இயேசு எனக்கு யார்?
நிகழ்ச்சி
பல ஆண்டுகளாக ஒருவர் மேஸ்திரியாக ஒரு காண்ட்ராக்டரிடம் வேலை செய்து வந்தான். அவரின் செயல்பாடுகள், நேர்மைக் குணம் முதலாளிக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மேஸ்திரி முதலாளியிடம் சென்று, “ஐயா! நான் அடுத்த மாதத்திலிருந்து வேலையைவிட்டு நின்றுவிடலாம் என நினைக்கிறேன்” என்றான். முதலாளி கோபமாக, "இப்படி திடீரெனச் சொன்னால் எப்படி? இன்னும் ஆறு மாதங்கள் நீ என்னிடம் வேலை செய்துதான் ஆக வேண்டும்” என்றார். “உன் குடிசைக்கு எதிரே உள்ள பாறை மீது ஒரு நவீன மாடலில் ஒரு வீடு கட்ட வேண்டும். அதை முடித்துவிட்டு வேலையிலிருந்து நீ நின்றுகொள்” என்றார். சரி என்று சொல்லி ஆறு மாதத்திற்குள் பாறைமீது அழகான ஒரு வீட்டைக் கட்டி முடித்துக் கொடுத்தார் அந்த மேஸ்திரி. அப்போது முதலாளி அந்த மேஸ்திரியைப் பார்த்து, நீ பல ஆண்டுகளாக என்னிடம் வேலை செய்தவர். சில நேரங்களில் உனக்கு என் மீது நம்பிக்கை இல்லாமல் போயிற்று. பல சமயங்களில் என்னை நீ சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. இருப்பினும் இத்தனை ஆண்டுகள் என்னைவிட்டுப் பிரியாமல், பலவிதமான துன்பங்களோடு என்னோடு இருந்து, எனக்கு ஆறுதல் தந்தாய். காலப்போக்கில் மனதளவில் நீ என்னை மற்றவர்களைவிட நன்கு புரிந்துகொண்டாய். அதற்கு வெகுமதியாக உனக்கு நான் பரிசு கொடுக்க வேண்டும். அதனால் பாறைமீது நீ கட்டிய வீட்டை உனக்கே பரிசாகத் தருகிறேன் என்று கூறி, புதிய வீட்டுச் சாவியை அந்த மேஸ்திரியிடம் கொடுத்தார் அந்த முதலாளி.
ஆண்டவர் இயேசுவும் தனது மேஸ்திரியாக இருந்த பேதுருவையும் இவ்வாறுதான் எடைபோட்டார். எனவே உன் பெயர் பாறை, இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். விண்ணகத்தின் திறவுகோல்களை உனக்குத் தருவேன் (மத். 16:18) என்று கூறி அதிகாரத்தின் சாவியை புனித பேதுருவிடம் ஆண்டவர் இயேசு ஒப்படைக்கின்றார். ஏனெனில் தொடக்கத்தில் இயேசுவை அறிவுப்பூர்வமாகப் புரிந்து கொண்ட பேதுரு, காலப்போக்கில் அனுபவத்தின் வழியாக, இதயப்பூர்வமாக உணர்ந்து கொண்டார். எனவேதான் நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் (மத். 16:17) என்று வெளிப்படுத்தினார்.
அன்பார்ந்தவர்களே! மூன்று ஆண்டுகளாகத் தன்னோடு இருந்து, உண்டு, உறங்கி சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து, தான் செய்த வல்ல செயல்களையெல்லாம் கண்ணாரக் கண்ட தன் சீடர்களை நோக்கி, இயேசு ஒரு கேள்வி எழுப்புகிறார். மனுமகனை மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள்? நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் (மத். 16:14-15) என்றும் கேட்கிறார். ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறார் ? இதுவரைப் பின்தொடர்ந்த மக்கள் பலர் இயேசுவில் விசுவாசமிழந்தனர். உற்றார், உறவினர் அவர்மேல் இடறல் பட்டனர். சீடர் பலர் இயேசு தன் உடலை உணவாகத் தருவேன் என்றவுடனும் நெருக்கடி நிலை ஏற்பட்டவுடனும் அவரைவிட்டுப் பிரிந்து சென்றனர். இந்த சூழலில் தந்தையாகிய இறைவன் இவ்வுலகிற்கு இயேசுவை எதற்காக அனுப்பினார் என்பதை மக்கள் புரிந்துகொண்டனரா , அந்தப் பணியை இந்தச் சீடர்கள் தொடர்ந்து செய்வார்களா? தன்னோடு மூன்று ஆண்டுகள் இருந்து பயிற்சி பெற்ற சீடர்கள் தன்னைப் புரிந்துகொண்டார்களா என்பதை அறிய , ஒரு நேர்முகத் தேர்வு நடத்துகிறார் இயேசு. ஏனெனில் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (உரோ. 11:33) கடவுளின் அருட்செல்வம் ஞானம், அறிவு, தீர்ப்புகள் இவற்றை மனிதன் தன் அறிவினால் அறிய இயலாது. அனைத்தும் அவரிடமிருந்தே, அவருக்காகவே இருக்கின்றன என்கிறார் புனித பவுல் அடிகளார்.
இப்படிப்பட்ட சூழ்நிலை வந்தபோது, இயேசுவின் இதயம் எழுப்பிய கேள்விதான், மக்கள் என்னை யாரென்று சொல்லுகிறார்கள். ஆனால் இயேசுவை அனுபவ ரீதியாக அறிந்த பேதுரு , ஒரே வரியில் பதில் சொல்லி, இயேசுவின் இதயத்தில் நிரந்தர இடத்தைப் பிடித்துவிட்டார். இதை அறிந்த இயேசு, பேதுருவை அடித்தளமாகக் கொண்டு திருச்சபையைக் கட்டுவேன் என்கிறார்.
இயேசு எனக்கு யார்? சிலுவையில் தொங்கிய வலது புறத்துக் கள்வன், நான் யார் ? ஏன் இப்படி ஆனேன் என்று சிந்தித்தான். விபச்சாரப் பெண் மதலேன் மரியாள் இப்படி ஏன் தள்ளப்பட்டேன் என்று சுய ஆய்வு செய்தாள். சக்கேயு தன் எதிர்கால நிலைப்பாடு என்ன என்று யோசித்தான். இதனால் அறிவு ரீதியாக மட்டுமல்ல, இதயப்பூர்வமாக இயேசுவைச் சொந்தமாக்கிக் கொண்டார்கள்
- இந்த மூவரும். இன்று கிறிஸ்தவர்களாகிய நம்மைப் பிற மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள்? கல்வி, மருத்துவம் போன்ற உதவியால் மதம் மாற்றுபவர்கள், சமூக அக்கறையற்றவர்கள், பிரச்சனையைக் கண்டு கொள்ளாதவர்கள் கோழைகள் ! அல்லேலூயா கோஷ்டிகள், பெயரளவில் கிறிஸ்தவர்கள் என்கிறார்களா? அப்படியென்றால் அது உண்மையா?
- நாம் நம்மைச் சுற்றி எத்தகைய சமூகத்தைக் கட்டி எழுப்புகிறோம்? சாதியம், ஆணாதிக்கம், மத அடிப்படை வாதம், சுய நலம் நிறைந்த அடிமை சமூகத்தையா? அல்லது நீதி, அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் நிறைந்த சமூகத்தையா?
நமக்குள்ளே ஒரு விலை உயர்ந்த கருவூலம் உண்டு
ஸ்காட்லாந்து நாட்டில் ஒரு வயதான பெண்ணொருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய மகன் அமெரிக்காவிலே பெரிய செல்வந்தனாக வாழ்ந்து வந்தான். ஆனால் அந்த வயதான பெண்ணோ , அவனுடைய தாயோ ஸ்காட்லாந்தில் வறுமையில் வாடினார்.
ஒருநாள் பக்கத்து வீட்டுப் பெண் அந்த ஏழைப் பெண்ணைப் பார்த்து, பாட்டி, நீ இங்கு இப்படி வறுமையில் வாடுவது தெரிந்தால் உன் மகன் உனக்கு நிச்சயமாக உதவி செய்வார் என்றாள். அதற்கு அந்தப்பாட்டி, என் மகனுக்கு என்ன செலவோ! பணம் அனுப்புவதில்லை! ஆனால் வாரம் தவறினாலும் அவன் அன்போடு எழுதும் கடிதம் மட்டும் எனக்கு வரத் தவறாது. கடிதத்தோடு ஓர் அழகான படமும் வரும். அந்தப் படங்ளையெல்லாம் சேர்த்து வைத்திருக்கின்றேன். அவை அழகாக இருக்கின்றன என்றார். அந்தப் பாட்டியோ பைபிளை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்து இதற்குள்தான் எல்லா படங்களும் இருக்கின்றன என்றார். அடுத்த வீட்டுப் பெண் பைபிளைத் திறந்தாள். அதற்குள் இருந்ததெல்லாம் படங்கள் அல்ல பணம், அமெரிக்க டாலர் நோட்டுகள்.
பாவம் அந்த வயதான பெண்! அவளிடம் விலை உயர்ந்த ஒரு கருவூலம் இருந்தது. இருந்தும் அவள் ஏழையாக வாழ்ந்து கொண்டிருந்தாள் !
நம் நடுவே, நமக்குள்ளே ஒரு விலை உயர்ந்த கருவூலம் உண்டு. அந்தக் கருவூலத்தின் பெயர் இயேசு ! அவருடைய அருமையையும், பெருமையையும் நாம் உணர்ந்து, அவரை இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் பேதுருவைப்போல மெசியாவாக, கடவுளின் மகனாக (மத் 16:16) ஏற்று வாழ்கின்றோமா?
இயேசுவைக் கடவுளாக நாம் ஏற்றுக்கொண்டால், நமக்குள் கடவுளின் மிகுதியான அருள் செல்வம், அவருடைய ஆழமான ஞானம், அறிவு, அறிவுக்கு எட்டாத அவருடைய தீர்ப்புகள், ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட அவருடைய செயல்முறைகள் (இரண்டாம் வாசகம்) அனைத்தும் குடிகொள்ளும்.
அப்பொழுது நமக்குள்ளும், நம் நடுவிலும் புதிய யுகம் ஒன்று பிறக்கும் ; நாம் வாழ்வின் திறவுகோலை (முதல் வாசகம்) கையிலேந்தி வலம் வருவோம்.
மேலும் அறிவோம் :
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெறின் (குறள் : 540).
பொருள் :
நினைக்கத் தக்கதை நினைத்து அதனை மறவாது செய்தால், ஒவ்வொருவரும் தாம் அடைய நினைத்த பொருளை எண்ணியவாறே பெறுவது எளிதாகும்!
"நான் யார்?"
16-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து அரசராக இருந்த ஒருவர் காலையில் வெளியே சென்றவர் நள்ளிரவு வீடு திரும்பினார். அரசி கதவைத் தாளிட்டுத் தூங்கிவிட்டார். அரசர் கதவைத் தட்ட அரசி, "யார் அது?" என்று கேட்க, அரசர், "நான்தான் இங்கிலாந்து அரசர்" என்று கூற அரசி கதவைத் திறக்கவில்லை . மறுபடியும் அரசர் கதவைத் தட்ட, "யார் அது?" என்று அரசி கேட்க, அரசர், "நான்தான் முப்படைகளின் தலைவர்” என்று கூற அரசி கதவைத் திறக்கவில்லை . ஆத்திரமடைந்த அரசர் மூன்றாம் முறைச் சற்றுக் கோபத்துடன் கதவைத் தட்ட அரசி, "யார் அது?" என்று கேட்க, அரசர், "நான்தான் உன் அன்புக் கணவர்" என்று சொன்னவுடன் அரசி கதவைத் திறந்து அரசரைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார். ஒருவர் அரசராகவும் முப்படைத் தலைவராகவும் இருக்கலாம். ஆனால் அரசிக்கு அவர் முதலில் கணவர். அதன் பிறகுதான் மற்றெல்லாம்.
இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து, "நான் யார்?" என்று கேட்ட கேள்விக்கு, அவருடைய சீடர்கள், மக்கள் நடுவில் அவரைப் பற்றி நிலவிய கருத்துக்களைப் பிரதிபலித்து, கிறிஸ்துவைத் திருமுழுக்கு யோவான் என்றும், எரேமியா, எலியா, இறைவாக்கினருள் ஒருவர் என்றும் பதில் கூறினர். ஆனால் இதெல்லாம் உண்மையான பதில் இல்லை . அந்நிலையில் பேதுரு, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று சொன்னவுடன் கிறிஸ்து அவரிடம் விண்ணகத்தின் திறவுகோலை ஒப்படைக்கிறார்; கட்டவும் கட்டவிழ்க்கவும் அவருக்கு அதிகாரம் அளிக்கிறார்,
அரசியைப் பொறுத்தமட்டில் அரசர் முதலில் அவரது கணவர், அவ்வாறே கிறிஸ்துவைப் பொறுத்தமட்டில் அவர் முதல் முதல் கடவுளின் மகன். அதன் பின்தான் அவருடைய மற்றப் பணிகள், கிறிஸ்து, "நான் யார்?" என்று கேட்கிறார். "எனது பணி என்ன?" என்று கேட்கவில்லை. ஒருவருடைய இயல்பிலிருந்து அவருடைய செயல்கள் பிறக்கின்றன. இந்த அடிப்படையான மெய்யியல் உண்மையை மறந்து ஒருசில இறையியலார்கள் கிறிஸ்துவின் இறைத்தன்மையை ஓரங்கட்டிவிட்டு அவருடைய பணிகளை மையப்படுத்தி அவரை ஒரு புரட்சியாளராக வெளிச்சம் போட்டுக் காட்டுவது முழுமையான இறையியலாக இருக்க முடியாது. அன்று மகதலா மரியா அழுது கொண்டு, என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர். அவரை எங்கு வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை" (யோவா 20:13) என்று கேட்டதைப் போல் கேட்கவேண்டியுள்ளது.
