மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

பொதுக்காலம் 4 ஆம் ஞாயிறு மறையுரை
1-ஆம் ஆண்டு

இன்றைய வாசகங்கள்:-
செப்பனியா2:3, 3:12-13 | 1கொரிந்தியர் 1:26-31 |மத்தேயு 5:1-12a

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



சந்திரகுப்தர் அரசராக ஆட்சி புரிந்த காலத்தில் சாணக்கியன் அவரது அவையில் தலைமை அமைச்சராகப் பணிபுரிந்தார். குளிரால் துன்பப்படும் ஏழைகளுக்கு ஆயிரம் போர்வைகள் வாங்கிக் கொடுக்கப் பணித்தார் அரசன். சாணக்கியரோ நாளை ஏழைகளுக்குக் கொடுப்போம் என போர்வைகளை வீட்டில் கொண்டு போய் வைத்தார். அன்று இரவு கொள்ளையர்கள் சாணாக்கியர் வீட்டில் கொள்ளையடிக்க நுழைந்தார்கள். புதிய கம்பளி போர்வைகள் அடுக்கி இருப்பதையும், சாணாக்கியர் கிழிந்த பழைய போர்வையைப் போர்த்தி இருப்பதையும் திருடர்கள் கண்டு திடுக்கிட்டார்கள்! புதியப் போர்வைகள் இங்கே அடுக்கி இருக்க, இந்தக் கிழிந்த போர்வையை ஏன் பயன்படுத்துகிறீர்கள் என்று அந்தக் கொள்ளைக் கூட்டம் கேட்டபோது, இந்தக் கம்பளிப் போர்வைகளைப் பயன்படுத்த பேறுபெற்றவர்கள் குளிரால் துன்பப்படும் ஏழைகள் மட்டுமே. நான் இதைப் பயன்படுத்தினால் நானும் உங்களைப் போன்ற திருடன்தானே என்றார். சாணாக்கியர் சொன்ன வார்த்தை திருடர்கள் மனதில் முள் குத்தியதுபோல இருந்தது. உடனே அவர்கள் சாணாக்கியரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடை பெற்றுச் சென்றார்கள்.

இன்று நம் ஆண்டவர் இயேசு திருவாய் மலர்ந்து மலையில் போதித்தப் போதனையில், எளிய மனத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களதே. துயருறுவோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர் (மத் 5:3- 4) என வெளிப்படுத்துகிறார். மலைப்பொழிவு நமது அகத்தில் உள்ள மனித மாண்பை, நீதியின்பால் உள்ள வேட்கையைப் படம்பிடித்துக் காட்டும் மனக் கண்ணாடியாகும். இறைவன் பழைய ஏற்பாட்டிலே மோசே மூலம் சீனாய் மலையிலிருந்து இஸ்ரயேல் மக்களுக்குப் பத்துக் கட்டளைகளைக் கொடுத்ததுபோல (விப. 20:12-17), புதிய ஏற்பாட்டில் மோசேயாகிய இயேசு மலைமீது அமர்ந்து மக்களுக்குப் புதிய கட்டளையைக் கொடுக்கிறார். இயேசு ஏழைகளையும், இரக்கமுடையோரையும், துயருறுகிறவர் களையும், சமாதானம் செய்கிறவர்களையும் பேறுபெற்றவர்கள் என்கிறார். காரணம், இவர்கள் தங்களிடம் உள்ள செல்வத்தையும், அதிகாரத்தையும், படிப்பையும், பட்டங்களையும்விட இயேசுவின் போதனையைக் கடைபிடிக்கிறார்கள். இயேசுவின் வார்த்தைகளை வசப்படுத்தி, வாழ்வில் நீதியின் அடிப்படையில் நெறிமுறைகளைக் கடைபிடிப்பதே சிறந்ததாகும்.

இரக்கப்படுவது மனித இயல்பு. ஆனால் துன்பத்தில் இரக்கப்பட்டு ஒருவருக்கு உதவி செய்தல் தெய்வீக இயல்பு. இந்த மலைப்பொழிவின் வழியாக இயேசு மனித நேயத்தின் தூதுவராகச் சித்தரிக்கப்படுகிறார். இந்த மலைப் பொழிவுதான் நம் பாரத தந்தை, காந்தி மகானின் உள்ளத்தைக் கவர்ந்தது. தன் வாழ்வில் மேல்வரிச்சட்டமாகப் பின்பற்றி வாழ முயன்றார்.

ஒரு முனிவர் வழக்கமாக அதிகாலையில் ஆற்றில் குளித்துவிட்டு வருவார். அவரைப் பிடிக்காத ஒருவர் அவரைப் பற்றித் தவறாகத் திட்டிக் கொண்டே இருந்தார். கோபப்பட்டு எச்சிலையும் அவர்மீது காரித் துப்பினார். அவர் மீண்டும் போய்க் குளித்துவிட்டு வந்தார். இப்படி 50 தடவை காரித் துப்பினார். அவரும் பொறுமையாகத் திரும்பத் திரும்பக் குளித்துவிட்டு வந்தார். ஆனால் 51-வது தடவை அவர் காரித் துப்பவில்லை. உடனே அந்த முனிவர் அந்தக் கயவனிடம், இப்போது ஏன் என் மீது எச்சில் துப்பவில்லை என்று கேட்டார். அதற்கு அவர், உங்கள் மேல் உள்ள கோபமும், வெறுப்பும் இன்னும் தீரவில்லை. ஆனால் என்னிடம் எச்சில் தீர்ந்துவிட்டது என்றார்.

ஆம்! என் பொருட்டு பிறர் உங்களை வசை கூறித் துன்புறுத்தி, உங்கள் மேல் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றோர். அகமகிழ்ந்து களி கூறுங்கள் (மத்.5:11) என்ற நம் ஆண்டவர் இயேசுவின் அமுத வாக்குக்கு இந்த முனிவர் ஓர் எடுத்துக்காட்டு. நாமும் இந்த மலைப் பொழிவிற்குச் சான்று பகர்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கடவுளைக் காணமுடியுமா?

இளைஞன் ஒருவன் துறவி ஒருவரிடம் சென்று : கடவுளை நீங்கள் கண்டதுண்டா? என்றான். துறவியோ, நான் எனக்குள் கடவுளைப் பார்த்திருக்கின்றேன் என்றார். என்னால் பார்க்க முடியவில்லையே! என்றான் இளைஞன்.

அந்த இளைஞனை அந்தத் துறவி குளத்தங்கரைக்கு அழைத்துச் சென்றார்.

துறவி இளைஞனிடம், உனக்கு முன்னே என்ன பார்க்கின்றாய்? என்றார். ஒரு சிறு குளம் என்றான் இளைஞன். இந்தக்குளத்துத் தண்ணீருக்குள் உன் முகம் தெரிகின்றதா? என்று பார் என்றார் துறவி. இளைஞன் குளத்திற்குள் அவன் முகத்தைப் பார்த்தான். அதில் அவன் முகம் தெரிந்தது. என் முகம் தெரிகின்றது என்றான்.

துறவியோ அவனிடம், தண்ணீரை உன் கையால் கலக்கு என்றார். தண்ணீர் கலங்கியது! இப்போது உன் முகத்தைத் தண்ணீரில் பார் என்றார். அவன் முகம் தெரியவில்லை.

உன் மனம் கலங்கியிருக்கின்றது ; அதனால்தான் உனக்குள் வாழும் கடவுளை உன்னால் பார்க்க முடியவில்லை என்றார் துறவி!

மனம் என்பது ஒரு காசு - அதற்கு இருபக்கங்கள் உள்ளன : ஒன்று ஆசை ; மற்றொன்று அறிவு. உள்ளம் என்பது உணர்வுகளின் கூட்டு.

நாம் நமக்குள் வாழும் கடவுளை, கடவுளின் ஆவியாரைப் பார்க்க விரும்பினால் நமது ஆசையும், அறிவும், உணர்வுகளின் கூட்டும் தூய்மையாக்கப்பட வேண்டும்.

புனித பவுலடிகளார் உரோ 8:9-11-இல் மூன்று முறை, கடவுளின் ஆவியார் நமக்குள் வாழ்வதாகக் கூறுகின்றார். புனித யோவான் அவரது முதல் திருமுகத்தில் (1 யோவா 3:24) கடவுள் நம்மோடு இணைந்திருக்கின்றார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியாரால் அறிந்துகொள்கின்றோம் என்கின்றார். இரண்டாவது வாசகம், நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கின்றீர்கள் (1 கொரி 1:30அ) என்று கூறுகின்றது.

கடவுளைக் காண ஆசைப்படும் அனைவரும் வஞ்சகம் நிறைந்த (செப் 3:13) வாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, நம்மை கடவுளுக்கு ஏற்புடையவராக்கக்கூடியவர், நம்மைத் தூயவராக்கக்கூடியவர், நம்மை எல்லா பாவங்களிலிருந்தும் மீட்கக்கூடியவர் இயேசு [1 கொரி 1:30) என்று நம்பி, அவருடைய மன்னிப்பைக் கேட்டு, அவர் முன் மண்டியிட்டு, பாவமன்னிப்பிற்காக மன்றாட வேண்டும். திருப்பாடல் 51:1-10 பகுதியை அதன் ஆசிரியரோடு மன்றாடினால், பாடினால் இயேசு நம்மைக் கழுவிப் புனிதமாக்குவாரா? இந்த சந்தேகமே நமது மனத்தில் எழக்கூடாது. காரணம், இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கின்றார் (லூக் 19:10) என்றவர் இயேசு. நோயற்றவர்க்கு அல்ல. நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை (மத் 9:12) என்றவர் இயேசு. நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் (மத் 9:13ஆ) என்றவர் இயேசு. சொன்ன சொல் மாறாதவர் இயேசு.

ஆகவே, ஆழமான நம்பிக்கையோடு நற்கருணையின் உருவிலே எழுந்துவரும் இயேசுவின் பாதத்தில் விழுந்து, நம்மையே நாம் தூய்மைப்படுத்திக்கொண்டு, நமக்குள் இறைவனைக் கண்டு, அவரது அரவணைப்பில் நாளும், பொழுதும் நலமுடன் வாழ்வோம்.
மேலும் அறிவோம் :

பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் (குறள்:6).

பொருள்:
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து புலன்கள் வாயிலாகத் தோன்றும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியவன் இறைவன். அத்தூயவனது மெய்யான ஒழுக்க நெறியைப் பின்பற்றி நடந்திடுவோர் நீடிய புகழுடன் வாழ்வர்

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

"இந்தியாவில் ஒரே ஒரு கிறிஸ்தவர் மட்டும் இருந்தார். அவரும் திருமுழுக்குப் பெறாதவர்" என்று ஓர் ஆங்கில அறிஞர் கூறியுள்ளார். அந்த ஒரே கிறிஸ்தவர்தான் மகாத்மா காந்தி, அவர் கூறினார்: "இந்துக்களின் புனித புத்தகமாகிய பகவத்கீதையை நான் இழக்க நேரிட்டாலும், கிறிஸ்துவின் மலைப் பொழிவின் ஒரு பிரதி இருந்தால் எனக்குப் போதும்." உண்மையில் காந்தி கிறிஸ்துவின் மலைப் பொழிவின் வழியில் சென்று கத்தியின்றி, இரத்தமின்றிச் சாத்வீக முறையில் இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற்றுத்தந்தார்.

கிறிஸ்துவினுடைய போதனையின் சுருக்கம் மலைப் பொழிவு என்றால், மலைப் பொழிவின் சுருக்கம் எட்டுப் பேறுகள். அந்த எட்டுப் பேறுகளின் சுருக்கம் முதல் பேறு. "ஏழையரின் உள்ளத்தோர் (எளிய மனத்தோர்) பேறுபெற்றோர்" (மத் 5:3). இன்றைய முதல் வாசகம் கூறுகிறது: "ஏழை எளியோரை உன் நடுவில் விட்டு வைப்பேன். அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வார்கள்" (செப் 3:12). இன்றைய பதிலுரைப் பாடல் கூறுகிறது 'ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகிறார்; பசித்திருப்போர்க்கு உணவு அளிக்கிறார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார்" (திபா 146:7). இன்றைய இரண்டாம் வாசசுத்தில், "உலகம் இகழ்ந்து தள்ளுபவர்களைக் கடவுள் தெரிந்து கொண்டார்" (1 கொரி 1:28) என்கிறார் பவுல். சுருக்கமாக, இன்றைய வார்த்தை வழிபாடு எளியோரையும் ஏழைகளையும் மையப்படுத்துகிறது.

யார் இந்த எளியோர்? யார் இந்த ஏழைகள்? அவர்கள்தாம். "அனாவிம்" என்று அழைக்கப்படும் கடவுளின் ஏழைகள். இவர்களுடைய பண்புகள் நான்கு.

1. இவர்களிடம் செல்வம் இல்லை. அன்றாடங்காச்சிகள். வேலை கிடைத்தால் கூலி; கூலி கிடைத்தால் கஞ்சி; இல்லையென்றால் பட்டினி. இவர்களுக்கு வானமே கூரை, வையகமே படுக்கை.

2. இவர்களிடம் செல்வம் இல்லாததால் இவர்களை எவருமே மதிக்க மாட்டார்கள். "இல்லாளை இல்லாளும் வேண்டாள்; ஈன்றெடுத்தத் தாயும் வேண்டாள்; செல்லாது அவன் வாய்ச்சொல்" என்ற பாடலுக்கு உரியவர்கள்.

3. செல்வமோ செல்வாக்கோ இல்லாத இவர்கள், செல்வர்களால் ஒடுக்கப்பட்டனர். "ஏழையைக் கண்டால் மோழையும் (கொம்பில்லா விலங்கு) பாயும் என்ற பழமொழிக்குச் சொந்தக்காரர்கள்.

