நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்.
சுவாமி விவேகானந்தர் அமெரிக்க மக்களுக்குச் சொற்பொழிவு ஆற்றப் புறப்படும் முன், தன் குருவின் (இராமகிருஷ்ணனின்) மனைவி சாரதா மணி தேவியிடம் ஆசி பெற விரும்பி அவர் வீடு சென்றார். உள்ளே சென்றபோது அம்மையார் சமையல் செய்து கொண்டிருந்தார். ஆசி பெற வந்த விவேகானந்தரைப் பார்த்து அந்தக் கத்தியை எடுத்துத் தா என்றார்கள். அப்படியே விவேகானந்தர் செய்தார். காய் நறுக்கும் கத்தியைப் பெற்ற சாரதா மணி அம்மையார் உனக்கு என் நல்வாழ்த்துக்கள்! நீ வெற்றி பெறுவாய். போய் வா மகனே! என்றார்கள். கத்திக்கும், வெற்றிக்கும் என்ன தொடர்பு என்று அறிந்துகொள்ள விரும்பிய விவேகானந்தர் இதன் அர்த்தம் என்ன என்று கேட்டார். மகனே! உன்னை சோதிக்கவே கத்தியை எடுத்துத் தரச் சொன்னேன். பெரும்பாலும் கத்தியை தருபவர் கைப்பிடியைப் பிடித்துக் கூர்மையான கத்திப் பகுதியை நீட்டுவார்கள். நீயோ, கூர்மையான பகுதியை நீ பிடித்துக் கொண்டு, கைப்பிடிப் பகுதியை என்னிடம் கொடுத்தாய். பிறருக்குத் துன்பம் விளைவிக்காமல் துன்பத்தைத் தானே தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்கள்தான் இப்படிச் செய்வார்கள். எனவே நீ வெற்றி பெறுவாய், போய் வா மகனே! என வாழ்த்தி அனுப்பினார் சாரதா மணி அம்மையார்.
துன்பத்திற்கும் வெற்றிக்குமிடையே ஒரு தொடர்பு உண்டு. துன்பத்திற்கும், உயிர்ப்பிற்குமிடையே ஒரு தொடர்பு உண்டு. இதனால்தான் இன்றைய நற்செய்தியிலே துன்பம் வேண்டாம் என்ற பேதுருவைப் பார்த்து இயேசு, "என் கண் முன் நில்லாதேசாத்தானே! நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய். நீ எண்ணுவதெல்லாம் மனிதனுக்கு ஏற்றவை பற்றியே" (மத். 16:23) என்று கடிந்து கொண்டார்.
கரும்பு, ஆலைக்குள் புக அச்சப்பட்டால் அதிலிருந்து எப்படி சர்க்கரை பிறக்கும்? சந்தன மரம், காயப்பட மறுத்தால் அதிலிருந்து எப்படி மணம் பிறக்கும்? தீக்குச்சி, தன்னையே எரித்துக்கொள்ள மறுத்தால் எப்படி அதிலிருந்து ஒளி பிறக்கும்? கடலுக்குள் மூழ்கத் தயாராக இருப்பவர் மட்டுமே முத்தை எடுக்க முடியும். சுரங்கத்தில் நுழையத் தயாராய் இருப்பவர் மட்டுமே தங்கத்தை எடுக்க முடியும். அதேபோல் துன்பத்தைச் சந்திக்கத் தயாராய் இருப்பவர் மட்டுமே வெற்றியைச் சுவைக்க முடியும்.
இதனால் இயேசு அன்று பேதுருவைப் பார்த்து, என் கண் முன் நில்லாதே என்றார். இன்றைய முதல் வாசகத்திலே துன்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தத்தளித்துத் தடுமாறும் இறைவாக்கினர் எரேமியாவைச் சந்திக்கிறோம். புனித பவுல் அடிகளார் இன்றைய இரண்டாம் வாசகத்திலே துன்பத்தைத் தாங்கிக் கொள்ள நமக்கோர் அற்புதமான வழியைக் காட்டுகிறார். கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களை ஒப்படையுங்கள் (உரோ. 12:1) என்கிறார் திருத்தூதர் பவுல்.
இறைவார்த்தை, தன்னை ஏற்றுக்கொண்டவர்களுக்குத் துன்பமும், துயரமும் தருவது எதற்காக? அவர்கள் வாழ்க்கையை ஒன்றுமில்லாமல் ஆக்குவதற்காகவா? நிச்சயம் இல்லை! இன்னும் பயனுள்ள கருவிகளாக, இறைவனின் பணியாட்களாக மாற்றுவதற்காகவே.
ஒருவர் மூங்கில் மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் கத்தியோடு சென்றார். அவரைப் பார்த்தவுடன் மூங்கில் மரங்கள் பயந்து நடுங்கின. எங்கே தன்னை வெட்டி விடுவாரோ என்று அஞ்சின. ஒவ்வொரு மூங்கிலையும் பார்த்து வந்த மனிதர், தனக்குத் தேவையான மூங்கில் ஒன்று அங்கு இருப்பதைப் பார்த்தவுடன், அதை வெட்ட ஆரம்பித்தார். அந்த மூங்கில், தன் தலைவிதியை நினைத்து வேதனைப்பட்டது. அழ ஆரம்பித்தது. தொடர்ந்து வெட்டிய மனிதர் வீட்டிற்குக் கொண்டு வந்து நெருப்பில் வாட்ட ஆரம்பித்தார். வேதனையால் அந்த மூங்கில் இன்னும் அதிகமாகத் துடித்தது. அந்த மனிதரோ இதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் அந்த மூங்கிலில் துளை போட ஆரம்பித்தார். வேதனையால் நொந்துபோனது அந்த மூங்கில். அந்த மனிதரையும் சபிக்க ஆரம்பித்தது. ஆனால் துளையிட்ட மூங்கிலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தவுடன், புல்லாங்குழலாக மாறி தேனினும் இனிய இசையை எட்டுத் திக்கும் பரப்பியது. இப்போது அந்த மூங்கில் அந்த மனிதரை நன்றியோடு பார்த்தது!
மனிதரும் ஒரு மூங்கில்தான். துன்பங்கள் அவரை வாட்டி அவருக்குள் துளை போடவில்லையென்றால் அவர் மூடிய மூங்கிலாக இருப்பார். வாழ்வில் துன்பங்களால்துளையிடப்படாத மனிதர், இசை என்ற மகிழ்ச்சியான வாழ்வை எழுப்ப முடியாது. வாழ்வைப் பிறருக்கும் வழங்க முடியாது. இந்தசெய்தியைத்தான் ஆண்டவர் இயேசு இன்றையநற்செய்தியிலே, என்னைப் பின் செல்ல விரும்புகிற எவரும் தன்னலம் துறந்து, தன் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். என்பொருட்டுத் தன் வாழ்வை இழப்பவர் எவரும் வாழ்வடைவார் (மத் 16:24)என்கிறார். எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே (தி.பா. 119:71) என்கிறார் திருப்பாடலின் ஆசிரியர்.
ஆகவே அருமையானவர்களே! சிலுவையை, ஒரு துன்பத்தை, ஒரு நோயை இறைவன் அனுமதிக்கிறார் என்றால் நம்மை மகிமைப்படுத்தவே எனப் புரிந்து கொள்வோம். நாம் ஒரு சிலுவையை முழு மனத்தோடு ஏற்றுக்கொண்டால் அது சுகமான சுமையாக மாறிவிடும். செல்வம், பெயர், புகழ், அதிகாரம் இவற்றை மட்டுமே ஆதாயமாக்கிக் கொள்ள ஆயிரக்கணக்கானோர் அலைமோதுகிறார்கள். ஆனால் இறைவன் விரும்புவது அடுத்தவர் நலனை முன் நிறுத்தி ஆண்டவரை ஆதாயமாக்கிக் கொள்ள நாம் அழைக்கப்பட்டவர்கள். இதில் துன்பம், துயரம்,சுமைகள், தோல்விகள், வேதனைகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெற இன்றையத் திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.
என் கண்முன் நில்லாதே சாத்தானே!
துறவியாக விரும்பிய இளைஞன் ஒருவன் அவனது தாயிடம் ஆசி பெற விரும்பினான் . ஆசி பெறச்சென்ற மகனைப் பார்த்து, அந்தக் கத்தியை எடுத்துக்கொடு என்றாள் தாய் . அப்படியே செய்தான் மகன் . காய் நறுக்கும் கத்தியைப் பெற்றுக் காண்ட தாய் மகனைப் பார்த்து, உனக்கு என் நல்வாழ்த்துக்கள் ; நீ வெற்றி பெறுவாய் என்றாள் . கத்திக்கும் , வெற்றிக்கும் இடையே உள்ள தொடர்பை அறிந்துகொள்ள விரும்பினான் மகன் . தாய் மகனிடம் : மகனே, நீ கத்தியை எப்படி எடுத்துக் கொடுக்கின்றாய் ? என்பதைச் சோதிப்பதற்காகவே நான் கத்தியை எடுத்துக் கொடுக்கும்படி உன்னிடம் சொன்னேன் . பெரும்பாலும் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு கூர்மையான பாகத்தை நீட்டுவார்கள் . ஆனால் நீயோ கத்தியின் கூர்மையான பாகத்தைப் பிடித்துக் கொண்டு, பாதுகாப்பான கைப்பிடி உள்ள பகுதியை என்னிடம் நீட்டினாய் . பிறருக்குத் துன்பம் விளைவிக்காமல் , தானே துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்கள்தான் இப்படிச் செய்வார்கள் . உன் கருணை உள்ளம் உனக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் என்றாள் .
துன்பத்திற்கும் கருணைக்குமிடையே ஒரு தொடர்பு உண்டு!
துன்பத்திற்கும் வெற்றிக்குமிடையே ஒரு தொடர்பு உண்டு!
துன்பத்திற்கும் உயிர்ப்புக்குமிடையே ஒரு தொடர்பு உண்டு!
இதனால்தான் இன்றைய நற்செய்தியிலே, துன்பம் வேண்டாம் என்ற பேதுருவைப் பார்த்து இயேசு, என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கின்றாய் ; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகின்றாய் [மத் 16:23) என்கின்றார் .
ஆலைக்குள் புக கரும்பு அச்சப்பட்டால் அதிலிருந்து எப்படி சர்க்கரை பிறக்கும் ? சந்தனமரம் காயப்பட மறுத்தால் அதிலிருந்து எப்படி மணம் பிறக்கும் ? தீக்குச்சி தன்னையே எரித்துக்கொள்ள மறுத்தால் எப்படி அதிலிருந்து ஒளி பிறக்கும் ?
கடலுக்குள் மூழ்கத் தயாராக இருப்பவர்களால் மட்டுமே முத்தை எடுக்க முடியும் ! சுரங்கத்துக்குள் நுழையத் தயாராக இருப்பவர்களால் மட்டுமே தங்கத்தை எடுக்க முடியும் ! துன்பத்தைச் சந்திக்கத் தயாராக இருப்பவர்களால் மட்டுமே வெற்றியைச் சுவைக்க முடியும் !
இதனால்தான் இயேசு அன்று பேதுருவைப் பார்த்து, என் கண்முன் நில்லாதே சாத்தானே! என்றார் .
சாதாரணமாக யாரும் துன்பப்பட விரும்புவதில்லை! இன்றைய முதல் வாசகத்தில் துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தத்தளித்தத் தடுமாறும் இறைவாக்கினர் எரேமியாவைச் சந்திக்கின்றோம் ! துன்பப்பட நாம் முன்வரத் தயங்குவதினால் தான் வெற்றி நம் அருகில் வரத் தயங்குகின்றது!
இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடிகளார் துன்பத்தைத் தாங்கிக் காள்ள நமக்கோர் அற்புதமான வழியைக் காட்டுகின்றார் . அவர் கடவுளுக்கு உகந்த, தூய உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள் [உரோ 12:1ஆ] என்கின்றார் . எல்லாவற்றையும் , உடல் , பொருள் , ஆவி அனைத்தையும் , நாம் கடவுளுக்குப் பலியாகக் கொடுக்க முன்வரும்போது, அங்கே நமது விருப்பு, வெறுப்புகளுக்கு இடமில்லாமல் போய்விடும் ; அங்கே இறையன்பு அரசாட்சி புரியும் ! எங்கே இறையன்பு இருக்கின்றதோ அங்கே பிறர் அன்பும் இருக்கும் !
அன்பு இருக்கும் இடத்திலே துன்பம் இருக்காது ; மாறாக, கருணையும் , வெற்றியும் கைக்கோர்த்து நிற்கும் .
மேலும் அறிவோம்
தன்பம் உறவரினும் செய்க துணி(வு)ஆற்றி
இன்பம் பயக்கும் வினை (குறள் : 600).
பொருள் :
துன்பம் பெரிதாகத் தோன்றும் என்றாலும் இறுதியில் | மகிழ்ச்சியை உண்டாக்கும் செயலைச் செயல் உறுதிப்பாட்டூடன் நிறைவேற்ற வேண்டும் .
