) நினைவுபடுத்துவதும் சிந்தனைக்குரியது.
த(க)ண்டித்துத் திருத்துவது என்பது கடவுளின் தந்தைக்குரிய அக்கறையாகும், ஈடுபாடாகும். எனவேதான் தான் நேசித்த இஸ்ரயேல் மக்களை நேரிய வழியில் நடத்த / நெறிப்படுத்த அவர்கள் நடுவே இறைவாக்கினரை அனுப்பினார். “மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்கும் காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன். என் வாயினின்று வரும் வாக்கைக் கேட்கும் போதெல்லாம் நீ என் பொருட்டு அவர்களை எச்சரிக்க வேண்டும்”. (எசேக். 33:7) தீயவர்களை நாம் எச்சரித்தும் அவர்கள் திருந்தாது தீமையில் செத்தால், அவர்கள் அழிவுக்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல. மாறாக தீயவர்களை நாம் எச்சரிக்காமல் இவர்கள் தீமையில் மாண்டால் அவர்கள் அழிவுக்கு நாம் பொறுப்பாளிகள் (எசேக். 33:8-9). இந்தச் சமூக அக்கறையுள்ள எவரும் “நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?”” (தொ.நூ. 4:9) என்று காயீனைப் போலத் தட்டிக் கழித்துத் தப்பிக்க முடியுமா?
எவ்வாறு திருத்துவது என்பதை இன்றைய நற்செய்தி தெளிவுபடுத்துகிறது. முதலில் தனியாக, பிறகு ஒரிரு நண்பர்களோடு இணைந்து, அதன்பின் திருஅவையின் வழி நின்று திருத்த வேண்டும். திருஅவைக்கும் செவி சாய்க்காவிடில், அவன் உனக்குப் புற இனத்தான் போல் இருக்கட்டும் என்கிறார் இயேசு.
இறைவாக்கினர் நாத்தான் மன்னன் தாவீதின் பிழையைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை. திருமுழுக்கு யோவான் ஏரோதின் தவறைக் கண்டிக்கத் தயங்கவில்லை. அருளானந்தர் என்ற புனிதர் தடியத்தேவன் என்ற சிற்றரசனைத் திருத்தப் பின்வாங்கவில்லை. ஏன், இயேசுவே பரிசேயர்களின் வெளிவேடங்களைத் தோலுரித்துக் காட்ட அஞ்சியதில்லை.
இறைவனைத் தந்தை என்று அழைக்கும் இறைமக்களாகிய நாம், சகோதர உறவில் பிணைக்கப்படுகிறோம். நமது வாழ்வு, நிறைவு, மீட்பு நமது சகோதரனையும் சார்ந்து இருக்கிறது. செய்யக்கூடாததைச் செய்வது பாவம் என்றால் செய்ய.வேண்டியதைச் செய்யத் தவறுவதும் பாவம்தானே! நாம் சார்ந்த இந்தச் சமுதாயத்திலே நமக்குள்ள சமூகப் பொறுப்பைக் கோடிட்டுக் காட்டுகிறார் இயேசு. எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன, நான் உண்டு என் வேலை உண்டு என்று ஏனோ தானோ என்ற போக்கைத் தவிர்த்து அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்ற அடிப்படை உறவிலே பிறக்கும் உரிமையைப் பயன்படுத்திச் சகோதரனைத் திருத்த நல்வழிப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். திருத்தும் கடமையின் உள்நோக்கமாக அன்பும் அக்கறையுமே இருக்க வேண்டும். அவனது வளர்ச்சி நோக்குடைய ஈடுபாடு - அடுத்தவரை அன்பு செய்வது என்பது அவருக்கு எது நல்லதோ அதை மட்டும் செய்வது. சகோதரனின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு திருத்த மனமில்லாதவர்கள் நாம், அவர்களின் குறைகளை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டத் தயங்குவதில்லை.
ஒரு புளியமரத்தைத் தூரத்தில் இருந்து பார்த்தால் முழு மரமும் யும். அதன் -அடியில் நின்று பார்த்தால் ஒரு சில கொப்புக்கள் யும், புளியமரத்தினடியில் ஒரு பொந்து இருந்து அதனுள் உட்கார்ந்து பார்த்தால் மரமே தெரியாது. நாம் நமக்குள் இருக்கிறோம். ஈது வாழ்வில் நாம் செய்யும் தவறுகள் நமக்கே தெரிவதில்லை. நமது ணுக்கு அருகில் இருக்கும் புருவத்தை நம்மால் பார்க்க முடிகிறதா? குறையைக் காணும் நாம் நமது குறையை அறியாமல் இருக்கிறோம்.
எவரிடம் தான் குறையில்லை? “நல்லவர்கள் நானிலத்தில் இரண்டு பேர்! நிச்சயமாக நீயும் நானும் அல்ல! ஒருவன் இப்போது உயிரோடு இல்லை. மற்றவன் இன்னும் பிறக்கவில்லை” - இதுதான் உண்மை. 5ஆம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டுவிழாவின்போது அவரைப் பாராட்டிப் பல ஆங்கிலக் கவிஞர்கள் பாடினார்கள்: அதில் ஒரு பெண், “இவரிடம் ஒரு குறையையாவது கண்டால் நான் இவரை மனிதர் என்று அழைத்திருப்பேன்” என்று பாடி முதல் பரிசைப் பெற்றுக் கொண்டாள்.
எல்லாரும் தவறக் கூடியவர்களே! எனவே திருந்துவதும் " திருந்த உதவுவதும் சமூகத் தேவையாகிறது. இதனைச் செய்வதில் பொறுமையும். கனிவும், சாந்தமும் கலந்த அணுகு முறை அவசியம் என்பதே இன்றையச் செய்தி. தவறான அணுகுமுறையின் மூலம் திருச்சபையின் சமூகங்கள் பல உறுப்பினர்களை இழந்திருக்கிறது என்பது கசப்பான வரலாறாகும்.
அடுத்தவனுடைய தவறுகளை வெகு எளிதாக மறப்பதற்கு வழி என்னவெனில் நம்முடைய தவறுகளைப் பற்றி அடிக்கடி நினைத்துக் கொள்வதுதான்.
தந்தையின் தலையில் ஒருசில நரை முடிகள் இருப்பதைக் கண்ட மகன் தந்தையிடம், “ஏன் உங்கள் தலையில் ஒரு சில முடிகள் மட்டும் வெள்ளையாக இருக்கின்றன?” என்று கேட்டான். மகன் தவறு செய்யக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில், “பிள்ளைகள் செய்யும் தவறு அல்லது கெட்ட செயல் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வெள்ளை முடி தந்தையின் தலையில் தோன்றும்” என்று தந்தை சொன்னார். மகன் சொன்னான்: “அதானே பார்த்தேன். தாத்தாவின் தலை முழுவதும் ஏன் வெள்ளை முடிகளாக இருக்கின்றன என்று இப்போதுதான் புரிகிறது...
“தீயோரை அவர்கள் தம் வழியிலிருந்து திரும்ப வேண்டும் என்று நீ எச்சரித்தும் அவர்கள் தம் வழியிலிருந்து திரும்பாவிட்டால் அவர்கள் தம் குற்றத்திலேயே சாவர். நீயோ உன் உயிரைக் காத்துக் கொள்வாய்” (எசேக். 39:9).
குடும்ப உறவுகள்
கடந்த சில ஆண்டுகளாக, மின்னஞ்சலில் அவ்வப்போது ஒரு சிறு கட்டுரை சுற்றி, சுற்றி வருகிறது. Coca Cola நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி Brian G.Dyson என்பவர் குடும்ப உறவுகள் பற்றி எழுதிய கட்டுரை இது.
பல பந்துகளை ஒரே நேரத்தில் தொடர்ச்சியாகத் தூக்கிப்போட்டுப் பிடிக்கும் வித்தையை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். இந்த வித்தையை செய்வதற்கு, தனித் திறமை வேண்டும். இந்த வித்தையோடு வாழ்வை ஒப்பிட்டு Brian G.Dyson அவர்கள் எழுதியுள்ள இக்கட்டுரையின் முதல் சில வரிகள் இதோ:
“பல பந்துகளை ஒரே நேரத்தில் தூக்கிப் போட்டுப் பிடிக்கும் வித்தையைப் போல, வாழ்க்கையைக் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் கையில் ஐந்து பந்துகள் உள்ளன. அவை... நீங்கள் செய்யும் தொழில், உங்கள் குடும்பம், உடல் நலம், நண்பர்கள் மற்றும் உங்கள் மனம். இந்த ஐந்து பந்துகளையும் நீங்கள் மாற்றி மாற்றி தூக்கிப்போட்டு படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
ஐந்து பந்துகளில் உங்கள் தொழில் என்பது மட்டும் ஒரு இரப்பர் பந்து. அது கைதவறி கீழே விழுந்தாலும், மறுபடி எகிறி குதித்து உங்கள் கைகளுக்கு வந்துவிடும். ஆனால், மற்ற நான்கு பந்துகள் – அதாவது, குடும்பம், உடல்நலம், நண்பர்கள், மனம் ஆகிய நான்கும் கண்ணாடியால் ஆனவை. அவை கீழே விழுந்தால், உடைந்துவிடும். அவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவது, மிகக் கடினமான காரியம். அல்லது, இயலாத காரியம் என்று கூடச் சொல்லலாம்.”வாழ்வின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றான நமது குடும்ப உறவுகள் கண்ணாடி பந்துகள் போன்றவை... தவறினால் சிதறிவிடும். குடும்ப உறவுகளைப் பற்றிய சில எளிய, தெளிவான பாடங்களை நாம் புரிந்துகொள்ளத் தவறுகிறோம், அல்லது, புரிந்து கொண்டாலும் பின்பற்றத் தவறுகிறோம் என்பதை ஆழமாக அலசிப்பார்க்க, இன்றைய ஞாயிறு நற்செய்தி நம்மை அழைக்கிறது.
நமது தொலைக்காட்சிகளில் வரும் பல மெகாத் தொடர்கள், குடும்பத்திற்குள் நிகழும் பிரச்சனைகளை ஒவ்வொரு நாளும் காட்டிவருகின்றன. பிரச்சனைகள் ஒன்றா, இரண்டா? அவை ஒன்றன்பின் ஒன்றாக சங்கிலி போல நீண்டுகொண்டே செல்வதாக... அல்லது, பிரச்சனைகள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஒரு மலைபோல குவிவதாக காட்டப்படுகின்றன. இந்தச் சங்கிலிகளால் கட்டுண்டு, அல்லது இந்த மலைகளுக்குக் கீழ் நசுக்கப்பட்டு அந்த கதாபாத்திரங்கள் படும் வேதனைகள் நம்மில் பலரை கண்ணீரில் மூழ்கச் செய்கின்றன.
