நாய்கள் கடிப்பதும், கழுதை உதைப்பதும், புலிகள் பாய்வதும், நரிகள் ஏய்த்துப் பிழைப்பதும் இயற்கை. அவைகளின் பிறவிக் குணம் என்பது நமக்குப் புரியும். ஆனால் மனிதன் எந்த நேரத்தில் கடிப்பான். எந்த வேளையில் உதைப்பான் என்பது தெரியாது. மனிதனின் பிறவிக்குணம் இதுதான் என்று நம்மால் சொல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால் மனிதன் சிறப்பானவன். தொடக்க நூல் (தொநூ 1:26, 27) வசனங்களில் கூறப்பட்டிருப்பது போல, நாம் இறைவனின் சாயல். இந்த உலகிற்கு அடிமை யாகாதபடி சுதந்திரமாக வாழ, செயல்பட அழைக்கப்பட்டவர்கள். மாறாக எந்த நேரத்தில் மனிதன் என்ன செய்வான் என்று யாராலும் கணிக்க முடியாத நிலையை நாம் பார்க்கிறோம்.
1. அமெரிக்க நாட்டிலே ஜனாதிபதி தேர்தலிலே ஆப்ரகாம் லிங்கன் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினார். ஒவ்வொரு துறைக்கும் தகுதியான அமைச்சரை நியமனம் செய்து கொண்டிருந்தார். பாதுகாப்புத் துறைக்கு யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்தது. ஆப்ரகாம் லிங்கன் ஸ்டான்டன் என்பவரை இந்தப் பணிக்கு நியமித்தார். ஆனால் அவருடைய நெருங்கிய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து, ஜனாதிபதி அவர்களே! உங்களைத் தாக்கித் தரக்குறைவாகப் பேசிய மனிதனையா நியமிக்கிறீர்கள் என்று கேட்டார்கள். ஆம் அவர் என்னைத் தாக்கிப் பேசினார் என்பது நன்றாகத் தெரியும். ஆனால் அவர் நாட்டுக்குத் தேவை. பாதுகாப்புத் துறை அவருக்குப் பொருத்தம் என்றார். இதைப் பார்த்த அவரது எதிரியாக இருந்த ஸ்டான்டன், காலம் தம்மை அழிக்காதபடி லிங்கன் காலத்தை வென்றுவிட்டார் என்றார்.
2. அமெரிக்கா ஜனாதிபதி ரீகன் சுடப்பட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும்போது வேதனை இருந்தாலும் அதிகாரிகளோடு மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டு சென்றாராம். திருத்தந்தை 2-ம் அருள் சின்னப்பர்- தான் சுடப்பட்டு குணமானவுடன் சிறைக்குச் சென்று சுட்டவனை கட்டித் தழுவி மன்னிக்கின்றேன் என்றார். இந்த நிகழ்வுகளை விவரிக்கும் ராம் மோகன் காந்தி என்ற இந்திய பத்திரிக்கையாளர் அழகாக இவ்வாறு எழுதுகிறார்: ரீகன் மகிழ்ச்சியுடன் சென்ற நிகழ்ச்சி அவர் எந்த அளவிற்கு மனிதத் தன்மை மிக்கவர் என்பதைக் காட்டுகிறது. ஆனால் திருத்தந்தை 2-ம் அருள் சின்னப்பரின் செயலோ அவர் எந்த அளவுக்கு இறைத் தன்மை வாய்ந்தவர் என்பதைக் காட்டுகிறது என்றார்.
இன்றைய முதல் வாசகத்திலே (1 சாமு. 26:9) கூறப்படுவது போல தாவீதைக் கொல்ல நினைத்த சவுல் அரசன் கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, தாவீதின் கூட்டாளி அபிசாயி இதோ உமது எதிரி தூங்குகிறான். நிலத்தில் பதிய ஈட்டியால் குத்தட்டுமா எனக் கேட்கிறான். தாவீதோ அபிசாயியை நோக்கி: அவரைக் கொல்லாதே. ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப் பட்டவர் மீது கை வைப்பது குற்றம் என்றார்.
இன்றைய நற்செய்தி இதை முன் வைத்துதான் மூன்று செய்திகளைத் தருகிறது.
1. மனிதன் முழு மனிதனாக வாழ மன்னிக்கும் மனமுடையவனாக இருக்க வேண்டும். பொறாமை, பழிவாங்குதல், பகைமை, வெறுப்பு இவையெல்லாம் மனிதப் பண்பு அல்ல. மன்னிப்பது மனிதனின் முதிர்ச்சி பெற்ற நிலையைக் காட்டும் வெளிப்பாடு. அன்பின் பிரதிபலிப்பு. பழிவாங்கும் மனிதன் பரிதாபத்திற்கு உரியவன். வளர்ச்சி அடையாதவன். அடிப்பவனைத் திருப்பி அடித்தல் மிருகத்தின் செயல்பாடு. எனவே இயேசு சொல்கிறார் உங்கள் பகைவருக்கு அன்பு காட்டுங்கள் (மத். 5:4 லூக். 6:27)
2. இரண்டாவதாக மனிதன் நல்லதையே செய்ய வேண்டும். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிறார் வள்ளலார். சிறுமை கண்டு பொங்குவாய் என்கிறார் கவிஞன் பாரதியார். இயேசு சொன்னார், “உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள். உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். உங்களை ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு மறு கன்னத்தையும் காட்டுங்கள் என்றார்.
பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் (மத். 7:12, லூக். 6:31) என பொன்விதியாகத் தருகிறார்.
3. மனிதன் என்பவன் சுதந்திரமாக வாழ அழைக்கின்றார். நன்மை செய்பவனுக்கே நன்மையும், தீமை செய்பவனுக்குத் தீமை செய்வதும் சிந்திக்கத் தெரியாத, சுதந்திரத்தை மறந்த மிருகச் செயல்.
எனவேதான் இயேசு கேட்கிறார், “உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் பயன் என்ன?” (லூக். 6:8 மத். 5:45-46). ஏனெனில் இறைவன் நன்றி கெட்டோருக்கும் பொல்லாதாருக்கும் நன்மை செய்கிறார் (லூக். 6:35).
1. கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்பது கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல. மாறாக நாம் பகைவருக்கு அன்பு செய்வதின் மூலம்தான் கடவுளின் இயல்பில் பங்கெடுக்கிறோம். இறை மக்களாக இருக்க முடியும்.
2. பகைவரை மன்னித்து அன்பு செய்ய ஆரம்பிக்கும்போது நம் உள்ளத்தில் நிம்மதி நிரம்பி வழிகிறது. பழி வாங்கத் துடிப்பவர்களிடத்தில் கோபமும், மன உளைச்சலும் ஏற்பட்டு, உடல் நோய்கள் குறிப்பாக நீரழிவு வியாதி, புற்று நோய்கள் எல்லாம் வந்துவிடுகின்றன. இது எப்படி என்றால் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர், ஒரு மாணவனை நோக்கித் தண்ணீர் நிரம்பிய டம்ளரை அப்படியே பிடித்துக்கொண்டு நிற்கச் சொன்னார். டம்ளரை அப்படியே ஒருமணி நேரம் பிடித்த போது மாணவனுக்கு அந்த சிறிய டம்ளர் பெரிய பாரமாக, ஒருவகையான .பாரங்கல் போன்ற கனத்தை உணர வைத்தது. நாம் பிறர் மீது வைத்திருக்கும் வெறுப்புக்கள் நீண்ட காலத்திற்கு நம் மனதில் சுமந்தால் அது பாரங்கல்லாகி கனக்கும். மாறாக மன்னிப்பு என்பதே நமக்கு விடுதலை தரும். விடுதலையின் காரணமாக நாம் அமைதியைக் காண்கிறோம்.
3. பகைவர்களை மன்னித்து அன்புகாட்டும் போது நாம் முதிர்ச்சி அடைந்தவர்களாக மாற ஆரம்பிக்கிறோம். பழிவாங்கல் நீங்கும் போது மிருகத் தன்மை நம்மை நெருங்காது. ஆன்மீக முதிர்ச்சியில் வளர ஆரம்பிக்கிறோம். அதே நேரத்தில் நம் எதிரியில் இருக்கும் மிருகத் தன்மையை வலுவிழக்கச் செய்கிறோம். இதுதான் முதிர்ச்சி நிலை.
எத்தனை ஆண்டுகள் இந்த உலகில் வாழ்வோம் என்பது முக்கியம் அல்ல. எப்படியும் வாழலாம் என்பதும் மூடத்தன்மை. தாயையும் தந்தையையும் தேர்ந்தெடுக்க நமக்கு உரிமை இல்லை. முக அமைப்பையோ, உடல் நிறத்தையோ, மாற்றவோ, பிறப்பையோ, இறப்பையோ எடுக்க, நிறுத்த நமக்கு உரிமை இல்லை. ஆனால் நமது கையில் இருப்பது நமது வாழ்க்கை. மாறாக இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை இயேசு இன்று தெளிவுபடுத்துகிறார். இரக்கம், ஈகை, அன்பு, பிறருக்கு உதவுதல், மன்னித்தல் போன்ற மதிப்பீடுகளில் வாழ்ந்து காட்டி நமக்கு மாதிரி தருகிறார். வாழப் புறப்படுவோம். ஆமென்.
நாய்கள் கடிப்பதும், கழுதை உதைப்பதும், புலிகள் பாய்வதும், நரிகள் ஏய்த்துப் பிழைப்பதும் இயற்கை. அவைகளின் பிறவிக் குணம் என்பது நமக்குப் புரியும். ஆனால் மனிதன் எந்த நேரத்தில் கடிப்பான். எந்த வேளையில் உதைப்பான் என்பது தெரியாது. மனிதனின் பிறவிக்குணம் இதுதான் என்று நம்மால் சொல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால் மனிதன் சிறப்பானவன். தொடக்க நூல் (தொநூ 1:26, 27) வசனங்களில் கூறப்பட்டிருப்பது போல, நாம் இறைவனின் சாயல். இந்த உலகிற்கு அடிமை யாகாதபடி சுதந்திரமாக வாழ, செயல்பட அழைக்கப்பட்டவர்கள். மாறாக எந்த நேரத்தில் மனிதன் என்ன செய்வான் என்று யாராலும் கணிக்க முடியாத நிலையை நாம் பார்க்கிறோம்.
1. அமெரிக்க நாட்டிலே ஜனாதிபதி தேர்தலிலே ஆப்ரகாம் லிங்கன் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினார். ஒவ்வொரு துறைக்கும் தகுதியான அமைச்சரை நியமனம் செய்து கொண்டிருந்தார். பாதுகாப்புத் துறைக்கு யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்தது. ஆப்ரகாம் லிங்கன் ஸ்டான்டன் என்பவரை இந்தப் பணிக்கு நியமித்தார். ஆனால் அவருடைய நெருங்கிய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து, ஜனாதிபதி அவர்களே! உங்களைத் தாக்கித் தரக்குறைவாகப் பேசிய மனிதனையா நியமிக்கிறீர்கள் என்று கேட்டார்கள். ஆம் அவர் என்னைத் தாக்கிப் பேசினார் என்பது நன்றாகத் தெரியும். ஆனால் அவர் நாட்டுக்குத் தேவை. பாதுகாப்புத் துறை அவருக்குப் பொருத்தம் என்றார். இதைப் பார்த்த அவரது எதிரியாக இருந்த ஸ்டான்டன், காலம் தம்மை அழிக்காதபடி லிங்கன் காலத்தை வென்றுவிட்டார் என்றார்.
2. அமெரிக்கா ஜனாதிபதி ரீகன் சுடப்பட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும்போது வேதனை இருந்தாலும் அதிகாரிகளோடு மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டு சென்றாராம். திருத்தந்தை 2-ம் அருள் சின்னப்பர்- தான் சுடப்பட்டு குணமானவுடன் சிறைக்குச் சென்று சுட்டவனை கட்டித் தழுவி மன்னிக்கின்றேன் என்றார். இந்த நிகழ்வுகளை விவரிக்கும் ராம் மோகன் காந்தி என்ற இந்திய பத்திரிக்கையாளர் அழகாக இவ்வாறு எழுதுகிறார்: ரீகன் மகிழ்ச்சியுடன் சென்ற நிகழ்ச்சி அவர் எந்த அளவிற்கு மனிதத் தன்மை மிக்கவர் என்பதைக் காட்டுகிறது. ஆனால் திருத்தந்தை 2-ம் அருள் சின்னப்பரின் செயலோ அவர் எந்த அளவுக்கு இறைத் தன்மை வாய்ந்தவர் என்பதைக் காட்டுகிறது என்றார்.
இன்றைய முதல் வாசகத்திலே (1 சாமு. 26:9) கூறப்படுவது போல தாவீதைக் கொல்ல நினைத்த சவுல் அரசன் கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, தாவீதின் கூட்டாளி அபிசாயி இதோ உமது எதிரி தூங்குகிறான். நிலத்தில் பதிய ஈட்டியால் குத்தட்டுமா எனக் கேட்கிறான். தாவீதோ அபிசாயியை நோக்கி: அவரைக் கொல்லாதே. ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப் பட்டவர் மீது கை வைப்பது குற்றம் என்றார்.
இன்றைய நற்செய்தி இதை முன் வைத்துதான் மூன்று செய்திகளைத் தருகிறது.
1. மனிதன் முழு மனிதனாக வாழ மன்னிக்கும் மனமுடையவனாக இருக்க வேண்டும். பொறாமை, பழிவாங்குதல், பகைமை, வெறுப்பு இவையெல்லாம் மனிதப் பண்பு அல்ல. மன்னிப்பது மனிதனின் முதிர்ச்சி பெற்ற நிலையைக் காட்டும் வெளிப்பாடு. அன்பின் பிரதிபலிப்பு. பழிவாங்கும் மனிதன் பரிதாபத்திற்கு உரியவன். வளர்ச்சி அடையாதவன். அடிப்பவனைத் திருப்பி அடித்தல் மிருகத்தின் செயல்பாடு. எனவே இயேசு சொல்கிறார் உங்கள் பகைவருக்கு அன்பு காட்டுங்கள் (மத். 5:4 லூக். 6:27)
2. இரண்டாவதாக மனிதன் நல்லதையே செய்ய வேண்டும். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிறார் வள்ளலார். சிறுமை கண்டு பொங்குவாய் என்கிறார் கவிஞன் பாரதியார். இயேசு சொன்னார், “உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள். உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். உங்களை ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு மறு கன்னத்தையும் காட்டுங்கள் என்றார்.
பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் (மத். 7:12, லூக். 6:31) என பொன்விதியாகத் தருகிறார்.
3. மனிதன் என்பவன் சுதந்திரமாக வாழ அழைக்கின்றார். நன்மை செய்பவனுக்கே நன்மையும், தீமை செய்பவனுக்குத் தீமை செய்வதும் சிந்திக்கத் தெரியாத, சுதந்திரத்தை மறந்த மிருகச் செயல்.
எனவேதான் இயேசு கேட்கிறார், “உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் பயன் என்ன?” (லூக். 6:8 மத். 5:45-46). ஏனெனில் இறைவன் நன்றி கெட்டோருக்கும் பொல்லாதாருக்கும் நன்மை செய்கிறார் (லூக். 6:35).
1. கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்பது கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல. மாறாக நாம் பகைவருக்கு அன்பு செய்வதின் மூலம்தான் கடவுளின் இயல்பில் பங்கெடுக்கிறோம். இறை மக்களாக இருக்க முடியும்.
2. பகைவரை மன்னித்து அன்பு செய்ய ஆரம்பிக்கும்போது நம் உள்ளத்தில் நிம்மதி நிரம்பி வழிகிறது. பழி வாங்கத் துடிப்பவர்களிடத்தில் கோபமும், மன உளைச்சலும் ஏற்பட்டு, உடல் நோய்கள் குறிப்பாக நீரழிவு வியாதி, புற்று நோய்கள் எல்லாம் வந்துவிடுகின்றன. இது எப்படி என்றால் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர், ஒரு மாணவனை நோக்கித் தண்ணீர் நிரம்பிய டம்ளரை அப்படியே பிடித்துக்கொண்டு நிற்கச் சொன்னார். டம்ளரை அப்படியே ஒருமணி நேரம் பிடித்த போது மாணவனுக்கு அந்த சிறிய டம்ளர் பெரிய பாரமாக, ஒருவகையான .பாரங்கல் போன்ற கனத்தை உணர வைத்தது. நாம் பிறர் மீது வைத்திருக்கும் வெறுப்புக்கள் நீண்ட காலத்திற்கு நம் மனதில் சுமந்தால் அது பாரங்கல்லாகி கனக்கும். மாறாக மன்னிப்பு என்பதே நமக்கு விடுதலை தரும். விடுதலையின் காரணமாக நாம் அமைதியைக் காண்கிறோம்.
3. பகைவர்களை மன்னித்து அன்புகாட்டும் போது நாம் முதிர்ச்சி அடைந்தவர்களாக மாற ஆரம்பிக்கிறோம். பழிவாங்கல் நீங்கும் போது மிருகத் தன்மை நம்மை நெருங்காது. ஆன்மீக முதிர்ச்சியில் வளர ஆரம்பிக்கிறோம். அதே நேரத்தில் நம் எதிரியில் இருக்கும் மிருகத் தன்மையை வலுவிழக்கச் செய்கிறோம். இதுதான் முதிர்ச்சி நிலை.
எத்தனை ஆண்டுகள் இந்த உலகில் வாழ்வோம் என்பது முக்கியம் அல்ல. எப்படியும் வாழலாம் என்பதும் மூடத்தன்மை. தாயையும் தந்தையையும் தேர்ந்தெடுக்க நமக்கு உரிமை இல்லை. முக அமைப்பையோ, உடல் நிறத்தையோ, மாற்றவோ, பிறப்பையோ, இறப்பையோ எடுக்க, நிறுத்த நமக்கு உரிமை இல்லை. ஆனால் நமது கையில் இருப்பது நமது வாழ்க்கை. மாறாக இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை இயேசு இன்று தெளிவுபடுத்துகிறார். இரக்கம், ஈகை, அன்பு, பிறருக்கு உதவுதல், மன்னித்தல் போன்ற மதிப்பீடுகளில் வாழ்ந்து காட்டி நமக்கு மாதிரி தருகிறார். வாழப் புறப்படுவோம். ஆமென்.
நாய்கள் கடிப்பதும், கழுதை உதைப்பதும், புலிகள் பாய்வதும், நரிகள் ஏய்த்துப் பிழைப்பதும் இயற்கை. அவைகளின் பிறவிக் குணம் என்பது நமக்குப் புரியும். ஆனால் மனிதன் எந்த நேரத்தில் கடிப்பான். எந்த வேளையில் உதைப்பான் என்பது தெரியாது. மனிதனின் பிறவிக்குணம் இதுதான் என்று நம்மால் சொல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால் மனிதன் சிறப்பானவன். தொடக்க நூல் (தொநூ 1:26, 27) வசனங்களில் கூறப்பட்டிருப்பது போல, நாம் இறைவனின் சாயல். இந்த உலகிற்கு அடிமை யாகாதபடி சுதந்திரமாக வாழ, செயல்பட அழைக்கப்பட்டவர்கள். மாறாக எந்த நேரத்தில் மனிதன் என்ன செய்வான் என்று யாராலும் கணிக்க முடியாத நிலையை நாம் பார்க்கிறோம்.
1. அமெரிக்க நாட்டிலே ஜனாதிபதி தேர்தலிலே ஆப்ரகாம் லிங்கன் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினார். ஒவ்வொரு துறைக்கும் தகுதியான அமைச்சரை நியமனம் செய்து கொண்டிருந்தார். பாதுகாப்புத் துறைக்கு யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்தது. ஆப்ரகாம் லிங்கன் ஸ்டான்டன் என்பவரை இந்தப் பணிக்கு நியமித்தார். ஆனால் அவருடைய நெருங்கிய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து, ஜனாதிபதி அவர்களே! உங்களைத் தாக்கித் தரக்குறைவாகப் பேசிய மனிதனையா நியமிக்கிறீர்கள் என்று கேட்டார்கள். ஆம் அவர் என்னைத் தாக்கிப் பேசினார் என்பது நன்றாகத் தெரியும். ஆனால் அவர் நாட்டுக்குத் தேவை. பாதுகாப்புத் துறை அவருக்குப் பொருத்தம் என்றார். இதைப் பார்த்த அவரது எதிரியாக இருந்த ஸ்டான்டன், காலம் தம்மை அழிக்காதபடி லிங்கன் காலத்தை வென்றுவிட்டார் என்றார்.
2. அமெரிக்கா ஜனாதிபதி ரீகன் சுடப்பட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும்போது வேதனை இருந்தாலும் அதிகாரிகளோடு மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டு சென்றாராம். திருத்தந்தை 2-ம் அருள் சின்னப்பர்- தான் சுடப்பட்டு குணமானவுடன் சிறைக்குச் சென்று சுட்டவனை கட்டித் தழுவி மன்னிக்கின்றேன் என்றார். இந்த நிகழ்வுகளை விவரிக்கும் ராம் மோகன் காந்தி என்ற இந்திய பத்திரிக்கையாளர் அழகாக இவ்வாறு எழுதுகிறார்: ரீகன் மகிழ்ச்சியுடன் சென்ற நிகழ்ச்சி அவர் எந்த அளவிற்கு மனிதத் தன்மை மிக்கவர் என்பதைக் காட்டுகிறது. ஆனால் திருத்தந்தை 2-ம் அருள் சின்னப்பரின் செயலோ அவர் எந்த அளவுக்கு இறைத் தன்மை வாய்ந்தவர் என்பதைக் காட்டுகிறது என்றார்.
இன்றைய முதல் வாசகத்திலே (1 சாமு. 26:9) கூறப்படுவது போல தாவீதைக் கொல்ல நினைத்த சவுல் அரசன் கூடாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, தாவீதின் கூட்டாளி அபிசாயி இதோ உமது எதிரி தூங்குகிறான். நிலத்தில் பதிய ஈட்டியால் குத்தட்டுமா எனக் கேட்கிறான். தாவீதோ அபிசாயியை நோக்கி: அவரைக் கொல்லாதே. ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப் பட்டவர் மீது கை வைப்பது குற்றம் என்றார்.
இன்றைய நற்செய்தி இதை முன் வைத்துதான் மூன்று செய்திகளைத் தருகிறது.
1. மனிதன் முழு மனிதனாக வாழ மன்னிக்கும் மனமுடையவனாக இருக்க வேண்டும். பொறாமை, பழிவாங்குதல், பகைமை, வெறுப்பு இவையெல்லாம் மனிதப் பண்பு அல்ல. மன்னிப்பது மனிதனின் முதிர்ச்சி பெற்ற நிலையைக் காட்டும் வெளிப்பாடு. அன்பின் பிரதிபலிப்பு. பழிவாங்கும் மனிதன் பரிதாபத்திற்கு உரியவன். வளர்ச்சி அடையாதவன். அடிப்பவனைத் திருப்பி அடித்தல் மிருகத்தின் செயல்பாடு. எனவே இயேசு சொல்கிறார் உங்கள் பகைவருக்கு அன்பு காட்டுங்கள் (மத். 5:4 லூக். 6:27)
2. இரண்டாவதாக மனிதன் நல்லதையே செய்ய வேண்டும். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்கிறார் வள்ளலார். சிறுமை கண்டு பொங்குவாய் என்கிறார் கவிஞன் பாரதியார். இயேசு சொன்னார், “உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள். உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். உங்களை ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு மறு கன்னத்தையும் காட்டுங்கள் என்றார்.
பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்களோ அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் (மத். 7:12, லூக். 6:31) என பொன்விதியாகத் தருகிறார்.
3. மனிதன் என்பவன் சுதந்திரமாக வாழ அழைக்கின்றார். நன்மை செய்பவனுக்கே நன்மையும், தீமை செய்பவனுக்குத் தீமை செய்வதும் சிந்திக்கத் தெரியாத, சுதந்திரத்தை மறந்த மிருகச் செயல்.
எனவேதான் இயேசு கேட்கிறார், “உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் பயன் என்ன?” (லூக். 6:8 மத். 5:45-46). ஏனெனில் இறைவன் நன்றி கெட்டோருக்கும் பொல்லாதாருக்கும் நன்மை செய்கிறார் (லூக். 6:35).
1. கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்பது கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல. மாறாக நாம் பகைவருக்கு அன்பு செய்வதின் மூலம்தான் கடவுளின் இயல்பில் பங்கெடுக்கிறோம். இறை மக்களாக இருக்க முடியும்.
2. பகைவரை மன்னித்து அன்பு செய்ய ஆரம்பிக்கும்போது நம் உள்ளத்தில் நிம்மதி நிரம்பி வழிகிறது. பழி வாங்கத் துடிப்பவர்களிடத்தில் கோபமும், மன உளைச்சலும் ஏற்பட்டு, உடல் நோய்கள் குறிப்பாக நீரழிவு வியாதி, புற்று நோய்கள் எல்லாம் வந்துவிடுகின்றன. இது எப்படி என்றால் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர், ஒரு மாணவனை நோக்கித் தண்ணீர் நிரம்பிய டம்ளரை அப்படியே பிடித்துக்கொண்டு நிற்கச் சொன்னார். டம்ளரை அப்படியே ஒருமணி நேரம் பிடித்த போது மாணவனுக்கு அந்த சிறிய டம்ளர் பெரிய பாரமாக, ஒருவகையான .பாரங்கல் போன்ற கனத்தை உணர வைத்தது. நாம் பிறர் மீது வைத்திருக்கும் வெறுப்புக்கள் நீண்ட காலத்திற்கு நம் மனதில் சுமந்தால் அது பாரங்கல்லாகி கனக்கும். மாறாக மன்னிப்பு என்பதே நமக்கு விடுதலை தரும். விடுதலையின் காரணமாக நாம் அமைதியைக் காண்கிறோம்.
3. பகைவர்களை மன்னித்து அன்புகாட்டும் போது நாம் முதிர்ச்சி அடைந்தவர்களாக மாற ஆரம்பிக்கிறோம். பழிவாங்கல் நீங்கும் போது மிருகத் தன்மை நம்மை நெருங்காது. ஆன்மீக முதிர்ச்சியில் வளர ஆரம்பிக்கிறோம். அதே நேரத்தில் நம் எதிரியில் இருக்கும் மிருகத் தன்மையை வலுவிழக்கச் செய்கிறோம். இதுதான் முதிர்ச்சி நிலை.
எத்தனை ஆண்டுகள் இந்த உலகில் வாழ்வோம் என்பது முக்கியம் அல்ல. எப்படியும் வாழலாம் என்பதும் மூடத்தன்மை. தாயையும் தந்தையையும் தேர்ந்தெடுக்க நமக்கு உரிமை இல்லை. முக அமைப்பையோ, உடல் நிறத்தையோ, மாற்றவோ, பிறப்பையோ, இறப்பையோ எடுக்க, நிறுத்த நமக்கு உரிமை இல்லை. ஆனால் நமது கையில் இருப்பது நமது வாழ்க்கை. மாறாக இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை இயேசு இன்று தெளிவுபடுத்துகிறார். இரக்கம், ஈகை, அன்பு, பிறருக்கு உதவுதல், மன்னித்தல் போன்ற மதிப்பீடுகளில் வாழ்ந்து காட்டி நமக்கு மாதிரி தருகிறார். வாழப் புறப்படுவோம். ஆமென்.
இன்றைய நற்செய்தியைக் கூட்டி, பெருக்கி, வகுத்து, கழித்துப் பார்த்தால் மிஞ்சுவது மன்னிப்பு! உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? (லூக் 6:32] என்று கேட்கின்றார் இயேசு.
நமது பகைவர்களையும் அன்பு செய்யும் அளவுக்கு நமது மன்னிப்பு உயர்ந்து நிற்க வேண்டும் என்பது இயேசுவின் ஆசை!