4. நசுக்கப்பட்ட நிலையில் கடவுளை நொந்து கொள்ளாமல் கடவுளிடம் தங்கள் நம்பிக்கையை வைத்து அவரிடம் அபயக்குரல் எழுப்பினர், "இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்" (திபா 34:6) என்ற திருப்பா இவர்களுடையது.

அனாவிம் மக்கள் எத்தகைய துன்ப வேளையிலும் கடவுளிடம் "என் தாயின் கருப்பையினின்று பிறந்தமேனியாய் வந்தேன்; அங்கே திரும்புகையில் பிறந்தமேனியாய் யான் செல்வேன். ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக் கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக" (யோபு 1:2) என்று யோபுவைப் போல் அமைந்த உள்ளத்துடன் கூறுவர்.

அசு ஏழ்மை மற்றும் புற ஏழ்மை என்று ஏழ்மை இருவகைப்படும். லூக்கா நற்செய்தி புறஏழ்மையை வலியுறுத்துகிறது, 'ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள்" (லூக் 6:20). அத்துடன், "செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு" (லூக் 6:24) என்றும் கூறுகிறது. ஏழைகளை உயர்த்திப் பணக்காரர்களைச் சபிக்கின்றார் கிறிஸ்து. ஆனால் மத்தேயு நற்செய்தி அகஏழ்மையை வலியுறுத்துகிறது. "ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்" (மத் 5:3). ஏனெனில் செல்வர்களும் மனத்தளவில் ஏழைகளாக, எளிய மனம் கொண்டவர்களாக வாழ முடியும். என்பதை மத்தேயு வலியுறுத்துகிறார். உண்மையில் புறஏழ்மையும் அக ஏழ்மையும் கைகோர்த்துச் செல்ல வேண்டும். புறஏழ்மையின்றி அக ஏழ்மை வருவது கடினம் அகஏழ்மையின்றி புறஏழ்மைக்குப் பொருளில்லை; அது சாபக்கேடு. துறவு, நெஞ்சத்தில் இருத்தல் வேண்டும். நெஞ்சில் துறவு மனநிலை இல்லாது, புறத்தோற்றத்தில் மட்டும் துறவிகளாக நடிப்பவர்கள் வஞ்சகர்கள் என்கிறார் வள்ளுவர்.

நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல் (குறள் 276).

கிறிஸ்துவே தலைசிறந்த அனாவிம், அவர் செல்வத்தராக இருந்தும் நமக்காக ஏழையானார் (2 கொரி 8:9). ஏழ்மையில் பிறந்து. ஏழ்மையில் வாழ்ந்து, ஏழ்மையில் இறந்தார். "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும் வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மானிட மகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை" (லூக் 9:57) என்று அவரால் உண்மையிலேயே கூறமுடிந்தது.

ஏழைகள் பேறுபெற்றவர்கள், பணக்காரர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று கிறிஸ்து கூறும்போது, பணத்தை வழிபடும் இவ்வுலகம் அவரை ஒரு பைத்தியம் என்று கருதும். ஆனால் இன்றைய முதல் வாசகத்தில் பவுல் கூறுவதுபோல, "கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுவதைத் தேர்ந்துகெண்டார்" (1 கொரி 1:27).. ஏழைகள்தான் கடவுளின் செல்லப் பிள்ளைகள்: இறை ஆட்சியின் அருளடையாளங்கள். அவர்களின் இறையாட்சிப்பண்; "உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்; பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்" கடவுள் (லூக் 1:50-53) என்பதாகும்.

ஒரு கோழி ஒவ்வொரு காலையிலும் நாட்டுப்பண் பாடும்; ஏனெனில் அது நாட்டுக் கோழியாம்! கோழி பாடுகிறதோ இல்லையோ. அனாவிம் மக்கள் மேற்கூறப்பட்ட மரியாவின் இறையாட்சிப் பாடலை நாள்தோறும் பாடுவர்.

மலைப்பொழிவின் மனநிலையின்றி இவ்வுலகை உருமாற்றம் அடையச் செய்யமுடியாது. கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடந்து ஏழ்மை நிலையைப் பின்பற்றி உலகை உயர்த்துவோமா? அல்லது பண ஆசை வலையில் விழுந்து நமது வாழ்வை நாமே அழித்துக் கொள்ளப்போகிறோமா? நோவாவின் பேழையைக் கட்டி உயிரைக் காத்துக் கொள்வோமா? அல்லது 'டைட்டனிக்' கப்பல் கட்டி, பண ஆசை என்ற பளிப்பாறையில் மோதி உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறோமா? சிந்திப்போம், சீர்தூக்குவோம், செயல்படுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

விடுதலை பெற்ற பறவையாய்...

வெண்ணிலவில் கால்பதித்த விண்வெளி வீரர் அங்கிருந்து பூமியைப் பார்த்ததும் வியந்து சொன்னார், நிலவைப் பற்றிய பாடல்களையெல்லாம் திருத்தி, இனி பூமியைப் பற்றிப் பாட வேண்டும் என்று.

"நிலாவே நிலாவே ஓடி வா” என்பதை "பூமியே பூமியே ஓடி வா” என்று பாட வேண்டுமாம்.

"அந்த நிலாவைத்தான் என் கைகளில் பிடித்தேன் என் இராசாவுக்காக” என்று பாடியதை முதல்மரியாதைக் கதாநாயகி, “அந்த பூமியைத்தான் என் கைகளில் பிடித்தேன் என் இராசாவுக்காக” என்று மாற்றிப் பாட வேண்டுமாம்.

அவ்வளவு இந்தப் பூமி அழகோ அழகு!

பூமியிலிருந்து பார்த்தால் அந்த நிலா அழகு. நிலாவிலிருந்து பார்த்தால் இந்தப் பூமி அழகு.

ஆனால் பூமியிலிருந்தே பூமி அழகு என்று பார்க்க வைக்கின்றன இறைமகன் இயேசு தந்த எட்டுப்பேறுகள்!

இயேசுவின் பணியும் இலட்சியமும், ஏன், நமது இலக்கும் கூட

இந்த உலகைச் சீருடையாக்குவதிலும், வாழத் தகுந்த இடமாக மாற்றுவதிலும்தானே இருக்கிறது! இந்தப் பேறுகள் நிகழ் காலத்தோடும் இந்த மண்ணோடும் மக்களோடும் தொடர்புடையவைகள்.

Ideas rule the world என்பார்கள். உலகில் உருவான அத்தனை எழுச்சிமிகு இயக்கங்களுக்கும் அமைப்புகளுக்கும் இதயமாக இருந்தது, இருப்பது ஆழ்ந்த சிந்தனைகளும் கருத்துக்களுமே! எடுத்துக்காட்டாக, அந்நிய ஆட்சியினின்று விடுபட அண்ணல் காந்தி காட்டிய அகிம்சை நெறிக்கு அடித்தளமிட்டதே இயேசுவின் மலைப்பொழிவு என்று அவரே கூறுகிறார்.

சீனாய் மலையில் மனித வாழ்வுக்கான நெறிமுறைகளைப் பத்துக் கட்டளைகளாகத் தந்த கடவுள், இந்தப் புனித மலையில் கிறிஸ்தவ வாழ்வுக்கான நெறிமுறைகளை எட்டுப் பேறுகளாகத் தருகிறார்.
மலைப்பொழிவில் காணும் இரண்டு கருத்துக்கள்

1. மகத்தான பாதுகாப்பின்மை:
கிரிக்கெட் விளையாட்டில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்கள் மகத்தான நிச்சயமின்மை (glorious uncertainty) என்பது. அதுபோல நற்செய்தி நெறிப்படி வாழும் கிறிஸ்தவ வாழ்வில் ஒரு மகத்தான பாதுகாப்பின்மை (glorious unsecurity) உண்டு. அதுவே இறைவனைத் தேடவும் சார்ந்து வாழவும் தூண்டும். அதனால்தான் ஏழைகளே, துயருறுவோரே ... என்றெல்லாம் இயேசு அழைக்கிறார்.

எனக்கு ஒரு பிரச்சனை என்றால் எங்கே நான் பாதுகாப்புத் தேடுவது? எனக்கு மேல் அலுவலர்களாக இருப்பவரிடமோ, எனக்குக் கீழே பணியாற்றுபவர்களிடமோ அல்ல. அவர்களிடம் அதற்கான தன்னிலை விளக்கத்தைத்தான் தர முடியுமே தவிர அவர்களிடம் பாதுகாப்பு தேட முடியாது. இறைவன் தரும் பாதுகாப்பில் நான் வைக்கும் நம்பிக்கை குறைந்துவிடும். அதனால் “ஆண்டவரே என் உரிமைச் சொத்து. அவரே என் கிண்ணம். எனக்கு உரியதை எனக்கு என வைத்திருப்பவர் அவரே” (தி.பா. 16:5) என்று அமைதி காண்கிறார் திருப்பாடல் ஆசிரியர். ஏழ்மையும் எளிமையும் உள்ள மக்களுக்கே இறுதிப்புகலிடம் என்கிறது முதல் வாசகம். வலுவற்றது, உலகம் பொருள் படுத்தாதது, தாழ்ந்தது, இகழ்ச்சிக்குரியது என்று உலகம் கருதும் இவர்களே இறைவனின் தேர்வு என்கிறது 2ஆம் வாசகம். நிலக்கரியை நிந்திக்காதீர்கள். வைரமாக மாறுவதே அதுதான்!

ஏழ்மை என்பது பாவம், ஏழைகள் என்பவர்கள் பாவிகள். கடவுளின் சாபத்துக்கும் தண்டனைக்கும் உட்பட்டவர்கள் என்ற பரிசேயரின் சிந்தனைகளைத் தகர்த்து ஏழை எளியோரே நீங்கள்தாம் பேறு பெற்றவர்கள். ஏனெனில் கடவுளால் வழி நடத்தப்படுபவர்கள் நீங்களே என்று கூறுகிறார் இயேசு.

ஏழ்மை என்ற சூழ்நிலை இருப்பதால் அல்ல அவர்கள் பேறு பெற்றவர்கள். மாறாக ஏழ்மை காரணமாக இறைவன் தருகின்ற பிரிக்க முடியாத உறவு இருப்பதால் அவர்கள் பேறு பெற்றவர்கள். "நாங்கள் ஏழைகள் என்று எல்லோரும் சொல்கிறார்கள். கடவுளைக் கொண்டிருப்பவர்கள் ஏழைகள் அல்ல” என்கிறார் துறவியான புனித கிளாரா.

2. விடுதலை மகிழ்ச்சி:
எளியவர்கள் என்ற சொல்லில் செல்வமற்றவர்கள், செல்வாக்கு இல்லாதவர்கள் அதனால் பிறரால் இகழப்பட்டவர்கள், தாழ்வுற்றவர்கள் கடவுளை மட்டுமே நம்பினவர்கள் என்ற தாழ்நிலை குறிக்கப்படுகிறது. அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி காத்திருக்கிறது என்கிறார் இறைவாக்கினர் செப்போனியா. இப்படிப்பட்டவர்கள் தான் பேறு பெற்றவர்கள் என்கிறார் இயேசு. எதிர்காலத்தில் வரும் மகிழ்ச்சியைப் பற்றி இயேசு குறிப்பிடவில்லை. நிகழ்காலத்தில் அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை நிலைக்கு இயேசு அளிக்கும் வாழ்த்துரையே இந்த மலைப்பொழிவு!

பேறு பெற்றவர்கள் என்ற வார்த்தை உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழும் ஆழ்ந்த மகிழ்ச்சியையே குறிக்கும். அது பசியிலும் கண்ணீரிலும் கூடப் பளிச்சிடும். உண்மையான நிலையான, நிறைவான மகிழ்ச்சிக்கு ஒரு மனிதன் பெறுகின்ற விடுதலையில்தான் இருக்கிறது.

மெத்தை, தலையணை என்று படுத்துப்பழகியவன் அவற்றிற்கு அடிமையாகிவிடுகிறான். அவையின்றி அவனுக்கு உறக்கம் வராது. கட்டாந்தரையில் தலைக்குக் கையை வைத்து படுக்கிறானே அவன் விடுதலை பெற்றவன் இல்லையா!

மனிதனுக்கு விடுதலை தர வந்தவர்தானே இயேசு! விடுதலை பெறாத மனிதன் தனது மகிழ்ச்சி, பணத்தால், பதவியால், சொகுசால், செல்வச் செழிபபால், வரும் வளரும் என்று எதிர்பார்க்கிறான். இது அவனது அடிமைத்தனத்தின் விளைவு. கிறிஸ்துவில் விடுதலை பெற்ற மனிதன் இந்த நிபந்தனைகளிலிருந்தெல்லாம் விடுதலை பெறுகிறான்.

இயேசுவின் பார்வையில்...
ஏழையர் – பணத்தால் வரும் கேட்டிலிருந்து விடுதலை பெற்றவர்.
துயருறுவோர் - சொகுசிலிருந்து விடுதலை பெற்றவர்
கனிவுடையோர் - செருக்கிலிருந்து விடுதலை பெற்றவர்
நீதி வேட்கையுடையோர் - அச்ச உணர்விலிருந்து விடுதலை பெற்றவர்
இரக்கமுடையோர் – தன்னலத்திலிருந்து விடுதலை பெற்றவர்
தூய உள்ளத்தோர் - இரட்டை (பிளவுபட்ட) வாழ்விலிருந்து விடுதலை பெற்றவர்

இப்படியெல்லாம் விடுதலை பெற்ற மனிதனே விடுதலை பெற்ற பறவை போல மகிழ்ச்சி என்னும் வானவீதியில் சிறகடித்துப் பறக்கின்றான். அவனது மகிழ்ச்சியை அவனிடமிருந்து எவனும் பறித்துவிட முடியாது (யோ. 16:22). இதுதான் உலகெலாம் ஒரு வாய்ப்படப் போற்றும் மலைப்பொழிவின் சாரம்!