கிறிஸ்துவை கடவுளுடைய மகனாக ஏற்றுக்கொள்வதற்கு மனித அறிவு மட்டும் போதாது. இறைவெளிப்பாடு தேவைப்படுகிறது. எனவேதான் கிறிஸ்து பேதுருவிடம் கூறுகிறார்: "யோனாவின் மகளான சீமோனே, நீ பேறு பெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தத்தையே வெளிப்படுத்தினார்" (மத் 16:17), கிறிஸ்துவிடம் வருவதற்குக் கடவுளின் தனிப்பட்ட அருள் தேவைப்படுகிறது. "என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது" (யோவா 6:65) என்று கிறிஸ்து யூதர்களிடம் கூறியது இதை எண்பிக்கிறது.
பேதுருவின் நம்பிக்கை அறிக்கையின் மீது தமது திருச்சபையைக் கட்டி எழுப்புவதாகக் கிறிஸ்து கூறுகின்றார். கிறிஸ்து பேதுருவைப் பாறை என்று அழைக்கின்றார் விவிலியம் கடவுளைப் பாறை என்று அழைக்கிறது. "என் கற்பாறையும் கோட்டையும் நீரே" (திபா 31:3), பாறை உறுதியானது; அதைவிட உறுதியானது கடவுளின் அன்பு, "மலைகள் நிலைசாயினும், குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது தான் கொண்ட பேரன்போ நிலைசாயாது" (எசா 54:10).
கடவுள் உண்மையுள்ளவர், கிறிஸ்துவும் உண்மையுள்ளவர். கிறிஸ்துவுக்கு 'ஆமென்' என்று பெயர்; ஏனெனில் அவர் தம்பிக்கைக்குரியவர்; உண்மையான சாட்சி (திவெ 3:14), அவ்வாறே திருச்சபையும் உண்மையானது. திருத்தூதர் பவுல் திருச்சபையைக் "கடவுளின் வீடு" என்றழைத்து, “திருச்சபை உண்மைக்குத் தூணும் அடித்தளமுமாய் இருக்கிறது" (1 திமொ 3:14-15) என்கிறார்.
இன்றைய முதல் வாசகம் பின்வருமாறு கூறுகிறது. தாவீது குடும்பத்தின் திறவுகோலைக் கடவுள் கிறிஸ்துவுக்குக் கொடுப்பார், அவருக்குத் திறக்கவும் பூட்டவும் அதிகாரம் இருக்கும் (எசா 22:19-23). கிறிஸ்து தமக்குள்ள அதிகாரத்தைப் பேதுருவுக்குக் கொடுக்கிறார். பேதுருவின் வழித்தோன்றல்கள் திருத்தந்தையர்கள். திருத்தந்தையர் களின் தலையான பணி விசுவாசிகளை உறுதிப்படுத்தும் பணி (லூக் 22:32) பேதுரு மட்டுமல்ல முழுத் திருச்சபையும் கிறிஸ்துவிடமிருந்து திறவுகோலைப் பெற்றது என்கிறார் புனித அகுஸ்தின், இரண்டாம் வத்திக்கான் சங்கமும் முழுத் திருச்சபையும் விசுவாச, அறநெறி கோட்பாட்டில் வழுவா வரம் கொண்டுள்ளது என்று அறிக்கையிட்டுள்ளது. "தூயவரான கடவுளால் அருள்பொழிவு பெற்று தம்பிக்கை கொண்டோர் அனைவரின் கூட்டம் நம்பிக்கையிலே தவற முடியாது" (திருச்சபை, எண் 12).
மனைவி ஒருவர் தன் கணவரிடம், "என்னங்க என்னை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?" என்று கேட்டதற்கு கணவர் அவரிடம், "நீ போட்டிருக்கிற நகையெல்லாம் எனக்குப் பிடிச்சிருக்கு"
என்றார். அதற்கு மனைவி, "அத்தனையும் கல்யாணி கவரிங் நகை" என்றார். இன்று "கவரிங் நகை" போன்ற போலியான சபைகள் மக்களைக் கவர்ந்து ஈர்க்கின்றனர். போலிப் போதகர்களின் கவர்ச்சியான போதகத்தில் மயங்கிக் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து விலகாதிருக்க விழிப்புடன் இருக்க வேண்டும். கிறிஸ்தவர்களுடைய முக்கியமான கடமைகளில் ஒன்று திருச்சபையின் ஒன்றிப்பில் நிலைத்திருப்பது என்று திருச்சபைச் சட்டம் கூறுகிறது. "கிறிஸ்தவ விசுவாசிகள், தங்கள் செயல்பாட்டு முறையிலும் கூடத் திருச்சபையோடு உள்ள உறவு ஒன்றிப்பை எப்பொழுதும் பேணிக் காக்கக் கடமைப்பட்டுள்ளனர் " (தி. ச. 209, ப 1).
.
திருச்சபையில், திரு மேய்ப்பர்களிடம் பல குறைகள் இருக்கலாம். ஆனால், திருத்தந்தை ஆறாம் பவுல் கூறியதுபோல, *திருச்சபை நோயுற்றிருப்பதற்காகவே அதை நாம் அதிகம் அன்பு செய்ய வேண்டும்." 'தமது சிறு மந்தையாகிய' (மத் 12:32) திருச்சபையைக் கிறிஸ்து கைவிட மாட்டார். "பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா" (மத் 16-18).
நதியின் பாதையை நகல் எடுத்தால்...
உன்னதமான கத்தோலிக்கக் கிறிஸ்தவர். உயர் பதவி வகித்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர். அவருக்கு 70ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம். நண்பர்கள், உறவினர்கள், அலுவலகத் தோழர்கள் என்று திரளாகப் பலர் கலந்து கொண்டனர். அத்தனை பேரும் அவரது நேர்மை, நிருவாகத் திறன், நேரம் தவறாக் கடமையுணர்வு, ஊழல் கறை படியாத கைகள் என்று வாயாரப் புகழ்ந்தனர். இறுதியாக ஒரு சில வார்த்தைகள் பேச அவரது மனைவியை அழைத்தார்கள். தயங்கி எழுந்த அவர் சொன்னார்: "நீங்கள் பட்டியலிட்ட அத்தனை பண்புகளுக்கும் சொந்தக்காரர்தான் என் கணவர். ஆனால் என்னைப் பொருத்தவரை அனைத்துக்கும் அப்பால், அவரை அரவணைத்து வழிநடத்தும், மன்னித்து ஏற்றுக் கொள்ளும் அன்பான கணவராக, குடும்பத்தலைவராகப் பார்க்கிறேன். எங்கள் திருமணம் பெற்றோர் ஏற்பாடு செய்த ஒன்று. அவரோடு முன்பின் பழகியதில்லை. 46 ஆண்டுகளுக்கு முன்னே புதுமணப் பெண்ணாகத் திருமண வழிபாட்டில் அவரருகில் நின்றபோது ஓரக்கண்ணால் உற்று நோக்கினேன். இவரை விட இன்னும் கொஞ்சம் நல்லவரை, இன்னும் கொஞ்சம் அழகானவரைத் தேர்ந்தெடுத்திருக்கலாமோ என்று கூட அப்போது தோன்றியது. ஆனால் இன்று மீண்டும் கணவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புக் கிடைத்தால் இவர்தான் என் கணவராக இருப்பார். இவரைத் தவிர வேறு எவரையும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.'" பிசிறடிக்காத உறுதிப்பாடு கலந்த சொற்கள். அதற்குக் காரணம் தன் கணவரோடு பல ஆண்டுகள் அவர் பெற்றிருந்த நெருக்கமான அனுபவமே!
உறவுகள் வளர்ந்து வலுப்பெறுவதும், தளர்ந்து வலு இழப்பதும் ஒருவரது அனுபவத்தால்தான். இறைவனோடு கொள்ளும் உறவுக்கும் அது பொருந்தும். அத்தகைய உறுதியான, ஆழமான உறவு அனுபவத்துக்கு இயேசு நம்மை அழைக்கிறார். அதனால் எழுந்ததுதான் அந்தக் கேள்வி: “நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" (மத்.16:15).
“நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" (யோ. 1:46). ஏளனம் தொனிக்கும் இந்த சந்தேகக் கேள்வியில் இயேசுவின் பின்னணியை இரண்டாம் நிலைக்குத் தள்ளியவர் பர்த்தோலோமேயு என்ற நத்தனியேல். ஆனால் இந்தக் கேள்விக்கு ஞானம் தரும் பதில் "வந்து பாரும்." ஆய்ந்துஅறியும் அனுபவத்தில் நம்பிக்கை ஆழம் பெறுகிறது. தொலைவில் நின்று 'நாசரேத்தில் நல்லதா?' என்று கேட்ட நத்தனியேல் இயேசுவின் அருகில் வந்தபோதோ, நாசரேனாகிய இயேசுவில் நன்மையின் மொத்த உருவைக் கண்டது மட்டுமல்ல, இயேசுவில் தன் குருவை, இறைமகனை, இஸ்ரயேலின் அரசனைக் காண முடிந்தது (யோ. 1:49). நாமும் தொலைவில் நின்று கேள்வி கேட்பதோடு ஒதுங்கிவிடாது, அருகில் வந்து அனுபவித்து உணர்ந்து நம்பிக்கையில் வளர்வதே ஞானமாகும்.
இரிசிமூலம் நதிமூலம் பார்க்கக் கூடாது என்பார்கள். துறவியாகட்டும், ஆறாகட்டும் தோன்றிய இடம், பிறந்து வளர்ந்த பின்னணி இதெல்லாம் பார்ப்பது நல்லதல்ல என்பது பொருள். பார்க்கத் தொடங்கினால் புரிந்து கொள்ளும் திறந்த மனம் வேண்டும்.
நதியின் பாதையை நகல் எடுத்தால் - நம்
கடல்நீர் எதுவும் புனிதமில்லை
நடந்ததையெல்லாம் கணக்கெடுத்தால் – அட,
நம்மில் எவரும் புனிதனில்லை.
சிந்தனைக்குரிய கவிதை வரிகள்
.
இயேசுவின் மூலம் நாசரேத்தா? யோசேப்பா? அல்ல. தந்தையான கடவுள் அன்றோ! எனவே தொலைவிலிருந்து அருகில் நோக்கும்போது தந்தையான கடவுளே மூலம் என்பது தென்படும். தெளிவுபடும். எனவே இறைமகன் என்று அறிக்கையிடச் செய்கிறது, வந்து பாரும் என்ற அழைப்பும் அனுபவமும். நமது தனிப்பட்ட வாழ்வுச் சூழலில் இயேசுவுக்கும் நமக்குமுள்ள உறவு என்ன? இயேசு எனக்கு யார்? தந்தையா, தாயா, தலைவனா, நண்பனா, மருத்துவனா...? இந்தக் கேள்விக்கான நேர்மையான பதிலே நம் நம்பிக்கை எந்த அளவுக்கு வலுவுள்ளது என்பதை வெளிப்படுத்தும்.
இயேசு திருஅவையைப் பேதுருவிடம் ஒப்படைத்தது அவரது ஆளுமையைப் பார்த்தோ, அவரது திறன்மிக்க செயல்பாடுகளின் பொருட்டோ அல்ல. அவரது உறுதியான நம்பிக்கையைக் கண்டே. திருஅவையின் அடித்தளம் நம்பிக்கை. இந்த அனுபவத்தைக் தொடக்கத்திலேயே பெற்றவர் பேதுரு. “அந்திரேயா, தன் சகோதரன் சீமோனைப் பார்த்து மெசியாவைக் கண்டோம் என்றார். பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார். இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து 'நீ யோவானின் மகன் சீமோன். இனி கேபா (பாறை) எனப்படுவாய்' என்றார்" (யோ. 1:41,42).
இன்றைய நற்செய்தியில் இயேசு கேட்ட கேள்விகள் இரண்டு. 1. “மானிட மகன் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்? ” (மத். 16:13).
2. "நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" (மத். 16:15).
இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு? முதல் கேள்விக்குப் பதில் கூற ஒரு பத்திரிகையாளனாய் (Journalist) இருந்தால் போதும். இரண்டாவது கேள்விக்கோ ஒரு நம்பிக்கையாளனாய் (believer) இருக்க வேண்டும்.
நான் யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேட்டதுபோல் இயேசு இன்று நம்மைப் பார்த்து "நீங்கள் யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்" என்று கேட்கிறார்.
கோமா நிலையில் ஒரு பெண். கடவுள் முன் நிறுத்தப்படுகிறார். "நீ யார்?" என்று கடவுள் கேட்க, “நான்தான் மேரி" என்கிறாள். “உன் பெயரையா கேட்டேன். நீ யார்?”. “நான் ஒரு ஆசிரியை”. “நீ என்ன வேலை செய்கிறாய் என்றா கேட்டேன். நீ யார்?" "நான் ஒரு கத்தோலிக்கப் பெண்”. “நீ எந்த சமயத்தைச் சார்ந்தவள் என்றா கேட்டேன். நீ யார்?”
உண்மையில் கிறிஸ்தவன் என்ற நிலையில் எனது அடையாளம் எனது பெயரில் அல்ல, எனது தொழிலில் அல்ல, எனது திறமையில் அல்ல, எனது சமயத்தில் அல்ல.
நான் கடவுளின் பிள்ளை. "நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம். கடவுளின் மக்களாகவே இருக்கிறோம்" ( I யோ. 3:1).நான் கடவுளின் சாயலைத் தாங்கியவன். அதனால்தான் இயேசு சொன்னார் : “உங்கள் வானகத் தந்தை நிறைவுள்ளவராக இருப்பது போல், நீங்களும் நிறைவுள்ளவர்களாக இருங்கள்”.
நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற நிலையிலிருந்து தவறியபோது, கடவுளின் சாயலைக் கறைபடியச் செய்தபோது, இயேசு தன் உயிரைக் கொடுத்து, இரத்தத்தைச் சிந்தி நம்மை மீண்டும் புதுப்படைப்பாக்கினார். அதனால்தான் கிறிஸ்தவன் என்பவன் இயேசுவை மீட்பராக, ஆண்டவராகக் கொண்டு அவரில் சரணடைந்தவன். இயேசுவின் சீடன் தூய ஆவியின் துணை கொண்டு அவரைப் பின் செல்பவன்.
