இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 520 ஆண்டுகளுக்கு முன் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து திரும்பி இஸ்ரயேல் நாட்டுக்குள் புகுந்த மக்களோடு வந்த இறைவாக்கினரில் செக்கரியா என்பவரும் ஒருவர் செக்கரியா என்பதற்கு ஆண்டவர் நினைவுகூர்ந்தார் என்பது பொருள் நாடு திரும்பிய மக்கள் முன்னால் காட்சி அளித்ததெல்லாம் அவர்களது விழுந்து கிடந்த நகரங்களும் அவர்களது பெருமையின் சின்னமாக விளங்க வேண்டிய யெருசலேம் ஆலயமும்தான் மக்களின் மனதை அவநம்பிக்கையும் அச்சமும் ஆட்கொள்ளத் தொடங்கின. அந்த நேரத்தில்தான் இறைவாக்கினர் செக்கரியா இஸ்ரயேல் மக்களைப் பாரத்து, “மக்களே! உங்களுக்கு நீதியையும் வெற்றியையும் சமாதானத்தையும் அளிக்க அரசர் ஒருவர் வருவார்” என்றார் இதைத்தான் முதல் வாசகம் குறிப்பிடுகிறது.
அறிவிக்கப்பட்ட அரசருக்காக இஸ்ரயேல் நாடு காத்திருந்தது! ஆண்டுகள் மறைந்தன!... ஆண்டவர் பிறந்தார் வளர்பிறைபோல் வளந்தார்! 30 ஆண்டுகள் மறைந்து இருந்தவர் ஒரு நாள் அவர் செக்கரியா முன்னுரைத்த அரசர் நானே என்பதைச் சுட்டிக்காட்ட எளிமையின் மறு உருவாய் வாழ்ந்து மக்களைப் பார்த்து: பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாற்றுதல் தருவேன் உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும் (மத் 11:28-29) என்றார் இந்த உண்மையைத்தான் நற்செய்தி சுட்டிக்காட்டுகிறது!
உலகம் தேடுகின்ற நீதியையும் வெற்றியையும் அமைதியையும் இளைப்பாற்றியையும் ஆண்டவர் இயேசு நமக்கு எப்படித் தருகிறார் என்பதற்கு இரண்டாம் வாசகம் பதில் கூறுகின்றது. ஒருவர் தன் இதயத்தில் வாழுகின்ற கிறிஸ்துவின் ஆவியினால் இயக்கப்பட்டு, அந்த ஆவியின் வழி நடந்தால் (கலா.5:22-25) அவர் தேடும் அனைத்தையும் பெறுவார் என்கிறார் புனித பவுல்
கிறிஸ்துவின் ஆவியின் வழியில் வாழ முன் வருகின்றவர்கள் இயேசு வாக்களித்த இளைப்பாற்றியை அடைவர் என்பதற்கு இதோ ஒரு சான்று.
அவர் பெயர் நிக்கி க்ரூஸ் புபெடோ ரிக்கோவைச் சேர்ந்தவர் அவர் வீட்டில் 17 உறுப்பினர்கள் நியூயார்க் நகருக்கு வேலை தேடிச் சென்றார் அங்கே என்ன நடந்தது என்பதை அவர் எழுதிய ஓடு பாப்பா ஓடு (Run Baby Run) என்னும் புத்தகத்தில் விளக்குகின்றார் வேலை கிடைக்கவில்லை. ப்ரூக்ளின் நகரின் தெருக்களில் கொள்ளையடிக்கும் கூட்டம் ஒன்றில் சேர்ந்தார் நிக்கி க்ரூஸ் பின் கூட்டத்தின் தலைவனானார் அவர் செய்யாத பாவம் இல்லை என்று சொல்லலாம் அன்று அவரிடம் வேண்டிய அளவு பணமிருந்தது!
ஆனால் அவர் இதயத்திலிருந்த அமைதியை அவர் இழந்துவிட்டார்!
ஒரு நாள் ஒரு செபக் கூட்டத்திற்குள் வேடிக்கைப் பார்ப்பதற்காக அந்த கொள்ளைக்காரர் நுழைந்தார்!கல்வாரியில் கள்வனை மனம் மாற்றிய கர்த்தர் அவருக்காக அங்கே
காத்திருந்தார்
அங்கே அதுவரை அவன் வாழ்க்கையில் அனுபவிக்காத நிகழ்ச்சி ஒன்று நடந்தது! இயேசுவின் ஆவி அவன் உள்ளத்தைக் கிள்ளினார்!அப்போது அவன் ஏதேதோ பேச நினைத்தான் ஆனால் பேசமுடியவில்லை. தான் பேச நினைத்ததைத் தனது புத்தகத்திலே எழுதியுள்ளார் என் இறைவா, நீ என்னை அன்பு செய்தால் என் வாழ்க்கையில் இன்று குறுக்கிடும் நான் ஓடிக் களைத்துவிட்டேன் நான் ஓடியது போதும் என்னை மாற்றும் என்னை தயவுசெய்து மாற்றும் - இதுதான் அவன் சொல்ல நினைத்தது!