இதுவரை பறக்காத பறவை - தனக்குச் சிறகுகள் இருப்பதைக் கூட உணராத ஒன்று இருக்கின்றது. தனக்குச் சிறகுகள் இருக்கின்றன. தன்னால் பறக்க முடியும் என்று திடீரென்று அது உணருகின்றது. உணர்ந்ததும் அது எழுந்து பறக்கின்றது. அப்போது அந்தப் பறவைக்குத்தான் எவ்வளவு மகிழ்ச்சி! எளியோருக்கு இயேசு சொன்ன நற்செய்தியை – எட்டுப் பேறுகளைக் கேட்ட மனிதனுக்கும் இப்படிப்பட்ட உணர்ச்சிதான் வருகிறது என்று கூறுகிறார் இரஷ்ய நாட்டு எழுத்தாளர் டால்ஸ்டாய்.

இன்றைய நமது நிலை? நேரு குறிப்பிட்டது போன்று “அணுவைப் பிளக்க அறிந்து கொண்டோம். ஆனால் மலைப்பொழிவை மறந்து போனோம்”.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மண்ணில் உருவாகும் விண்ணகம்

பங்குத்தந்தை ஒருவர் குழந்தைகளுக்கு மறைகல்வி வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். "குழந்தைகளே, என்கிட்டே இருக்கிற எல்லாப் பொருட்களையும் வித்து, அந்தப் பணத்தை ஏழைகளுக்கு நான் கொடுத்தா, நான் மோட்சத்துக்கு, விண்ணகத்துக்குப் போகமுடியுமா?" என்று கேட்டார். குழந்தைகள் 'கோரஸ்'ஆக "முடியாது" என்று சொன்னார்கள். பங்குத்தந்தைக்கு ஆச்சரியம், குழப்பம்.

"சரி, நம்ம பங்குல இருக்கிற எல்லா நோயாளிகளுக்கும் நான் தினமும் மருந்து, மாத்திரை எல்லாம் குடுத்து கவனிச்சிக்கிட்டா, நான் விண்ணகத்துக்குப் போக முடியுமா?" என்றார். அவர் கேள்வியை முடிப்பதற்குள், "முடியாது" என்று குழந்தைகள் கத்தினர். "எல்லாக் குழந்தைகளுக்கும் நான் தினமும் சாக்லேட், மிட்டாய், பொம்மை எல்லாம் குடுத்தா?" என்று கேட்டார். மீண்டும் குழந்தைகள் "முடியாது" என்றே சொன்னார்கள். பங்குத் தந்தைக்குப் பெரிய அதிர்ச்சி.

"சரி, அப்ப நான் விண்ணகத்துக்குப் போக என்ன செய்யணும்?" என்று அவர்களையேக் கேட்டார். ஒரு சிறுமி எழுந்து நின்று, "நீங்க விண்ணகத்துக்குப் போகணும்னா, முதல்ல சாகணும்" என்று, கள்ளம் கபடமற்ற ஒரு புன்னகையுடன் சொன்னாள்.

பங்குத் தந்தைக்குத் தெரியாத ஒரு மிகச்சாதாரண உண்மையை அந்தக் குழந்தை அன்று அவருக்குச் சொல்லித் தந்தாள். ஆனால், அது முழு உண்மை அல்ல என்பதை நாம் உணர்வதற்கு இன்றைய ஞாயிறு வாசகங்கள் நமக்கு இன்னும் சில பாடங்களைச் சொல்லித் தருகின்றன. விண்ணகம் என்பது, இறந்தபின் நமக்குக் கிடைக்கும் பரிசு என்று எண்ணுபவர்களுக்கு இக்குழந்தை சொன்னது உண்மையாகப் படலாம். ஆனால், விண்ணகம் என்பது மண்ணகத்திலேயே சாத்தியம் என்பதை இயேசுவும், இன்னும் பல இறைவாக்கினர்களும், புனிதர்களும் சொல்லிச் சென்றுள்ளனர். வாழ்ந்தும் காட்டியுள்ளனர்.

இந்த ஞாயிறு முதல், தவக்காலத்தின் துவக்கம் வரை உள்ள நான்கு ஞாயிறு திருப்பலிகளில், இயேசு வழங்கிய மலைப்பொழிவிலிருந்து நற்செய்தி வாசகங்களை கேட்கவிருக்கிறோம். இப்பகுதிகள், தவக்காலத்திற்கு நம்மை தயாரிப்பதற்கு உதவியாக இருக்கும் என்பது உறுதி. இன்றைய நற்செய்தியில், மலைப்பொழிவின் அறிமுகப் பகுதியாக இயேசு கூறும் 'பேறுபெற்றோர்' என்ற ஆசியுரைகள், மண்ணகத்தில் விண்ணகத்தை உருவாக்க இயலும் என்ற உண்மையை ஆணித்தரமாகக் கூறுகின்றன. Jacques Pohier என்ற இறையியலாளர் கூறிய ஒரு கூற்று இது: "இயேசு மலைப் பொழிவில் 'பேறுபெற்றோர்' என்று கூறிய கருத்துக்கள், மறு உலக வாழ்வைப்பற்றிய வழிகாட்டிகள் அல்ல; இவ்வுலகில் நாம் வாழக்கூடிய மறு வாழ்வைப்பற்றிய வழிகாட்டிகள்." “Beatitudes are not the map of a life in another world, but the map of another life in this world.”

விண்ணகம் என்பது என்ன என்பதை நாம் புரிந்து கொண்டால், நாமும் பல தெளிவுகளைப் பெறலாம். சிறுவயதில் விண்ணகம் என்ற சொல்லைக் கேட்டதும், அதை ஓர் இடமாக கற்பனை செய்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், வயதில் வளர, வளர, விண்ணகம் ஓர் இடம் அல்ல, அது ஒரு வாழ்வுநிலை என்ற உண்மையைப் புரிந்துகொள்ள முயல்கிறோம். விண்ணகம் என்பது, அடிப்படையில், முழுமை அடைவது, நிறைவு பெறுவது என்ற ஆழமான எண்ணங்களை உள்ளடக்கியது. அந்த முழுமையில், நிறைவில் நாம் அதிகம் அனுபவிப்பது ஆனந்தம். ஆனந்தம், மகிழ்ச்சி என்று சொன்னதும், நம் மனதில் பல எண்ணங்கள் ஒரே நேரத்தில் அலைமோதுகின்றன. முதல் எண்ணம்... ஆனந்தம், மகிழ்வு ஆகியவை நம்மைத் தேடி வருமா, அல்லது நாம் அவற்றைத் தேடிப் போகவேண்டுமா என்ற கேள்வி. "மகிழ்வு ஒரு வண்ணத்துப் பூச்சி. அதை நாம் துரத்திச் செல்லும்போது, அது நம்மைவிட்டு விலகிச் செல்கிறது. நாம் அமைதியாக அமர்ந்திருக்கும்போது, அது நம் தோள்மீது வந்து அமரும்" என்று சொன்னவர், Nathaniel Hawthorne என்ற எழுத்தாளர்.

மகிழ்வைத் தேடி அலைவது பற்றி பல கதைகள் சொல்லப்படுகின்றன. தன் வாலில்தான் மகிழ்ச்சி உள்ளதென்று தன் வாலையே நாள் முழுவதும் துரத்திப் பிடிக்க சுற்றிச்சுற்றி வந்த குட்டிப்பூனையிடம், "மகிழ்வு என் வாலில் இருக்கிறது என்பதை அறிந்த நானும் உன்னைப்போல சிறு வயதில் என் வாலை துரத்திக்கொண்டே இருந்தேன். ஆனால், என் வாலில்தான் மகிழ்ச்சி இருக்கிறதென்றால், அதை நான் துரத்த வேண்டாம். என் வேலைகளை நான் ஒழுங்காகச் செய்தால், மகிழ்வு எப்போதும் என்னைத் தொடர்ந்து வரும் என்பதை பின்னர் உணர்ந்தேன்" என்று தாய் பூனை சொன்னதாம். இது ஒரு கதை.

தவறான இடங்களில் மகிழ்வைத் தேடுகிறோம் என்பதைக் கூறும் மற்றொரு கதை இதோ. அகன்ற ஒரு சாக்கடைக்கருகே ஒருவர் நடந்து கொண்டிருந்தார். நாற்றம் தாங்காமல் மூக்கைப் பிடித்துக்கொண்டு நடந்த அவர் திடீரென நின்றார். அவர் கண்களில் ஒளி. அந்தச் சாக்கடையில் ஏதோ ஒன்று பளீரென ஒளிர்ந்தது. உற்றுப் பார்த்தபோது, அது ஒரு வைரநகை போலத் தெரிந்தது. கரையில் நின்றபடி, கைகளை மட்டும் சாக்கடையில் விட்டு அதை எடுக்க முயன்றார். முடியவில்லை. அடுத்து, சாக்கடையில் இடுப்பளவு ஓடிய அந்த அழுக்கு நீரில் நின்று தேடினார். ஒன்றும் கிடைக்கவில்லை. மீண்டும் கரையேறி வந்து பார்த்தபோது, அந்த நகை அதே இடத்தில் பளிச்சிட்டது. அடுத்து, மனதைத் திடப்படுத்திக் கொண்டு, அந்தச் சாக்கடையில் முற்றிலும் மூழ்கித் தேடினார். ஊஹும்.. ஒன்றும் பயனில்லை. விரக்தியுடன் அவர் சாக்கடையை விட்டு வெளியேறிய அந்த நேரம், ஒரு முனிவர் அந்தப் பக்கம் வந்தார். "எதைத் தேடுகிறீர்கள்? எதையாவுது தவற விட்டுவிட்டீர்களா?" என்று கேட்டார். நகையைப்பற்றிச் சொன்னால், முனிவர் அதை எடுத்துக்கொள்வாரோ என்று பயந்து, அவர் பேசத் தயங்கினார். அவரது தயக்கத்தைக் கண்ட முனிவர், தான் அவருக்கு உதவி மட்டுமே செய்யப்போவதாக வாக்களித்தார். சாக்கடையில் மூழ்கி எழுந்தவர் முனிவரிடம் சாக்கடைக்குள் தான் கண்ட அந்த நகையைச் சுட்டிக்காட்டினார். அதை எடுக்க தான் எடுத்த முயற்சிகளையும் கூறினார். முனிவர் அவரிடம், "நீங்கள் ஒருவேளை தவறான இடத்தில் அந்த நகையைத் தேடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். வேறு இடத்தில் தேடுங்கள். கீழே மட்டும் பார்க்காதீர்கள். மேலேயும் பாருங்கள்." என்று சொல்லிவிட்டு, அந்த இடத்தைவிட்டுச் சென்றார். முனிவர் சொன்னபடி மேலே பார்த்தவருக்கு ஆனந்த அதிர்ச்சி. அவர் நின்ற இடத்தில் ஒரு மரம். அம்மரத்தின் கிளையில் அந்த நகை தொங்கிக் கொண்டிருந்தது. அதுவரை அவர் அந்த நகையின் பிம்பத்தை உண்மை நகை என்று எண்ணி சாக்கடைக்குள் தேடிக் கொண்டிருந்தார்.

உண்மையான மகிழ்வு, ஆனந்தம் இவற்றைத் தேடுவதற்குப் பதில், மகிழ்வின் மாய பிம்பங்களை நம்மில் எத்தனை பேர் தேடுகிறோம்? நம்மில் எத்தனை பேர் தவறான இடங்களில் மகிழ்வைத் தேடுகிறோம்? மகிழ்வேன்று நினைத்தவை மறைந்து போகும்போது, நம்மில் எத்தனை பேர் மனமுடைந்து, தவறான முடிவுகளை எடுத்திருக்கிறோம்?

இன்றைய வழிபாட்டு வாசகங்கள் உள்ளத்தின் நிறைவை, வாழ்வின் நிறைவை அடையும் வழிகளைச் சொல்கின்றன. இந்த நிறைவை அடைய, மரணம்வரை, அந்த மரணத்திற்குப்பின் வரும் விண்ணகம்வரை காத்திருக்கத் தேவையில்லை. இந்த மண்ணகத்தை விண்ணகமாக்கும் வழிகள், சக்தி நம்மிடமே உள்ளன என்பதை இன்றைய வாசகங்கள் தெளிவாக்குகின்றன.

இந்த ஞாயிறுக்குரிய வாசகங்களை திருப்பலி நேரத்தில் கேட்டு பயனடைவதோடு நின்றுவிடாமல், இல்லத்திற்கு திரும்பியபின், இன்றைய நாளில், ஒரு சில மணித்துளிகளை ஒதுக்கிவைத்து, அமைதியாக, ஒருவித தியானநிலையில் வாசித்துப் பயனடைய உங்களை அழைக்கிறேன்.

இறைவாக்கினர் செப்பனியா 2:3; :12-13
நாட்டிலிருக்கும் எளியோரே! ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிப்போரே! அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்; நேர்மையை நாடுங்கள்; மனத்தாழ்மையைத் தேடுங்கள்.

ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்: அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வார்கள். இஸ்ரயேலில் எஞ்சியோர் கொடுமை செய்யமாட்டார்கள்: வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது: அச்சுறுத்துவார் யாருமின்றி, அவர்கள் மந்தைபோல் மேய்ந்து இளைப்பாறுவார்கள்.

ஏழை, எளியோர் நாட்டில் இருப்பதால், அங்கு விளையும் நன்மைகளைக் கூறுகிறார் இறைவாக்கினர் செப்பனியா. ஏழை, எளியோர் வாழும் நாட்டில் கொடுமைச் செயல்கள், வஞ்சகப் பேச்சு, அச்சம் எதுவுமிராது. பாகுபாடுகள் ஏதும் இல்லாமல், அனைவரும் பந்தியமர்ந்து உண்டபின் அனைவரும் ஒன்றாய் இளைப்பாறும் ஒரு நாடு அது. அத்தகைய ஒரு நாடு, மண்ணகத்தில் உருவாகக்கூடிய விண்ணகம்தானே!