புனித அகஸ்தினார் செய்த செபம்: “Noverim te, Noverim me". இறைவா, நான் உன்னை அறிய வேண்டும். உன்னில் நான் என்னை அறிய வேண்டும்.
இன்றைய நற்செய்தியில் தன் திருஅவையைக் கட்டப்போவதாகச் சொல்கிறார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்த அடித்தளம் என்ன? சீமோனுக்கு இன்னொரு பெயர் உண்டு. அது இயேசுவே அவருக்கச் சூட்டிய ஓர் அடையாளப் பெயர். “உன் பெயர் பேதுரு" (மத். 16:18). பேதுரு என்னும் கிரேக்கச் சொல்லுக்குப் பாறை என்பது பொருள்.
இயேசு தம் திருஅவையைக் கட்டியது ஒரு பாறையின் மீது. பேதுருவின் நம்பிக்கை என்னும் பாறை மீது திருஅவை கட்டப்பட்டது போல நாமும் இறைநம்பிக்கை என்னும் பாறையை அடித்தளமாகக் கொண்டு நமது கிறிஸ்தவ வாழ்வைக் கட்டி எழுப்புவோம்.
2014ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஆசிய இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தென் கொரியாவிலிருந்து இத்தாலிக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் தன்னுடன் பயணம் செய்த நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். ஒரு மணி நேரம் நீடித்த இந்தப் பேட்டியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தனிப்பட்ட வாழ்வைக் குறித்து நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, திருத்தந்தை அளித்த பதில், இன்றைய ஞாயிறு சிந்தனையை ஆரம்பித்து வைக்கிறது. 2013ம் ஆண்டு, பிரேசில் நாட்டின் ரியோ நகரில் திருத்தந்தை கலந்துகொண்ட உலக இளையோர் நாள் நிகழ்வை பின்னணியாக வைத்து, அந்நிருபர் கேட்ட கேள்வியும், அதற்கு திருத்தந்தை அளித்த பதிலும், இதோ:
நிருபர்: ரியோ நகரில் கூடியிருந்தோர், 'பிரான்செஸ்கோ, பிரான்செஸ்கோ' என்று கத்தியபோது, நீங்கள் அவர்களிடம் 'கிறிஸ்து, கிறிஸ்து' என்று கத்தச் சொன்னீர்கள். இவ்வளவு புகழை நீங்கள் எவ்வாறு சமாளிக்கிறீர்கள்? இவ்வளவு புகழுடன் எவ்வாறு வாழ்கிறீர்கள்?
திருத்தந்தை: இதற்கு எவ்விதம் பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. மக்கள் இவ்வளவு மகிழ்வுடன் இருப்பதைக் கண்டு, நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். மக்களின் தாராளமனதைக் கண்டு மகிழ்கிறேன். அவர்களுக்கு இறைவன் மிக நல்லவற்றையே செய்யவேண்டும் என்று விரும்புகிறேன். ஆழ்மனதில், என் பாவங்கள், தவறுகள், இவற்றை நான் எண்ணிப்பார்க்க முயல்கிறேன். நான் முக்கியமானவன் என்ற எண்ணம் தலைதூக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக, இந்த முயற்சியை மேற்கொள்கிறேன்.
இந்த புகழ், ஆரவாரம் அனைத்தும் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் நீடிக்கும். அதற்குப் பின், நான் என் தந்தையின் இல்லம் செல்வேன் என்று தெரியும். இவற்றை (மக்களின் புகழ்ச்சியை) அதிகம் நம்பாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பற்றிய எண்ணங்களோடு இன்றைய ஞாயிறு சிந்தனையை ஆரம்பிப்பது பொருத்தமாகத் தெரிகிறது. அதிகாரத்தில் இருக்கும் ஒரு தலைவர், எவ்விதம் சிந்தித்து, செயல்பட்டு, வாழவேண்டும் என்பதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்பதை, யாரும் மறுக்கமுடியாது. ஒருவருக்குத் தரப்படும் அதிகாரம், அடுத்தவரை அடக்கி ஆள்வதற்கு அல்ல, மாறாக, அடுத்தவருக்குப் பணி செய்வதற்கே என்பதை, தான் திருஅவை தலைவராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்து வலியுறுத்தி வருகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இதற்கு மாறாக, ‘நான் உங்கள் அடிமை’ என்றும், ‘நான் உங்கள் பணியாளர்’ என்றும் மேடையில் முழங்கிக்கொண்டு, அதற்கு எதிர்மாறாகச் செயலாற்றும் தலைவர்களையும் நாம் இன்றைய உலகில் பார்த்து வருகிறோம்.
இத்தகையச் சூழலில், அதிகாரத்தின் உண்மையான அர்த்தத்தைச் சிந்திக்க, இன்றைய ஞாயிறு வாசகங்கள் நம்மை அழைக்கின்றன. ஒருவருக்கு அதிகாரம் தரப்படுவதை, இறைவாக்கினர் எசாயாவும், நற்செய்தியாளர் மத்தேயுவும் இன்றைய வாசகங்களில் விவரிக்கின்றனர்.
பதவியிலிருந்த செபுனா என்ற அதிகாரி, அகந்தை கொண்டு, தன் பொறுப்பைச் சரிவர நிறைவேற்றாததால், அவரை நீக்கிவிட்டு, எலியாக்கிம் என்பவரை இறைவன் உயர்த்துவதை, இறைவாக்கினர் எசாயா குறிப்பிடுகிறார். திருஅவையின் முதல் தலைவராக, புனித பேதுருவை இயேசு அறிவிப்பதை நற்செய்தியாளர் மத்தேயு குறிப்பிடுகிறார். எலியாக்கிமுக்கு வழங்கப்படும் அதிகாரத்தை, பல்வேறு உருவகங்கள் வழியே இறைவன் விவரிக்கிறார். இதோ அப்பகுதி:
எசாயா 22: 20-22
அந்நாளில் இலக்கியாவின் மகனும் என் ஊழியனுமாகிய எலியாக்கிமை நான் அழைத்து, உன் அங்கியை அவனுக்கு உடுத்தி, உன் கச்சையை அவன் இடுப்பில் கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்பேன். எருசலேமில் குடியிருப்போருக்கும் யூதா குடும்பத்தாருக்கும் அவன் தந்தையாவான். அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின் மேல் வைப்பேன். அவன் திறப்பான்: எவனும் பூட்டமாட்டான். அவன் பூட்டுவான்: எவனும் திறக்கமாட்டான்.
அங்கி, கச்சை, தாவீது குடும்பத்தாரின் திறவுகோல் என்ற பல அடையாளங்கள் வழியே எலியாக்கிமின் அதிகாரம் நிலைநிறுத்தப்படுகிறது.
இந்த ஆடம்பர அடையாளங்களைத் தொடர்ந்து, இறைவன் பயன்படுத்தும் இரு உருவகங்கள், நம் கவனத்தை ஈர்க்கின்றன. அதிகாரத்தில் உள்ள ஒருவரை, இறைவன் எவ்விதம் உருவாக்குகிறார் என்பதை, இவ்விரு உருவகங்களும் தெளிவாக்குகின்றன:
எசாயா 22:23
உறுதியான இடத்தில் அவனை முளைபோல அடித்து வைப்பேன்; அவன் தன் தந்தையின் குடும்பத்தாருக்கு மேன்மையுள்ள அரியணையாக இருப்பான். இஸ்ரயேல் குலத்தின் தலைவனை, இறைவன், உறுதியான இடத்தில் முளைபோல் அடித்துவைப்பார் என்ற சொற்கள், அதிகாரத்தில் இருப்போரிடம் விளங்கவேண்டிய சில அம்சங்களை விளக்குகின்றன. உறுதியான நிலத்தில் அடிக்கப்படும் முளையில் கயிறுகட்டி, கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. எவ்வளவு பலமாகக் காற்றடித்தாலும், நிலத்தில் அடிக்கப்பட்டுள்ள முளை, கூடாரத்தைக் காப்பாற்றும். அதேபோல், மேய்ச்சல் நிலங்களில் ஆடு, மாடுகள் பாதுகாப்பாக மேய்வதற்கு, அடித்துவைக்கப்பட்ட முளையில் அவை கட்டப்படும். காக்கும் தொழிலைச் செய்யும் முளைபோல, அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் முக்கியமான பணி, காக்கும் பணி என்பதை இவ்வுருவகம் முதலில் நமக்கு உணர்த்துகிறது.
அடுத்ததாக, உறுதியான இடத்தில் ஒரு முளை ஊன்றி நிற்பதற்கு, அது, தன் தலைமீது அடிகளைத் தாங்கவேண்டும். எவ்வளவு வலிமையாக அடிகள் விழுகின்றனவோ, அவ்வளவு ஆழமாக முளை, பூமிக்குள் புதைந்து, உறுதியாக நிற்கமுடியும். அதை நம்பி கூடாரங்களையோ, மிருகங்களையோ அதில் கட்டமுடியும். அதேபோல், தலைவர்களும், அதிகாரிகளும் தங்கள்மீது விழும் பல அடிகளைத் தாங்கிக்கொண்டு உறுதியுடன் நின்றால், பயனுள்ள தலைவர்களாகச் செயல்பட முடியும்.
அடுத்ததாக, அரியணை என்ற உருவகமும் தலைவனுக்குரிய ஒரு பண்பை விளக்குகிறது. அரியணையை யாரும் சுமப்பது கிடையாது; அதுவே மற்றவர்களைச் சுமக்கிறது. அது மற்றவர்களைத் தாங்கும்போதுதான் பயனும், புகழும் பெறுகிறது. காலியாக இருக்கும் அரியணை, வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே பயன்படுகிறது. அதேபோல், தலைவர்களும், மற்றவர்களைத் தாங்கும்போதுதான், பயனும், புகழும் பெறுகின்றனர்.
அண்மையில், மின்னஞ்சல் வழியே என்னை வந்தடைந்த ஒரு புகைப்படத்தில், யானை ஒன்று நதியைக் கடந்து செல்வதாகவும், அதன் முதுகின் மேல் நாயொன்று நின்றுகொண்டிருப்பது போலவும் காட்டப்பட்டிருந்தது. அதனுடன் இணைக்கப்பட்ட Michael Watson என்பவரது கூற்று, ஆழமான உண்மையைச் சொல்லித் தருகின்றது – Strong people don’t put others down. They lift them up. அதாவது, சக்திமிக்கவர்கள், அடுத்தவர்களை, கீழேத் தள்ளுவதில்லை. அவர்களை உயர்த்துகிறார்கள்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த 4 ஆண்டுகளாக, திருஅவையின் தலைவர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்திய விதத்திலிருந்து, அவர் 'உறுதியான இடத்தில் அடித்துவைக்கப்பட்ட முளைபோலவும், பிறரைத் தாங்கும் அரியணைபோலவும்' விளங்குவதைக் காணமுடிகிறது.
2014ம் ஆண்டு, ஆசிய இளையோரின் புகழ் மழையில் நனைந்து, புத்துணர்வு பெற்று, கொரியாவிலிருந்து, ஆகஸ்ட் 18, திங்கள் மாலை, உரோம் நகர் திரும்பினார், திருத்தந்தை. அடுத்தநாள், ஆகஸ்ட் 19, செவ்வாய் அதிகாலையில், திருத்தந்தையின் நெருங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மூவர், ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தம்பி, மறைந்த Alberto Bergoglio அவர்களின் மகன், Emmanuel Bergoglio அவர்கள் ஓட்டிச்சென்ற கார், ஒரு லாரியுடன் மோதியதில், அக்காரில் பயணித்த எம்மானுவேல் அவர்களின் மனைவி, Valeria அவர்களும், அவர்களுடைய இரண்டுவயது குழந்தை Joseம், எட்டுமாதக் குழந்தை, Antonioவும் கொல்லப்பட்டனர். 35 வயதான எம்மானுவேல் அவர்கள், பலத்த காயங்களுடன் தப்பிப் பிழைத்தார்.
வேதனை நிறைந்த இச்செய்தியால், உருவான மனப்புயலை சுமந்துகொண்டு, ஆகஸ்ட் 20, புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் வழக்கமானப் பணிகளைத் தொடர்ந்தது, ஓர் உன்னதத் தலைவரை உலகிற்கு அடையாளம் காட்டியது. அன்றைய மறையுரையில், தன் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பை மக்கள் முன் எடுத்துரைத்து, திருத்தந்தையும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் என்பதைச் சுட்டிக்காட்டியபின், மக்களின் செபங்களுக்காக அவர் விண்ணப்பித்தார். புதன் பொது மறையுரையை வழங்கிய நேரம் முழுவதும் திருத்தந்தை நடந்துகொண்ட விதம், 'உறுதியான இடத்தில் அடித்துவைக்கப்பட்ட முளைபோல, பிறரைத் தாங்கும் அரியணைபோல' அவர் இருந்தார் என்பதை உணரவைத்தது.
புகழ் மாலைகள் வந்து குவிந்தாலும் சரி, துன்பம் என்ற புயல் வீசினாலும் சரி, சீரான மனநிலையுடன் செயல்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தலைமைத்துவம், அதிகாரம் என்ற சொற்களுக்கு, ஆழ்ந்த அர்த்தங்கள் தருகிறார். திருத்தந்தை பெற்றிருக்கும் சீரான மனநிலைக்கு ஒரு முக்கிய காரணமாக நான் கருதுவது, அவர் தன்னைப்பற்றி கொண்டுள்ள தெளிவான புரிதல் அல்லது, 'சுய அறிவு' (self knowledge). ஒருவர் தன்னைப்பற்றி தெரிந்துகொள்ள, தன்னையே சரியாகப் புரிந்துகொள்ள, சுயத் தேடல்கள் நிகழவேண்டும். இத்தகைய ஒரு தேடலை, இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது.