ஒரு மலையடிவாரத்தில் ஆடுகள் அவற்றின் குட்டிகளோடு மேய்ந்துகொண்டிருந்தன! தனது குட்டிக்கு இரைதேடி வந்த தாய்ப்புலி ஒன்று அந்த ஆடுகளைத் துரத்தத் துவங்கியது. ஆடுகள் தெரித்தோடின. ஓடமுடியாத ஒரு சிறு ஆட்டுக்குட்டியை கவ்விப்பிழத்தது அந்தப்புலி! அந்தக் குட்டியின் தாய் ஆடு, புலியின் பின்னால் ஓடியது. புலியைப் பார்த்து, என் குட்டியை விட்டுவிடு! என்னை வேண்டுமானால் சாப்பிடு என்றது!
புலியோ குட்டியை விடவில்லை! ஆடுகள் சிதறி ஓடியபோது ஆபத்தை உணர்ந்த ஆடுகளுக்குச் சொந்தக்காரர்கள் ஈட்டிகளோடும், தீப்பந்தங்களோடும் புலியைத் துரத்தத் தொடங்கினார்கள். புலி பயந்துபோய் ஆட்டுக்குட்டியைப் போட்டுவிட்டு எங்கோ ஓடி மறைந்தது!
ஆட்டுக்குட்ழயின் கழுத்தில் பயங்கரக் காயங்கள்! மருத்துவமனையில் சேர்த்தார்கள்! சரியான நேரத்தில் கொண்டு வந்ததால் குட்டியைக் காப்பாற்ற முடிந்தது என்றார் டாக்டர். தாய் ஆடு அன்று மாலை வீட்டிலே சமைக்கப்பட்ட சாப்பாட்டை தனது குட்டிக்கு வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்துகொண்டிருந்தது! அப்போது ஒரு புலிக்குட்டியின் முனகல் சத்தம் கேட்டது! குகை! அதற்குள் ஆடு நுழைந்தது! அதன் குட்டியைக் கடித்துக் குதறிய புலியின் குட்டி அது என்பதை அந்த ஆடு அறிந்துகொண்டது.
நடந்ததையெல்லாம் மறந்துவிட்டு ஆடு தன் குட்டிக்குக் கொண்டு சென்ற உணவை புலிக்குட்டிக்கு ஊட்டிக்கொண்டிருந்தது. அந்த சமயம் தாய்ப்புலி குகைக்குள் நுழைந்துவிட்டது. ஆடு பயத்தில் நடுங்கியது! அப்போது அந்தப் புலி, காலையில் நான் உனது குட்டியைத் தூக்கிச்சென்று அதைக் காயப்படுத்தியேன்! அதை மறந்து என் குட்டிக்கு உணவூட்டிக்கொண்டிருக்கின்றாய்! உன் அன்பு - அது பேரன்பு! மன்னிப்பப உருவான உன் முன்னால் மண்டியிடுகின்றேன். இனிமேல் உன் சந்ததியைத் தொடமாட்டேன். என்றது.
கதையில் வந்த ஆட்டைப்போன்று வாழ உலகின் பாவங்களைப் பாக்கும் செம்மறியான இயசு நம்மை அழைக்கின்றார்.
இயேசு காட்டும் வழியில் நம்மால் வாழமுடியுமா? தாவீதைக் கொல்ல, தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் சவுல் அலைந்து திரிந்தார்! சவுலுக்கு தாவீதைக் கொல்ல சந்தர்ப்பம் கிடைக்கவில்லை! ஆனால் தாவீதுக்கு சவுலைக் கொல்ல சந்தர்ப்பம் கிடைத்தது ! ஆனாலும் சவுலை தாவீது கொலை செய்யவில்லை! அவரை மன்னித்துவிட்டார்.
தாவீதைப் போல நம்மால் வாழமுடியுமா?
மனித சாயலில் மட்டும் நாம் வாழ்ந்துகொண்டிருந்தால் நம்மால் நமக்கு எதிராகக் குற்றம் செய்வோரை மன்னிக்க முடியாது! மாறாக இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடிகளார் கூறுவது போல நாம் இயேசுவின் சாயலை நமது சாயலாக்கிக்காண்டால், அவராக நாம் மாறிவிட்டால் நம்மால் நமது பகைவர்களை மன்னிக்க முடியும் !
உலகத்திலேயே மிகவும் மதிப்பு வாய்ந்தது மன்னிப்புதான். இது தன்னை வழங்குபவருக்கும், பெறுபவருக்கும் பன்மடங்கு இலாபத்தைத் தரும்!
மன்னிப்பவர்களுக்கு ஏழுவரங்கள் கிடைக்கும் என்று இயேசு கற்பித்த மன்றாட்டு கூறுகின்றது. மன்னிப்பைப் பெறுபவருக்கு மனமாற்றம் என்ற மாபெரும் பரிசு கிடைக்கும் [1 சாமு 26:21,25, லூக் 23:47].
மேலும் அறிவோம் :
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள் (குறள் : 312)
பொருள் : பெருஞ்சினம் கொண்டு ஒருவர் தம்மைத் துன்புறுத்தும் போதும் அதற்கு மாறாகத் துன்புறுத்தாது பொறுத்துக்கொள்வதே மாசற்ற சான்றோரின் செயலாகும்.
ஒருவர் தம் நண்பரிடம், “என் வீட்டில் ஒரே பிரச்சினை. என் அம்மா ரசம் வைத்தால் என் மனைவிக்குப் பிடிப்பதில்லை. என் மனைவி ரசம் வைத்தால் என் அம்மாவுக்குப் பிடிப்பதில்லை” என்றார். நண்பர் அவரிடம், “நீ என்ன செய்கிறாய்?” என்று கேட்டதற்கு அவர், “நான் இரண்டு பேருக்கும் இடையே சமரசம் செய்கிறேன்" என்றார்!
வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய இன்றியமையாத காரியம். மற்றவர்களுடன். குறிப்பாக நம்மை வெறுப்பவர்களுடன், சமரசம் செய்வதாகும். “உங்கள் எதிரிகளுடன் உடன்பாடு (சமரசம்) செய்து, கொள்ளுங்கள்" (மத் 5:25) என்கிறார் கிறிஸ்து.
கிறிஸ்துவின் பணி மீட்புப் பணி. மீட்புப் பணி என்பது, ஒப்புரவுப்பணி. அவர் யூத இனத்துக்கும் பிற இனத்துக்கும் இடையே நின்ற பகைமை என்னும் சுவரைத் தகர்த்து அவ்விரு இனத்தையும் ஓரினமாக ஒப்புரவாக்கினார் (எபே 2:14). கிறிஸ்து திருச்சபையிடம் ஒப்புரவுப் பணியை ஒப்படைத்துள்ளார் (2 கொரி 5:18-19).
இன்றைய அருள்வாக்கு வழிபாடு நாம் நம் பகைவர்களையும் மன்னித்து அவர்களோடு ஒப்புரவாகும்படி அழைக்கிறது.
முதல் வாசகம் மன்னர் தாவீதின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. தாவீது தமது சிறு வயதிலிருந்தே மன்னர் சவுலுக்கு நன்மைதான் செய்தார். ஆனால், தாவீதின் பேரும் புகழும் மக்கள் மத்தியில் வளர்வதைக் கண்டு சவுல் காழ்ப்பு உணர்வு கொண்டு தாவீதைக் கொலை செய்ய பலமுறை முயற்சி எடுத்தார். ஆனால் தாவீதோ சவுலைக் கொலை செய்யத் தமக்கு வாய்ப்புக் கிடைத்தும் அவரைக் கொல்லாமல் காப்பாற்றுகிறார்.
உலகில் சால்பு என்னும் பண்பு கொண்ட சான்றோர்கள் உள்ளனர். அவர்கள் தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்வர். அவ்வாறு செய்யவில்லை என்றால், சால்பு என்ற பண்பு பொருளற்றுப் போய்விடும். தாவீது தாம் ஒரு தலைசிறந்த சான்றோர் என்பதை எண்பிக்கின்றார்.
இன்னாசெய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்.
என்ன பயத்ததோ சால்பு?” (குறள் 087)
"கன்னத்தில் முத்தமிட்டால்” என்ற திரைப்படம் குடியரசுத் தலைவர் விருது பெற்ற படம். “குடியரசுத் தலைவரிடமிருந்து விருது பெற என்ன செய்ய வேண்டும்?” என்று ஒருவரைக் கேட்டதற்கு, அவர் "கன்னத்தில் முத்தமிட வேண்டும்” என்றார்.
ஆனால், கிறிஸ்துவின் விருதுபெறுவதற்குக் கன்னத்தில் முத்தமிடத் தேவையில்லை. மாறாக, நம்மை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் காட்ட வேண்டும் (லூக் 6:29).
விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள்" (மத் 5:48) என்று மத்தேயு நற்செய்தியில் கிறிஸ்து மலைப்பொழிவுக்கு முத்தாய்ப்பு வைக்கிறார். ஆனால், லூக்கா நற்செய்தியில் "உங்கள் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பது போன்று நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்” (லூக் 6:86) எனக் கூறிக் கிறிஸ்து தமது சமவெளிப் பொழிவுக்கு முத்தாய்ப்பு வைக்கிறார். இரக்சு குணம் நம்மை ஆட்சி செய்து, அதன் விளைவாக நாம் நமது பகைவர்களை அன்பு செய்து, நம்மை வெறுப்பவர்களுக்கு, நன்மை செய்து, நம்மைச் சபிப்பவர்களுக்கு ஆசி கூறுவதன் மூலமாக நாமும் வானகத் தந்தையைப் போல நிறைவுள்ளவர்களாக முடியும் என்பதை வலியுறுத்துகிறது லூக்கா நற்செய்தி.
ஒரு சந்நியாசி ஓர் ஆற்றிலிருந்து மேலே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு தேளை ஒரு குச்சி மூலம் வெளியே கொண்டு வந்தார். தேள் குச்சியின் மேல் வந்ததும் சந்தியாசியின் கையில் கொட்டிவிட்டது. ஆயினும் அவர் மீண்டும் குச்சி மூலம் தேளை மேலே கொண்டு வந்தார். மறுபடியும் அத்தேள் அவரைக் கொட்டிவிட்டது. இதைக் கவனித்த அருகில் இருந்தவர்கள் சந்நியாசியிடம், “தேள் திரும்பத் திரும்பக் கொட்டியும் எதற்கு நீங்கள் அத்தேளுக்கு உதவி செய்கிறீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு சந்நியாசி அவர்களிடம், “தீமை செய்வது தேளுடைய இயல்பு துன்பப்படுகிறவர்களுக்கு உதவி செய்வது எனது இயல்பு. தேளுடைய - இயல்பு தீயது என்பதற்காக எனது நல்ல இயல்பை நான் மாற்றிக் கொள்ளமாட்டேன்” என்றார். தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும்.
'திமைஉங்களை வெல்ல விடாதீர்கள்
நன்மையால் தீமையை வெல்லுங்கள்' (உரோ122)
ஆபிரகாம் லிங்கன் தம்மை அவதூறாகப் பேசிய ஓர் அரசியல்வாதியைத் தமது அமைச்சரவையில் ஓர் அமைச்சராக்கினார். அதைக் கண்ட மற்ற அமைச்சர்கள், “உங்கள் பகைவனைப் பழிவாங்காமல் அவரை ஏன் அமைச்சராக்கினிர்கள்?” என்ற கேட்டதற்கு லிங்கன், “அவரை தண்டிக்கும் சிறந்த வழி அவர்களுக்கு நன்மை செய்வதாகும். அமைச்சராக்கிப் பழி வாங்கிவிட்டேன்” என்றார். பகைவர்களைத் தண்டிக்கும் சிறந்த வழி அவாகளுக்க நன்மை செய்வதாகும்.
இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்துவிடல் (குறள் 314)
வாழ்நாளெல்லாம் நாம் மகிழ்ச்சியாய் இருக்க நாம் கடைப்பிடிக்க வேண்டிய தங்கமான விதிமுறை: “உன்னைக் காயப்படுத்தியவரை நேசி; உன்னை நேசிப்பவரைக் காயப்படுத்தாதே'
சல்லடத்தில் எல்லாமே பொத்தல். அது ஊசியைப் பார்த்து, "உன் காதில் ஒரு பொத்தல் இருக்கின்றது” என்ற தாம். பிறருடைய குற்றங்களை விமர்சிக்கும் நாம் நம்முடைய குற்றங்களைப் பார்ப்பதில்லை. பிறருடைய குற்றங்கள் உடைத்து எறியப்பட வேண்டியகண்ணாடி அல்ல, மாறாக நமது குற்றங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும். பிறரைத் தீர்ப்பிடுவதையும் கண்டனம் செய்வதையும் இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து தடை செய்கிறார்.
ஆதாம் மண்ணைச் சார்ந்தவர்; கிறிஸ்துவோ விண்ணைச் சார்ந்தவர்: எனவே நாம் ஆதாமின் சாயலை மட்டுமல்ல, கிறிஸ்துவின் சாயலையும் தாங்கியவர்கள் (இரண்டாம் வாசகம்). ஆதாமின் மனித இயல்பு பழிவாங்கும் இயல்பு; கிறிஸ்துவின் தெய்வீக இயல்பு மன்னிக்கும் இயல்பு. “தந்தையே இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” (லூக் 23:34). எனவே மன்னிப்போம், மறப்போம்.
ஒவ்வொரு திருப்பலியிலும் நாம் பிறருடன் ஒப்புரவாகி, அதன் அடையாளமாக ஒருவருக்கொருவர் சமாதானத்தை அறிவிக்கின்றோம். பிறருடன் ஒப்புரவாகவில்லையெனில், நாம் பலி ஒப்புக் கொடுக்கத் தகுதியற்றவர்கள் (காண். மத் 5:23-24).