இன்றைய நற்செய்தியிலும் ஏழை, எளியோர் உயர்த்திப் பேசப்படுகின்றனர். செல்வமும், புகழும் பெற்றிருப்பது இறைவன் வழங்கும் ஆசீர் என்றும், இவற்றை பெற்றிருப்போர் விண்ணகத்தில் நுழைவது உறுதி என்றும் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் எண்ணி வந்தனர். அவர்களது எண்ணங்களை தலைக்கீழாக புரட்டிப்போடும் வண்ணம் இயேசு தன் மலைப்பொழிவில், வறியோரை, துயருறுவோரை, சக்தி அற்றோரை, விண்ணகத்திற்கு உரியவர்கள் என்று கூறினார்.

மத்தேயு நற்செய்தி 5: 1-10
இயேசு... திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச்சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.

மலைப்பொழிவில் இயேசு பகர்ந்த 'பேறுபெற்றோர்' என்ற இப்பகுதி, பலருடைய உள்ளங்களில் ஆழப்பதிந்து, அவர்களை உன்னத மனிதர்களாக மாற்றியுள்ளது. அவர்களில் ஒருவர் மோகன்தாஸ் காந்தி. இரக்கமுடையோர், அமைதி ஏற்படுத்துவோர், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர், ஆகியோரை வரிசைப்படுத்தி, வன்முறையற்ற அகிம்சை வழியால் இவ்வுலகை விண்ணகமாக்க முடியும் என்பதை ஆணித்தரமாக பறைசாற்றிய இயேசுவை, தன் மானசீகத் தலைவராக ஏற்றுக்கொண்டவர் மகாத்மா காந்தி. அவரைப் போலவே, மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரையும் அதிகம் கவர்ந்த விவிலியப் பகுதி, மலைப்பொழிவு. அகிம்சை வழியை உலகில் வாழ்ந்து காட்டிய மகாத்மா காந்தி, குண்டுக்குப் பலியான நிகழ்வை, நாளை, சனவரி 30ம் தேதி, நாம் நினைவுகூருகிறோம். அடிப்படைவாதி ஒருவனின் குண்டுக்கு, அகிம்சைவாதியான காந்தி பலியான நாளுக்கு முந்தைய நாள் அவர் மனதைக் கவர்ந்த மலைப்பொழிவை கேட்கும் ஒரு வாய்ப்பு நமக்கு கிடைத்ததை, அருள்நிறைந்த தருணமாகக் கருதலாம்.

இறுதியாக ஓர் எண்ணம். இவ்வாண்டு, மகாத்மா காந்தி கொலையுண்ட நாளான சனவரி 30ம் தேதியன்று, இந்தியாவில், சிறப்பானதொரு நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான இராகுல் காந்தியின் தலைமையில், சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டின் கன்னியா குமரியில் துவங்கிய ‘Bharat Jodo Yatra’ (Unite India March) என்ற ஊர்வலம், நாளை, சனவரி 30ம் தேதி ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவடைகிறது.

மதம், இனம், மொழி, சாதி என்ற பல்வேறு பிளவுகளை இன்னும் ஆழப்படுத்தும் வண்ணம், வெறுப்புணர்வுகளை ஊட்டி வளர்க்கும் இன்றைய அரசின் பிரித்தாளும் தந்திரங்களுக்கு ஒரு சவாலாக, 'இந்தியாவை ஒருமைப்படுத்தும் நடைப்பயணம்' என்ற பெயருடன், ‘Bharat Jodo Yatra’ என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முயற்சியினால், இந்தியாவின் பல பகுதிகளில் உருவாகியுள்ள நம்பிக்கை தரும் அதிர்வலைகள், நம்மையும், குறிப்பாக, நம் இளையோரையும் சென்றடையவேண்டும் என்று மன்றாடுவோம். மதம், இனம், மொழி, சாதி என்ற பிரிவுச் சுவர்களை தகர்த்தெறிந்து இந்தியா ஒருங்கிணைந்தால், அதுவே நாம் உருவாக்கக் கூடிய விண்ணகம் என்பதை உணர்வோம்.

பல ஆண்டுகளுக்கு முன், நம் தேசியக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் இத்தகைய கனவை ஓர் இறைவேண்டலாக வெளிப்படுத்தினார். அவருடைய வேண்டுதல் நம் வேண்டுதலாக மாறட்டும்:

எங்கே மனதில் பயமின்றி தலைதான் உயர்ந்து நிற்கிறதோ
எங்கே அறிவுச் சுதந்திரத்தால் உண்மைச் சொற்கள் வெளிவருமோ
எங்கே குறுகிய பிளவுகளால் உலகின் உருவம் சிதையாதோ
எங்கே தளராப் பெருமுயற்சி முழுமையை நோக்கிச் செல்கிறதோ
எங்கே பகுத்தறிவு எனும் ஆறு மறைந்து ஒழியும் பழக்கங்களாம்
பாலை மணலில் பாயாது பயனைத் தேடி மீள்கிறதோ
எங்கே விரிந்த சிந்தனையால் இன்சொல் நற்செயல் விளைகிறதோ
நினதருள் அழைத்துச் சென்றிடவே எனதுளம் எங்கே விழைகிறதோ
அந்த சுதந்திர விண்ணகத்தில் எந்தாய் என் நாடு விழித்தெழுக

(தாகூர் கவிதையின் தமிழாக்கம்: ஆனந்தநாதன் சே.ச.)
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம்‌ நான்காவது ஞாயிறு

முதல்‌ வாசகப்‌ பின்னணி செப்‌. 2:3,3:12-13)

செப்பானியா இறைவாக்கினர்‌ கி.மு.7-ஆம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ இறைவாக்கினர்‌ எரேமியாவின்‌ காலத்திற்கு முன்பு எருசலேமில்‌ இறைவாக்குரைத்தார்‌. இவர்‌ ஆண்டவர்‌ தீர்ப்பு வழங்கும்‌ நாள்‌ குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்‌. இவர்‌ வாழ்ந்த காலகட்டத்தில்‌ சிலைவழிபாடு, ஆளும்‌ வர்க்கத்தின்‌ தவறான வாழ்க்கை முறைகள்‌, ஏழைகள்‌ சமுதாயத்தில்‌ அடிமைப்படுத்தப்‌- பட்ட நிலை போன்றவை பரவலாக நிலவி இருந்தன.

இத்தகைய சூழலில்‌ செப்பானியா இறைவாக்கினர்‌ ஏழைகளை நோக்கி விடுத்த அறைகூவல்தான்‌ இன்றைய முதல்‌ வாசகம்‌. ஆண்டவரின்‌ கட்டளையை கடைபிடிக்க, நேர்மையை நாட, மன- தாழ்ச்சியோடு ஆண்டவரை தேட அழைக்கிறார்‌. மேலும்‌ ஆண்டவரின்‌ அழிவின்‌ நாளில்‌ ஏழைகளுக்கு அழிவு நேராது என்றும்‌ ஆறுதல்‌ சொல்லுகிறார்‌.

இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (1கொரி. 1:26-37)

கொரிந்து நகரமானது பெரிய கிரேக்க வாணிக நகரமாகும்‌. தூய திருத்தூதர்‌ பவுல்‌ கொரிந்து நகர மக்களுக்கு எழுதிய கடிதத்தின்‌ பின்னணி இதுவே:

யூதர்கள்‌: கிறிஸ்துவின்‌ சிலுவை வழி மீட்பை ஏற்றுக்‌ கொள்ள- வில்லை. காரணம்‌ சிலுவை அவமானத்தின்‌ சின்னம்‌.

கிரேக்கர்கள்‌: கிறிஸ்த்துவின்‌ உயிர்ப்பை ஏற்றுக்‌ கொள்ள- வில்லை. ஏனெனில்‌ கிரேக்கர்களின்‌ தத்துவ ஞானத்தின்படி இறப்பு என்பது ஆன்மாவின்‌ விடுதலை - உடலின்‌ உயிர்ப்பு என்பது மீண்டும்‌ ஆன்மா சிறைபடூத்தபடூவது. இந்த கருத்து கிரேக்கர்களின்‌ கருத்துப்படி மடமை.

மேலும்‌ கிரேக்க சமுதாயத்தில்‌ ஒரு மனிதனானவன்‌ தன்‌ அறிவையும்‌, ஞானத்தையும்‌, தான்‌ பயிற்சி பெற்ற ஆசிரியரின்‌ பொருட்டும்‌ பெருமை பாராட்டுவது வழக்கமாக கொண்டிருந்தான்‌.

திருத்தூதர்‌ இன்றைய வாசகத்தின்‌ வழியாக நம்மை மீட்க மடமை என்று கருதியதை ஏற்றுக்கொள்ளும்‌ அளவிற்கு இறைமகன்‌ தாழ்ச்சி கொண்டார்‌ என்கிறார்‌.
உலக ஞானத்தை அடிப்படையாகக்‌ கொண்டு பெருமை அழைக்கிறார்‌.

நற்செய்தி வாசகப்‌ பின்னணி மத்தேயு 5:1-12)

இன்றைய வாசகம்‌ விவிலியத்தில்‌ மனதை தொடுகின்ற பகுதிகளில்‌ ஒன்று. இயேசுவின்‌ மலைப்பொழிவை யாராலும்‌ மறக்க முடியாது. இயேசுவின்‌ மலைப்பொழிவைக்‌ குறித்து நற்செய்தி- யாளர்கள்‌ தூய மத்தேயுவும்‌, தூய லூக்காவும்‌ குறிப்பிடுகின்றார்கள்‌.

தூய மாற்கு நற்செய்தியாளர்‌ இயேசு அறிவித்த செய்திகளைவிட அவரின்‌ செயல்களுக்கு அதிகம்‌ முக்கியத்துவம்‌ கொடுத்தமையும்‌, தூய யோவான்‌ நற்செய்தியாளர்‌ ஏற்கனவே பிற நற்செய்தியாளர்களால்‌ பதிவு செய்யப்பட்ட செய்தியை பதிவு செய்ய விரும்பாமையும்தான்‌ இவர்களின்‌ நற்செய்திகளில்‌ இயேசுவின்‌ மலைப்‌ பொழிவு இடம்‌ பெறாமைக்கு காரணம்‌.

இந்த மலைப்பொழிவை தூய மத்தேயுவும்‌, தூய லூக்காவும்‌ தங்களின்‌ இலக்கு மக்களுக்கேற்ப தங்களுக்கே உரிய பாணியில்‌ தங்களின்‌ நற்செய்தியில்‌ ஒப்புமைபடுத்தி பார்க்கும்‌ பொழுது மத்தேயு நற்செய்தியாளர்‌ எட்டு செய்திகளையும்‌, லூக்கா நான்கு செய்திகளையும்‌ நான்கு கண்டனங்களையும்‌ எடுத்து வைப்பதை நாம்‌ அறிய முடிகின்றது.

தூய மத்தேயு தனது நற்செய்தியை யூத மக்களுக்கு எழுதுவதால்‌ இயேசுவை புதிய மோயிசணகவும்‌, பழைய ஏற்பாட்டு. சட்டங்களை நிறைவேற்றுபவராகவும்‌, இறைவாக்குகளால்‌ குறிப்பிடபட்டு எதிர்பார்க்கப்படும்‌ மெசியாவாகவும்‌ தனது எழுத்துக்க- ளின்‌ வழியாக மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்‌.

மறையுரை

ஏழை ஒருவனுக்கு திருமணப்பந்தியில்‌ இறுதி இலையும்‌, இறந்தவரின்‌ நினைவு நாள்‌ பந்தியில்‌ முதல்‌ இலையும்‌ ஒதுக்கப்படும்‌. ஏனென்றால்‌ இவன்‌ ஒரு ஏழைப்‌ பிச்சைக்காரன்‌. நொண்டி வேலு... 45 வயது. இவரை 10 வயது சிறுவன்‌ முதல்‌ 60 வயதாகும்‌ பெண்மணி வரை அனைவரும்‌ “டேய்‌, நொண்டி” என்றுதான்‌ அழைப்பது வழக்கம்‌, ஏனெனில்‌ இவன்‌ பணமோ, புகழோ, சமூக அந்தஸ்த்து தரும்‌ யாதொரு முகவரியும்‌ இல்லாதவன்‌. வசந்தா... இவள்‌ கண்ணுல முழிச்சாலே பாவம்‌... இவள்‌ தொட்ட காரியம்‌ விளங்காது என்று சமுதாயத்தால்‌ வெறுக்கப்பட, விலக்கப்பட காரணம்‌ இவள்‌ ஒரு விதவை.

இவ்வாறு சமுதாயத்தில்‌ முகவரியோ, முக்கியத்துவமோ இல்லாத ஏழைகள்‌, சமுதாயத்தில்‌ வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட ஏழையரின்‌ உள்ளத்தை கொண்டோர்‌ பேறுபெற்றோர்‌, விண்ணரசு இவர்களின்‌ சொத்து என்று வீர முழக்கமிடுகிறார்‌ இறைமகன்‌ இயேசு. ஏழ்மையும்‌, வறுமையும்‌, நோய்‌ நொடிகளும்‌ இறைவனின்‌ சாபங்கள்‌ என்ற அழுக்கு சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்‌ இறைமகன்‌ இயேசு. இயேசு நிகழ்த்தியது வெறும்‌ மலைப்‌- பொழிவல்ல, “ஏழையரின்‌ உள்ளத்தோர்‌ ஏற்றம்‌ பெறுவர்‌, வறியவரின்‌ உள்ளத்தோர்‌ வாழ்வு பெறுவர்‌” என்று வரண்டு போன வாழ்க்கை வரப்புகளில்‌ நிகழ்த்தப்பட்ட ஒரு மலைப்பொழிவு.