வாழ்க்கையில் நம்மை நாமே தேடிய அனுபவங்கள், நம் எல்லாருக்கும் உண்டு. நம்மை நாமே தேடும் நேரங்களில், பல கேள்விகள், நம் உள்ளத்தில் எழும். அவற்றில், மிக முக்கியமான ஒரு கேள்வி... 'நான் யார்?' என்ற கேள்வி. குறிப்பாக, ‘பிறர் கண்களில் நான் யாராகத் தெரிகிறேன்?’ என்ற கேள்வி.
இயேசுவுக்கும் இந்தக் கேள்வி எழுந்தது. நான் யார் என்ற தேடலை அடிப்படையாகக் கொண்டு, இயேசு எழுப்பிய இரு கேள்விகள், அன்று, சீடர்களுக்கும், இன்று, நமக்கும், சவாலாக அமைந்துள்ளன. "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்? நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்பன, அவ்விரு கேள்விகள்.
"நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்ற கேள்விக்கு, சிறு வயது முதல் அம்மாவிடம், அப்பாவிடம், மறைகல்வி ஆசிரியர்களிடம் நாம் பயின்றவற்றை, மனப்பாடம் செய்தவற்றை வைத்து, பதில்களைச் சொல்லிவிடலாம். ஆனால், "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்ற இரண்டாவது கேள்விக்கு அப்படி எளிதாகப் பதில் சொல்லிவிட முடியாது. நாம் படித்தவற்றைவிட, பட்டுணர்ந்தவையே இந்தக் கேள்விக்குப் பதிலாகவேண்டும். நாம் மனப்பாடம் செய்தவற்றைவிட, மனதார நம்புகிறவையே இந்தக் கேள்விக்கான பதிலைத் தரமுடியும். இயேசுவின் இந்தக் கேள்வி, வெறும் கேள்வி அல்ல. இது ஓர் அழைப்பு. சவால்கள் நிறைந்த அழைப்பு!
இயேசு நம்மிடம் "நான் யார் என்று மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டால், நாம் கற்றுத்தேர்ந்த பதில்கள் அனைத்தும், வரிசையாக வெளிவரும். ஆனால், அந்த புத்தக அறிவோடு, நாம் இயேசுவை உலகறிய பறைசாற்றக் கிளம்பினால், புனித பவுல் சொல்வது போல், "ஒலிக்கும் வெண்கலமும், ஓசையிடும் தாளமும் போலாவோம்." (1 கொரிந்தியர் 13: 1) எனவே, நம்மை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்வதற்கு, இயேசு கொடுக்கும் அழைப்புதான், "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்ற கேள்வியாக எழுகிறது. இது சாதாரண அழைப்பு அல்ல. அவரை நம்பி அவரோடு நடக்க, அவரைப் போல் நடக்க, இரவானாலும், புயலானாலும் துணிந்து நடக்க அவர் தரும் ஓர் அழைப்பு. இந்த அழைப்பை ஏற்பதற்கு, உண்மையிலேயே மிகுந்த துணிவு தேவை. இந்தத் துணிவை உணர்த்தும் ஒரு கதை நினைவுக்கு வருகிறது...
கயிற்றின் மேல் சாகசங்கள் செய்யும் கழைக்கூத்துக் கலைஞர்களைப் பார்த்திருப்போம். உலகப் புகழ்பெற்ற ஒரு கழைக்கூத்துக் கலைஞர், இரு அடுக்குமாடி கட்ட்டங்களுக்கிடையே,
கயிற்றின் மேல் சாகசங்கள் செய்யும் கழைக்கூத்துக் கலைஞர்களைப் பார்த்திருப்போம். உலகப் புகழ்பெற்ற ஒரு…கசங்களில் ஒன்று... மணல் மூட்டை வைக்கப்பட்ட ஒரு கை வண்டியைத் தள்ளிக்கொண்டு அந்தக் கயிற்றில் நடப்பது
அதை அற்புதமாக அவர் செய்து முடித்தபோது, இரசிகர் ஒருவர் ஓடி வந்து அவரது கைகளை இறுகப் பற்றிக்கொண்டு, "அற்புதம், அபாரம். நீங்கள் உலகிலேயே மிகச் சிறந்த கலைஞர்" என்று அடுக்கிக்கொண்டே போனார். "என் திறமையில் அவ்வளவு நம்பிக்கை உள்ளதா?" என்று அந்தக் கலைஞர் கேட்டார்.
"என்ன, அப்படி சொல்லிவிட்டீர்கள்... உங்கள் சாகசங்களைப் பற்றி நான் கேள்வி பட்டபோது, நான் அவற்றை நம்பவில்லை. இப்போது நானே நேரில் அவற்றைப் பார்த்துவிட்டேன். இனி உங்களைப்பற்றி மற்றவர்களிடம் சொல்வதுதான் என் முக்கிய வேலை" என்று பரவசப்பட்டுச் சொன்னார்.
"மற்றவர்களிடம் என்னைப்பற்றிச் சொல்வது இருக்கட்டும். இப்போது ஓர் உதவி..." என்று கேட்டார் அந்தக் கலைஞர்.
"உம்.. சொல்லுங்கள்" என்று இரசிகர் ஆர்வமாய், அதிசயமாய் சொன்னார்.
"நான் மீண்டும் ஒரு முறை அந்தக் கயிற்றில் தள்ளுவண்டியோடு நடக்கப் போகிறேன். இம்முறை, அந்த மணல் மூட்டைக்குப் பதில், நீங்கள் அந்த வண்டியில் அமர்ந்து கொள்ளுங்கள்... பத்திரமாக உங்களைக் கொண்டு செல்கிறேன். பார்க்கும் மக்கள் இதை இன்னும் அதிகம் இரசிப்பார்கள். வாருங்கள்..." என்று அழைத்தார். அந்த இரசிகர், இருந்த இடம் தெரியாமல் காற்றோடு கரைந்தார்.
அந்தக் கழைக்கூத்துக் கலைஞரைப் பற்றி கேள்விப்பட்டு, அவரது சாகசங்களை நேரில் பார்த்து வியந்த அந்த இளைஞர், அந்த அற்புதக் கலைஞரின் அருமை பெருமைகளை உலகறியச் செய்வதில் ஆர்வமாய் இருந்தார். ஆனால், அதே கழைக்கூத்துக் கலைஞர் தன் திறமையில் நம்பிக்கை வைத்து, தான் ஆற்றும் ஆபத்தான சாகசங்களில் பங்கேற்க அந்த இளைஞரை அழைத்தபோது, அவர் காற்றோடு கரைந்து விட்டார்.
இயேசு தந்த அழைப்பை, புரிந்தும் புரியாமலும், புனித பேதுரு, தன் உள்ளத்தில் உணர்ந்த ஓர் உண்மையை எடுத்துரைக்கிறார். “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று அறிக்கையிடுகிறார். தன் அறிவுத்திறனைக் கொண்டு அல்ல, மனதில் தோன்றிய விசுவாச உணர்வுகளைக் கொண்டு, தன்னைப் புரிந்துகொண்ட பேதுருவை, புகழ்வதோடு மட்டுமல்லாமல், திருஅவையின் முதல் தலைவராகவும் அவரை நியமிக்கிறார், இயேசு.
திருஅவையின் 266வது தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இயேசுவை, தன் அறிவால் உணர்ந்ததைவிட, உள்ளத்தால் அதிகம் உணர்ந்தவர் என்பதை, நாம் பலவழிகளில் அறிவோம். தன்னைப் புரிந்துகொண்ட பேதுருவை திருஅவைத் தலைவராக அறிவித்து, இயேசு அவரை வழிநடத்தியதுபோல, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும், உடல், உள்ள நலத்துடன் வழிநடத்த வேண்டுமென்று இறைவனை உருக்கமாக மன்றாடுவோம்.
"நீரே கிறிஸ்து! - பாறையின் மேல் கட்டப்பட்ட விசுவாசம்"
இன்றைய நற்செய்தியில் (மத்தேயு 16:13-20), இயேசு தன் சீடர்களிடம் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்கிறார். அது இன்று நம் ஒவ்வொருவரிடமும் கேட்கப்படும் கேள்வியாகும்.
1. நீங்கள் என்னை யாரெனச் சொல்கிறீர்கள்? (The Personal Question)
மக்கள் இயேசுவை ஒரு இறைவாக்கினராகவோ அல்லது யோவான் ஸ்நாபகராகவோ பார்த்தார்கள். ஆனால் பேதுரு, "நீரே மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று அறிக்கை இடுகிறார்.
• சிந்தனை: மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு விசுவாசிப்பது ஒரு வகை. ஆனால், "எனக்கு இயேசு யார்?" என்ற நேரடி அனுபவம் நமக்கு இருக்கிறதா? அவர் வெறும் வரலாற்று நாயகரா அல்லது நம் வாழ்வை வழிநடத்தும் உயிருள்ள இறைவனா?
2. பாறையும் சாவிகளும் (The Rock and the Keys)
பேதுருவின் இந்த விசுவாச அறிக்கையின் மீது இயேசு தனது திருச்சபையைக் கட்டுகிறார். அவருக்கு விண்ணரசின் சாவிகளைக் கொடுக்கிறார். முதல் வாசகத்தில் (ஏசாயா 22:19-23) எலியாக்கீமிடம் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைப் போல, இது பொறுப்புணர்வுடன் கூடிய அதிகாரம்.
• விளக்கம்: திருச்சபை என்பது மனிதர்களால் உருவானது அல்ல, கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசப் பாறையின் மேல் கட்டப்பட்டது. நரகத்தின் வாயில்கள் அதை ஒருபோதும் வெல்ல முடியாது.
3. ஆழமான இறைஞானம் (The Depths of God)
இரண்டாம் வாசகத்தில் (உரோமையர் 11:33-36) பவுல் அடியார் வியக்கிறார்: "ஆகா! கடவுளுடைய செல்வம் எத்துணை ஆழமானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை மிக்குயர்ந்தவை!" * பாடம்: கடவுளின் முடிவுகள் சில நேரம் நமக்குக் புரியாமல் இருக்கலாம். ஆனால், எல்லாம் அவரிடமிருந்தே வருகின்றன, அவர் வழியாகவே நடக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும்
.
பங்குத்தளம் மற்றும் இறைமக்களுக்கான செயல் திட்டங்கள் (CTA)
இந்த வாரம் நம் விசுவாசத்தை உறுதிப்படுத்தச் சில குறிப்புகள்:
• விசுவாச அறிக்கை: ஒவ்வொரு முறை நீங்கள் 'நம்பிக்கை அறிக்கை' (I Believe) சொல்லும்போதும், அதைச் சடங்காகச் சொல்லாமல், பேதுருவைப் போல முழு இதயத்தோடு சொல்லுங்கள்.
• திருச்சபைக்காகச் செபிப்போம்: நம் திருத்தந்தை (Pope), ஆயர் மற்றும் பங்குத்தந்தைகளுக்காக உருக்கமாகச் செபிப்போம். பேதுருவுக்கு வழங்கப்பட்ட அதே 'சாவி' (பொறுப்பு) இன்று அவர்களிடம் உள்ளது. அவர்கள் இறைவிருப்பப்படி வழிநடத்தப்பட வேண்டும்.
• அதிகாரத்தைப் பணிவாக்குதல்: உங்களுக்குக் குடும்பத்திலோ அல்லது பணியிடத்திலோ ஏதேனும் அதிகாரம் இருந்தால், அதை மற்றவர்களை ஒடுக்கப் பயன்படுத்தாமல், எலியாக்கீமைப் போலப் பாதுகாக்கவும் வழிநடத்தவும் பயன்படுத்துங்கள்.
• யார் இந்த இயேசு?: இந்த வாரம் ஒரு நிமிடம் அமைதியாக அமர்ந்து, "இயேசுவே, என் வாழ்வில் நீர் யார்?" என்ற கேள்விக்கு விடை தேடுங்கள். அவர் உங்கள் நண்பரா, மீட்பரா அல்லது வழிகாட்டியா?
மறையுரைச் சுருக்கம் (The Core Message)
"இயேசுவை ஒரு நல்ல மனிதராகப் பார்ப்பது போதாது; அவர் கடவுளின் மகன் என்று ஏற்றுக்கொள்வதே உண்மையான விசுவாசம். அந்த விசுவாசம் நம் இதயத்தில் இருந்தால், எந்தச் சோதனையும் நம்மை அசைக்க முடியாது."
பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (எசா. 22:19-23)
இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 730 ஆண்டுகளுக்கு முன்னால் யெருசலேமில் நடந்த நிகழ்சியினைப் பற்றி இன்றைய முதல் வாசகம் எடுத்துரைக்கின்றது. வலிமைமிக்க அசீரியர்களால் யெருசலேம் தாக்கப்படுவதாகச் செய்தி வருகிறது. எசேக்கியா அரசன் ஏசாயா இறைவாக்கினரிடம் ஆலோசனைக் கேட்கிறார். அதற்கு ஏசாயா 'பயப்படாதே, யாவே யெருசலேமைக் காப்பாற்-றுவார்' என்கிறார். எருசலேமில் செபுனா என்ற தலைமை நிர்வாகி மிகவும் கர்வம் கொண்டவராய், தனக்கென விலையுயர்ந்த கல்லறையினை யெருசலேமிற்கு எதிராக நிறுவி தான் பண பலம், அதிகார பலம் கொண்டவன் என்பதைக் காட்டுகிறார்.
இந்நிலையில் எசாயா செபுனாவை ‘நீ இறுதியில் நாடு கடத்தப்பட்டு இறந்து போவாய்' என்று சபிக்கிறார். பின் தலைமை நிர்வாகியாக எலியாக்கீம் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்கிறார். அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர் உயர்தர வெள்ளை அங்கியும், இடுப்பில் கச்சையும், மரத்தாலான பெரிய திறவு கோலை தோளில் தாங்கியவராகவும் இருப்பார். அவர் எல்லாவற்றிலும் அதிகாரம் கொண்டவராய் இருப்பார் என்பதை மேலே குறிப்பிட்டவை எடுத்துக் காட்டுகிறது. சுருங்கக் கூறின் எலியாக்கியிடம் ஒப்படைக்கப்பட்ட யெருசலேம் காப்பாற்றப்படும் என்பதுதான் முக்கிய செய்தியாக இருக்கிறது.