எண்ணிக்கையின்றி பெருகிவரும் இத்தொடர்களின் வெற்றிக்குக் காரணம்... பெரும்பாலான இரசிகர்களின் ஈடுபாடு. ‘இத்தொடர்களில் காட்டப்படும் பிரச்சனைகள்தானே நம் குடும்பங்களிலும் நடக்கின்றன’ என்று சொல்லும் அளவுக்கு இத்தொடர்கள் இரசிகர்கள் மனதில் அரியணை கொண்டுள்ளன. அவ்வப்போது, குடும்பங்களில், நிஜமான மனத்தாங்கல்கள், வாக்குவாதங்கள் நிகழும்போது, இத்தொடர்களில் வரும் நிகழ்ச்சிகளும், வசனங்களும் இந்தக் குடும்பங்களை மறைமுகமாகப் பாதிக்கின்றனவோ என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது.
அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைப்பதுபோல், குடும்பப் பிரச்சனைகளை மீண்டும், மீண்டும் காட்டும் நமது மெகாத் தொடர்கள், இப்பிரச்சனைகளுக்கு தீர்வுகள் சொல்வது அபூர்வம். அப்படியே சொல்லப்படும் தீர்வுகளும் பயனுள்ளவையா அல்லது வெறும் பரபரப்பை உருவாக்குகின்றனவா என்பதும் கேள்விதான்.
தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றிய ஆய்வு அல்ல இது. இன்றைய நற்செய்தி நம்மை குடும்பத்தின் பிரச்சனைகளுக்கு அழைத்து வந்திருப்பதால், இத்தொடர்களைப் பற்றி இங்கு குறிப்பிட்டுள்ளோம். தொலைக்காட்சித் தொடர்கள் கூறும் கருத்துக்களை உள்வாங்கும் அளவுக்கு, நாம் நற்செய்தி சொல்லும் கருத்துக்களை உள்வாங்குகிறோமா என்பதை அலசிப் பார்க்க, இந்த ஞாயிறு நமக்கு ஒரு வாய்ப்பைத் தந்துள்ளது.
குடும்பத்தில் ஒருவர் தவறு செய்யும்போது என்ன செய்ய முடியும், என்ன செய்யவேண்டும் என்ற தீர்வுகளை இன்று இயேசு நற்செய்தியில் கூறியுள்ளார். இந்த நற்செய்தியைக் கேட்கும்போது நம் மனங்களில் நம்பிக்கை பிறக்கின்றதா? அல்லது, இயேசு கூறும் வார்த்தைகள், நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராதவை என்று, நமது மனம் சொல்கிறதா? உண்மையாகவே நம் உள்ளத்தில் என்னதான் நிகழ்கிறதென்று அலசிப் பார்ப்போமே. இயேசு தம் சீடர்களிடம் அன்று சொன்னது... இதோ, நம்மிடம் இன்று சொல்வது இதுதான்:
மத்தேயு நற்செய்தி 18: 15-17
“உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது, அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். இல்லையென்றால் ‘இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும்’ என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப, உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள். அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில், திருச்சபையிடம் கூறுங்கள்.”
இப்போது நாம் கேட்ட இந்தப் பகுதியை மட்டும் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே நாம் பின்பற்றினால், உறவில் உருவாகும் பிரச்சனைகள் பெரிதும் விலகிவிடும். Interpersonal relationship அதாவது, நமக்கும், அடுத்தவருக்கும், குறிப்பாக, நமக்கும், நமக்கு நெருங்கியவர்களுக்கும் இடையே இருக்கவேண்டிய உறவைக் குறித்து எத்தனையோ மனநலவியல் நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் பல பக்கங்களில் விளக்கப்படும் உண்மைகளை இயேசு ஒரு சில வரிகளில் விளக்கியுள்ளது போல் தோன்றுகிறது. வாழ்க்கைக்கு மிகவும் தேவையான இந்த முக்கியமான பாடங்களை மீண்டும் பயில, இயேசுவின் பாதங்களில் நாம் அமர்வோம்.
இன்றைய நற்செய்தியின் துவக்கமே ஒரு சவாலாக ஒலிக்கிறது. “உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்…” என்பவை இயேசு கூறும் ஆரம்ப வார்த்தைகள். “உங்கள் சகோதரன் அல்லது சகோதரிக்கு எதிராக நீஙகள் பாவம் செய்திருந்தால்…” என்று இயேசு ஆரம்பித்திருந்தால், அவர் தொடர்ந்து கூறுவது பொருளுள்ளதாக இருக்கும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. “உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால்…” என்று ஆரம்பத்திலேயே நம் சிந்தனைகளைப் புரட்டிப் போடுகிறார்.
பொதுவாக நம் குடும்பங்களில் தவறு செய்பவர் யாரோ, அவரிடமிருந்து தவறைச் சரி செய்வதற்கான முயற்சிகளையும் எதிர்பார்ப்போம். உதாரணமாக, நான் என் உடன் பிறந்த ஒருவரிடம் கோபமாகப் பேசியிருந்தால், அவரைத் தேடிச்சென்று மன்னிப்பு கேட்பது என் கடமை. இன்றைய நற்செய்தியின் ஆரம்பத்தில், இயேசு நமக்கு முன் வைக்கும் சவால் கடினமான ஒன்று. நம் உடன் பிறந்தவர் குற்றம் செய்யும்போது, அதுவும் நமக்கு எதிராகக் குற்றம் செய்யும்போது, அவர் நம்மைத் தேடி வந்து சமரச முயற்சிகளை ஆரம்பிக்கவேண்டும் என்று காத்திருக்காமல், நாம் அவரைத் தேடிச் செல்லவேண்டும் என்று இயேசு கூறுகிறார். நம் உடன் பிறந்தோர் புரிந்த குற்றத்தைக் களைய நாம் முதல் முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று கூறுகிறார். நடக்கிற காரியமா இது? நடக்கிற காரியம் தான்... நடக்க வேண்டிய காரியமும் கூட.
இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வார்த்தைகளைக் கேட்டதும், என் மனதில் இயேசுவின் மற்றொரு கூற்று பளிச்சிட்டது. மலைப்பொழிவில் அவர் கூறிய வார்த்தைகள் அவை:
மத்தேயு 5: 23-24
நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின் முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.
காணிக்கை செலுத்தும் நேரத்தில் ஒருவருக்கு, தன் உறவுகள் சரியில்லை என்ற நெருடல். சரியில்லாத உறவுகளுக்கு யார் காரணம்? நாம் காரணமா? பிறர் காரணமா? "காணிக்கை செலுத்த வரும்போது, நீங்கள் உங்கள் சகோதரர், சகோதரிகள் மீது மனத்தாங்கல் கொண்டிருந்தால்..." என்று இயேசு சொல்லவில்லை. மாறாக அவர் தரும் சவால், இன்னும் தீவிரமானதாய் உள்ளது. பீடத்திற்கு முன் நீங்கள் நிற்கும்போது, உங்கள் சகோதரர், சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்... என்று இயேசு கூறியுள்ளார். அவர் தெளிவுபடுத்த விரும்புவது இதுதான்... உறவுகளில் தவறுகள் ஏற்படும்போது, யார் காரணம் என்ற வரலாற்றுக் குறிப்புக்களையும், கணக்குகளையும் பார்க்காமல், பிரச்சனையைத் தீர்க்கும் முதல் முயற்சிகள் நம்மிடமிருந்து வரவேண்டும் என்று இயேசு மலைப்பொழிவிலும், இன்றைய நற்செய்தியிலும் தெளிவாக்குகிறார்.
பிரச்சனையைத் தீர்க்க, குற்றத்தைக் களைய நாம் மேற்கொள்ளும் முதல் முயற்சிகள் எவ்விதம் இருக்கவேண்டும் என்பதை இயேசு இன்றைய நற்செய்தியில் தொடர்ந்து தெளிவாக்குகிறார். அவர் கூறும் முதல் படி என்ன?
நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.
மிக, மிக அவசியமான, ஆனால், கடினமான ஒரு வழி. வயதால் அல்ல, மனதால் முதிர்ச்சி அடைந்தவர்கள் பின்பற்றும் சரியான வழி இது. ஆனால், நம்மில் பலர் உறவுகள் விடயத்தில் மட்டும் வளர மறுத்து, முதிர்ச்சி அடைய மறுத்து அடம் பிடிக்கும் குழந்தைப் பருவத்திலேயே நின்றுவிடுகிறோம். தவறிழைத்தவரைத் தனியே அழைத்து, மனம்விட்டுப் பேசுவதற்குப் பதில், தேவையற்ற, சிக்கலான வழிகளைக் கடைபிடிக்கிறோம். பிரச்சனைகளைப் பெரிதாக்குகிறோம்.
நம் மெகாத் தொடர்கள் கூறும் வழி இது. பிரச்சனை பெரிதானால்தான் மெகாத் தொடர்கள் பல வாரங்கள் ஓடும்... நமது குடும்பங்களிலும் இதுபோல் நிகழ வேண்டுமா, என்ன? தொலைக்காட்சித் தொடர்களில் பிரச்சனை பெரிதாக வேண்டும், குற்றவாளி ஒழிய வேண்டும், பழிக்குப் பழி தீர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் நாடகம் விறுவிறுப்பாக இருக்கும். நடைமுறை வாழ்வில் நம் குடும்பங்களில் விறுவிறுப்பு வேண்டுமா, அல்லது, விடைகள், தீர்வுகள் வேண்டுமா என்று நாம் தீர்மானிக்க வேண்டும்.
2013ம் ஆண்டு நாம் கொண்டாடிய நம்பிக்கையின் ஆண்டின் ஓர் உச்சக்கட்ட நிகழ்வாக, அக்டோபர் 26ம் தேதி, பல்லாயிரம் குடும்பங்கள் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்திற்கு திருப்பயணமாக வந்திருந்தனர். அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பசிலிக்கா வளாகத்தில் மாலை நேரம் சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது, மனநல அளவில் மாற்றுத்திறன் கொண்ட ஒரு சிறுவன் திருத்தந்தையைச் சுற்றிச் சற்றி வந்ததையும், அவரது இருக்கையில் ஏறி அமர்ந்ததையும் நம்மில் பலர் பார்த்திருக்க வாய்ப்புண்டு.
அந்தக் கூட்டத்தில் திருத்தந்தை அவர்கள், நலமான குடும்ப வாழ்வு அமைய நமக்குத் தேவையானது மூன்றே வார்த்தைகள் என்று கூறினார். இத்தாலிய மொழியில் Permesso, Grazie, Scusa என்ற இம்மூன்று வார்த்தைகளைக் கூறியத் திருத்தந்தை, கூடியிருந்த குடும்பத்தினர் அனைவரையும் அந்த வார்த்தைகளைத் திரும்பச் சொல்லும்படி கேட்டுக் கொண்டார்.
குடும்பங்களில் எதையும் செய்வதற்கும், சொல்வதற்கும் மற்றவர்கள் அனுமதியைப் பெறும் வார்த்தை, Permesso. தமிழில் இதற்கு இணையாக நாம் சொல்லக்கூடியது... தயவுசெய்து. மற்றவர்களுக்கு நன்றி கூறும் வார்த்தை - Grazie. தவறு செய்யும்போது, மன்னிப்பு கேட்கும் வார்த்தை - Scusa.
