ஒரு முறை இங்கிலாந்து நாட்டைப் பகைவர்கள் தாக்கினார்கள். இங்கிலாந்து அடியோடு அழிந்துவிடுமோ என்று மக்கள் அஞ்சினார்கள். அரசனோ அந்த நாட்டின் சரித்திரத்தை அழியவிடக் கூடாது எனக் கருதி குழந்தைகளையெல்லாம் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்ல ஆணையிட்டார். எல்லாக் குழந்தைகளும் புகைவண்டியிலே ஏற்றப்பட்டார்கள். ஆனால் ஒரு ஐந்து வயது சிறுமி தேம்பித் தேம்பி அழுதாள். அவளது 8 வயது அண்ணன் ஏன் அழுகிறாய் என்று கேட்டான். எனக்குப் பயமாக இருக்கிறது என்று சொன்னாள் அந்தச் சிறுமி. சிறிது நேரம் யோசித்த சிறுவன், தங்கச்சி! பயப்படாதே! நம் அரசன் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு போகும்படி ஆணையிட் டிருக்கிறார். நானும் உன்னோடு இருக்கிறேன், பயப்படாதே! என்று தங்கையைத் தட்டிக் கொடுத்தான். ஆம்! இந்த நிகழ்ச்சியை நம் வாழ்வோடு இணைத்து ஒப்பிடலாம். துன்பத்தால் துயரத்தால் அழுகின்ற இன்றைய சமுதாயத்தை அந்தச் சிறுமிக்கு ஒப்பிடலாம். ஆறுதல் சொன்ன அண்ணன்தான் நம் மூத்த சகோதரர் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. வண்டியை ஓட்டிச் செல்ல ஆணையிட்டவர் நம் வானகத் தந்தை.
இன்றைய நற்செய்தியிலே, அஞ்சாதீர்கள்! காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றில் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றி தரையில் விழாது. உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. சிட்டுக் குருவிகள் பலவற்றையும் விட நீங்கள் மேலானவர்கள் (மத். 10:29-81) என்கிறார் நம் ஆண்டவர் இயேசு.
இன்றைய முதல் வாசகத்திலே வாசிக்கக் கேட்டதுபோல, இறைவனின் செய்தியை எரேமியா, அரசனிடம் எடுத்துரைத்த போது, அரசனோ அச்செய்திக்குச் செவிமடுப்பதற்குப் பதிலாக, எரேமியாவை தேசத்துரோகி என குத்தி, துன்புறுத்த ஆரம்பித்தான். ஏன்! தன் நண்பர்கள்கூட எரேமியாவின் - வீழ்ச்சிக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்தக் கொடுரமான பிரச்சனைகள் மத்தியில் எரேமியா ஓடி ஒளிந்தாரா? இல்லை! இறைவன் தன்னோடு இருப்பதை உணர்ந்தார். உறுதியான மனநிலையோடு எதிர்கொண்டார்.
நான் உன்னோடு இருப்பேன் (வி.ப. 3:12) என்று கடவுள் சொன்னதை ஏற்று நம்பியபோது மோசேயின் அச்சம் நீங்கியது.
கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை (லூக். 1:37) என்பதை ஏற்றபோது, அன்னை மரியாவின் பயம் நீங்கியது.
கடவுள் நம் சார்பாக இருக்கும்போது நமக்கு எதிராக இருப்பவர் யார்? கடவுளின் அன்பினின்று நம்மைப் பிரிப்பவன் யார்? (உரோ. 8:31,35) என்று துணிந்து போதித்தார் திருத்தூதராகிய புனித பவுல் அடிகளார்.
கவிஞன் பாரதி பாடினார்:
அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பதில்லையே! இச்சகத்தோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே!
பிரச்சனையற்ற மனித வாழ்வு இருக்க முடியாது. துன்பமில்லா வாழ்வு இன்பத்தை உணர வைக்க முடியாது. எனக்கு இனிப்புதான் பிடிக்கும் என்று தினமும் அல்வாவை அல்லது லட்டை தின்றால் நமக்கு என்ன ஆகும் என்பது தெரியுமல்லவா! கொஞ்சம் காரமும் சாப்பிட்டால்தான் முடியும். எனவே பிரச்சனைகளைக் கண்டு நாம் பயந்து ஓடுவோமென்றால் அது நாய் துரத்துவதுபோல நம்மைத் துரத்தும். எதிர்த்து நின்றால் அது நம்மை விட்டு விலகி ஓடும். எனவே பிரச்சனைகளை எதிர்கொள்ள இரண்டு விதமான நிலைகள் நமக்குத் தேவை. முதலாவதாக நம்மிடம் இறைவன் ஆற்றல்களையும், வல்லமையையும் தந்துள்ளார் என்பதை இனம் காண வேண்டும்.
ஒருவன் கோழியைக் கண்டால் பயந்து ஓடுவான். எனவே மனநோய் நிபுணரிடம் கொண்டு வந்தார்கள். ஏன் பயப்படுகிறாய் என்று நிபுணர் கேட்டபோது, டாக்டர் நான் ஒரு புழு. என்னை எல்லோரும் புழு என்றுதான் அழைக்கிறார்கள். எனவே கோழி என்னைக் கொத்தித் தின்ன வருகிறது. எனவே நான் பயந்து ஓடுகிறேன் என்றார். மனநோய் டாக்டர் தன் திறமைகளையெல்லாம் பயன்படுத்தி நீ ஒரு புழு அல்ல, நீ ஒரு மனிதன், பயப்படாதே என்று சொல்லி ஆற்றுப்படுத்தி வீடு அனுப்பினார். ஆனால் வீடு சென்றவர் மறுபடியும் கோழியைக் கண்டு பயந்து ஓடினார். எனவே திரும்பவும் மனநோய் டாக்டரிடம் கொண்டு வந்தார்கள். அப்போது டாக்டர், நீ மனிதர்தானே, பின் ஏன் பயந்து ஓடுகிறாய் என்று' கேட்டபோது, டாக்டர்! நான் புழு அல்ல என்பது எனக்குத் தெரிகிறது. ஆனால் அந்தக் கோழிக்குத் தெரியாது அல்லவா என்றார். இதேபோலத்தான் மனிதர் தன் ஆற்றலையும் ஆக்க சக்தியையும் சுய அடையாளத்தையும் அறியாத நிலை. இப்படிப்பட்டவர் எண்ணிக்கை இன்று சமுதாயத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இறைவன் நம்மோடு இருந்து தன் ஆற்றலால் நம்மைப் பலப்படுத்திக் கொண்டே. இருக்கிறார் என்ற மனநிலையை நாம் கொண்டிருக்க வேண்டும். கடவுள் நமக்கு அடைக்கலமும், ஆற்றலுமாய் உள்ளார். இடுக்கண் உற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையாக உள்ளார் (திபா. 46:1) என்ற திருப்பாடல் இந்த உண்மையை உறுதிப்படுத்துகிறது.
இன்றைய மனோதத்துவ அறிஞர்களின் கருத்துப்படி மனிதரின் உணர்வுகள் இரண்டு மட்டுமே. ஒன்று அன்பு, இரண்டாவது அச்சம். அன்பால் அனைத்தையும் வெல்கிறான். அச்சத்தால் அனைத்தையும் இழக்கிறான். அன்பு ஒருவரை மனிதராக்குகிறது. அச்சம் ஒருவரைக் கோழையாக்குகிறது. இறைவனின் துணை நம் பக்கம் என்று எண்ணும்போது அச்சம் மறைகிறது. ஆதிக்கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். ஆனால் இயேசுவின் விழுமியங்களும், இறை சார்புத் தன்மையும் அவர்களை அஞ்சவிடவில்லை. இறைவனின் ஆற்றலும், பராமரிப்பும் நிச்சயமாக நமக்கு உண்டு என்று உணர்ந்த ஆதிக் கிறிஸ்தவர்கள், உடலைக் கொல்லுவோருக்காக அஞ்சவில்லை.
அச்சமின்றி வாழ நாம் என்ன செய்ய வேண்டும்? விவிலியத்தில் 365 முறை அஞ்சாதீர்கள் என்ற ஆண்டவர் வார்த்தை நமக்குத் தரப்பட்டுள்ளது. ஆண்டவர் என் நல்லாயன். பசும்புல் தரையில் சேர்ப்பார். நீர் நிலைகளுக்கெல்லாம் அழைத்துச் செல்வார். காரிருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் எனக்குப் பயமே இல்லை (திபா. 23) என்பதை உணர்ந்தோம் என்றால் நாம் தைரியம் பெறுவோம். ஏனெனில் நம் ஆண்டவர் கண்ணுக்கு நாம் விலையேறப்பட்டவர்கள். மதிப்புக்குரியவர்கள் (எசா. 43:4). எனவே இறைவனின் மாறா அன்பில் சந்தேகமின்றி நம்பிக்கை கொள்வோம்.
நம்பிக்கை என்னும் தீபத்தை ஏற்றி வைப்போம் !
இன்றைய நற்செய்தியில் இயேசு, அஞ்சாதிருங்கள் [மத் 10:31) என்கின்றார். அஞ்சுதல் என்றால் பயப்படுதல். நாம் சாதாரணமாக எப்பொழுது பயப்படுகின்றோம் ? நாம் தனிமைப்படுத்தப்படும்போது பயப்படுகின்றோம்.
“தம்பி உடையான் படைக்கு அஞ்சான்' என்பார்கள். நமக்குத் துணைபுரிய யாராவது நம் அருகிலிருந்தால், நாம் எதைக் கண்டும், யாரைக் கண்டும் அஞ்சுவதில்லை. மாறாக தனிமை நம்மை பற்றிக் கொள்ளும்போது அச்சமும் நம்மை பற்றிக்கொள்கின்றது.
ஒருமுறை வேளாங்கண்ணித் திருவிழாவின்போது தொண்ணூற்றெட்டு குழந்தைகள் காணாமல் போய்விட்டார்கள். அத்தனை குழந்தைகளும் கண்டுபிடிக்கப்பட்டார்கள். ஆனால் தங்களுடைய தாய் தந்தையரை, உற்றாரை, உறவினரை, நண்பரை, அன்பரைக் காண்பதற்கு முன்னால் அந்தக் குழந்தைகள் அழுத அழுகை இருக்கின்றதே! அந்தோ பரிதாபம்! எத்தனையோ கங்கைகளும், காவிரிகளும் அந்தக் குழந்தைகள் காப்பகத்திலே ஆறாய்ப் பெருக்கடுத்து ஓடின! அவர்கள் ஏன் அழுதார்கள்? பயப்பட்டதால், அஞ்சியதால் அவர்கள் அழுதார்கள்! ஐயோ நான் தனியாக இருக்கின்றேனே என்ற எண்ணம் அவர்களை அழவைத்தது ! தாயையோ, தந்தையையோ அவர்கள் கண்டதும் அவர்கள் அழுகை நின்றது.
இன்று இயேசு நம்மைப் பார்த்து, காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றில் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. சிட்டுக்குருவிகள் பலவற்றையும் விட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதீர்கள் (மத் 10:29-31) என்கின்றார்.
வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவிக்கும் ஆற்றல் கடவுளுக்கு உண்டு (முதல் வாசகம்]. நம்மைப் படைத்த கடவுள் நம்மை ஒரு போதும் கைவிடமாட்டார் என நாம் நம்பும்போது நம்மை எப்படிப்பட்ட அச்சமும் நெருங்காது. நான் உன்னோடு இருப்பேன் [விப 3:12௮) என்று கடவுள் சசான்னதை ஏற்றுக்கொண்டபோது, மோசே மனத்திலிருந்த அச்சம் நீங்கியது.
கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை [லூக் 1:37] என்பதை நம்பியபோது, அன்னை மரியா மனத்திலிருந்த பயம் மறைந்தது.
கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? (உரோ 8:31) என்கின்றார் பவுலடிகளார்.
நாம் படும் துன்பங்களையும், துயரங்களையும், நாம் எதிர்கொள்ளும் எதிரிகளையும், ஆபத்துக்களையும் பார்த்துக்கொண்டு நம் கடவுள் ஒருபோதும் கைகட்டி நிற்கவும் மாட்டார், கைகொட்டி சிரிக்கவும் மாட்டார். நம்மீது கொண்ட அன்பினால் தம் ஒரே மகனை இந்த உலகிற்குக் கடவுள் அனுப்பிவைத்தார் [யோவா 3:16) என்று யோவான் கூறுகின்றார். அந்தத் திருமகனாகிய புதிய ஆதாமோ, நாமிழந்த வாழ்வை இறைவனிடமிருந்து நமக்குப் பெற்றுத் தந்தார் என்கின்றார் புனித பவுலடிகளார் [இரண்டாம் வாசகம்].
இன்று நமது இதயக் கோயிலில் கடவுள் நம்பிக்கை என்னும் தீபத்தை ஏற்றிவைப்போம்! ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு சந்தேகம் என்னும் காற்றால் அணையாது காத்து நிற்போம்!