இரண்டாம் வாசகப் பின்னணி (உரோ.11:33-36)
இறையியலானது செய்யுள் நடையிலே இன்றைய இரண்டாம் வாசகத்திலே கொடுக்கப்படுகிறது. இறைவனை நம் அறிவினைப் பயன்படுத்தித் தேடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் தேடிக்கொண்டிருக்கும் அறிவானது ஆராதனை செய்யும் இதயமாக மாறவேண்டும். கடவுள் மனிதனுக்கு கொடுத்த அறிவினைக் கொண்டு எதெல்லாம் அவனது ஆளுகைக்குட்பட்டதோ அதைச் சிந்திக்கவும், கடவுளைப் பற்றிய வழியில் அவரைப் புலன்களால் தேடாமல் அவரை ஏற்றுக்கொண்டு ஆராதனை புரியவும் அழைக்கப்பட்டிருக்கிறான். நாமும் நமக்கும் அவரது ஞானமும், அன்பும், கொடையாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை நமது சமுதாயத்தில் பயன்படுத்த, வாழ்ந்து காட்ட நம்மைப் பவுல் அழைக்கின்றார்.
நற்செய்தி வாசகப் பின்னணி (மத்தேயு 16:13-20)
இயேசு கிறிஸ்து 2 வருடங்களாக தனது சீடர்களோடு பணி செய்கிறார். தனது பாடுகளுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக தன்னுடைய சீடர்களுக்கு ஒரு தேர்வினை நடத்துகிறார். இந்தத் தேர்வின் மூலம் அவர்கள் தன்னிடமிருந்து என்ன கற்றுக் கொண்டார்கள், தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் என்பதை இன்றைய நற்செய்தியில் காண்கின்றோம்.
மறையுரை
ஒரு விளம்பரத்தில் பார்க்கிறோம். ஒரு குறிப்பிட்ட பொருளைப் பயன்படுத்தும் ஒருவர், “இது ரொம்ப நல்லா இருக்குது. நம்பகமானது. எந்தப் பின்விளைவும் இல்லாதது" என்று தனது அனுபவத்தினைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கிறோம். அதேபோல, ஒரு கம்பெனியின் உயர் அதிகாரி பிற அலுவலரிடம் “இந்தக் கம்பெனி எப்படி இருக்கு? என்னையப் பத்தி என்ன பேசிக்கிறாங்க?" என்று கேட்டுத் தெரிவதில் ஆர்வம் காட்டுவதைப் பார்க்கின்றோம்.
இதைத்தான் இன்றைய நற்செய்தியில் வாசிக்கக் கேட்டோம். தன்னோடு உண்டு, குடித்து, உரையாடி, உறவாடிப் பணிசெய்த சீடர்களுக்கு இயேசு ஒரு தேர்வினை நடத்துகிறார். யூதச் சட்டங்களையும் சம்பிரதாயங்களையும் பற்றிக் கேட்கவில்லை. மாறாக, ஒரேயொரு நடைமுறைக் கேள்வியினை கேட்கின்றார். "எல்லாரும் என்னை யார் என சொல்கிறார்கள்”? இது ஒரு வாய்மொழித் தேர்வுதான். ஒவ்வொருவராகச் தங்களது அனுபவத்திலிருந்து சொல்கின்றார்கள். திருமுழுக்கு யோவான், எலியா, எரேமியா, இறைவாக்கினருள் ஒருவர். எல்லாருக்கும் தேர்வு முடிகின்றது. இறுதியாக பேதுரு, "நீரே மெசியா, உயிருள்ள கடவுளின் மகன்" என்று தனது அனுபவத்தைக் கூறுகிறார்.
மத்தேயு 14:31-இல் "குறைவான விசுவாசம் உள்ளவனே” என்று பெயர் வாங்கினார். குறைவான விசுவாசம் உள்ளவர்க்கு திருச்சபையைத் தாங்கக்கூடிய அதிகாரம், குறைவான விசுவாசம் உள்ளவர்க்கு ஞானத்தின் திறவுகோல்களை வைத்திருக்கக்கூடிய அதிகாரம். இது எப்படிச் சாத்தியமாகிறது? ஒருவேளை கேள்வியைக் கொடுத்த இயேசு பதிலையும் சொல்லிக் கொடுத்தாரா? நிச்சயமாக இல்லை. இன்றைய நற்செய்தியில் "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. மாறாக விண்ணகத்திலுள்ள எனது தந்தையே வெளிப்படுத்தினார்" என்று பதிலளிக்கின்றார். இன்றைய முதல் வாசகத்திலும் கூட எசாயா இறைவாக்கினருக்கு வெளிப்படுத்தப்படுகின்றது. எலியாக்கிமைத் தேர்ந்தெடுக்கிறார். யெருசலேமைக் காப்பாற்றுவதற்கான அதிகாரத்தைக் கொடுக்கிறார். இங்கோ, புதிய இஸ்ராயேல் மக்களின் திருச்சபைத் தலைவராக இருக்கும் அதிகாரத்தையும் கொடுக்கின்றார். எலயாக்கிமிற்கு தாவீது அரச குடும்பத்தின் திறவுகோலைக் கொடுத்தார். இங்கோ ஒருபடி மேலாக வானகத்தின் திறவுகோலையே கொடுக்கின்றார்.
மனிதன் பார்ப்பது உருவகம்
கடவுள் பார்ப்பது வேறு விதம்
யாரெல்லாம் தங்களின் அனுபவத்தினால் கிறிஸ்துவை அறிந்து கொள்கிறார்களோ அவர்களெல்லாம் கைம்மாறு பெறுகின்றனர். கமப்யூட்டரில் கடவுளைத் தேடிக் கொண்டிருக்கின்ற சமயத்தில் இருக்கிறோம். ஒரு பாடல் வரியில் கூட,
காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா
கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா
இங்கு கம்ப்யூட்டரே கடவுளாகிப் போச்சு. இது முற்றிலும் உண்மையாகி விடமுடியாது. தங்களது அனுபவத்தினைச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம்.
தொழுநோயாளிக்கு மருத்துவராக / பேய்பிடித்தவருக்கு விடுதலையளிப்பவராக / யாயீர் மகளுக்கு வாழ்வு அளிப்பவராக / விபச்சாரப் பெண்ணிற்கு மன்னிக்கும் கடவுளாக / பார்வையற்ற பார்த்திமேயுவுக்கு ஒளியாக / லாசருக்கு உயிர்ப்பாக இருந்த இயேசு நமக்கு யாராக இருக்கிறார்?
ஒரு 8 வயது சிறுமியை மருத்துவ மனையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றாயிருக்கிராயா? என்றவுடன் புன்னகை-யோடு 'ஆம்' என்றாள் மழலை மொழியில். உடனே, பிரதர் இயேசப்-பாதான் என்னைக் காப்பாத்தினார் என்று என் அம்மா சொன்னார்கள். அவர் பெரிய டாக்டரா? என்றாள். இயேசு ஒரு நல்ல மருத்துவராக இருக்கிறார் என்பதை சிறுமியின் மூலமாக அறிந்து கொள்கின்றோம். இப்படி தினம் தினம் நம் சக மனிதர்கள் மூலமாக அவர் யார் என்பது தெரிவிக்கப்படுகின்றது. அவர் யார் என்பதை அறிந்து-கொள்ள, அனுபவிக்கத்தான் இறைவார்த்தையும், திருப்பலிக் கொண்-டாட்டமும் நமக்கு உதவியாக இருக்கின்றன.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்தூறும் அறிவு.
தோண்டத் தோண்ட ஊற்றுநீர் பெருக்கெடுப்பது போல, படிக்கப் படிக்க அறிவு பெருகும் என்ற குறளானது இங்கு நமக்கு நினைவு படுத்துவது என்னவெனில், இறைவார்த்தையை ஆழமாக மீண்டும் மீண்டும் படிக்கும், போதும் திருப்பலியில் தகுந்த முறையில் ஒன்றித்திருக்கும்போதும் இறைவனை யார் என்று நமது அனுபவத்திலே கண்டுகொள்ளலாம். அறிவிலே இறைவனை ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு அனுபவத்திலே கண்டுகொள்ள உதவுமாறு இறைவனை இறைஞ்சுவோம்.
பிற மறையுரை கருத்துக்கள்
⚫ மனித எண்ணங்கள், சிந்தனைகள் இலாப நட்ட கணக்கிலிருந்து எழுதுபவை. இறை எண்ணங்கள், மீட்புத்திட்டங்கள் இறை தியாகத்தில் உருவாக்கப்பட்டுள்ளவை. இறைதிட்டத்தில் துன்பம் பெரும் பலம் வாய்ந்த ஒன்று.
⚫ துன்பம், துயரம் என்ற ஏணிப்படிகள் நம்மை விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லும் ஏணிப்படிகளே.
பொதுக் காலம் இருபத்தோராம் ஞாயிறு
இன்றைய நற்செய்தியின் நிகழ்வு மாற் 8:27-30, லூக் 9:18-21 ஆகியவற்றில் காணப்பட்டாலும், ஒவ்வொரு நற்செய்தியாளரும் இந்நிகழ்ச்சி வழியாகச் சொல்ல வருகின்ற இறையியல் கருத்து களும், தரும் அழுத்தங்களும் வேறுபட்டவை. மத்தேயு இந்த நற்செய்திப் பகுதி வழியாக வெளிப்படுத்த, விளக்க வருகின்ற செய்திகளைக் காண்போம்.
1. இயேசு யார்?
இந்த நற்செய்திப் பகுதியின் மிக உன்னதமான செய்தி இயேசு யார் என்பதை தெள்ளத் தெளிவாக கூறுவதுதான். பேதுரு திருத் தூதர்களின் சார்பாகவும், தலைவராகவும் இருந்து இயேசுவை 'மெசியா' எனவும், 'வாழும் கடவுளின் மகன்' எனவும் அறிக்கை யிடுகின்றார். இவைதான் இயேசுவின் உண்மைத் தன்மைகள்! இதில் இயேசு மெசியா என்பது மத்தேயு நற்செய்தியில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டு இருந்தாலும் (மத் 1:1, 16, 17, 18; 2:4; 11:2), அங்கெல் லாம் இயேசுவின் பிறப்புப் பற்றியும், அவரது பணியைப் பற்றியும் கூறுமிடத்து, அவரது மனிதத் தன்மையோடுதான் இந்த 'மெசியா' எனும் சொற்றொடர் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இங்குதான் இயேசு மெசியா என்பது அவரது தெய்வீகத் தன்மையோடு பொருத்தப்பட்டு அவர் 'கடவுளின் மகன்' என்று கூறப்பட்டுள் ளது. இயேசுவின் இந்த உண்மை தன்மை மற்றும் அடை யாளம் மத்தேயு நற்செய்தியின் பிற பகுதிகளிலும் பேசப்படுகிறது; அல்லது ( 22:42; 23:10; 24:5; 23; 26:63, 68; 27:17; 22).
2. பேதுருவின் பண்பு நலன்கள்
மாற்கு நற்செய்தியில் இந்நிகழ்ச்சி பேசப்படும் விதத்துடன் ஒப்பிடும்போது (மாற் 8:27-30), இங்கு மத்தேயு பேதுருவைப்பற்றி வேறு சில விவரங்களையும் தருகின்றார் (வச. 16-19). இதன் அடிப்படையில் பேதுருவைப் பற்றிய சில பண்புகளும், அவரைப் பற்றிய முக்கியத்துவம் விளங்குகின்றன.
2.1. பன்னிருவரின் பதிலாளர்
இயேசு சீடர்களிடம் “நீங்கள் நான் யார் எனச் சொல் கிறீர்கள்?" (வச. 15) எனக் கேட்டபோது பேதுரு பன்னிருவரின் சார்பாக இப்பதிலைத் தருகின்றார். இதிலிருந்து அவரது தலைமைத்துவமும், முக்கியத்துவமும் விளங்குகின்றது.
2.2. பேறுபெற்றவர்
இயேசு, பேதுரு இந்தப் பதிலை தந்ததற்காக அவரை பாராட்டுகின்றார். இந்தப் பதில் ஒரு வெளிப்பாடு! இதை மனித ஞானமோ, ஆற்றலோ வெளிப்படுத்தவில்லை. மாறாக இறைவனே வெளிப்படுத்தினார். எனவே, அவர் பேறுபெற்றவராகின்றார்.
2.3. திருஅவையின் அடித்தளம்
சீமோனுக்கு இயேசு 'பேதுரு' எனும் ஒரு புதிய பெயரைத் தந்து, அவர்மீது தம் திருஅவையைக் கட்டுகின்றார். இவ்வாறு பேதுரு திருஅவையின் அடித்தளமாக அமைக்கப்படுகின்றார். இந்தக் கருத்தை பவுலடியாரும் வழிமொழிகின்றார். எபேசு திருஅவையை "திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர் களை அடித்தள மாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக் கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக் கிறீர்கள்” (எபே 2:20) என்கிறார்.
2.4. அதிகாரம் பெற்றிருப்பவர்
முதல் வாசகத்தில், எசாயா அரண்மனை பொறுப்பாள னும், அதிகாரியுமாகிய செபுனாவிற்குப் பதிலாக எலியாக்கிமை அதிகாரம் உள்ள அதிகாரியாய் நியமித்ததுபோல, பேதுருவுக்கு விண்ணகத்தின் திறவுகோல்கள் தரப்படுகின்றன. “அவர் தடை செய்வது இறைவனால் தடை செய்யப்பட்டதாகவும், அனுமதிப் பதுஅனுமதிக்கப்பட்டதாகவும் இருக்கும்” எனக்கூறப்படுகின்றது. இவ்வாறு தலைமைத் திருத்தூதராக பேதுரு பெரும் அதிகாரம் பெற்றிருக்கின்றார்.