துன்பம் நம்மைக் கண்டு பயந்து ஓடிவிடும்
இரண்டு பேர் கிணற்றில் குதித்தனர். அவர்களில் ஒருவர் தண்ணீல் மூழ்கிச் செத்தார். ஏனெனில் அவர் தலைக்களம் பிடித்தவர். மற்றவர் தண்ணீர் மேல் மிதந்தார். ஏனெனில் அவர் மரமண்டையர். கிறிஸ்துவின் சீடர்களில் ஒரு சிலர் தலைக்கணம் பிடித்தவர்களாக இருந்தனர். எனவேதான் அவர்கள் தங்களுக்குளே யார் பெரியவர் என்று வாக்குவாதம் செய்தனர் (மாற்கு 9:34). மேலும் அவர்கள் மரமண்டைகளாகத் திகழ்ந்தனர். ஏனெனில் கிறிஸ்து சிலுவை மரணம் பற்றிக் கூறியதை அவர்களால் புரிந்து ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவேதான் கிறிஸ்து எம்மாவுக்குச் சென்ற இரு சீடர்களிடம் "அறிவிலிகளே இறைவாக்கினர்கள் உரைத்த எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே மெசியா தாம் மாட்சி அடைவதற்குமுன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா?" என்றார் (லூக் 24:25).
இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து தம் பாடுகளைப் பற்றி முதன் முறையாக அறிவித்தார் ஆனால் பேதுருவால் அதைப் புரிந்து ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே கிறிஸ்துவையே அவர் கடிந்து கொள்கிறார். மெசியாவும் சிலுவையும் படி இணைந்து செல்ல முடியும் என்று அவர் கேட்கிறார். கிறிஸ்துவை அவர், "மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று அறிக்கையிட்டார். ஆனால் அவர் நினைத்த மெசியா மகிமையின் மெசியா, இஸ்ரயேல் மக்களை ஆளவிருக்கும் மெசியா, சிலுவையில் அறையப்படவேண்டிய மெசியா அல்ல. சிலுவை எப்பொழுதும் சீடர்களுக்கு இடறலாக இருந்தது.
திருத்துதர் பவுல் கூறுகிறார். "நாங்கள் அறிவிப்பது சிலுவையில் அறையப்பட்ட மெசியா, சிலுவையோ யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாகவும் உள்ளது. ஆனால் சிலுவையில் அறையுண்ட கிறிஸ்து கடவுளின் வல்லமை கடவுளுடைய ஞானம்" (1கொரி 1:23-24)
சிலுவையின்றிக் கிறிஸ்து இல்லை சீடத்துவமும் இல்லை. கிறிஸ்துவின் சீடராக இருக்க விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும் (மத் 18:24). சிலுவையைச் சுமக்காத எவரும் கிறிஸ்துவின் சீடராக இருக்கமுடியாது, (லூக்கா 14:27).
திருமணத்தின்போது மணமகன் கழுத்தில் கட்டப்படும் மெல்லிய மஞ்சள் நிறத் தாலிக் கயிற்றை அகற்றிவிட்டு, கெட்டியான தங்கத் தாலிச் சங்கிலி கட்டப்படுவதுபோல, பேதுருவின் முதல் உறுதியுற்ற அழைத்தல் அவரே இரண்டாவது அழைத்தலால் உறுதி அடைகின்றது. மீன் பிடித்துக் கொண்டிருந்த பேதுருவை "என் பின் வா" (மத் 4:19) என்று கிறிஸ்து அழைத்தார். ஆனால் பேதுரு கிறிஸ்துவை மூன்று முறை மறுதலித்து தனது அழைத்தலை இழந்தார். கிறிஸ்து அவரை மன்னித்து இரண்டாம் முறை, "என்னைப் பின்தொடர்" (யோவா 21:19) என்றார் பேதுருவுடைய சீடத்துவம் அவருடைய சிலுவைச் சாவால் நிறைவு அடையும் என்பதையும் கிறிஸ்து அவருக்குச் சுட்டிக்காட்டினார் (யோவா 21:18).
கடவுளால் சிறப்பான அழைப்புப் பெற்றவர்கள் மற்றவர்களைவிட அதிகம் துன்புறுகின்றனர். இன்றைய முதல் வாசகத்தில் பல்வேறு துன்பங்களுக்கு இலக்கான இறைவாக்கினர் எரேமியா கடவுளிடம் பின்வருமாறு முறையிடுகிறார்: "ஆண்டவரே நீர் என்னை ஏமாற்றி விட்டீர் நானும் ஏமாந்து போனேன்" (எரே 267) ஆயுள் முழுவதும் அருங்கொடையில் தன்னைக் கரைத்துக் கொண்ட ஒரு பெண்மணி புற்றுநோயால் இறந்து கொண்டிருந்தார். அவர் என்னிடம், "சாமி இயேசு என்னைக் கைவிட்டு விட்டார்" என்று சொல்லி அழுதார். அவரிடம் நான் "அம்மா இயேசுவே சிலுவையில் என் இறைவா என் இறைவா! ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று கூறினார். ஆனால் இறுதியில், "தந்தையே என ஆவியை உமது கையில் ஒப்படைக்கிறேன்" என்று கூறினார். அவ்வாறே நீங்களும் கடவுளிடம் சரணடையுங்கள்" என்றேன் அவரும் அமைதியாக மரணம் அடைந்தார்.
துன்பத்தைக் கடவுளின் சாபமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், "ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார் " (எபி 12:6). கிறிஸ்து சிலுவையால் மாட்சிமை அடைந்தார் சிலுவையில் அவர் உயர்த்தப்பட்டார் சிலுவையிலிருந்து மாந்தர் அனைவரையும் தம்பால் ஈர்த்துக் கொண்டார் (யோவா 12:32). ஒவ்வொரு துன்பமும் நம்மைப் புடமிட்டுத் தூய்மைப்படுத்தி மாட்சிமை அடையச் செய்கிறது.
ஒருவர் தன் மகளுக்குத் திருமணம் செய்து அவரை மருமகனிடம் ஒப்படைத்து "மாப்பிள்ளை என் மகள் கண் கலங்காமல் பார்த்துக்கொள்" என்றார். அதற்கு மருமகன் "கவலைப்படாதே மாமா வெங்காயத்தை நானே உரிக்கிறேன்" என்றாம்! வெங்காயத்தை நறுக்கும்போது கண் கலங்குகிறது. நறுக்கப்பட்ட வெங்காயம் தன்னை நறுக்கியவரைப் பார்த்து, "நறுக்கப்பட்ட நானே கண்ணீர் சிந்தவில்லை அப்படியிருக்க நறுக்கிற நீ ஏன் கண்ணி சிந்த வேண்டும்?" என்று கேட்டதாம் துன்பத்தை கண்டு நாம் பயப்படாமல் இருந்தால், துன்பம் நம்மைக் கண்டு பயந்து ஓடிவிடும் என்கிறார் வள்ளுவர்.
இடும்பைக்கு இடும்பபடுப்பவர் இடும்பைக்கு
இடும்பைபடாஅதவர் (குறள் 623)
தன்னைச் சிலுவையிலிருந்து பிரிக்க நினைத்த பேதுருவைக் கிறிஸ்து "சாத்தானே" என்று அழைத்தார் அன்று கிறிஸ்துவை கோபுரத்திலிருந்து குதிக்கச் சொன்ன சாத்தான், அவரைக் கடைசியாகச் சிலுவையிலிருந்து இறங்கிவரச் சொன்னான் ஆனால் சிலுவையிலிருந்து கீழே இறங்கி வரவில்லை மாறாகச் சிலுவையில் தொங்கி நம்மை மீட்டார் கிறிஸ்து நம்மைச் சிலுவையிலிருந்து விடுவிக்கமட்டார். ஆனால் சிலுவையின் மூலம் விடுவிப்பார் சிலுவை கடவுளுடைய ஞானம் கடவுளுடைய வல்லவை!
திருத்தூதர் பவுல் சிலுவையைப் பற்றி கொண்டிருந்த மனநிலை நம்மிடம் இருப்பதாக "நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி வேறு எதைப்பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்டமாட்டேன். அதன் வழியாகவே, என்னைப் பொறுத்த வரையில், உலகம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது. உலகைப் பொறுத்தமட்டில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்" (கலா 6:14)
குறுக்கு வழியா? குறுகிய வழியா?
முதல் உரோமைப் பேரரசன் ஜூலியஸ் சீசர். இங்கிலாந்து நாட்டைக் கைப்பற்றக் குறிவைத்தான். தன் படை வீரர்களையெல்லாம் கப்பல்களில் ஏற்றிக் கொண்டு இங்கிலாந்து நாட்டுக் கடற்கரையை வந்தடைந்தான். பக்கத்திலிருந்த டோவர் மலையில் ஏறும்படி கட்டளையிட்டான். போர்வீரர்கள் மலையின் உச்சிக்கு ஏறியவுடன், அனைவரையும் பின்பக்கம் திரும்பிப் பார்க்கச் சொன்னான் பேரரசன். அங்கே பேரதிர்ச்சி தரும் காட்சி! அவர்களை ஏற்றிவந்த கப்பல்கள் அனைத்தும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தன. அப்போது பேரரசன் முழங்கினான்: “நான்தான் கப்பல்களை எரித்துவிடச் சொன்னேன். ஏனென்றால் தப்பித்து வீடு சென்று விடலாம் என்ற எண்ணத்துடன் உங்களில் யாரும் போரிட நான் விரும்பவில்லை. உயிரை வெறுத்துப் போரிட்டு ஒன்றில் வெற்றியடைய வேண்டும். இன்றேல் சாவைச் சந்திக்க வேண்டும். வாருங்கள். வீறுகொண்டு செல்வோம். வெற்றி நமதே!”. போரிட்டு வெற்றி கண்டார்கள்.
வெற்றி அல்லது வீர மரணம் - இது ஜூலியஸ் சீசர். செய்து முடி. இல்லையேல் செத்து மடி - இது மகாத்மா காந்தி. இயேசுவைப் பொறுத்தவரை - மரணத்தின் வழியாகவே வெற்றி சாவின் வழியாகவே சாதனை சிலுவை வழியாகவே மகிமை.
பாரதி பாடினான் “காதல் காதல் காதல் காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல் என்று. இயேசுவின் சிந்தனையே சாதல் வழிதான் காதல். தனக்குச் சாதல், தன்னலத்துக்குச் சாதல்.
சிலுவையில்தான் இயேசுவின் தனித்துவம் - மகத்துவம். இந்தச் சிந்தனை இல்லாததால்தான் சென்ற வாரம் பாராட்டு மாலை பெற்ற பேதுருவுக்கு இந்த வாரம் கண்டனக் கணை. மரணம்பற்றிய இயேசுவின் முன்னறிவிப்பு பேதுருவுக்கு அதிர்ச்சியைத் தந்தது. "ஆண்டவரே இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது” (மத். 16:22) எதற்கு இந்த வம்பு?
இயேசுவின் மீது கொண்ட அன்பினால் பேதுரு இவ்வாறு சொன்னாலும் அது இறைத் திட்டத்துக்கு மாறுபட்ட உலகக் கண்ணோட்டம் அல்லவா! இறைவனின் விருப்பத்துக்கும் திட்டத்துக்கும் மாறுபட வரும் எதுவும் சாத்தானிடமிருந்து வருவதாகத் தானே இருக்கும்.
"என் கண்முன்னே நில்லாதே சாத்தானே”. வேறு எங்கோ கேட்டதுபோல் தோன்றவில்லையா? (மத். 4:10). பசியைப் போக்கக் கற்களை அப்பமாக்கச் சொன்ன பாலைவனச் சோதனை. இயேசுவைத் துன்பங்களிலிருந்தும் சாவிலிருந்தும் பிரிக்க நினைப்பவன் சாத்தான். சாவு வேண்டாம் என்று சொல்வதும் சாத்தானிடம் சரணடைவதும் ஒன்றே!
"நீங்கள், நான் யாரெனச் சொல்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு மறுமொழியாகப் பேதுரு, "நீர் மெசியா வாழும் கடவுளின் மகன்" என்று உரைத்தார் (மத். 16:15-16). அது சரியான பதில்தான். ஆனால் நிறைவான பதிலா? ஏசாயா முன்னுரைத்த “மெசியா துன்புறும் ஊழியன்" என்ற உண்மையும் உணர்வும் பேதுருவுக்கு ஏன் வரவில்லை? இயேசுவின் தனித்துவமும் மகத்துவமும் சிலுவையே!
தன்னலமறுப்பும், உயிரைக்கூட இழக்கும் துணிவும் சிலுவையைச் சுமக்கத் தேவை. அதுவே இயேசுவின் சீடனுக்குரிய பண்புக் குரு எவ்வழி சீடன் அவ்வழி!