அவர் செபம் கேட்கப்பட்டது. அதன் பிறகு அவர் அந்த செபக் கூட்டத்தில் கேட்ட முதல் இறைவார்த்தை: ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார் (2 கொரி. 5:17) என்பதாகும்
அவர் ஆன்மாவிற்கு ஆறுதல் கிடைத்தது, இளைப்பாற்றி கிடைத்தது! உள்ளம் தெளிய உடலும் தெளிந்தது! இன்று நற்செய்தியாளராகப் பணியாற்றி எண்ணற்ற இளைஞர்களின்
வாழ்க்கையில் விளக்கேற்றிக் கொண்டிருக்கிறார் நிக்கி க்ரூஸ்
நம் இறைவன் நமக்கு என்றுமே ஆறுதல் அளிக்கும் இறைவன்
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லாரும்
என்னிடம் வாருங்கள்
மகன் ஒருவன் அவனுடைய தகப்பனை அடியோடு வெறுத்தான் வயதான காலம்!தந்தை திண்ணையில் படுத்திருந்தார் உன்னால் இந்த வீட்டிற்கு என்ன நன்மை? செத்துத் தொலைய வேண்டியதுதானே! “ஏன் என் உயிரை வாங்குறே! என்றான் மகன்
ஒரு நாள் சவப்பெட்டியோடு தகப்பன் முன்னால் வந்து நின்றான் மகன்
!தகப்பனைப் பார்த்து, இந்தச் சவப்பட்டிக்குள் படு என்றான் தகப்பன் மகனின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட சவப்பெட்டிக்குள் படுத்துக்கொண்டார் அப்பெட்டியை அந்த மகன் ஓர் உயரமான மலை உச்சிக்குக் கொண்டு சென்றான் மலை உச்சியை அடைந்த போது, மகன் செத்துத் தொலை என்று சொல்லிக்கொண்டு சவப்பெட்டியை உருட்டிவிடப் போனான்
அப்போது பெட்டிக்குள்ளேயிருந்த தகப்பன் பட்டியின் மேல்பகுதியைத் தட்டினார் எதையோ சொல்ல மறந்துவிட்டார் போலும் என்று நினைத்து பெட்டியைத் திறந்தான் மகன்!
அப்போது அந்தத் தந்தை, மகனே! இந்தப் பெட்டி அழகாக இருக்கின்றது! இதை ஏன் வீணாக்குகின்றாய்? நானே குதித்து
செத்துவிடுகின்றேன் என்றார் தகப்பன் என்ன சொல்ல விரும்புகின்றார் என்பதை மகன் புரிந்துகொண்டான்!
உடனே தந்தையின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான்!அப்பா! ஒருவரின் சுமையை இன்னொருவர் சுமக்க மறுத்தால் யாருமே இந்த உலகில் நிம்மதியாக வாழமுடியாது! வாங்க வீட்டுக்குப் போவோம் என்றான் மகன்
நம்மைச் சுற்றியுள்ளவர்களின் சுமையைச் சுமக்க நாம் முன்வந்தால்தான் மற்றவர்களால் சுகமாக வாழமுடியும் இது ஆண்டவர் இயேசுவுக்கு நன்றாகத் தெரியும்!இதனால்தான் இன்று உலக மக்களைப் பார்த்து, பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் [மத் 11: 28) என்கின்றார்
சில சுமைகளை நாமே இறக்கிவைத்துவிடலாம்!சில சுமைகளை மற்றவர்களின் உதவியோடு இறக்கிவைத்துவிடலாம்!சில பெருஞ்சுமைகளை கடவுளால் ஆண்டவர் இயேசுவால் மட்டுமே இறக்கிவைக்கமுழியும்!
சுமை என்றால் துன்பம்!
சுமை என்றால் துயரம்!
சுமை என்றால் இழப்பு!
சுமை என்றால் ஏமாற்றம்!
தங்கள் இல்லத்திலிருந்த, உள்ளத்திலிருந்த, பெருஞ்சுமைகளையல்லாம் இறக்கிவைக்க முடியாமல் மக்கள் தவித்த போது அவர்களின் சுமைகளையெல்லாம் இறக்கி வைத்தார் இயேசு.
இதோ சில உதாரணங்கள்:
யோவா 2: 1-11 இங்கே இயேசு தாகரமெனும் சுமையை இறக்கிவைக்கின்றார்
யோவா 6: 1-13 இங்கே இயேசு பசியன்னும் சுமையை இறக்கிவைக்கின்றார்
லூக் 17: 11-19 இங்கே இயேசு நோரயன்னும் சுமையை இறக்கிவைக்கின்றார்
லூக் 19: 1-10 இங்கே இயேசு பாவிமனும் சுமையை இறக்கிவைக்கின்றார்
லூக் 7: 01-15 இங்கே இயேசு மரணரமனும் சுமையை இறக்கிவைக்கின்றார் .
திப 2: 1-13 இங்கே இயேசு பயமெனும் சுமையை இறக்கிலைக்கின்றார்
ஆக, இயேசுவின் திருவழகளில் சரணாகதி அடைகின்றவர்கள் சுமைகளிலிருந்து விடுதலை அடைந்து சுதந்தரக் காற்றைச் சுவாசிப்பார்கள்
இயேசு நீதி நிறைந்தவர் (முதல் வாசகம்) அவரவர்க்கு உரியதை அவரவர்க்குத் தவறாமல் தந்துவிடுவார் விண் மண் நீர் நெருப்பு, காற்று அனைத்தையும் அவர் கட்டுக்குள் கொண்டுவந்து, மகிழ்ச்சி தரும் அற்புதக் கருவிகளாக மாற்றுவார்
நாம் இறந்தால் கூட, இயேசு நம்முள்ளே வாழுகின்ற தூய ஆவியார் (இரண்டாம் வாசகம்) வழியாக சாவுக்குரிய நமது உடலை உயிர்த்தெழச்செய்து நம்மை வாழ்வாங்கு வாழவைப்பார்
ஆகவே, நமது நம்பிக்கை நிறைந்த கண்களை ஆற்றலும் அன்பும் மிக்க இயேசுவின் பக்கம் திரும்புவோம்
மேலும் அறிவோம் :
தனக்குவமை கல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள்: 7).
பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும் ஏனையோர் மனக்கவலை மாறாது.
ஆற்றங்கரையில் இருந்த தேள் ஒரு தவளையிடம், "எனக்கு நீந்தத் தெரியாது, என்னை உன் முதுகில் ஏற்றி ஆற்றின் மறு கரைக்குக் கொண்டு செல்" என்று கேட்டது. அதற்குத் தவளை தேளிடம், "நான் உன்னை என் முதுகில் ஏற்றிக்கொண்டு ஆற்றில் நீந்தும்போது பாதி வழியில் என்னைக் கொட்டிவிடுவாய்" என்றது. ஆனால் தேள் தவளையை அவ்வாறு கொட்டமாட்டேன் என்று சத்தியம் செய்ததன் பேரில், தவளை தேளைத் தன் முதுகில் ஏற்றி ஆற்றில் நீந்தியபோது நடு ஆற்றில் தேள் தவளையைக் கொட்டிவிட்டது. "சத்திய வாக்கை மீறி நீ என்னைக் கொட்டினாய்?" என்று தவளை தேளைக் கேட்டதற்குத் தேள் கூறியது: "நான் என்ன செய்வது? என் இயல்பை என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லையோ!"
நாம் நமது இயல்பை மாற்ற முடியவில்லை. சென்மப் புத்தி செருப்பால் அடித்தாலும் போகாது என்பது பழமொழி. ஆனால் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள். ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால் நீங்கள் வாழ்வீர்கள்" (உரோ 8:13), ஊன் இயல்பின் செயல்களில் ஒன்று: சீற்றம். அதாவது கோபம் (கலா 5:21). தூய ஆவியின் கனிகளில் ஒன்று: பொறுமை, அதாவது சாந்தம் (கலா 5:22). ஊன் இயல்பின் செயலாகிய கோபத்தைக் குழிதோண்டி புதைத்து விட்டு, ஆவியின் செயலாகிய பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
சினத்தை நாம் அடக்காவிட்டால் சினம் நம்மை அடக்கம் செய்துவிடும் என்று எச்சரிக்கின்றார் வள்ளுவர்,
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க, காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் (குறள் 305)
இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து தன் இயல்பைப் பற்றிக் கூறுகிறார்: "நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்" (மத் 11:29). கிறிஸ்துவின் தனிச்சிறப்புப் பண்புகள் கனிவும் மனத்தாழ்மையும், அதாவது, சாந்தமும் மனத்தாழ்ச்சியும், இவையே கடவுளின் தனிப் பண்புகள் என்று கூறுகிறது இன்றைய பதிலுரைப் பாடல்: "ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்" (திபா 145:8),
இன்றைய முதல் வாசகத்தின் சுருக்கம்: மெசியா சாந்தமுள்ளவராய்க் கழுதைக் குட்டியின்மேல் ஏறி அமைதியின் மன்னராக எருசலேில் நுழைவார் (செக் 95-10), செக்கரியாவின் இந்த "இறைவாக்கைக் கிறிஸ்து குருத்து ஞாயிறு அன்று நிறைவேற்றினார்" (மத் 21:1-5).
கிறிஸ்துவைப் பின்பற்றி நாமும் சாந்தம் உள்ளவராக வாழ இன்றைய அருள்வாக்கு வழிபாடு நம்மை அன்புடன் அழைக்கிறது. சாந்தம் உள்ளவர்கள் தான் கனிவுடையோர் (மத் 5:5) அவர்கள்தான் அனாவிம் என அழைக்கப்படும் இறைவனின் ஏழைகள்; இவர்களே நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் இவர்களில் முதல் இடம் வகிப்பவர் கிறிஸ்து. அவர் சிலுவைச் சாவை எற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழத்தினார் (பிலி 2:8)
இரண்டு பேர் கிணற்றில் குதித்தனர் அவர்களில் ஒருவர் தண்ணீரில் செத்தார் ஏனெனில் அவர் தலைக்கனம் பிடித்தவர் மற்றவர் தண்ணீர் மூழ்கால் மிதக்கின்றார்; ஏனெனில் அவர் மண்டை அவ்வாறே கிறிஸ்துவின் சீடர்களில் ஒரு சிலர் தலைக்கனம் பிடித்தவர்கள் முதலிடத்திற்காகரச் சண்டை போட்டனர் வெறு சிலர் கிறிஸ்துவின் போதனையை புரிந்துகொள்ள முடியாத, மந்தல் புத்தியுள்ள மரமண்டைகளாய்த் திகழ்ந்தனர். இந்திலையில் கிறிஸ்து அவர்களுக்குச் செய்முறை விளக்கம் கொடுத்தார். அவர்களுடைய காலடிகளைக் கழுவித் துடைக்தபின் அவர்களிடம், "நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” (யோவா 13:18) என்றார்
கிறிஸ்து செய்தது ஓர் அடிமையின் வேலை, பிறகுடைய பாதங்களைக் கழுவும் அளவுக்கு நாம் நம்மைத் தாழ்த்த வேண்டும் "ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள்” (கலா 5:13) என்று திருத்தூதர் பவுல் நமக்கு அறிவறுத்துகிறார். "அடியார்க்கு அடியார் ” என்று திருத்தந்தை கையொப்பமிடுகிறார்.