தயவுசெய்து, நன்றி, மன்னிக்கவும்... மிக எளிதாகத் தோன்றும் இந்த மூன்று வார்த்தைகளையும், ஒப்புக்காக, செயற்கையாகச் சொல்லாமல், அவ்வார்த்தைகள், உண்மையாகவே, உள்ளத்திலிருந்து வெளிப்படும் வார்த்தைகளாக இருந்தால், நம் குடும்பங்கள் நலமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
குடும்பங்களில் நல்லச் சூழல் உருவாக, எத்தனையோ மனநல அறிவாளிகள் சொல்லும் அறிவுரைகளைப் பின்பற்ற விழையும் நாம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொல்லித்தரும் எளிதான வழிகளையும் பின்பற்ற முயல்வோமே! இந்த முயற்சிகளால் நாம் இழக்கப் போவது எதுவுமில்லை, ஒருவேளை அடையக்கூடிய பலன்கள் அதிகம் இருக்கலாம்!
இறைமகன் இயேசுவும், திருத்தந்தையும் கூறும் எளிய அறிவுரைகளின்படி வாழ முயலும் குடும்பங்களில் இறைவனின் பிரசன்னம் நிறைந்து பொங்க வழியுண்டு. இந்த உறுதியைத் தான் இயேசு இன்றைய நற்செய்தியின் இறுதி வார்த்தைகளாக சொல்லியிருக்கிறார்:
மத்தேயு 18: 20
“இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”
"அன்பினால் பிணைக்கப்பட்ட சமூகம்: திருத்துவதும் செபிப்பதும் நம் கடமை!"
இன்றைய நற்செய்தியில் (மத்தேயு 18:15-20), ஒரு விசுவாச சமூகம் அல்லது ஒரு குடும்பம் தங்களுக்குள் ஏற்படும் பிணக்குகளை எப்படிக் கையாள வேண்டும் என்ற வழிகாட்டுதலை இயேசு வழங்குகிறார்.
1. காவற்காரனின் பொறுப்பு (The Watchman’s Duty)
முதல் வாசகத்தில் (எசேக்கியேல் 33:7-9), இறைவன் எசேக்கியேலை இஸ்ரயேல் மக்களுக்குக் "காவற்காரனாக" நியமிக்கிறார். ஒரு பாவி தன் தீய வழியிலிருந்து மாறும்படி எச்சரிக்க வேண்டியது காவற்காரனின் கடமை.
• சிந்தனை: நம் உடன் இருப்பவர் தவறு செய்யும்போது, "நமக்கென்ன?" என்று ஒதுங்கிப் போவது கிறிஸ்தவப் பண்பல்ல. அன்போடு அவர்களைத் திருத்த முயல வேண்டும். நாம் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை என்றால், அந்தப் பாவம் நம்மைச் சாராது; ஆனால் சொல்லாமல் விட்டால், அதற்கு நாமே பொறுப்பு.
2. சகோதரத் திருத்தம் (Brotherly Correction)
இயேசு ஒரு படிமுறையைச் சொல்கிறார்: முதலில் தனிமையில் பேசு, கேட்கவில்லை என்றால் இரு சாட்சிகளுடன் பேசு, அப்படியும் கேட்கவில்லை என்றால் சபையிடம் (திருச்சபையிடம்) சொல்.
• விளக்கம்: ஒருவரைப் பழிவாங்கவோ அல்லது அசிங்கப்படுத்தவோ திருத்தக் கூடாது. அவரை மீண்டும் நல்வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்ற "அன்பு" மட்டுமே திருத்தத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். பிறர் தவறைப் பொதுவெளியில் (Social Media-வில்) பேசுவதற்கு முன், அவரிடம் தனிமையில் பேசும் துணிச்சல் நமக்கு வேண்டும்.
3. அன்பே சட்டத்தின் நிறைவு (Love is the Fulfillment)
இரண்டாம் வாசகத்தில் (உரோமையர் 13:8-10) பவுல் அடியார் கூறுகிறார்: "அன்பு ஒன்றே நீங்கள் ஒருவருக்கொருவர் பட வேண்டிய கடனாய் இருக்கட்டும்." * பாடம்: பிறருக்குத் தீமை செய்யாதிருப்பதே அன்பின் வெளிப்பாடு. பத்துக்கட்டளைகளின் சுருக்கமே "உன்மீது நீ அன்பு கூர்வது போலப் பிறர் மீதும் அன்பு கூர்வாயாக" என்பதுதான்.
பங்குத்தளம் மற்றும் இறைமக்களுக்கான செயல் திட்டங்கள் (CTA)
இந்த வாரம் ஒரு கிறிஸ்தவச் சமூகமாக நாம் செய்ய வேண்டியவை:
🕇 அன்போடு திருத்துதல்: உங்கள் குடும்பத்திலோ அல்லது அன்பியத்திலோ யாராவது தவறு செய்தால், அவர்களைப் பற்றி மற்றவர்களிடம் புறணி பேசாமல், அவர்களிடம் நேரடியாகச் சென்று அன்போடு பேசுங்கள்.
🕇 இணைந்து செபித்தல்: இயேசு வாக்குறுதி அளிக்கிறார்: "உங்களுள் இருவர் மண்ணுலகில் ஒருமனப்பட்டு எதைக் கேட்டாலும் என் தந்தை அதை அருள்வார்." இந்த வாரம் உங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒருமனப்பட்டு, குடும்ப அமைதிக்காகவோ அல்லது பங்கின் வளர்ச்சிக்காகவோ சிறப்புச் செபம் செய்யுங்கள்.
🕇 அன்புக்கடன்: யாரிடமாவது நீங்கள் பகை உணர்வுடன் இருந்தால், அந்தப் பகை எனும் கடனை அடைத்து, அன்பை மட்டும் மீதியாக வையுங்கள்.
🕇 இருவர் அல்லது மூவர்: இயேசு நம் நடுவில் இருக்க வேண்டுமென்றால், நாம் பிரிந்து கிடக்கக் கூடாது. ஒற்றுமையே கடவுளின் தங்குமிடம்.
மறையுரைச் சுருக்கம் (The Core Message)
"தவறு செய்பவர்களைத் தள்ளி வைப்பது எளிது; ஆனால் அவர்களை அன்போடு அழைத்து வந்து நல்வழிப்படுத்துவதே கடினமான சீடத்துவம். நாம் ஒருமனப்பட்டு இறைவனிடம் கேட்கும்போது, அவர் நம் நடுவில் வாழ்கிறார்."
பொதுக்காலம் 23ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (எசே. 33: 79)
இறைவாக்கினர் எசேக்கியல் நூல் நான்கு பகுதிகளை தன்னகத்தே கொண்டூள்ளது. இதில் மூன்றாவது பகுதி 33 முதல் 39 முடிய உள்ளன. இப்பகுதியில் பாபிலோனிய அரசன் நெபுக்கத் நேசரின் படையெடுப்புக்குப் பிறகு துவண்டு போயிருந்த மக்களுக்கு ஆறுதல் கூறும் வண்ணம் ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றிய கடவுளுடைய வாக்குறுதிகளை இறைவாக்காக உரைக்கிறார். இப்பகுதியின் தொடக்கத்தில், கடவுள் எசேக்கியலை இஸ்ராயேல் மக்களுக்கு காவலாளியாக நியமிக்கிறார். அவரது பணி, மக்களை உற்சாகப்படுத்துவது, உண்மை சமயத்தைப் போதிப்பது, மற்றும் நாடுகடத்தப்பட்டோரின் துன்பங்களைத் துடைப்பது. குறிப்பாக இன்றைய வாசகப் பகுதியில், இறைவாக்கினரின் இருவிதமான பணிகள் குறிப்பிடப்படுகின்றன. இப்பணிகளிலிருந்து தவறினால், அவர் கடவுளுக்கும், மனிதனுக்கும் அநீதி இழைத்தவராக மாறும் அபாயம் இருக்கிறது. அவ்விருப் பணிகள் (1) இஸ்ராயேல் மக்களை இன்னலுற்ற கடந்த காலத்தை மறக்க வைப்பது. (2) வரவிருக்கின்ற நாட்களில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் கடவுளது விருப்ப த்திற்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என விளக்குவது ஆகும்.
இரண்டாம் வாசகப் பின்னணி (உரோ. 13: 810)
தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் முழுவதும், கிறிஸ்துவின் வழியாக வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் அன்பைப் பற்றியும், அதற்கு பதிலாக நாமும் அயலாரை அன்பு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார். கடவுளை நாம் அன்பு செய்யும் போது, நாம் கடவுளோடும், கடவுள் அன்பு செய்யும் மக்களோடும் ஒன்றிப்பாகிறோம். மக்கள் அனைவரையும் அன்பு செய்ய நாம் கடமைப் பட்டிருக்கிறோம். இக்கடமையை நிறைவேற்றுவதன் மூலம் கடவுளது அன்புக் கட்டளையை கடைப்பிடிக்கிறோம்.
நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 18:15-20)
மத்தேயு நற்செய்தி 13:53 முதல் 18:35 முடிய உள்ள பகுதியில் விண்ணரசின் அமைப்பைப் பற்றிய செய்திகள் உள்ளன. 18ஆம் அதிகாரம் திருச்சபையைப் பற்றிய இயேசுவின் மறையுரையாக உள்ளது. இன்றைய வாசகம் தவறு செய்வோரை திருத்தும் முறையைப் பற்றியும், பொது செபத்தின் முக்கியத் துவத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறது.
ஒருவர் ஒருவரை திருத்த வேண்டியது நமது கடமை. ஆணால் ஒருவரை சமூகத்திலிருந்து ஒதுக்குவதும், விண்ணரசிலிருந்து விலக்குவதும் அரிதான முடிவாக அமைய வேண்டும். ஒரு குடும்ப மாக ஒரு மனதோடு செபிக்கும் மக்களின் மத்தியில் கடவுளின் பிரசன்னம் இருக்கும் என்பது தின்னம்.
மறையுரை
நாம் வாழும் உலகம் நவீன உலகம். நவீனம் என்றால் அதிநவீனம். புறாக்கள் தூது கொடுத்தது போய், ஈமெயில்கள் தூது எடுத்துச் செல்கின்றன. கடல் கடந்து செய்தி தாமதமாய் போய்ச்சேருவது முடிந்து, அனுப்பும் நேரத்திலேயே செய்தி போய்ச் சேர்ந்து விடுகிறது. உலகமே சட்டைப் பைக்குள் வந்துவிட்டது. கணிணி சுருங்கிச் சுருங்கி, இறுதியில் செல்லிடைப்பேசியில் (mobile) வந்து நிற்கிறது. உலகம் இனி பெரிய உருண்டை அல்ல. மாறாக, ஒரு குட்டிக் கிராமம்.