சேலம் மறைமாவட்டத்தின் ஆயராக மேதகு சிங்கராயர் பொறுப்பேற்றது, திருநிலை பெற்றது 2000ஆவது ஆண்டு அக்டோபர் 18ஆம் நாளில். அதற்குச் சிலநாட்களுக்கு முன்பு ஆயர் பணிபற்றிய அவரது பேட்டி ஒன்றில் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார்;
எனக்கு வழிகாட்டுவது சிலுவை. துணை நிற்பது நற்கருணை
ஆற்றல் அளிப்பது தூய ஆவி
எந்த மனிதனும் மேற்கொள்ளும் இலட்சியப் பயணத்துக்கு உரமூட்டும் வார்த்தைகள்! சிலுவை, துன்பம் என்றதுமே, தீர்வைத் தேடுகிறோமே தவிர, அது வழி நடத்தக்கூடியது, வாழ்வு தரக்கூடியது என்ற எண்ணம் எத்தனை பேருக்கு எழுகிறது?
சிலுவை என்பது எது? வறுமை, கவலை, நோய் போன்ற துன்பங்கள் மட்டுமல்ல, அவைகளுக்கு அப்பால் அமையும் தன்னல மறுப்பு. "பரத்தமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலிய (கலா.5:19) ஊனியல்பின் இச்சை ஒழிப்பும் கூட. தன்னல மறுப்பு என்பது இழப்பு அல்ல. ஒன்றுக்கு நூறாகப் பலன்தருவதற்காகவே மடியும் கோதுமை மணி. சிலுவை என்பது துன்பமல்ல, தியாகம்."
சிலுவை யூதர்களுக்கு இடறல், கிரேக்கர்களுக்கு மடமை, அழைக்கப்பட்ட நமக்கோ கடவுளின் ஞானம் அல்லவா! (I கொரி. 1:23- 25).
உலகமே ஒரு கல்வாரி மலை. அங்கே எல்லா மனிதர்களும் சிலுவையில் தொங்கித்தான் தீர வேண்டும். ஆனால் இயேசுவின் இடது பக்கத்திலா வலது பக்கத்திலா? இடது பக்கத்துக் கள்ளனைப் போல "நீர் மீட்பர் என்றால், சிலுவையிலிருந்து இறங்கு, என்னையும் இறக்கு” என்று கேட்கப் போகின்றோமா, இல்லை வலது பக்கத்துக் கள்ளனைப் போல "இயேசுவே, நீர் ஆட்சி உரிமை பெற்று வரும்போது என்னை நினைவில் கொள்ளும்" என்று இதயத்தை அவரை நோக்கி எழுப்பப்போகின்றோமா? என்பதைப் பொருத்தது நமது வாழ்க்கையின் பொலிவு!
சிலுவை தேவையா, ஏன் இந்த வம்பு? என்று ஒதுங்காமல் சிலர் இப்படி வம்பில் மாட்டிக் கொண்டதால்தான் நல்லவைகள் பல பிறந்திருக்கின்றன.
- ஆபிரகாம் லிங்கன் மனித அடிமை வியாபாரத்தை ஒழிக்க 'முனைந்து செயல்பட்டார்; பாடுபட்டார்.
- மகாத்மா காந்தி தீண்டாமையை வேரறுக்க, இந்து முசுலீம் ஒற்றுமையை நிலை நிறுத்தப் போராடினார்.
- மார்ட்டின் லூத்தர் கிங் கருப்பின மக்களின் விடுதலைக்காகத் தன்னைக் கையளித்தார்.
- எல் சர்வதோர் பேராயர் ஆஸ்கார் ரொமேரோ, பசிக்கும் பட்டினிக்கும் முதலாளி முதலைகளின் அநீதிக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகிச் செத்து மடிந்த தன் ஏழை எளிய மக்களுக்கு விடுதலை தர முனைப்போடு ஈடுபட்டார்.
அத்தனை பேரும் துப்பாக்கிக் குண்டு உடலைத் துளைக்கப் பலியானார்கள். அவர்கள் சந்தித்தது பேரிழப்புத்தான். ஆனால் இழப்புக்களை நேசித்தார்கள். யுகத்தை வென்றார்கள்.
இழப்புக்களை நேசிப்பதா? அது எப்படி? “அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும், திராட்சைக் கொடிகள் கனி தராவிடினும், ஒலிவ மரங்கள் பயனற்றுப் போயினும், வயல்களில் தானியம் விளையாவிடினும், கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும், தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும் நான் ஆண்டவரில் களி கூர்வேன்... ஆண்டவராகிய என் தலைவரே என் வலிமை” (அபக்கூக்கு 3:17-19).
விண்ணரசுக்குக் குறுக்கு வழியில்லை. குறுகிய வழிதான் உண்டு. குறுக்கு வழி சிலுவையைத் தவிர்ப்பது குறுகிய வழி சிலுவையைச் சந்திப்பது. சவாலாக ஏற்பது.
துன்பத்தைக் குடித்துச் சமாளி - இது பாமரன் நிலை
துன்பத்தைச் சிரித்துச் சமாளி (இடுக்கன் வருங்கால் நகுக) - இது வள்ளுவர்
தத்துவம் துன்பத்தைச் செபித்துச் சமாளி - இது கிறிஸ்தவ வாழ்க்கை முறை
இறைவாக்கினராக வாழ்வது எளிதல்ல
புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், வெளியிட்ட சுற்றுமடல்களில், இரண்டு புகழ்பெற்றவையாக விளங்குகின்றன. 1961ம் ஆண்டு அவர் வெளியிட்ட “Mater et Magistra” அதாவது, "அன்னையும் ஆசிரியரும்" என்ற சுற்றுமடலும், 1963ம் ஆண்டு, நல்மனம் கொண்ட உலகமக்கள் அனைவருக்கும் விடுக்கும் ஓர் அழைப்பாக அவர் வெளியிட்ட “Pacem in Terris” அதாவது, "உலகில் அமைதி" என்ற சுற்றுமடலும் புகழ்பெற்றவை.
சமுதாயப் பிரச்சனைகள் பெருகிவந்த 1960களில், இவ்வுலகில், திருஅவை ஆற்றக்கூடிய, ஆற்றவேண்டிய பணிகளை விளக்குவது “Mater et Magistra” என்ற சுற்றுமடல். இம்மடல் வெளியான ஒரு சில வாரங்களில், ஒரு கத்தோலிக்க எழுத்தாளர், பத்திரிகையில் விமர்சனம் ஒன்றை வெளியிட்டார். அந்த விமர்சனத்தின் தலைப்பு: “Mater sí, Magistra no!” அதாவது, "அன்னை...வேண்டும்; ஆசிரியர்...வேண்டாம்" என்று அமைந்திருந்தது.
அளவுகடந்த அன்பைப் பொழியும் அன்னையாக திருஅவையை உருவகித்துப் பார்க்கையில் மனம் குளிர்கிறது. ஆனால், கண்டிப்புடன் பாடங்கள் புகட்டும் ஆசிரியராக திருஅவையை எண்ணிப் பார்க்கையில் கசக்கிறது. காயப்பட்டக் குழந்தைகளாக, அன்னையின் அணைப்பைத் தேடி, நாம் பலமுறை, கோவிலை, திருஅவையின் பணியாளர்களை அணுகிவந்துள்ளோம். ஆனால், காயப்பட்டதற்குக் காரணம் நாம்தான் என்று சுட்டிக்காட்டும் ஆசிரியராக திருஅவை ஒரு சில முறை மாறியபோது, அந்தக் கண்டிப்பை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உலகம் காட்டும் தவறான போக்கிற்கு எதிராக விவிலியம் காட்டும் உன்னத வழிகளை, கசப்பான உண்மைகளை, திருத்தந்தையர், தங்கள் மடல்கள் வழியே வெளியிடும் வேளைகளில், "அன்னை...வேண்டும்; ஆசிரியர்...வேண்டாம்" என்ற குரல் மீண்டும், மீண்டும் எழுந்துள்ளது.
'அன்னை' என்ற இலக்கணத்தில், 'ஆசிரியர்' என்ற அம்சமும் இணைந்துள்ளது. எந்த ஓர் அன்னையும் தன் குழந்தைக்கு அளவுகடந்த அன்பை மட்டுமே எந்நேரமும் பொழிந்தால், அக்குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கு அந்த அன்பே ஒரு தடையாக அமையும். தவறும்போது, தடுமாறும்போது அக்குழந்தைக்குத் தகுந்த வழியைக் காட்டுவதும் அன்னையின் பொறுப்பு. அவ்வேளைகளில், கரிசனை கலந்த கண்டிப்புடன் செயலாற்றும் ஓர் ஆசிரியராக அன்னை மாறவேண்டும்.
சென்ற ஞாயிறு, அன்னையாக விளங்கிய இயேசு, இந்த ஞாயிறு ஆசிரியராக மாறுகிறார். 'நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்?' என்று கேட்ட இயேசுவுக்கு, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று உயர்ந்ததொரு விசுவாச அறிக்கையை வெளியிட்டார் பேதுரு. இயேசு அவரிடம், “யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்” (மத்தேயு 16:17-18) என்று பேதுருவை வாழ்த்தினார் இயேசு. இந்த வாழ்த்துரையைக் கேட்டு, பேதுரு ஒரு கனவுப் பல்லக்கில் அமர்ந்து பவனி வந்திருப்பார். ஆனால், இது நடந்து ஒரு சில நிமிடங்களில், “என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்” (மத்தேயு 16:23) என்று இயேசு, பேதுருவை, அனல் தெறிக்கும் வார்த்தைகளில் கடிந்துகொண்டார். ஆனந்தத்தில் மிதந்த பேதுரு, அதிர்ச்சியில் உறைந்து நின்றிருப்பார். கனவில் தான் மிதந்துவந்த பல்லக்கிலிருந்து, படுகுழியில் விழுந்ததைப் போல உணர்ந்திருப்பார்.
பல்லக்கில் மிதந்ததற்கும், படுகுழியில் விழுந்ததற்கும் பேதுருவே காரணமாகிறார். இயேசுவை, 'மெசியா' என்று அறிக்கையிடுவதில் பெருமை அடைந்தார் பேதுரு. 'மெசியா' என்ற சொல்லுக்கு, 'அர்ச்சிக்கப்பட்டவர்' அல்லது, 'அருள்பொழிவு செய்யப்பட்டவர்' என்பது பொருள். இஸ்ரயேல் அரசர்கள் அனைவரும், அருள்பொழிவு செய்யப்பட்டவர்கள் என்பதை பேதுரு நன்கு அறிந்தவர். எனவே, அவர் இயேசுவை 'மெசியா' என்று அறிக்கையிட்டபோது, அவர் விரைவில் ஓர் அரசனாக அருள்பொழிவு பெறுவார் என்று உள்ளூர எண்ணியிருக்கலாம். அதுவும், விரைவில், தாங்கள் எருசலேம் நகரில் நுழைந்ததும், இந்தக் கனவு நனவாகி, இயேசு அரியணை ஏறுவார் என்ற எண்ணங்கள் அவர் உள்ளத்தை நிறைத்திருக்கலாம். பேதுரு சொன்ன வார்த்தைகளை ஆமோதிப்பதுபோல இயேசுவும் அவரை மனதாரப் புகழ்ந்தார். இயேசுவின் புகழுரை, பேதுரு அவரைப் பற்றிக் கொண்டிருந்த கனவை உறுதிப்படுத்தியிருக்கும்.
அந்நேரத்தில், அங்கு ஒரு திடீர் மாற்றம் நிகழ்கிறது. இயேசு, தான் எப்படிப்பட்ட 'மெசியா' என்பதையும், தனக்கு எருசலேமில் காத்திருக்கும் வரவேற்பைப் பற்றியும் விளக்க ஆரம்பிக்கிறார்: இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும், கொலை செய்யப்படவும், மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார். (மத்தேயு 16:21) என்று இன்றைய நற்செய்தி துவங்குகிறது. இந்த வார்த்தைகள், பேதுருவுக்கும் சரி, நமக்கும் சரி, நற்செய்தியாக ஒலிக்கவில்லை.
இந்தக் கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத பேதுரு, நடைமுறை வாழ்வுக்கு ஏற்ற சில அறிவுரைகளை இயேசுவுக்குத் தரவிழைகிறார். இயேசுவுக்கு எவ்வித ஆபத்தும் வரக்கூடாது என்ற ஆதங்கத்தில் பேதுரு கூறிய அறிவுரைகளுக்கு இயேசுவின் பதில் ஏன் இவ்வளவு கோபமாக வெளிவந்தது என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக உள்ளது. தன் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான பேதுருவை, இயேசு 'சாத்தானே' என்றழைப்பது, நம்மில் சில சிந்தனைகளைத் தூண்டுகிறது.
தன் பணிவாழ்வின் துவக்கத்தில், இயேசு, பாலை நிலத்தில் சாத்தானைச் சந்தித்தார். அங்கு சாத்தான் தந்த மூன்று சோதனைகளையும், மேலோட்டமாகப் பார்த்தால், அவை ‘நல்ல’ சோதனைகள் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். கொலை, கொள்ளை, ஏமாற்றுதல் என்று தவறான செயல்களைச் செய்யச் சொல்லி, சாத்தான், இயேசுவைத் தூண்டவில்லை. குறுக்கு வழிகள், எளிதான வழிகள், உலகோடு சமரசம் செய்துகொள்ளும் வழிகள் இவையே சோதனையாக வந்தன. அதுவும், "நீ இறைமகன் என்றால், இவற்றைச் செய்யும்" என்ற ஒரு தூண்டிலைப் போட்டு, இயேசுவைப் பிடிக்க சாத்தான் முயன்றது.