மேலும் அறிவோம் :
தனக்குவமை கல்லாதான் தாள்சசர்ந்தார்க்(கு) அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 2).
பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடூம். ஏனையோர் மனக்கவலை மாறாது.
அஞ்சாமை கிறிஸ்தவ உடைமை
ஓர் ஆலயத்தில் புகழ்பெற்ற நற்செய்தியாளர் ஒருவர் போதிக்க எழுந்தார். அவையின் முன்வரிசையில் அந்த நாட்டு அரசன் இருப்பதைக் கண்டதும் சிறிது அதிர்ந்தார். காரணம், அந்த அரசன் அவ்வளவு நல்லவன் அல்ல. மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படுபவன். நற்செய்தி அறிவிப்பில் அவனது தீமைகளைச் சுட்டிக்காட்டாமல் எப்படிப் பேச முடியும்? அதன் விளைவு என்னவாயிருக்கும்? உரையாற்றத் தொடங்குமுன் ஒருகணம் தனக்குள்ளே உரக்கச் சொல்லிக் கொண்டார்: “என் நெஞ்சே, நீ என்ன பேசப்போகிறாய் என்பது குறித்து எச்சரிக்கையாய் இரு. ஏனெனில் இந்த நாட்டின் அரசன் இங்கே இருக்கிறான்”. மறுகணம் மாற்றிச் சொன்னார்: “என் நெஞ்சே, நீ என்ன பேசத் தயங்குகிறாய், தவறுகிறாய் என்பது குறித்துக் கவனமாயிரு. ஏனெனில் அரசருக்கெல்லாம் அரசர் இறைவன் இங்கே உன்முன் இருக்கிறார்”.
தீமையைக் கண்டு சீறி எழ இயேசு என்றும் அஞ்சியதில்லை. இயேசுவைப் பின்பற்றும் சீடர்களுக்கு இயேசுதானே அளவுகோல். இயேசுவின் சீடன், தீமை தன்னை அச்சுறுத்தவிடலாமா? புகழ் பெற்ற ஜான் நாக்ஸ் என்பவரது கல்லறையில் இன்றும் காணப்படும் வாசகம் இது : “கடவுளுக்கு மட்டுமே பயந்த இந்த மனிதர், மனிதருக்கு ஒருபோதும் பயப்படாதவராக இருந்தார்".
கிறிஸ்தவச் சாட்சிய வாழ்வில் நமக்கு வலிகளும் வேதனைகளும் வருவது இயல்பு. ஆனால் இயேசுவின் பேரன்பு கலந்த வல்லமையால் ஆட்கொள்ளப்பட்டு அவருக்காக நாம் வாழ்ந்து வரும் போது, வேதனை வலிகள் எல்லாம் நமக்கு அதிசய இறையாசீராக அமையும். நாம் இறைமகனோடு ஒன்றித்து அவரில் வாழ்ந்து வரும்போது வேறு எந்த மனித ஆதிக்கச் சக்திக்கும் அஞ்சவேண்டியதில்லை. ஏனெனில் நம்மைக் கண்ணின் கருவிழியெனக் காப்பவர் நம் அருகில் உள்ளார்.
விடுதலை உணர்வைத் தூண்டவே பாரதி “உச்சி மீது வானிடிந்து வீழினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே" என்று முழங்கினார். சிலர் எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்குவார்கள். வேறு சிலர் எதற்கும் பயப்படாமல் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்று முரட்டுத்தனமாக இருப்பார்கள். இயேசு அறிவித்த விடுதலைப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் யாருக்கு அஞ்சவேண்டும், யாருக்கு அஞ்சக்கூடாது என்பது பற்றி நற்செய்தி அழுத்தமாகத் தெளிவுறுத்துகிறது. "ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்” (மத். 10:28)
சிலருக்கு எதற்கும் அச்சம். காரணம், தங்கள் போலி வாழ்க்கையின் முகமூடி கிழியுமோ, சாயம் வெளுக்குமோ என்ற பயம். இயேசு எதற்கும் எவருக்கும் அஞ்சாதவர். தன்னைக் கன்னத்தில் அறைந்த காவலரிடம் "நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்? " (யோ. 18:23) என்று கேட்டவரல்லவா இயேசு! வாய்மையின் வாழ்வு அவருடையது. உண்மையை உரைத்துத் துணிவுடன் இருந்தால், இறையச்சத்தோடு செயல்பட்டால் இறைப்பராமரிப்பில் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தால் உலகத்தில் நாம் எவருக்கும் அஞ்ச வேண்டாம்.
ஜெர்மனி நாட்டுப் பேரரசன் பெரிய பிரடரிக்கு (கி.பி. 1712- 1781) தனது நாட்டில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்றார். அவர் வகுப்பறையில் நுழைந்தபோது ஆசிரியை புவியியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அரசர் ஒரு சிறுமியை அழைத்து அவளது இருப்பிடம் எங்குள்ளது? என்று கேட்டதும் “புரூஷியா” என்றாள் சிறுமி. ''புரூஷியா எங்குள்ளது?" "ஜெர்மனியில் உள்ளது”. “ஜெர்மனி எங்குள்ளது?” “ஐரோப்பாவில் உள்ளது”. “ஐரோப்பா எங்கு உள்ளது?” "இந்த உலகத்தில் உள்ளது.” -” “உலகம் எங்குள்ளது?” உடனே அந்தச் சிறுமி சிறிது நேர யோசனைக்குப் பின், “உலகமானது இறைவனின் திருக்கைகளில் உள்ளது” என்றாளாம்.
கடவுள் மீது நம்பிக்கை வைத்துள்ள எந்த மனிதரையும் எந்தத் தீச்செயலோ துன்பமோ தீண்டாது. கடவுள் மீது அசையாத நம்பிக்கை கொள்ளும்போது எதையும் சாதிக்க முடியும். எத்துன்பத்தையும் தாண்டித் துணிவோடு செல்ல முடியும். உன் உடலைக் கொன்று ஆன்மாவைக் கொல்ல முடியாதவனுக்காய் அஞ்சாதே என்கிறார் இயேசு.
பழைய ஏற்பாட்டில் தானியேல் நூலில் வரும் நிகழ்ச்சி ஒன்று. அரசன் நெபுகத்துநேசர் செய்து நிறுத்தி வைத்த 60 முழ உயரமும் 6 முழ அகலமும் கொண்ட பொற்சிலையை அனைவரும் பணிந்து தொழ வேண்டும். தாழ வீழ்ந்து பணிந்து தொழ மறுக்கும் எவரும் அந்நேரமே தீச்சூளையில் தூக்கி வீசப்படுவார் என்று முரசறைந்தான். அதைக் கேட்ட மூன்று எபிரேய இளைஞர்கள் அரசன் செய்த பொற்சிலையை வழிபட மறுத்தனர். சாத்ராக்கு, மேசாக்கு, அபேத்நெகோ என்ற அந்த மூன்று பேரும் பதில் மொழியாக “இதைக்குறித்து நாங்கள் உமக்கு மறுமொழி கூறத் தேவையில்லை. அப்படியே எது நிகழ்ந்தாலும் நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள், எரிகின்ற தீச்சூளையினின்று எங்களை மீட்க வல்லவர். அவரே எங்களை உம் கையினின்றும் விடுவிப்பார். அப்படியே அவருக்கு மனமில்லாமல் போனாலும் அரசரே, நாங்கள் உம்முடைய தெய்வங்களை வழிபட மாட்டோம். நீர் நிறுவிய பொற்சிலையையும் நாங்கள் தொழப்போவதில்லை. இது உமக்குத் தெரிந்திருக்கட்டும்” என்றார்கள். (தானி. 3:17-18). அதைக் கேட்ட அரசன் வெகுண்டெழ வழக்கத்தைவிட 7 மடங்கு மிகுதியாக தீச்சூளையைச் சூடாக்கி மூன்று பேரையும் தூக்கிப் போட்டார்கள். என்ன நடந்தது? அரசனுடைய மிரட்டலுக்குப் பயப்படாமல், கடவுளுக்கு மட்டுமே பயந்து, உண்மைக் கடவுளுக்குச் சாட்சியாக உயிரைக் கொடுக்க முன்வந்த மூன்று பேரையும் காப்பாற்றியது மட்டுமல்ல, "மூன்று பேரைத் தானே கட்டி நெருப்பில் எறிந்தோம் ... நெருப்பின் நடுவில் நான்கு பேர் உலவுவதை நான் காண்கிறேன். அவர்களுக்கோ ஒரு தீங்கும் நேரவில்லையே! மேலும் நான்காவது ஆள் தெய்வமகன் ஒருவன் போல் தோன்றுகிறானே!" (தானி. 3:24-25) என்று மன்னன் நெபுகத்து நேசரே வியக்கும் அளவுக்குக் கடவுளே அத்துன்பத்தில் அவர்களோடு இருந்தார்.
அனைத்துத் துன்பங்களுக்கிடையிலும் அஞ்சா நெஞ்சராய் "ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்" (எரேமி. 20:11) என்றார் எரேமியா. அச்சம் என்பது நம்பிக்கையின் எதிரி. இறை நம்பிக்கையின்மையின் வெளிப்பாடு.
இம்மண்ணில் இறையாட்சி மலர்வது இறைமகன் இயேசுவின் அஞ்சாமையில் இருந்தது. அத்தகைய இயேசுவின் துணிச்சல் நமக்கு உரமூட்ட வேண்டும். எல்லாப் படைப்புக்களிலும் மேலான நம்மைக் கடவுள் காப்பார் என உறுதியூட்டுகிறார். “சிட்டுக்குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதீர்கள்." (மத். 10:31).
அச்சம் என்பது மடமை. அஞ்சாமை கிறிஸ்தவ உடைமை. கிறிஸ்துவின் அஞ்சாத இரத்தம் அல்லவா கிறிஸ்தவனில் ஓடுகிறது. "கிறிஸ்துவின் அன்பிலிருந்து சாவு எங்களைப் பிரிக்க முடியாது" என்று சான்று சொல்லி எத்தனை கிறிஸ்தவர்கள் சாவை முத்தமிட்டிருக்கிறார்கள்! இதுதான் கிறிஸ்தவத் திருமறையின் நெடிய வரலாறு சொல்லும் செய்தி!
அச்சம் கதவைத் தட்டியது. நம்பிக்கை கதவைத் திறந்தது. அங்கே எவருமே இல்லை!
குருவைப் போல வளர வேண்டும் என்பதே சீடர்களின் இலக்கு. குருதான் சீடர்களின் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக அமையும் அளவுகோல். இயேசுவைப் பின்பற்ற விரும்பும் அவர்தம் சீடர்களுக்கும் இயேசுதான் அளவுகோல். இயேசுவைப்போல் அவருடைய சீடர்களும் இயேசுவின் வழித்தடத்தில் இறையாட்சித் துன்பங்களை ஏற்க வேண்டும். எத்தகைய இடற்பாடுகள் வந்தாலும் பின்வாங்காது தங்கள் நம்பிக்கையை அச்சமின்றி அறிவிக்க வேண்டும். இயேசு அறிவித்த செய்தியை மட்டுமல்ல, இயேசுவையே தங்கள் வாழ்விலும் வார்த்தையிலும் சற்றும் சளைக்காது அறிவிப்பதே சீடர்களின் ஆற்றலாக மாறும்.
அஞ்சாமை கிறிஸ்தவ உடைமை
ஓர் ஆலயத்தில் புகழ்பெற்ற நற்செய்தியாளர் ஒருவர் போதிக்க எழுந்தார். அவையின் முன்வரிசையில் அந்த நாட்டு அரசன் இருப்பதைக் கண்டதும் சிறிது அதிர்ந்தார். காரணம், அந்த அரசன் அவ்வளவு நல்லவன் அல்ல. மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படுபவன். நற்செய்தி அறிவிப்பில் அவனது தீமைகளைச் சுட்டிக்காட்டாமல் எப்படிப் பேச முடியும்? அதன் விளைவு என்னவாயிருக்கும்? உரையாற்றத் தொடங்குமுன் ஒருகணம் தனக்குள்ளே உரக்கச் சொல்லிக் கொண்டார்: “என் நெஞ்சே, நீ என்ன பேசப்போகிறாய் என்பது குறித்து எச்சரிக்கையாய் இரு. ஏனெனில் இந்த நாட்டின் அரசன் இங்கே இருக்கிறான்”. மறுகணம் மாற்றிச் சொன்னார்: “என் நெஞ்சே, நீ என்ன பேசத் தயங்குகிறாய், தவறுகிறாய் என்பது குறித்துக் கவனமாயிரு. ஏனெனில் அரசருக்கெல்லாம் அரசர் இறைவன் இங்கே உன்முன் இருக்கிறார்”.