ஒரு தாய் தனது எழு வயது மகனைக் கடைக்குக் கூட்டச் சென்று தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையை வாங்கிக் கொடுத்தார் இப்போது அவன் அம்மாவிடம் "இது வேண்டாம்: அதுதான் நீ சொல்வதெற்கெல்லாம் தலை ஆட்ட வீட்டில் அப்பா இருக்கிறார். வேறு எதாவது உருப்படியாக வாங்கக் கொடு” என்றான்
பெரியவர்கள் சொல்வதற்கெல்லால் தலையை ஆட்டும் கீழ்ப்படிதல் முறையானது அல்ல, தமது கீழ்ப்படிதல் அறிவு சார்ந்த கீழ்ப்பதலாகவும் அதே நோத்தில் விசுவாசக் கீழ்ப்படிதலாகவும் இருக்கு வேண்டும் மரியா கன்னியாய் இருந்துகொண்டே மீட்பரின் தாயாக வேண்டும் என்று வானதூதர் கூறியபோது. "இது எப்படி நிகழும்?" நான் கன்னி ஆயிற்றே” (லூக் 1:24) என்று கேள்வி கேட்டார் வானதூதர் உரிய வணக்கம் கொடுத்த பின்னைரே, "நான் ஆண்டவருடைவ அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக் 1:38) என்றார்
கடவுள் தம்மை ஞானிகளுக்கு வெளிப்படுத்தாமல் குழந்தைகளுக்கு வெளிப்படுத்துவதாக இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறுகிறார் (மத் 13:25). குழந்தைகளிடத்தில் இறுமாப்பு,
செருக்கு இல்லை. "ஆண்டவரே என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை. தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது" (திபா 131:1-2)
குழந்தைகளின் உள்ளத்துடன் இறுமாப்பின்றி இருக்கும் போது, கிறிஸ்து நமது சுமைகளை எளிதாக்குவார் அவரது நுகம் அழுத்தாது: அவரது சுமை எளிது (மத் 11.30)
இதமான, சவாலான அழைப்பு
1970ம் ஆண்டு, ஏப்ரல் 11ம் தேதி, அப்பொல்லோ 13 என்ற விண்வெளிக்கலம் நிலவை நோக்கிப் பாய்ந்தது. அதில் பயணம் செய்த James Lovell, John Swigert மற்றும் Fred Haise என்ற மூன்று விண்வெளி வீரர்களும் நிலவில் காலடி பதித்துவிட்டு, பூமிக்குத் திரும்பும் நோக்கத்துடன், இந்தப் பயணம் ஆரம்பமானது. ஆனால், அப்பொல்லோ 13 புறப்பட்டுச் சென்ற இரு நாட்களில், அக்கலத்திலிருந்த ஆக்சிஜன் பேழையொன்று வெடித்ததால், அந்த விண்வெளிக்கலம் மீண்டும் பூமிக்குத் திரும்பவேண்டியதாயிற்று. பல ஆபத்தான பிரச்சனைகளைச் சமாளித்து, விண்வெளி வீரர்கள் மூவரும் பத்திரமாக பூமிக்குத் திரும்பினர். அந்த ஆபத்து நேரத்தில் திறமையாகச் செயல்பட்ட தலைவன், James Lovell அவர்களை உலகமே பாராட்டியது. அவருக்கு விருதுகள் பல வழங்கப்பட்டன.
ஒருமுறை, Lovell அவர்கள், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வேளையில், "இந்த விபத்து நடந்தபோது, நீங்கள் அதிகம் கவலைப்பட்டீர்களா?" என்று ஒருவர் கேட்டார். அர்த்தமற்ற வகையில் அந்தக் கேள்வி கேட்டவரை, சூழ இருந்தவர்கள் கேவலமாகப் பார்த்தனர். ஆனால், Lovell அவர்கள், அவருக்கு அழகான பதிலொன்றைக் கூறினார்: "இல்லை. நான் கவலைப்படவில்லை. கவலைப்படுவது பயனற்ற ஓர் உணர்ச்சி. அங்கு எழுந்த பிரச்சனையைத் தீர்ப்பது ஒன்றே என் எண்ணங்களை நிறைத்திருந்தது. எனவே, கவலைப்பட எனக்கு நேரமில்லாமல் போனது" என்று Lovell அவர்கள் பதில் சொன்னதும், கூடியிருந்த அனைவரும் கரவொலி எழுப்பி, அவரைப் பாராட்டினர்.
'கவலைப்படுவது பயனற்றது' என்பது, நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஓர் உண்மை. கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? (மத்தேயு 6: 27) என்று இயேசு கேட்கும் கேள்வியை முற்றிலும் ஆமோதிப்பவர்களாக இருந்தாலும், கவலைப்படுவதை நாம் நிறுத்துவதில்லை. கவலை என்ற சுமையால் கனத்துப் போயிருக்கும் நமக்கு, இயேசு தரும் அற்புதமானத் தீர்வு, இன்றைய நற்செய்தியில் ஓர் அழைப்பாக ஒலிக்கிறது. “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” (மத்தேயு 11: 28) என்று இயேசு விடுக்கும் இந்த அழைப்பு, நம்மைச் சிந்திக்க அழைக்கிறது.
கேட்பதற்கு எளிதாக, இதமாக ஒலிக்கும் இவ்வழைப்பை நம்மில் பலர் முழுமையாக நம்பி, ஏற்றுக்கொள்வதில்லை. இயேசு கூறுவது, எதார்த்தமான, நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராத வார்த்தைகள் என்றும், இதை ஓர் ஆன்மீக அழைப்பாக மட்டுமே கருதமுடியும் என்றும் நாம் நினைக்கிறோம். வயதில் வளர்ந்துவிட்ட நாம், வாழ்வில் சந்திக்கும் கவலைகளை, சுமைகளைச் சமாளிக்க, பல அறிவுப்பூர்வமான வழிகளைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கருதுவதால், இயேசு விடுக்கும் அழைப்பு மிக எளிமையானதாக, சிறுபிள்ளைத்தனமாகத் தெரிகிறது. எனவே அதை முழுமனதுடன் ஏற்க நமக்குள் தயக்கம் உருவாகிறது.