இன்றைய நற்செய்தியிலும் அந்த பாலை நில சோதனைகளின் எதிரொலிகளை நாம் உணரலாம். தன் பணிவாழ்வின் துவக்கத்தில் சாத்தான் வழியே வந்த சோதனைகளைச் சந்தித்த இயேசுவுக்கு, பணிவாழ்வின் இறுதிக் கட்டத்தில், அவர் எருசலேமை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில், தன் நெருங்கிய நண்பர் வழியே சோதனை வந்தது.
பேதுரு இயேசுவுக்கு வழங்கிய அறிவுரையும் தவறான அறிவுரை அல்ல. இயேசுவுக்கு எவ்வித ஆபத்தும் நேரக்கூடாது என்ற நல்ல நோக்கத்துடன், ஆதங்கத்துடன் பேதுரு கூறிய அறிவுரை அது; நடைமுறைக்கு ஏற்ற அறிவுரை. வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில், "இயேசுவே, நீர் ஏன் தேவையில்லாத பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளவேண்டும்? உலகத்தோடு ஒத்துப்போக வேண்டியதுதானே!" என்ற பாணியில் பேதுரு அறிவுரை வழங்கினார்.
நமக்கு வரும் பெரும்பாலான சோதனைகளும் இப்படிப்பட்டவையே. கொலைசெய்யவோ, கொள்ளை அடிக்கவோ, ஊழலில் ஊறிப் போகவோ நமக்குச் சோதனைகள் வருவதில்லை. உலகத்தோடு ஒத்துப் போவது, எளிய வழிகளை, குறுக்கு வழிகளைத் தேடுவது, அங்கும், இங்கும் சிறிது 'அட்ஜஸ்ட்' செய்து, அநீதிகளோடு சமரசம் செய்துகொள்வது என்பவையே, நமக்குப் பெரும்பாலான நேரங்களில் வரும் சோதனைகள். நமக்கு நெருங்கியவர்களிடமிருந்து இச்சோதனைகள் வரும்போது, இன்னும் சிக்கலாக மாறிவிடுகின்றன. அவர்கள் நம்முடைய நன்மைக்காகத்தானே சொல்கிறார்கள் என்ற போராட்டம் எழுகின்றது.
உண்மையான நீதி, அமைதி, அன்பு ஆகிய உயரிய சிகரங்களை அடைய குறுக்கு வழிகளோ, எளிதான பாதைகளோ கிடையாது. கடினமானப் பாதைகளில், தனித்துச் செல்லும் பயணங்கள் இவை. இத்தகையதொரு பயணத்தை இயேசு மேற்கொண்டார். அவரைப் பின்பற்ற விழைவோருக்கும் இத்தகையப் பயணமே காத்திருக்கிறது என்பதை இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு ஒரு சவாலாக நம்முன் வைக்கிறார்:
பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார்” என்றார்.
‘சவால்’ என்ற வார்த்தை நமக்குள் வீர உணர்வுகளை உருவாக்கலாம். நெருப்பில் குதிப்பது எளிது. எதோ ஒரு வேகத்தில் குதித்துவிடலாம். ஆனால், தொடர்ந்து நெருப்பில் நடந்து, அல்லது, அந்த நெருப்புடன் போராடி, அதை வெல்வது மிகவும் கடினம். இறைவாக்கினர்கள் பலர், இந்தப் போராட்டத்திற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் வாழ்ந்த சமுதாயம் சரியில்லை என்பதை, துணிவுடன் எடுத்துச் சொல்லும் பணியை, இறைவன் அவர்களுக்கு அளித்தார். விவிலியத்தில் நாம் சந்திக்கும் பல இறைவாக்கினர்கள், இறைவன் அளித்த இந்த ஆபத்தான பணியை ஏற்க மறுத்து, ஓடி ஒளிந்தனர். ஆனாலும், அந்தப் பணியை நிறைவேற்றும் வரை இறைவன் அவர்களை விடவில்லை. இப்படி தன்னை இடைவிடாமல் துரத்தி வந்த இறைவனிடம் இறைவாக்கினர் எரேமியா பேசுவதை இன்றைய முதல் வாசகத்தில் இப்படி நாம் கேட்கிறோம்.
எரேமியா 20: 7-9
ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்: நானும் ஏமாந்து போனேன்: நீர் என்னைவிட வல்லமையுடையவர்: என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்: நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள். நான் பேசும்போதெல்லாம் ‘வன்முறை அழிவு’ என்றே கத்த வேண்டியுள்ளது: ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது.
“அவர் பெயரைச் சொல்லமாட்டேன்: அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்” என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்: இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.
நான் வாயைத் திறந்தாலே உண்மைகளைச் சொல்ல வேண்டியுள்ளது, அதுவும் கசப்பான உண்மைகளைச் சொல்ல வேண்டியுள்ளது. ‘ஏன் எனக்கு வம்பு’ என்று பேசாமல் இருந்தாலும் உமது வார்த்தைகள் என் மனதில் நெருப்பாய் எரிந்து கொண்டிருக்கின்றன என்று சொல்கிறார் எரேமியா. மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தவிக்கும் இறைவாக்கினர் எரேமியாவைப் போல பல கோடி இறைவாக்கினர்கள் எண்ணியிருப்பர், சொல்லியும் இருப்பர்.
இந்திய அரசு பழங்குடி மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வந்த அடக்குமுறைகள் தவறானவை என்பதைக் கண்டு, தான் 'ஒரு மௌனப் பார்வையாளனாக' வாழப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், நாம் வாழும் காலத்தில் நம்முடன் வாழ்ந்து மறைந்த ஓர் இறைவாக்கினர். அரசு செய்வது தவறு என்ற கசப்பான உண்மையை எடுத்துரைத்த அந்த உன்னத இறைவாக்கினர், இன்று எரேமியா போன்ற இறைவாக்கினர்களுடன் விண்ணகத்தில் வாழ்கிறார்.
மனதுக்குச் சங்கடமான உண்மைகள் சொல்லப்படும்போது, உண்மையைச் சந்திக்க மறுத்து, நாம் ஓடி ஒளியலாம். அல்லது, அந்த உண்மையைச் சொன்னதால், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களைப் போல் உயிர் துறக்கலாம். இதையே இன்றைய நற்செய்தியில் இயேசு ஒரு சவாலாக நமக்கு முன் வைக்கிறார். ஒரு கேள்வியின் வடிவில் இயேசு விடுக்கும் இந்தச் சவால், புனித பிரான்சிஸ் சேவியரைப் போல பல்லாயிரம் உன்னத உள்ளங்களை விழித்தெழச் செய்தது. இன்று இயேசு நமக்கு விடுக்கும் இந்தச் சவால், நமக்குள்ளும் மாற்றங்களை உருவாக்குமா? இதோ இயேசு நம் ஒவ்வொருவருக்கும் விடுக்கும் அந்த உன்னத சவால்: மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? (மத்தேயு 16:26)
"இறைச்சிந்தனை Vs மனிதச்சிந்தனை - சிலுவையின் வழி சீடத்துவம்"
இன்றைய நற்செய்தியில் (மத்தேயு 16:21-27), கடந்த வாரம் இயேசுவைப் பாராட்டிய அதே பேதுரு, இன்று இயேசுவினால் கடிந்து கொள்ளப்படுகிறார். இது நமக்கான ஒரு எச்சரிக்கை பாடம்.
1. இறைவார்த்தையின் தீ (The Fire of the Word)
முதல் வாசகத்தில் (எரேமியா 20:7-9) இறைவாக்கினர் எரேமியா தன் மனப்போராட்டத்தை வெளிப்படுத்துகிறார். இறைவார்த்தையை அறிவிப்பதால் அவருக்கு நிந்தையும் இகழ்ச்சியும் கிடைக்கிறது. அவர் பேசாமல் இருக்க நினைத்தாலும், இறைவார்த்தை அவர் "எலும்புகளுக்குள் அடைக்கப்பட்ட எரியும் நெருப்பைப் போல" இருக்கிறது.
⚫: சிந்தனை: உண்மையான விசுவாசம் என்பது எப்போதும் சுகமானதாக இருக்காது; அது சில நேரங்களில் நெருப்பைப் போல நம்மைச் சுடும், ஆனால் நம்மைத் தூய்மைப்படுத்தும்.
2. சிலுவை எனும் நிபந்தனை (The Condition of the Cross)
இயேசு கூறுகிறார்: "எவராவது என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவர் தன்னையே துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றி வரட்டும்."
⚫: விளக்கம்: சிலுவை என்பது வெறும் கழுத்தில் அணியும் ஆபரணம் அல்ல; அது நம்முடைய சுயநலமான விருப்பங்களைக் கொன்று, இறைவிருப்பத்திற்காக வாழும் தியாகம். சிலுவை இல்லாத சீடத்துவம் என்பது உண்மையான கிறிஸ்தவமே அல்ல.
⚫: கடிந்து கொள்ளுதல்: இயேசு பேதுருவைச் "சாத்தானே" என்று அழைக்கிறார். ஏனெனில் பேதுரு மனிதச் சிந்தனையோடு (துன்பமில்லாத வாழ்வு) பேசினார். இயேசுவோ இறைச்சிந்தனையோடு (தியாகத்தின் மூலம் மீட்பு) பேசினார்.
3. உலகப் போக்கிற்கு ஒவ்வாதிருங்கள் (Transformed, Not Conformed)
இரண்டாம் வாசகத்தில் (உரோமையர் 12:1-2) புனித பவுல் மிக முக்கியமான அறைகூவலை விடுக்கிறார்: "நீங்கள் இந்த உலகத்தின் போக்கிற்கு ஒவ்வாதிருங்கள்; மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பட்டு உருமாற்றம் அடையட்டும்."
⚫: பாடம்: உலகம் பழிவாங்குதல், ஆடம்பரம், சுயநலம் ஆகியவற்றைத் தூண்டுகிறது. ஆனால், இறைசிந்தனை அன்பு, எளிமை, தியாகத்தைத் தூண்டுகிறது.
பங்குத்தளம் மற்றும் இறைமக்களுக்கான செயல் திட்டங்கள் (CTA)
இந்த வாரம் நாம் நடைமுறைப்படுத்த வேண்டியவை:
⚫: சுயப் பரிசோதனை: உங்கள் முடிவுகள் 'மனிதச் சிந்தனை' அடிப்படையிலானவையா? அல்லது 'இறைச் சிந்தனை' அடிப்படையிலானவையா? ஒரு காரியத்தைச் செய்யும் முன் "இயேசு இங்கே இருந்தால் என்ன செய்வார்?" என்று சிந்தித்துப் பாருங்கள்.
⚫: சிலுவையை ஏற்றல்: உங்கள் வாழ்வில் நீங்கள் சந்திக்கும் சிறு சிறு கஷ்டங்களை (எ.கா: மற்றவர்களைப் பொறுத்துக்கொள்ளுதல், உடல்நலக் குறைவு) முணுமுணுக்காமல் இயேசுவின் சிலுவையோடு இணைத்து ஒப்புக்கொடுங்கள்.
⚫: உருமாற்றம் பெறுவோம்: சமூக வலைதளங்களோ அல்லது உலகப் போக்கோ உங்களை வழிநடத்த அனுமதிக்காதீர்கள். இந்த வாரம் விவிலியத்தை வாசித்து உங்கள் உள்ளத்தைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
⚫: இறைவார்த்தைக்கு முதலிடம்: எரேமியாவைப் போல இறைவார்த்தை உங்கள் இதயத்தில் எரியும் நெருப்பாக இருக்கட்டும். உண்மையைச் சொல்லப் பயப்படாதீர்கள்.
மறையுரைச் சுருக்கம் (The Core Message)
"உலகத்தை ஆதாயமாக்கிக் கொண்டு தன் வாழ்வையே இழப்பவருக்குப் பயன் என்ன? புகழும் வசதியும் தற்காலிகமானவை; தியாகத்தின் வழியே கிடைக்கும் மீட்பே நிலையானது. சிலுவையைத் தேடிச் செல்ல வேண்டாம், ஆனால் வரும் சிலுவையை அன்போடு ஏற்போம்."
பொதுக்காலம் 22-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (எரே. 20:7-9)
ரேமியாஸ் இறைவாக்கினர் கடவுளால் தேர்ந்தெடுக்கபட்டு இறைவாக்கு உரைக்க அனுப்பப்பட்டவர். மென்மையான அன்புள்ளம் கொண்ட இவர் தண்டனை தீர்ப்பு உரைக்குமாறு அனுப்பப்பட்டார். "துன்புறும் ஊழியராக" கடவுளுக்கும். மக்களுக்கும் இடையில் இருந்து செயல்பட்டு தீர்ப்பு அளிக்கிறார். தன்னையும் கடவுளையும் புறக்கணித்த மக்களை நினைத்து மனம் உடைந்து கடவுளிடம் முறையிடுகிறார். கடவுள் தன்னை “ஏன் அழைக்க வேண்டும். இப்படி வணங்கா கழுத்துள்ள மக்களிடம் ஏன் அனுப்ப வேண்டும், என்னை ஏமாற்றிவிட்டீர்” என புலம்புகிறார்.