தீமையைக் கண்டு சீறி எழ இயேசு என்றும் அஞ்சியதில்லை. இயேசுவைப் பின்பற்றும் சீடர்களுக்கு இயேசுதானே அளவுகோல். இயேசுவின் சீடன், தீமை தன்னை அச்சுறுத்தவிடலாமா? புகழ் பெற்ற ஜான் நாக்ஸ் என்பவரது கல்லறையில் இன்றும் காணப்படும் வாசகம் இது : “கடவுளுக்கு மட்டுமே பயந்த இந்த மனிதர், மனிதருக்கு ஒருபோதும் பயப்படாதவராக இருந்தார்".
கிறிஸ்தவச் சாட்சிய வாழ்வில் நமக்கு வலிகளும் வேதனைகளும் வருவது இயல்பு. ஆனால் இயேசுவின் பேரன்பு கலந்த வல்லமையால் ஆட்கொள்ளப்பட்டு அவருக்காக நாம் வாழ்ந்து வரும் போது, வேதனை வலிகள் எல்லாம் நமக்கு அதிசய இறையாசீராக அமையும். நாம் இறைமகனோடு ஒன்றித்து அவரில் வாழ்ந்து வரும்போது வேறு எந்த மனித ஆதிக்கச் சக்திக்கும் அஞ்சவேண்டியதில்லை. ஏனெனில் நம்மைக் கண்ணின் கருவிழியெனக் காப்பவர் நம் அருகில் உள்ளார்.
விடுதலை உணர்வைத் தூண்டவே பாரதி “உச்சி மீது வானிடிந்து வீழினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே" என்று முழங்கினார். சிலர் எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்குவார்கள். வேறு சிலர் எதற்கும் பயப்படாமல் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்று முரட்டுத்தனமாக இருப்பார்கள். இயேசு அறிவித்த விடுதலைப் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் யாருக்கு அஞ்சவேண்டும், யாருக்கு அஞ்சக்கூடாது என்பது பற்றி நற்செய்தி அழுத்தமாகத் தெளிவுறுத்துகிறது. "ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்” (மத். 10:28)
சிலருக்கு எதற்கும் அச்சம். காரணம், தங்கள் போலி வாழ்க்கையின் முகமூடி கிழியுமோ, சாயம் வெளுக்குமோ என்ற பயம். இயேசு எதற்கும் எவருக்கும் அஞ்சாதவர். தன்னைக் கன்னத்தில் அறைந்த காவலரிடம் "நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்? " (யோ. 18:23) என்று கேட்டவரல்லவா இயேசு! வாய்மையின் வாழ்வு அவருடையது. உண்மையை உரைத்துத் துணிவுடன் இருந்தால், இறையச்சத்தோடு செயல்பட்டால் இறைப்பராமரிப்பில் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தால் உலகத்தில் நாம் எவருக்கும் அஞ்ச வேண்டாம்.
ஜெர்மனி நாட்டுப் பேரரசன் பெரிய பிரடரிக்கு (கி.பி. 1712- 1781) தனது நாட்டில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்றார். அவர் வகுப்பறையில் நுழைந்தபோது ஆசிரியை புவியியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அரசர் ஒரு சிறுமியை அழைத்து அவளது இருப்பிடம் எங்குள்ளது? என்று கேட்டதும் “புரூஷியா” என்றாள் சிறுமி. ''புரூஷியா எங்குள்ளது?" "ஜெர்மனியில் உள்ளது”. “ஜெர்மனி எங்குள்ளது?” “ஐரோப்பாவில் உள்ளது”. “ஐரோப்பா எங்கு உள்ளது?” "இந்த உலகத்தில் உள்ளது.” -” “உலகம் எங்குள்ளது?” உடனே அந்தச் சிறுமி சிறிது நேர யோசனைக்குப் பின், “உலகமானது இறைவனின் திருக்கைகளில் உள்ளது” என்றாளாம்.
கடவுள் மீது நம்பிக்கை வைத்துள்ள எந்த மனிதரையும் எந்தத் தீச்செயலோ துன்பமோ தீண்டாது. கடவுள் மீது அசையாத நம்பிக்கை கொள்ளும்போது எதையும் சாதிக்க முடியும். எத்துன்பத்தையும் தாண்டித் துணிவோடு செல்ல முடியும். உன் உடலைக் கொன்று ஆன்மாவைக் கொல்ல முடியாதவனுக்காய் அஞ்சாதே என்கிறார் இயேசு.
பழைய ஏற்பாட்டில் தானியேல் நூலில் வரும் நிகழ்ச்சி ஒன்று. அரசன் நெபுகத்துநேசர் செய்து நிறுத்தி வைத்த 60 முழ உயரமும் 6 முழ அகலமும் கொண்ட பொற்சிலையை அனைவரும் பணிந்து தொழ வேண்டும். தாழ வீழ்ந்து பணிந்து தொழ மறுக்கும் எவரும் அந்நேரமே தீச்சூளையில் தூக்கி வீசப்படுவார் என்று முரசறைந்தான். அதைக் கேட்ட மூன்று எபிரேய இளைஞர்கள் அரசன் செய்த பொற்சிலையை வழிபட மறுத்தனர். சாத்ராக்கு, மேசாக்கு, அபேத்நெகோ என்ற அந்த மூன்று பேரும் பதில் மொழியாக “இதைக்குறித்து நாங்கள் உமக்கு மறுமொழி கூறத் தேவையில்லை. அப்படியே எது நிகழ்ந்தாலும் நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள், எரிகின்ற தீச்சூளையினின்று எங்களை மீட்க வல்லவர். அவரே எங்களை உம் கையினின்றும் விடுவிப்பார். அப்படியே அவருக்கு மனமில்லாமல் போனாலும் அரசரே, நாங்கள் உம்முடைய தெய்வங்களை வழிபட மாட்டோம். நீர் நிறுவிய பொற்சிலையையும் நாங்கள் தொழப்போவதில்லை. இது உமக்குத் தெரிந்திருக்கட்டும்” என்றார்கள். (தானி. 3:17-18). அதைக் கேட்ட அரசன் வெகுண்டெழ வழக்கத்தைவிட 7 மடங்கு மிகுதியாக தீச்சூளையைச் சூடாக்கி மூன்று பேரையும் தூக்கிப் போட்டார்கள். என்ன நடந்தது? அரசனுடைய மிரட்டலுக்குப் பயப்படாமல், கடவுளுக்கு மட்டுமே பயந்து, உண்மைக் கடவுளுக்குச் சாட்சியாக உயிரைக் கொடுக்க முன்வந்த மூன்று பேரையும் காப்பாற்றியது மட்டுமல்ல, "மூன்று பேரைத் தானே கட்டி நெருப்பில் எறிந்தோம் ... நெருப்பின் நடுவில் நான்கு பேர் உலவுவதை நான் காண்கிறேன். அவர்களுக்கோ ஒரு தீங்கும் நேரவில்லையே! மேலும் நான்காவது ஆள் தெய்வமகன் ஒருவன் போல் தோன்றுகிறானே!" (தானி. 3:24-25) என்று மன்னன் நெபுகத்து நேசரே வியக்கும் அளவுக்குக் கடவுளே அத்துன்பத்தில் அவர்களோடு இருந்தார்.
அனைத்துத் துன்பங்களுக்கிடையிலும் அஞ்சா நெஞ்சராய் "ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்" (எரேமி. 20:11) என்றார் எரேமியா. அச்சம் என்பது நம்பிக்கையின் எதிரி. இறை நம்பிக்கையின்மையின் வெளிப்பாடு.
இம்மண்ணில் இறையாட்சி மலர்வது இறைமகன் இயேசுவின் அஞ்சாமையில் இருந்தது. அத்தகைய இயேசுவின் துணிச்சல் நமக்கு உரமூட்ட வேண்டும். எல்லாப் படைப்புக்களிலும் மேலான நம்மைக் கடவுள் காப்பார் என உறுதியூட்டுகிறார். “சிட்டுக்குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதீர்கள்." (மத். 10:31).
அச்சம் என்பது மடமை. அஞ்சாமை கிறிஸ்தவ உடைமை. கிறிஸ்துவின் அஞ்சாத இரத்தம் அல்லவா கிறிஸ்தவனில் ஓடுகிறது. "கிறிஸ்துவின் அன்பிலிருந்து சாவு எங்களைப் பிரிக்க முடியாது" என்று சான்று சொல்லி எத்தனை கிறிஸ்தவர்கள் சாவை முத்தமிட்டிருக்கிறார்கள்! இதுதான் கிறிஸ்தவத் திருமறையின் நெடிய வரலாறு சொல்லும் செய்தி!
அச்சம் கதவைத் தட்டியது. நம்பிக்கை கதவைத் திறந்தது. அங்கே எவருமே இல்லை!
குருவைப் போல வளர வேண்டும் என்பதே சீடர்களின் இலக்கு. குருதான் சீடர்களின் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக அமையும் அளவுகோல். இயேசுவைப் பின்பற்ற விரும்பும் அவர்தம் சீடர்களுக்கும் இயேசுதான் அளவுகோல். இயேசுவைப்போல் அவருடைய சீடர்களும் இயேசுவின் வழித்தடத்தில் இறையாட்சித் துன்பங்களை ஏற்க வேண்டும். எத்தகைய இடற்பாடுகள் வந்தாலும் பின்வாங்காது தங்கள் நம்பிக்கையை அச்சமின்றி அறிவிக்க வேண்டும். இயேசு அறிவித்த செய்தியை மட்டுமல்ல, இயேசுவையே தங்கள் வாழ்விலும் வார்த்தையிலும் சற்றும் சளைக்காது அறிவிப்பதே சீடர்களின் ஆற்றலாக மாறும்.
நம்பிக்கையுடன் பயங்களை எதிர்கொள்ள
"கவிதை பயம் எனக்கு, கவி பயம் எனக்கு, காடு பயம் எனக்கு, நாடு பயம் எனக்கு, அழுக்கு பயம், குளிக்க பயம்... எல்லாமே பயமயம்" என்று, தமிழ் திரைப்படம் ஒன்றில், மனநலமருத்துவரிடம் தன் பிரச்சனையைக் கூறுவார், அந்தக் கதையின் நாயகன். வாழ்க்கையில் பார்க்குமிடத்திலெல்லாம் பயங்களை மட்டுமே சந்திக்கும் மனிதர் அவர். அந்தக் கதை நாயகனை வதைத்த ‘எல்லாமே பயமயம்’ என்ற பிரச்சனை, கடந்த சில மாதங்களாக நம்மையும் சுற்றிவரும் பிரச்சனைதானே? கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமியைக் குறித்து நாம் இதுவரை கேட்ட அனைத்தும் நமக்குள் பயத்தை உருவாக்கியுள்ளன. கண்டுபிடிப்புகள் என்ற பெயரில், அரசுகளும், பல்வேறு உலக நிறுவனங்களும், வெளியிட்டு வரும் வெவ்வேறு கருத்துக்கள், நம் நிம்மதியைக் குலைத்துவருகின்றன. கூடுதலாக, நம் சமூக வலைத்தளங்கள் வழியே உலவும் வதந்திகள், நம் பயங்களை வளர்த்துவருகின்றன.
2020ம் ஆண்டு புலர்ந்ததிலிருந்து, உலக மக்களின் எண்ணங்களை அதிகம் ஆட்கொண்ட ஓர் உணர்வு, பயம். கொரோனா, கோவிட் 19, கொள்ளைநோய் என்ற சொற்களை மீண்டும், மீண்டும் கேட்டுவந்துள்ள நாம், இன்றும், அந்தக் கொடூரத்திலிருந்து விடுபட வழியில்லாமல் தவித்துவருகிறோம்.
இத்தருணத்தில், இந்த ஞாயிறு வழிபாட்டில், நமக்கு வழங்கப்பட்டுள்ள இறைவாக்கு, நம் அச்சங்களை நீக்குவதற்குப் பதில், அவற்றை கூட்டுவது போன்று ஒலிக்கிறது. "'சுற்றிலும் ஒரே திகில்' என்று பலரும் பேசிக்கொள்கிறார்கள்" (எரேமியா 20:10) என்று இறைவாக்கினர் எரேமியா, இன்றைய முதல் வாசகத்தைத் துவக்குகிறார். "உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம்" (மத்தேயு 10:26) என்று, இன்றைய நற்செய்தியில், இயேசு, அறிவுரை வழங்குகிறார். திகில், கொலை, அச்சம் என்று கூறும் இந்த வாசங்களைக் கேட்கும்போது, இவையே நம் வாழ்வின் அங்கங்களாகிவிட்டனவோ என்ற கலக்கம் உண்டாகிறது.
கண்ணுக்குத்தெரியாத ஒரு கிருமியால் உருவான கொள்ளைநோய் கொலைகள் போதாதென்று, பலரது கண்ணுக்கு முன், பட்டப்பகலில், நடுத்தெருவில், ஒரு மனிதரின் கழுத்தில் மற்றொரு மனிதர் தன் முழந்தாளைக்கொண்டு அழுத்தி, அவரைக் கொலைசெய்தது, இன்னும் நம் மனத்திரைகளைவிட்டு அகல மறுக்கிறது.