3. திருஅவைப் பற்றிய உண்மைகள்
நற்செய்தி நூல்களிலேயே மத்தேயு மட்டுமே திருஅவை எனும் சொல்லை பயன்படுத்துகின்றார். அதை இந்த நற்செய்தி பகுதியில் பயன்படுத்துகின்றார் (வச. 18 மேலும் மத் 18: 15, 17 இருமுறை). இந்த நிகழ்ச்சியின் வழியாக இயேசு திருஅவை யைப் பற்றிய சில முக்கியமான மறையுண்மைகளை வெளிப் படுத்துகின்றார்.
3.1. பாறையின்மீது கட்டப்பட்ட திருஅவை
இயேசு பேதுருவின் இறை நம்பிக்கையை அறிந்து, அவரைப் பாராட்டி, அவரை 'பாறை' என்று பெயரிட்டு அழைத்து, அந்தப் பாறையின்மீது தமது திருஅவையைக் கட்டினார். புனித பவுலடியார் கூறுவதுபோல ஏற்கெனவே அடித்தளம் இட்டா யிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே! "வேறோர் அடித் தளத்தை இட எவராலும் முடியாது" (1 கொரி 3:11). எனவே திரு அவை பாறையின்மீது கட்டப்பட்ட அசைக்க முடியாத கட்டடம். ( 7:24-25).
3.2. வெற்றிக்கொள்ளப்பட முடியாதது திருஅவை
இயேசுவை அடித்தளமாகக் கொண்ட இந்தக் கோட்டை போன்ற, திருஅவையைப் பாதாளத்தின் வாயில்கள் போன்ற கடவுளுக்கு எதிரான, சாவின், தீமையின் சக்திகள் அழிக்க, அசைத்துப் பார்க்க முயன்றாலும், அவற்றால் திருஅவையின் மேல் வெற்றி கொள்ளமுடியாது. இது திருஅவையின் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகாலவரலாற்றில் நிரூபிக்கப்பட்டுவிட்டது. வரலாற்றில் நமது திருஅவை சந்தித்த எதிர்ப்புகள் ஏராளம். இன்றும் சந்தித்துக் கொண்டிருக்கிறவை எண்ணிலடங்காதவை. ஆனால், அவை அனைத்தையும் மேற்கொண்டு இன்றும் திரு அவை அகில உலகமெங்கும் புதுப்பொலிவுடன் வெற்றி பெற்ற ஒன்றாக இருக்கிறது. எதிர்காலத்திலும் எந்த சக்தியும் அதன்மீது வெற்றிக் கொள்ள முடியாது என்பது திண்ணம்.
3.3. கட்டுவதற்கும் அவிழ்ப்பதற்கும் அதிகாரம் உடையது திருஅவை
இயேசு தலைமைத்திருத்தூதரான பேதுருவுக்கு வானகத்தின் திறவுகோல்களை தந்துள்ளார். அவரின் செயல்பாடுகள் விண்ண கத்தில் பிரதிபலிக்கும். அவருக்குத் தடை செய்யவும், அனுமதிக்க வும் அதிகாரம் உண்டு (வச. 19). இந்த அதிகாரத்தைப் பலர் பல விதமாக விளக்குகின்றனர். திருஅவைக்கு சட்டங்களை இயற்ற வும், அவற்றினிற்று விலக்கு அளிக்கவும் அதிகாரம் உண்டு. திருஅவையிலிருந்து விலக்கி வைக்கவும், அதைத் தளர்த்தவும் அதிகாரம் உண்டு. பாவங்களை மன்னிக்கவும் அதிகாரம் உண்டு. அதாவது கடவுள் பேதுருவும், அவரது வழித்தோன்றலான திருத்தந்தையும் செய்வது அனைத்தையும் அங்கீகரிக்கின்றார். அதை ஆமோதிக்கின்றார் அல்லது வழிமொழிகின்றார்.
ஆக, உலகில் உள்ள எல்லா சபைகளையும்விட உரோம சுத்தோலிக்கத் திருஅவை மட்டுமே தலைமை திருத்தூதராம் பேதுருவின் வழிவரும் திருஅவையாக இருக்கின்றது. இயேசு இதை நியமித்தார், அங்கீகரித்தார். இது நாள்வரை காத்து வரு கின்றார். இனியும் காத்து வருவார். எனவே, கத்தோலிக்கராய் இருப்பதில் பெருமை கொள்வோம். இந்தப் பெருமையை எந்த விலை கொடுத்தாயினும் காத்துக் கொள்வோம்.
பொதுக்காலம் - இருபத்தொன்றாம் ஞாயிறு முதல் ஆண்டு
முதல் வாசகம்: எசா. 22: 19-23
கடவுளின் திட்டத்திற்குக் கை கொடாமல் எதிர்க்கின்ற ஓர் அதிகாரி நீக்கப்படுகிறார், மற்றோர் அதிகாரி பொறுப்பு ஏற்கிறார். பேதுரு திருச்சபையின் தலைவர் ஆகிறதைக் குறிக்கின்ற முன்னடையாளமாக விளங்கும் பகுதி இன்றைய வாசகம். கி.மு. 715 -687 காலக்கட்டத்தில் பாலஸ்தீனம் ஓர் அரசியல் நெருக்கடிக்கு உள்ளானது. அசிரியப் பேரரசு தலை தூக்கிற்று. அந்தப் பேரரசின் பெரும் பசிக்குத் தீனி ஆகிவிடக்கூடாது என்று அஞ்சிப் பாலஸ்தீனம் எகிப்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளக் கருதியது. இவ்வொப்பந்தத்தைத் தூண்டிய தலைமை அமைச்சர் ஷெப்னா என்பவர். ஆனால் இறைவாக்கினர் எசாயா பாலஸ்தீனம் தனித்து இயங்க வேண்டும்; மன்னனும் மக்களும் மனந்திரும்பிக் கடவுளைச் சரண் அடையவேண்டும்; எகிப்துடன் ஒப்பந்தம் கூடாது என்று வலியுறுத்தினார். இதனைக் கடுமையாக எதிர்த்த ஷெப்னா பதவி நீக்கம் செய்யப்பட்டு எலியாக்கீம் என்பவர் தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்பதை உணர்த்துவது இன்றைய வாசகம்.
பொறுப்பின் இயல்பு
தலைமை அமைச்சராகப் பொறுப்பு ஏற்பவர் நீண்ட அங்கியும் இடைக் கச்சையும் அணிவார். அவருக்கு உள்ள அதிகாரத்தின் சின்னமாகத் திறவுகோலைப் பெறுவார். அவர் அரசனுக்கு அடுத்தபடியாக நாட்டில் உயர்ந்த அதிகாரி. அவரை விட அதிக அதிகாரம் கொண்டவர் அரசனைத் தவிர வேறு யாரும் இரார்.
இப்புது அமைச்சர் எத்தகையவர்? மக்களுக்குத் தந்தையைப் போன்று இருப்பார். உருட்டி மிரட்டுவதற்கு உரியது அன்று அவரது அதிகாரம். ஆனால் தந்தை தன் புதல்வர், புதல்வியரைப் பேணுவது போல் நாட்டு மக்களைப் பேணிப் பாதுகாப்பதற்கு உரியது அந்த அதிகாரம்.
“உறுதியான சுவரில் முளைபோல் அவரை அடித்து வைப்போம்.” கூடாரம் அடிப்பதற்காக நட்டப்படுகிற முளை எவ்வளவு உறுதியாக இருக்கிறதோ அதற்குத் தக்கபடி கூடாரம் சிதையாமல் இருக்கும். இங்கு இவ்வமைச்சரின் பணியால் நாடு சிதையாமல் உறுதியான அமைதி கொண்டு விளங்கும் என்பதனை உணர்த்தும்.
திருச்சபையில் அதிகாரம் உடையோர் எவ்வாறு இருக்க வேண்டும்? மக்களுக்குத் தந்தையைப் போல் பேணி வளர்ப்பவர்களாக. கூடாரத்துக்கு முளையைப்போல-உறுதியாயும் அமைதியைப் பாதுகாப்ப வருமாக இருக்க வேண்டும்.
நமக்கு உள்ள அதிகாரங்களை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம்? “ஒருமையே அல்லேன்; எழுமையும் அடியேன்; அடியவர்க்கு அடியவனும் ஆனேன்" (தேவாரம்) என்பதே திருச்சபைத் தலைவர்கட்கு இருக்க வேண்டிய மனநிலை.
முதல் வாசகம் மூன்றாம் வாசகத்தைத் தெளிவுப்படுத்துகிறது. புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டிற்கு நிறைவு அளிக்கிறது. நாம் திருநூலைச் சிரத்தையுடன் படித்து, தியானித்து இறைவனின் வழிமுறைகளை உணர்கிறோமா?
உன் அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்போம்... அவன் ஒரு தந்தையைப்போல் இருப்பான்.
இரண்டாம் வாசகம் : உரோ. 11:33-36
இஸ்ரயேலர் இறைவனில் விசுவாசம் கொள்ள மறுத்தபோது, பிறவினத்தார் இறைவனின் இரக்கத்தைப் பெற்றனர். இதைக் கண்ட யூதர் பொறாமை கொண்டு, எரிச்சல்பட்டு (10:19) மனந்திரும்ப மறுத்தனர். ஆனால் அதே மக்கள் ஒருநாள் இறைவனின் இரக்கத்தைப் பெற்று ஈடேற்றம் அடைவார்கள். "பாவம் பெருகிய இடத்தில் அருள் அணை கடந்து பெருக்கெடுத்தது” (5:20). இறைவனின் இரக்கப் பெருக்கிற்கு எல்லை யில்லை.. அவரது ஞானத்தை அளந்தறிய முடியாது. அவரது திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலத்திற்காகவே என்ற கருத்துக்களைக் கொண்ட கவிதையை இங்குக் காண்கிறோம்.
அறிவுக்கு எட்டாத அன்புத் திட்டங்கள்
இறைவன் நம்மைப் பராமரித்து வருகிறார்; இஸ்ரயேல் இனத்தைத் தேர்ந்தெடுத்து வழி நடத்தி வந்தவரும் அவரே. திருத்தூதர் பவுலைத் தடுத்தாட் கொண்டு வழி நடத்திச் செல்பவரும் அவரே. திருத்தூதர் பவுல் இறைவனது இரக்கத்தை எண்ணிப் பார்க்கிறார். இறையருளின் அன்பின் ஆழத்தையும், ஞானத்தின் அகலத்தையும் புரிந்துகொள்ள முடியவில்லை. இறை புகழ் கவிதையாக மலர்கிறது.
“கடவுளின் அருட்செல்வம் எத்துணை மிகுதியானது;
அவரின் ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை;
அவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவை"
என வியப்படைகின்றார். இறைவன் வழங்கும் கொடைகளில் சிறந்தது அருட்செல்வம். கிறிஸ்து வழியாக நாம் அருள் வாழ்வு பெறுகிறோம்; இறைவனுடன் இணைகின்றோம். நாம் இவ்வுலகில் பெற்ற அருங்கொடை கிறிஸ்துவேயாகும். “தம் ஒரே மகன்மீது நம்பிக்கைகொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்" (யோ. 3:16).
என்னை ஒன்றும் அறியாத இளம் பருவம் தன்னிலே
என் உளத்தே அமர்ந்து அருளியான் மயங்குந் தோறும்
அன்னை எனப்பரிந்தருளி அப்போதைக்கு அப்போது
அப்பன் எனத் தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய்;
நின்னை எனக்கு என் என்பேன், என் உயிர் என்பேனா?
நீடிய என் உயிர்த் துணையாம் நேயமது என்பேனா?
இன்னல் அறுத்து அருள்கின்ற என் குரு என்பேனா?
என் என்பேன்? என்னுடைய இன்பம் அது என்பேனா?
(திருவருட்பா )
இறைவன் தம் ஞானத்தால், அறிவுக்கு எட்டாத திட்டங்களால்,. அருட்செல்வத்தால், நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையில் செய்துள்ள நன்மைகளுக்கு நமது நன்றிக்கடன் யாது?
கடவுள் யாருக்கும் கடனாளி அல்லர்
அனைவரும் மீட்புப் பெற வேண்டும் என்பதே இறைவனின் திருவுளம். அனைத்தும் “அவராலேயே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன.” நாம் பெற்றுள்ள பொருட் செல்வமும் அருட் செல்வமும் அவரது இலவசக் கொடைகள். நம் தகுதியை முன்னிட்டு அன்று, அவரது அன்புப் பெருக்கால் தான் அவர் நமக்கு அனைத்தையும் அளிக்கின்றார். ஆண்டவரின் மனத்தை நம்மால் அறியவும் முடியாது. நம்மைவிட மற்றவனுக்கு ஏன் அதிகமாக அளித்தார் என்று அவரைக் கேள்வி கேட்கவும் நமக்கு உரிமையில்லை. எனவேதான் எசாயா கூறுகிறார்:
“ஆண்டவரின் ஆவிக்கு வழிகாட்டியவர் யார்? அவருக்கு அறிவுரை யாளனாய் இருந்து கற்றுத் தந்தவர் யார்? அவருக்குப் பயிற்சி அளித்து நீதி நெறிகளை உணர்த்தியவர் யார்?” (எசா.40: 13).
எனவே, தமது திட்டத்தைப் பொறுத்த மட்டிலும் சரி, கொடைகளைப் பொறுத்த மட்டிலும் சரி, கடவுள் யாருக்கும் கடனாளி அல்லர்; அறிவுரை வழங்கவோ, ஆராய்ச்சி நடத்தவோ அவருக்கு ஆட்கள் தேவையில்லை. அவரது இரக்கப் பெருக்கே அனைத்திற்கும் காரணம். எனவே அன்றாடம் அவரது கொடைகளைப் பெற்று வரும் நாம், நாம் பெற்றுக் கொண்டவற்றை நன்முறையில் பயன்படுத்தவும், அவற்றிற்குக் கணக்குக் கொடுக்கவும் தயாராயிருக்க வேண்டும். இவற்றின் வழியாக அவரது மகிமை மாட்சியடைய வேண்டும்.
யாவும் அவரிடமிருந்தே வந்தன. அவராலேயே உண்டாயின: அவருக்காகவே இருக்கின்றன.