நமது தயக்கத்தைப் புரிந்தவர்போல, இயேசு, இந்த அழைப்பை விடுப்பதற்கு முன், ஓர் எச்சரிக்கையையும் விடுக்கிறார். இது, இன்றைய நற்செய்தியின் முதல் பகுதியாக ஒலிக்கிறது. இயேசுவின் வார்த்தைகளில் பொதிந்துள்ள பொருளை, விண்ணகத்தந்தை, ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்துகிறார் என்பதை இயேசு குறிப்பிடுகிறார். இயேசுவின் அழைப்பைப் புரிந்துகொள்ள, நாம் குழந்தை மனம் பெற்றிருக்கவேண்டும் என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார்.
நமது மனச்சுமைகளை, வாழ்வுச் சுமைகளை இறக்கிவைக்க, அல்லது அவற்றை மறப்பதற்கு உதவியாக இவ்வுலகம் காட்டும் வழிகள் ஏராளம். பிரச்சனைகளைத் தீர்ப்பதாக நினைத்துக்கொண்டு, இவ்வுலகம் காட்டும் தவறான பல வழிகளை எண்ணிப் பார்க்கும்போது, கதையொன்று நினைவுக்கு வருகிறது.
கோழிப்பண்ணை வைத்திருந்த ஒருவர், தன் பண்ணையில் திடீரென 10 கோழிகள் இறந்ததும், பயந்துபோய், அருகிலிருந்த கோழி வளர்ப்புத் துறை அலுவலகத்தைத் தேடிச் சென்றார். தன் கோழிகள் இறந்த விடயத்தை அவர் சொன்னதும், அங்கிருந்த ஓர் அதிகாரி, மீதமுள்ள கோழிகளுக்கு 'ஆஸ்பரின்' மருந்தைக் கொடுக்கச் சொன்னார். கோழி வளர்ப்பவர், அந்த மருந்தைக் கொடுத்த இரண்டு நாட்களில், மீண்டும் 20 கோழிகள் இறந்தன. இம்முறை அவ்வதிகாரி, வேப்பெண்ணெயைக் கொடுப்பது நல்லது என்று சொல்லி அனுப்பினார். அவ்விதமே செயல்பட்ட கோழிப்பண்ணைக்காரர், இம்முறை 30 கோழிகள் இறந்தன என்று முறையிட்டார். இம்முறை, 'பெனிசிலின்' கொடுத்தால் எல்லாம் சரியாகும் என்று சொல்லி அனுப்பினார், அனைத்தும் தெரிந்த அவ்வதிகாரி. 'பெனிசிலின்' கொடுக்கப்பட்ட இரு நாட்களில் பண்ணையில் இருந்த அனைத்து கோழிகளும் இறந்தன. இதைக் கேள்விப்பட்ட அதிகாரி, "சே! என்ன அவமானம்! என்னிடம் இன்னும் பலவகை மருந்துகள் உள்ளனவே! அவற்றையெல்லாம் முயற்சி செய்வதற்கு முன், அனைத்து கோழிகளும், இப்படி, அவசரப்பட்டு, அநியாயமாய், இறந்துவிட்டனவே!" என்று வருத்தப்பட்டார்.
வேடிக்கையாக ஒலிக்கும் இந்த உவமை, இவ்வுலகின் போக்கை படம்பிடித்துக் காட்டுகிறது. பிரச்சனைகளை இவ்வுலகம் எவ்விதம் தீர்க்கின்றது என்ற பாடத்தையும் சொல்லித்தருகிறது. "பெருஞ்சுமை சுமந்திருப்போரே, வாருங்கள்! இதோ, உங்களுக்காகவே நாங்கள் உருவாக்கியுள்ள விடுமுறைத் திட்டம்!" என்றோ, "இந்த மாத்திரையை விழுங்கினால், பத்து நொடியில் பறந்திடும் உங்கள் சுமைகள்!" என்றோ கூவிக் கூவி விற்கும் எத்தனை விளம்பரங்களை நாம் பார்த்திருக்கிறோம்!
நாம் சுமக்கும் சுமைகளுக்கு, கடற்கரை விடுமுறைகள், மயக்கம்தரும் மருந்துகள், மதுபானங்கள், போதைப் பொருள்கள் போன்றவை, தீர்வாக அமையும் என்று, இவ்வுலகம் சொல்லித் தருகிறது. இத்தீர்வுகள், நம் சுமைகளை மறக்கவும், மறுக்கவும் தூண்டும், பொய்யான வழிகள். சுமைகளிலிருந்து தப்பிக்கும் வழிகள்.
இதற்கு நேர்மாறாக, இயேசு தருவது, பொய்யான, தவறான வாக்குறுதி அல்ல. சுமைகளுடன் அவரிடம் சென்றால், இளைப்பாறுதல் கிடைக்கும் என்பதே, அவர் தரும் வாக்குறுதி. என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். (மத்தேயு 11: 29) என்பது இயேசு விடுக்கும் அர்த்தமுள்ள அழைப்பு. இவ்வழைப்பில் இயேசு பயன்படுத்தும் நுகம் என்ற உருவகம், நம்மைச் சிந்திக்க அழைக்கிறது.