சட்டம், ஒழுங்கு இவற்றின் சார்பாக செயலாற்றவேண்டிய காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், இந்தக் கொலையை, எவ்வித தயக்கமுமின்றி, பலரது கண்முன்னே செய்தது, பல போராட்டங்களுக்கு வழிவகுத்தது. அப்போராட்டங்களில் வன்முறை வெடித்தது. உயிர் பலிகள், சூறையாடுதல், தீவைத்தல் என்ற தீமைகள் தொடர்ந்தன.
ஆப்ரிக்க-அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிளாய்ட் அவர்கள் கொலையுண்டதைக் குறித்து, தன் ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கொடுமைக்கு எதிராக, வன்முறை வழிகளைப் பின்பற்றுவதால் எந்தப் பயனும் இல்லை என்றும், வன்முறை, நம்மை நாமே அழிப்பதற்கு மட்டும் வழிவகுக்கும் என்றும் கூறினார்.
வன்முறைகள் வெடிக்கும்போது, அவற்றை, தங்களுக்கு ஆதாயமாகப் பயன்படுத்திக்கொள்ளும் குழுக்கள், அரசுதரப்பிலும், எதிர் தரப்பிலும் உள்ளன. வன்முறையை தங்கள் வாழ்வின் அடித்தளமாகக் கொண்டு செயல்படும் தீவிரவாதக் குழுக்கள், இந்த கொள்ளைநோய் காலத்திலும், தங்கள் தாக்குதல்களை ஆங்காங்கே மேற்கொண்டனர் என்பதை செய்திகள் கூறுகின்றன.
வன்முறைகளை மேற்கொள்ளும் அடிப்படைவாதக் குழுவினர், தங்கள் கொள்கைகளுக்கு எதிராக இருக்கும் அரசு அதிகாரிகளையோ, அரசியல்வாதிகளையோ நேரடியாகத் தாக்குவதற்குப் பதில், அப்பாவிப் பொதுமக்களைத் தாக்குவது, கடந்த 50 ஆண்டுகளாகப் பெருகியுள்ளது. மக்கள் கூடும் கடைவீதிகள், பயணிக்கும் பேருந்துகள், இரயில் பேட்டிகள், மருத்துவமனைகள், பள்ளிகள் என்று... அனைத்து தலங்களிலும், வெறித்தனமான வன்முறைத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. இந்தத் தாக்குதல்களுக்கு, பல நேரங்களில், வழிபாட்டுத் தலங்களும் இலக்காகியுள்ளன. அவை, கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் நிகழ்ந்ததாகவும் ஒரு சில குழுக்கள் அறிக்கை விடுத்துள்ளன. மதத்தின் பெயரால் வன்முறைகள் நிகழம்போது, நம் உள்ளங்களில், வேதனையான கேள்விகள் எழுகின்றன. சென்ற ஆண்டு, உயிர்ப்புப் பெருவிழாவன்று, இலங்கையில், ஆலயங்களில் நிகழ்ந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்கள், ஓராண்டு சென்றபின்னரும், கூடுதலான கேள்விகளை எழுப்பி வருகின்றனவே தவிர, விடைகளை வழங்கவில்லை.
மதநம்பிக்கை காரணமாக, நாம் வன்முறைகளுக்கு உள்ளாகும்போது, என்ன செய்யவேண்டும் என்பதை, இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லித்தருகிறார். நாம் இன்று வாசிக்கும் நற்செய்தி பகுதி, மத்தேயு நற்செய்தி 10ம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இப்பிரிவின் துவக்கத்தில், இயேசு, தன் திருத்தூதர்கள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து (மத். 10:1-4), அவர்களை, பணியாற்ற அனுப்புகிறார். அவ்வேளையில், இயேசு அவர்களுக்கு வழங்கிய அறிவுரைகள், இப்பிரிவில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
பணியாற்றச் செல்லும் சீடர்கள், எவ்வகை உலகைச் சந்திக்கவுள்ளனர் என்பதை, இயேசு, ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகக் கூறுகின்றார். "இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன்" (மத். 10:16) என்ற கலப்படமற்ற உண்மையைக் கூறும் இயேசு, தன் சீடர்களைச் சூழும் ஓநாய்களில் சில, அவர்களது சொந்தக் குடும்பத்தினராகவே இருப்பர் (காண்க. மத். 10:21-22) என்றும் எச்சரிக்கிறார். அவர்கள் செல்லுமிடங்களிலெல்லாம் வெறுப்பும், துன்பமும் அவர்களைத் துரத்தும் (மத். 10:23) என்பதையும் வெளிப்படையாகக் கூறும் இயேசு, அவற்றைக் கண்டு தன் சீடர்கள் அஞ்சவேண்டாம் என்று சொல்கிறார். இதுவே, இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகளாக அமைகின்றன.
திருத்தூதர்களாக இயேசு தேர்ந்தெடுத்தவர்கள் யாரும் வீரப்பரம்பரையில் பிறந்தவர்கள் அல்ல; போர் பயிற்சி பெற்றவர்கள் அல்ல. எனவே, அவர்கள் ஆயுதங்களை ஏந்தி தங்கள் பயணத்தைத் துவக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், பொன், வெள்ளி, செப்புக் காசுகளை எடுத்துச் செல்லவேண்டாம்; மிதியடிகளோ, கைத்தடியோ வேண்டாம் (மத். 10: 9-10) என்பதை, இயேசு, தன் சீடர்களுக்கு முதல் அறிவுரையாக வழங்கியுள்ளார்.
சீடர்கள் சந்திக்கப்போகும் வன்முறைகளுக்கு எதிராக, இயேசு அவர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு கேடயம், இறைவன் மீது அவர்கள் கொள்ளவேண்டிய நம்பிக்கை ஒன்றே.
'காசுக்கு இரண்டு' என்ற கணக்கில் விற்கப்படும் சிட்டுக்குருவிகள் தரையில் விழாதவாறு பராமரிக்கும் இறைவன், அவர்களையும் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை, தன் சீடர்களை வழிநடத்தவேண்டும் என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறுகிறார் (மத். 10:29). புகழ்மிக்க இச்சொற்கள், தியானம் செய்வதற்கு உகந்த சொற்களாகத் தெரிகின்றன. ஆனால், நடைமுறை வாழ்வில் பின்பற்றுவதற்கு இயலாத சவாலாக ஒலிக்கிறது.
நம்ப முடியாததாகத் தோன்றும் இந்தச் சவால், 20 நூற்றாண்டுகளாக, கோடான கோடி உன்னத உள்ளங்களை உறுதிப்படுத்தியுள்ளது. "ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்" (மத். 10:28) என்று இயேசு இன்றைய நற்செய்தியில் கூறிய சொற்கள், கோடான கோடி கிறிஸ்தவர்களை, மரணம் வரை துணிவுகொள்ளச் செய்துள்ளது.
2017ம் ஆண்டு, மே 26ம் தேதி, எகிப்து நாட்டில், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் திருத்தலமான புனித சாமுவேல் மடத்திற்கு திருப்பயணிகள் பேருந்தில் சென்றனர். அவர்களை வழிமறித்து நிறுத்திய இஸ்லாமியத் தீவிரவாதிகள், அப்பயணிகளை பேருந்திலிருந்து இறக்கி, கிறிஸ்துவை மறுதலிக்குமாறு ஒவ்வொருவரிடமும் கூறினர். அவர்கள் மறுக்கவே, அவர்கள் ஒவ்வொருவரையும் தலையில் சுட்டுக் கொன்றனர். 28 கிறிஸ்தவர்கள் அன்று கொல்லப்பட்டனர்.
2015ம் ஆண்டு, பிப்ரவரி 21ம் தேதி, காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையைச் சேர்ந்த 21 இளையோரை, இஸ்லாமிய அரசு எனப்படும் ISIS தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள், லிபியா கடற்கரையில், கழுத்தை அறுத்துக் கொன்றனர். அவ்விளையோர் அனைவரும், இயேசுவின் பெயரை உச்சரித்தபடியே உயிர் துறந்தனர்.
2008ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி முதல் 28ம் தேதி முடிய, இந்தியாவின் ஒடிஸ்ஸா மாநிலத்தில், கந்தமால் பகுதியில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக, இந்து அடிப்படைவாதிகள் மேற்கொண்ட வன்முறையில், 45 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். 1996ம் ஆண்டு, மார்ச் 27ம் தேதி, அல்ஜீரியா நாட்டில், சிஸ்டெர்சியன் (அல்லது, 'Trappist') துறவு சபையைச் சேர்ந்த ஏழுபேரை, இஸ்லாமியத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். மே 31ம் தேதி, அத்துறவிகளின் துண்டிக்கப்பட்ட தலைகள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டன.
1945ம் ஆண்டு, பிப்ரவரி 7ம் தேதி, போஸ்னியா-ஹேர்செகொவினா நாட்டின், ஷிரோக்கி ப்ரியேக் (Široki Brijeg) என்ற ஊரில், பிரான்சிஸ்கன் துறவு மடத்தில், கம்யூனிச படையினர் நுழைந்தனர். "கடவுள் இறந்துவிட்டார்..." என்று கத்தியபடி, அவர்கள், அத்துறவிகள் அணிந்திருந்த சிலுவைகளைப் பறித்து, கீழே எறிந்தனர். துறவிகளோ, சிலுவைகளை மீண்டும் எடுத்து, அவற்றை, தங்கள் மார்போடு இறுகப் பற்றிக்கொண்டனர். அந்த 30 துறவிகளும், மடத்திலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு, கொல்லப்பட்டனர். அவர்களது உடல்கள் அனைத்தும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
நாம் இப்போது நினைவுகூர்ந்த இந்த மறைசாட்சிய மரணங்கள் அனைத்தும், 20, மற்றும் 21ம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்தவை. கடந்த 20 நூற்றாண்டுகளுக்கும் மேலாக, கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர் என்பது, வரலாற்று உண்மை. 20ம் நூற்றாண்டில் தங்கள் மத நம்பிக்கைக்காக உயிரிழந்தவர்களில், கிறிஸ்தவர்களே மிக அதிகம் என்ற விவரம், உலகறிந்த செய்தி. இத்தனை நூற்றாண்டுகளாய், வன்முறைகளையும் மரணத்தையும், மன உறுதியுடன் எதிர்கொண்ட, இன்றும் எதிர்கொண்டு வரும், நம் சகோதரர்கள், மற்றும், சகோதரிகள் காட்டிய துணிவுக்குமுன், தலை வணங்கி, நன்றி கூறுகிறோம்.
இந்தப் படுகொலைகள் அனைத்திலும் ஓர் உண்மை தெளிவாக ஒளிர்கின்றது. அதுதான், இறந்தவர் அனைவரும் காட்டிய உறுதி. தங்கள் உடலைக் கொல்பவர்களைக் குறித்து எந்த அச்சமும் இன்றி, தங்கள் உயிரைக் கையளித்ததால், தங்கள் ஆன்மாவை அவர்கள் முடிவில்லா வாழ்வில் இணைத்துக்கொண்டனர் என்பதை நாம் நம்புகிறோம்.
இவர்களில் பலரை அருளாளர்களாக, புனிதர்களாக அறிவிக்கும் வழிமுறைகள், ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. துணிவுடன் மரணத்தைச் சந்தித்த இவர்கள், தங்கள் ஆன்மாவை மட்டுமல்ல, தங்களைக் கொலை செய்தோரின் ஆன்மாக்களையும் காப்பாற்றியுள்ளனர் என்பதை, பின்வரும் நிகழ்வு வெளிச்சமிட்டு காட்டுகிறது.
கடவுள் இறந்துவிட்டார் என்று கத்தியபடியே, ஷிரோக்கி ப்ரியேக் பிரான்சிஸ்கன் துறவு மடத்தில் நுழைந்த கம்யூனிசப் படையினரில் ஓருவர், மனம் மாறி, மீண்டும் கத்தோலிக்க மதத்தைத் தழுவினார். தன் மனமாற்றத்திற்கு, அத்துறவிகளின் உன்னத மரணமே காரணம் என்று அவர் கூறியுள்ளார்: "நான் சிறு குழந்தையாக இருந்தபோது, கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை என் அம்மா, என் உள்ளத்தில் ஆழமாகப் பதித்தார். அம்மா சொல்லித்தந்த பாடத்தை அழித்து, ஸ்டாலின், லெனின், டிட்டோ ஆகியத் தலைவர்கள், கடவுள் இல்லை என்று சொல்லித்தந்தனர். ஆனால், அன்று, அத்துறவிகள் இறக்கும்போது, அவர்கள் முகங்களில் தெரிந்த அமைதி, அவர்களைக் கொல்லும் எங்களுக்காக அவர்கள் எழுப்பிய செபம், இவற்றைக் கண்டேன். அப்போது, அம்மா எனக்குச் சொல்லித்தந்த உண்மை, மீண்டும் என் உள்ளத்தில் ஆழமாய் பதிந்தது. ஆம். கடவுள் வாழ்கிறார்" என்று அவர் சாட்சியம் கூறியுள்ளார்.