கடவுளின் முகம் காட்டும் மன்னிப்பு
1981ஆம் ஆண்டு மே 13ஆம் நாள் மாலையில் நடந்தது அந்தத் துயர நிகழ்ச்சி. திருத்தந்தை புனித 2ஆம் ஜான்பாலை முகமது அலி அஃகா துப்பாக்கியால் சுட்டான். ஐந்து தோட்டாக்கள் திருத்தந்தையின் உடலைத் துளைத்தன. ஐந்தரை மணி நேரப் போராட்டத்துக்குப் பின்தான் குண்டுகள் வெளியேற்றப்பட்டன. மயக்கமடைந்த திருத்தந்தை மருத்துவமனையில் தன் நினைவுக்கு வந்தவுடன் முதன் (முதலில் உலக மக்களுக்குத் தந்த செய்தி: “என்னைக் கொலை செய்ய (முயன்ற முகமது அலி அஃகாவை மன்னித்துவிட்டேன். நமது அந்த ஈகோதரருக்காகச் செபியுங்கள்'. இதைப்பற்றி ராஜ் மோகன் காந்தி தனது ஹிம்மத் என்ற இதழில் குறிப்பிட்டார் “போப் ஜான் பால் ஒரு நாள் இறந்துவிடுவார். அவருடைய இந்த வார்த்தைகள் ஒருநாளும் இறவா” இதுதான் நற்செய்தி!
பழைய ஏற்பாட்டில் யாக்கோபு தந்தையை ஏமாற்றி ஏசாவின் ஆசீரைக் கைப்பற்றிக் கொண்டான். ஏசாவிடமிருந்து தப்பிப்பதற்காக பல ஆண்டுகள் தன் தாய்மாமன் லாபான் வீட்டில் தங்கிவிட்டுத் தன் சொந்த ஊருக்குத் திரும்பியபோது. ஏசா தன்னைப் பழிதீர்த்துவிடுவானோ என்று அஞ்சினான். ஆனால் ஏசாவோ தன் சகோதரனை மன்னித்து அன்போடு வரவேற்றான். அப்போது யாக்கோபு கூறிய வார்த்தைகள்: “உமது முகத்தைக் காண்பது கடவுளின் முகத்தைக் காண்பது போல் இருக்கிறது” (தொ.நூ. 33:10). கடவுளின் முகத்தைக் காட்டும் மன்னிப்பு!
மன்னிப்பின் மாண்பு இன்றைய உலகில் மதிப்பிழந்து வருகிறது. திரைப்படங்களில் வரும் கதை நாயகர்களின் வலிமையை வெளிப்படுத்தப் பழிவாங்குதில் முக்கிய ஒன்றாகச் சித்தரிக்கப்படுகிறது. வன்முறையை ஒழிக்க வேண்டுமா? பழிவாங்குதலை ஒழிக்க வேண்டும். காயின் ஆபேலைக் கொன்றது உலகில் நடந்த முதல் கொலை. அன்றே அதைத் தடுக்க கடவுள் ஒர் அருமையான வழியைக் கூறினார்.
“காயினைக் கொல்லும் எவனும் பழிவாங்கப்படுவான் (தொ.நூ. 4:15). காயின் நல்லவன் என்பதால் அல்ல அவனுக்கு அந்தப் பாதுகாப்பு. கொலை கொலையைத் தூண்டும். பழிவாங்கும், சுழன்று சுழன்று மேல்நோக்கிச் செல்லும் திருகுச்சுழல் (spiral) போன்ற எதிர்வினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இவ்வாறு கூறியிருக்க வேண்டும்.
தாவீது அரசர் மன்னிப்பதில் சிறந்த எடுத்துக்காட்டு. தன்னுயிரைக் குடிக்கத் துரத்திவந்த சவுல் அரசனைக் கொன்று பழிதீர்த்துக் கொள்வதற்கு நல்ல சந்தர்ப்பம் தாவீதுக்கு இருமுறை கிடைத்தது. (1 சாமு. 24:6-7, 26:11-12). ஆனால் ஆண்டவரால் அருள்பொழிவு பெற்றவர் மேல் கைவைக்கக் கூடாது என்ற தீங்கு நினைக்காத தாவீதின் பெருந்தன்மை, பகைவனுக்கு மன்னிப்பு என்ற இயேசுவின் போதனைக்கான விளக்கமாகும்.
தாவீது அபிசாயியை நோக்கி “அவரைக் கொல்லாதே! ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்மேல் கை வைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்?” என்று சொல்லித் தடுத்தார் (1 சாமு. 26:9). அருள்பொழிவு என்பது வெறும் சடங்கு அன்று. இறைவனின் புனிதத்தையும் அருளன்மையும், உடனிருப்பையும் பாதுகாப்பையும் வெளிப்படுத்தும் ஒர் அடையாளம். குருகுலம் மட்டுமல்ல, ஒவ்வொரு கிறிஸ்தவரும் திருமுழுக்கால் திருநிலை பெற்றவரே. அப்படியென்றால் கிறிஸ்தவன் கிறிஸ்தவனுக்கு எதிராக எப்படிச் செயல்படலாம்?
தாவீது சவுலை நோக்கி, “என் பொருட்டு ஆண்டவரே உமக்கு நீதி வழங்கட்டும். ஆனால் உமக்கு எதிராக என் கை எழாது. முன்னோரின் வாய்மொழிக்கேற்ப 'தீயோரிடமிருந்தே தீமை பிறக்கும்” என்றார்” (1 சாமு. 24:12-13). ஒரு பொருள் அடுத்தற்கு தீமை விளைக்கிறது என்றால் அந்தப் பொருள் ஏற்கனவே கெட்டுவிட்டது என்று அருத்தம். தண்ணீர் தன்னிலே கெடாமல் அதனைப் பருகுபவனுக்கு தீங்கு விளைக்காது. காற்று தன்னிலே கெடாமல், சுற்றுச்சூழலால் பாதிக்கப்படாமல் மனிதனுக்குத் தீங்கு செய்யாது. ஒருவன் இன்னொருவனுக்குத் தீங்கு நினைக்கிறான், தீங்கு செய்கிறான் என்றால் அவன் ஏற்கனவே கெட்டுவிட்டான் என்றுதானே பொருள்!
தவறுவது மனித இயல்பு, மன்னிப்பது தெய்வ இயல்பு என்று கூறுகிறோம். தவறு செய்யும் ஒருவன் தன் மனித இயல்பில் செயல்படுகிறான் என்று உணர்ந்தால் அவனை மன்னிக்க முடியும். நான் இறைச்சாயலாகப் படைக்கப்பட்டிருக்கிறேன், எனவே மன்னிப்பது என் இயல்பு என்று உணர்ந்தாலும் மன்னிக்க முடியும். மன்னிக்கும்போது நாம் நம்மைக் கடவுள் நிலைக்கு உயர்த்துகிறோம். “அப்போது... நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள் (லுக். 6:35).
மன்னிப்பது பலவீனத்தின் வெளிப்பாடு அல்ல. மன உறுதியும் பெருந்தன்மையும் உடையவன்தான் மன்னிக்க முடியும். தன்னையே ஆளத் தெரிந்தவனே, தன் உணர்வுகளைத் தன் கட்டுக்குள் வைத்திருப்பவனே மன்னிக்கும் தன்மை கொண்டவன்.
மன்னிக்கும்போது பிறர் திருந்த வாய்ப்பளிக்கிறோம். அவர் நாண நன்னயம் செய்கிறோம். “பழிவாங்குவதும் கைமாறு அளிப்பதும் எனக்கு உரியன என்கிறார் ஆண்டவர். நீயோ, உன் எதிரி பசியாய் இருந்தால் அவனுக்கு உணவு கொடு. அவன் தாகத்தோடு இருந்தால் அவன் குடிக்கக் கொடு. இவ்வாறு செய்வதால் அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய். தீமை உங்களை வவல்ல விடாதீர்கள். நன்மையால் தீமையை வவல்லூங்கள்”' (உரோமை. 12:19-21).
“பகைவனுக் கருள்வாய் நன்நெஞ்சே பகைவனுக் கருள்வாய்” என்று பாடிய பாரதி, “தின்னவரும் புலிதன்னையும் அன்போடு சிந்தையில் போற்றிடுவாய்” என்கிறார். அறிவில், அறிவியலில் ஆற்றலில் நாகரீகத்தில் வளர்ந்திருக்கிறோம். அன்பில் மன்னிப்பில் பண்பில், பொறுமையில் அமைதியில் வளர்ந்திருக்கிறோமா?
நமக்கு வெளியே அல்ல, நமக்கு உள்ளேதான் நம் பகைவன் இருக்கிறான். நம் மனமே நமக்கு எதிரி. கடுந்தவம் புரிந்த பக்தன் முன் கடவுள் தோன்றி “உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்” என்றார். அதற்கு பக்தன் “என் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் சக்திகளை உன் கதாயுதத்தால் தாக்கி வீழ்த்தி அழிக்க வேண்டும்” என்றான். புன்னகை புரிந்தபடி “அதற்கென்ன, அப்படியே செய்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு மறைந்தார் கடவுள். பக்தனுக்கும் திருப்தி இனி நமக்குப் பகைவர்களே இருக்க மாட்டார்கள் என்று.
சில நொடிகளில் ஆண்டவன் கையிலிருந்த கதாயுதம் வேகமாகப் பாய்ந்து வந்து வரம் கேட்ட பக்தனின் மார்பைத் தாக்கியது. வீழ்ந்தான் பக்தன். தடுமாறியபடி ஆண்டவனை அழைத்தான். ஓ கடவுளே, என்ன இது? என் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் பகைவனை அல்லவா தாக்கச் சொன்னேன். உன் கதாயுதம் என்னையே தாக்கிவிட்டதே. உன் குறி தவறிவிட்டதா?'' என்று கதறினான். அதற்கு ஆண்டவன் “பக்தா, நீ கேட்டபடி தானே ஆயுதத்தை வீசினேன். தவறாகப் பயன்படுத்தவில்லையே. மற்றவர்களைத் தாக்க வேண்டும். வீழ்த்த வேண்டும், அழிக்க வேண்டும் என்று நினைக்கும் உன் மனமே உனக்குப் பகைவன், எதிரி எல்லாம். அதற்காகத்தான் உன் இதயத்தை நோக்கியே என் ஆயுதத்தை வீசினேன். என் குறி என்றும் தவறாது, தவறியதும் இல்லை" என்றார்.
“தங்களை அடிமைப்படுத்தும் உரோமையர்கள் அழிய வேண்டும். அவர்களை அழிப்பதற்காகவே மெசியா வர வேண்டும்” என்று விரும்பினர் யூதர்கள். உண்மை மெசியா இயேசுவோ “உங்கள் பகைவர்களையும் அன்பு செய்யுங்கள்” என்கிறார். பாலஸ்தீன் அழிய வேண்டும் என்று இஸ்ரயேலும் இஸ்ரயேல் அழிய வேண்டும் என்று பாலஸ்தீனும், தமிழர் அழிய வேண்டும் என்று சிங்களரும் சிங்களர் அழிய வேண்டும் என்று தமிழரும் நினைத்தால், அது சரியா? அதைத்தான் மிருக வெறி என்கிறோம். “என் இனம் வாழ வேண்டும் என்பது விலங்குகளிலும் இருக்கும் இயல்பூக்கம்! எல்லாம், எல்லோரும் வாழ வேண்டும் என உணர்வது மனித நேயம்.
இயேசு காட்டும் வழி நம் இதயங்களை மனித நேய மலர்கள் பூத்துக் குலுங்கும் பூங்காவனங்களாக்கும். இல்லையென்றால், நம் நெஞ்சங்கள் கொடிய மிருகங்கள் வாழும் இருண்ட காடுகளாகிவிடும்.
“அன்பினால் பகைவர்களை நண்பர்களாக அடைய முடியும்”
- இது அண்ணல் காந்தி அவர்களின் அழுத்தமான கூற்று.
மறு கன்னத்தைக் காட்டவும்...
நம்மில் எத்தனை பேர், அவ்வப்போது, கடவுளைப்போல் மாற விழைகிறோம், அல்லது, கடவுளை, நம்மைப்போல் மாற்ற விழைகிறோம்? நமக்கெதிராக பிறர் தவறிழைக்கும்போது, நம்மை அவமானப்படுத்தும்போது, கோபமும், பழிவாங்கும் உணர்வுகளும், நம்முள் பொங்கி எழுகின்றன. அந்த உணர்வுகளை நியாயப்படுத்த, கடவுளையும் நம்மோடு கூட்டு சேர்த்துக்கொள்கிறோம். கடவுளைப் போன்ற சக்தி நமக்கிருந்தால், அல்லது, கடவுள் நம் பக்கமிருந்தால், நம் பகைவர்கள் அழிந்துபோவர் என்று நாம் எண்ணிப்பார்க்கிறோம். 'நியாயம்' என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் இவ்வெண்ணங்களை உறுதிசெய்யும் வண்ணம், நம் மதங்களில், பழி தீர்க்கும் தெய்வங்கள் உள்ளனர். மின்னலை கரத்தில் ஏந்தி நிற்கும் கிரேக்கக் கடவுள் சீயுஸ் (Zeus), இடி, மின்னல், புயல் ஆகியவற்றின் அடையாளமாக, கரத்தில் சுத்தியலை ஏந்தி நிற்கும், ஜெர்மானியக் கடவுள் தோர் (Thor), கரங்களில், இரத்தம் தோய்ந்த வாள், சூலாயுதம் ஆகியவற்றைத் தாங்கி, கழுத்தில், மண்டையோடுகளால் செய்யப்பட்ட மாலையை அணிந்து நிற்கும் காளி (Kali) தேவதை... என, பழிதீர்க்கும் கடவுள், பல வடிவங்களில் இருக்கிறார்.
"பழிவாங்குவதும் கைம்மாறளிப்பதும் எனக்கு உரியன" (இணைச்சட்டம் 32:35, உரோமையர் 12:19, எபிரேயர் 10:30) என்று கூறும் கடவுளையும், தீமை செய்த மனிதர்களை, வெள்ளத்தினாலும், நெருப்பினாலும் அழிக்கும் கடவுளையும் விவிலியத்தில் சந்திக்கிறோம்.