இரண்டாம் வாசகப் பின்னணி (உரோ. 12:1-2)
தூய பவுலடியார் கடிதங்களின் மூலமாகவே பல சமூகங்களை இறையன்பால் ஈர்த்தார். அவரின் அறிவுரைகள் அனைத்தும் இயேசுவையும் அவரின் போதனைகளையும் மையமாக கொண்டவை. "உலகத்தின் போக்கின்படி நடக்க வேண்டாம். ஏனெனில் அவை சோதனைகளின் கூடாரமாய் உள்ளன. கடவுளுக்கு ஏற்ற வாழ்வையே வாழுங்கள். உடலை விட ஆன்மா முக்கியமானது. உடல் இச்சைகளுக்கு இடம் தராதீர்கள். மனித வழிகளை விட்டுவிட்டு இறைவனின் வழியை தெரிந்து கொள்ளுங்கள். அதனால் மட்டுமே நிறைவாழ்வடைய முடியும்" என்கிறார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 16:21-27)
இயேசு வாழ்ந்த காலத்தில், யூதர்கள் அனைவரும் “மெசியா வருவார். உரோமையர் ஆட்சியின் அடிமை தலையை தகர்த்தெறிவார். அவர் அமைதியின் அரசர். உண்மையின் அரசர். உலகத் தின் அரசர்" என்று எதிர்பார்த்திருந்தார்கள். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு உண்மையில் மெசியா யார் என்பதை விளக்குகின்றார். “மெசியா, அனைவராலும் வெறுக்கப்பட்ட துன்புறும் ஊழியர் என்றும், தலைமைக் குருக்கள் அவரை கொலை செய்வார் என்றும், மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார்" என்றும் கூறுகின்றார். இயேசுவின்
"மெசியா" பற்றி கருத்துக்கள், பேதுருவின் கருத்துக்களுக்கு முரண்பாடாக இருந்ததால், பேதுரு "இது உமக்கு வேண்டாம்" என்றார். இயேசுவோ பேதுருவை பார்த்து, "உமது கருத்துக்கள் கடவுளுடைய கருத்துக்கள்” என்று கூறி, மெசியா துன்புறும் ஊழியனன்றி, இன்புறும் இவ்வுலக அரசன் அன்று என்பதை தெளிவுபடுத்துகின்றார்.
மறையுரை
துன்பம் சாபமல்ல
இன்பத்தின் திறவுகோல்தான் துன்பம்
இன்றைய திருப்பலியை சிறப்பிக்க வந்துள்ள நமக்கு இறைவன் கொடுக்கும் அழைப்பு என்னவெனில் துன்பங்களை பொறுமையாக ஏற்க வேண்டும் என்பதுதான்.
உன்னை என் சீடராய் ஏற்றுக்கொண்டு உன்னை சுமக்க நான் தயார்...
துன்பங்களை சுமக்க நீ தயாரானால்...!
நம்மில் எத்தனை பேர் துன்பங்களை பொறுமையாக சுமக்க தயாராக இருக்கிறோம். துன்பங்களை ஏற்காமல் இருந்திருந்தால் இன்று நமக்கு இயேசு வழியாக மீட்பு கிடைத்திருக்குமா?
⇛இரண்டாம் உலகப்போரில் 60,00,000 யூதர்களை ஹிட்லர் கொன்றான். இதைக்கண்ட "ரூபன்ஸ்டெயின்" என்ற யூதரோ கடவுள் மீது இருந்த நம்பிக்கையை கைவிட்டார்.
⇛2000 டிசம்பர் 14 செங்கல் பட்டு அருகில் செய்யூர் கிராமத்தில் தூய சூசையப்பர் சபை கன்னியர்கள் 6 பேர் உறங்கிக் கொண்டிருந்தபோது கூரை இடிந்து விழுந்து அனைவரும் இறந்தனர்.
⇛ 2004 டிச. 26 கொடூர சுனாமியால் பல்லாயிரம் பேர் உயிர் உடைமை உறவுகளை இழந்தனர்.
மேற்கண்ட 3 சம்பவங்களும் நம்மை துன்பத்தின் உச்சக்கட்டத்திற்கே இழுத்துச் செல்கின்றன. சிந்திப்போம்!
ஹிட்லரின் மனிதாபிமானமற்ற செயலுக்கும்
மற்ற இரண்டு உயிரழப்புகளுக்கும் யார் காரணம்?
இவற்றையல்லாம் சிந்திக்கும் போது...
பழைய ஏற்பாட்டில் யோபு புத்தகம் 7:1-4,6,7 ல் யோபு புலம்புவதை போல...
"கடவுள் ஏன் இவற்றை அனுமதிக்க வேண்டும்
என்ற கேள்வியும், மனக் குழப்பமும் தோன்றும்!
ஏன் சிலருக்கு கடவுள் மீது வெறுப்பும் கூட தோன்றும். இன்றைய வாசகங்கள் அனைத்தும் இதற்கான பதிலை தெளிவாகவும் ஆணித்தரமாகவும் நமக்கு எடுத்துக் கூறுகின்றன. முதல் வாசகத்தில் உண்மைக்கும் நன்மைக்கும் குரல் கொடுக்கும் மக்களுக்கும். அநீதிகளுக்கும், அக்கிரமங்களுக்கும் ஆதரவு தரும் மக்களுக்கும் இடையில் இறைவாக்கினர் எரேமியா என்ன செய்வது என்று தெரியாமல் கடவுளிடம் முறையிடுகிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கடமையை அதாவது இறைவாக்கு எடுத்துரைப்பதை கடினமாகக் கண்டு புலம்புகிறார். சாதாரண மக்கள் புலம்புவதைப் போல்தான் அவரும் புலம்புகிறார். "கடவுளே நீர் என்னை ஏமாற்றிவிட்டீர். என்னை விட வலிமை கொண்ட நீர் என்னை சுலபமாக வெற்றிக்கொண்டீர்” என்கிறார். ஆனால் அவர் அந்த எண்ணங்களிலேயே நின்று விடவில்லை. மாறாக தன் அழைப்பின் முக்கியத்துவம் உணர்ந்தவராய் தன் பணியை சிறப்பாக தொடர்கிறார். துன்பங்களை பொறுமையாக ஏற்றார். கடவுளின் திட்டம் தன் வழியாக செயல்பட தன்னையே அர்ப்பணித்தார்.
இறைவனின் சிறந்த படைப்பாகிய நாம் ஒவ்வொருவரும் அவரின் திருவுளப்படியே நடக்க அழைக்கப்படுகிறோம். நாம் எவ்வாறு இறைவனின் திட்டத்தை நிறைவேற்ற முடியும்? என்ற கேள்விகளுக்கு பதிலாகத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் எடுக்கப்பட்டுள்ளது. இயேசு தன் சீடர்களிடம் "நான் எருசலேமுக்கு சென்று துன்பப்பட்டு இறக்க வேண்டும்" என்கிறார். தன் சாவை முதன் முறையாக எடுத்துரைக்கிறார். ஆனால் அவரின் நெருங்கிய சீடரான பேதுரு அதை விரும்பாமல் “இயேசுவே, வேண்டாம். உமக்கு அப்படி எதுவும் நடக்க கூடாது" என்கிறார்.
துன்பங்களை ஏற்க மனமில்லாத நிலையைப் பார்த்த இயேசு பேதுருவிடம் "சாத்தானே, விலகிப்போ" என்கிறார். பின் சீடர் அனைவரிடமும் இவ்வாறு கூறுகிறார். "என்னை பின்பற்ற விரும்பும் அனைவரும் தன்னலம் மறுத்து, தன் சிலுவையை தூக்கிக் கொண்டு பின் செல்ல வேண்டும்". மனிதருக்கு ஏற்றவைகளை அல்ல மாறாக கடவுளுக்கு ஏற்றவைகளையே எண்ண வேண்டும் என்கிறார். உலக விருப்புகளை விட்டு, துன்பங்களை பொறுமையாக ஏற்றார். அதனால் தன் தந்தையால் மாட்சிப்படுத்தப்பட்டார்.
துன்பங்களின் வழியாகவே வாழ்வை வழங்கிய நம் இறைவன் நமக்கு விடுக்கும் அழைப்பு இதுதான். கடவுளின் திட்டப்படி வாழ்ந்தால் நிலைவாழ்வு பெறலாம் என்பதுதான்.
1. துன்பங்களை பொறுமையாக ஏற்றுக்கொள்வது
2. அதற்கு தடையான உலக சோதனைகளை விலக்குவது
3. அதற்கு துணையாக கடவுள் மேல் நம்பிக்கை வைப்பது
இந்த 3 காரியங்களையும் இயேசு செய்ததால்தான் அவர் இறந்தோர் அனைவர் முன்னிலையிலும் தன் தந்தையால் மாட்சிப்படுத்தப்பட்டார். நாமும் முயற்சித்துப் பார்ப்போமா?
1. துன்பங்களை பொறுமையாக ஏற்பது:
துன்பங்கள்தான் புதுமைகளுக்கு வழிவகுக்கின்றன.
கடவுளின் திட்டத்தை மனிதக் கண்களால் ஆராய்ந்து அறிய முயற்சித்து கடைசியில் ஊனியல்பின் பலவீனத்தால் நாம் கேட்கும் கேள்வி இது தான். "கடவுள் ஏன் இவற்றை அனுமதிக்க வேண்டும்"?
தன் ஒரே மகனை பலியிட முன் வந்த ஆபிரகாம் அதை துன்பம் என நினைத்திருந்தால் விசுவாசத்தின் தந்தையாக இருந்திருக்க முடியுமா? (தொநூ 22)
யோபு தன் துன்பங்களை நினைத்து கடவுளை புறக்கணித்து இருந்தால் இறையாசீரை பெற்றிருக்க முடியுமா? (யோபு 8)
உண்மையை சொன்னால் உயிர்போகும் என்று நினைத்திருந்தால் நாத்தான் தாவீது அரசனை திருத்தியிருக்க முடியுமா (2சாமு 7).
பழைய ஏற்பாட்டில் மட்டுமா? புதிய ஏற்பாட்டிலும் துன்பத்தை பொறுமையாக ஏற்றவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.
திருமுழுக்கு யோவான் இயேசுவை முன்னறிவித்து, உண்மை-யை சத்தம் போட்டு உரைப்பது துன்பம் என நினைத்திருந்தால் இயேசுவை முன் அறிவித்திருக்க முடியுமா? (மத்தேயு 3)
12 வருட இரத்தப்போக்கு கொண்ட பெண்மணி, அவ்வளவு நீண்ட, அடர்த்தியான கும்பலில் நுழைந்து சென்று இயேசுவை தொடுவது கடினம் என்று நினைத்து இருந்தால் குணம் பெற்றிருக்க முடியுமா? (மாற்கு 5: 21-22)
அதுமட்டுமல்ல நம் இயேசுவே நமக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றார். "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் ஒழிய பலன் தராது" என்று கூறி துன்பங்களை முன்வந்து ஏற்றார். இதைத்தான் பவுலடியார் (1கொரி 9:16-19, 20-23) தன் திருமுகத்தில் "துன்பங்களை நாம் பொறுமையாக ஏற்பதன் விளைவாக இந்த துன்பங்களே நமக்கு பலவிதமான வரங்களை பெற்றுத்தரும் வாய்க்கால்களாக மாறும்" என்கிறார்.
இன்றைய சூழலில் நாம் துன்பங்களை ஏற்க தயாராக இருக்கின்றோமா? நம்மீது கொடுக்கப்பட்ட பொறுப்புகளை எந்த அளவுக்கு பொறுமையாக ஏற்றுக் கொண்டு சிறப்பாக செய்கிறோம். பலநேரங்களில் பலனைக்கருதி, பயனைக்கருதி சில பொறுப்புகளை தட்டிக் கழித்திருக்கிறோமா? சிந்திப்போம்.
படிக்கின்ற மாணவர்களுக்கு படிப்பு
படித்து முடித்தவர்களுக்கு வேலை தேடுவது
வேலை கிடைத்தவர்களுக்கு பொறுப்பு
சிலருக்கு வேலைப்பளு
உறவுகளில் விரிசல்
பிறர் நம்மை புரிந்து கொள்ளாத தன்மை
என எத்தனையோ சிலுவைகளை நம் அன்றாட வாழ்வில் காண்கிறோம். அத்தனையையும் நாம் எவ்வாறு கையாளுகிறோம். துன்பத்தைக் கண்டு ஒதுங்கிவிடுகிறோமா? பொறுமையுடன் அவற்றை ஏற்றுக் கொண்டு வாழ்கிறோமா? சிந்திப்போம்....
2. துன்பங்களை ஏற்றுக் கொள்ள தடையாய் இருக்கும் உலக சோதனைகள்!