நற்செய்தி: மத். 16:13-20
திருச்சபையில் பேதுருவின் முதன்மையை நம்பெருமான் உணர்த்துவது இன்றைய வாசகம்.
பேதுருவின் முதன்மை
நம் பெருமானுக்கும் சீடர்களுக்கும் இடையே ஒர் உரையாடல் நடைபெறுகிறது. இதனை ஒரு தேர்வு என்பர் கற்றறிந்தோர். மனுமகன் யார் என்ற வினாவிற்கு விடை தேடுகிறார் நம் பெருமான். சீடர்கள் குழுவாகச் சேர்ந்து மக்களின் கணிப்பு என்ன என்பதற்கு விடை பகர்கிறார்கள். சீடர்களுடைய கண்ணோட்டம் என்ன என்பதைப் பேதுரு தனித்து வெளியிடுகிறார். "வந்து என்னை ஆண்ட மணிவிளக்கு ஆனவன்" (திருமந்திரம்) என விளங்கும் இறைவனின் வெளிப்பாட்டினால் பேதுரு விசுவாசத்தை அறிக்கை இடுகிறார். பெயர் மாற்றம் பெற்றுத் தலைமையை அடைகிறார். தலைமைக்கு ஏற்ற அதிகாரங்களையும் பெறுகிறார்.
நமதாண்டவர் இவ்வுலகில் தோன்றி, தன்னையே மெசியா இறைமகன் என்று வெளிப்படுத்தி இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. கிறிஸ்தவ மறையை அறியாதோர் இன்றில்லை எனலாம். எனினும் என்ன? அன்றைய பொது மக்களுக்கும், இன்றைய பிற சமயத்தினருக்கும் அதிக வேறுபாடில்லை. அன்றைய மக்கள் நமதாண்டவரை ஓர் இறை வாக்கினராக, புதுமை செய்பவராக, போதகராக எடைபோட்டது போலவே, இன்றைய மக்களும் அவரைக் காண்கின்றனர். ஒரு சிலரே அவரைத் தெய்வத்திருமகன் என்று ஏற்று விசுவாச அறிக்கையிடுகின்றனர். மற்றவர்களின் கருத்து எதுவாகவும் இருக்கட்டும்; நீ என்னைப்பற்றி என்ன எண்ணுகிறாய் என்று நமதாண்டவர் நம்மைப் பார்த்துக் கேட்கும் போது, நாம் பேதுருவின் பதிலை நமதாக்கிக் கூறுவோமா? நாம் அறிக்கையிடும் விசுவாசத்தின்படி நடப்போமா? “இன்று எனக்கருளி இருள் கடிந்து எழுகின்ற ஞாயிறு" எம்பெருமான் இயேசு என்று கூறுவேனா?
உன் பெயர் பாறை
பேதுரு தன் சுய பலத்தால் கிறிஸ்துவைத் தேவகுமாரனென அறிக்கை யிடவில்லை.. பரம தந்தையின் தூண்டுதலால் தான் இது சாத்தியமாகும். நமது விசுவாசத்தின் தொடக்கமும் முடிவும் இறைவனே என்கிறார் பவுல். இறையுதவியின்றி இயேசு என்று கூட நம்மால் கூற முடியாது என்பதும் பவுலின் போதனை. எனவே நாம் பெற்றுள்ள பெருங்கொடையாகிய விசுவாசம் இறைவன் நமக்களித்த தனிக்கொடை. நம் தகுதியை முன்னிட்டு அன்று; நம்மீது வைத்த தனியன்பால்-நமக்குக் காட்டும் தனிச்சலுகையாக இது நமக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதை உணர்ந்து நன்றி கூறுகிறேனா?
பேதுருவின் விசுவாச அறிக்கைக்கு உதவியவர் மட்டுமன்று இறைவன்; பேதுரு மற்றவர்களின் விசுவாசத்தையும் உறுதிப்படுத்தும் கருவியாகிறார். "உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மீது என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதனை வெற்றி கொள்ளா" (18). *திருச்சபையின் அடிப்படையும் ஆதாரமும் இயேசுதான்; “இதோ! சீயோனில் நான் ஓர் அடிக்கல் நாட்டுகின்றேன்; அது பரிசோதிக்கப்பட்ட கல்; விலையுயர்ந்த மூலைக்கல்; உறுதியான அடித்தளமாய் அமையும் கல்; நம்பிக்கை கொண்டோன் பதற்றமடையான்." (காண் எசா. 28:16; 1. பேதுரு 2: 4-8) திருமகனாகிய பாறை, தனது திருச்சபையை சீமோனாகிய பாறையை அடித்தளமாக்கிக் கட்டினார். இதனை எதிர்ப்பவரும், அழிக்க முயல்பவரும் பாறையில் மோதி அழிவர்.
திறவு கோல்களைக் கொடுப்பது ஒருவனுக்கு அதிகாரம் அளிப்பதன் அடையாளம். கட்டுதல் அவிழ்த்தல் என்ற தொடர்கள் முழுமையைக் குறிக்கும். பேதுருவும், அவரது வாரிசுகளான உரோமை ஆயர்களும் நமது ஆன்மீக வாழ்வு சம்பந்தமாகச் செய்யும் முடிவுகளை இறைவன் உறுதிப்படுத்துவார் என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார். எனவே திருச்சபை அதிகாரிகளுக்குப் பணிந்து நடக்கவேண்டியது நமது கடமை. தெய்வத் திருமகனால் நிறுவப்பட்ட மாபெரும் சபையே திருச்சபை. இதில் உறுப்பினனாக இருப்பது பற்றி மகிழ்ச்சியடைய வேண்டும். இன்றைய உலகில் என்னைச் சுற்றியுள்ளவர்கள் மத்தியில் இயேசுவைக் கடவுளின் மகன் என்று, எல்லாம் வல்லவர் - உள்ளவர் என்று, இவரின்றி மீட்பில்லை என்று அறிக்கையிடும் துணிவு எனக்குண்டா?
யோனாவின் மகன் சீமோனே நீ பேறுபெற்றவன்.
அறிக்கை – அதிகாரம் – அமைதி
இன்றைய நற்செய்தி வாசகப் பகுதி பேதுருவின் நம்பிக்கை அறிக்கை என்று அழைக்கப்படுகிறது. இயேசு யார் என்று பேதுரு அறிக்கையிடும் நிகழ்வு மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்தி நூல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தப் பகுதியே மேற்காணும் நற்செய்தி நூல்களின் மையம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், இதற்கு முந்தைய பகுதிகள், ‘இயேசு யார்?’ என்னும் கேள்விக்கான தேடலாகவும், இதற்குப் பிந்தைய பகுதி, ‘இயேசு எப்படிப்பட்ட மெசியா?’ என்னும் கேள்விக்கு விடையாகவும் அமைகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் மூன்று நகர்வுகளைக் காண்கிறோம்: (அ) இயேசுவை மெசியா, இறைமகன் என்று நம்பிக்கை அறிக்கை செய்கிறார் பேதுரு. (ஆ) திறவுகோல்களைத் தந்து அதிகாரம் வழங்குகிறார் இயேசு. (இ) மெசியா அடையாளம் குறித்து அமைதி காக்குமாறு சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் இயேசு.
இந்த நிகழ்வு நடைபெறுகிற இடம் பிலிப்பி செசரியா பகுதி. பெரிய ஏரோதுவின் மகன்களில் ஒருவரான பிலிப்பு ஏரோது உரோமைப் பேரரசர் அகுஸ்து சீசரைப் பெருமைப்படுத்தும் விதமாகக் கட்டிய நகரமே பிலிப்பி செசரியா. புறவினத்துக் கடவுளர்கள் அதிகமாக வணங்கப்பட்ட இடமாகவும், அன்றைய அரசியல் அதிகாரத்தின் தளமாகவும் இந்த இடம் இருந்தது. இந்த இடத்தில் வைத்து, ‘இயேசு யார்?’ என்னும் கேள்வியை கேட்பது, சமய அளவிலும் அரசியல் அளவிலும் பொருத்தமாக இருக்கிறது.
இயேசுவின் கேள்வி இரண்டு நிலைகளில் அமைந்துள்ளது: முதலில், மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்? இரண்டாவது, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
திருமுழுக்கு யோவான், எலியா, எரேமியா, இறைவாக்கினருள் ஒருவர் என்று இறைவாக்கினரில் ஒருவராகக் காண்கிறார்கள் மக்கள். இயேசுவின் சமகாலத்தில் மெசியாவை மக்கள் ஒரு குரு அல்லது அரசர் என்று எதிர்பார்த்தார்கள். இயேசுவை மக்கள் இறைவாக்கினர் என்று கருதியதால் அவரை மெசியாவுக்கான முன்னோடி என்று நினைத்தார்களே தவிர, அவரே மெசியா என்று நினைக்கவில்லை.
இங்கேதான் பேதுருவின் அறிக்கை மேன்மை பெறுகிறது. இயேசுவை மெசியாவாக யாரும் நினைக்காத நிலையில், பேதுரு, ‘நீரே மெசியா, உயிருள்ள கடவுளின் மகன்’ என்று அறிக்கையிடுகிறார். ‘மெசியா’ என்பது இயேசுவின் பணியையும், ‘கடவுளின் மகன்’ என்பது இயேசுவின் தான்மையையும் குறிக்கிறது.
‘நீர் பேறுபெற்றவர்!’ என பேதுருவைப் பாராட்டுகிறார் இயேசு. இறைவெளிப்பாட்டின் வழியாகவே இந்த நம்பிக்கை அறிக்கை சாத்தியம் என்கிறார் இயேசு.
மேலும், தொடர்ந்து ‘உன்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்’ என்கிறார். தனிநபருடைய அறிக்கை என்பது குழும அறிக்கையாக மாறுகிறது. இயேசுவை மெசியா என்று அறிக்கையிடுபவர்கள் இந்தக் குழுமத்தின் உறுப்பினர்களாக மாறுகிறார்கள். தொடர்ந்து, பேதுருவுக்கு அதிகாரம் வழங்குகிறார் இயேசு. ‘திறவுகோல்’ என்பது அதிகாரத்தின் உருவகமாக உள்ளது.
நற்செய்தி வாசகத்தின் இறுதியில், இந்த வெளிப்பாடு குறித்து அமைதி காக்குமாறு கட்டளையிடுகிறார் இயேசு. இயேசுவைப் பற்றிய அறிதலும் அறிக்கையிடுதலும் தனிப்பட்ட நிகழ்வாக அமைய வேண்டும்.
மத்தேயுவின் குழுமத்தைப் பொருத்தவரையில் இந்த நிகழ்வு இரண்டு நிலைகளில் பொருள் தருகிறது: முதலில், பேதுருவின் தலைமை அல்லது முதன்மையை முன்மொழிகிறது. இரண்டு, நம்பிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய உள்ளத்தில், ‘இயேசு யார்?’ என்னும் கேள்விக்கு விடை தர வேண்டும்.
இன்றைய முதல் வாசகத்தில் ‘திறவுகோல்’ என்னும் உருவகத்தைக் காண்கிறோம். செப்னா என்னும் அதிகாரியிடமிருந்து அரசப் பொறுப்பை அகற்றி, இல்க்கியாவின் மகனான எலியாக்கிமின் தோள்மேல் வைக்கிறார் ஆண்டவராகிய கடவுள். திறப்பதும் பூட்டுவதும் ஒருவரின் அதிகாரத்தால் நடக்கிறது.
இரண்டாம் வாசகத்தில், ‘ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்?’ எனக் கேட்கிறார் பவுல். ஆண்டவரே தம்மை வெளிப்படுத்தினாலன்றி, அவரைப் பற்றி யாரும் அறிந்துகொள்ள இயலாது.
திருப்பாடல் ஆசிரியர் (திபா 138), ‘உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும்!’ என்று பாடுகிறார். கடவுளின் கைவினைப் பொருள்கள் நாம்.
மூன்று பாடங்கள்:
(அ) வலுவற்ற நம்மேல் தம் திருச்சபையைக் கட்டியுள்ளார் கடவுள்.
மனிதர்களின் துணை கடவுளுக்குத் தேவை. மனிதர்கள் வழியாகவே கடவுள் செயலாற்றுகிறார். பவுலுடைய சொற்களில் புரிந்துகொள்ள வேண்டுமெனில், இச்செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாம் கொண்டுள்ளோம். கீழானவை மேலானவற்றை வெற்றிகொள்ளக் கூடாது.
(ஆ) கடவுள் எனக்கு யார்? இயேசுவைப் பற்றிய எனது தனிப்பட்ட நம்பிக்கை அறிக்கை என்ன?
கடவுளைப் பற்றிய நம் புரிதல் எப்படி இருக்கிறது? அவரைப் பற்றிய உருவம் என்ன? அப்பா, அம்மா என்றா? சில நேரங்களில் கடவுளை நாம் காவல்துறை அதிகாரியாக நினைக்கிறோம் – அவர் நம் செயல்களுக்குத் தண்டனை வழங்குபவராக! சில நேரங்களில் தலைவலி மாத்திரை போல, சில நேரங்களில் நம் பாவங்களைக் கழுவும் வாஷிங் மெஷின் போல! சில நேரங்களில் நமக்கு பரிசுகள் வழங்கும் சாந்தா கிளாஸ் போல! க
(இ) ஆன்மிகத்தில் அமைதியின் அவசியம். நம் கடவுளைப் பற்றி நாம் யாருக்கும் நிரூபிக்கத் தேவையில்லை.
நம் சொற்கள் கடவுளை முழுமையாக வெளிப்படுத்த இயலாது. நம் நம்பிக்கைக் கோட்பாடுகள் கடவுளைப் பற்றிய வர்ணனையே அன்றி, வரையறை அல்ல. நம் கோட்பாடுகளைத் தாண்டியவர் கடவுள். நம் கோட்பாடுகள் வழியாக ஒருவர் மற்றவருக்கு நம் கடவுள் யார் என நிரூபிக்கத் தேவையில்லை.