யார்‌ இந்த ஏழைகள்‌?

மலைப்பொழிவில்‌ குறிப்பிடப்படும்‌ ஏழைகள்‌, துயறுருவோர்‌, பசியாய்‌ இருப்போர்‌ (லூக்கா 6:21), அழுவோர்‌ (லூக்கா 6:21), நீதிக்காக போராடுவோர்‌, போன்றோரை குறிக்க “அனாவிம்‌' என்ற எபிரேய வார்த்தையானது பயன்படுத்தப்படுகிறது.

பழைய ஏற்பாட்டில்‌ வறுமையாலும்‌, இயலாமையாலும்‌, வாழ முடியாதவர்களாய்‌ தங்களின்‌ வாழ்விற்கு ஆண்டவனையே விசுவாசத்துடன்‌ நம்பி வாழும்‌ ஏழை எளிய இஸ்ரேயலர்‌ “அ௮ணவிம்‌”” என்று அழைக்கப்பட்டனர்‌.

காலத்தின்‌ வளர்ச்சியிலே இந்த வார்த்தையின்‌ பொருளும்‌ விரிவ-டையத்‌ துவங்கியது. வறுமையால்‌ ஏழைகளாக இறைவனை நம்பினவர்களை மட்டும்‌ குறித்த இந்த வார்த்தை, சமுதாயத்திலே நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஏழைகளைக்‌ குறித்துகாட்டியது.

புதிய ஏற்பாட்டில்‌ “ஏழைகள்‌” என்ற சொல்‌ பொருளாதார நிலையில்‌ வறியவர்கள்‌ - பிச்சைக்காரர்கள்‌

2) ஆதரவற்றவர்கள்‌ - உடல்‌ ஊனமுற்றவர்கள்‌, நோயாளிகள்‌, கைம்பெண்கள்‌ மற்றும்‌ அனாதைகள்‌ போன்றோரை உள்ள- டக்கும்‌.

இவர்களின்‌ அன்றாட பிரச்சனை உணவும்‌, உடையும்‌ உறைவிடமும்‌ என்பதைவிட இவர்கள்‌ அனுபவித்த கொடிய துன்பம்‌ பிறருடைய புறக்கணிப்பால்‌ ஏற்பட்ட வெட்கமும்‌ இழிநிலையும்தான்‌”. மனித மாண்புகள்‌ மறுக்கப்பட்டு சமுதாயத்தின்‌ வீதிகளில்‌ வ2ீசி எறியப்பட்ட இவர்கள்‌ இறைவனின்‌ இரக்கத்தையும்‌ நம்பி வாழ் பவர்கள்‌.

ஏழையரின்‌ உள்ளத்தோர்‌ என்றால்‌ என்ன பொருள்‌?

தூய லூக்காஸ்‌ நற்செய்தியாளர்‌ ஏழைகளே நீங்கள்‌ பேறுபெற்றவர்கள்‌ என்று எழுதுகிறார்‌. ஆனால்‌ தூய மத்தேயு நற்செய்தியாளர்‌ எளிய உள்ளத்தோர்‌ என்ற சொல்லை பயன்படுத்துகிறார்‌.

இதற்கு இரண்டு காரணங்கள்‌:

1) மத்தேயுவின்‌ இலக்கு மக்கள்‌ ஏழைகளையும்‌, நடுத்தர வர்க்கத்தையும்‌ செல்வந்தரையும்‌ உள்ளடக்கியது. இங்கு பொருளாதார நிலை அல்ல மாறாக பொருளாதாரத்தை குறித்த ஒருவனின்‌ மனநிலையை முக்கிய படுத்துகிறார்‌.
2) இறைவனால்‌ தேர்ந்து கொள்ளப்பட்ட மக்கள்‌ இனம்‌ என்ற அகந்தையோடு வாழ்ந்த யூதர்களை மன தாழ்ச்சி கொண்டு வாழவும்‌, இறைவன்‌ முன்பு தங்களை தாழ்த்திக்கொண்டு வாழவும்‌ மத்தேயு நற்செய்தியாளர்‌ அழைக்கிறார்.

எளியோரின்‌ உள்ளம்‌ என்பதன்‌ பொருள்‌

அகந்தையும்‌, ஆணவமும்‌ இல்லாமல்‌ தாழ்ச்சியும்‌, சாந்தமும்‌ நிறைந்திருக்கும்‌. செல்வங்களை நம்பி வாழாமல்‌ இறைவனை அடைக்கலமாக கொண்டிருக்கும்‌ ௭.கா. ஏழைக்‌ கைம்பெண்ணின்‌ காணிக்கை (லூக்கா 12:1-4). முதன்மையும்‌ முக்கியத்துவமும்‌ செல்வங்களுக்கு அல்ல, மாறாக இறைவனுக்கு முதன்மையும்‌ முக்கியத்துவமும்‌ கொடுக்கும்‌. எ.கா. பணக்கார இளைஞனும்‌ (மத்தேயு 19:23) அபிரகாமும்‌ (தொ.நூ12:1-2). வழிபாடுகளிலும்‌ சமுதாய செயல்பாடுகளிலும்‌ தன்னை முன்னிருத்தாது. எ.கா. மறைநூல்‌ அறிஞர்கள்‌ (மாற்கு 12:38-40), திருமுழுக்கு யோவான்‌ (யோவான்‌ 1:26-28).

இறைவன்‌ எளியவர்களை உயர்த்துகின்றார்‌. ஏழையரின்‌ உள்னளத்தோரை ஆசிர்வதிக்கின்றார்‌. ஏனெனில்‌ ஏழையரின்‌ உள்ளத்தோர்‌ இறைவனை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்‌. இன்றைய நற்செய்தி நம்மை ஏழையரின்‌ உள்ளத்தை கொண்டவர்களாக இருக்க அழைப்பு விடுக்கின்றது. இன்றைய சமுதாயத்தில்‌ இரண்டு வகை- பான மனிதர்கள்‌ இருக்கின்றார்கள்‌.

(1) தீக்குச்சி மனிதர்கள்‌.

இவர்கள்‌ தீக்குச்சியைப்‌ போன்று தலைக்கணம்‌ மிக்கவர்கள்‌. ஆணவமும்‌, அகந்தையும்‌, கடின உள்ளமும்‌ கொண்டவர்கள்‌. தங்கள்‌ வாழ்க்கையில்‌ இறைவனை மையப்படுத்தாமலும்‌, சக மனிதனை மதிக்காமலும்‌ வாழ்பவர்கள்‌. இவர்கள்‌ செல்வம்‌, சொத்து, புகழ்‌, அந்தஸ்து, திறமைகள்‌ இவைகளை தான்‌ வாழும்‌ சமுதா- யத்திலும்‌, குடும்பத்திலும்‌, பணித்தளங்களிலும்‌ தன்னையே முதன்‌- மைபடுத்தி அயலாரை அடக்கி வாழ்பவர்கள்‌. இவர்களின்‌ வாழ்வு தீக்குச்சியின்‌ வாழ்வைப்‌ போன்றது. துவக்கத்தில்‌ ஒளிமயமாக தோன்றும்‌. ஆனால்‌ நிரந்தரமற்ற வாழ்க்கை.

(2) பென்சில்‌ மனிதர்கள்‌

பென்சிலானது தன்னடக்கமானது. அறிய பெரிய திறமைகளை தன்னகத்தே வைத்திருப்பினும்‌ வெற்று விளம்பரத்திக்‌ கொள்ளாது. தன்னை பயன்படுத்துபவரிடம்‌ தன்னை முழுமையாக ஒப்படைத்து- விடும்‌. பென்சிலாது பிறருக்காக தன்னை உடைபடவும்‌, செதுக்கப்‌- படவும்‌, தயாராக இருக்கும்‌. தியாக மனநிலை கொண்டது. இந்த பென்சிலைப்‌ போலவே இந்த சமுதாயத்தில்‌ பல்வேறு திறமைகளும்‌, செல்வ செழிப்பும்‌ நிறைந்திருந்தாலும்‌, தாழ்ச்சியான மனநிலை யோடும்‌, ஏழ்மையான மனநிலையோடும்‌, இறைவனின்‌ திட்டத்திற்கு ஏற்ப செயல்பட்டு சகமனிதனுக்காகவும்‌, சமுதாயத்திற்காகவும்‌, வாழ்பவர்கள்‌ உண்டு. இவர்கள்‌ நிலைவாழ்வு பெறுவார்கள்‌. பென்சிலின்‌ எழுத்துக்களை போன்று சரித்திரத்தின்‌ பக்கங்களில்‌ பதிவு செய்யப்படூவார்கள்‌.

சிந்திப்போம்‌
நாம்‌ தீக்குச்சி மனிதர்களா?
பென்சில்‌ மனிதர்களா?

பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌

1.மலை ஆன்மீகம்‌: பழைய ஏற்பாட்டில்‌ மலைகள்‌ இறைவனின்‌ இருப்பிடமாக கருதப்பட்டது - இயேசு - புதிய மோயீசன்‌.
துயருறுவோர்‌: ஆறுதல்‌ பெறுவர்‌.
பழைய ஏற்பாட்டில்‌: எகிப்தில்‌ துயருற்ற மக்கள்‌ ஆறுதல்‌ பெற்றனர்‌.
*பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட மக்களுக்கு இறைவாக்கினர்‌ எசாயா (எசாயா 40:1) வழியாக இறைவன்‌ ஆறுதல்‌ சொல்லுகிறார்‌.
3 இரத்தப்போக்கினால்‌ வருந்திய பெண்‌ குணம்‌ பெறுகிறாள்‌.
4மத்தேயு 17:14-15 வலிப்பு நோயால்‌ பெரிதும்‌ துன்புற்ற சிறுவன்‌ ஆறுதல்‌ பெறுகிறான்‌.
5 லூக்கா 4:38-39 கடுங்காய்ச்சலாய்‌ துன்புற்ற இராயப்பரின்‌ மாமியார்‌ குணம்‌ பெறுகிறார்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக் காலம் நான்காம் ஞாயிறு

அண்ணல் காந்தி உட்பட்ட பலரின் உள்ளங்கவர்ந்த மலைப் போதனை இன்றைய இறைவாக்காத நமது சிந்தனைக்குத் தரப்பட்டுள்ளது. அதன் ஆழமான கருத்துகளை இவன் சிந்திக்க முயல்வோம்.

அமைப்பு

இயேசுவின் மலைப்போதனை பல அதிகாரங்களுக்கு நீள்கின்றது (அதி 5-7). எனவே இங்கு மலைப்போதனையின் தொடக்கமான பகுதியின் (மத் 5:1-20) அமைப்பை மட்டும் காண்போம். இப்பகுதியை பின்வரும் நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

மலைப்போதனைக்கான குழல் (வச. 1-2).
பேறு பெற்றோர் (வச 3-12).
இயேசுவைப் பின்பற்றுவோரின் அடையாளம் (வச. 13-16).
சட்டம்பற்றிய போதனை (வச. 17-20).

இவற்றுள் முதல் இரு பகுதிகள் தரும் செய்தியை இவண் காண்போம்.

கூழல்

லூக்கா நற்செய்தியில் இயேசுவின் இதே பெறுபெற்றோர் போதனை ‘சமவெளிக் போதனை’ எனச் சமவெளி குழலில் தரப்பட்டிருக்க, இங்கு இது மலைச்சதுடியில் அளிக்கப்பட்டிடுங்கது. விவிலியப் பின்னணையில் மலை இறைவெளிப்பாடு அருளப்படும் இடமாகப் பார்க்கப்பட்டது. குறிப்பிகச் சினாய் மலையில் இறைவன் இஸ்ரயேலருக்காகக் கொண்டிருந்த திருவளம் வெளிப் படுத்தப்பட்டது. ஆனால் இங்கு இயேசு போதனையை வழங்குகிறார். மோசே போலச் சட்டத்தைப் பெறவில்லை.

இங்குச் சீடர்கள் இயேசுவின்‌ அருகேயிருந்ததால்‌ (வச. 7.அ) இது சீடர்களுக்கு மட்டும்‌ கொடுக்கப்பட்ட போதனையாகக்‌ கொள்ளக் கூடாது. மாறாக முதல்‌ வசனத்தின்‌ தொடக்கத்‌திலும்‌ (மக்கள்‌ கூட்டத்தைக்‌ கண்டு வச. 71௮), நான்காம்‌ அதிகாரத்தின்‌ இறுதியிலும்‌, மலைப்‌ பொழிவின்‌ இறுதியிலும்‌ (மக்கள்‌ கூட்டத்தினர்‌ வியப்பில்‌ ஆழ்ந்தனர்‌ - மத்‌ 7:28) கூறப்பட்டவையின்‌ பின்னணியில்‌ இயேசு காலத்து யூத மக்கள்‌ அனைவருக்கும்‌ அளிக்கப்பட்டதாகவே கொள்ள வேண்டும். எனவே யூதப்‌ பின்னணியோடு இப்பகுதி விளக்கப்படுவது சிறப்புடையதாக இருக்கும்‌. அதே நேரத்தில்‌, யூதத்தையும்‌ தாண்டி மானுடம்‌ முழுவதற்கும்‌ (அண்ணல்‌ காந்திபோல) இது பொருளுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

பேறுபெற்றோர்‌

மலைப்‌ பொழிவின்‌ முதல்‌ பகுதியான பேறு பெற்றோர்‌” மிகவும்‌ பெருமையாகவும்‌, அதிகாரத்துடனும்‌, உறுதியாகவும்‌ வழங்கப்படுகின்றது. இவற்றுள்‌ எட்டுவகை பேறுகள்‌ படர்க்கை பன்மையில்‌ கொடுக்கப்பட (வச 370). இறுதிப்‌ பேறு முன்னிலையில்‌, “நீங்கள்‌” (வச. 77) என வழங்கப்படுகின்றது.