இரு மாடுகளைக் கொண்டு நிலத்தை உழும்போது, அவ்விரு மாடுகளும் இணைந்து செயல்பட, அவற்றின் கழுத்துப் பகுதியை இணைப்பதற்குப் பொருத்தப்படும் கட்டையை நுகம் என்று அழைக்கிறோம். கலிலேயா பகுதியில், நுகம் செய்யும் கலையில் தேர்ச்சி பெற்றவர் இயேசு; எனவே, அவர் அனுபவத்திலிருந்து, இந்த வார்த்தைகளைக் கூறுகிறார் என்று, புகழ்பெற்ற விவிலிய விரிவுரையாளர், வில்லியம் பார்க்லே (William Barclay) அவர்கள் கூறியுள்ளார். நாசரேத்தில், இயேசுவின் தச்சுக்கூடத்தின் மீது விளம்பரப் பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தால், அதில், "உங்களுக்குப் பொருத்தமான நுகம் இங்கு செய்து தரப்படும்" என்ற வார்த்தைகளே பொறிக்கப்பட்டிருக்கும் என்று, பார்க்லே அவர்கள், இந்த வரிகளுக்கு விளக்கம் தரும்போது, குறிப்பிட்டுள்ளார்.
"என் நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று இயேசு விடுக்கும் இவ்வழைப்பை, இரு வழிகளில் சிந்திக்கலாம். ஒன்று, இயேசு, தன் தச்சுக்கலைத் திறமையால், நம் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான நுகத்தையே செய்து தருவார். அதாவது, நம்மை அழுத்தி, வதைக்காத நுகத்தையே, அவர், நம் தோள்மீது சுமத்துவார் என்ற கோணத்தில் சிந்திக்கலாம். அல்லது, இயேசுவிடம் வந்தால், நுகத்தை நாம் தனியே சுமக்கத் தேவையில்லை அவர் ஏற்கனவே அந்த நுகத்தின் மறுபாதியைச் சுமந்தவண்ணம் நிற்கிறார்; அந்நுகத்தில் இணைந்து தோள்கொடுப்பதற்கு நம்மை அழைக்கிறார் என்ற கோணத்திலும் சிந்திக்கலாம். இயேசுவோடு இணைந்து நாம் சுமப்பதனால், "என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது" என்பதையும் அவர் இன்றைய நற்செய்தியில் உறுதியாகக் கூறியுள்ளார்.
“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்” என்று இயேசு அழைக்கும்போது, என்னிடம் வந்தால், உங்கள் சுமைகளைப் பறந்தோடச் செய்வேன் என்ற பொய்யான விளம்பரத்தை இயேசு தரவில்லை. மாறாக, அவர் சொல்வதெல்லாம் இதுதான்: "சுமையோடு என்னிடம் வாருங்கள். நான் ஒரு சுமைத்தாங்கியாக இருந்து, உங்கள் சுமைகளை ஏற்றுக்கொள்வேன். உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என்னுடன் இணைந்து நீங்களும் நுகத்தை ஏற்று, உங்கள் பணியைத் தொடருங்கள். நான் உங்களுடன் இருப்பதால், நீங்கள் சுமக்கும் நுகம் அழுத்தாது, சுமையும் எளிதாகும்" என்பதே, சுமைகளைச் சமாளிக்க, இயேசு கூறும் தீர்வுகள்.
சுமைகளைச் சுமப்பது, ஒவ்வொருவர் வாழ்விலும், தவிர்க்கமுடியாத எதார்த்தம். இருப்பினும், நாம் சுமப்பது, தேவையான சுமைதானா என்பதைப் புரிந்துகொள்ளும் தெளிவு நமக்குத் தேவை. பெரும்பாலான நேரங்களில், தேவையற்ற சுமைகளை நமக்கு நாமே சுமத்திக்கொண்டு, அவற்றின் பாரத்தால் நொறுங்கிப் போகிறோம். எனவே, தேவையான சுமை எது, தேவையற்ற சுமை எது என்று இனம் காணும் தெளிவு நமக்குக் கிடைக்கவேண்டும் என்று, முதலில் மன்றாடுவோம்.
வாழ்வில் நாம் சுமக்க வேண்டிய, தேவையான சுமைகளை நாம் தனியே சுமப்பதில்லை. இயேசுவும் நம்முடன் இணைந்து தோள் கொடுக்கிறார். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளவும், நம்பி ஏற்றுக்கொள்ளவும், இறைவனின் வரத்தை வேண்டுவோம். இந்த வேண்டுதலுக்கு, புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் பரிந்துரையை நாம் நாடலாம். ஏனெனில் அவர் தன் சுமைகளை எவ்விதம் சுமப்பது, எவ்விதம் இறக்கிவைப்பது என்ற பக்குவத்தைப் பெற்றிருந்தார்.
புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், 2ம் வத்திக்கான் பொதுச் சங்கத்தைத் துவக்கியவேளையில், பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. அவ்வேளையில், அவர், ஒவ்வோர் இரவும், உறங்கப் போவதற்குமுன், சிறு செபம் ஒன்றைச் சொன்னார்: "ஆண்டவரே, இயேசுவே, நான் இப்போது உறங்கச் செல்கிறேன். இது உமது திருஅவை. இதனை நீர் பாதுகாத்தருளும்" என்ற வார்த்தைகளுடன் உறங்கச் சென்றதால், தன்னால் நிம்மதியாக உறங்க முடிந்தது என்று அவர் கூறியுள்ளார்.