நம் பழமொழிகளில், தண்டனை வழங்கும் கடவுளை, நேரடியாகவும், மறைமுகமாகவும் குறிப்பிடுகிறோம். "அரசன், அன்று கொல்வான்; தெய்வம், நின்று கொல்லும்" என்ற பழமொழியில், பொறுமையாக, ஆனால், நிச்சயமாக, இறைவன் தண்டனை வழங்குவார் என்று கூறி சமாதானம் அடைகிறோம். அயர்லாந்து மக்களின் மரபில் கூறப்படும் ஓர் ஆசீரில், கடவுள் வழங்கக்கூடிய தண்டனையை, சிறிது நகைச்சுவை கலந்து சொல்லப்பட்டுள்ளது: "நம்மீது அன்பு கொள்வோரை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. அன்பு செய்யாதவரை, அவர் மனம் திரும்பச் செய்வாராக. அவர்கள் மனம் திரும்ப மறுத்தால், அவர்கள் கணுக்காலையாவது கடவுள் திருப்பிவிடட்டும். அவ்வாறு, அவர்கள் நொண்டிச் செல்லும்போது, நம் பகைவர்கள் யார் என தெரியட்டும்."
பழிக்குப் பழி, அல்லது, தவறு செய்வோரைத் தண்டிப்பது, மனிதருக்குள்ள இயல்பு என்ற கருத்தோடு நின்றுவிடாமல், அத்தகையப் பண்பு, இறைவனிடமும் உள்ளது என்று சொல்லும் அளவு, நம் மதங்களும், மரபுகளும் பாடங்கள் சொல்லித்தரும் வேளையில், இன்றைய ஞாயிறு வாசகங்கள், இந்த எண்ணங்களுக்கு சவால்களாக ஒலிக்கின்றன. 'பழிக்குப் பழி', கிறிஸ்தவ வாழ்வுமுறை அல்ல என்பதை, இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும் மிகவும் அழுத்தந்திருத்தமாகக் கூறுகின்றன. இந்தக் கண்ணியமான, அதேநேரம், கடினமானப் பாடத்தைக் கற்றுக்கொள்ள, இறைவன், நம் ஒவ்வொருவருக்கும், திறந்த மனதைத் தரவேண்டும் என்ற வேண்டுதலுடன், நம் சிந்தனைகளைத் துவக்குவோம்.
தன் கண்முன் உறங்கிக்கொண்டிருக்கும் எதிரியைக் கொல்லாமல், அமைதியாகச் செல்லும் தாவீதை, இன்றைய முதல் வாசகத்தில் (1 சாமுவேல் 26: 2, 7-9, 12-13, 22-23) சந்திக்கிறோம்.
தாவீதைக் கொல்லும் வெறியுடன் அலைந்து, திரிந்த மன்னன் சவுல், களைப்புற்று, ஓரிடத்தில் உறங்கிக்கொண்டிருக்கிறார். அவருக்கருகே அவரது ஈட்டியும் நிலத்தில் குத்தப்பட்டு நிற்கிறது. இதைக் கண்ட தாவீதின் மனதில் கட்டாயம் போராட்டம் எழுந்திருக்கும். அவருடைய போராட்டத்தை இன்னும் கடினமாக்கும்வண்ணம், அவருடன் சென்ற தோழர் அபிசாய், "இந்நாளில், கடவுள், உம் எதிரியை உம்மிடம் ஒப்புவித்துள்ளார். ஆதலால், இப்பொழுது, நான் அவரை ஈட்டியால் இரண்டு முறை குத்தாமல், ஒரே குத்தாய் நிலத்தில் பதிய குத்தப்போகிறேன்" (1 சாமு. 26:8) என்று கூறுகிறார்.
உறங்கும் எதிரி, ஊன்றப்பட்ட ஈட்டி, கொலை செய்ய தயாராக இருந்த கூலிப்படை என, அனைத்தும் தனக்கு ஆதரவாக இருந்தாலும், தாவீது, சரியான முடிவெடுக்கிறார். இவ்வுலகப் பார்வையில், ஏன், சொல்லப்போனால், மத நூல்கள் ஆங்காங்கே கூறும் படிப்பினைகளின் அடிப்படையில், தாவீது எடுத்த முடிவை, தவறான முடிவு என்று கூறமுடியும்.
பழிக்குப்பழி என்ற உணர்வால் மட்டும் தாவீது ஆட்கொள்ளப்பட்டிருந்தால், தனக்குக் கிடைத்த வாய்ப்பை, இறைவன் தந்த அடையாளமாக எடுத்துக்கொண்டு, சவுலைக் கொன்றிருக்கலாம். ஆனால், மன்னன் சவுலைக் கொல்ல, ஒருமுறையல்ல, இருமுறை அவருக்குக் வாய்ப்பு கிடைத்தாலும் (1 சாமுவேல் 24:1-15; 26:7-24), அவற்றைப் பயன்படுத்தாமல், சவுலை உயிரோடு விட்டுவிட்டுச் சென்றார், தாவீது.
அத்துடன் நின்றுவிடாமல், சவுல் தன் தவறை உணர்ந்து, நல்வழி திரும்பவேண்டும் என்ற ஆவலில், சவுலின் ஈட்டியை தன்னுடன் எடுத்துச்சென்றார். தூரத்திலிருந்து தாவீது எழுப்பிய குரல், சவுலின் தூக்கத்தைக் கலைத்தது. கண்விழித்த மன்னன் சவுல், தாவீதின் குரலைக் கேட்டதும், அவரைக் கொல்லும் வெறியுடன் தன் ஈட்டியைத் தேடியிருக்க வேண்டும். அதே ஈட்டியை, சமாதானத்தின் அடையாளமாக மாற்ற விழைந்த தாவீது, அவரிடம் பேசினார்.
1 சாமுவேல் 26: 22-23
தாவீது, "அரசே உம் ஈட்டி இதோ உள்ளது. இளைஞரில் ஒருவன் இப்புறம் வந்து அதை கொண்டு போகட்டும். அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப, ஆண்டவர் உம்மை ஒப்புவித்தும், ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் நான் கை வைக்கவில்லை" என்றார்.
"உம்மேல் நான் கை வைக்கவில்லை" என்று தாவீது கூறும் சொற்களை, "உமக்கெதிராக என் கரத்தை உயர்த்தவில்லை" என்று ஒரு சில மொழிபெயர்ப்புகளில் காண்கிறோம். பகைவருக்கு எதிராக, அவர்களை அழிக்க கரங்களை உயர்த்துவதற்குப் பதில், அவர்களை அரவணைக்க, ஆசீர்வதிக்க, நாம் கரங்களை உயர்த்தவேண்டும் என்று, இன்றைய நற்செய்தியில் இயேசு அழைப்பு விடுக்கிறார்.
இன்றைய நற்செய்திப்பகுதி, (லூக்கா 6:27-38) சென்ற வாரம் நாம் கேட்ட சமவெளிப் பொழிவின் தொடர்ச்சியாக உள்ளது. இதன் தொடர்ச்சியை அடுத்த வாரமும் நாம் கேட்கவிருக்கிறோம். சமவெளிப்பொழிவு முழுவதிலும், குறிப்பாக, இன்றைய நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ள பகுதியில், இயேசு கூறும் அறிவுரைகளைக் கேட்கும்போது, 'இவை, ஏட்டளவில் மட்டுமே பதிவுசெய்து, பத்திரப்படுத்தக்கூடிய அறிவுரைகள்; நடைமுறை வாழ்வுக்கு எள்ளளவும் உதவாத அறிவுரைகள்' என்று முடிவுகட்ட, இவ்வுலகம் நமக்குச் சொல்லித்தருகிறது.
'பகைவருக்குப் பகைமை; வெறுப்போருக்கு, வெறுப்பு; சபிப்போருக்குச் சாபம்' என்பது, இவ்வுலகம் சொல்லித்தரும் மந்திரம். ஆனால், இயேசு இன்றைய நற்செய்தியில், "பகைவரிடம் அன்பு, வெறுப்போருக்கு நன்மை, சபிப்போருக்கு ஆசி, இகழ்ந்து பேசுபவருக்கு இறைவேண்டல், கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னம், மேலுடையை எடுத்துக்கொள்பவருக்கு அங்கி..." என்று சவால்களை ஒன்றன்பின் ஒன்றாக, அடுக்கி வைக்கிறார்.
மறுகன்னத்தைக் காட்டுவது, மேலுடையுடன் அங்கியையும் சேர்த்துத் தருவது, ஆகிய நற்செயல்கள், நாம் புண்ணியத்தில் வளர்வதற்குச் சிறந்த வழிகள் என்ற கோணத்திலும் எண்ணிப்பார்க்கலாம். ஆனால், அது, இயேசுவின் கண்ணோட்டம் அல்ல. மறுகன்னத்தைக் காட்டுவதால், நமக்குள் நல்ல மாற்றங்கள் உருவாகும் நேரத்தில், நம்மைத் தாக்கும் பகைவரிடம் மாற்றம் எதுவும் நிகழவில்லையெனில், நாம் மறுகன்னத்தைக் காட்டுவதில் அர்த்தமில்லை. நாம் மறுகன்னத்தைக் காட்டுவதால், நமது பகைவரிடமும் மாறுதல்கள் வரவேண்டும். அந்த மாறுதல்கள், திரைப்படங்களில் வருவதுபோல், ஒரு நொடியில், ஒரு நாளில் வராது என்பதை, நாம் அனைவரும் அறிவோம். இருந்தாலும், அம்மாறுதல்கள் வரும்வரை, நாம் இந்த நற்செயல்களை, நம்பிக்கையோடு தொடரவேண்டும். இதுதான் இயேசு நமக்கு முன் வைக்கும் சவால்.
'மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்' (லூக்கா 6:29) என்று இயேசு கூறிய சொற்களை, மகாத்மா காந்தி, மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் போன்றோர், தங்கள் அறவழி, அகிம்சை வழிப் போராட்டங்களின் தாரக மந்திரமாக ஏற்றுக்கொண்டனர் என்பதை, வரலாறு சொல்கிறது.
'காந்தி' என்ற திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி இது: காந்தி அவர்களும், அவரது நண்பரும், கிறிஸ்தவப் போதகருமான சார்லி ஆண்ட்ரூஸ் அவர்களும் ஒரு நாள் வீதியில் நடந்து செல்லும்போது, ஒரு ரௌடி கும்பல் திடீரென அவர்களை வழிமறித்து நிற்கும். அவர்களைக் கண்டதும், "வாருங்கள், நாம் வேறுவழியில் சென்றுவிடுவோம்" என்று சார்லி, காந்தியிடம் சொல்வார். "உன் எதிரி உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால், அவருக்கு மறு கன்னத்தைக் காட்டவேண்டுமென்று இயேசு சொல்லவில்லையா?" என்று கேட்பார். அதற்கு சார்லி, "சொன்னார்... ஆனால், அதை ஓர் உருவகமாய்ச் சொன்னார்" என்று பூசி மழுப்புவார். காந்தி அவரிடம், "இயேசு அப்படிச் சொன்னதாக எனக்குத் தோன்றவில்லை. எதிராளிகள் முன்னிலையில் நாம் துணிவுடன் நிற்கவேண்டும். அவர்கள் எத்தனை முறை அடித்தாலும், திருப்பி அடிக்கவோ, திரும்பி ஓடவோ மறுத்து, துணிவுடன் நிற்கவேண்டும் என்பதையே இயேசு சொல்லித்தந்தார் என்று நினைக்கிறேன்" என்று, காந்தி அவரிடம் சொல்வதாக, அக்காட்சி அமைந்தது. இக்காட்சியில், காந்தியடிகள் கூறும் வார்த்தைகள், 'ஹீரோ’த்தனமாகத் தெரியலாம், அல்லது, பைத்தியக்காரத்தனமாகத் தெரியலாம்.
மலைப்பொழிவில் இயேசு கூறிய சவால்களை தன் வாழ்வில் பின்பற்ற முயன்ற காந்தியடிகள், "கண்ணுக்குக் கண் என்று உலகத்தில் எல்லாரும் வாழ்ந்தால், உலகமே குருடாகிப்போகும்" என்று சொன்னார். பழிக்குப் பழி வேண்டாம். சரி... அதற்கு அடுத்த நிலையை நாம் சிந்திக்கலாம் அல்லவா? காந்தியின் நண்பர் சார்லி சொல்வதை, அல்லது, "துஷ்டனைக் கண்டால், தூர விலகு" என்று நமது தமிழ் பழமொழி சொல்லித் தருவதை கடைபிடிக்கலாமே!
துஷ்டனைக் கண்டு நாம் தூர விலகும்போது, நமக்கு வந்த பிரச்சனை அப்போதைக்குத் தீர்ந்துவிடலாம். ஆனால், அப்பிரச்சனையின் பிறப்பிடமான அந்த ‘துஷ்டன்’ மாறுவதற்குத் தேவையான வாய்ப்பை நாம் தரவில்லையே. அந்த வாய்ப்பைத் தருவது பற்றித்தான் இயேசு சொல்லித்தருகிறார். மறுகன்னத்தைக் காட்டும்போது, மேலுடையுடன் அங்கியையும் சேர்த்துத் தரும்போது, நமது பகைவரிடமும் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பை நாம் உருவாக்குகிறோம் என்று இயேசு கூறுகிறார்.
மறுகன்னத்தைக் காட்டுதல், மேலாடையுடன் அங்கியை வழங்குதல் என்ற செயல்களால் பிறருக்குள் உருவாகும் மாற்றங்களைக் கூறும் பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்று: 2008ம் ஆண்டு, நியூயார்க் நகரில், கடும் குளிர் நிலவிய ஓர் இரவில், Subway இரயிலில் ஜூலியோ டயஸ் என்ற இளையவர் பயணம் செய்துகொண்டிருந்தார். தனது இரயில் நிலையம் வந்ததும் இறங்கி நடந்தார். அந்த நடைமேடையில் அதிக ஆள் நடமாட்டம் இல்லை. அந்நேரம், இளைஞன் ஒருவன், பின்புறமாய் வந்து, ஜூலியோவின் முதுகில் ஒரு கத்தியை வைத்து, அவரது பர்ஸைப் பறித்தான். அவன் ஜூலியோவைத் தாண்டி முன்னே சென்றபோது, ஜூலியோ அவனிடம், "நண்பா, ஒரு நிமிடம். நீ ஒன்றை மறந்துவிட்டாய். இன்றிரவு, இன்னும் ஒரு சிலரை மிரட்டி நீ பணம் பறிப்பதாக இருந்தால், உனக்கு இது தேவைப்படும்" என்று கூறி, ஜூலியோ, குளிருக்காக, தான் அணிந்திருந்த மேல் 'கோட்'டை கழற்றி, அவனிடம் நீட்டினார்.