யோசிக்கவே முடியாத வகையில் மனிதனும் மாறிவிட்டான். உலகம் கிராமம் என மாறிவிட்டாலும் சாபக்கேடு ஒன்றுள்ளது. மனிதன் மேலும் அந்நியமாக்கப்பட்ட நிலை. அமெரிக்காவில் உள்ளவர் அண்டை வீட்டில் உள்ளது போன்ற அனுபவம். ஆனால் அண்டை வீட்டில் உள்ளவர் யார் என்பதே தெரியாத கொடூரம். ஒரு முறை ஒரு நோயாளிக்கு நற்கருணை வழங்குவதற்காக ஒரு அடுக்குமாடி வீட்டிற்கு சென்றிருந்தேன். அவர்கள் வீடு பூட்டியிருந்தது. எதிர்வீட்டில் உள்ளவர்கள் வெளியே கிளம்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் கேட்டேன்: “உங்கள் எதிர்வீட்டில் உள்ளவர்கள் எங்கே” என்று. அதற்கு அந்த அம்மா கூறினாள்: “எதிர் வீட்டில் ஏதோ மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரியும். ஆனால் அவர்யார்? எங்கே என்பது தெரியாது” என்றார். எனக்கு அதிர்ச்சியா னது. ஒரு மனிதர், எதிர்வீட்டில் உள்ளவர்கள் மனிதர்கள் என்பதைத் தவிர எதுவும் தெரியாது என்கிறார் என்றால் என்ன வாழ்க்கை இது? என்ன பழக்க வழக்கம் இது? என்ன கலாச்சாரம் இது?
இப்படிப்பட்ட சூழலுக்கு பதிலாக அமைகின்றன இன்றைய மூன்று வாசகங்களும். அடுத்திருப்பவர்மேல் என்ன பொறுப்பு கொள்கிறோம், என்ற சுய பரிசோதனைக்கு இவ்வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. பிறரின் நலன் கருதி பிறர் குற்றம் சுட்டிக்காட்டி, அவர்கள் வாழ்வு பெற என்ன பொறுப்பு எடுத்துக்கொள்கிறோம்? என்ற பல கேள்விக்கனைகளை நம்மிடத்தில் வீசுகின்றன இன்றைய வாசகங்கள்! குறிப்பாக, பிறர் குற்றம் சுட்டிக்காட்டி பிறரை நல்வழிப்படூத்துவதில் நமது பொறுப்பு பற்றி சிந்திப்பது சாலச்சிறந்தது.
இன்றைய முதல்வாசகத்தில் எசேக்கியேல் இறைவாக் கினரை இஸ்ரயேல் வீட்டாருக்கு காவலாளியாக ஏற்படுத்துகிறார் இறைவன். காவலாளி என்றால் காவல் காப்பவர் மட்டுமல்ல: மாறாக, ஆண்டவரின் வாக்கை கேட்டு இஸ்ராயேல் மக்களை அவர் எச்சரிக்க வேண்டும் என்ற பணியைத் தருகிறார். அவர்கள் தவறிச் செல்கின்ற போது, இறைவனை மறந்து நடந்துகொள்கின்றபோது, போனால் போகட்டும் என்று விட்டுவிடாமல், அவர்களின்பால் பொறுப்புள்ளவ ராக, அவர்களின் நல்வழியில் அக்கறை உள்ளவராகத் திகழ எசேக்கியேல் இறைவாக்கினரை அழைக்கிறார் இறைவன்.
நற்செய்தி வாசகத்திலும் இதே செய்தி வேறு விதமாகத் தரப்படுகிறது. நமக்கெதிராக நம் சகோதரரோ சகோதரியோ பாவம் செய்தால், அவர் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்ட அழைக்கப்படுகிறோம். இதில் மூன்று கருத்துக்கள் அடங்கியுள்ளன. முதலாவது: பிறரின் குற்றத்தை எடுத்துக்காட்ட கடமைப்பட்டிருக்கிறோம். பிறர் நல்வாழ்க்கை மேல் அக்கறை இல்லாதவர்களாக வாழாமல், பிறர் வழி தவறும்போது அவர்களை நல்வழிப்படூத்த அழைக்கப்படுகிறோம். இரண்டாவது: அவர்கள் செய்த குற்றம் பொதுவானதாக இருந்தால் மட்டுமன்று, மாறாக அவர்கள் நமக்கெதிராகவே பாவம் செய்திருந்தாலும் நாம் இவ்வாறு செய்ய அழைக்கப்படுகிறோம். இதுவே கிறிஸ்தவ அன்பு. ஒருவர் நமக்கெதிராக பாவம் செய்தாலும் அவர் குற்றத்தை பெரிது படுத்தா மல், நமது சுய மதிப்பை பெரிதுபடுத்தாமல், நாமே முதல்படி எடுத்து அவர்களிடம் சென்று அவர்களது குற்றத்தை எடுத்துக்காட்ட அழைக்கப்படுகிறோம். மூன்றாவது: இதையெல்லாம் எவ்வாறு செய்ய வேண்டும்? அவர்கள் தனித்திருக்கும்போது செய்தல் வேண்டும். அவர்கள் குற்றத்தை பொதுவாக்கி, அவர்களை அவமானப்படுத்து வது இறையுளம் கிடையாது. மாறாக, அவர்களின் மானம் பறிபோய் விடாமல், அவர்களின் சுய நன்மதிப்பை மதித்து, அவர்களின் குற்றத்தை அவர்கள் தனித்திருக்கையில் எடுத்துக்கூற அழைக்கப் படுகிறோம்.
இவ்வாறெல்லாம் செய்தும் ஒருவன் திருந்தவில்லையெனில், உடனே கைகழுவி விடலாகாது. மாறாக, இரண்டு அல்லது மூன்று சாட்சிகளைக் கொண்டு அவர் குற்றத்தை சுட்டிக்காட்ட வேண்டும். அதற்கும் அவர் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கொண்டு செல்லுதல் வேண்டும். அதாவது அவர் செய்த பாவத்தை பொது வாக்கி அவரை திருத்த கடமைபட்டிருக்கிறோம். அவ்வாறும் அவர் செவிசாய்க்காவிட்டால், பின்னரே அவர் ஒதுக்கப்பட்டவர் ஆகிறார். பின்னரே அவர் மனிதர் என்ற நிலையையே இழக்கிறார்.
இத்தனை படிகளைச் செய்யாமல் ஒருவர் பாவம் செய்த உடனேயே அவரை ஒதுக்கினால், அதுவே முதல் வாசகத்தில் ஆண்டவர் சொல்லுவதைப்போல் ஆகும். “தீயோரை தம் வழியி லிருந்து திரும்பும்படி நீ எச்சரிக்காவிடில், அவர்கள் தம் குற்றத் திலேயே சாவர். அத்தோடு, அவர்கள் இரத்தப்பழியை உன்மேலே செலுத்துவேன்' என்கிறார் ஆண்டவர். மாநாக, “அவர்களை எச்சரித்து அவர்கள் தம் வழியிலிருந்து திரும்பாவிட்டால், அவர்கள் தம் குந்றத்திலேயே சாவர். நீயோ, உன் உயிரைக் காத்துக் கொள்வாய்” என்கிறார். தத்தம் சகோதர சகோதரிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துவது ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமை. இதில் தவறினால், பழிசுமத்தப்படுவோம் என்பதை மறவாதீர்கள்.
பிறர் குற்றம் எடுத்துக் கூறும்பொழுது, கனிவும் மனத்தாழ்மையும் அவசியம். யாரிடம் நாம் சுட்டிக்காட்டுகிறோமோ அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள், அவர்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை மறவாதிருத்தல் அவசியம். கனி வோடும் அன்போடும் இதைச் செய்தல் வேண்டும். அத்தோடு, தாழ்ச்சியோடு பிறர் குற்றம் எடுத்துரைக்க வேண்டும். மனதில் ஆணவம் நிறைந்தவர்களாக இதைச் செய்தால் அது நிறைவாகாது. மாறாக, தாழ்ச்சிநிறை உள்ளத்தோடு, நாமும் மனிதர்தாம்! அவர் களைப் போல் நாமும் தவறக்கூடியவர்கள்தான்! என்ற உணர்வோடு, தாழ்ந்த மனநிலையோடு இக்கடமையை நிறைவேற்ற வேண்டும்.
எதுவாக இருந்தாலும் அன்பு மட்டுமே மூலமாக இருத்தல் அவசியம். அன்பில்லாமல் குற்றம் எடூத்துரைத்தால் அது சமூகத்தை வளர்க்காது, அழித்துவிடும். இரண்டாம் வாசகத்தில் தூய பவுல் அன்பை மையப்படுத்திய வாழ்வை வாழ அழைப்பு விடுக்கிறார். “ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய கடனாய் இருக்கட்டும்” என்கிறார். “உன் மீது அன்பு கூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக” என்கிறார். “அன்பு அடுத்திருப்பவருக்கு தீங்கிழைக்காது” என்கிறார். அன்போடு பிறர் குற்றம் சுட்டிக்காட்டினால் அது அவருக்கு தீங்காக இருக்காது, மாறாக நன்மையாகும். அன்பற்று இதே செயலைச் செய்ய, அது தீங்கிழைப்பதாகிவிடும்.
சாக்ரடீஸ் மேதையிடம் ஒருவன் கேள்வி கேட்டானாம்: “மனிதருக்கும் மாட்டிற்கும் என்ன வித்தியாசம்?” என்று. அவர் கூறியது: “ஒரு மாடு மற்றொரு மாட்டைப் பற்றி அக்கறை கொள் ளாது. ஆனால் மனிதன் அவ்வாறிருக்க முடியாது. மற்றொரு மனிதனைப் பற்றி கவலைப்படாதவன் தின்று கொழுத்த பன்றி” என்றாராம். அக்கறையற்றதாக இருந்துவிடக் கூடாது கிறிஸ்தவ சமூகம். பிறர்மேல் அக்கறையோடு, பிறர் நலனில் ஆர்வமோடு, பிறரின் நல்வழிப்பாதையின் நோக்கமோடு இருப்பதுதான் திருச்சபை. ஒருவர் ஒருவர்மேல் அக்கறை கொள்ளுவோம். பிறர் நலன் கருது வோம். பிறர் வாழ வழிவகுப்போம். நம்மை அன்புசெய்வதுபோல பிறரையும் அன்புசெய்வோம். அவ்வாறு உள்ள சமூகத்தில்தான் இயேசு இருக்கிறார். “எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு கூடியிருக்கின்றார்களே அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன்” என்றார். அன்பும் அக்கறையும் நன்மனமுள்ள சமூகத்தில்தான் இயேசு பிரசன்னமாகிறார். அக்கறையுள்ள திருச்சபையாவோம். இயேசுவை பிரசன்னப்படுத்துவோம். அன்புள்ள சமூகம் மோட்சம். அன்பற்ற சமூகம் நரகம். நமது சமூகம் மோட்சமா? நரகமா? விடை உங்கள் கையில்.
பிற மறையுரை கருத்துக்கள்
🕇 கடவுளின் மீட்பு தனி நபருக்கு மட்டுமல்ல, மாறாக அனைவருக்கும் இயேசு மீட்பை கொணர்ந்தார். அனைவரும் மீட்பை சுவைக்க நாம் உதவ வேண்டும்.