இங்குப் பேறு பெற்றோர்‌” என்பது அமைக்கப்பட்டுள்ள இலக்கியமுறை ஞான நூல்களில்‌ உள்ளவாறு அமைக்கப்‌ பட்டுள்ளது (காண்‌. திபா 7). அனால்‌ ஞான நூல்களில்‌ காணப்‌ படும்‌ பேறுகளுக்கும்‌ இங்குள்ளவற்றுக்கும்‌ ஒரு முக்கியமான வித்தியாசம்‌ உண்டு. ஞான நூல்களின்‌ சிந்தனைப்படி நற்செயல்‌ களும்‌, புண்ணியங்களும்‌ இவ்வுலக வாழ்க்கையிலேயே அவற்றிற்‌கான வெகுமதி வழங்கப்பட்டிருக்கும்‌. ஆனால்‌ புதிய ஏற்பாட்டின்‌ பேறுகள்‌ இறையாட்சியின்‌ நிறைவாழ்வில்‌ வழங்கப்படும்‌ என எதிர்காலத்தைக் குறித்துக் காட்டுகின்றது. அது இவ்வுலக வாழ்க்கையை உள்ளடக்கியதாகவும்‌ கொள்ளலாம்‌, அல்லது இறையாட்சி நிறைவாய்‌ வரும்‌ இறுதிக்‌ காலத்தைக்‌ குறிப்பதாகவும்‌ கொள்ளலாம்‌. எனவே இதைப் புதிய வானம்‌, புதிய வையம்‌ தோன்றும் ‌இறுதித்தீர்ப்பின்‌ நாளை குறிப்பதகாவும் கொள்ளலாம்‌. அக்காலத்தில்‌ நீதிமான்களுக்கு நீதி வழங்கப்பட்டு, இறையாட்சி முழுமையாய்‌ நிறுவப்படும்‌.

பேறுகளின் முதல்பகுதியில் காணப்படும் பல்வேறு “நற்பேறு பெற்றோர்‌” அனைவரும்‌ விவிலியப்‌ பின்னணியல்‌ இருந்து எடுக்கப்‌பட்டவர்கள்‌: ஏழையரின்‌ உள்ளத்தோர்‌ (௭௪ 67:7-3), துயருறுவோர்‌ (எசா 67-3), கனிவுடையோர்‌ (திபா 3747), நீதி நிலைநாட்டும்‌ வேட்கை கொண்டோர்‌ (திபா 707:3,8-9). எனவே இந்தப் பேறுகள் விவிலியப்‌ பின்னணியிலும்‌ இஸ்ரயேவின்‌ வரலாறு, மற்றும்‌ பாரம்பரியத்திலும்‌ ஊற்றெடுக்கின்றன. ஆனால்‌ இந்தப் பேறுபெற்ற மனநிலைகளுக்கான வெகுமதிகள்‌ நாடு, சமயம்‌ கடந்து பொதுவாயுள்ளன. அது எக்காலத்திற்கும்‌, எல்லாருக்கும்‌ பொருந்தும்‌. எனவே இந்த மலைப்பொழிவு காந்தியடிகளைக்‌ கவர்ந்ததில்‌ வியப்பேதும்‌ இல்லை.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்காலம்‌ - நான்காம்‌ ஞாயிறு

முதல் வாசகம் :செப்பனியா 2:3, 3:12-13

செப்பனியா, யோசியா காலத்தில்‌ இறைவாக்கு உரைத்தவர்‌. சமய வாழ்வின்‌ மறுமலர்ச்சிக்காக உழைத்தவர்‌, சீர்‌ கெட்ட மக்களை இறைவன்‌ தண்டிப்பார்‌ என்று எச்சரித்தவர்‌. எனினும்‌ இறைவனுக்கு அஞ்சி நல்வழி நடப்போர்‌ அவரது அன்பையும்‌ அருளையும்‌ பெறுவர்‌ என்று ஆறுதலும்‌ கூறியவர்‌. எஞ்சியுள்ளோரின்‌ எழில்மிகு வாழ்வு இங்குச்‌ சித்தரிக்கப்படு கிறது. “எளிய மனத்தோர்‌ பேறுபெற்றோர்‌” (மத்‌. 5: 3) என்ற ஆண்டவரின்‌ போதனைக்குப்‌ பின்னணியாக அமைந்துள்ளது இன்றைய வாசகம்‌.

ஆண்டவரின்‌ நாள்

ஆண்டவரின்‌ நாள்‌ காரிருள்‌ சூழ்ந்த நாள்‌; எக்காளமும்‌ போர்‌ முரசும்‌ கேட்கும்‌ நாள்‌; வேதனை மனிதர்களை வாட்டும்‌ நாள்‌; பாவிகளின்‌ குருதி புழுதியைப்‌ போல்‌ கொட்டப்படும்‌ நாள்‌. ஆண்டவரின்‌ கோப நாளிலே மக்களின்‌ வெள்ளியும்‌ பொன்னும்‌ அவர்களைக்‌ காப்பாற்றாது; இறைவன்‌ ஆத்திரத்தின்‌ கோபத்‌ தீயால்‌ உலகமெலாம்‌ அழிக்கப்படும்‌ நாள்‌ (1:15 - 19). இந்நாளில்‌ உயிருள்ள கடவுளிடம்‌ அகப்பட்டுக்‌ கொள்பவனுக்கு ஐயோ கேடு என்கிறார்‌ பவுல்‌. இறைவனின்‌ கோபாக்கினைக்குத்‌ தப்பிக்க கூடியவர்‌ இறைவனுக்கு அஞ்சி நடக்கும்‌ எளியோரே என்ற ஆறுதலான மொழியையும்‌ நாம்‌ கேட்கிறோம்‌. இறைவனது எச்சரிப்பு எனக்கு எட்டுகிறதா?

எஞ்சி நிற்கும்‌ எளியோர்‌

விவிலியத்தில்‌ வரும்‌ எளியோர்‌ என்ற சொல்‌ பொருள்‌ பொதிந்தது.. பொருளாதாரத்தில்‌ அடித்தளத்தில்‌ உள்ளோர்‌; பொருளாதாரக்‌ குறைவால்‌ செல்வாக்கோ அதிகாரமோ அற்றவர்கள்‌; செல்வாக்கு இல்லாததால்‌ இகழ்ச்சிக்குரியவர்கள்‌. இந்நிலையில்‌ இறைவனைத்‌ தவிர தமக்குத்‌ தஞ்சம்‌ யாரும்‌ இல்லையென அவரிடம்‌ சரண்‌ புகுந்து அவரையே அனைத்துமாகக்‌ கொண்டு வாழ்பவர்கள்‌. நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட (ஆமோ, 8 : 4) இவர்கள்‌ பக்கமே இறைவன்‌ இருக்கிறார்‌ (எசா. 11 : 4 இத்தகையோரைக்‌ காக்க இறைவன்‌ எழுந்த போது மாநிலம்‌ அச்சமுற்று அடங்கியது (திபா. 76 : ஐ. “எளியோரின்‌ சிறுமையை அவர்‌ அற்பமாக எண்ணவில்லை; அதைக்‌ கவனியாமல்‌ இருந்துவிடவில்லை; தமது முகத்தை அவர்களுக்கு மறைக்கவுமில்லை; தம்மை நோக்கி அவர்கள்‌ oo மன்றாடுகையில்‌ அவர்களுக்குச்‌ செவிசாய்த்தார்‌'' (திபா. 22: 24; காண்‌ 9: 9; 18). என்பு உருகி நெஞ்சம்‌ இளகிக்‌ கரைந்து கரைந்து அன்புருவாய்‌ நிற்பவர்கள்‌ (தாயுமானவர்‌). இவர்கள்‌ ஆண்டவரின்‌ கட்டளைகளைக்‌ Ta கடைப்பிடிப்பர்‌ (2: 3); இஸ்ரயேலில்‌ எஞ்சினோராகிய இவர்கள்‌ ஆண்டவரின்‌ பெயரில்‌ நம்பிக்கை கொள்வர்‌ (3 : 12). இவர்கள்‌ தீமை செய்யார்‌; வஞ்சக 4 நாவென்பது அவர்கள்‌ வாயில்‌ இராது. இவர்களை அச்சுறுத்துவோர்‌ யாருமின்றி மந்தை போல்‌ இளைப்பாறுவர்‌ (13)

இத்தகையோர்‌ என்றும்‌ உலகில்‌ இருப்பர்‌ (12). இத்தகையோருக்கு மெசியா நற்செய்தி அறிவிப்பார்‌ என்று எசாயா கூறுகின்றார்‌. எளியோர்க்கு நற்செய்தி அறிவித்து, உள்ளம்‌ நொறுங்கியவர்களைக்‌ குணப்படுத்தவும்‌... அழுகிற அனைவர்க்கும்‌ ஆறுதல்‌ கூறவும்‌ ஆண்டவர்‌ தன்‌ ஊழியனை அருள்பொழிவு செய்தார்‌ (61 : 1 - 3). இவ்விறைவாக்கு தன்னில்‌ நிறைவேறியுள்ளதாக இயேசு கூறுகின்றார்‌ (காண்‌ லூக்‌ . 4 : 21) . இறைவன்‌ என்றும்‌ எளியோர்‌ பக்கமே நிற்கிறார்‌ என்பதற்கு இயேசுவின்‌ வாழ்வே ஓர்‌ எடுத்துக்காட்டு. நாம்‌ எந்த அளவுக்கு இறைவனிடம்‌ சரண்‌ அடைகின்றோமோ, அந்த அளவுக்கு அவரது உதவி நமக்குண்டு. இறைவன்‌ எம்முடன்‌ இருக்க நான்‌ எதற்கு அஞ்ச வேண்டும்‌?

அனைவரும்‌ ஆண்டவரைத்‌ தேடுங்கள்‌:நேர்மையைத்‌ சேருங்கள்‌.

இரண்டாம் வாசகம் : 1கொரி 1: 26-31

அறிஞர்களும்‌ செல்வந்தர்களும்‌ மலிந்த நகரம்‌ கொரிந்து. மனந்திரும்பிய மக்களுள்‌ இத்தகையோர்‌ இல்லாமல்‌ இல்லை. எனினும்‌ பெரும்பாலான கிறிஸ்துவர்கள்‌ ஏழை மக்கள்‌. சமுதாயத்தின்‌ அடித்தளத்தில்‌ வாழ்ந்தவர்கள்‌; உலகத்தாரால்‌ ஒதுக்கப்பட்டவர்கள்‌. ஆனால்‌ இவர்களையே இறைவன்‌ தேர்ந்துகொண்டார்‌ என்ற உண்மையை உணர்த்துகின்றது இன்றைய வாசகம்.

இறைவனால்‌ தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள்‌

தான்‌ நிறுவிய திருச்சபைக்கு அடித்தளமாக கல்வியறிவற்ற சாதாரண செம்படவர்களையே இயேசு தெரிந்துகொண்டார்‌. ஒருவனின்‌ ஆற்றலாலோ, ஞானத்தாலோ ஒருவன்‌ இறைவனுக்கு ஏற்புடையவன்‌ ஆனதில்லை. விசுவாசம்‌ இறைவன்‌ அளிக்கும்‌ அருட்கொடை. அறிஞர்களை அழைப்பதே ஞானம்‌ என்றும்‌, அறிவற்ற ஏழை எளியோரைத்‌ தன்‌ சீடர்களாக ஏற்றுக்கொள்வது மடமை என்றும்‌ இவ்வுலகம்‌ கருதுகிறது.

இந்த உலக ஞானத்தை நாணச்‌ செய்யவே, கடைநிலையில்‌ உள்ளவரை இறைவன்‌ தேர்ந்துகொண்டார்‌ (27). ஆற்றல்‌ படைத்தவரை நாணச்செய்ய ! வலுவற்றவரைத்‌ தேர்ந்துகொண்டார்‌. உலகம்‌ பொருட்படுத்துவதை ஒழித்துவிட, உலகம்‌ பொருட்படுத்தாததைக்‌ கடவுள்‌ தேர்ந்தகொண்டார்‌ (2: 8). ஒன்றுக்கும்‌ உதவாத என்னை யாவர்க்கும்‌ கடையன்‌ “நாயினன்னாகிய”' என்னை (திருவாசகம்‌) இறைவன்‌ தன்‌ சீடனாக அழைந்திருப்பது இறைவன்‌ எனக்களித்த தனிச்சலுகை...

“யாவர்க்கும்‌ மேலாம்‌ அளவிலாச்‌ சீருடையான்‌
யாவர்க்கும்‌ கீழாம்‌ அடியேனை - யாவரும்
‌ பெற்றறியா இன்பத்துள்‌ வைத்தான்‌.” (திருவாசகம்‌)

கிறிஸ்துவே நமக்கு அனைத்தும்‌

ஞானத்தில்‌ சிறந்த கிரேக்க ஞானிகளைப்போல்‌ நாம்‌ ஞானிகளாக இல்லையே என்று ஏங்கத்‌ தேவையில்லை. ஏனெனில்‌ நாம்‌ கிறிஸ்து இயேசுவுக்குள்‌ இருக்கிறோம்‌. இவரே ஞானத்தின்‌ ஊற்று. “ஞானமும்‌ அறிவுமாகிய செல்வங்கள்‌ அனைத்தும்‌ கிறிஸ்துவில்‌ மறைந்துள்ளன ” (கொலோ. 2 : 9. ஆனால்‌ யூதராயினும்‌, கிரேக்கராயினும்‌ அழைக்கப்பட்ட வர்களுக்கு அவர்‌ மெசியா; கடவுளின்‌ வல்லமையும்‌ ஞானமுமானவர்‌ (1: 24). நாம்‌ எல்லோரும்‌ பாவிகள்‌; கடவுளின்‌ மாட்சிமையின்‌ சாயலை. இழந்தவர்கள்‌. கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய கல்வாரிப்‌ பலியின்‌. ! வழியாகவே நாம்‌ பாவ விடுதலையடைந்து இறைவனுக்கு ஏற்புடையவர்கள்‌ ஆக்கப்பட்டோம்‌. இது ஒர்‌ இலவசக்‌ கொடை (காண்‌ உரோ. 3: 22- 25).