உலகம் படைக்கப்பட்டவுடனேயே ஆதாமுக்கு முதல் சோதனை பெண்ணின் மூலம் வந்தது. ஆதாமின் பாவத்தால் மனித சமூகமே பாவம் என்ற பாதாளத்தில் விழுந்தது. அதனை தொடர்ந்து மனிதர்கள் அனைவரும் பணம், பதவி, செல்வாக்கு, பெண், பொன் போன்ற சோதனைகளில் தோல்விகண்டு பாவத்தை அலங்கரித்தனர். கடைசியில் நரகத்தை சிம்மாசனமாக்கிக் கொண்டனர். ஆனால் இதோ புதிய ஆதாம் “இயேசு கிறிஸ்து" தனக்கு வந்த அனைத்து சோதனைகளையும் வெற்றிக் கொண்டார். துன்பங்களை ஏற்றுக்கொள்ள தடையாய் இருக்கும் அனைத்து சோதனைகளையும் எதிர்த்து நின்று வெற்றிவாகைச் சூடி நமக்கு வாழ்வை பெற்றுத்தந்தார்.
இயேசு தன் பணியை துவங்கியபோதே இயேசுவுக்கு சாத்தான் மூலமாக சோதனை வந்துவிட்டது. மத்தேயு 4:1-11-இல் வாசிக்க கேட்பது என்ன? "கல்லை அப்பமாக மாற்று" என்பதில் உடல் சார்ந்த இச்சைகளையும், "இங்கிருந்து குதி, தூதர்கள் உன்னை காப்பார்கள்" என்பதில் புகழ் சார்ந்த சோதனைகளையும், "என்னை வணங்கு, உலகை தருவேன்" என்பதில் பதவி சார்ந்த சோதனைகளையும், இயேசு முறியடித்தார். காரணம் துன்பங்களை பொறுமையாக ஏற்றார், இதோ சோதனையின் உச்சக்கட்டமான "தன் சாவை அறிக்கையிடும்போது" தன் சீடர் பேதுரு வழியாக மிகப்பெரிய சோதனையை சந்திக்கிறார், "ஆண்டவரே இது உமக்கு வேண்டாம்! இப்படி நடக்கவே கூடாது" என்று மனித மதிப்பீடுகளில் பேசுகிறார். ஆனால் இயேசு “போ அப்பாலே சாத்தானே" என்று சொல்லி துன்பங்களை ஏற்க துணிகிறார்.
நமக்கும் பலவேளைகளில் இதுபோன்ற சோதனைகள் நம் அம்மா, அப்பா, தங்கை, அண்ணன், உறவினர்கள் மூலம் வந்திருக்கலாம். ஒரு நேர்மையான செயலை செய்ய துணியும் போதுகூட அவர்கள் “வேண்டாம் அது உனக்கு துன்பம் தரும்" என்று சொல்லி நமக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வழிகளில் பேசி நம் மனதை மாற்றி கடவுளின் திட்டத்திற்கு எதிராக செல்ல நம்மை ஊக்குவித்திருக்கலாம். ஏன் சில சமயம், நாமே நமக்கு சொல்லிக் கொண்டு, துன்பங்களை ஏற்க துணியாமல், கடவுளின் திட்டத்தையும் அவரின் கட்டளைகளையும் புறக்கணித்து, நமக்கு சாதகமான, மகிழ்ச்சிதரக் கூடிய செயல்களில் ஈடுபட்டு, "கிறிஸ்தவன், கிறிஸ்தவள்" என்ற மேலான நிலையை இழக்கிறோம்.
உலக சோதனைகளான தற்பெருமை, சுயநலம், தலைக்கணம் போன்ற சாத்தானின் சோதனைகளில் விழுந்து, துன்பங்களை நன்மைகளுக்காக ஏற்காமல், அதனை விட்டு ஓடிவருகிறோம். இதோ இயேசுவின் வழியில் நம் பயணத்தை தொடர்வோம். மகிழ்ச்சியை மட்டுமல்ல! துன்பங்களுக்கு தடையாய் இருக்கும் உலக சோதனைகளையும் எதிர்கொண்டு வாழ்வை அடைய முயல்வோம்.
3. கடவுளின் மேல் நம்பிக்கை
“என் பொருட்டு தன்னையே அழித்துக் கொள்பவர்கள் எவரும் நிலைவாழ்வை அடைவர்”
இங்கு “தன்னையே” என்பது நம் சுயநல விருப்பங்களையும் சிற்றின்ப ஆசைளையும் குறிக்கிறது. அவற்றை அழித்து வாழும் போதுதான் வாழ்வடைய முடியும் என்கிறது இன்றைய நற்செய்தி! கடவுள் மேல் உள்ள நம்பிக்கையால் தான் நாம் சோதனைகளை கடந்து, சுயநல, போட்டி மனப்பான்மையை களைந்து, அவரை சென்றடைய முடியும். கடவுளின் பொருட்டு, அவரின் திட்டத்தை முன்னிட்டு நாம் பெரும் துன்பங்கள் எல்லாம் வரங்கள். நாம் ஒதுக்கும் ஒவ்வொரு துன்பங்களும் கடவுளின் வரங்கள் என்பதை நாம் என்றும் மறவாதிருக்க வேண்டும். அவற்றை பொறுமையாக ஏற்றுக் கொள்ள கடவுளின் துணை நிச்சயம் வேண்டும். தூய லொயோலா இஞ்ஞாசியார் அழகாக சொல்லுவார்:
"காரியங்கள் எவ்வளவு நம்பிக்கையற்றதாக தோன்றுமோ அவ்வளவு அதிகமாக கடவுளின் மேல் நம்பிக்கை கொள்ளவேண்டும். மனித உதவி நம்மை கைவிடும்போது கடவுளின் உதவி நமக்கு அருகிலுள்ளது”. இவ்வுலகில் நம் துன்பங்களில் ஆறுதல் சொல்ல பலர் இருக்கிறார்கள். ஆனால் அரவணைத்து நம்மையே சுமந்து செல்ல கடவுள் மட்டும்தான் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே துன்பங்களை பொறுமையாக ஏற்று, அதற்கு தடையாய் வரும் உலக சோதனைகளை நீக்கி, கடவுள் மீது நம்பிக்கைக் கொண்டவர்களாய் வாழ்ந்து அவரின் திட்டத்திற்கென தன்னையே அர்ப்பணித்து வாழும் வாழ்வை தேட முயலுவோம்.
துன்பம் ஏற்போம், கடவுளின் திட்டத்தால் மறுவாழ்வை பெறுவோம். இதைத்தான் யோபு புத்தகத்தில் யோபு மிக அழகாக சொல்லுவார், "கடவுளிடத்தில் இன்பங்களையும் வரங்களையும் பெற்ற நாம், ஏன் சில துன்பங்களை பெற கூடாது", என 7:1-14-இல் அழகாக கூறுகிறார். துன்பத்தை பொறுமையாக ஏற்று கொள்ள
கூடிய துணிவு வேண்டி இத்திருப்பலியில் பக்தியுடன் மன்றாடுவோம். "துன்பங்கள் ஒவ்வொன்றும் இறைவனின் வரங்கள்”.
பிற மறையுரை கருத்துக்கள்
குறைகள் இல்லா மனிதர்கள் இல்லையோ, அவ்வாறே துன்பங்கள் இல்லா மனித வாழ்வும் இல்லை. மனிதனுக்கு இன்பம் எவ்வளவு அவசியமோ, அப்படியே துன்பமும் அவசியம். ஏனெனில்:
1. துன்பம் மனிதனை தனது இயலாமையை உணரச் செல்கிறது.
2. துன்பம் மனிதனை இறைவனை தேடச் செய்கிறது.
3. துன்பம் மனிதனை தூய்மை படுத்தி முதிர்ச்சி அடைய செய்கின்றது.
4. துன்பம் மனிதர்க்கு இவ்வுலகம் சத்திரம் என்றும் வானகம் மட்டும் வீடு என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
⇛துன்பம் மனிதனுக்கு கடவுளின் இரக்கத்தையும் மன்னிப்பையும் பெற்று தரும் அருட்சாதனமாகும்.
⇛துன்பம் "மனிதன் விண்ணகம் நோக்கி கடந்து செல்லும் திருப்பயணி" என்பதை நினைவுக்கின்றது.
⇛உண்மையான துன்பத்தில்தான் மனிதனில் வெளிப்படும் புனிதம் அடங்கியுள்ளது.
⇛துன்பம் மனிதனுக்கு கடவுளின் திருவுளத்தை வெளிப்படுத்தும் கண்ணாடியாக அமைந்துள்ளது.
பொதுக் காலம் இருபத்திரெண்டாம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி கடந்த வாரத்தினுடைய தொடர்ச்சி. கடந்த வாரம் இயேசுவின் மெசியாத் தன்மை அறிக்கை இடப் பட்டது. அதற்காக பேதுரு புகழப்பட்டார். அந்த மெசியாத் தன்மை எதில் அடங்கியிருக்கிறது? அல்லது இயேசு எப்படிப் பட்ட மெசியா என்பதை இன்றைய நற்செய்தி விளக்குகின்றது. மேலும் இன்றைய நற்செய்தி இயேசுவின் பாடுகளுக்கும், அவரைப் பின்பற்றும் சீடர்கள் ஏற்க வேண்டிய சிலுவைக்கும் உள்ள தொடர்பையும் விளக்குகின்றது. இன்றைய நற்செய்தி தரும் இறை யியல் உண்மைகளையும் சீடத்துவ வாழ்வுக்குத் தரும் சவால் களையும் இங்கு காண்போம்.
1. துன்புறும் மெசியா
கடந்த வாரம் இயேசு தாம் யார் என்று சீடர்களிடம் கேட்டதற்கு அவர் 'மெசியா', என்றும் 'வாழும் கடவுளின் மகன்' என்றும் கூறி பேதுரு இயேசுவிடம் பாராட்டைபெற்றார். அவரை திருஅவையின் தலைவராகவும் இயேசு ஆக்கினார். ஆனால் இன்று அந்த மெசியா தன்மை எதில் அடங்கியுள்ளது? அல்லது மெசியாவின் பண்பு நலன் என்ன? அல்லது மெசியாவின் முக்கிய பரிமாணம் என்ன? என்பனவற்றை விளக்க இயேசு முயல்கின்றார்.
இறைவாக்கினர் காலம் தொட்டு இயேசுவின் காலம் வரை மெசியா என்பவர் பேரரசர் தாவீதின் வழியிலே, குலமுதுவர் ஆபிரகாம்வழியிலே(மத்1:1)வருவார்.அவரும்ஓர்அரசராகஅதிகார பலம் கொண்டவராக இருப்பார் என எண்ணினர். அதனால்தான் “யூதர்களின் அரசர் எங்கே பிறந்திருக்கிறார்?” என ஞானியர் கேட்டபோது (மத் 2:2) 'மெசியா எங்கே பிறப்பார்?' என ஏரோது தேடச் சொல்கின்றார் (மத் 2:4). இக்குழந்தையின் பிறப்புப் பற்றிகேட்டு கலங்குகிறான், கொன்றுவிடத் துணிகின்றான். ஆனால் இயேசு தம்மை அத்தகைய ஒரு மெசியாவாகக் காணவில்லை. மாறாக துன்பப்பட்டு, கொலைச் செய்யப்பட்டு உயிர்த்தெழும் மெசியாவாக தம்மைக் கண்டார். இத்தகைய பாடுகள், மரணம், உயிர்ப்பிலேதான் அவரது மெசியாத் தன்மை அடங்கியுள்ளது. இதைத்தான் இயேசு எம்மாவு சீடர்களுக்கும் “மெசியா தாம் மாட்சி அடைவதற்கு முன் இத்துன்பங்களைப்பட வேண்டு மல்லவா?" (லூக் 24:26) என்று விளக்குகின்றார். எனவே, கிறிஸ்தி யலில் மிக முக்கியமான ஓர் உண்மை 'இயேசு பாடுகள் வழி மெசியாவாகின்றார்' என்பதுதான். அதை இன்றைய நற்செய்தி விளக்குகின்றது.
2. திருஅவைக்கு வரும் சோதனை
இத்தகைய மெசியா பற்றிய ஒரு கருத்தியல் எல்லாருக்கும் ஏற்புடையது அல்ல; அது விந்தையானதும் அல்ல. ஆனால் இயேசுவின் இந்தக் கருத்து தலைமைத் திருத்தூதரான பேதுருவுக்கு ஏற்புடையதாக இல்லாமல் போனதுதான் ஆச்சரியம். அவர் இயேசுவிடம் “ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது" என்று (வச. 22) தடுக்கப் பார்க்கிறார். இயேசு துன்பப்படுவது அவருக்கு ஏற்புடையதாக இல்லை. இயேசு, மாட்சியின் மெசியாவாக மட்டும் இருந்துவிட வேண்டும் என்று பேதுரு ஆசைப்படுகின்றார். இதுதான் திருஅவையின் தலை வருக்கும், திருஅவைக்கும் அவ்வப்போது வரும் சோதனை. இயேசுவை துன்பப்படாத, மாட்சியின் மன்னராக மட்டும் பார்க்கவும், திருஅவையை அதிகாரங்கள், செல்வங்கள் கொண்ட ஓர் இடமாகவும், நிறுவனமாகவும் மட்டும் பார்க்கின்ற ஒரு சோதனை. இந்தச் சோதனையை பேதுரு முன்மொழிந்ததால் அவரை இயேசு 'சாத்தானே' என்றுகூட அழைக்கத் துணிந்தார்.