🕇 தவறுபவர்களின் மனமாற்றத்தை விரும்புவது இயேசுவின் அன்பு.
🕇 ஒருமனப்பட்டிருக்கும் மக்கள் மத்தியில் இயேசு பிரசன்னமாக இருக்கிறார்.
பொதுக் காலம் இருபத்தி மூன்றாம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி இறைவாக்கு மூன்று முக்கியச் செய்தி களைத் தருகின்றது. இவை மூன்றும் இறை சமூகத்தில் வாழ்வது ஒன்றையே நோக்கமாக கொண்டுள்ளன.
1. சகோதர சகோதரிகளின் குற்றத்தைச் சுட்டிக் காட்டி திருத்தி உறவை சரிசெய்தல்.
2. இறை சமூகத்தின் உதவியுடன் உறவை சரி செய்தல்.
3. இறை சமூகத்தில் மிளிரும் செயல்படும் இறை பிரசன்னம்.
1. குற்றம் சுட்டிக்காட்டி திருத்துதல்
இன்றைய நற்செய்தி பகுதி தவறிழைக்கும் ஒரு சகோதர ரையோ, சகோதரியையோ திருத்தி இறை சமூகத்துடன் இணைப்ப தற்கு மூன்றடுக்கு வழிமுறையை முன்மொழிகின்றது. முதலாவது, ஒருவருக்கு ஒருவர் எனத் தனித்திருந்து தவற்றைச் சுட்டிக்காட்டி திருத்தி உறவை சரிசெய்து கொள்ளுதல். இவ்வாறு தவறு இழைத்தவரின் தன்மானம், சமூகத்தில் உள்ள பெயர் காப்பாற்றப் படும். இத்தகைய ஓர் அணுகுமுறை லேவி 19:17 இல் முன்மொழியப் பட்டுள்ளது (உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே! உனக்கடுத்தவரை பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்து கொள்). இது முதலாவதான எளிதான வழி.
2. இறை சமூகத்தின் உதவியுடன் உறவைச் சரி செய்தல்
முதல் வகையில் உறவைச் சரிசெய்ய முடியாதபோது இறை சமூகத்தின் உதவியை நாடச் சொல்கின்றார். அதுவும் ஒன்றிரண்டு பேரைக் கொண்டு அனைத்தும் சரிசெய்யச் சொல்கின்றார். இங்கும் குற்றமிழைத்தவரின் பெயருக்கு களங்கம் வந்துவிடக்கூடாது என்பதில் இயேசு குறியாயிருக்கிறார். இத்தகைய ஒரு வழிமுறையை முன்மொழிவதற்கும் பழைய ஏற் பாட்டில் முன் உதாரணம் உண்டு எனக் கூறுகின்றார் (இச 19:15).
இந்த இரண்டாம் வழியும் பயனளிக்காத பட்சத்தில் இறுதிக் கட்டமாக பிரச்சினையை திருஅவையின் கவனத்திற்கு வெளியரங்குக்குக் கொண்டு செல்லச் சொல்கின்றார். இங்கு எல்லாம் சரி செய்யப்பட்டுவிடும் என நம்புகின்றார். இவ்வாறு மூன்று கட்டமாக ஒரு சகோதரரை, சகோதரியை திருத்தி சமூ கத்தோடு இணைத்துவிட வேண்டும் எனக் கூறுகின்றார். இவற்றில் எதுவும் பலனளிக்காமல் போகின்றபோது வேற்று இனத்தார், வரிதண்டுவோர் போல கண்டு கொள்ளாமல் விடப்படவேண்டும் அவரைப் பழிவாங்குவது பற்றி மற்றும் தண்டிப்பது பற்றி இயேசு கூறாதது வியப்பாயுள்ளது. எப்படியேனும் உறவை சரிசெய்து இறை சமூகத்தில் சேர்க்கப்படவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருப்பதாகத் தெரிகின்றது. அதாவது, அவனது புனித பவுலடியார் பரத்தமையில் ஈடுபடுவோருடன் கடுமை யாக நடந்து கொள்வதைக் காண்கிறோம். அத்தகைய மனிதரை சாத்தானிடம் ஒப்புவிக்கச் சொல்கிறார் (1 கொரி 5:5). அங்கும் அது அம்மனிதருக்கு நன்மை பயக்கும் என்ற நோக்குடனே உடல் அழிவுற்றாலும் ஆண்டவரின் நாளில் அவன் மீட்படையவே (1 கொரி 5:5) கூறப்பட்டதாகச் சொல்கிறார். ஆனால் கொரியந்தியருக்கு எழுதிய இரண்டாம் மடலில் தனக்கு மனவருத்தம் விளைவித்த ஒருவனை தான் மன்னித்து விட்டதாகக் கூறுகின்றார் (2 கொரி 2:10). கொரிந்து இறைச் சமூகமும் அவனை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார். "அவன் வருத்தத்தில் மூழ்கிவிடாமல் இருக்கும் வண்ணம் அவனுக்கு ஆறுதல் அளியுங்கள்” (2 கொரி 2:7) என்று கூறுகின்றார்.
எனவே, அன்றும் இன்றும் இறை சமூகத்தில் ஒருவரோ, ஒரு சிலரோ தனிநபர்களுக்கு எதிராகவோ, ஏன் திருஅவைக்கு எதிராகவோ குற்றமிழைக்க நேரிடலாம். அதைச் சுட்டிக்காட்டி, கண்டித்துத்திருத்தி உறவைச்சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப் படவேண்டும். இது ஒருமுறை மட்டுமல்ல, பலமுறை, பல மட்டங் களில், பல கட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் இறை சமூகம் சிந்தாமல் சிதறாமல் காப்பாற்றப்படும்.
3. இறை சமூகத்தில் மிளிரும், செயல்படும் இறை பிரசன்னம்
குற்றமிழைத்தவரை இறை சமூகத்தோடு இணைப்பது பற்றி விளக்கிய பிறகு இறை சமூகத்திற்கும், இறைவனுக்கும் இடையே யுள்ள உறவை விளக்குகின்றார்.
3.1. இறை சமூகத்தின் செயல்பாடுகளை அங்கீகரிக்கின்றார்
மத் 16:19 இல் பேதுருவுக்குச் சொன்னவற்றை, அவருக்கு தந்த அதிகாரத்தை இப்போது பிற சீடர்களுக்கு, திருத்தூதர்களுக்கு வழங்குகின்றார். இறை சமூகத்தின் தலைவர்கள் தடை செய்வது விண்ணுலகில் தடை செய்யப்பட, அனுமதிப்பவை, அனுமதிக்கப் படும் என்கிறார் (வச.18). ஆக, இறைவன் இறை சமூக தலைவர்கள் சார்பாக நிற்கின்றார். அவர்களின் செயல்பாடுகளுக்கு அங்கீகாரம் தருகின்றார். இங்குதடைசெய்யப்படுவதும்,அனுமதிக்கப்படுவதும் எது அல்லது எவை என்று குறிப்பிடப்படவில்லை. இதற்குப் பல விளக்கங்கள் கூறப்படுகின்றன. சிலர் இது இறை சமூகத்திலிருந்து விலக்கி வைப்பதையோ அல்லது பாவங்களை மன்னிப்பதையோ குறிப்பதாகக் கூறுவர்.
3.2. இறை சமூகத்தில் இறை உடனிருப்பு
இன்றைய நற்செய்தியில் இருவர் வேண்டுவது பற்றியும், இரண்டு அல்லது மூன்று பேர் கூடியிருப்பது பற்றியும் விளக்கும் போது அதை குழு செபத்துடன் தொடர்புபடுத்தி கூறுவதுதான் வழக்கம். அது உண்மையான, சரியான விளக்கமாக இருந்தாலும், இங்கு இன்றைய நற்செய்தியில் விவாதிக்கப்படும் கருப்பொருளின் பின்னணியில் அழுத்தம்பெற வேண்டியது இறை சமூகம்தான். ஆகவே, இறை சமூகம் எதைக் குறித்தும் ஒத்த (வச. 19) கருத்து கொண்டிருந்தால் அது அருளப்படும். அடுத்து இறை சமூகம் இயேசுவின் பெயரால் ஒன்றாய் கூடி வரும்போதே அங்கே இறை உடனிருப்பு, இயேசுவின் உடனிருப்பு இருக்கின்றது (வச. 20).
எனவே, இறை சமூகத்தில் குற்றமிழைத்த யாரையும் தவற விட்டுவிடாமல், குற்றங்களைத் தனியாகவோ, சாட்சிகளுடனோ, திருஅவையின் உதவியுடனோ சுட்டிக்காட்டி இறை சமூகத்தில் இணைத்து, கருத்தொருமித்த ஓர் இறைசமூகத்தை உருவாக்க ஒவ்வொருவரும் முயல வேண்டும். அவ்வாறு உருவாகும் இறை சமூகத்தில் இறை உடனிருப்பு கட்டாயம் உண்டு என உறுதியாய் நம்பலாம்.
பொதுக்காலம் - இருபத்து மூன்றாம் ஞாயிறு முதல் ஆண்டு
முதல் வாசகம்: எசே. 33: 7-8
எசேக்கியேல் என்பதற்குக் “கடவுள் திடப்படுத்துவாராக” என்பது பொருள். பாபிலோனியாவில் பரதேச வாழ்வு வாழ்ந்த இஸ்ரயேல் மக்களின் காவல்காரனாய் இறைவனால் நியமிக்கப்பட்ட இறைவாக்கினர் இவர். அயல்நாட்டவரின் படையெடுப்பை மக்களுக்கு எச்சரிக்கும் காவல்காரன் போல, மக்கள் தவறான வழியில் செல்லும்பொழுது அவர்களை எச்சரிப்பது எசேக்கியேலின் பணியாகும். இந்த எச்சரிக்கையை மக்கள் ஏற்கத் தவறினால் தண்டனைக்குள்ளாவர் என்ற உண்மையை இன்றைய வாசகம் வலியுறுத்துகிறது.
இறைவாக்கினரின் காவல் பணி
இறைவன், எசேக்கியேலை விளித்து “மனிதா, இஸ்ரயேல் வீட்டினர்க்கு உன்னைச் சாமக் காவலனாக வைத்திருக்கிறோம்; நீ நம் வாயில் புறப்படும் வார்த்தைகளைக் கேட்டு, அதனை என் பெயரால் எச்சரிக்கை செய்" (3: 17) என்றார். காவல்காரன் விழித்திருந்து திருடர்களிடம் இருந்தும், படையெடுக்கும் பகைவர்களிடமிருந்தும் மக்களை எச்சரிக்கை செய்வதுபோல், மக்களை அழிக்கத் தேடும் பேய்களினின்றும், பாவ நோய்களினின்றும், பாதுகாப்பது இறைவாக்கினர் கடமையாகும். மக்கள் விரும்பாததைச் சுட்டிக் காட்டினால், தன்னை நிராகரிப்பர் என்று அஞ்சி அவன் மௌனம் சாதித்தால் இறைவனால் தண்டிக்கப்படுவான் என்பது வேதவாக்கு.
திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவனும் சமுதாயத்தின் காவல்காரர்கள். உலகிலே காணப்படும் அநீதி, ஊழல், பணபலத்தின் கொடுமைகள் ஆகியவற்றை எதிர்த்து கண்டனக் குரல் எழுப்பக் கடமைப்பட்டவர்கள். உப்பானது உணவை அழிவினின்று பாதுகாப்பது போல, தமது நல்லுரையால் மக்களைப் புனிதப்படுத்தும் பொறுப்புடை யவர்கள் காவலர்கள். இவர்கள் மக்களைக் காட்டிக்கொடுக்கும் துரோகிகள் ஆகிவிடக் கூடாது. அயலானைக் காக்குமுன் பாவ அழிவினின்று தம்மையும் காத்துக்கொள்வதில் கவனமாயிருக்க வேண்டும். தம் பொறுப்பை உணராத சாமக் காவலர்களை எசாயா சாடுகிறார்.
"அவர்களின் சாமக்காவலர்
அனைவரும் குருடர், அறிவற்றவர்;
அவர்கள் அனைவரும் குரைக்க
இயலா ஊமை நாய்கள்" (56:10).
இக்குற்றச்சாட்டு நமக்கும் பொருந்துமோ?
மக்களின் பொறுப்பு
இறைவாக்கினரின் கடமையைச் சுட்டிக் காட்டிய எசேக்கியேல், மக்களின் பொறுப்பையும் குறிப்பிடத் தவறவில்லை. இறைவாக்கினர் எச்சரிக்கை யையும் ஏற்காது ஒருவன் பாவத்தில் இறந்தால், அவன் தண்டனைக்கு உரியவனே. "தீயவன் தன் தீய வழியை விட்டு மனந்திரும்ப வேண்டுமென்று நீ அவனுக்கு எச்சரிக்கை செய்திருந்தும் அவன் தன் தீய வழியினின்று திரும்பாமல் இருப்பானாயின் அவன் தன் அக்கிரமத்திலேயே சாவான்" (9). எனவே அவனவன் மீட்புக்கு அவனே காரணம் என்பதை உணரவேண்டும். எனவேதான் அச்சத்துடனும் நடுக்கத்துடனும் ஒவ்வொருவரும் தன் மீட்புப் பணியில் ஈடுபட வேண்டுமென்கிறார் பவுல்.
இறை வார்த்தையை ஏற்று மனம் மாறுபவன் அவரது இரக்கத்தைப் பெறுவான். "அக்கிரமி ஒருவன்தான் செய்த பாவங்களையெல்லாம் வெறுத்துத் தள்ளிவிட்டு, நம் கற்பனைகளைக் கடைப்பிடித்து, சட்டம் சொல்வதையும், சரியானதையும் செய்வானாயின் உயிர் வாழ்வான் என்பது உறுதி.. அவன் ஏற்கனவே செய்த தவறுகளை நினைக்கமாட்டோம்... அக்கிரமி சாக வேண்டும் என்பது என் விருப்பமோ?... மாறாக, நீதிமானாகிய ஒருவன் நெறி தவறி நடந்து அதிலே நிலைத்திருந்தால் அவனது பழைய நல்வாழ்வும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது” என்பதையும் எசேக்கியேல் சுட்டிக்காட்டத் தவறவில்லை (காண் 18:21-24). இறைவனின் இரக்கத்தை நம்பி, மனம் மாற மறுப்பது தம் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாகும் என்று எச்சரிக்கிறார் பவுல் (காண் உரோ. 2: 4 - 6). திருமுழுக்கால் நானும் ஓர் இறைவாக்கினன் என்பதை உணர்ந்து செயல்படுகிறேனா?
நீ அவனுக்கு எச்சரிக்கை செய்திருந்தும், அவன் தன் தீய வழியினின்று
திரும்பாமல் இருப்பானாயின் அவன் தன் அக்கிரமத்திலேயே சாவான்.
இரண்டாம் வாசகம் : உரோ. 13 : 8 - 11
சீனாய் மலையில் யாவே மோசேக்கு அளித்த பத்துக் கட்டளைகளையும் அன்பு என்ற ஒரே கட்டளையில் அடக்கிவிடலாம். இதன் இரு பக்கங்களே
இறையன்பும் பிறர் அன்பும். ஒன்றின்றி மற்றது இல்லை. அன்பு அனைத்துச் சட்டங்களின் நிறைவு என்ற பாடமே இங்கு பயிற்றப்படுகிறது.
திருச்சட்டத்தின் நிறைவு அன்பே
வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டாதவனைக் கடன்காரன் என்று இகழ்கிறோம். கடன் வாங்கும்பொழுது ஒருவன் மற்றவனுக்கு அடிமையாகி விடுகின்றான். எனவேதான் "எதிலும் கடன்படாதீர்கள்" என்று எச்சரிக்கிறார் பவுல். ஆனால் கிறிஸ்தவன் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன் ஒன்றுண்டு. அதுவே அன்புக் கடன். எனவேதான் "ஒருவருக்கொருவர் அன்பு செய்வது நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும். அன்பினிமித்தம் தன் உடலையே தானமாகக் கொடுக்க வேண்டியிருந்தாலும் கொடுக்கத் தயாராகும் ஒருவன் அன்பின் கொடுமுடியில் நிற்கிறான்" எனலாம்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு (குறள் 72).
“அன்புக்கடன் நம்மை விட்டு என்றுமே நீங்குவதில்லை. இஃது ஒவ்வொரு நாளும் நாம் செலுத்தி வரும் கடன். அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் செலுத்தப்பட வேண்டிய கடன்" என்கிறார் ஒரிஜன்.
கடவுள் மோசேக்களித்த கட்டளைகள் (காண்: விப. 20: 1-17; இச.5:6-21) கடவுளுக்கும் மனிதனுக்கும் இருக்கவேண்டிய பிணைப்பையும், சமுதாயத்தில் மனிதர்களுக்கு இடையே இருக்க வேண்டிய நெருங்கிய இணைப்பையும் எடுத்துரைக்கின்றன. ஒப்பற்ற ஒரே கடவுளை ஏற்று வணங்குபவனே, அவரைச் சரண் அடைந்து அவருக்கு அன்பு செய்கிறான். முதல் மூன்று கற்பனைகள் இறைத் தொடர்பை வலியுறுத்துகின்றன. பொய், கொலை, களவு, காமம் என்பவற்றைத் தவிர்ப்பதன் மூலம், அயலானின் உரிமைகளை மதித்து அவனுக்கு அன்பு செய்யத் தூண்டுகின்றன ஏனைய கற்பனைகள். எனவே மோசேயின் சட்டங்கள் அனைத்தும் அன்புக் கட்டளையின் வெவ்வேறு விளக்கங்களேயாகும். ஆண்டவரின் கூற்றும் இதை உறுதிப்படுத்துகிறது: "நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக" என்பது முதன்மையான கட்டளை. “உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" என்பது இரண்டாவது கட்டளை" (மாற். 12:28-31).
பிறர் அன்பின் அளவுகோல்
"உன் மீது நீ அன்பு காட்டுவது போல, உன் அயலான் மீதும் அன்பு காட்டுவாயாக" என்பது ஆண்டவர் அளித்த அளவுகோல். எனக்கு விரோதமாக எண்ணவோ, பேசவோ நான் விரும்பாதது போலவே, நானும் மற்றவர்களை மதித்து அன்பு செய்து வாழ வேண்டும். என் பொருளை மற்றவர் அபகரித்துக் கொள்ளவோ, என் உடலுக்கு ஊறு விளைவிக்கவோ, என் பெயரைக் கெடுக்கவோ நான் விரும்புவதில்லை. இத்தகைய அன்பையே மற்றவர்களிடம் நான் செலுத்த வேண்டும். அன்பின் அடிப்படையில் எதைச் செய்தாலும் அது நல்லதாகவே இருக்கும் என்ற பொருளில்தான் அகுஸ்தீனார் “அன்பு செய்; பின்னர் எதையும் செய்" என்றார். அன்பு செய்து வாழ்ந்தால் நான் அனைத்துச் சட்டங்களையும் அனுசரித்தவன் ஆவேன். அனைத்துச் சட்டங்களும் அன்பின் அடிப்படையில்தான் இயற்றப்பட வேண்டும். "அன்பு பிறருக்குத் தீமை செய்யாது. ஆகவே திருச்சட்டத்தின் நிறைவு அன்பே" (10). அனைத்துச் சட்டங்களையும் இறையன்பு, பிறர் அன்பு என்ற கண்ணோட்டத்தில் பார்க்கிறேனா? அதே கண்ணோட்டத்தில் அவற்றை அனுசரிக்கின்றேனா?
'
உன் மீது நீ அன்பு காட்டுவது போல உன் அயலான் மீதும் அன்பு காட்டுவாயாக" என்னும் ஒரே கட்டளையில், கட்டளைகள் அனைத்தும் சுருக்கமாய் அடங்கியுள்ளன.
நற்செய்தி: மத் 18: 15-20
சபையோர் தங்கள் உறுப்பினர்களை எவ்வாறு திருத்துவது என்பது பற்றியும் சபையோரின் ஆற்றல் பற்றியும் அமைவது இன்றைய நற்செய்தி.
திருத்துவது இனிது
பிறருடைய பிழைகளைத் திருத்துவது மனிதனுக்கு மிகவும் இன்பமானது. திருந்தாதவனைத் தண்டிப்பதும் மனித இயல்புக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. தன்னைப்போலப் பிறனையும் நேசிப்பது இதில் மிகவும் கடினமாகிவிடுகிறது. குற்றம் செய்தவனைத் தனியே சந்தித்துத் தவற்றை எடுத்துச் சொல்வது முதற்படி. அவனைத் திருத்துவது குறியே அன்றி, அவமதிப்பது அன்று.
அவனது தவறு பிறருக்குத் தெரியாமல் இருக்கும் வண்ணம் இத்தனிச் சந்திப்பு. "நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக் கண் மேற் சென்று இடித்தற் பொருட்டு” (குறள் 784) என்கிறார் திருவள்ளுவரும். அதில் தோல்வி கண்டால், இன்னொருவருடன் சென்று திருத்த முயல்வது இரண்டாம்படி. இருவரின் செல்வாக்கினாலோ, சொல் வாக்கினாலோ திருந்த வாய்ப்பு உண்டு. இதில் தோல்வி கண்டால், திருச்சபையாம் அனைவருமாகச் சேர்ந்துத் திருத்த முயலவேண்டும். சபையின் கட்டுப்பாடு தவறியவனைத் திருத்தலாம். அதிலும் தோல்வி கண்டால்? ஆயக்காரனையும் பிற இனத்தானையும் போலாகட்டும் அவன்! சபைக்குப் புறம்பாக்கப்படுகிறான் அவன். பவுல் சபைக்குப் புறம்பாக்கலை ஆதரிக்கிறார் என்பது கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் தெளிவாக உள்ளது (6 : 15). ஆயினும் அவனது உடல் அழிவுற்றாலும் அவனது ஆன்மா ஆண்டவரின் நாளில் மீட்பு அடையும்படி இவ்வாறு செய்வோம் என்கிறார். ஒருவனை எப்படியாவது திருத்தவே பவுல் முயல்கிறார். நம் பெருமானின் கண்ணோட்டத்தில் ஆயக்காரர், பிறவினத்தார் முதலியோர் கண்டனத்துக்கு உள்ளாகக் காணோம். மாறாக, அவர் ஆயக்காரருக்கும் பாவிகட்கும் நண்பர் என்று பேர் வாங்கினவர். பிறரைத் திருத்த முற்படும்பொழுது, அவரது நலனே நமது குறிக்கோள் ஆகிறதா?