2ம் உலகப் போர் நிகழ்ந்த வேளையில், அமெரிக்க அரசுத் தலைவராக இருந்த Dwight Eisenhower அவர்கள், பிரச்சனைகளின் பாரத்தால் பல நாட்கள் துவண்டார். அந்நாட்களில் உறங்கச் செல்லும் முன் அவர், "இறைவா, என்னால் முடிந்த அளவு நல்ல முறையில் இன்று நான் செயல்பட்டுள்ளேன். நாளை விடியும்வரை, நீர் இனி செயலாற்றும்" என்ற செபத்துடன் உறங்கச் சென்றார்.
“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” என்று இயேசு விடுக்கும் அழைப்பை முழுமனதுடன் நம்பி, அவரை அணுகி, நம் சுமைகளைச் சிறிது நேரம் இறக்கிவைத்து, இளைப்பாறுதல் தேடப் பழகிக் கொள்வோம். நமது சுமைகளை நீக்குவதற்கு எளிதான, விரைவான, பொய்யான, தவறான வழிகளைச் சொல்லித்தரும் இவ்வுலகப் பாடங்களை இதுவரை நாம் கற்றுவந்திருந்தால், அவற்றை மறப்பதற்கும், மறுப்பதற்கும் தேவையான உள்ளொளியையும், உறுதியையும் இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்றும் வேண்டிக்கொள்வோம்.
இளைப்பாறுதல் தரும் இயேசு
நிகழ்வு
ஜெசி, மெர்சி என்று தோழிகள் இருவர் இருந்தனர். இருவரும் சிறுவயதிலிருந்தே அவ்வளவு நெருக்கம்; ஒரே பள்ளிக்கூடத்தில்தான் படித்தார்கள்; ஒரே ஊரில்தான் திருமணமும் செய்துகொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு இருவடைய வாழ்க்கையும் மாறிப்போனது. ஜெசி சாதாரண குடும்பத்தில் வாக்கப்பட்டாலும், அவளுடைய கணவர் அவளை நல்லமுறையில் பார்த்துக்கொண்டார். மெர்சி வசதியான குடும்பத்தில் வாக்கப்பட்டாள். ஆனால், அவளுடைய கணவர் கொஞ்சம் ஊதாரியாக இருந்தார். இதனால் மெர்சி தன்னுடைய தோழி ஜெசியிடம் எப்பொழுதும் தன்னுடைய கணவரைப் பற்றிப் புலம்பத் தொடங்கினாள். தொடக்கத்தில் தன்னுடைய கணவரைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருந்த மெர்சி, பின்னர் சிறு சிறு பிரச்சனைகளையெல்லாம் அவளிடம் சொல்லிப் புலம்பத் தொடங்கினாள். இதனாலேயே மெர்சியின் வாழ்க்கை நிம்மதியில்லாமல் போனது.
இப்படி இருக்கையில், ஒருநாள் ஜெசி தன்னுடைய தோழி மெர்சியைப் பார்த்தபொழுது மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்பட்டாள். அவளைப் அப்படிப் பார்த்து நீண்ட நாள்கள் ஆகியிருந்தன. அதனால் ஜெசி, மெர்சியிடம், “உனக்கு என்னாயிற்று...? இன்றைக்கு இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றாயே!” என்றார்.
உடனே மெர்சி அவளிடம், “நேற்றிரவு நான் ஒரு கனவு கண்டேன். அந்தக் கனவில் எல்லாரும் ஒரு நீண்ட சாலையில் தங்களுடைய சுமைகளை எல்லாம் மூட்டையாகக் கட்டி, சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு சென்றார்கள். நானும் என்னுடைய சுமைகளைச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு சென்றேன். திடீரென்று எனக்கு முன்பாக இயேசு வந்து நின்றார். அவரிடம் நான், ‘இயேசுவே! என்னுடைய சுமையெல்லாம் இறக்கி வைத்து விட்டு, எனக்கு இளைப்பாறுதல் தாரும்’ என்றேன். அவரோ, ‘நீ சுமந்துகொண்டிருப்பதோ சாத்தானின் சுமை. அதையெல்லாம் என்னால் இறக்கி வைக்க முடியாது. நீதான் அதைத் தூக்கிக் கீழே போடவேண்டும். முதலில் சாத்தானின் சுமையைக் கீழே தூக்கி எறி. அப்பொழுது நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்று சொல்லிவிட்டு மறைந்து போனார்.
நான் தூக்கத்திலிருந்து எழுந்தபொழுது, இத்தனை நாள்களும் நான் சாத்தானின் சுமையைத்தான் சுமந்து கொண்டிருந்திருக்கிறேன்; இயேசுவின் சுமையை அல்ல என்ற உண்மை விளங்கியது. அதனால் நான் சாத்தானின் சுமையைத் தூக்கி எறிந்துவிட்டு, இயேசுவின் சுமையைச் சுமந்துகொண்டேன். அதனால்தான் நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்” என்றாள்.