இன்றையத் திருஅவையின் மக்களுக்கும், ஏன் தலைவர் களுக்கும் இத்தகையசோதனை இல்லாமல்இல்லை.ஆனால் இயேசு அதைத் தடையாக பார்க்கின்றார் (வச. 23). மனிதருக்கு ஏற்றபடி எண்ணுவதாக நினைக்கின்றார் (வச. 23). எனவே, “பேறு பெற்றவர்” எனப் பாராட்டப்பட்டவர் (வச. 17), "கண்முன் நில்லாதே” என விரட்டப்படுகிறார் (வச. 23). 'பாறை' எனப் பெயரிடப் பட்டு அதன்மீது திருஅவை அடித்தளமிடப்பட்டவர் (வச. 18), தடைக்கல்லாக (வச. 23) மாறிப்போகின்றார். எனவே இன்றைய கிறிஸ்தவர்களுக்கும், அதன் தலைவர்களுக்கும் இத்தகைய சோதனை, அதாவது துன்பமில்லாமல் மாட்சியும், அதிகாரமும் மட்டுமே கிடைக்க வேண்டும் என்னும் சோதனை, வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.
3. இயேசு விரும்பும் சீடத்துவம்
இந்த நிகழ்ச்சி வழியாக இயேசு தாம் விரும்பும் சீடத்துவ வாழ்வு என்ன என்பதையும் தெள்ளத் தெளிவாக விளக்கிவிடு கின்றார்.தாம் மெசியாவாக வேண்டும் என்றால் அது துன்பத்தால் மட்டுமே முடியும் என தம் பாடுகளை முன்மொழிந்து விளக்கிய இயேசு, தமக்கு சீடனாயிருப்பவருக்கும், சீடனாக மாற விரும்பு பவருக்கும் அதே பாடுகளை நீட்டிப்பு செய்கின்றார். அவரது சீடர்களும் தன்னலம் துறந்து, தங்களின் சிலுவையைத் தூக்கிக் கொண்டு இயேசுவைப் பின்பற்ற வேண்டும் எனத் தெளிவாக்கு கின்றார். எனவே, உண்மையான சீடத்துவம் துன்பங்களையும், சிலுவையின் பாடுகளையும் உள்ளடக்கியது. இவை இல்லாமல் கிறிஸ்தவனுக்கு சீடத்துவம் என்று ஒன்று இல்லை.
இயேசு சீடத்துவ வாழ்வின் இன்னொரு பரிமாணத்தையும் தெளிவுபடுத்துகின்றார். பழைய கத்தோலிக்க மொழிபெயர்ப்பு (பரிசுத்த வேதகாமம்) 23 ஆம் வசனத்தை “போ பின்னாலே, சாத்தானே” என மொழிபெயர்த்திருக்கும். அதுதான் சரியான மொழிபெயர்ப்பாகும். ஏனெனில் சீடன் என்பவன் தலைவருக்கு, குருவுக்குப் பின்னால் வரவேண்டியவன். தலைவரின் அடியொற்றி வரவேண்டியவன்.அதுதான் அவனுக்கு உரிய இடம்."என் பின்னே வாருங்கள்" (மாற் 1:17) என்று கூறித்தான் இயேசு அவர்களை அழைத்தார். ஆனால் இப்போது பேதுரு இயேசுவுக்குப் பின்னால் நடந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொள்வதற்குப் பதிலாக அவருக்கு முன்னால் சென்று தன்னுடைய கருத்தை இயேசுவுக்குச் சொல்லி அதை இயேசு ஏற்றுக்கொள்ள வேண்டும், செய்ய வேண்டும் என்று அவர்மீது திணிக்கப் பார்க்கின்றார். இயேசு பேதுருவை இதற்காகக் கடிந்து கொள்கிறார். அவர் இருக்க வேண்டிய இடத்திற்கு அவரை அனுப்புகின்றார்.
இத்தகைய ஓர் அபாயம் இன்றையத் திருஅவைக்கும், திரு அவை தலைவர்களுக்கும் ஏற்படலாம். அதாவது திருஅவையும், அதன் தலைவர்களும் இயேசுவின் பின்னால் நடந்து அவர் சொல்வதைக் கேட்டு அவர் எதிர்பார்ப்பது போல் வாழாமல் தங்களின் விருப்பத்தையும், கருத்தையும் இயேசுவின் கருத்துகளாக கூறி, தங்களை இயேசுவைவிட உயர்ந்தவர்களாக காட்டி இயேசுவுக்கு முன்னே நடக்கிற அபாயம் எழலாம். இதைத்தவிர்த்து இயேசுவின் பின் நடந்து, பாடுகளையும், சிலுவையினையும் ஏற்றுக் கொள்ளும்போதுதான் நாம் இயேசுவின் உண்மைச் சீடர் களாவோம். அத்தகையவர்களுக்கு அவரது மாட்சியில் இடம் கிடைக்கும் (வச. 27).
பொதுக்காலம் - இருபத்திரண்டாம் ஞாயிறு முதல் ஆண்டு
முதல் வாசகம்: எரே. 20 : 7-9
எரேமியா கி.மு. ஆறாம் நூற்றாண்டில் எருசலேமில் இறைவாக்குப் பணி செய்தார். இஸ்ரயேல் இனம் உடன்படிக்கையை மீறியதால் பாபிலோனிய வல்லரசின் அடிமையாகும் என்ற கசப்பான உண்மையை அறிவித்தார். மக்கள் மனம் மாறாவிட்டால், இஸ்ரயேல் இனம் மட்கலம் போல் உடைந்து விடும் என்ற உண்மையை ஓர் அடையாளச் செயலால் அறிவித்தார் (காண் 19:11). இந்த அபசகுனச் சொற்களைப் பொறாத கோயில் தலைவனான பஸ்கூர் எரேமியாவை அடித்துச் சிறையில் தள்ளினான். இப்பின்னணியில் தான் அவர் தனது உள்ளத்து உணர்ச்சிகளைக் கொட்டுகிறார்.
அழைப்பு
நித்தியத்திற்கும் தெரிந்து கொள்ளப்பட்டவர் எரேமியா.
“தாயின் வயிற்றில் நான் உன்னை உருவாக்கு முன்பே
நான் உன்னை அறிந்திருந்தேன்;
நீ பிறக்கு முன்பே உன்னைத்
திருநிலைப்படுத்தினேன்.
மக்களினத்திற்கு இறைவாக்கினராக
உன்னை ஏற்படுத்தினேன்" (1:5)
அழைப்பை ஏற்பதிலே எரேமியா தடுமாறியதை அறிந்த இறைவன் தன் கையை நீட்டி அவரது வாயைத் தொட்டு அவரை வலுப்படுத்தினார். கடவுளின் கட்டளைப்படி அவரது போதனை கடுமையாகவே இருந்தது. தம் மக்களுக்காக அனுதாபப்படாது இருக்கவும் முடியவில்லை. அதே வேளையில் ஆண்டவரின் எச்சரிக்கையை எடுத்துரைக்காதும் இருக்க முடியவில்லை. ஆண்டவரின் பணி எளியது, இனியது, அவர் தனக்குத் துணை நிற்பார் என்று அழைப்பை ஏற்ற அவருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. இறைவனும் தன்னைக் கைவிட்டதாகவே உணர்கிறார்.
“உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும்
தீ போல் இருக்கிறது. அது என் எலும்புகளுக்குள்
அடைபட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கி
வைத்துச் சோர்ந்து போனேன். இனி
என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது" (10)
உள்ளத்தில் பயமும், உடல் வேதனையும் ஒருங்கிணைந்து அவரை வாட்டிய பொழுது, தான் இறைவனாலேயே வஞ்சிக்கப்பட்டுவிட்டதாக, இறைவன் தன்னை மயக்கிவிட்டதாக எண்ணுகிறார். அவரை நம்பியதால் தான் நகைப்புக்கு உள்ளாகியதாக மனம் வெதும்புகிறார். ஒவ்வொருவரின் அழைத்தலிலும் சில வேளைகளில் ஏற்படும் சோர்வை, அதன் பயனாக ஏற்படும் ஏமாற்றத்தை, வாழ்வு வீணாகி விட்டதோ என்ற பயத்தை, எரேமியா வாழ்விலும் காண்கிறோம். எனினும் இறைவன் நல்லவர்-எவரையும் ஏமாற்றாதவர் என்ற நம்பிக்கை ஒளி அவரது வாழ்வில் இடம் பெறுவதையும் காண்கிறோம்
.
“வாடும் முகம் கண்டு என்னை வாடாமலே காத்த
நீடும் கருணை நிறைவே, பாராபரமே" (தாயுமானவர்)
துறவற-கிறிஸ்தவ அழைப்பில் சோர்வும் தொய்வும் ஏற்படும் பொழுது இறைவனிடம் சரண் அடைந்து குழந்தை போல் குமுறி அழுகின்றேனா?
எரேமியாவின் மனவலிமை
“பிடுங்கவும் தகர்க்கவும்
அழிக்கவும் கவிழ்க்கவும்
கட்டவும் நடவும்" (1:10)
இறைவனால் ஏற்படுத்தப்பட்டவர் எரேமியா. இவர் இறைப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட நல்ல மனிதர். நாட்டவரின் நன்மை கருதி அவர்களை எச்சரித்ததால் இவருக்குத் துரோகிப் பட்டம் சூட்டினர் மக்கள். இறைவாக்கினர்களில் இயேசுவின் பாடுகளைப் பெரிதும் பிரதிபலித்தவர் எரேமியா. தம் இனத்தவர் மீது அன்பு கொண்டு, அவர்களுக்காகக் கண்ணீர் சிந்தி, அவர்களின் போக்கைக் கண்டித்து, அவர்கள் மனம் மாறாவிட்டால் விண்ணரசில் நுழைய முடியாதென எச்சரித்து, தான் மக்களை மீட்க வந்த மெசியா- தெய்வத் திருமகன் என்று அறிமுகப்படுத்தி, உண்மைக்குச் சான்று பகர்ந்து அதற்காகத் தன் உயிரையே பலியாக்கிய இயேசுவின் முன் அடையாளம் எரேமியா. நாமும் திருமுழுக்கால் இயேசுவின் இறைவாக்குப் பணியிலே பங்கு பெற்றுள்ளோம். அஞ்சா நெஞ்சுடன் உண்மைக்குச் சான்று பகர்வோமா?
ஆண்டவரே நீர் என்னை மயக்கிவிட்டீர். நானும் மயங்கிப் போனேன்.
இரண்டாம் வாசகம் : உரோ. 12:1-12
பவுல் தன் திருமுகங்களின் முதற்பகுதியில் வழக்கமாக கிறிஸ்தவ மறைக் கோட்பாடுகளை விளக்குவார். இறுதிப் பகுதியில் இம்மறையுண்மைகளின் அடிப்படையில் கிறிஸ்தவன் வாழ வேண்டிய நெறி முறையைக் குறிப்பிடுவார். இன்றைய வாசகத்தில் பலியான கிறிஸ்துவைப் பின்பற்றி ஒவ்வொரு கிறிஸ்தவனும் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பலிப் பொருளாகக் பரிசுத்த வாழ்வு வாழப் பணிக்கிறார்.
ஆன்மீக வழிபாடு
மனிதன் வெறும் உடலுமன்று; அரூபியான ஆன்மாவுமன்று. உடல்-ஆன்மாவின் இணைப்பே முழு ஆள். முழுமனிதனும் இறைவனுக்கு அர்ப்பணமாக்கப்பட்டு மீட்புப் பெற வேண்டும். இறைவனை அடைய உடல் ஒரு தடை என்பது தவறான போதனை. இதே உடல் இறைவனுக்கு ஏற்ற அர்ப்பணமாக - இறைவனுக்கு உகந்த பலியாக-மாறும் தகுதியுடையது. நம்மையே பலியாக்கக்கூடாத நிலையில் நமது அன்பைச் சுமந்து செல்லும் தூதுப் பொருள்களாக-பலிப் பொருட்களாக காணிக்கைப் பொருட்களை கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றோம். தூப ஆராதனையும் விலங்குகளின் இரத்தமும் இறைவனுக்கு ஏற்ற பலியாக வேண்டுமானால், உள்ளம் தூயதாய் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் தான் காயீனின் பலி நிராகரிக்கப்பட்டது; ஆபேலின் பலி ஏற்றுக்கொள்ளப்பட்டது. பலியிடப்பட்ட பொருள்களைப் பகிர்ந்து உண்ணும்பொழுது இறைவனுடன் தொடர்பு கொள்வதாக மனிதன் உணர்கிறான் (காண் விப. 24:1-11) நாளடைவில் இப்பலிகள் வெறும் சடங்காகி, மூட நம்பிக்கைக்கும் வித்திட்டன. இத்தகைய பலி முறைகளை இறைவன் வெறுக்கிறார். ஆனால் உள்ளம் ஒன்றிய அகநிலைப் பலியை, ஆன்மீக வழிபாட்டை அவர் விரும்பி ஏற்கிறார். “கடவுளுக்கு நன்றிப்பலி செலுத்துங்கள்; உன்னதர்க்கு உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள்" (காண் தி.பா. 50:8-14).