சபையின் ஆற்றல்
அதிகாரம் என்பது தலைவர்க்கே உரியது என்ற எண்ணத்தில் வளர்ந்து விட்டவர்கள் நாம். ஆதித் திருச்சபையில், பேதுருவுக்குத் தரப்பட்ட அதிகாரம் சபையோருக்கும் இருந்ததை இன்றைய நற்செய்தி நமக்கு உணர்த்துகிறது. "விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" (மத். 16 : 19) என்று பேதுருவுக்குச் சொல்லப்பட்ட திருமொழிகளையே சபைக்கும் சொல்வதாகக் காண்கிறோம்.
சபையோரின் ஒருமைப்பாடு, சமத்துவம் ஆகிய உயரிய பண்புகளை இங்கே காணலாம். இன்று சமத்துவத்திற்குக் குரல் கொடுப்போரைக் காண்கிறோம். ஒருமைப்பாட்டிற்குத் தோள் கொடுப்போரைக் காண்கிலோம். ஏன்?
தலத் திருச்சபையில் மட்டுமன்றி, இயேசுவின் பெயரால் கூடியிருக்கும் சிறு கூட்டத்தில் கூட அவரது பிரசன்னமும் ஆற்றலும் உண்டு என்பதையும் காண்கிறோம். ஏன்? "இச்சின்னஞ்சிறியவருள் ஒருவனை ஏற்றுக் கொள்பவன் என்னையே ஏற்றுக்கொள்கிறான்" என்று அல்லவா கூறியுள்ளார் நம் பெருமான். ஆனால் நமக்கு நம் பெருமானின் மனப்பான்மை வாய்த்து உள்ளதா? கூட்டுச் செபத்திற்கு தனிச்சக்தி உண்டு என்பதை நான் உணர்கின்றேனா?
இரண்டு மூன்று பேர் என்பேரால் எங்கே கூடியிருப்பீர்களோ அங்கே அவர்கள்' நடுவே நான் இருக்கிறேன்.
மையச் சிந்தனை : கிறிஸ்துவின் நற்செய்தியும் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி
(Gospel of Christ and Gospel about Christ)
திருவிவிலிய மாதத்தைக் கொண்டாடத் தொடங்கியுள்ள நாம் கிறிஸ்துவின் நற்செய்தி (Gospel of Christ) என்பது என்ன எனவும், கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி (Gospel about Christ) என்பது என்ன எனவும் பிரித்து விளக்கம் காண்பது நல்லது.
நற்செய்தி என்பது...
முதலில், நற்செய்தி என்பதன் பொருள் காண்போம். "நற்செய்தி” (Euangelion) என்ற சொல்லுக்கு "மகிழ்ச்சியான செய்தி” அல்லது "இனிய செய்தி" என்று பொருள். ஒரு குழந்தையின் பிறப்பு அக்குடும்பத்திற்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக மாறுகிறது. அதுபோல, போரில் எதிரிகள் வீழ்ந்ததால் வெற்றிக் கிடைத்தது. அச்செய்தி மன்னருக்கும் அந்நாட்டு மக்களுக்கும் மகிழ்ச்சியின் செய்தி ஆகும். எனவே, மகிழ்ச்சிக்குரிய செய்தி அனைத்தையும் நற்செய்தி என்கிறோம். இதை ஆங்கிலத்தில் Good News என்கிறோம். புதிய ஏற்பாட்டு நூல்கள் இந்த நற்செய்தியை இரண்டு பரிமாணங்களில் எடுத்துரைத்து விளக்குகின்றன. ஒன்று, கிறிஸ்துவின் நற்செய்தி. இயேசு கிறிஸ்து தாமே அறிவித்த செய்தியே அது. அதாவது, இயேசு தன் பணி வாழ்வில் கலிலேயாவிலும் எருசலேமிலும் அறிவித்த நற்செய்தியே இது. இரண்டு, கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி (Gospel about Christ). இது திருத்தூதர்கள் இயேசுவின் பிறப்பு, வாழ்க்கை, அவர் போதித்தவை, அவரின் இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம், அவர் வழி வந்த மீட்புப் பற்றி அறிவித்த நற்செய்தி. முதன் முதல் அறிவிக்கப்பட்ட நற்செய்தியைப் பேதுரு முழக்கமிட்டார். அதை லூக்கா திருத்தூதர் பணிகள் நூல் 2:14-36இல் தந்துள்ளார். இந்த முதல் நற்செய்தி இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பை மையப்படுத்தியதாகும்.
கிறிஸ்துவின் நற்செய்தி(Gospel of Christ)
மேற்கூறியபடி விளக்கிய நற்செய்திகள் வேறுபட்ட இரண்டு நற்செய்திகள் அன்று. மாறாக, ஒரே நற்செய்தியின் பிரிக்க முடியாத இரண்டு சிறப்புக் கூறுகளாகும். இயேசு அறிவித்த நற்செய்தியையே கிறிஸ்துவின் நற்செய்தி என்கிறோம். எழுத்துருப் பெற்ற நற்செய்தியாளர்களும் எவ்வாறு இயேசு நற்செய்திப் பணியாற்றினார் என்பதை மிக அழகாகப் பதிவு செய்து வைத்துள்ளனர். மாற்கு நற்செய்தியாளர் எவ்வாறு பதிவு செய்துள்ளார் எனக் காண்போம். இயேசு தமது பொதுப் பணியையும் பொது வாழ்வையும் தொடங்கியபோது, "காலம் நிறைவேறிவிட்டது; இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்" (மாற்கு 1:14-15) என முழக்கமிட்டு நற்செய்திப் பணியைத் தொடங்கினார் என எழுதியுள்ளார். இயேசுவின் நற்செய்தி மையச் செய்தி என்ன? இறையாட்சி என்பதே இயேசு அறிவித்த நற்செய்தியின் மையச் செய்தி ஆகும். அதாவது, கடவுளே எல்லாவற்றையும் எல்லாரையும் ஆட்சி செய்கிறார் என்பதாகும். எனவே, கிறிஸ்துவின் நற்செய்தியை ஏற்றுக் கொள்வோர் கடவுளையே ஆட்சி செய்ய அனுமதிக்கின்றனர். அந்த இறையாட்சி அன்பு, நீதி, இரக்கம், மன்னிப்பு மற்றும் அமைதி நிறைந்த ஆட்சியாகும். ஏழையருக்கும் உரிய ஆட்சியாகும்
.
கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி (Gospel about Jesus)
ஆம், இயேசு தன் சொந்த ஊரான நாசரேத்தில், “ஏழையருக்கு நற்செய்தி அறிவிக்க ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார்" (லூக் 4:18-19) என முழக்கமிட்டார். இதை நிறைவேற்றும் வகையில் சமுதாய விளிம்பில் இருந்தவர்களை மையத்திற்குக் கொண்டு வந்தார். அருளடையாளங்கள் செய்து கடவுள் வரலாற்றில் 'செயலாற்றுகின்றார் எனக் காட்டினார். அவரின் போதனையில் கடவுளின் இரக்கத்தையும் அன்பையும் எடுத்துரைத்து சீடத்துவ வாழ்வை எப்படிச் சாட்சிய வாழ்வாக மாற்றிட முடியும் எனக் கற்றுக் கொடுத்தார். எனவே, இறைவனே அனைவரையும் அனைத்தையும் ஆட்சி செய்வது பற்றியதே கிறிஸ்துவின் நற்செய்தி. இதன் வழியாக அனைவரும் வாழ்வடைவர், இறுதியில் நிலை வாழ்வடைவர். யோவான் நற்செய்தியாளர் இயேசுவின் பணியையும் வாழ்வையும் சுருக்கி எழுதுகையில், “நான் ஆடுகள் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்" (யோவா 10:10) என்று இயேசு கூறுவதாக எழுதியுள்ளார். இவைகளையே கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி என்கிறோம்.
கிறிஸ்து அறிவித்த நற்செய்தியும் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியும் இரண்டும் கலந்தே புதிய ஏற்பாடு முழுவதும் உள்ள 27 நூல்களில் காணப்படும் செய்திகள் ஆகும். எனவே, இயேசு கொண்டு வர விரும்பிய இறையாட்சியின் சில இயல்புகளையும் அதன் வாழ்வுசார்ந்த விழுமியங்களையும் இன்றைய நற்செய்தி (மத் 18:15-20) மற்றும் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடல் அடிப்படையில் (உரோ 13:8-10) காண்போம். புனித பவுல். “ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும்" என்று கூறி, அன்பை அடிப்படையாகக் கொண்ட வாழ்வைக் கட்டியெழுப்ப அழைக்கின்றார். இந்த அன்பால்தான் மூவொரு கடவுள் இந்த உலகை நன்மை நிரம்பியதாகப் படைத்தார். அதைக் கடவுளின் அன்பு என்றும், கடவுள்மீதுள்ள அன்பு என்றும், பிறர் அன்பு என்றும், தன்னன்பு எனவும் அழைக்கலாம். அதாவது, கடவுளின் அன்புதான் இயேசுவையே இந்த உலகிற்குக் கொண்டு வந்தது; அவரை நற்செய்தி அறிவிக்க வைத்தது; அவரை உலகினரின் பாவங்களுக்குக் கழுவாயாக இறக்கக் காரணமானது. கடவுள்மீதுள்ள அன்பு பிறரன்பில் நடைமுறை வாழ்வாக மாற வேண்டும்.
நடைமுறை வாழ்வில் ஏற்படும் தனிப்பட்ட மனித மன நோய்களையும் சமூக நோய்களையும் அகற்றிட சிறந்த வழிமுறை உண்டு. அதை இயேசுவே கற்றுத் தந்து, வாழ்ந்து காட்டியுள்ளார். அது மன்னிப்பின் வழி. இந்த மன்னிப்புதான் கிறிஸ்துவத்தை உலகில் தோன்றிய அனைத்துச் சமயங்களிலிருந்தும் முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுகின்றது. இந்த மன்னிப்பை திருஅவையின் சமயக் கடமையாகவும், அருளடையாளமாகவும் வழங்கிய இயேசு, மன்னிப்பு வழங்குவதை இறையதிகாரமாகவே திருத்தூதர்களுக்குத் தந்துள்ளார். கடவுள் ஆட்சி செய்யும் இடங்களில் மன்னிப்பு இருக்கும், தவறுகளை ஏற்றுக் கொண்டு மனம் வருந்தும் மனநிலை இருக்கும், அன்பினால் வாழ்வை மாற்றிக் கொள்கிறேன் எனும் தாழ்ச்சி இருக்கும். எனவே, கிறிஸ்துவின் நற்செய்தியையும் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியையும் வாழ்வாக்கும் வழிமுறை மன்னிக்கும் அன்பு என்று கண்டு கொண்டு, இறை வார்த்தையின் வழியில் வாழ்வோம்.