அதைப் பார்த்ததும் இளைஞனின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. "ஏன் என்னிடம் இப்படி நடந்து கொள்கிறீர்கள்?" என்று தட்டுத் தடுமாறி பேசினான். ஜூலியோ அவனிடம், "இவ்வளவு 'ரிஸ்க்' எடுத்து, நீ பணம் திரட்டவேண்டும் என்றால், உண்மையிலேயே உனக்கு பணம் அதிகத் தேவை என்பதைப் புரிந்துகொண்டேன். இன்றிரவு, நீ சந்திக்கப் போகும் ஆபத்துக்களில், குளிர் என்ற அந்த ஆபத்தையாவது நான் குறைக்கலாமே. அதனால், இதை அணிந்துகொள்" என்றார். இளைஞன் நெகிழ்ந்துபோய் நின்றபோது, அவனை, உணவருந்த அழைத்துச் சென்றார், ஜூலியோ. உணவு முடிந்து, பில் வந்தபோது, "நீதான் பணம் கட்டவேண்டும். என் பர்ஸ் உன்னிடம் தான் உள்ளது" என்று ஜூலியோ சொன்னதும், இளைஞன் அவரிடம் பர்ஸைக் கொடுத்தான். ஜூலியோ, அவனுக்கு, மேலும் ஒரு 20 டாலர்கள் கொடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக இளைஞன் தனக்கு ஏதாவது தர வேண்டுமென்று அவர் கேட்டபோது, இளைஞன், தன்னிடம் இருந்த கத்தியை ஜூலியோவிடம் கொடுத்தான்.
பகைவரிடமும் மாற்றங்களைக் கொணரவேண்டும் என்ற எண்ணத்துடன், மறுகன்னத்தைக் காட்டும் பல உன்னத உள்ளங்கள் இன்றும் வாழ்கின்றனர். இவர்கள் ஆற்றும் உன்னதச் செயல்களில், ஆயிரத்தில் ஒன்று, என்றாவது, நமது செய்தித் தாள்களில், தொலைக்காட்சிகளில் இடம் பெறலாம். மற்றபடி, நமது ஊடகங்கள் தரும் பெரும்பாலான செய்திகள், "கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" செய்திகளே.
பிப்ரவரி 14, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா என்ற இடத்தில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலின் எதிரொலிகள் இன்னும் அடங்கவில்லை. பழிக்குப் பழி என்ற ஒரு மந்திரத்தையே முன்வைக்கும் இந்த முயற்சிகளில், பாகிஸ்தானுக்கு இந்தியா வழங்கும் நதி நீரையும் நிறுத்திவிடும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அறியும்போது, நம் சமுதாயத்தில் வேரூன்றியிருக்கும் வெறுப்புக் கலாச்சாரத்தைக் கண்டு, வேதனையடைகிறோம்.
இதே கலாச்சாரம், அமெரிக்க ஐக்கிய நாடு, வட கொரியா, சிரியா, ஏமன், உட்பட, பல நாடுகளில், பல வழிகளில், வெளிப்படுவது, நம்மை வேதனையில் ஆழ்த்துகிறது. பழிக்குப் பழி என்று, மனித வரலாற்றை, இரத்தத்தில் எழுதுவோரைப்பற்றி, ஒரு சீனப் பழமொழி இவ்வாறு சொல்கிறது: "பழிக்குப் பழி வாங்க நினைப்பவர், இரு சவக் குழிகளைத் தோண்ட வேண்டும். ஒன்று மற்றவருக்கு, மற்றொன்று தனக்கு."
மன்னிப்பதால், மறுகன்னத்தைக் காட்டுவதால் இவ்வுலகம் நம்பிக்கையில் வளரும் என்பதை அனைவரும் உணரும் நாள் விரைவில் வரவேண்டும் என்று மன்றாடுவோம். மறுகன்னத்தை நாம் காட்டும்போது, அக்கன்னத்தில் அறையும் நம் பகைவர்களின் மனங்களை மாற்றும் கனிவையும், துணிவையும், இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.
பொதுக்காலம் 7-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி(சாமு. 26:2,7-9,12-14,22-23)
தாவீதுக்கும், சவலுக்கும் இடையே ஏற்படும் மனக்கசப்டை தூக்கி எறிந்து மன்னிப்புணர்வை மையப்படுத்தி அன்பை வெளிக்கொணர்கிறது இன்றைய முதல் வாசகம். உருவத்திலும், வயதிலும் சிறியவனாக இருந்தாலும், கோலியாத்தை வென்று தானும் ஒரு வீரன் என்று உணர்த்தியத் தாவீதின் மேல், தன்னையும் தாண்டிய ஒரு வீரனா! என்று சவுல் காய்ம உணர்வால் தாவீதைப் பலமுறை கொல்லத் துடிக்கிறார். ஆனால் ஆண்டவரின் அடியான் சவுல் என்பதை உணர்ந்த நாவீது, அவரைக் கொல்லாமல், 'பகைவனென்று நினையாமல், தன்னுடைய அன்புச் செயலால் மன்னித்து உறவை வலுப்படுத்தி, கடவுளின் அன்புப் பிள்ளைகளாக வாழுகிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.
இரண்டாம் வாசகப் பின்னணி (1கொரி. 15:45-49)
யூதர்களின் வாழ்க்கை முறை, எப்பொழுதும் விதிமுறை: களைச் சார்ந்தும், அதை மையமாக வைத்துமே இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இறந்த மனிதன் உயிருடன் எழுப்பபடுவதை நம்ப முடியாமல், ஏற்றுக்கொள்ள முடியாமல் வாழ்ந்தவர்களுக்குத் தூய பவுல், மனித இயல்போடு புதைக்கப்பட்ட உடல், ஆவிக்குரிய இயல்போடு எழுப்பப்படும் என்பதை முதல் ஆதாம் வழியாக விளக்கி, அவ்வுயிரை வழங்கும் தூய ஆவியை அதாவது நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைக் கடைசி ஆதாமாக வைத்து, அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும், உயிர்ப்பின் மறை: யுண்மையை விளக்குகிறார். மண்ணுலகைப் பாவங்களிலிருந்து விடுவித்து, அன்பு செலுத்தி, ஆவியின் வரங்களோடு நம்மை மீண்டும் உயிர்பெற்றெழச் செய்யும் அழைப்புதான் இன்றைய வாசகம்.
நற்செய்தி வாசகப் பின்னணி (லூக்கா 6227-38)
நான் உங்களோடு இறுதிக் காலம் வரை இருக்க மாட்டேன். நான் சென்ற பிறகு நீங்கள் எப்படி வாம வேண்டும் என்பதைச் சீடாகளுக்கு விளக்கிக் கூறும் ஒரு பகுதிதான் இன்றைய நற்செய்தி வாசகம். அவர்களின் வாழ்வு மட்டுமல்ல, சீடனாக இருக்க விரும்பும் ஒவ்வொருவரின் வாழ்வும், இவ்வாசகத்தில் அடங்கும். இப்படி வாழ்ந்தால் நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று அழைப்பு விடுத்த மலைப்பொழிவு (மத்தேயு 5:1-12) முதல பாகம் என்றால், இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒரு அன்புக் கட்டளையோடு, பகைவனையும், மன்னித்து அன்பு செய் என்ற செயல்பாட்டை உரிமையோடு விளக்கும் இன்றைய நற்செய்தி வாசகம் மழைப் பொழிவின் இரண்டாம் பாகம்.
மறையுரை
மனித வாழ்விலே ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குக் கடந்து செல்லுதல் என்பது ஒரு மகத்தான செயல்பாடு. சாதரணமாகச் சொல்லிவிடுவோம், என் பையன் 12-ஆம் வகுப்பு முடித்து, மேற்படிப்புக்காகக் கல்லூரி செல்கிறான் என்று. அவன் எடுத்து வைப்பது என்னவோ, ஒரு படிக்கல்தான், ஆனால் அவன் பள்ளியிலிருந்து கல்லூரிக்கு கடந்து வருவதற்கு எடுத்துக்கொண்ட காலம் பல வருடம் என்பதை மறந்து விடுகின்றோம். அந்தப் பல வருடத்திலே, எத்தனை சோதனைகள். அத்தனையும் சாதனை. கணக மாற்றி, அதைக் கடந்து வரும்பொழுது கிடைக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாத ஒன்று. சிந்தித்து பார்த்தால் இறைவனால் படைக் கப்பட்ட ஒவ்வொரு படைப்பும் கடந்துச் செல்வதற்கு எத்தனை சோதனைகளையும், வேதனைகளையும், தாங்க வேண்டியிருக்கிறது. சாதாரண கல் சிலையாக மாறுவதற்கு ஆயுதங்களால் எத்தனை தாக்குதல்கள், ஒரு மூங்கில் புல்லாங்குழலாக மாறுவதற்கு எத்தனை வேதனைகள் அதன் வாழ்க்கையில். ஆக கடந்து செல்லு: தல் என்பது இன்றைய நிலையைப் பொறுத்த வரையில் கழனமான செய்திதான், கடந்து விட்டோம் என்றால் அதைவிடக் களிப்பான விஷயம் எதுவுமில்லை.
கடவுளை நீ அன்பு செய்கிறாய் - மகிழ்ச்சி, கடந்து வா, உன்னை நீ அன்பு செய்கிறாய் - மகிழ்ச்சி, அதை விட்டுக் கடந்து வா. உனக்கு அடுத்திருப்பவரை அன்பு செய்கிறாய் - மிக்க மகிழ்ச்சி,கடந்து வா, எங்கோ பூகம்பம் என்றால், யாரென்று தெரியாதவருக்குக் கூட அன்பை வெளிப்படுத்துகிறாய் - இரட்டிப்பு மகிழ்ச்சி, அதையும் விட்டு கடந்து வா.
ஆனால் உனது பகைவருக்கு அன்பு செலுத்து என்று சொன்னால் மட்டும் கசப்பாக இருக்கின்றது. எப்படிப் பகைவனை அன்பு செய்வது? இதுதான் இன்றைய மனிதர்களின் புலம்பல்.
பகைவருக்கு அன்பு செலுத்து, கேட்பதற்கே, கேலியாக இருக்கின்றதே. பகை என்று வந்த பிறகு, அன்பு என்பதற்கு அங்கே அர்த்தமில்லையே. முரண்பாடான, ஆனால் வாழ்க்கையின் றத்தை உணரச்செய்யும் உணர்வில் கலந்த வார்த்தைகள். சிந்தித்துப் பார்த்தால், கிறித்துவத்தின் மையப்புள்ளியும், சகாப்தமும் இந்த வார்த்தையிலே அடங்கிவிடும். கவிஞர் கண்ணதாசன் ௯றுவார். “மன்னிக்கத் தெரிந்த உள்ளம் மாணிக்க கோவிலப்பா...” மானிட மகள் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து ஒதுக்கி நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து, தள்ளிவிடும் போது, நீங்கள் பேறுபெற்றோர் (லூக்கா 6:22). உண்மைதான் நீங்கள் இகழப்படு- வதால் அல்ல, மாறாக இகழ்ச்சிபடுத்துபவரை மன்னிப்பதால் தான் பேறுபெற்றவர்கள் என்பதை மறைமுகமாக விளக்குகிறார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. ஆக பகைமை என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், அன்பும், மன்னிப்பும் கலந்தக் கலவையாக மாற வேண்டும்.
பகைமை என்பதை நினைக்கத் தூண்டுவது. எது?