நம்மைப்‌ படைத்துப்‌ பராமரிப்பவரும்‌, நாம்‌ பரிசுத்தம்‌ அடைய தூய ஆவியைப்‌. பொழிந்தவரும்‌ அவரே. எனவே எத்தகைய வித்தகனும்‌ தனது பிறப்பிலும்‌ உயர்விலும்‌ பெருமை பாராட்டாது தனது பெருமையெல்லாம்‌ இறைவனுக்கே. உரியது என்று எண்ண வேண்டும்‌.

“ஞானி தன்‌ ஞானத்தைப்‌ பாராட்ட வேண்டாம்‌;
வல்லவன்‌ தன்‌ வலிமையில்‌ பெருமை கொள்ள வேண்டாம்‌;
செல்வன்‌ தன்‌ செல்லங்களால்‌ செருக்கு அடைய வேண்டாம்‌:
பெருமையடைய விரும்புகிறவன்‌ நம்மை அறியும்‌
ஞானத்திலேயே பெருமையடையட்டும்‌”

என்ற எரேமியாவின்‌ வாக்கின்‌ சுருக்கமே, “பெருமை பாராட்டுவோன்‌ ஆண்டவரில்‌ பெருமை பாராட்டுக" என்பது ஆகும்‌. என்னிடமுள்ள அனைத்தும்‌ ஆண்டவரின்‌ அருட்கொடைகள்‌ என்பதை ஏற்று, அவருக்கு நன்றி நவில்கின்றேனோ?

எந்த மனிதனும் கடவுள் முன் பெருமை பாராட்டாதபடி இவ்வாறு செய்தார்‌.

இயேசு இறையாசின்‌ 'பேறுகளை' அறிவிக்கிறார்‌. “பேறு பெற்றோர்‌” என்றால்‌ உண்மையான நிறைவு பெற்றோர்‌ அல்லது நிறைவான மகிழ்வு கண்டவர்‌ என்பது பொருள்‌. அன்னை மரியாவை எலிசபெத்‌ பேறுடையாள்‌ என அழைத்தாள்‌ (லூக்‌. 1 : 45) இயேசுவும்‌ விசுவசிக்கும்‌ சீடரைப்‌ பேறுபெற்றோர்‌ என்று ஆசீர்வதித்தார்‌ (யோ. 20 : 29). நம்‌ செயல்களால்தான்‌ இறைவன்முன்‌ இயேசுவால்‌ பேறு பெறுகின்றோம்‌. இவ்‌ அரும்‌ செயல்களைத்தான்‌ மலைப்பொழிவு நம்‌ கண்முன்‌ வைக்கிறது.

துயருறுவோர்‌ பேறு பெற்றவர்‌

ஆறுதல்‌ பெறுவர்‌; உலகில்‌ துன்புறுவது இயல்பு. துன்பமும்‌ இன்பமும்‌ வாழ்வுப்‌ பாதையின்‌ இரு பக்கங்கள்‌. இருப்பினும்‌ துன்பத்தை மக்கள்‌ பொதுவாக விலக்கவும்‌, அதனின்று தப்பிக்கவும்‌ முயல்கின்றனர்‌. ஆனால்‌ கிறிஸ்துவின்‌ கண்ணோட்டத்தில்‌ துன்பம்‌ - சிலுவை மீட்பின்‌ வழியாகிறது. துன்பத்தின்‌ வழியாக நம்‌ வாழ்வின்‌ நிறைபொருளைக்‌ காண முடியும்‌ என்று நிரூபிக்கிறது இயேசுவின்‌ பாடுகளும்‌ சிலுவையும்‌. “மந்த உள்ளத்தினரே! மெசியா தாம்‌ மாட்சி அடைவதற்குமுன்‌ இத்துன்பங்களைப்‌ பட வேண்டுமல்லவா!” (லூக்‌ 24 : 26). “மெசியா துன்புற வேண்டும்‌ என்று இறைவாக்கினர்‌ அனைவர்‌ வாயிலாகவும்‌ முன்னறிவித்ததை இவ்வாறு நிறைவேற்றினார்‌ ” (திப. 3 : 18) . கிறிஸ்தவக்‌ கண்ணோட்டத்தில்‌ துன்பம்‌, வாழ்வின்‌ பொருளையும்‌ இரகசியத்தையும்‌ காண இட்டுச்‌ செல்கிறது. துன்ப வேளைகளில்‌ நாம்‌ இறைவனைத்தானே தட்டிக்‌ கேட்கின்றோம்‌; தொட்டு அழுகின்றோம்‌. இறைவனிடம்‌ கூட்டிச்‌ செல்லும்‌ துன்பம்‌ ஒருவிதத்தில்‌ அருட்சாதனமாகவும்‌ மாறிவிடுகிறது. இறை ஆறுதல்‌ நமக்கு அருளப்படுகிறது. “இலாசர்‌ இன்னல்களையே அடைந்தார்‌. அதை நினைத்துக்‌ கொள்‌. இப்பொழுது அவர்‌ இங்கே ஆறுதல்‌ பெறுகிறார்‌ ” (லூக்‌. 16 : 25) என்ற இலாசர்‌ உவமை பாடத்தை நாம்‌ பயில வேண்டும்‌. இறைவன்‌ துன்புறுவோரை இவ்வுலகிலும்‌ ஆதரிக்கிறார்‌. “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே , எல்லாரும்‌ என்னிடம்‌ வாருங்கள்‌, நான்‌ உங்களுக்கு இளைப்பாறுதல்‌ தருவேன்‌ (மத்‌ 11: 28) என்கிறார்‌ இயேசு. “கடவுளுக்கு ஏற்புடைய முறையில்‌ தாங்கிக்கொள்ளப்படும்‌ மனவருத்தம்‌ மீட்பு தரும்‌ மனமாற்றத்தை விளைவிக்கிறது. இதில்‌ வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால்‌ உலகப்‌ போக்கிலான மனவருத்தம்‌ சாவை விளைவிக்கும்‌” (2 கொரி. 7 : 10) என்பது பவுலின்‌ அருளுரை. துன்புறுவோருக்கு நம்‌ வழியாக ஆண்டவர்‌ ஆறுதல்‌ அளிக்க விழைகிறார்‌. திருப்பாடல்‌ கூறுகிறது : “எளியோரின்‌ நலனில்‌ அக்கறை கொள்பவர்‌ பேறுபெற்றவர்‌; துன்ப நாளில்‌ ஆண்டவர்‌ அவரை விடுவிப்பார்‌” (41:1)

நீதி நிலைநாட்டும்‌‌ வேட்கை கொண்டோர்‌ நிறைவு பெறுவர்‌

நீதி நிலைநாட்டும்‌ வேட்கை கொண்ட இறைவாக்கினர்கள்‌ இறைவனின்‌ குரலாய்‌ ஏழைகளுக்காகப்‌ பரிந்து பேசினர்‌; ஏழைகளின்‌ சார்பில்‌ நின்று போராடினர்‌.

நீதி நிலைநாட்ட வேட்கை கொள்வது என்பது மக்களிடம்‌ சமத்துவ உறவுகள்‌ ஓங்க வேண்டும்‌ என்ற ஆவலும்‌ உழைப்பும்‌ ஆகும்‌. நீதியில்லாது ! சமத்துவம்‌ வளர முடியாது . ஆம்‌ ! சமத்துவத்தின்‌ அடித்தளமே நீதிதான்‌; எனவே தான்‌ இன்று திருச்சபை கூறுகிறது,““விசுவாசத்திற்காகச்‌ சாட்சி கூறுவது, இன்று நீதிக்காகப்‌ பணிபுரிவதாகும்‌. ”

தூய உள்ளத்தோர் பேறு பெற்றோர்‌... கடவுளைக்‌ காண்பர்‌.

இயேசு குறிப்பிடுவது சடங்குமுறைத்‌ தூய்மையல்ல; மாறாக, உள்ளத்‌ தூய்மை. இது உண்மையான அன்பிலும்‌, கபடற்ற மனதிலும்‌ பிரதி பலிக்கிறது. கலப்பற்ற அன்பும்‌ சுயநலமற்ற உள்ளமும்‌ இத்தூய்மையின்‌ வெளிப்படாகிறது. இறைவனின்‌ ஆவி உரையும்‌ உள்ளம்‌ தூயதாகிறது. தூய உள்ளத்தினரிடம்‌ பாச அழுக்குகள்‌ நீங்கி விடுவதாலும்‌, பாவப்‌ பாசிகள்‌ விலகி விடுவதாலும்‌ அருள்‌ நீரில்‌ இறைவனைக்‌ கண்டு கொள்ளமுடிகிறது. அவர்கள்‌ உள்ளம்‌ பளிங்கு போல்‌ இருப்பதால்‌ அருள்‌ ஒளி அவர்களுக்குப்‌ பிரகாசமாகிறது.

நீதி நிலைநாட்டும்‌‌வேட்கை கொண்டோர்‌ பேறுபெற்றோர்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நீங்கள் பேறுபெற்றோர்!

நாம் அனைவருமே மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறோம். மகிழ்ச்சியாக இருப்பவர்கள் யார்? என்ற ஒரு பட்டியலை நாமே தயாரித்து வைத்துள்ளோம். நன்றாகப் படித்தவர்கள், நிறைய பணம் படைத்தவர்கள், பெரிய வீடு வைத்திருப்பவர்கள், பெரிய காரில் பயணம் செய்பவர்கள், நிறைய நாடுகளுக்குச் சுற்றுலா செல்பவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள், ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா அல்லது சமூக வலை பிரபலங்கள் இவர்கள் யாவரும் மகிழ்ச்சியாக இருக்கிறவர்கள் அல்லது பேறுபெற்றவர்கள் என நாம் நினைக்கிறோம். நம்மைச் சுற்றி இருக்கும் உலகம் நினைக்கிறது. இவை யாவும் மகிழ்ச்சியும், விடுதலை உணர்வும், பெருமையும் தருகின்றன.

இருந்தாலும், இவை மூன்று வரையறைகளைக் கொண்டிருக்கின்றன: (அ) இவை யாவும் நம் செயல்களால் வருகின்றன. செயல்களைச் செய்வதற்கான ஆற்றல் இருக்கும் வரைதான் நாம் செயல்பட முடியும். (ஆ) இவை யாவும் நமக்கு வெளியே இருந்து வருகின்றன. மற்றவர்களும் அவர்களுடைய கருத்துகள் எப்போது வேண்டுமானாலும் மாறிவிடும். (இ) குறிப்பிட்ட காலம் அல்லது இடத்திற்கு இவை உட்பட்டவை. எடுத்துக்காட்டாக, இணையதளத்தில் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கிற ஒருவர் சமூக வலைதளங்கள் பயன்படுத்தாதவரைப் பொருத்தவரையில் அந்நியரே.

மேற்காணும் வரையறைகளைக் தாண்டி நம்மால் எப்போதும் எங்கும் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா?

இருக்க முடியும் என்று சொல்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் மலைப்பொழிவின் தொடக்கப் பகுதியை வாசிக்கின்றோம். ‘பேறு பெற்றவர்கள்’ அல்லது ‘மகிழ்ச்சிக்குரியவர்கள்’ அல்லது ‘ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்’ என்னும் எட்டு ‘பேறு பெற்ற நிலைகளுடன்’ தொடங்குகிறது மலைப்பொழிவு. மலைப்பொழிவின் இடம் மற்றும் சூழலமைவு மூன்று சொற்களில் தரப்பட்டுள்ளது: (அ) இயேசு மலைமேல் ஏறுகின்றார், (ஆ) சீடர்கள் அவரிடம் வருகின்றனர், (ஆ) இயேசு அமர்ந்து கற்பிக்கின்றார்.

மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவை புதிய மோசே என அறிமுகம் செய்கின்றார். முதல் ஏற்பாட்டு மோசே மலைக்கு ஏறிச் சென்றது போல, இரண்டாம் ஏற்பாட்டு மோசே என்னும் இயேசு மலைக்கு ஏறிச் செல்கின்றார். மலைப்பொழிவு சீடர்களுக்கான போதனையாக உள்ளது. மக்கள் அனைவரும் இயேசுவைச் சுற்றி இருந்தாலும், போதனை என்னவோ இயேசுவின் சீடர்களுக்கானதாக இருக்கிறது. ஆக, மலைப்பொழிவைக் கேட்பவர்கள் சீடத்துவத்துக்கான அழைப்பைப் பெறுகின்றனர். சீடத்துவத்தை ஏற்கும் ஒருவரே மலைப்பொழிவுப் போதனையில் முழுமையாகப் பங்கேற்கவும், அப்போதனையை வாழ்ந்து காட்டவும் முடியும். மூன்றாவது, ‘அமர்தல்’ என்பது அதிகாரத்தைக் குறிக்கின்றது. தொழுகைக்கூடங்களிலும் பள்ளிகளிலும் போதிக்கின்ற ரபிக்கள், வழக்கமாக அமர்ந்துகொண்டு கற்பிப்பர். அவர்கள் தங்கள் பாடத்தின்மேல் கொண்டிருக்கின்ற அதிகாரத்தையும், மாணவர்கள்மேல் கொண்டிருக்கின்ற அதிகாரத்தையும் இச்செய்கை அடையாளப்படுத்துகிறது.