அத்துறவிகளைச் சுட்டுக் கொன்றவர்களில் ஒருவரான இவர், மீண்டும் கத்தோலிக்க மறையைத் தழுவினார். அவரது மகன் ஓர் அருள்பணியாளராகவும், மகள் ஓர் அருள் சகோதரியாகவும் இன்று பணியாற்றி வருகின்றனர். தங்கள் உடலைக் கொல்பவர்களைக் குறித்து பயம் ஏதுமின்றி, தங்கள் உயிரைக் கையளித்த பிரான்சிஸ்கன் துறவிகள், தங்கள் ஆன்மாவைப் புனிதமாகக் காத்துக்கொண்டனர். அதுமட்டுமல்ல, தங்களைக் கொலை செய்தவர்களில் ஒருவரின் ஆன்மாவையும் அவர்களது மரணம் காப்பாற்றியது.
கிறிஸ்துவின் சாட்சிகளாக இறக்கும் வாய்ப்பு நம் அனைவருக்கும் கிடைக்குமா என்பது நிச்சயமில்லை. ஆனால், கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழும் அழைப்பு, நம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நம்மில் பலர் வாழும் கிறிஸ்தவ வாழ்வு, 'இறைவன் இறந்துவிட்டார்' என்பதை, சொல்லாமல் சொல்லும் வாழ்வாக மாறி வருகிறது.
உலகத்தோடு சேர்ந்து, கூட்டத்தோடு சேர்ந்து, நம் தனிப்பட்டக் கொள்கைகளை துறந்து வாழ்வதை, இன்று 'பேஷன்' என்று சொல்லிக்கொள்கிறோம். நன்னெறி, நற்செய்தி இவற்றின் விழுமியங்களைப் பின்பற்றினால், 'பழமைவாதி' என்று முத்திரை குத்தப்படுவோமோ என்று பயந்து, கூட்டத்தோடு சேர்ந்துவிடுகிறோம். கிறிஸ்துவையும், நற்செய்தி கூறும் விழுமியங்களையும் பின்பற்றவோ, தேவைப்பட்டால், அனைவரும் அறியும்படி உயர்த்திப்பிடிக்கவோ நாம் அழைக்கப்படும்போது, முன்வருகிறோமா, அல்லது, பின்வாங்குகிறோமா என்பதை, இன்று ஆய்வுசெய்து பார்க்கலாம்.
இன்றைய நற்செய்தியின் இறுதியில், இயேசு, இதைப்பற்றிய ஓர் எச்சரிக்கையை இவ்வாறு வழங்கியுள்ளார்:
மத்தேயு 10 32-33
மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.
கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழ்வதற்கும், தேவைப்பட்டால், கிறிஸ்துவின் சாட்சிகளாக, நம் உயிரை வழங்குவதற்கும், இறைவன், நம் ஒவ்வொருவருக்கும் துணிவை வழங்குவாராக!
மறையுரைத் தலைப்பு:
இன்றைய நற்செய்தியில் (மத்தேயு 10:26-33), இயேசு தன் சீடர்களுக்குப் பணிப்பொறுப்பு அளிக்கும்போது மூன்று முறை "அஞ்சாதீர்கள்" என்று கூறித் தேற்றுகிறார்.
1. மறைந்திருப்பது வெளிப்படும் (Truth will Prevail)
"மறைவாக உள்ளது எதுவுமே வெளிப்படாமல் போகாது." நீதிக்காகவும் உண்மைக்காகவும் நாம் பாடுபடும்போது, உலகம் நம்மைத் தவறாகப் புரிந்து கொள்ளலாம் அல்லது பழிதூற்றலாம்.
• சிந்தனை:
எரேமியா இறைவாக்கினரைப் போல (முதல் வாசகம்) சுற்றிலும் இருப்பவர்கள் நம்மை அச்சுறுத்தினாலும், "ஆண்டவர் வலிமைமிக்க வீரரைப் போல என்னோடு இருக்கிறார்" என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும். இறுதியில் உண்மைக்கே வெற்றி கிடைக்கும்.
2. ஆன்மாவைக் காத்துக் கொள்ளுங்கள் (Fear the Right One)
"உடலைக் கொல்பவர்களுக்கு அஞ்சாதீர்கள்; ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்."
• விளக்கம்:
மனிதர்கள் தரும் தண்டனை தற்காலிகமானது. ஆனால், கடவுளுக்குப் பயந்து (இறை அச்சம்) வாழ்வதுதான் நிரந்தரமான வாழ்வைத் தரும். உலகச் சட்டங்களுக்குப் பயந்து நம் மனசாட்சியை நாம் ஒருபோதும் விற்றுவிடக்கூடாது.
3. சிட்டுக்குருவிகளை விட மேலானவர்கள் (You are Valuable)
இயேசு ஒரு அழகான உதாரணத்தைச் சொல்கிறார்: "மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படும் சிட்டுக்குருவிகளைக் கூட கடவுள் மறப்பதில்லை; உங்கள் தலைமுடியெல்லாம் கூட கணக்கிடப்பட்டிருக்கிறது."
• பாடம்: நாம் அற்பமானவர்கள் அல்ல. நாம் ஒவ்வொருவரும் இறைவனால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டவர்கள். மிகச் சிறிய பறவையையே பராமரிக்கும் தந்தை, தம் பிள்ளைகளாகிய நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார்.
பங்குத்தளம் மற்றும் இறைமக்களுக்கான செயல் திட்டங்கள் (CTA)
இந்த வாரம் நாம் மேற்கொள்ள வேண்டிய ஆன்மீகப் பயிற்சிகள்:
- பயத்தைப் போக்கிடச் செபம்: உங்களுக்கு ஏதேனும் ஒரு காரியத்தில் பயம் இருந்தால் (எ.கா: வேலை, உடல்நலம், பிள்ளைகளின் எதிர்காலம்), அதை இன்று பலிபீடத்தில் ஒப்புக்கொடுங்கள். "ஆண்டவரே, நீர் என்னோடு இருக்கும்போது நான் யாருக்கு அஞ்ச வேண்டும்?" என்று திருப்பாடல் 27-ஐ வாசியுங்கள்.
- மறைக்காத சாட்சியம்: உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் மத்தியில் "நான் ஒரு கிறிஸ்தவன்" என்று சொல்லத் தயங்காதீர்கள். "மற்றவர்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை, என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக் கொள்வேன்" என்ற இயேசுவின் வாக்கை நினைவில் கொள்ளுங்கள்.
- எதிர்ப்புகளைத் தாங்குதல்: நற்செயல் செய்யும்போது வரும் சிறு சிறு விமர்சனங்களைக் கண்டு பின்வாங்காதீர்கள். எரேமியா இறைவாக்கினரைப் போல ஆண்டவரிடம் உங்கள் வழக்கை ஒப்படையுங்கள்.
- அன்பியம் மற்றும் ஆதரவு: உங்கள் பகுதியில் தனிமையில் அல்லது அச்சத்தில் இருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு "நாங்கள் இருக்கிறோம்" என்ற நம்பிக்கையை அளியுங்கள்
.
மறையுரைச் சுருக்கம் (The Core Message)
"கடவுள் நம்மைப் படைத்திருக்கிறார், அவர் நம்மைப் பராமரிக்கிறார், அவர் நமக்காகப் பரிந்து பேசுகிறார். இந்த மூன்று உண்மைகளும் நம் இதயத்தில் இருந்தால், உலகத்தில் எதற்கும் நாம் அஞ்சத் தேவையில்லை."
பொதுக்காலம் 12-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (எரே. 20:10-13)
எரேமியா இறைவாக்கினர் இளம் வயதிலேயே இறைவாக் குரைக்க அழைக்கப்பட்டார். அந்த கால கட்டம் யூதேயா ஹலாற்றில் ஒரு நெருக்கடியான நேரம். ஆட்சியில் குழப்பம். அரசர்களும், குருக்கள் மற்றும் மக்கள் அனைவரும் நாட்டு ஆட்சியில் கவனமாக இருந்தார்களே தவிர கடவுள் மீது இருந்த கவனத்தை முற்றிலும் மறந்தார்கள்.
பாபிலோனிய அடிமைதனம் அருகாமையில் இருந்ததால், எகிப்துடன் ஒரு உடன்பாட்டை செய்து, அதன்படி அவர்கள் முழு விடுதலை பெற எகிப்து உதவ வேண்டும் என்ற ஒரு கோரிக்கை உடன்பாட்டில் இருந்தது. எரேமியாஸ் இதில் உடன் படவில்லை. எகிப்து எந்த விதத்திலும் உதவாது, கடைசியில் எருசலேம் ஆலயத்தை அழிப்பது உறுதி என்பதை உணர்ந்து இந்த உடன்பாட்டை எதிர்த்தார்.
ஆனால், மக்கள் அனைவரும் இவருக்கு எதிராக செயல்பட்டனர். எருசலேமின் அழிவை எடுத்து கூறியதால் இவர் சிறைபிடிக்கப்பட்டார். பல துன்பங்களை அனுபவித்தார். தனது பிறந்த தினத்தையே சபிக்கும் அளவுக்கு அவர் மனம் தளர்ந்து விடுகிறார். இருப்பினும் இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறார். இரண்டாம் வாசகப் பின்னணி (உரோ. 5:12-15) ஆதாமின் வழியாக பாவம் உலகத்தில் நுழைந்தது. நம் ஒவ்வொருவரின் பாவமும் ஆதாமின் பாவத்தோடு இணைக்கப் படுகிறது. யாராலும் இந்நிலையை மாற்ற முடியவில்லை. ஆனால் இயேசு தன் இறப்பின் வழியாக மீட்பைப் பெற்று தருகிறார். ஒரு மனிதனால் இந்த உலகத்தில் நுழைந்த பாவத்தை இயேசு மறுவுறு ஏற்று, பாவத்தை விலக்கி, எல்லா மக்களையும் இறைவனுக்கு ஏற்புடையவராக்கினார். நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்கு சாட்சி: யாக விளங்கும் போது நாம் இந்த உலகத்திற்கு மீட்பை அறிவிக்கிறோம்.
நற்செய்தி வாசகப் பின்னணி மத்தேயு 10:26-33)
மத்தேயு இந்த நற்செய்தி பகுதியை, கிறிஸ்தவர்கள் துன்பத்தில் வாழும் காலகட்டத்தில், பல துயரங்களை சந்தித்து வாடிய துவக்ககால கிறிஸ்தவர்களுக்காக எழுதுகிறார். இந்த 10-ஆம் அதிகாரத்தில் இயேசு தம் சீடர்களை பணிக்காக துவக்கத் தில் அனுப்புகிறார். (மத் 10:8-16) இஸ்ராயேலின் கடைசி எல்லை வரைக்கும் செல்லுங்கள் என்ற அறிவுறுத்துகிறார். பின்பு 17 முதல் 25 வரை உள்ள வசனங்களில் அவர்கள் சந்திக்க போகும் துன்பங் கள், துயரங்கள், வேதனைகள், சவால்கள் அனைத்தையும் எடுத்து கூறுகிறார். இந்த பகுதியில் (26-33) பயம் இல்லாமல், அஞ்சாது, வீர நெஞ்சுடன், உலகெங்கம் சென்று நற்செய்தியை அறிவிக்க தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார். கிறிஸ்துவுக்காகவும், அவரது நற்செய்திக்காகவும் எதையும் தாங்கிக் கொள்ள வேண்டும். ஒருவர் தனது வாழ்வையே கிறிஸ்துவுக்காக அளிக்க தயாராக இருக்க வேண்டும். தன் வாழ்வை கிறிஸ்துவுக்காக அளிக்கும் போது, கிறிஸ்து அவரை விண்ணகத்தில் வரவேற்பார். அவருக்கு ஏற்ற பலனை கிறிஸ்து கொடுப்பார்.
மறையுரை
தாயின் கருவிலிருந்து வெளிவரும் குழந்தை, வெளி உலகத்தை பார்த்து பயப்படுகிறது. “அஞ்சாதே” என்கிறாள் தாய். படிப்படியாக வளரும் போது சமுதாயத்தை பார்த்து பயப்படுகிறது. “அஞ்சாதே” என்கிறார் தந்தை. சமுதாயத்தில் தானும் ஒருவராக வாழ ஆரம்பிக்கும் போது உலகத்தை பார்த்து பயப்படுகிறது. உலகத்தில் உள்ள தீமைகளை, கொடுமைகளை, கொள்ளைகளை பார்த்துப் பயப்படுகிறது. அந்த வேளையில் தான் “அஞ்சாதே நான் உன்ணோடூ இருக்கின்றேன்” என்று கூறுகிறார் நம் இறைவன். உடலில் குறை இருந்தால் ஊனமுற்றோர் என்கிறார்கள். உள்ளத் தில் குறை இருந்தால் மன நோயாளி என்கிறார்கள். துன்பம் இல் லாத ஒரு மனிதன் உலகில் ஒருவனும் இல்லை. ஒரு மனிதன் முழு மனிதனாக வாழ வேண்டுமெனில் பல துன்ப துயரங்களையும், பல சவால்களையும் அனுபவிக்க வேண்டும்.