காயும் கனியும், பாலும் பழரசமும், ஆடுமாடுகளின் இரத்தமும் ஆண்டவருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட நிலையை மாற்றி, தன்னையே தகன பலியாக இயேசு ஒப்புக்கொடுத்தார். பிறப்பு முதல் இறப்பு வரை அவர் பலிவாழ்வு வாழ்ந்தார். இவரே நமது தலைமைக் குரு. திருமுழுக்கில் அவருடன் இணைந்த நாம் அனைவரும் அவரது குருகுலத்தைச் சார்ந்தவரானோம். எனவே நம் உடலால் செய்யும் ஒவ்வொரு செயலும், நம் உள்ளத்துடன் இணைந்து இறைவனுக்கு உகந்த பலியாக வேண்டும். நாம் எந்நிலையில் இருந்தாலும், எப்பணி புரிந்தாலும்-வாழ்க்கைப் பிரச்சனையில் ஏற்படும் கவலை, கண்ணீர் என்ற அனைத்தையும் இறைவனுக்கு உகந்த பலியாக மாற்ற வேண்டும். “இறைவனோடு புனித ஐக்கியத்தில் ஒன்றிக்கும் நோக்குடன் செய்யப்படும் ஒவ்வொரு செயலுமே உண்மையான பலியாகும்" என்பது அகஸ்தீனாரின் கூற்று.
பலி வாழ்வு பாவ வாழ்வுக்கு முரணானது
மண்ணும் விண்ணும் கிறிஸ்துவில் இணைந்துவிட்டன. இம்மண்ணுலகில் நாம் கிறிஸ்துவில் தொடங்கியுள்ள வாழ்வு விண்ணிலே மலரும்; முழுமை பெறும். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் ஏற்கனவே புதிய யுகத்தில் -புதியவானம்-புதிய பூமியில்-அடியெடுத்து வைத்துள்ளனர். எனவே பழைய யுகம் பயன்படுத்திய அளவு கோல்களை அகற்றி, கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் அனைத்தையும் எடை போட வேண்டும். 'பிற இனத்தவர் வாழ்வதுபோல இனி நீங்கள் வாழக் கூடாது. அவர்களது மனம் இருளடைந்திருக்கிறது. அவர்கள் உள்ளம் மரத்துப்போய்ப் பேராசை கொண்டு, ஒழுக்கக் கேடான செயல்களில் எல்லாம் ஈடுபட்டுத் தங்களைக் காமவெறிக்கும் உட்படுத்தினார்கள். ஆனால் நீங்கள் கிறிஸ்துவைக் பற்றிக் கற்றறிந்தது இதுவல்ல. எனவே, உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றி, தீய நாட்டங்களால் எமாந்து அழிவுறும் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிடுங்கள். உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்படவேண்டும்" (எபே. 4: 17-24).
புதுப்பித்தலின் அடிப்படையே உள் மனமாற்றந்தான். இறைவனுக்கு ஆன்மீக வழிபாடு செய்ய விரும்புபவன் பழைய பாவ வாழ்வை உதறித் தள்ளிவிட்டு, புது வாழ்வில் புகுந்திடத் தயாராயிருக்க வேண்டும். இதுவே பலி வாழ்வு; பயனுள்ள வாழ்வு.
உங்கள் உடலைக் கடவுளுக்கு உகந்த பரிசுத்த பலியாகவும், உயிருள்ள பலியாகவும் ஒப்புக் கொடுங்கள்.
நற்செய்தி: மத். 16:21-27
தலைவனைப் பின்பற்ற வேண்டியது சீடனின் கடன். தம்முடைய சீடர்களாவதற்குச் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி இன்றைய வாசகம் வழி இயேசு அறிவுறுத்துகிறார். சீடத்துவத்தின் குணநலன்கள் பற்றிக் கூறும் இவ்வாசகம் நமக்கே கூறப்பட்டது.
எதிர்மறை வழக்கில் சீடத்துவம்
சீடனிடம் இருக்கக் கூடாத குணங்கள் யாவை? "நான், எனது, எனக்கு" என்ற சுய பற்று கூடாது. எனவே கிறிஸ்துவின் சீடன் தன்னையே மறுக்க வேண்டும் (16:24). தன்முனைப்பு, பேராசை, ஆணவம், மண், பெண், பொன் இவையெல்லாம் இந்தத் “தன்னையே மறுத்தலில்” அடங்கும். "பொன்னை மாதரை பூமியை நாடிடேன்" என்பது ஒருபுறம்! "ஆனை வெம்போரிற் குறுந்தூரெனப் புலனால் அலைப்புண்டேனை எந்தாய் விட்டிடுதி கண்டாய்" (திருவா) என்பது மற்றொரு புறம் என்ற முறையிலே பொருளாசையை மறுக்க வேண்டும், புலனாசைகளையும் மறுக்க வேண்டும். இதுவே சீடத்துவத்தின் முதற்படி. “மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” (லூக். 9 : 58) என்பது சீடனுக்கும் பொருந்தி அமைய வேண்டும்.
அடுத்து, தலைவன் பொருட்டுத் தன் உயிரையே இழக்கத் தயாராயிருப்பதும் சீடனின் கடன் (16:25). "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" (யோ. 15:13) என்று அன்புக்கு இலக்கணம் வகுத்திருக்கிறார் இயேசு. அவ்விலக் கணத்திற்கேற்ற இலக்கியமாய் அமைவது அவர் வாழ்வு. சீடர்களாகிய நாமும் நமது உயிரைத் துச்சமெனக் கருதி, அவருக்காக, அவர் மதிப்பீடுகளுக்காக நம்மையே, நமது தேவைகளையே, நமது உரிமைகளையே இழக்கத் தயாராக வேண்டும். அன்பர் பணியினிலே உடைமைகளை இழப்போம்; உயிரையும் இழக்கத் தயாராவோம்.
நேர்முக மரபில் சீடத்துவம்
சீடனிடம் இருக்கவேண்டிய குணநலன்கள் யாவை? இயேசு எவ்வழி நாமும் அவ்வழி. துன்ப துயரங்களை, சிலுவையை ஏற்றார் இயேசு. அவரோடு சேர்ந்து நாமும் நமக்கு வரும் இன்னல் இடைஞ்சல்களை ஏற்போம். சிலுவையின்றி வாழ்வு கிடையாது என்பதை உணர்வோம். சீரேனே ஊர்ச் சீமோன் போன்று இயேசுவுக்குப் பின் நமது சிலுவைகளைச் சுமந்து செல்வோம் (லூக். 23: 26).
“வலிமையற்ற தோளினாய் போ போ போ;
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா” (பாரதி) என்போம்.
இயேசுவைப் பின்பற்றி நடப்பதென்பது அவரது மதிப்பீடுகளின்படி வாழ்வதாகும். அவர் மதிப்பீடுகளின் மகுடமாக விளங்குவது அவரது அன்புக் கட்டளை. "நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்" (யோ. 13 : 15). "நீங்கள் ஒருவர் ஒருவரிடம் அன்புகூர வேண்டும் என்பதே எனது கட்டளை" ( 15:17; 13:34; 1யோ 3:23). இயேசுவைப் பின் செல்வது மட்டுமன்று; பின் தொடரவேண்டும் என்பதால் இவ்அன்புக் கட்டளை நமது அன்றாட நினைவு சொல் செயல்கள் வழி தொடர்ந்து வெளிப்பட வேண்டும் என்பது புலன் ஆகின்றது.
“சித்தமே புகுந்து எம்மை ஆட்கொண்டு, தீவினை கெடுத்து உய்யலாம்
பத்தி தந்து தன் பொற்கழற்கணே... வைத்திடும்
அத்தன் மாமலர்ச் சேவடிக்கண் நம் சென்னிமன்னி மலருமே" (திருவா).
தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவர் அதை இழப்பார்.
Jer 20:7-9. Jeremiah is duped by the Lord, he says, yet must continue to cry out the prophetic message of violence and outrage.
Rom 12:1-2. Offer your bodies as a living sacrifice, holy and acceptable to God.
Matt 16:21-27. Not only must the Son of Man suffer greatly, but so must his disciples take up their cross and follow in his footsteps. Whoever saves their life will lose it; whoever loses their life for Jesus' sake will find it.
The three biblical readings overlap in various ways. At the center of this crisscrossing is our human body which we offer "as a living sacrifice holy and acceptable to God, your spiritual worship." Jeremiah and Peter felt the common, hu-man urge to argue with God. And later in the gospel Jesus' full humanity becomes apparent when Jesus is tempted and bargains with God the Father in the Garden of Gethsemani (Matt 26:36-46). Therefore, the Epistle to the Hebrews writes that "we do not have a high priest unable to sympa-thize with our weakness, but one who was tempted in every way that we are, yet never sinned" (Heb 4:15). Today then is our day of arguing with God.
The reading from the prophecy of Jeremiah allows us to glimpse into the private soul of this extraordinarily human person. The selection is drawn from what is often called the "Confessions of Jeremiah." According to one, solid opin-ion, an editor discovered the prayer journal of Jeremiah only after completely editing the prophecy. Selections from the prayer journal were then spliced into the book.
In the Confessions Jeremiah speaks honestly, even bluntly with God. At times the language hardly seems ortho-dox, yet the words belong to the inspired text of the Bible. Jeremiah here excoriates God, crying out with tears, almost, it seems, writing with his own blood:
You duped me, O Lord, and I let myself be duped;
you were too strong for me, and you triumphed.
The vocabulary is particularly striking in the Hebrew lan-guage. Jeremiah evokes the sexual language of seduction ("you duped me") and of rape ("you were too strong," or literally, "you overpowered me"). Jeremiah surrendered himself at an early age to God's prophetic call, followed God's will conscientiously and ends up a seeming failure or, as he writes here, an object of laughter."
Jeremiah, moreover, at once corrects the excesses of his language. Even where he decides: "I will not mention the Lord and I will speak no more in his name," still the bur-den "becomes like fire burning in my heart, imprisoned in my bones." Jeremiah cannot remain silent, despite the suf-fering and frustration.
The Confessions reveal the soul of Jeremiah to us, and in their unorthodox language they reveal the most orthodox holiness of a human being-like Jesus' behavior in the Gar-den of Gethsemani. The Bible presents us with the way to-wards holiness, and it leaves to the mysterious realm of heaven the final stage of sanctity. Like Israel in the wilder-ness, arguing with God is one of the earlier stages of the way.
Jesus was tempted, as mentioned already, in the Gar-den of Gethsemani. It is possible that today's episode con-tains another temptation. If Jesus turned on Peter and excoriated him, Jesus must have had to summon every bit of energy to get the temptation at a safe distance:
Out of my sight, you satan! You are trying to make me trip and fall.
This is the language of temptation and struggle, of fear and difficulty.
Jesus then explains further the way of the cross. There is no other way to eternal life, than to lose one's life. We can give nothing adequate in exchange for our very selves; we must give ourselves! What we selfishly hold on to, we lose; what we give away, we preserve. Nothing will last unless it is found in the hands of God. The way of the cross leads to a resurrection by which God's merciful and omnipotent arms lift us out of death and we find our full life in God's hands.
The footsteps along the way of the cross, like the agony of the heart, enable us "to offer your bodies as a living sacrifice holy and acceptable to God, your spiritual worship." Everything which we experience or endure with our bodies is hereby declared "a living sacrifice holy and acceptable to God."
Israelite sacrifice did not concentrate upon death but upon life. Blood indicates a flow of life between God and ourselves, and so our bodily sacrifice becomes a "spiritual worship," transformed by the life of God within us. For this reason we are able to "judge what is God's will, what is good, pleasing and perfect." We have been "transformed by the renewal of your mind." Therefore, even when we are arguing with and against God, even when the most humili-ating temptations plague us, also at those times of feeling betrayed by God, a laughing stock to others, perhaps the most humiliating moment for a sincerely religious person, at all these times we are fully alive in God, humanly through "your bodies... a living sacrifice holy and acceptable."
Temptation, through God's help, need not overcome us. But even if it does and like Peter we are reprimanded by the Lord, nonetheless, we will still sense the "fire burning in my heart, imprisoned in my bones." Like Jeremiah we will cry out defiantly to the evil one, passionately to those who may mock us, faithfully to our God:
I grew weary holding it in,
I cannot endure it.
Even if Jeremiah ever declared "cursed... the day on which I was born" (Jer 20:14), nonetheless he persevered to the end and becomes one of the most notable images of Je-sus in the Old Testament. In the gospel episode right before today's reading, we are told that some people thought that Jesus was the reincarnation of Jeremiah (Matt 16:14). The one most tempted becomes the one most conformed to Jesus!
Prayer:
Lord, your love which created us is an eternal love. Life, which is not our own, is leading us far beyond our un-derstanding. Do not forsake us, the work of your hands, for only you can complete this work as we struggle with our temptations and hopes.