அதிபர் ஆபிரகாம் லிங்கனின் மந்திரச்சொல் “நாம் எதுவாக மாற வேண்டுமென்று நினைக்கின்றோமோ, அதுவாக மாறுவோம்" என்பதுதான். “அதிபராக வேண்டும் என எண்ணினேன். அதுவாக மாறினேன்” என்றாராம். தான் ஒரு சமூகச் சேவகியாக வேண்டும் என்ற எண்ணம் இல்லையெனில், அன்னைத் தெரசா, அகிலம் போற்றும் அளவுக்கு உருவாகி இருக்க முடியுமா? ஈழத்தமிழர்களின் வளர்ச்சிக்காகப் பாடு படவேண்டும் என்ற எண்ணம் இல்லையெனில், பிரபாகரன் தான் உண்டாகி இருக்க முடியுமா? ஒரு தனி மனிதனின் எண்ணங்கள்தான், அவனை வாழ வைக்கும். அதே சமயம் வீழவும் வைக்கும், ஆக நம்முடைய எண்ணங்களும், சிந்தனைகளும் தொலைநோக்குப் பார்வையோடு இருந்தால் பகைமை என்பது அழியும். அன்பு என்பது மலரும். இதைத்தான் இன்றைய முதல் வாசகமானது நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. தாவீதின் நேர்மறை எண்ணம், சவுலின் உயிரைக் காப்பாற்றியது மட்டுமல்ல, பகைவர்களாக இருந்தவர்களை, அன்பைப் பகிர்ந்து கொண்டு ஆருயிர் நண்பர்களாக மாற்றியது. இப்படிப்பட்ட அன்பு வாழ்க்கை வாழும் பொழுது நாம் விண்ணகத்தைச் சார்ந்தவர்களாக இருப்போம் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் நமக்குக் கற்றுக்கொடுக்கின்றது. “உங்களைத் துன்பறுத்துவோர்க்காக ஆசி கூறுங்கள், ஆம்! ஆசி கூறுங்கள். சபிக்க வேண்டாம்” (உரோ. 12:14) என தூய பவுல் அழகாகக் கூறுவார். பிறரைச் சபிக்கும் பொழுது எதிர்மறை எண்ணங்கள் நம்மில் செயல் தூக்கும், பகைமை என்பது மேலோங்கி நிற்கும், உறவுகளில் வீரிசல் மேலும் அதிகரிக்கும், அன்பு என்பது வடிய மலரைப்போல வருந்தி நிற்கும். பத்தர் தன்னுடைய சொற்பொழிவிலே அருமையாகச் சொல்லுவார், “எண்ணங்களின் விளைபொருளே மனிதன்”. பொருள் ஆத்தில் ஏழையாக இருந்தாலும், மனதளவில் நேர்மறை எண்ணங்களைக் கொண்டு வாழ்பவன்தான் உண்மையில் பணக்காரன். அத்தளி: மனிதனால் மட்டுமே வாழ்க்கை என்ற விழுதுகள், மரங்களாக எழும்பும். ஜப்பான் நாட்டிலே எல்லாத் தொழில் நுட்ப மையங்களிலும் ஒரு அறிவிப்புப் பலகை ஒன்று வைக்கப்படுமாம். அதிலே பொறிக்கப் பட்டுள்ள வார்த்தைகள்: “ஒவ்வொருவரும் தன்னுடைய எண்ண 'அலைகளுக்குள்ளே ஓடவிடுவதின் பயன்தான் எம் நாட்டின் முன்னேற்றத்திற்குக் காரணம்' என்று கூறுவார்கள். ஜப்பானியர்கள் வார்த்தைகளை எணிணங்களாக்கி வளர்ச்சியைக் கற்றுக்கொள்- கிறார்கள். வாழும் பொழுது இப்பேற்பட்ட எண்ணங்களைக்கொண்டு வாழ்ந்தாலே போதும், அன்பு மட்டுமல்ல, அகிலத்தை ஆய்ந்தறியும் சக்தியும், நமக்குக் கிடைக்கும். இதற்குச் சிறந்த உதாரணம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து
படைத்தவரின் எண்ண அலைகள்:
தன்னுடைய வாழ்விலே அன்பை மலரச் செய்து, பகைமையை வேரறுத்து, உலகம் முழுவதிலும் அமைதியை உதயமாக்கியவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. தொடக்க நூல் முதல் அதிகாரத்திலே, ஒவ்வொரு படைப்பையும் படைத்த பின்பு அவற்றை நல்லது என காண வைத்தது, அவருடைய எண்ணங்கள். ஒல்வொரு முறையும் அவர் புதுமைகளைச் செய்யும் பொழுது, குணப்படுத்தப்படுபவரின் எண்ணங்களை அறிய, நீ நம்புகிறாயா? என்று விசுவாசத்தை மையப்படுத்தி இருந்தாலும், வீசுவசிப்பவர்களின் எண்ணங்களை வெளிக்கொணர அவர் எழுப்பும் கேள்வி அவர்களுக்கு மட்டுமல்ல, அன்பை மறந்து பகைமையை வளர்த்து உறலிலே விரிசல்களை ஏற்படுத்தும் ஒல்லொரு மனிதனுக்கும் இக்கேள்வி ஒரு சவுக்கடி. “தந்தையே இவர்கள் அறியாமல் செய்: கிறார்கள் இவர்களை மன்னியும்” என்ற எண்ணம்தான், பகைவனை: யும் பங்காளியாக்கியது (லூக்கா 23:34), பகைமை என்பதை வாடச்செய்ய, அன்பு என்பதை வளரச்செய்ய நமக்கு இன்றைய வாசகங்களும், இறைவனின் வாழ்க்கை முறைகளும், ஒரு முன்மாதிரி.
நடைமுறை வாழ்க்கையில்;
தமிழிலே ஒரு பழமொழி உண்டு, “திருமணம் என்பது ஆயிரம். காலத்துப்பயிர்”. பெரியோர்களால் நிகழ்த்தப்படும் திருமணம், தெய்வங்களால் மேலுலகில் நிகழ்த்தப்படும் திருமணத்திற்குச் சமம் என்பார்கள். ஆணல் தற்பொழுது நிலவி வரும் சூழ்நிலையில் திருமணம் என்பது விற்பனை மையமாக மாறிவிட்டது. 'கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்' என்று குருவானவர் சொன்னால், மறுமொழியாக, நாங்கள் பிரிப்பதை கடவுள் நினைக்காதிருக்கட்டும்' என்கிறார்கள். ஒரு நாளில் 4 திருமணங்கள் என்றால், அதே நாளில் எட்டு விவாகரத்துக்கள், காரணம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமை, உள்ளுக்குள் எழும்பும் காய்ம உணர்வு, பகையாக எழும்பி இருவருக்கும் இடையே உள்ள அன்மை முறிக்கிறது. '௮வர்களை மாஜிரி நட்பு கொண்டவர்கள் இல்வலகிலே யாரும் இல்லை' என்று நேற்று இரவுதான் பேசியிருப்போம், காலையிலே இருவருக்கும் பகைமை, காரணம் முற்சார்பு எண்ணங்கள், தேவையில்லாதச் சிந்தனைகள், அன்பை அழித்து பகைமையை வளர்த்தெடுக்கிறது. பகைமையோடு உருவகப் படுத்திய அவளை அன்பு செய்ய உள்ளம் கூசுகிறது. காரணம் உருவகப்படுத்திய நம்முடைய எண்ணங்கள். சிந்தித்து பார்ப்போம். நான் என்னுடைய அர்த்தமில்லாத எண்ணங்களால் எத்தனை பகைவர்களை என் வாழ்நாளில் சம்பாதித்திருக்கின்றேன்? அவர் களை மன்னிக்க இப்பொழுது தயாராக இருக்கின்றேனா? யோவான் 1334இல் கூறியுள்ளது போல, ஆண்டவர் கொடுக்கும் அன்புக் கட்டளையை என் வாழ்வில் ஏற்று வாழ்கின்றேனா? தன்னைச் சுட்ட அலியாக்காவை மன்னித்து, அன்பு செய்த திருத்தந்தை ஜான்பால் எங்கே? என்னை அடித்து விட்டான் என்பதற்காக, அவனைக் கொன்றுவிட்டேன் என்று கூறும் டெல்லியைச் சார்ந்தப் பள்ளி மாணவன் எங்கே? ஐந்து வருடப் பகையானாலும், சுனாமி அலைகள் வந்தவுடனே அடைக்கலம் கொடுத்த நாகர் கோவிலைச் சார்ந்த முட்டம் ஊர் மக்கள் எங்கே? சிந்திப்போம், நேர்மறை எண்ண அலைகளோடு, பகைவனையும் பங்காளியாக்கும், உன்னத மனப்பான்மையை வேணீடி இத்திருப்பலியில் பக்தியோடு மன்றாடுவோம். கேட்பதைக் கொடுக்கும் இறைவன் நீங்கள் புனிதனாக வாழ, இவ்வரத்தை உங்களுக்கு அருள்வாராக.
வாழ்வு என்பது இறைவன் வரைந்த ஓவியம்
வாழ்க்கை என்பது மனிதன் படைக்கும் காவியம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
- பகைவன் வெளியே இல்லை.உனக்குள்ளே இருக்கின்றான்.
- அன்பை ஆணிவேராகக் கொண்டு செயல்பட்ட கடவுளுக்குப் பகைமை ஒரு பொருட்டல்ல.
- மிதிப்பவரை மதிப்பராகவே வாழ்ந்திருக்கும் பல புனிதர்கள், வாழும் மனிதர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள் - இயேசுவின் வாழ்வோடு இணைந்து.
பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு
“பகைவருக்கு அன்பு? எனும் மையப் புள்ளியில் முதல் வாசகமும், நற்செய்தி வாசகமும் இணைகின்றன. சாமுவேல் முதல் நூலில் சவுல் தாவீதைக் கொல்வதற்காகத் தேடி வருகிறான். அப்போது தாவீது சவுலைக் கொல்வதற்கான வாய்ப்பு ஒன்று கிடைக்கின்றது. ஆனால் “ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப். பட்டவரைக் கொல்ல மாட்டேன் என்று விட்டுவிடுகிறார். நற்செய்தியில் நமதாண்டவர் “பகைவரிடம் அன்பு கூருங்கள்” என்று போதிக்கின்றார். இத்தகைய உயரிய பண்பை, பவுலடியார் இரண்டாம் வாசகத்தில் கூறும், “விண்ணைச் சார்ந்ததாகக் கொள்ளலாம். இனி இன்றைய நற்செய்திக்கான பின்னணியையும் அது தரும் செய்தியையும் காண்போம்.
பின்னணி
இன்றைய நற்செய்தி கடந்த வார நற்செய்தியின் தொடர்ச்சியாகும். அதாவது இயேசுவின் சமவெளிப் பொழிவின் தொடர்ச்சி, எனவே கடந்த வாரம் பின்னியாக தரப்பட்டவை அனைத்தும் இந்த வாரத்திற்கும் பொருந்தும். சமவெளிப் பொழிவு பேறுகளோடும், சாபங்களோடும் (கேடு) தொடங்குகின்றது. இவ்வாறு இறையரசு சார்ந்தவர்கள் யார் யார்? சாராதவர்கள் யார்? என தெளிவுப்படுத்தப்படுகின்றது. இனி இந்த இறைவாக்கினர் இயேசு வின் வார்த்தைகளை கேட்டு, “மனம் மாறி” இறையரசுக்குச் சொந்தமான மக்களுக்கு அவர்களின் வாழ்வியலும், அறநெறியும் எப்படி. இருக்கவேண்டும் என இயேசு ஆசிரியராக இருந்து! போதிக்கின்றார். இயேசு தம் இறையரசின் மக்களுக்கு பகை வருக்கு அன்பு, வெறுப்போருக்கு நன்மை, சபிப்போருக்கு ஆசி, இகசழ்வோருக்கு இறைவேண்டல் எனும் உயரிய பண்புகளை முன் வைக்கின்றார். இவற்றைக் குறித்து இவண் சிறிது விளக்கமாக பார்ப்போம்.
1. கடந்து நிற்கும் ஆன்மிகம்
இறையரசின் மக்கள், சாதாரண மற்ற மக்களைப்போல இருக்கக் கூடாது. இவர்களின் வாழ்வியலும், அறநெறியும், ஆன்மிகமும் மற்றவர்களைவிட சிறந்ததாக, உயர்ந்ததாக இருக்க வேண்டும். பகைக்குப் பகை என்பது உலக வழக்கமானால் பகைக்கு அன்பு என்பதே பதிலாக இருக்கவேண்டும். கன்னத்தில் அறைபவரை திரும்ப அறையாமல், மறு கன்னத்தை காட்ட வேண்டும். இதையே வள்ளுவன் “இன்னாசெய்தாரை ஒறுத்தல், நன்னயம் செய்யச்” சொல்கின்றார். அன்புக்கு அன்பு, பகைக்குப் பகை என்பது சாதாரணம். இது பாவிகளுக்கும் பொருந்தும், இதில், இப்படி செய்வதால், வாழ்வதால் இறையரசன் மக்களுக்கு எச்சிறப்பும் இல்லை. கடவுளின் மக்களாய் இருக்க அழைக்கப்பட்டோர், இவர்களைவிடச் இறந்து, உயர்ந்து நிற்கவேண்டும். அதில்தான் அவர்களின் சால்பு, மாண்ட உள்ளது.
2.பொன்விதி
பிறர் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று விரும்பு கிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் (வச. 31) என்பது பொன்விதி என்றழைக்கப்படுகின்றது. பிறரைத் தன் விருப்பப்படி வளைப்பதற்குப் பதிலாக, பிறர் விரும்புவதுபோல தன் விருப்பத்தை மாற்றி வாழ்வதற்கு ஓர் உளப்பக்குவம், மாண்ட உயர்ந்த உள்ளம் வேண்டும். இது இறையரசின் மக்களின் ரெண்டாம் உயர்நிலை.
3. இறைவன் போல செயல்படல்
இரண்டாம் நிலை எனும் பொன்விதி எனும் நிலையோடு இயேசு தன் இறையரசின் மக்களை நிறுத்திவிடவில்லை. அதையும் தாண்டி அவர்கள் இறைவன் செயல்படுவதுபோல செயல்பட வேண்டும். இறைவன் எல்லாருக்கும் நல்லாருக்கும், பொல்லாருக் கும் நன்மை செய்வதுபோல, “உங்கள் தந்த இரக்கமிக்கவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்” (வச. 36), என அறிவுறுத்தரன்றார். நன்மைத் தனத்துக்கு, இறை மக்களுக்கு இறைவனே மாதிரி, எல்லை. அவரை நோக்கியதாக, அவரை மேல்வரிச் சட்டமாகக் கொண்டு, . அவரை எட்டிப் பிடிக்க அனைவரும் முயலவேண்டும். இதுதான் அனைத்திலும் உயர்நிலை ஆன்மீகம்.
4. ஒருவரின் செயல்பாடுகளின் அளவுகோலே அவருக்குத் தீர்ப்பு
இன்றைய நற்செய்தியின் இறுதி வசனத்தில் இயேசு ஒரு புரட்சிகரமான சிந்தனையை முன்வைக்கிறார். நாம் பிறருக்கு அளிக்கும் அதே அளவைக்கொண்டே, நாம் பிறருக்கு தீர்ப்பளிக்க பயன்படுத்தும் அளவுகோளைக் கொண்டே நாம் தீர்ப்பிடப் படுவோம். “பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள் அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள். அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள். “மன்னியுங்கள், மன்னிப்புப் பெறுவீர்கள்” நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்" (வச. 37-38). எனவே நமது தீர்ப்பை நாம்தான் எழுதுகிறோம். நமது அளவை நாமே தீர்மானிக்கின்றோம். நமது அளவு என்ன என ஆராய்வோம்.
பொதுக்காலம் - ஏழாம் ஞாயிறு
முதல் வாசகம் :1 சாமு 26:2,7-9,12-13,22-23
சவுல் தன்னைக் கொல்லத் தேடியும், தாவீது சவுலின்மீது இரக்கம் காட்டுவது இன்றைய வாசகத்தின் சுருக்கம், 1 சாமு 24 இல் (காண் : 2 ஆம் வாரம், வெள்ளி) இதே கருத்து விளக்கமுறுவதைக் காண்க. ஒருவேளை இவை இரண்டும் ஒரே நிகழ்ச்சியை வேறுவேறு கோணங்களிலே காட்டுவதாகக் கொள்ளலாம். இவை வேறுபட்ட நிகழ்ச்சிகளே என்பாருமுளர். தாவீதின் மன்னிப்புக் குணத்தையும், இறைவனால் அருள்பொழிவு செய்யப்பட்டவருக்கு அவர் காட்டும் மரியாதையும் இவ்வாசகம் வெளிப்படுத்துகிறது.