இவ்வாறு மனிதனாக பிறந்த ஒவ்வொரு மனிதனும் துன்பம் பல அனுபவிக்கவேண்டும் என்பது இயற்கையின் இயல்பு. நம்மில் எவரும் இதற்கு விதிவிலக்கு அல்ல நாமும் பலத் துன்பங்களையும், துயரங்களையும் சந்திக்கிறோம். ஆனால் எந்த மன நிலையோடு அவற்றை ஏற்று கொள்கிறோம் என்பது நாம் சிந்திக்க வேண்டிய ஒரு கேள்வி.
துன்ப துயரங்கள் வரும்போது, நம் வாழ்வில் பல முறை நாம் நிலை தடுமாறி விடுகிறோம். ஏனெனில் அவற்றை எப்படி, எந்த விதத்தில் அணுகுவது என்ற ஒரு தெளிவான மனநிலை நமக்கு இல்லை. வாழ்வில் துன்பங்கள் வரும்போது இரண்டு விதத்தில் அவற்றை அணுகலாம்.
முதல்வழி - “இது என்னுடைய விதி” இதுதான் என்னுடைய வாழ்வு, என் தலையில் இது எழுதப்பட்டிருக்கிறது என்ற ஒரு நிலையோடு வாழ்வை வேண்டா வெறுப்போடு வாழ ஆரம்பிக் கின்றோம்.
இத்தகைய அணுகு முறை எதிர் மறையானது. இதன் காரணமாக வாழ்வில் மகிழ்ச்சி இல்லாமை, சமாதானம் இல்லாமை, மன்னிப்பு இல்லாமை போன்றவை நுழைகிறது. இத்தகைய ஒரு வாழ்வு நாம் மகிழ்ச்சியின்றி, முணுமுணுப்புடன், பிறரை குறை சொல்லி வாழும் வாழ்வு நாமே நம் இனிய வாழ்வை கொஞ்சம் கொஞ்சமாக புதைத்து கொண்டிருக்கின்றோம்.
இரண்டாவது வழி - “என்னதான் நடக்கும் பார்க்கலாம்' இந்த ஒரு மணநிலை மன தைரியத்துடன் வாழ்வில் வரக்கூடிய எல்லா துன்ப துயரங்களையும் அணுகுவது, வரும் துயரங்களை கண்டு ஓடி ஒழியாமல் உள்ள உறுதியுடன் துணிவுடன் அவற்றை சந்திப்பது. இத்தகைய வழியைதான் எரேமியா இறைவாக்கினர் தன்வாழ்வில் பின் பற்றினார்.
பல்வேறு துன்ப துயரங்களையும் அவர் அனுபவித்தாலும் அவற்றை கண்டு அஞ்சாது, இறைவன் துணையை முழுமையாக உணர்ந்தார். மடைறுதியுடன் அச்சமில்லா மனநிலையுடன் எதிர் கொண்டார். ஆகவேதான் அவர் கூறுகிறார், ““ ஆண்டவர் ஒரு வலிமை வாய்ந்த வீரனைப் போல் என்னோடு இருக்கிறார்” இந்த வார்த்தைகளை நாமும் நம் வாழ்வாக்கிட வேண்டும், அப்போது எத்தகைய துன்பத்தையும் தாங்கலாம், சந்திக்கலாம்.
கிறிஸ்தவ வேதகலாபனை காலத்தில் பெரிய கிறிஸ்தோஸ்தம் என்னும் தூயரை உரோமை ஆளுநன் சிறையில் அடைத் தான். கிறிஸ்துவை மறுதலிக்குமாறு அவரை வற்புறுத்தினான். கிறிஸ்தோஸ்தம் மறுக்கவே அவரை எப்படி பயமுறுத்தி பணிய வைப்பது என்று தன் அமைச்சர்களிடம் ஆலோசனை கேட்டான். அவரை இருண்ட பாதாளத்தில் தள்ளிவிடலாமா? என்று கேட்டான். இல்லை பாதாளத்திற்கு அனுப்பினால் அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்வார்.
ஏனெனில் இப்படிப்பட்ட அமைதியில் இறைவனின் இரக்கத்தை அதிலும் தேடுவார் என்றான் ஒரு அமைச்சன். “சரி அவரை தூக்கி விட்டுவிடலாமா”, என்று ஆளுநன் கேட்டான். இதற்கு இன்னொரு அமைச்சன் “இல்லை, இல்லை நீர் அவரைத் தூக்கிலிட்டாலும் அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார். காரணம் இறப்பில் தான் அவர் தன் இறைவனோடு ஒன்றித்திருப்பார்” என்றான்.
“அப்படியென்றால் அவரை எதை சொல்லி பயமுறுத்துவது” என்று ஆளுநன் கேட்டான். அதற்கு மற்றொரு அமைச்சன், “இவரை பயமுறுத்த ஒரு வழிதான் உண்டு, அவரை பாவம் செய்ய தூண்டுங்கள், அது ஒன்றுதான் அவரை பயமுறுத்தும், காரணம் பாவத்திற்கு மட்டும்தான் அவர் பயப்படூவார், மற்ற எதற்கும் அவர் பயப்படமாட்டார்” என்றான்.
வாழ்வில் வரும் துன்ப துயரங்களை கண்டு பயப்படாது, பாவத்திற்கு மட்டுமே பயந்து வாழ கூடிய வாழ்வையும், ஒரு மன பக்குவத்தையும் நாம் ஒவ்வொருவரும் பெற்றிருத்தல் மிக அவசியம். துன்பம் ஒரு வழியில் நம்மை தாக்கலாம், துயரம் ஒரு வழியில் நம்மை தாக்கலாம். ஆனால் “ஓஅஞ்சாதே' என்ற இறைவனின் வார்த்தை பல வழிகளில் நம்மை காப்பாற்றும். இந்த ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையை இறைவன் மீது நாம் வைப்போம். “உங்கள் கவலையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள்.
ஏனெனில் அவர் உங்கள் மேல் கவலை கொண்டூள்ளார்” (1பேது. 5:7) நமது கவலைகளை, சிலுவைகளை இறைவனிடம் ஓப்படைப்போம். இறைவன் நம் துன்ப துயர வேளையில் நம்மோடு இருந்து வழிகாட்டுவார்.
பிற மறையுரைக் கருத்துக்கள்:
| கிறிஸ்து பயமற்ற வாழ்க்கை வாழ்ந்தார். ஏனெனில் | | 1. இவ்வுலகத்தில் தனது பணி என்னவென என்பதை தேர்ந்து தெரிந்திருந்தார். |
| 2. உண்மையை சார்ந்தும், உன்மையை பேசியும், நீதியின் பால் பசிதாகம் கொண்டிருந்தார். |
| 3. இறைத்தந்தையின் பராமரிப்பின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். |
| 4. கடந்ததை மறந்து எதிர் காலத்தை இறைத் தந்தையின் கையில் ஒப்புக் கொடுத்து, நிகழ் காலத்தை பிறர்பணி. |
| பாவங்களிலிருந்து நாம் விடுதலைப் பெற செய்ய வேண்டியது: நற்செய்தியை வாசிப்போம். | | 1. திவ்விய நற்கருணையை சந்திப்போம். |
| 2. தூய ஆவியின் கருணையை மன்றாடுவோம். |
| 3. செபமாலை செய்வோம். |
| 4.தூயர்கள், தூதர்கள், யாரும் நினையாத ஆன்மாக்களின் பரிந்துரையை மன்றாடி கேட்போம். |
பொதுக் காலம் பன்னிரெண்டாம் ஞாயிறு
அச்சமும், அதைத் தவிர்க்கும் வழியும் இன்றைய முதல் வாசகத்தையும் நற்செய்தியையும் இணைக்கும் வழியும் இன்றைய முதல் வாசகத்தையும் நற்செய்தியையும் இணைக்கும் ஒரு புள்ளியாக அமைகின்றது. “சுற்றிலும் ஒரே திகில் (வச 10) எனத் தொடங்கும் எரேமியா தன்னைச் சுற்றி, தனக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சிகளை விவரிக்கின்றார். ஆனால் அவை அனைத்திலிருந்தும் கடவுள் தன்னை விடுவிப்பார் என நம்புகிறார். இறுதியில் ஆண்டவருக்கு நன்றியும் செலுத்துகின்றார். நற்செய்தியில் இயேசு யாருக்கு அஞ்சவேண்டும், யாருக்கு அஞ்சத்தேவையில்லை எனத் தெளிவுபடுத்துகின்றார். அதைப்பற்றி விவரிக்குமுன் இன்றைய நற்செய்தி பற்றி சில பின்னணித் தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.
பின்னணி
இன்றைய நற்செய்தி “தூதுரைப் போதனைகளின் மூன்றாவது பகுதியான மத் 10: 26-42 எனும் பகுதியின் ஓர் அங்கமாக அமைகின்றது. நற்செய்தி அறிவிப்பு, அதற்காகத் துன்பப்படதல் ஆகயெவை பற்றியே இன்றைய நற்செய்தி பேசுகின்றது. இவை பற்றிய ஒரு சில விடயங்கள் இங்கு ஒன்றாகக் கோர்த்துத் தரப்பட்டுள்ளன. அவற்றுள் மூன்று செய்திகளை அல்லது கருத்துக்களைப் பற்றி மட்டும் இவண் காண்போம்.
1. அஞ்சாதீர்கள்
தொடக்கத்தில் கூறியதுபோல “ அஞ்சவேண்டாம் என்பதே இன்றைய நற்செய்தியின் மையப்புள்ளியாக அமைகின்றது (வச. 2628,31). மூன்று இடங்களில் சீடர்கள் அஞ்சவேண்டாம் என ஆறுதலான செய்தியைத் தருகின்றார் அஞ்சவேண்டாம் என ஆறுதலான செய்தியைத் தருகின்றார் நமதாண்டவர்.
- 1: இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் பணியைச் செய்கின்றபோது, “வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை ' (வச. 26) எனவே அவர்களுக்கு அஞ்ச வேண்டாம் என்கிறார்.
- 2. சீடர்களின் எதிரிகள் ஆன்மாவைக் கொல்ல இயலாதவர்கள். உடலை மட்டும் கொல்பவர்கள் (வச. 28) எனவே அவர்களுக்கு அஞ்ச வேண்டாம் என்கிறார்.
- 3. கடவுள் இச்சீடர்களைப் பாதுகாக்கின்றார், பராமரிக்கின்றார். அவர்கள் விலையேறப் பெற்றவர்கள் (வச 29:31). எனவே அவர்கள் அஞ்சத் தேவையில்லை என்கிறார். இங்கு இயேசு சீடர்களைப் பாதுகாக்கின்றார், பராமரிக்கின்றார். அவர்கள் விலையேறப் பெற்றவர்கள் (வச 29-31. எனவே அவர்கள் அஞ்சத் தேவையில்லை என்கிறார். இங்கு இயேசு சீடர்களை சிட்டுக் குருவிகளுடன் ஒப்பிடுகின்றார். அன்றைய பாலஸ்தீனத்தில் ஏழைகள் எளிதில், குறைந்த விலையில் வாங்கி உண்ணும் உணவு சிட்டுக் குருவிகள். “ துவற்றுள் ஒன்றுகூட வானகத் தந்தையின் விருப்பம் இன்றித் தரையில் விழாது. கடவுள் அவற்றையும் அறிந்திருக்கிறார், பாதுகாக்கின்றார். அவற்றைக்கூட பாதுகாக்கின்ற இறைவன் அவற்றைவிடப் பன்மடங்கு மேலானவர்களாகிய உங்களை நிச்சயம் பாதுகாப்பார், பராமரிப்பார் ” எனவே அஞ்சாதிருங்கள்” (வச. 31) என்கிறார்.
2. ஆன்மா - உடல் - உயிர
மானிடவியல் பற்றி விவிலியத்தில் இரு முக்கிய கண் ணோட்டங்கள் காணப்படுகின்றன. அவை இரண்டும் இன்றைய நற்செய்திப் பகுதியில் இடம்பெறுகின்றன. அவற்றைப் பற்றிய சில கெளிவுகளைப் பெற முயல்வோம்.
“ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம், ஆன்மாவையும் உடலை யும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள் (வச. 28) எனும் வசனத்தில் உடலுக்கும் (கிரேக்கத்தில் சோமா) அன்மாவுக்கும் (கிரேக்கம் - சைக்கே) உள்ள வெறுபாடு பிரித்துக்காட்டப் படுகின்றது. இவற்றுள் ஆன்மா, நிலையானது, முக்கயொானதனது. உடல் ஆன்மாவை போர்த்தியிருக்கும் ஓடு அல்லது கூடு மட்டுமே. மனிதர்கள் இந்த வெறுங்கூட்டை மட்டுமே அழிக்கவல்லவர்கள். அனால் கடவுள் ஆன்மாவையும் உடலையும் நகரத்தில் அழிக்க வல்லவர். எனவே மனிதர்க்கு அஞ்சாமல், இறைவனுக்கு மட்டுமே அஞ்ச வேண்டும் என்கிறார் இயேசு. திருவள்ளுவரும், 'அஞ்சுவதஞ்சாமை பெதமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் கொழில்” (குறள் 428) என்கிறார். இந்த ஆன்மாவையும், உடலையும் வேறுபடுத்திக் காண்பது கிரேக்கச் சிந்தனை அது 28 அம் வசனத்தில் எடுத்தாளப்படுகின்றது.