ஆம். பல நேரங்களில் நாம் சுமைகள் என்று தூக்கச் சுமக்கின்ற சுமைகள் யாரும் சாத்தான் தருகின்ற சுமைகளாக இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பொதுக்காலத்தின் பதினான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, இயேசு தரும் சுமையை அல்லது இயேசு தரும் இளைப்பாறுதலைப் பெற நாம் என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
சுமைகளால் பாழாகும் மனித வாழ்க்கை
மனிதர்களாகிய நாம் இன்றைக்குப் பலவிதமான சுமைகளைத் தூக்கிக்கொண்டு அலைகின்றோம். இதனால் நம்முடைய வாழ்க்கையே பாழாகி, நிம்மதியில்லாமல் போய்விடுகின்றது. ஒவ்வொருநாளும் நாம் சுமக்கக்கூடிய சுமைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, சாத்தான் நம்மீது சுமத்தக்கூடிய சுமை. இதனை நாம் பார்த்த மேலே பார்த்த சுமையோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். பலநேரங்களில் நாம் கடந்த காலத்தைக் குறித்த கவலை... எதிர்காலத்தைக் குறித்த அச்சம்... இப்படித் தேவையில்லாதவற்றை எல்லாம் சுமையாகச் சுமந்துகொண்டு அலைகின்றோம். என்றைக்கு நாம் அதைத் தேவையில்லாத சுமை என்றும், சாத்தனுடைய சுமை என்றும் உணர்கின்றோமோ, அன்றைக்கு நாம் அதை உதறித் தள்ளிவிட்டுவிட்டு, மகிழ்ச்சியாக வாழலாம்.
நாம் சுமக்கக்கூடிய இரண்டாவது சுமை, நமக்கு மேலே அதிகாரத்தில் உள்ளவர்கள் நம்மீது சுமத்தக்கூடிய சுமை. இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்த சாதாரண மக்கள்மீது அதிகாரத்தில் இருந்த பரிசேயர்கள் ‘சட்டம்’ என்ற சுமக்க முடியாத சுமைகளைச் சுமத்தினார்கள் (மத் 23: 1-4). அதனால் மக்கள் மிகவும் துன்பப்பட்டார்கள். இன்றைக்கும் கூட நம்மை ஆளக்கூடியவர்கள் தேவையில்லாதையெல்லாம் நம்மீது சுமத்திக்கொண்டிருக்கின்றார்கள். இவற்றையெல்லாம் நாம் ஓர் அமைப்பாகத் திரண்டு எழுகின்றபொழுது, அப்புறப்படுத்த முடியும் என்பது உறுதி. நாம் சுமக்கக்கூடிய மூன்றாவது சுமை, இயேசுவின் சுமை; ஆனால், இதை நாம் சுமை என்று சொல்வதை விடவும் சுகமான சுமை அல்லது இளைப்பாறுதல் என்று சொல்வதே சிறந்தது.
இயேசுவின் சுமை எத்தகையது?
இயேசு தரும் சுமையைச் சுமக்க அல்லது அவர் தரும் இளைப்பாறுதலைப் பெற, நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னால், அச்சுமை எத்தகையது என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வது நல்லது.
இயேசு தரும் சுமை அல்லது இளைபாறுதல் என்பது துன்பமே இல்லாத வாழ்வு கிடையாது. மாறாகத் துன்பங்களை துணிவோடு தாங்கிக்கொள்ளக்கூடியது. மேலும் இத்தகைய இளைப்பாறுதல் நாம் இயேசுவிடம் விளங்கும் கனிவு, மனத்தாழ்மை, இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கக்கூடிய நீதி, எளிமை ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதால் வரக்கூடியது. இன்றைக்கு ஒருசில போலிப் போதகர்கள் ‘என்னிடம் வந்தால் நிம்மதி கிடைக்கும்’, ‘மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும்’ என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். இயேசு அப்படிப் போலியான அறிவிப்பைக் கொடுக்கவில்லை. மாறாக, கனிவின் வழியாக, மனத்தாழ்மையின் வழியாகக் கிடைக்கின்ற இளைப்பாறுதலைத் தருவதாகக் கூறுகின்றார்.
இயேசு அளிக்கும் இறைப்பாறுதலைப் பெற என்ன செய்வது?
இயேசு தருகின்ற இளைப்பாறுதல், இந்த உலகம் தருகின்ற இளைப்பாறுதலைப் போன்றது அல்ல, அது கனிவின் வழியாக, மனத்தாழ்மையின் வழியாகக் கிடைக்கக்கூடாது என்று பார்த்தோம். இத்தகைய இளைபாறுதலைப் பெற ஒருவர் என்ன செய்யவேண்டும் என்கின்ற கேள்வி எழுகின்றது.
இன்றைய நற்செய்தியின் தொடக்கத்தில் இயேசு, “...ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்” என்று தந்தையைப் போற்றிப் புகழ்வார். ஆம், கடவுளின் வெளிப்பாடு மட்டுமல்ல, அவர் தருகின்ற இளைபாறுதலும் குழந்தைகளுக்கும், குழந்தை உள்ளம் கொண்டுவர்களுக்கும் மட்டுமே கிடைக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் குழந்தையின் உள்ளம் கொண்டிருப்பவரிடமே கனிவும் மனத்தாழ்மையும் குடிகொண்டு இருக்கின்றன. அப்படியானால், நாம் இயேசு தருகின்ற இளைப்பாறுதலைப் பெற, நம்மிடம் இருக்கின்ற ஆணவத்தை அகற்றிவிட்டு, மனத்தாழ்மைமையோடு வாழ்வது இன்றியமையாதது. ஆகையால், நாம் இயேசு தருகின்ற இளைப்பாறுதலை, அவர் தருகின்ற சுகமான சுமையைப் பெற மனத்தாழ்மையோடும் தாழ்ச்சியோடும் வாழக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனை
‘இறைவனை அடைய ஒரே பாதைதான் உண்டு. அதுதான் தாழ்ச்சி. மற்ற பாதைகள் வேறிடங்களுக்குக் கொண்டுபோய் விடும்’ என்பார் பாய்லியோ என்ற சிந்தனையாளர். ஆகையால், நாம் இறைவனையும் அவர் அளிக்கும் இளைப்பாறுதலையும் பெற, மனத்தாழ்மையோடும் கனிவோடும் வாழப் பழகி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