“இறை அருட்கொடைகள் எனும் வாழ்நாள் EMI.”
நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும். பிறரிடத்தில் அன்புகூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவார்.
உரோமையர் 13:8
இன்றைய “சமமான மாதாந்திரத் தவணை" EMI கடன் கலாச்சார உலகத்தில் குறிப்பாக நடுத்தர வர்க்க குடும்பங்களில் “நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள்” என்று கூறினால் அவர்கள் -நாங்கள் சந்திக்கும் நல்லவை, கெட்டவை - பிள்ளைகளின் கல்வி, கல்யாணம், குடும்பத்தில் உள்ளவரின் உடல் நலம் என ஏற்படும் அதீத செலவுகளுக்குக் கடன் பெறாமல் எப்படி செய்ய முடியும் என்று நம்மைக் கேட்டால்… கேள்விக்குப் பதில் சொல்ல இயலாதவர்களாக நாம் நிற்போம்.
அன்பளிப்பாக நாம் பெறுவதை நாம் வைத்துக் கொள்ளலாம் ஆனால் கடனாகப் பெறுவதை திருப்பிக் கொடுத்துத் தான் ஆக வேண்டும். இது உலக நியதி. தவறும் பட்சத்தில் நிகழ்பவை அனைத்தும் நன்மை தராத ஒன்றாக இருக்கும்.
வீட்டுக் கடன் வசதி நாம் அனைவரும் அறிந்த ஒரு திட்டமாகும் இதைப் பெற்று பயன் பெற முதலில் நாம் நமது இடத்தில் வீட்டின் அஸ்திவாரத்தை கட்டி முடித்தபின், வங்கியை அணுகும்போது - அவர்கள், படிப்படியாகக் கடன் தருகிறார்கள், பெற்றுக் கொள்ளும் நாம் பணத்தை படிப்படியாகச் செலவு செய்து வீட்டைக் கட்டி முடிக்கிறோம். அதேவேளை வீட்டை நாம் பயன்படுத்தும் உரிமை பெற்றாலும் வாங்கிய வீட்டுக் கடனை முழுமையாகத் திருப்பிக் கொடுக்கும்பொழுது தான் வீடு நமக்குச் சுதந்திரமாக உரிமையுள்ளதாக மாறுகிறது. . ஆக உலகின் நியதி.. இயன்ற அளவுக் கடன் வாங்காமல் இருக்க வேண்டும் அப்படி வாங்கி விட்டால், நமக்கு அமைதி வேண்டும் எனில் கண்டிப்பாக வாங்கிய கடனைத் திருப்பித் தந்தாக வேண்டும்.
இந்த மண்ணக கடன் விதியை முறையாகப் பயன் படுத்துபவர்க்கு, விண்ணகத்திலும் அவ்வாறே நிகழும் என்பதை இறைமகன்…
மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்(மத்18:18) என்கிறார். அதாவது மண்ணுலகில் நாம் அனுமதிக்கும் திருப்பிக் கொடுக்கும் கடன் விதி விண்ணகத்திலும் அனுமதிக்கப்படும் என்று பொருள்படுகிறது. விண்ணகத்திலிருந்து கடனாகப் பெற்றுக் கொண்ட அனைத்தையும் திருப்பிக் கொடுக்கும்போது விண்ணக வீடு நமதாகின்றது எனப் பொருள் படுகின்றது.
நமது உயிரின் ஈட்டுத் தொகை - கடன் தொகைபற்றி இறைவன் கூறுவதை கேட்போம்…
மனித உயிரின் ஈட்டுத் தொகை மிகப் பெரிது; எவராலும் அதனைச் செலுத்த இயலாது.
(திருப்பாடல் 49:8). என்கிறார். மேலும் திருப்பாடல் 50:8-13 வரை உள்ள இறை வார்த்தைகள் வழியாக இறைவன் நம் முன் உலகில் உள்ள அனைத்தும் அவருடையது அப்படி இருக்க எதை நாம் அவருக்குத் தர முடியும் என்று கேட்கிறார்.
இறைவன் தொடர்ந்து நாம் எதைச் செய்ய வேண்டும் என்பதையும் திருப்பாடல் 50:14ல் கடவுளுக்கு நன்றிப்பலி செலுத்துங்கள்; உன்னதர்க்கு உங்கள் நேர்ச்சைகளை ( கடன்களை ) நிறைவேற்றுங்கள். என்று நினைவு படுத்துகின்றார்.
அப்படி நாம் நன்றிப்பலி செலுத்த முன்வந்தாலும் இந்த நன்றி அன்பு பற்றி ஒரு தெளிவு வேண்டும் அல்லவா?... கவனிப்போம்…
அன்பு நன்றி என்பவை வெறும் வார்த்தைகள் அல்ல. இவைகள் செயல்படும் உயிரோட்டம் உள்ள உணர்வுகள் ஆகும். அப்படி இருக்க, எல்லாம் அவருடையதாய் இருக்கும் இறைவனுக்கு நாம் அவரிடம் பெற்றுக் கொண்ட உயிர் கடனை (தி பா49:8) எப்படி திருப்பிச் செலுத்த முடியும். மண்ணுலகில் நாம் எதைச் செய்கின்றோமோ அதையே விண்ணுலகில் செய்ய அனுமதிக்க முடியும் என்று இறைமகன் கூறும்போது (மத் 18:18) மண்ணுலக கடன் விதியை விண்ணுலகில் பயன்படுத்த முயற்சிக்கலாமே...
மண்ணுலகில் வாழும்போதே விண்ணக வீட்டிற்கு தேவையானதை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படும்போது இந்த மண்ணுலகில் எதை எப்படி யார் மூலமாகச் செய்வது.. என்ற வினா எழுகின்றது. அந்த யார் என்பதை அடையாளப் படுத்த பதிலாக இயேசு ஆண்டவர் மகிழ்ச்சியோடு அந்த யார் என்பவர் நான்தான் … ஏனெனில், இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் (மத் 18:20) என அவரை அடையாளப்படுத்துகிறார். மேலும் இறைவனிடமிருந்து நாம் பெற்றுக் கொள்ளும் அவருடைய அன்பு கிருபையின் கொடைகளால் நாம் மகிழ்ந்திருப்பது போல நம் முன் இருக்கும் அயலானும் மகிழ்ந்து வாழ அவனோடு - அந்த இரண்டு மூன்று பேர் நடுவில் நிற்கும் இயேசுவோடு (மத்18:20) அதைப் பகிர்ந்து வாழ வேண்டும்.
ஏனெனில் "உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக"(மத் 22 : 39)
என்பது … இயேசுவின் இரண்டாவது கட்டளை ஆகும். அன்பைப் பற்றி… நீங்கள் யாரையேனும் அன்பு செய்கிறீர்கள் என்றால் அதைச் செயலில் காட்டுங்கள் என்ற ஒரு விளக்கம் உண்டு. காட்டுங்கள் என்றால் நாம் செய்வதை வேறொருவர் பார்க்க வகை செய்ய வேண்டும் எனப் பொருள். ஆம் மூன்றாம் நபராக நம்மிடையே நிற்கும் இறைமகன் நமது அன்பின் செயல்களை முழுமையாகக் காண, கண்காணிக்க நம்மோடு பயணிக்கின்றார். உலகில் இறைவனிடம் நாம் பெற்றுக் கொண்ட அன்பு அய்லானுக்கு முழுமையாகப் பயன்படுவதை உறுதி செய்யும் காவலாளியாகவும் நம்மையே பணி அமர்த்துகிறர். (எசேக் 33:7) திருடனும் நானே காவலனும் நானே என்ற இக்கட்டான நிலையில் நாம் நிற்பதை இப்போது உணர முடியும். இந்தச் சூழலிலிருந்து மகிழ்ச்சியோடு செயல்பட பவுலடிகிறார் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும். பிறரிடத்தில் அன்புகூர்பவர் திருச்சட்டத்தை நிறைவேற்றுபவர் ஆவார் (உரோ13:8) என அறிவுறுத்துகிறார்.
இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட அருளை நான் ஏன் பிறருக்கு பகிர வேண்டும் என்று கேட்கிறோமா கவனியுங்கள்…
1) இறைவனிடமிருந்து வரும் கொடைகள் பயணித்துப் பலன் தந்து கொண்டே இருக்க வேண்டியவை …
2) அவைகளை தடுத்து நிறுத்துவதால் - தனக்கென வைத்துக் கொள்வதால் அவைகள் பயனற்றதாகிவிடும்.
3) பெற்றுக் கொண்டதை நம்மிடமே வைத்துக் கொண்டால் நமது வளர்ச்சிக்குத் தேவையான அடுத்த கொடைகளை இறைவன் தந்தாலும் நம்மிடம் வைத்துக் கொள்ள நமக்குள் இடம் இருக்காது.
4) நமக்குக் கிடைக்கப் பெற்றதை பிறருக்கு கொடுத்து நம்மை வெறுமையாக்கும்போது, நமது வளர்ச்சிக்குத் தேவையான புதிய அருளை நமக்குள் ஏற்றுக்கொள்ள நாம் இடம் கொண்டவர்கள் ஆகின்றோம்
இறைவன் இறையருளின் கொடுக்கல் வாங்கல் என்ற கடனைக் களிப்போடு மனிதரோடு செயல்படுத்த தயாராக இருக்கின்றார். நாம் அதனை முழுமையாகப் பெற்றுக்கொள்ள எப்பொழுதும் நம்மை வெறுமையான ஒன்றுமில்லாத பாத்திரமாக வைக்க அழைக்கப் படுகின்றோம். எனவேதான் பவுல் அடிகளார்
ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே (அன்பை கொடுப்பதே) நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும். (உரோ 13:8). என்கிறார்.
ஆக மண்ணால் ஆன மனிதன் மண்ணுக்கு திரும்பும் வரை ஆண்டவனுக்கும் - அயலானுக்கும் இடையில் இறைவன் தருவதை அயலானுக்கும், அயலான் தரும் நன்றிக் கடனை இறைவனுக்கும் எடுத்துச் செல்லும் கடத்தியாக ஊர்தியாக - வாகனமாக உறுதியுடன் உலகில் வாழ… அழைக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்படுகின்றான்.
விண்ணக வீடு அனைவருக்கும் உரிமையென அதைக் காக்கும் கடனாளியாக, காவலாளியாகக் கடமையாற்ற வாய்ப்பைப் பெறுகிறான்.
ஒருவரில் மூவரான கல்வாரி நாயகன் மண்ணுலகில் மூவரில் ஒருவராக நம்மோடு. (மத்18:20)
இறைவன் என்றென்றும் வாழ்த்து பெறுவாராக