ஆனால், ஆம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக்கொள்வர் (வச. 39) எனும் வசனத்தில் மனித உடல், ஆன்மா என்று பிரித்தாளாமல், உயிர் என்று இணைத்து ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது. இது முழு ஆளுமையைக் குறிக்கும். இது எபிரேய பழைய ஏற்பாட்டு, விவிலியச் சிந்தனையாகும். இங்கு நற்செய்திக்காக துன்பப்படுவோர் (என் பொருட்டு தம் உயிரை இழப்பவார்) வெகுமதி பெறுவர் (அதைக் காத்துக் கொள்வர்) எனும் கருத்து வலியுறுத்தப்படுகின்றது.
3. ஏற்றுக் கொள்பவர் - மறுதலிப்பவர்
இன்று போல ககவல் தொடர்பு சாதனங்கள் வளர்ந்திராத பண்டைய காலங்களில் தூதர்களை அனுப்புவதே குகவல் பாிமாற்ற வழியாகச் செய்யப்பட்டு வந்தது. இந்த முறையில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நியமங்கள் சில இருந்தன. இயேசுவும் இந்தத் தூதுரை பழக்கத்தை தமது நற்செய்தி பணிக்கும் பயன்படுத்தி தன் சீடர்களையும் திருத்தூதுப் பணிக்காக அனுப்புகின்றார். அதில் கூறப்பட்ட, பயன்படுத்தப்பட்ட நியமங்களையும் பயன்படுத்திக் கொள்கின்றார். அவற்றுள் ஒன்று அனுப்பப்பட்டவர் அனுப்புகின்றவரை பிரதி நிதித்துவப்படுத்துகின்றார் அதனால்தான் இயேசு, “உங்களை ஏற்றுக் கொள்பவர் என்னை ஏற்றுக் கொள்கிறார் (வச 40, இயேசுவை எற்றுக் கொள்பவர் அவரை அனுப்பிய கடவுளையே ஏற்றுக்கொள்றொர் (வச. 40ஆ). அடுத்த ஒரு நியதி அனுப்பப்பட்ட அனுப்பியவரை மக்கள் முன்னிலையில் ஏற்றுக்கொள்ளும்போது அனுப்பியவர் அனுப்பப்பட்ட வரை அவரது உயிர்நிலையில் அனுப்பப்பட்ட வரை ஏற்றுக் கொள்வார். அனுப்பப்பட்டவர், அனீப்பியவரை மறுதலித்தால் அவமும் மறுதலிக்கப்படுவார் (காண் வச. 32-33).
எனவே, இன்றைய நற்செய்தித் தூதுரைக்கென அனுப்பப் பட்டவர்கள் துன்பங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் அஞ்சாமல், இறைவன் தங்களைப் பாதுகாப்பார், பராமரிப்பாார் எனும் நம்பிக்கையில், இயேசுவை மனிதர் முன் ஏற்று, அறிவிக்க வேண்டும். அவர்களுக்கான வெகுமதி நிச்சயம் உண்டு எனும் செய்தியை வழங்குகின்றது. நாமும் நமது தூதுரைப்பணியை துணிவுடன் தொடர்ந்தாற்றுவோம்.
பொதுக்காலம் - பன்னிரண்டாம் ஞாயிறு- முதல் ஆண்டு
கிறிஸ்து வருகைக்கு அறுநூறு ஆண்டுகட்கு முன் எருசலேமில் வாழ்ந்தவர் எரேமியா. அன்று இஸ்ரயேல் அரசு பாபிலோனியப் பேரரசுக்குக் கப்பம் கட்டி வாழ்ந்தது. இதை விரும்பாத அவ்வினம் எகிப்துடன் இணைந்து பாபிலோனிய அடிமை வாழ்வை முறியடிக்கத் திட்டம் தீட்டியது. எகிப்தியருடன் கூட்டுச் சேர்வதைக் கண்டித்தார் எரேமியா. இதனால் எருசலேம் நகரம் அழிக்கப்பட்டு யூதர்கள் பாபிலோனிய நாட்டில் பரதேச வாழ்வு வாழ்வர் என்று இறைவாக்கு உரைத்தார். இதை ஏற்காத யூத குருக்களும் தலைவர்களும் இவரைச் சிறையில் அடைத்தனர்; பாழுங் கிணற்றில் தள்ளினர். இவரைப் போல் வேறு எந்த இறைவாக்கினரும் துன்புறுத்தப்படவில்லை எனலாம். துன்பத்திற் கிடையிலும் நம்பிக்கை தளராதவர் இவர்.
எதிர்ப்புகள்
இஸ்ரயேல் அரசைத் தண்டிக்கும் சாட்டையாக பாபிலோனிய வல்லரசு அமையும் என்று இறைவாக்குரைத்தார் எரேமியா. மக்கள் அவரது பகைவர்களாக மாறினர். ஆண்டவரின் அழைப்பில் ஆனந்தம் காணலாம் என்று ஆசைகாட்டி, இறைவன் தன்னை ஏமாற்றி விட்டதாக அவரது மனித இயல்பு முறையிடுகிறது. “ஆண்டவரே நீர் என்னை மயக்கிவிட்டீர்; நானும் மயங்கிப்போனேன்; உமது ஊழியத்தில் இவ்வளவு துன்பங்கள் இருக்குமென முன்னரே அறிந்திருந்தால், நான் ஒருவேளை இதை ஏற்றுக்கொண்டிருக்கமாட்டேன்”” என்ற பாணியில் புலம்புகிறார். தன்னைக் கொடுமைப்படுத்திய பாசூர் என்ற அர்ச்சகனை “நீ எப்பக்கமும் திகில்” என்று அழைத்தார். இன்றோ, அதே சொற்களைப் பயன்படுத்தி அவரது பகைவர்கள் அவரைப் பழிக்கின்றனர். அவரது நண்பர்களும் அவருக்கெதிராக எழுந்தனர். இறைவன் தன்னைக் கைவிட்டதாக உணர்ந்தார். மக்களின் எதிர்ப்பும் மலையெனக் குவிந்தது. தன்னையே சபித்துக்கொள்ளும் அளவுக்குத் துன்ப மனிதரானார். “தாய் வயிற்றில் நான் கொல்லப்பட்டிருக்கலாகாதோ? அப்போது என் தாயே எனக்குக் கல்லறையாக இருந்திருப்பாளே ' (10 : 17-8) என்கிறார். எரேமியாவின் துன்பங்கள் நமதாண்டவர் படவிருக்கும் மனப் போராட்டத்தின் முன் அடையாளம் (காண் திபா. 21).
மக்கள் விரும்பாத உண்மைகளையும் இறைவாக்கினர் கூறியாக வேண்டும். இப்பணியிலே எதிர்ப்புகள், சிறைக்கூடம், கல்லெறி ஆகிய துன்பங்களையும் ஏற்றாக வேண்டும். “எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக் கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள் என்பது இயேசுவின் வாக்கு (மத். 10 : 17-18). இறையரசைப் பரப்புவதில் உண்மைகளை உள்ளபடியே உரைப்பதில், அவற்றிற்குச் சான்று பகர்வதில் மரண வேதனையையும் ஏற்க நான் தயாரா?
நம்பிக்கை இழக்கவில்லை
இறைவன் வலிமை மிகுந்த போர் வீரனைப்போல் தம்முடன் இருப்பதை எரேமியா உணர்கின்றார். அவர் நீதியின் நிலைக்களம். எளியோரை வலியோர் வருந்துவதை அவர் விரும்ப மாட்டார் என்று நம்புகிறார். எனவே தம் விரோதிகள் பழிவாங்கப்பட வேண்டுமென இறைவனை இறைஞ்சுகிறார். கிறிஸ்துவ யுகத்தில் வாழும் நமக்கு எரேமியாவின் வேண்டுதல் வியப்பாக இருக்கலாம். ஆனால் இறைவெளியீட்டை முழுமையாகப் பெறாத நிலையில், தன் பக்தர்களைப் பழிவாங்குவோரைத் தண்டிக்காதுவிட்டால், நியாயமுள்ள கடவுள் தன் நீதியை நிலைநாட்டாத குற்றத்திற்கு ஆளாவார் என்ற கண்ணோட்டத்தில்தான், தன் கடவுள் தீயோரைத் தண்டித்தாக வேண்டுமென விரும்புகிறார். எனினும், இறுதியில் அனைத்தையும் ஆண்டவரின் விருப்பத்திற்கு விட்டுவிடு கின்றார். எனவே “உம்மிடந்தான் என் வழக்கைச் சொன்னேன்; ஆண்டவரைப் பாடிப் புகழுங்கள்; ஆண்டவரை வாழ்த்திப் போற்றுங்கள்; ஏனெனில் ஏழைகளின் உயிரைத் தீயோர் கையினின்று விடுவித்தார்” என்று இறைப்புகழ் பாடுகிறார் (13). துன்பத்தின் எல்லையைக் கண்டவேளையிலும் நான் இறைவனில் நம்பிக்கை கொண்டுள்ளேனா? கிறிஸ்துவின் யுகத்தில் வாழும் நான் பகைவர்களைச் சபிக்கிறேனா? அல்லது அவர்களுக்காக செபிக்கின்றேனோ?
என்னைப் பலரும் பழித்துரைப்பதைக் கேட்க்கிறேன். எப்பக்கமும் நகல் இருக்கிறது.
ஆதாம் - கிறிஸ்து, பாவம் - தண்டனை, சாவு - வாழ்வு ஆகியவை நெருங்கிய தொடர்புடையவை. பாவத்தையும், பாவத்தால் சாவையும் கொண்டு வந்தான் ஆதாம்; கிறிஸ்துவோ மீட்பையும் வாழ்வையும் நமக்குப் பெற்றுத்தந்தார். மனித வாழ்வின் ஊற்று ஆதாம்; தெய்வீக வாழ்வின் மூலம் கிறிஸ்து. எனவே நாம் ஆதாமுடனும், கிறிஸ்துவுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளோம். இதை விளக்குவதே இன்றைய வாசகம்.
ஆதாம் - கிறிஸ்து
'ஆதாமா' என்றாலே மண் என்பது பொருள். மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் முதல் மனிதன் ஆதாம் என்று அழைப்பப்பட்டான். ஆதாமைத் தனி மனிதன் 'என்று அழைப்பதைவிட, ஒரு குழுவின் பிரதிநிதியாகக் கொள்வதே பொருத்தமாகும். தம் வழித்தோன்றலான மனித சமுதாயத்தை ஆதாம் ஒருவகையில் தன்னகத்தே கொண்டிருந்தான்.
கிறிஸ்து என்றாலே அருள்பொழிவு செய்யப்பட்டவர் என்பது பொருள். மெசியா என்ற எபிரேயச் சொல்லும் இதையே குறிக்கும். இறைவனைப் பிரிந்த மனிதன் அவரிடம் திரும்பி வரவேண்டும். இது அவனது சொந்த முயற்சியால் இயலாத ஒன்று. முறிந்த உறவை மீண்டும் ஒட்ட வைக்கவே தெய்வத் திருமகன் மனிதனானார். மனித குலத்தின் பாவச் சுமையை சிலுவை வடிவில் சுமந்துகொண்டு, கடவுள் மகன் கல்வாரி ஏறினார். அங்குத் தன்னையே பலியிட்டு பாவத்திற்குப் பரிகாரம் செய்தார். எனவே மனிதனை இறைவனுடன் இணைக்கும் பாலமானார். இறைவாழ்வின் தொடக்கமானார்; புதிய ஆதாமானார். முதல் ஆதாம் இறைவனுக்குக் கீழ்படிய மறுத்தான். துன்பம், சாவு ஆகியவற்றிற்கு அடிமையானான். தன் வழித் தோன்றல்களாகிய நம்மையும் இவற்றிற்கு ஆளாக்கினான். புதிய ஆதாமோ இறைவனுக்கு மரண மட்டும் கீழ்ப்பிந்தார். பாவம், சாவு சரீர பலவீனம், பேயின் தாக்குதல் ஆகியவற்றினின்று நமக்கு விடுதலை அளித்தார். ஆதாம் இழந்த தெய்வீகவாழ்வை நமக்குப் பெற்றுத்தந்தார். (காண் கொரி. 15 : 45 - 49). பாவம் பெருகிய இடத்தில் அருள் அணை கடந்து பெருக்கெடுக்கச் செய்தவர் இயேசு (5 : 20). நம்மை இறைவனுடன் இணைக்கும் இறைமகனுக்கு நான் எப்படி நன்றி கூறுவேன்.