விண்ணகத் திறவுகோல்கள்
இன்றைய வாசகங்கள் இறை ஊழியன் ஒருவனுக்கு இறைவன் தரும் மாண்பையும் மேன்மையையும் வரிசைப்படுத்துகின்றன. முதல் வாசகத்தில் என் ஊழியன் என்று இறைவனால் பெருமைப்படுத்தப்படும் எலியாக்கிமிற்கு அவனது சமூக முதல் மரியாதையாக ஆடைகளும், தலைமை பண்புக்குரிய அதிகாரமும் அளித்து அவனை இறைவன் உறுதியான இடத்தில் நிலை நிறுத்துவதைக் காண்கின்றோம்
இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, உலக ஆதாயங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு (மாற்கு - 10: 28) வெறுங்கையராக அவரைப் பின்தொடர்ந்த பேதுருவிடம் விண்ணகத்தின் திறவுகோல்களை தருகின்றார். அது மட்டுமல்ல அதனை எப்படி எல்லாம் பயன்படுத்த முடியும் என்ற வழிமுறைகளையும் அதிகாரத்தையும் தருகின்றார். இன்றைய வாழ்க்கையில் அதிகாரமும் அதன் பயன்களும் எல்லா மனிதர்களின் தேடலாகத் தேவையாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது. இந்நிலையில் இயேசு விண்ணகத்தின் திறவுகோல்களை பெற்றுக் கொள்ளவும் பயன்படுத்தவும் பாறை போன்று மன உறுதியுள்ள அவருடைய சீமோன் எனப்படும் பேதுரு என்ற ஊழியனுக்கு தருகிறார்.
வழி வழியாக, இன்று இந்த 21 ஆம் நூற்றாண்டில் இயேசுவின் ஊழியர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ள நம்முன் அதே விண்ணக திறவுகோல்கள் வைக்கப்பட்டுள்ளன. விண்ணகத்தையும் மண்ணகத்தையும் பூட்டவும் திறக்கவும் அதிகாரத்தைத் தரும் இவைகள் சிறப்புக்கு உரியவைதான். இருந்தும் கையகப்படுத்தும் முன் எந்தப் பூட்டிற்கு எந்தச் சாவி என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து கவனிப்போம்.
இயேசு தந்த விண்ணக திறவுகோல்கள்
1) மூன்று ஆண்டுகள் மனுமகன் போதித்த இறை வார்த்தைகளின் - அன்பின் மொழி - முதல் திறவுகோல் “வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் அன்றோ உள்ளன” என்ற பேதுருவின் மறுமொழி இறை வார்த்தைகளின் மகிமையை உறுதி செய்கிறது.
2) இந்த அன்பின் மொழியின் மகுடமாகக் கல்வாரியில் உலகிற்கு இறைமகன் தந்த அன்பின் வழி ஒப்புறவின் கனியான- மன்னிப்பு எனும் செயல் நிலை - இரண்டாவது திறவுகோல்.
மும்மூறை மறுதலித்த பேதுரு இறைமகனின் கனிவான பார்வையால் மன்னிப்பு பெற்று மனம் மாறியதன் மூலம் மன்னிப்பின் மகத்துவத்தை அனுபவித்தார்.
3) இறைமகன் உயிர்ப்பிற்குப் பின் இந்த அன்பு - மன்னிப்பு இரண்டின் இணைப்பால் உலகிற்கு உயிராக வல்லமையாக இறங்கி வந்த தூய ஆவியானவரின் அபிஷேகம் எனும் அரவணைப்பு மூன்றாவது திறவுகோல்.
திருத்தூதர் பணிகள் இரண்டாம் அதிகாரத்தின்படி பெந்தகோஸ்தே நாளில் நிகழ்ந்தவை அனைத்திற்கும் பேதுருவே சாட்சியாக இருந்ததால் ஆவியின் அபிஷேக வல்லமையை அறிவுப்பூர்வமாகவும் அனுபவித்தார்.
இந்த “அன்பு - மன்னிப்பு - அரவணைப்பு"என்ற மூன்று திறவுகோல்களையும் பேதுருவைப் போல் எவர் ஒருவர் முழுமையாகக் கையகப்படுத்தி, தன்னை திறந்து - வெறுமையாக்கி இறைவனை ஏற்றுக் கொண்டு; அதன் மகிழ்ச்சியை அனைவருள்ளும் பகிர்ந்து கொள்ள தன்னைத் தானே அனுமதிக்கின்றாரோ … அப்போது அவரது வாழ்வு விண்ணக வாழ்வாகின்றது.
இவ்வாறு வாழ்ந்த இறைமகனின் சீடர்களான திருத்தொண்டரகள், புனிதர்கள், மறைசாட்சிகள் அனைவரும் இன்று விண்ணகத்தில் இருக்கின்றார்கள் என்பது நமது நம்பிக்கை. உலகின் பார்வையில் கிறிஸ்துவர்களாக வாழும் நாம் இறைமகன் இயேசுவின் சீடர்கள் என்று அடையாளப் படுத்தப் படுகிறோம். இது உண்மை எனில் நாமும் விண்ணக வாழ்வு பெற்றிட மறுப்பின்றி தயக்கமின்றி பயன்படுத்துவோம் … இந்தத் தெய்வீக அற்புத மூன்று திறவுகோல்களை.
இயேசுவின் சீடரான பேதுருவிற்கு தரப்பட்ட அந்தத் தெய்வீக திறவுகோல்கள் அதே இயேசுவின் சீடர்களாக வாழ்க்கைப் பயணத்தைத் தொடரும் நமக்கும் - உரிமையுடன் - பயன்படுத்த, திருமுழுக்கின் வழியாக அழைப்பு விடப்பட்டுள்ளது. இருந்தும், அனேகர் பல நேரங்களில் - தங்களுடைய உலக ஆதாயத் தேவைகளின் தேடுதல்களினாலும்; சிலர் எனக்குள் - என் இறைவன் என்ற சுயநலப் போர்வையாலும் போற்றுதற்குரிய மகிமை மிகு விண்ணக அனுபவத்தை - அழைப்பை இழகக்கூடிய ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால், இறைமகனோ அதே திறவுகோல்களைக் கொண்டு அவரோடு நம்மை இறுக இணைத்துப் பூட்டிக் கொள்ளவும்; பாதுகாத்துக் கொள்ளவும் அனுமதிக்கின்றார்.
ஒரு கற்பனை …
ஒரு ஆசிரியர் ஒரு மாணவருக்கு வினாத்தாளையும் விடைகளையும் கொடுத்து நன்கு பயின்றிட கால அவகாசமும் தந்து தேர்வு எழுத அழைத்தால்; தேர்வில் அந்த மாணவன் பெற வேண்டிய மதிப்பெண்கள் என்னவாக இருக்க வேண்டும்…. ஆம் அது 100% ஆக இருக்க வேண்டும்.நியாயம்தானே?...
பாருங்கள். இறைவன் நமக்கும் இறை வார்த்தைகளை வினாத்தாளாகவும், ஒப்புரவின் கனியான மன்னிப்பை விடையாகவும், தூய ஆவியின் அபிஷேகத்தை வாழ்வின் செயல்முறைகளாகவும் தந்து பொதுத்தீர்வை நாளைச் சந்திக்க அழைக்கின்றார். அவர் நமக்கு விடையாகப் பரிசாக 100% ஆன விண்ணக வாழ்வைத் தர விரும்புகின்றார்… வேண்டுமா? வேண்டாமா? யோசிப்போம்.
இறைவன் யாரோ ஒருவரிடம் கேட்கவில்லை… அவருடைய படைப்பான நம்மிடம் கேட்கின்றார். பேதுருவிடம் விண்ணக திறவுகோல்களைத் தந்தபோது அதை ஏற்றுக் கொள்ளவும், தாங்கிக் கொள்ளவும் - அவர் ஒரு பாறையாக இருந்தார். அடிப்படையில் நாமும் இறை படைப்பே… பேதுருவிடம் இருந்த மன உறுதி, கொள்கைப் பிடிப்பு, ஏன்… மரணத்தின் பிடியிலும் விட்டுக் கொடுக்காத மன நிலை -ஆகியவை ஆழ்ந்து கவனித்தால் நமக்குள்ளும் இருக்கின்றது. பின் தயக்கம் ஏன்? விழித்துக் கொள்வோம் வீறு கொள்வோம். விண்ணக திறவுகோல்களைக் கைகளில் எடுப்போம்.
மண்ணில் …. இறைவன்முன், ஒருபொருட்டாக மதிக்க இயலாத இந்த மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். (திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 8:4- 5) … என்று சங்கீத அரசன் கூறுவதை நினைவு கொள்வோம்.
பவுல் அடிகளாரின் வார்த்தைப்படி கடவுளின் அருள் செல்வம் எத்துணை மிகுதியானது! அவருடைய ஞானமும் அறிவும் எத்துணை ஆழமானவை! என்பதை புரிந்து கொள்வோம். இறைவன் என்றென்றும் வாழ்த்து பெறுவாராக.
Twenty-first Sunday, "A" Cycle
Isa 22:15, 19-23. Eliakim, as master of the palace with the keys of the House of David, acts in the name of the king to open and close the palace.
Rom 11:33-36. How deep are the riches and the wisdom and the knowledge of God! How inscrutable his judg-ments, how unsearchable his ways!
Matt 16:13-20. Jesus is confessed to be the Messiah and Son of the Living God by Peter who is then made the Rock for the church and is given the keys of the kingdom of heaven.
While the gospel announces Peter's role in the church, the other two readings help us to appreciate more fully the implications of Jesus' promise to Peter. The passage from Isaiah provides a parallel in the bestowal of the keys; the se-lection from Romans reminds us of the mystery, "inscruta-ble" and "unsearchable," at the center of Jesus' action and of Peter's position. Part of this mystery we unravel by bibli-cal interpretation and another part always remains beyond our understanding. Our meditation leads us into our bond of union with Jesus in a church founded upon Peter and sus-tained by this promise.
True, the passage from Isaiah throws light upon the in-cident in the gospel. In each case God bestows the keys of authority. Both Eliakim, son of Hilkiah, in the Old Testa-ment, and Simon, son of John, in the New Testament, act in the name of someone else. Eliakim is a minister of the Da-vidic king; Peter becomes a lieutenant for Jesus, in the literal meaning of this word, "holding the place of Jesus as ulti-mate arbiter and solid resting place, as center of unity and worship.
Eliakim is warned, in the verses beyond the selection for today's mass, that the peg, which is himself, can "give way, break off and fall" (Isa 22:25). Peter, on the contrary, will be preserved from "the jaws of death." Peter's office reaches beyond death and extends to Peter's successors. Not all New Testament offices continued in existence, for in-stance, that of the "Beloved Disciple" in John's gospel or that of the three favorites, "Peter, James and John," who were invited to accompany Jesus on very special occasions.
Continuance means development. Such is the law of life. As we compare the bestowal of Peter's office in Mark 8:27-30 or Luke 9:18-22, we discover a clear theological advance in Matthew's gospel. While Peter confesses Jesus to be "the Messiah" or "the Messiah of God" in Mark and Luke, the title expands to "the Messiah, the Son of the Liv-ing God" in Matthew. The teaching office of Peter does not simply repeat the past but explains more fully the impact of the earlier faith upon a later age.
Matthew's gospel also adds that "no merely human au-thority has revealed this to you, but my heavenly Father."
Here we are helped by the second reading from Romans. Doctrine needs to be clearly formulated, so that the church will plummet ever more profoundly into the heart of the mystery. Prayer and contemplation lead beyond theological statement and put us in contact with God who speaks the statement. Thus we are drawn into the personal mystery of the godhead. Paul writes about the mystery:
How deep are the riches and the wisdom and the
knowledge of God! How inscrutable his ways!
... For from him and through him and for him all
things are. To him be glory for ever.
The mystery within the statements of our faith draws us into the depths of a personal God. The final statement reads: "To him be glory," that is, to God who is father and mother, brother and sister, friend and protector.
This same personal aspect of the diety shows up in Je-sus' initial question to the disciples: "Who do people say that the Son of Man is?... And you, who do you say that I am?" Loyalty to Peter and to the bishops of Rome as Peter's successors is never complete simply with external conform-ity of doctrine. Obedience leads one to depths of prayer, to the wonders of unity, to the eternal glory of God, to intimate bonds with Jesus about whom we can now acclaim, "from him and through him and for him all things are."
The gospel ends in a strange, downbeat manner: "he strictly ordered his disciples not to tell anyone that he was the Messiah." It seems as though Peter is thrust into the frustrating situation of being given an important role in the community and then ordered not to do anything about it. There were to be no instant answers but rather a long devel-opmental way of plummeting into the depths of the mystery and teaching this faith to others.
The complicated, at times painful way of evangeliza-tion is shown in the very next section of Matthew's gospel-for that matter, in all three gospels of Matthew, Mark and Luke. Matthew writes:
From then on Jesus started to indicate to the dis-ciples that he must go to Jerusalem and suffer greatly...
A similar episode in John's gospel also ends with the cross, this time Peter's crucifixion upon a cross (John 21:15-19).
Here in the cross is a major part of the mystery of Jesus' messiahship and of Peter's position as Rock and Custodian of keys. Each person and each community needs to follow Jesus slowly and surely to Jerusalem and the cross.
"Not to tell anyone" also implies the necessity of each person as well as each society and culture to grow slowly and intensely into the knowledge of Jesus' messiahship and into all of its implications. As the Church's apostolate has spread across the world, new areas have brought new in-sights and have contributed their own delicate sensitivity to particular aspects of gospel ideals. As the church through Peter and its pastoral ministers directs and instructs, the church is also enriched in its perceptions and in its modes of prayer and worship.
Strong in our loyalty to church and to Peter, solidly es-tablished upon the rock that is the Rock of Peter (the name "Peter" means rock in Greek and Latin), drawn into the depths of mystery and united profoundly in Jesus, we are en-abled confidently to contribute, to challenge and to expand the horizon of the church.
Prayer:
Lord, your love is eternal; your promises to the church and to Peter reach beyond the gates of death. Your kindness and your fidelity reach out to us, the work of your hands. We are grateful that you will never forsake us.