மன்னிக்கும் நற்குணம்
“உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்... மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்" (லூக். 6 : 27 - 38) என்று கூறும் இன்றைய நற்செய்தி, தாவீதின் வழி உண்மைப்படுகிறது.- சவுல் தன்னிடம் அகப்பட்டுக் கொண்டார்; தன்னிடமிருந்து தப்ப முடியாது; தான் விரும்பினால் அவரைக் கொன்றுவிடலாம் என்ற ஒரு நிலையில் தாவீது இருந்தபோதும், தாவீதின் துணைவன் அபிசாயி, சவுலை எளிதிலேதான் கொன்றுவிட விரும்புவதாகக் கூறினும், தாவீது “அவரைக் கொல்லாதே" (26 : 9) என்று கட்டளை இடுகிறார். சவுல் தனக்கெதிராகப் போர் தொடுத்துத் தன்னைக் கொல்லத் தேடிய நிலையிலும், தாவீது சவுலை மன்னிக்கிறார்; அவருக்கு உயிர்ப் பிச்சையளிக்கிறார். தன்னைப் பகைவனாகக் கருதியவரைத் தன் அன்பனாக, தன் தந்தையாகக் காண்கிறார். “தீயோனிடமிருந்து தீமை பிறக்கும்; நான் உம் மேல் கை வைக்கமாட்டேன்' (24:14- 15) என்று கூறும் தாவீதின் பெருந்தன்மை தான் என்னே? இயேசுவே தம் எதிரிகளை மன்னித்து, அவர்களுக்காகத் தந்தையிடம் மன்னிப்பு வேண்டவில்லையா? (லூக் 23 : 34). இயேசுவின் போதனையும், அவருடைய வாழ்வும் மன்னிப்புக்கு முதலிடம் கொடுப்பதை அறிந்தும் (காண் : ஜூக். 6 : 27- 38; 1 4; மத் 5 : 22 - 26) அவ்இயேசுவைப் பின்பற்றும் நாம் மன்னிப்புக்கு நம் வாழ்வில் தலையாய இடம் தராதிருப்பது இயேசுவையே காட்டிக் கொடுப்பது போன்றதில்லையா? மன்னிப்போம்; மன்னிப்புப் பெறுவோம். நமது மன்னிப்பு வெறும் சொல்லளவிலே நின்று விடாது. நமது நடத்தையையும் ஆக்கிரமிக்க வேண்டும்.
பதவிக்கு மரியாதை
சவுல் தன் கையில் அகப்பட்ட நிலையிலும், அவர் இறைவனால் அருள்பொழிவு செய்யப்பட்டவர் என்ற நிலையிலே, தாவீது அவருடைய உயிரைப் பாதுகாக்கிறார். “ஆண்டவரால் அருள்பொழிவு செய்யப்பட்டவர்” என்ற ஒரே காரணத்துக்காகச் சவுல்மேல் தாவீது கைவைக்கத் துணியவில்லை (26 : 9. 23; 24 : 7. 11). அருள்பொழிவு என்பது வெறும் சடங்கன்று; இறைவனின் புனிதத்தையும், அருளன்பையும், பாதுகாப்பையும் வெளிப்படுத்தும் ஒர் அடையாளம். அருள்பொழிவு இறைவனின் பிரசன்னத்தையே சுட்டும் எனலாம். நம்மில் குருக்கள், ஆயர்கள் முதலியோர் சிறப்பு அருள்பொழிவு பெற்றாலும், கிறிஸ்துவர்கள் என்ற முறையிலே திருமுழுக்கால் நாம் எல்லோரும் அருள்பொழிவு பெற்றுள்ளோம் என்பதில் ஐயமில்லை. எனவே ஒருவர் ஒருவருக்கு நாம் காட்டவேண்டிய அன்பு, பணிவு, மரியாதை முதலியன இறைவனுக்கே காட்டப்படுகின்றது என்பதை உணர்வோமா? சிறப்பாக, அருள்பொழிவு என்ற சடங்கால் தூய்மைப்படுத்தப்பட்ட குருக்கள், ஆயர்கள்பால் நமது அன்பும் மரியாதையும் எந்த நிலையில் உள்ளன? அவர்களுக்காக வேண்டிக் கொள்கிறோமா, அவர்களுடைய அறிவுரைகளைக் கேட்டு நடக்கின்றோமா? அல்லது அவர்களுக்குத் தீங்கிழைப்பது அவர்கள் நற்பெயரைக் கெடுப்பது முதலியன நமது வாழ்க்கைத் தொழிலாயுள்ளதா?
ஆண்டவரால் அருள்பொழிவு செய்யப்பட்டவரின் மேல் கைவைப்பவன் குற்றவாளி.
இரண்டாம் வாசகம் 1கொரி. 15:45-49
முதல் மனிதனாகிய ஆதாம்
“ஒன்றே குலம் - ஒருவனே தேவன்" எனும் அடிப்படையான நம்பிக்கை விவிலியத்தின் ஆரம்பம். மனித குலம் ஒன்று. பல்வேறு இனத்தவராயினும் பல்வேறு நிறம், மொழி கொண்டவராயினும் உலக மக்கள் அனைவருப் ஒரு ஊற்றில் உதித்தவர்கள் என்பது விவிலிய மையக் கருத்து.
'ஆதாம்' எனும் பெயர் முதல் மனிதனைச் சுட்டிக்காட்டுவதோடு, மனித குலத்தின் ஒட்டு மொத்தத்தையும் குறிக்கிறது.
இன்று திருச்சபை வலியுறுத்துவது ஆதாமின் பாவத்தை மட்டுமன்று... ஆதாமில் மனித குலம் கொண்டுள்ள ஒன்றிப்பையும், கூட்டுப் பொறுப்பையும் ஆழ்ந்து உணர்கிறோம். எனவே சமத்துவ சகோதரத்துவ சமுதாயம் படைக்க திருச்சபை நம்மைத் தூண்டுகிறது.
இரண்டாம் வத்திக்கான் சங்கம் - 'இன்றைய உலகில் திருச்சபை! எனும் கொள்கைத் திரட்டில் கூறுகிறது: “ஒரே ஆளிலிருந்து அவர் மக்களினம் அனைத்தையும் படைத்து அவர்களை மண்ணுலகின்மீது குடியிருக்கச் செய்தார்; அவர்களுக்குக் குறிப்பிட்ட காலங்களையும் குடியிருக்கும் எல்லைகளையும் வரையறுத்துக் கொடுத்தார் (திப 17 : 26). அவரது சாயலாக படைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரும் கடவுள் என்ற ஒரே கதியை அடையவே அழைக்கப்பட்டுள்ளனர்'' (எண் 24).
“தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக'' (யோ. 17 : 21 - 22) என இயேசு தந்தையிடம் வேண்டிக்கொண்டபோது... மனித குலத்தின் ஒற்றுமையைப் பற்றி நம் அறிவால் மட்டும் காணமுடியா ஒர் நிறைவுக் கண்ணோட்டத்தை அளித்துள்ளார். மனிதர் அனைவரையும் உறவுப்படுத்தி, ஒற்றுமை உணர்வோடு வாழும் இயேசுவின் இறையரசை எதிர்கொள்ள திருச்சபை நம்மை அழைக்கிறது.
கடைசி ஆதாமோ உயிர்தரும் ஆவியானவர்
இயேசு பாஸ்கா மறை நிகழ்வால் நம்மீது ஆவியானவரைப் பொழிந்து உள்ளார். அவரின் நிறைவிலிருந்து நாம் உயிர் தரும் ஆவியைப் பெற்றுக்கொண்டுள்ளோம். “இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம்” (யோ. 1: 16). ஆவியால் அருள்பொழிவு செய்யப்பட்டு, ஆவியின் வழியில் நடந்து, அவரது வல்லமையில் செயல்பட்ட இயேசு தம் சீடர்கள் மீதும் ஆவியைப் பொழிந்து தன் மீட்புப் பணியைத் தொடர்ந்து செய்ய அனுப்பினார். “பின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளங்கள்' (யோ. 20 : 22) என்றார். ஆவியைப் பெற்றுள்ள நாம் ஆவியின் வழி நடக்கவும் ஆவியின் கனிகளைப் பகிர்ந்து கொள்ளவும் கடைப்பட்டுள்ளோம்.
எனவே தூய பவுல் கூறுகிறார்: “தூய ஆவியால் நீங்கள் தொடங்கிய வாழ்க்கையை இப்பொழுது வெறும் மனித முயற்சியால் நிறைவு செய்யப் போகிறீர்களா?... தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்... (கலா. 3:3;5:16). ஒரே ஆவியால் இயேசுவில் பிணைக்கப்பட்ட நம்மிடம் ஒற்றுமை உணர்வு உண்டா? பிளவு மனப்பான்மை பேயின் சதி வேலை என்பதை உணர்கின்றேனா? ஆவியானவர் என்னை ஆட்கொண்டுள்ளாரா? அல்லது தீய ஆவிகள் என்னைத் தீட்டுப்படுத்தி ஆட்டுவிக்கின்றனவா?
( விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் தாங்கியிருப்போம். )
நற்செய்தி :லூக்கா 6:27-38
“பகைவனுக்கு அன்பு செய்தல்” கிறிஸ்துவின் போதனையின் மையக் கருத்தாகும். கடுமையான கட்டளை ஆயினும் அவரது சீடனாக விரும்புபவன் இதை ஏற்றாக வேண்டும். இந்நெறியைப் பின்பற்றும் பொழுது நாமும் தெய்வ மக்கள் ஆகிறோம்.
பகைவர்க்கும் அன்பு
பகைவனைப் பகைத்து வாழ் என்பது பழைய போதனை. பகைவனின் அழிவுக்காக வேண்டிய பக்தர்களும் இருந்தனர். “ஆண்டவரே, எழுந்து வாரும்; அவர்களை நேருக்குநேர் எதிர்த்து முறியடியும்; பொல்லாரிடமிருந்து உமது வாளால் என்னைக் காத்தருளும்" (திபா. 17 : 19; 27: 4) ; “அவர்களின் கண்கள் காணாதவாறு ஒளியிழக்கட்டும்! அவர்களின் இடைகள் இடையறாது தள்ளாடட்டும்'' என்று சாபம் வழங்கிய பக்தர்களும் இருந்தனர் (திபா. 69 : 23 - 28). இதற்கு முற்றிலும் மாறானது இயேசுவின் போதனை. "' உங்கள் பகைவர்களுக்கு அன்பு செய்யுங்கள்: உங்களைச் சபிப்பவர்களுக்கு ஆசி கூறுங்கள்; உன் கன்னத்தில் அறைபவனுக்கு மறு கன்னத்தைக் காட்டு.
அனைத்து சட்டங்களையும் சுருக்கமாகக் கூறும் சூத்திரம் ஒன்று தருக என்று ராபி ஹில்லலை ஒருவன் கேட்டபொழுது “நீ எதை வெறுக்கிறாயோ, அதை நீ எவருக்கும் செய்யாதே” என்றாராம். விலக்க வேண்டியதைக் குறிப்பிடாது, செய்ய வேண்டியதைக் குறிப்பிடுகிறார் இயேசு; “பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
அன்பு செய்பவர்களுக்கு அன்பு செய்தல் எளிது. உதவி செய்தவனுக்கு உதவுதல் உலக வழக்கு. திருமண விழாவிலே கொடுக்கும் அன்பளிப்பு, வெறும் கொடுக்கல் வாங்கல் சடங்கு. எமதன்பை இறையன்பின் அடிப்படையில் எடை போட வேண்டும். கைம்மாறு கருதாது பெய்யும் மழை போல, பக்தனுக்கும் பாவிக்கும் இறைவன் பரிவு காட்டுவது போல, நண்பர்க்கும் பகைவர்க்கும் நமதன்பு எட்ட வேண்டும். உறவினர்க்கும் நண்பர்களுக்கும் அன்பு செய்தல் எளிதாகையால், இதைச் சட்டமாக்காது பகைவர்க்கு அன்புசெய்க என்று கட்டளை அளிக்கிறார் இயேசு. இதுவே கிறிஸ்துவமறையின் சிறப்பம்சம்; தனித்தன்மை. எனவே எனக்கு எதிராகப் பேசுபவர் என்னை அழிக்கச் சதித்திட்டம் தீட்டுபவர், என் துன்பத்தில் இன்பம் கொள்வோர் ஆகியோருக்கு அன்பு செய்து, அவர்களுக்கு நன்மை செய்து, அவர்கள் துன்பத்தைப் பகிர்ந்து கொள்ளும் பொழுது, நாம் உன்னதரின் மக்களாகிறோம் (35). “அன்பில்லாத இடத்தில் நீ அன்பைப் பொழியும் பொழுது, நீ அன்பைப் பெற்றுக் கொள்வாய்” என்கிறாய் சிலுவை யோவான்.
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தானே வரும் (குறள் 318)
இறை இரக்கம்
இரக்கம் என்பது இறையன்பின் வெளிப்பாடு. சோதோம் நகர அழிவின்போது லோத்தையும் அவன் குடும்பத்தையும் காப்பாற்றியது இறைவனின் இரக்கம் (தொநூ. 19 : 29). “ ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்து கொள்பவரல்லர்'” (காண் திபா, 103 : 8 - 13). இரக்கம் காட்டுபவன் தீர்ப்புக்கு அஞ்ச வேண்டியதில்லை என்பது யாக்கோபின் போதனை (2 : 13). “உன் தோழனின் படகு ஓட உதவினால் உன் படகு தானாக ஒடும்” என்பது இந்தியப் பழமொழி. எறிந்த பந்து எதிர் வீட்டுச் சுவரில் பட்டு எறிந்தவனையே அடைவது போல நாம் காட்டும் இரக்கமும் நம்மையே வந்தடையும். எம் பரலோக தந்தை இரக்கமுடையவராயிருப்பது போல நாமும் இரக்கமுடையவராய் இருக்க வேண்டும். தீர்ப்பு வழங்குவது நமது வேலை அன்று; வீண்தீர்ப்பு அளித்தால், நாமும் அதற்கு ஆளாவோம். பிறர் உன்னைப் புரிந்துகொள்ள வேண்டுமா? நீ அவரைப் புரிந்து கொண்டாயா என்று பார்.
உங்கள் பகைவர்களுக்கு அன்ப செய்யுங்கள்.