பாவம் - சாவு - வாழ்வு
பாவத்தின் விளைவு சாவு (காண் தொநூ. 2 : 16 - 19). “பெண்ணால் பாவம் பிறந்தது; அவளால் நாம் எல்லோரும் சாகிறோம்”' (சீஞா. 25 : 33). “பாவத்தின் கூலி மரணம்” என்கிறார் பவுல். மனித குலத்தின் பாவங்களைப் பட்டியல் போடுகிறார் அதே பவுல் (காண் உரோ . 1: 29 - 31; 1 கொரி. 5 : 10 - 11; 6 : 9 - 10). இறைவனோடு நெருங்கிய தொடர்புகொண்டு அவரது வாழ்வைப் பகிர்ந்து வாழப் படைக்கப்பட்ட மனிதன், அவரது உறவினின்று தன்னைத் துண்டித்துக் கொள்ளுகிறான். இப்பிரிவே உண்மையான சாவு - ஆன்மீகச் சாவு - நித்திய மரணம். எனவே பாவத்தால் உடற்சாவு மட்டுமன்று, இறைவனைப் பிரிந்து வாழும் உண்மைச் சாவும் ஏற்பட்டது. இச்சாவினின்று நம்மை விடுவிக்க. கிறிஸ்துவின் உடற்சாவு தேவைப் பட்டது. செத்தும் சாவாத, அணைந்தும் அணையாத அற்புத விளக்கால்தான் நமக்கு வாழ்வளிக்க முடியும். “உயிர்ப்பும் உயிரும் நானே; என்னில் வாழ்பவன் என்றும் சாவான் ' என்கிறார் இயேசு (யோ. 11: 24; 14 : 6).
ஒருவன் இவ்வுலகக் கண்ணோட்டத்தில் உயிருள்ளவனாகத் தோன்றலாம். ஆனால் அவனில் பாவம் இருந்தால் இறைவாழ்வு இல்லை. அவன் ஏற்கனவே இறந்துவிட்டான். அவனது நித்தியசாவு, மரணம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. பாவமற்ற மனிதனின் நித்திய வாழ்வும், பேரின்பமும் ஏற்கனவே மலர்ந்து விட்டது என்பதை உணர்கின்றோமா?
ஒருவன் செய்த குற்றத்தால் அனைவரும் இறந்தார்கள். ஆனால், கடவுளின் அருள், இயேசு கிறிஸ்து என்னும் ஒரு மனிதனால் பெருகியுள்ளது.
நற்செய்தி மத். 10-26-33
உண்மைக்குச் சான்று பகரவே இயேசு இவ்வுலகிற்கு வந்தார். உயிரைக் கொடுத்து அதற்குச் சான்று பகர்ந்தார். “உண்மையே உன் விலை என்ன?” என்பார்கள். தெய்வத் திருமகனின் உயிரே அதன் விலை எனலாம். ஆண்டவரின் சீடர்களும் உண்மைக்கும் நன்மைக்கும் சான்று பகர அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்ப்புகள் இடர்பாடுகளுக்கு இடையிலும் ஆண்டவரின் சீடர்கள் சான்று பகர வேண்டும். அஞ்சாது உண்மையை உரைத்திட வேண்டும் என்கிறார் இயேசு.
அச்சமின்றிப் போதியுங்கள்
தான் கொண்டுவந்த தெய்வீக உண்மைகளை உலகிற்கு அறிவிக்கும் பணிக்கு இயேசு தம் சீடர்களைத் தயார் செய்தார். அவர்களுக்குத் தனிப்போதனை ! தானே அவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு (காண் யோ. 13 : 13 - 14). ஆண்டவரின் போதனையை எதிர்த்ததுபோலவே, சீடர்களின் போதனையையும் ஏற்க மறுப்பர்; எனினும் இயேசுவின் சீடர்கள் எதற்கும் அஞ்சாது தாம் ஆண்டவரிடமிருந்து அறிந்ததை உலகிற்கு அறிவிக்க வேண்டும். குருவுடன் நீண்டநாள் தங்கி, அவரது போதனையைத் தனதாக்கிக் கொண்டவனே, மற்றவர்களுக்கு அதைத் தெளிவுடன் - திடமுடன் - எடுத்துரைக்க முடியும். எனவே நாம் போதிக்குமுன் “ஆண்டவரே பேசும், ஊழியன் கேட்கிறேன் ” என்று அவரது வார்த்தைக்குச் செவிசாய்க்க வேண்டும். ஆண்டவரின் போதனை மக்களுக்குப் பிடிக்காவிட்டாலும், அதைப் போதித்துக் கொண்டிருப்பது சீடனின் கடமை. பழுதுபட்ட கண்ணை வெளிச்சம் உறுத்துவதுபோலவே உண்மையும் சிலருக்குச் கசப்பாகத்தான் இருக்கும். எவ்வளவு கடினமான போதனையாக இருந்தாலும், தாம் இயேசுவிடம் கேட்டறிந்த மறை உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டியது ஒவ்வொரு சீடனின் கடமை என்பதை உணர வேண்டும்.
போதனையின் வேதனை
தன்னையே தெய்வத் திருமகன் என்று அறிமுகப்படுத்தி, உண்மைக்குச் , சான்று பகர்ந்தார் இயேசு. அவருக்குக் கிடைத்த பரிசு கழுமரம்! திருத்தூதர்கள் ஆண்டவரை அறிமுகப்படுத்தினர்; நன்னெறியைப் போதித்தனர். அதற்காக அவர்களைச் சிறையில் அடைத்தனர்; சித்திரவதை செய்தனர்; சாட்டை அடிக்கும் ஆளாக்கினர். அவ்வேளையில் அவர்களுக்குத் திடமும் மகிழ்வும் தந்தது ஆண்டவரின் சொற்கள்: “ஆன்மாவைக் கொல்ல முடியாதவர்களாய், உடலைக் கொல்லுவோர்க்கு அஞ்சாதீர்கள்.” தனது ஏழு பிள்ளைகளையும் விசுவாசத்தில் உறுதியுடன் நிற்கும்படி அறிவுரை கூறி, பின்னர் தானும் வாளுக்கிரையாகிய வீரப்பெண்மணியின் வரலாறு நமக்கு நல்ல பாடமாகும் (காண் 2 மக்கபே 7-ம் அதிகாரம்). அற்ப குருவிகளைக் காத்து வரும் கடவுள், தன் இரக்கத்தால் தனக்குச் சான்று கூறும் பக்தர்களுக்குத் தக்க பரிசு வழங்குவார் என்பது உறுதி.
எல்லா உலகமும் ஆனாய் நீயே ஏகம்பம் (ஒரு நிலையில் நிற்றல்) மேவி இருந்தாய் நீயே நல்லாரை நன்மை அறிவாய் நீயே ! ஞானச் சுடர் விளக்காய் நின்றாய் நீயே பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே புகழ்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே செல்வாய செல்வம் தருவாய் நீயே... (தேவாரம்).
உண்மையாகிய தனக்கு வெளிப்படையாகச் சான்று பகர்பவர்களை, இயேசுவும் தந்தையின் முன்னிலையில் வெளிப்படையாக ஏற்றுக்கொள்வார். அவரை நிராகரிப்பவர்களை, இறுதிநாளில் அவரும் நிராகரிப்பார். ஒருவேளை நாம் வார்த்தையால் வெளிப்படையாக இயேசுவை நிராகரியாதிருக்கலாம். எனினும் மனப்பூர்வமாக மற்றவர் முன்னிலையில் அவரை ஏற்றுக்கொள்பவர் எத்தனை பேர்? ஆண்டவருக்காக, திருச்சபையின் சார்பில், பேச வேண்டிய வேளையில் மெளனம் சாதிப்பது ஆண்டவரைக் காட்டிக் கொடுப்பதற்குச் சமம். அற்ப ஆதாயத்திற்காக தன்னைக் கிறிஸ்தவன் என்று வெளிப்படையாகக் கூறிக்கொள்ள வெட்கப்படுவோர் - கிறிஸ்தவன் என்று கூறினால் இகழப்படுவோமோ என்று அஞ்சியவர்கள் - இவர்களைத் தம் சீடர்கள் என்று அழைக்க இயேசுவும் தயங்குவார். கிறிஸ்தவன் - என்றாலே துணிவு என்பதுதான் பொருள்.
ஆன்மாவைக் கொல்ல முடியாதவர்களாய் உடலைக் கொல்வோருக்கு அஞ்சாதீர்கள்.
அச்சம் அகற்றி அன்போடு...
உளவியலாளாகள் மனித உணர்வுகளைப் பற்றிப் பல உண்மைகளை வெளிக் கொணர்ந்துளளனர். அவற்றுள் முக்கியமாக, மனித உணர்வுகளின் அடிப்படை உணாவுகளாக ஆறு உணாவுகள் இருப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். அன்ப, வெறுப்பு, கவலை, கோபம், அருவருப்பு, அச்சம் ஆகியயைய அந்த ஆறு உணர்வுகளாகும். இந்த ஆறு உணாவுகளிலும் கூட, அச்சம் மட்டுமே அனைத்து உணர்வுகளின் தாய் என உளலியலாளாகளால் அமைக்கப்படு கின்றது. தத்துவியலாளர்களுள் ஒருவரான லுக்ரேட்டஸ் என்பவரும், அச்சம் அனைத்துக் கடவுள் களுக்கும் தூய் என்று சொல்கிறார். நேர்நிலையான, சரியான அச்சமும் உண்டு. எதிர்மறையான, தவறான அச்சமும் உண்டு. எனவே யாருக்கு அஞ்ச வேண்டும் ? யாருக்கு அஞ்சக் கூடாது ? என்ற தெளிவும் நமக்கு வேண்டும். அதைப் பற்றியே இன்றைய இறைவாத்தை பேசுகின்றது.
எவிதத் துன்பங்களைப் பற்றியம் அஞ்சாமல், இயேசுவுக்காகச் சான்று பகர வேண்டும் எனக் கற்றுத்தருவதோடு, குறிப்பாக, அச்சம் பற்றிய இரு புரிதல்களை இன்றைய நற்செய்கி நமக்குத் தருகின்றது.
1. யாருக்கு அச்ச வேண்டும் ? கடவுளுக்கு: கடவுள் அஞ்சுதற்கு உரியவர் என்ற உண்மையைப் பல இடங்களில் விவிலியம் நமக்குக் கற்றுத் தருகின்றது. “ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம் ' என்று போதிக்கின்றது. கடவுள் கோபக்காரர். நாம் தவறு செய்தால் தண்டித்து விடுவார் என்ற எண்ணத்தோடு அல்ல, மாறாக, கடவுள் நம்மை அன்பு செய்பவர், நம்மைப் பராமரிப்பவர் என்ற உணர்வோடு மரியாதை கலந்த அச்சம் நமக்கு இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால், கடவுள் மீது நாம கொள்ளும் அச்சம் அவரது ஆற்றலை முன்னிட்டு அல்ல, அவரது அன்பை முன்னிட்டு உருவாக வேண்டும். கடவுளின் அன்பை நாம் முழுமையாக, உண்மையாக உணரும்போது கடவுளமீதான அச்சமும் சரியானதாக இருக்கும்.
2. யாருக்கு அஞ்சக் கூடாது ? மனிதர்களுக்கு: உண்மையாகவே கடவுள் மீது அச்சம் கொண்ட மனிதர்கள் சக மனிதர்களுக்கு அஞ்சத் தேவையில்லை. மனிதாகள் எல்லாருமே சமமானவாகள். எனவே, யாரும் யாருக்கும் கீழானவர்கள் அல்ல என்பதால் யாருக்கும் நூம் அஞ்சத் தேவையில்லை. தென்னாப்பிரிக்க நாட்டின் விடுதலை வீரர் நெல்சன் மண்டேலா, “துணிவு என்பது அச்சம் இல்லாத மனநிலை அல்ல, அச்சத்தை வெற்றி கொண்ட மனநிலையே என்று குறிப்பிடுகின்றூர். திருஅவை வரலாற்றில் நாம் காணும் எண்ணற்ற மறைச்சாட்சியா், புனிதர்கள் அனைவருமே உலக அதிகாரங்களுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ அஞ்சவில்லை. ஏனென்றால், அவர்களது உண்மையான அச்சம் கடவுள் மீது மட்டுமே இருநதது.
அஞ்சுவதஞ்சாமை பேதைமை அஞ்சுவதஞ்சல் அறிவார் தொழில்” என்பது திருவள்ளுவரின் புகழ்பெற்ற குறள். யாருக்கு, எப்போது அஞ்ச வேண்டும் என்பதை மட்டுமல்ல, யாருக்கு, எப்போது அஞ்சத் தேவையில்லை என்பதையும் அறிந்து கொள்வோம். அஞ்சுவதும் அடிணிவதும் ஆண்டவன் ஒருவனுக்கே என்ற உணர்வோடு எல்லாச் கூழல்களிம் அவருக்குச் பகர்வோம்.