இங்கே மத்தேயு நற்செய்தியாளரின் குழுமத்தையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். இயேசுவின் உயிர்ப்பு மற்றும் விண்ணேற்றத்துக்குப் பின்னர் சீடர்களும் நம்பிக்கையாளர்களும் தங்களுக்கென ஒரு தான்மையை (அடையாளத்தை) காணவும் கட்டமைக்கவும் விரும்புகிறார்கள். தங்களுடைய சமகாலத்தவர் நடுவில் அவர்களுடைய சமூக மற்றும் சமய நிலையை வரையறுத்துக்கொள்ளவும் தேவை இருந்தது. அந்தப் பின்புலத்தில் உலகின் பார்வையில் பேறுபெற்றவர்களாக அல்ல, மாறாக, கடவுளின் பார்வையில் பேறுபெற்றவர்களாகவும் இருப்பவர்களே சீடர்கள் என்ற புதிய புரிதலை அவர்கள் உருவாக்குகிறார்கள்.

‘பேறுபெற்ற நிலை’ என்பதை மகிழ்ச்சியான நிலை, தெரிவு செய்யப்பட்ட நிலை என்றும் புரிந்துகொள்ளலாம். இப்பகுதியில் எட்டு பேறுபெற்ற நிலைகளை இயேசு முன்மொழிகின்றார்.

பண்பு 1: ‘ஏழையரின் உள்ளம் கொண்டிருத்தல்’

லூக்கா நற்செய்தியாளர் இவ்வாக்கியத்தைச் சற்றே மாற்றி, ‘ஏழையரே நீங்கள் பேறுபெற்றோர்’ என்று இயேசு சொல்வதாக எழுதுகின்றார். மத்தேயு நற்செய்தியில் ஏழ்மை என்பது பொருளாதார வறுமை அல்லது பின்தங்கிய நிலையை அல்ல, மாறாக, ஓர் ஆன்மாவின் உள்ளக் கிடக்கையைக் குறிக்கின்றது. ‘மற்றவர்களை, குறிப்பாக, கடவுளைச் சார்ந்திருக்கின்ற உள்ளம்’ ஏழையரின் உள்ளம் என அழைக்கப்படுகின்றது.

பண்பு 2: ‘துயருறுதல்’

துயரம் என்பது நமக்கு வெளியே இருந்தும் வரலாம் – எடுத்துக்காட்டாக, இயற்கைச் சீற்றம், இழப்பு, இறப்பு. நம் தெரிவுகளாலும் வரலாம் – தவறான தெரிவுகள் துன்பம் தருகின்றன. துயரத்தில் இருப்பவர்கள் சபிக்கப்பட்டவர்கள் அல்லது கடவுளால் தண்டிக்கப்பட்டவர்கள் (காண். யோபு) என்று நினைக்கிற மக்கள் நடுவே, துயரம் அனுபவிப்பவர்கள் ஆறுதல் பெறுவார்கள் என்ற எதிர்நோக்கு இங்கே தரப்படுகிறது.

பண்பு 3: ‘கனிவு கொள்தல்’

இயேசு தம்மைப் பற்றிச் சொல்லும்போது, தாம் கனிவும் மனத்தாழ்மையும் கொண்டவர் என அறிமுகம் செய்கின்றார். என்ன நடந்தாலும் அமைதியாகவும், பொறுமையாகவும், உடைந்து போகாமலும் இருத்தலே கனிவு. கனிவு கொள்கின்ற ஒருவர் நாட்டை உரிமையாக்கிக் கொள்கின்றார். இயேசுவின் சமகாலத்தில் உரோமையர்கள் பாலஸ்தீனத்தை உரிமையாக்கியிருந்தார்கள். மக்கள் வன்முறை வழியாக தங்கள் நாட்டை மீட்டுக்கொள்ள விரும்பினார்கள்.

பண்பு 4: ‘நீதி நிலைநாட்டும் வேட்கை கொள்தல்’

அநீதியாக நடப்பவர்கள் நடுவில் நீதியை நிலைநாட்டுதல் என்பது மிகப் பெரிய சவால். நாம் செய்கின்ற செயல்களை சரியானது, எளிதானது என இரு நிலைகளில் வகைப்படுத்தலாம். சரியானது எல்லாம் எளிமையாக இருப்பதில்லை. எளிமையானவை எல்லாம் சரியாக இருப்பதும் இல்லை. சரியானதை மட்டும் எப்போதும் விருப்பம் கொண்டிருப்பவர் நிறைவுகொள்வர்.

பண்பு 5: ‘இரக்கம் கொள்தல்’

நம் செயல்கள் அல்ல, மாறாக, கடவுளின் இரக்கமே வழிநடத்துகிறது என்பது யூத நம்பிக்கை. ஆனால், இரக்கம் அனைவருக்கும் கிடைப்பதல்ல என்றும் அவர்கள் நினைத்தார்கள். இரக்கம் காட்டுகிற எவரும் இரக்கம் பெறுகிறார் என்பது இயேசுவின் வாக்குறுதி.

பண்பு 6: ‘தூய்மையான உள்ளம்’

தூய்மை என்பது கடவுளோடு இணைத்துக் கொண்டாடப்படும் மதிப்பீடு. ஏனெனில், முதல் ஏற்பாட்டில் ஆண்டவராகிய கடவுள் தம்மைத் தூயவர் என அழைக்கின்றார். இங்கே தூய்மை என்பது வழிபாடு சார்ந்த தூய்மையைக் குறித்தாலும், தூய்மையான உள்ளம் என்பது தயார்நிலையில் இருக்கும் உள்ளம் என்றும் புரிந்துகொள்ளப்படலாம். இயேசுவின் சமகாலத்தில் தூய்மை என்பது பிறப்பு, வேலை அடிப்படையில் இருந்தது.

பண்பு 7: ‘அமைதி ஏற்படுத்துதல்’

நம் திருஅவை இன்று அனைவரையும் கடவுளின் மக்கள் என அழைக்கிறது. ஆனால், இந்தப் புரிதல் முன்பு இல்லை. கிறிஸ்தவர்கள் அல்லது கத்தோலிக்கர்கள் மட்டுமே கடவுளின் மக்கள் என்று நாம் அழைத்தோம். யூத சமயத்திலும் ‘கடவுளின் மக்கள்’ என்பது இனம் சார்ந்த அடையாளமாக இருந்தது. ஆனால் இயேசு. அமைதி ஏற்படுத்துபவர் – சண்டை சச்சரவுகள் தவிர்ப்பவர், பிரிவு மற்றும் பிளவு மனப்பான்மையை சரி செய்பவர் அனைவரும் அமைதியை ஏற்படுத்துகிறார் என்று கூறுகிறார்.

பண்பு 8: ‘நீதியின் பொருட்டு துன்பம்’

4ஆம் பண்பில் நீதி என்பது விருப்பமாக நின்றது. இங்கே 8ஆம் பண்பில் அது செயலாகக் கனிகின்றது. விருப்பமும் செயலும் இணைந்து செல்ல வேண்டும்.

இறுதியாக, மக்களிடமிருந்து வருகிற இகழ்ச்சி, புறக்கணிப்பு நடுவில் மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள் என்று சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் இயேசு.

மேற்காணும் பேறுபெற்ற நிலைகளுக்கும் அடிப்படையாக இருப்பது ‘தாழ்ச்சி.’ இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவரின் முன் தங்களையே தாழ்த்தி அவரைத் தேடுகிற எளியவர்கள் அடைகிற மகிழ்ச்சியையும் பேற்றையும் நிறைவையும் பாதுகாப்பையும் எடுத்துரைக்கிறார் செப்பனியா. இரண்டாம் வாசகத்தில், தாங்கள் அழைக்கப்பட்ட நிலையை நம்பிக்கையாளர்கள் என்றும் நினைவில்கொள்ள அழைக்கிற பவுல், கடவுள் அனைத்தையும் தலைகீழாக மாற்றக் கூடியவர் என்று எச்சரிக்கிறார்.

டைட்டானிக் கப்பல் மோதிய பனிப்பாறை பற்றிக் கேள்விப்பட்டுள்ளோம். தண்ணீருக்கு வெளியே இருந்த பனிப்பாறையின் அளவை மட்டுமே பார்த்து கப்பல் முன்னேறியது. தண்ணீருக்குக் கீழே மறைந்திருந்த பாறையே கப்பல் மூழ்கக் காரணமாக இருந்தது. இதை ஓர் உருவகமாக எடுத்துக்கொள்வோம். நம் வாழ்க்கையில் நம் செயல்கள், தோற்றங்கள் அனைத்தும் தண்ணீருக்கு மேலே இருக்கிற பனிப்பாறையின் அளவைப் போன்ற சிறியவை. நம் மனப்பாங்கு தண்ணீருக்குக் கீழே மறைந்திருக்கிற பனிப்பாறை போன்றது. செயல்களில் மாற்றம் அல்ல, மனப்பாங்கு மாற்றமே நம் இருத்தலை நிர்ணயிக்கிறது.

இயேசு மொழிகிற எட்டு பண்புகளும் நம் வெளிப்புறச் செயல்களாக அல்ல, மாறாக, உள்ளார்ந்த மனப்பாங்காக மாறும்போது நம் வாழ்க்கை மாறுகிறது. மேற்காணும் பண்புகளை நாம் அணிகிற மோதிரத்தின் அல்லது அணிகலனின் எட்டு வைரக்கற்களாகப் பதிய வைத்து அவற்றை என்றும் நம் உள்ளத்தில் ஏற்று, செயல்படுத்துவோம்.

நாம் எந்நேரமும் எங்கும் பேறுபெற்றவர்களாக வாழ முடியும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மையச் சிந்தனை : நாம்... பேறுபெற்றவராக வாழத் தேர்வு பெற்றவர்கள்

“புதிய பழையதில் மறைந்துள்ளது. பழையது புதியதில் வெளிப்படுகிறது" பழைய, புதிய ஏற்பாடுகளுக்கிடையிலான ஒற்றுமையைக் குறித்து திருமறைத் தந்தை புனித அகஸ்தினாரின் பிரபலமான கூற்று இது. பழைய ஏற்பட்டின் நிறைவே புதிய ஏற்பாடு என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் உண்மை. அப்படியெனில், பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மோசே வழியாகத் தரப்பட்ட சட்டங்களின் நிறைவே புதிய ஏற்பாட்டுக் காலத்தில் மலைப்பொழிவின் வழியாக இயேசு தந்த சட்டங்கள். அத்தகைய மலைப்பொழிவைப் போதனைகளாக நிலைநிறுத் தனைமனையாக இருக்கும் மேலும் பற்றிய போதனையே இன்றைய நிகழ்ச்சி.

மலைப்பொழிவின் போதனைகளைக் கூர்ந்து சிந்திக்கையில் ஏழையர், ஒடுக்கப்பட்டோர், விளிம்புநிலை மக்கள் மீதான் இயேசுவின் அக்கறை வெளிப்படுவதைப் பார்க்கலாம். ஏழையர், துயருறுவோர், கனிவுடையோர், நீதியினால் நிலைநாட்டும் பதில்காம் கொண்டோர், இரக்கமுடையோர், அமைதி ஏற்படுத்தியோர், தூய்மையான உள்ளத்தோர், நீதியின் பொருட்டுத் துண்புறுத்தப்படுவோர், இயேசுவின் பெயரில் பொருட்டு வெறுக்கப்படுவோர் என இப்படிப்பட்டோர் அமைதியைப் பெயர்சுட்ட பழைய ஏற்பாட்டுக் கட்காட்டும் "யாவேயின் ஏழைகள்" என்ற நிறைவையினரின் மாற்றியபெயர்கள். யாவே கடவுளின் பழைய ஏற்பாட்டுச் சிந்தனைகளிலும், இயேசுவின் புதிய ஏற்பாட்டுச் சிந்தனைகளிலும் ஏழையர் பற்றிய இரு முக்கியக் கருத்துக்கள் இடம் பெறுவதை நாம் காணலாம்.

  1. ஏழையர் இறையைச் சார்ந்து இருப்பவர்கள்; இறையோடே சேர்ந்து இருப்பவர்கள்: பணமும், பொருளும் படைத்தவர்கள் தங்கள் வாழ்க்கையின் ஆதாரமாகப் பார்த்துத் தங்களிடமுள்ள பொருள்தெல்வத்தையே. ஆனால், ஏழையரின் வாழ்க்கைான ஒரே நம்பிக்கை அவர்கள் நம்பியிருந்த அருள்செல்வமே. ஒழுக்க முழுக்க இறைவனையே தங்கள் வாழ்க்கைப் பயணத்திற்க்காக சார்ந்திருப்பவர்கள் இத்ததகையோர். இறைவனையும் தங்களையும் பிரிக்க முடியாத அளவிற்கு இறைவனோடு இணைந்திருக்கிறார்கள்.
  2. ஏழையர் பிறரைச் சார்ந்து இருப்பவர்கள், பிறரோடே சேர்ந்து இருப்பவர்கள்: தங்கள் உழைப்பையோ, ஊழியத்தையோ வைத்து முழு மனித வாழ்க்கை வேண்டிய நிலையில் உள்ளார்கள். அதுபோலவே, பணம் தான் மனிதனைப் பிறரிடமிருந்து பிரிக்கும். தங்களிடம் அப்பணம் இல்லாததால், இவர்கள் பிறரோடே சேர்ந்திருப்பதாயினர்.

நாம் நம்புகின்ற கடவுள் ஏழையரின் கடவுள். மேனான் திருத்தத்தைப் பிரான்சிக அவர்களது கூற்றுப்படி, "நம் திருஅவையையும் ஏழைகளுக்காக எளிய திரு அவையே" ஆகவே, நாமும் யாவேயின் ஏழைகளாக மாற வேண்டும். நம்மிடம் இஇருப்பதை நம்பி வாழுமால், இறைவனை நம்பி வாழும்போது, பிறரை ஒதுக்காமைல், பிறரோடு இணைந்து வாழும்போது நாமும் யாவேயின் ஏழையாகிறோம். இயேசு மலைப்பொழிவில் அளித்த ஆசி வாக்குறுதிகளைப் பெற்றுக் கொள்கிறோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு