மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

தூய ஆவியார் பெருவிழா மறையுரை
1-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
திருத்தூதர் பணிகள் 2:1-11 | 1 கொரிந்தியர் 12:3-7,12-13 | யோவான் 20:19-23

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்



ஒரு குழந்தை பிறந்துவிட்டால்‌ அன்று அந்தக்‌ குடும்பத்தில்‌ மகிழ்ச்சி. ஒரு குழந்தையின்‌ பிறந்த நாள்‌ மிக ஆடம்பரமாக, மிக மகிழ்ச்சியோடு பெற்றோர்‌, உறவினர்கள்‌ கொண்டாடுகிறார்கள்‌. ஏனெனில்‌ புதுவாழ்வு கிடைத்தது என்பதால்தான்‌.

இன்று நாம்‌ கொண்டாடும்‌ திருவிழா தூய ஆவியின்‌ பெருவிழா, ஆவியானவர்‌ நமக்கு ஆண்டவர்‌ இயேசுவின்‌ விண்ணக ஏற்புக்குப்‌ பிறகு தந்தையால்‌ தரப்பட்ட கொடை... தூய ஆவி பிறந்தார்‌ என்பது அல்ல. மாறாக தூய ஆவியானவரின்‌ வருகையால்‌ திருச்சபையானது பிறப்பெடுத்தது என்பதுதான்‌. இதன்‌ மகிமை. இறை மக்கள்‌ பிறந்தார்கள்‌. ஆவியின்‌ வாழ்வில்‌ திருத்தொண்டர்கள்‌ தொடங்கி, சீடர்கள்‌, ஆதி கிறிஸ்தவர்கள்‌ என்றெல்லாம்‌ திருக்கூட்டமானது பெருகியது என்பதைத் தான்‌ இன்று நினைவுகூர்கின்றோம்‌.

ஆதியிலே தூய ஆவியானவர்‌ காற்றாக, தீப்பிழம்பாக, புறாவாக, ஏன்‌ தண்ணீராக அடையாளம்‌ காட்டப்பட்டுள்ளார்‌. மனித வாழ்வில்‌ ஆவி, காற்று இவை மிக முக்கியம்‌. மூச்சுவிட காற்று, ஆவி இன்றி மனிதனால்‌ வாழ முடியாது. அதேபோலத்தான்‌ மனிதவாழ்வுக்கு காற்று வடிவில்‌ தேவ ஆவி காட்சி தருகிறார்‌. தீ நாவாக மனித வாழ்வுக்குக்‌ காட்சி தருகிறார்‌. மனிதன்‌ பேசவும்‌, போதிக்கவும்‌ நாவு தேவை. இதை ஆவியானவர்‌ வடிவாக காட்சி தருகிறார்‌. மூன்றாவது நெருப்பாகக்‌ காட்சி தருகிறார்‌. நெருப்பானது தண்ணீரைச்‌ சூடாக்கி நீராவியாகி இயக்கும்‌ சக்தி பெறுகிறது. உணவுக்கு அரசி உண்டாக்குகிறது. இதேபோல்தான்‌ மனிதரைச்‌ சுவையுள்ள மனிதராக மாற்றுகிறது. நான்காவதாகப்‌ புறா வடிவில்‌ காட்சி தருகிறது. இதனால்‌ தூய்மை உண்டாக்கி, இருளைப்‌ போக்கும்‌ ஆவியாகக்‌ காட்சி தருகிறார்‌. ஐந்தாவதாக ஆவியானவர்‌ தண்ணீராக அழைக்கப்படுகிறார்‌. யாரேனும்‌ தாகமாக இருந்தால்‌ ஆன்ம தாகத்தைத்‌ தீர்க்க அருளாளராகவும்‌, நம்மைத்‌ தூய்மை ஆக்குபவராகவும்‌ உள்ளார்‌.

ஒரு கொல்லுப்பட்டறை தொழிலாளி ஒரு இரும்புக்‌ கம்பியைத்‌ தீச்சூழையில்‌ வைத்துச்‌ சூடேற்றுகிறார்‌. சூடேற்ற, சூடேற்ற அது நெருப்பாக, சிவப்பாக மாறுகிறது. அதனால்‌ கொல்லன்‌ விரும்பும்‌ சாயலை இந்த இரும்பால்‌ உருவாக்கி விடுகிறார்‌. இதேபோல்தான்‌ நகைகளை உருவாக்கும்‌ தங்கம்‌ செய்யும்‌ பணியாளரும்‌. ஆனால்‌ சூடேற்றிய இருபானது சூடு குறைந்தால்‌ கருப்பாகி, வளைக்க முடியாத நிலைக்கு ஆகிவிடும்‌. இதுபோலத்தான்‌ ஆவியானவரின்‌ செயல்‌.

நாம்‌ ஆவிக்கு நம்மை அர்ப்பணம்‌ ஆக்கிடும்போது நாம்‌ செயல்‌ வீரர்கள்‌ ஆவோம்‌. உறுதியூட்டும்‌ இறைவனால்‌ எதையும்‌ செய்யும்‌ ஆற்றல்‌ உண்டு (பிலி. 4:18) என்பது என்‌ விருதுவாக்கு. ஆம்‌ ஆவியானவரின்‌ துணை கொண்டு செயலாக்கம்‌ பெற முடியும்‌.

கதை

ஒரு வேடன்‌ காட்டில்‌ வேட்டையாடிய பின்‌ காட்டில்‌ கிடைத்த ஒரு முட்டையை எடுத்து வந்து கோழி முட்டையுடன்‌ சேர்த்து கோழியில்‌ அடைகாக்க வைத்தான்‌. 22 நாட்கள்‌ சென்று குஞ்சுகள்‌ வெளி வந்தன. இந்தக்‌ காட்டில்‌ இருந்து வந்த முட்டையில்‌ இருந்தும்‌ குஞ்சு வெளி வந்தது. வளர ஆரம்பித்தவுடன்தான்‌ அது கழுகுக்‌ குஞ்சு என வெளிப்பட்டது. ஆனால்‌ கோழி குஞ்சுகளுடன்‌ உறவாடியதால்‌ கோழிகளின்‌ செயல்களை மட்டும்தான்‌ செய்ய முடிந்தது.

ஒரு நாள்‌ ஒரு பருந்து ஆகாயத்தில்‌ சிறகை விரித்துப்‌ பறப்பதைப்‌ பார்த்து வியந்து நின்றது. ஆனால்‌ கோழிக்‌ குஞ்சோ, தம்பி! நாம்‌ கோழிக்‌ குஞ்சு. தரையில்‌ வாழ்வதுதான்‌ நமது வாழ்வு. ஆகாயத்தில்‌ பறப்பதோ பறவை இனத்தின்‌ அரசனான கழுகு. அவன்‌ போல்‌ உன்னால்‌ பறக்க முடியாது என்றது. ஆனால்‌ கழுகுக்‌ குஞ்சோ ஒவ்வொரு நாளும்‌ தன்‌ இறக்கையை விரித்துப்‌ பறக்க முயற்சித்தது. முதலில்‌ தாவிக்‌ குதிக்கப்‌ பழகியது. இரண்டாவது, வேலி உயரம்‌ தாவ முடிந்தது. பின்‌ மரத்தின்‌ கிளையை எட்ட முடிந்தது. இறுதியாக ஆகாயத்தில்‌ பறந்தது. ஆம்‌ கழுகுக்‌ குஞ்சு கோழிக்‌ குஞ்சோடு இருந்தாலும்‌ தன்னால்‌ முடியும்‌ என சாதித்தது. அதேபோல்தான்‌ அரச குல இறைமக்களாகிய ஆவியானவரின்‌ துணை கொண்டு நாம்‌ ஆகாயம்‌ என்ற விண்ணகம்‌ பறக்க முடியும்‌.

அதற்காக நாம்‌ என்ன செய்ய வேண்டும்‌?

  1. நாம் நம்‌ பாவத்திற்காக மகதலா மரியாளைப்போல்‌ மனம்‌ வருந்தி பாவி என்ற உணர்வோடு நம்மைத்‌ தாழ்த்தி இறைவனிடம்‌ வரவேண்டும்‌ (லூக்‌ 7 : 38, 50).
  2. கொர்னேலியுவைப்போல்‌ புனித பவுலைப்போல்‌ செபத்திலும்‌, தபத்திலும்‌ ஈடுபட்டு இடைவிடாது செபிக்க வேண்டும்‌ (தி. ப. 10:44-46).
  3. நமது மனதை கழுகுக்‌ குஞ்சைப்போல்‌ மேல்நோக்கி உயர்த்த வேண்டும்‌. உலகம்‌ அதன்‌ இன்பம்‌, பொருள்‌ இவைகளுக்கு அடிமையாகி இருந்தால்‌ ஆவியானவர்‌ நம்மில்‌ செயலாற்ற முடியாது.
  4. நாம்‌ தாகத்தோடு இருக்க வேண்டும்‌. தாகம்‌ இருந்தால்தான்‌ தண்ணீர்‌ குடிக்க ஆசை வரும்‌. அதேபோல்‌ பாவமின்றி ஆன்ம தாகம்‌ இருந்தால்தான்‌ ஆவியானவரைப்‌ பெற முடியும்‌ (யோவா 7 : 37).
  5. தேவ வார்த்தையை, விவிலியத்தை எடுத்து வாசிக்க வேண்டும்‌. தேவவார்த்தையைக்‌ கவனமுடன்‌ கேட்க வேண்டும்‌.
  6. மூப்பர்கள்‌ குருக்கள்‌ கை வைக்க நாம்‌ ஆவியைப்‌ பெற்றுக்கொள்ள முடியும்‌ (தி. ப. 8:1 19:0).
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

உனக்குள்ளே நான்‌ காத்திருப்பேன்‌

இன்று இயேசு அவருடைய சீடர்களுக்குத்‌ தூய ஆவியாரை அளித்த திருநாளைக்‌ கொண்டாடி மகிழ்கின்றோம்‌ [நற்செய்தி]. தூய ஆவியார்‌ என்பவர்‌ யார்‌ என்பதற்கு மூன்று அழகான விளக்கத்தை இன்றைய முதல்‌ வாசகம்‌ நமக்கு அளிக்கின்றது .

தூய ஆவியார்‌ யார்‌ என்பதைச்‌ சுட்டிக்காட்ட திருத்தூதர்‌ பணிகளின்‌ ஆசிரியர்‌ பயன்படுத்தும்‌ முதல்‌ அடையாளம்‌ காற்று [திப 2:2). காற்று உயிருக்கு அடையாளம்‌. உள்ளே போகும்‌ மூச்சு வளியே வர மறந்தால்‌ போச்சு என்பார்கள்‌. ஆக, தூய ஆவியார்‌ என்பவர்‌ நமக்கு உயிர்‌ தருபவர்‌.

இரண்டாவது அடையாளம்‌ நெருப்பு (திப 2:3௮). நெருப்பு தூய்மைக்கு அடையாளம்‌. பொன்னை நெருப்பிலிட்டுப்‌ புடம்‌ போடும்போது அது தூய்மை அடைந்து ஒளிவீசுகின்றது. ஆக, தூயஆவியார்‌ என்பவர்‌ நம்மை தூய்மைப்படுத்துபவர்‌.

மூன்றாவது. அடையாளம்‌ நாக்கு [திப 2:3]. நாக்கு பேச்சுக்கு அடையாளம்‌. செந்தமிழும்‌ நாப்பழக்கம்‌ என்பார்கள்‌. ஆக, நம்மை அழகாகப்‌ பேச வைப்பவர்‌ தூய ஆவியார்‌.

நமக்கு உயிர்தரும்‌ ஆவியாரை, நம்மைத்‌ தூய்மைப்படுத்தும்‌ ஆவியாரை, நம்மை பேசவைக்கும்‌ ஆவியாரை இரண்டாம்‌ வாசகத்தில்‌ புனித பவலழிகளார்‌ கூறுவது போல நாம்‌ எல்லாருமே திருமுழுக்கின்‌ வழியாகப்‌ பெற்றிருக்கின்றோம்‌ [! கொரி 12:13].

இன்றைய உலகச்‌ சூழ்நிலை எப்படி இருக்கின்றது?

கதம்ப மாலைக்குள்‌ கட்டுண்டு கிடந்த ரோஜாவுக்கு நேருவின்‌ சட்டைப்‌ பையில்‌ குத்தப்பட்ட ஒற்றை ரோஜாவாய்‌ உலா வர ஆசை. ஒற்றை ரோஜாவாகச்‌ சுதந்தரமாக வாழ ஆசைப்படும்‌ இந்தியர்கள் ஆயிரம்‌! 125 கோழிக்கு மேற்பட்ட மக்கள்‌ கூட்டத்தில்‌ அகப்பட்டு மூச்சுவிடமுழயாமல்‌ திண்டாடும்‌ மனிதர்கள்தான்‌ எத்தனை எத்தனை! மூச்சுக்கூட விட முழயாமல்‌ நடைபிணங்களாய்‌ வாழ்ந்துகொண்டிருப்போரின்‌ சோகக்‌ கதைகள்‌ எண்ணிலடங்காது.

அடுத்து, இன்று எங்கு நோக்கினும்‌ பாவத்தின்‌ வேகம்‌! ஒரு பக்கம்‌ அதிகாரக்‌ கலாச்சாரம்‌ ! மறுபக்கம்‌ ஆயுதக்‌ கலாச்சாரம்‌! பலருடைய மனத்திலே பணத்திற்காகவும்‌, பதவிக்காகவும்‌ எதையும்‌ செய்யலாம்‌ என்ற பாவக்‌ கலாச்சாரம்‌ கொடிகட்டிப்‌ பறக்கின்றது!

அடுத்து, இன்று எத்தனையோ அர்த்தமற்ற பேச்சு வார்த்தைகள்‌. சமாதானப்‌ பேச்சு வார்த்தைகளுக்குப்‌ பிறகு ஒப்பந்தத்தில்‌ கைசயெழுத்திடப்படும்போதே, போருக்கான தேதியும்‌ இரகசியமாகக்‌ குறிக்கப்படுகின்றது. வாய்மையும்‌, தூய்மையும்‌ நிறைந்த உரையாடல்களைக்‌ கேட்பது மிகமிக அரிதாக இருக்கின்றது. மனிதன்‌ மனிதனோடு பேசுவதில்‌ மட்டுமல்ல, மனிதன்‌ இறைவனோ பேசுவதிலும்‌ தடுமாற்றம்‌.

இதோ ஒரு புதுக்கவிதை!

தகப்பன்‌ கோவிலுக்குள்‌ செபித்துக்‌ கொண்டிருந்தார்‌. மகன்‌ கோவிலுக்குள்‌ நுழைந்து தகப்பன்‌ முன்னால்‌ மண்டியிட்டுச்‌ செபித்தான்‌. அவன்‌ செபித்த முறை தகப்பனுக்குப்‌ பிடிக்கவில்லை. வீட்டுக்கு மகன்‌ வந்ததும்‌, மகனைத்‌ தகப்பன்‌ பார்த்து:

 குலக்‌கொழுந்தே ஏன்‌ கோவிலுக்குப்‌ போனாய்‌? சாமியைக்‌ கும்பிடப்‌ போனாயா? ஆசாமியைக்‌ கும்பிடப்‌ போனாயா? வானத்தை ஏன்‌ பார்த்தாய்‌? இடிந்துவிடும்‌ என்று பார்த்தாயா? பூமியை ஏன்‌ பார்த்தாய்‌? விழுங்கிவிடும்‌ என்று பார்த்தாயா? பக்கத்தில்‌ ஏன்‌ பார்த்தாய்‌? யாராவது பார்க்கின்றார்களா எனப்‌ பார்த்தாயா? இறுதியாக ஏன்‌ பீடத்தைப்‌ பார்த்தாய்‌? எனக்‌ கேட்க, அதற்கு மகன்‌,அதையெல்லாம்‌ நான்‌ பார்த்தேன்‌. அதை ஏன்‌ நீங்கள்‌ பார்த்தீர்கள்‌? என்றான்‌.

சிந்தனையைச்‌ சிதறவிடாமல்‌ நம்மால்‌ இறைவனோடு பேச முடியவில்லை! இப்படிப்பட்ட சூழ்நிலையில்‌ என்ன செய்யலாம்‌? அதோ தூய ஆவியார்‌ நம்மை அழைக்கின்றார்‌ ; அவர்‌ நம்மோட பேசுகின்றார்‌: நான்‌ இறைவனின்‌ ஆவி ! என்னால்‌ முழயாதது ஒன்றுமில்லை ! என்னிடம்‌ வா! உன்னை நான்‌ என்‌ வரங்களாலும்‌ [1 கொரி 12:8-10)] கனிகளாலும்‌ [கலா 5:22-23] நிரப்புவேன்‌.

நீ புதிய விடியலுக்குள்‌ நுழைவாய்‌ ; உன்‌ பாவங்கள்‌ கழுவப்பட்டு நீ வெண்பனியிலும்‌ வெண்மையாவாய்‌ ; உன்‌ நா வலிமை பெற்று நீ பெரும்‌ இறைவாக்கினராவாய்‌ ! உன்னில்‌ இறந்தவை அனைத்தும்‌ உயிர்பெற்று எழும்‌. வருவாயா? ... நீ என்னிடம்‌ வரும்‌ வரை உனக்குள்ளே நான்‌ காத்திருப்பேன்‌.

மேலும்‌ அறிவோம்‌ :

சொல்லுக சொல்லிற்‌ பயனுடைய சொல்லற்க
சொல்லிற்‌ பயன்ஞலாச்‌ சொல்‌ (குறள்‌ : 200).

பொருள்‌ : ஏதேனும்‌ ஒன்றைச்‌ சொல்ல விரும்பினால்‌ பயன்‌ மிக்க சொற்களையே கூற வேண்டும்‌. பிறருக்குப்‌ பயன்தராத சொற்களை ஒருபோதும்‌ பேசலாகாது!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

திருமணமான ஒருவர்‌ தன்‌ நண்பரிடம்‌, “ஒரு பத்திரிகையால்‌ என்‌ வாழ்வு பாழடைந்து விட்டது” என்றார்‌. “அது என்ன பத்திரிகை?” என்று நண்பர்‌ அவரிடம்‌ கேட்க அவர்‌ கூறினார்‌: “கல்யாணப்‌ பத்திரிகை.” வேறொரு கணவர்‌ தன்னுடைய முதல்‌ ஆண்டு திருமண நிறைவு நாளன்று தனது திருமண அழைப்பிதழைத்‌ துருவித்‌ தருவிப்‌ பார்த்தார்‌. அதைக்‌ கண்ட அவருடைய மனைவி அவரிடம்‌, “அதில்‌ என்ன பார்க்கிறீர்கள்‌” என்று கேட்டதற்கு அவர்‌ கூறினார்‌: “நமது திருமண அழைப்பிதழில்‌ நமது திருமணத்தின்‌ “Expiry Date” (காலாவதியாகும்‌ நாள்‌) குறிப்பிடப்பட்டுள்ளதா? என்று பார்க்கின்றேன்‌.”

பலருடைய தனிவாழ்வும்‌, குடும்ப வாழ்வும்‌, அரசியல்‌ மற்றும்‌ சமூக வாழ்வும்‌ நலிவடைந்து நம்பிக்கை அற்றுத்‌ தோன்றும்‌ அவல நிலையை நாம்‌ காணும்போது இவற்றிற்‌ கெல்லாம்‌ விடிவு காலம்‌ வராதா? என்ற கேள்வி எழுகிறது. இன்று மனிதரின்‌ மாபெரும்‌ தேவை வாழ்க்கையில்‌ பிடிப்பு, நாளையதினத்தைப்‌ பற்றிய நம்பிக்கை.

பழைய ஏற்பாட்டில்‌ இஸ்ரயேல்‌ மக்கள்‌ பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்பட்டு அன்னிய மண்ணில்‌ நம்பிக்கை இழந்த நிலையில்‌ அவர்கள்‌ கூறியது: “எங்கள்‌ எலும்புகள்‌ உலர்ந்து போயின: எங்கள்‌ நம்பிக்கை அற்றுப்‌ போய்விட்டது. நாங்கள்‌ துண்டிக்கப்பட்டோம்‌” (எசே 37:11). அப்போது கடவுள்‌ அவர்களிடம்‌ கூறியது: “என்‌ ஆவியை உங்கள்‌ மீது பொழிவேன்‌. நீங்களும்‌ உயிர்‌ பெறுவீர்கள்‌” (எசே 37:14).

இன்று தூய ஆவியாரின்‌ பெருவிழாவைக்‌ கொண்டாடு கின்றோம்‌. நம்பிக்கையற்ற நமக்குத்‌ தூய ஆவியார்‌ நம்பிக்கையைத்‌ தருகிறார்‌. இன்றைய பதிலுரைப்‌ பாடல்‌ கூறுகிறது: “ஆண்டவரே, உமது ஆவியை அனுப்பி மண்ணகத்தின்‌ முகத்தைப்‌ புதுப்பிக்கின்றீர்‌” (திப 104:1). கிறிஸ்துவின்‌ விண்ணேற்றம்‌ சீடர்களின்‌ மனதில்‌ ஒரு சூன்யத்தை ஏற்படுத்தியது. கதிகலங்கிப்‌ போயிருந்த சீடர்கள்மீது தூய ஆவியார்‌ பிளவுற்ற நாவுகள்‌ வடிவத்தில்‌ இறங்கிவர, அவர்கள்‌ பல்வேறு மொழிகளில்‌ பேசி, யூதர்களையும்‌ கிரேக்கர்களையும்‌ வியப்புறச்‌ செய்த மாபெரும்‌ செயலை இன்றைய முதல்‌ வாசகம்‌ எடுத்துரைக்கின்றது (திப 2:1-11).

யூதர்களுக்கு அஞ்சிக்‌ கதவுகளை மூடி வைத்திருந்த சீடர்கள்‌ நடுவே வந்து, அவர்களுக்கு அமைதியை அளித்து, அவர்கள்மீது ஊதித்‌ தூய ஆவியைப்‌ பொழிந்து, அவர்களுக்குப்‌ பாவ மன்னிப்பு வழங்கும்‌ வல்லமையை உயிர்த்த ஆண்டவர்‌ கொடுத்ததை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது (யோவா 20:19-23), உயிர்த்த ஆண்டவர்‌ - இயேசு கிறிஸ்து தமது சீடர்களுக்குத்‌ தோன்றுகிறார்‌; அவர்கள்‌ அடிமனத்திலிருந்து அச்சத்தை அகற்றுகிறார்‌; புத்துயிரையும்‌ புதிய நம்பிக்கையையும்‌ கொடுத்து அவர்களிடம்‌ புதிய பணியை ஒப்படைக்கின்றார்‌.

தூய ஆவியார்‌ யார்‌? தந்தையிடமிருந்தும்‌ மகனிடமிருந்தும்‌ புறப்படுகிறவர்‌; உயிர்‌ அளிப்பவர்‌. கடவுளின்‌ அன்பு தூய ஆவியார்‌ வழியாக நம்மீது பொழியப்பட்டுள்ளது (உரோ 5:5). தூய ஆவியார்‌ வழியாகவே நாம்‌ கடவுளை அப்பா தந்தையே எனக்‌ கூப்பிடுகிறோம்‌ (கலா 4:6). எனவே நாம்‌ எத்தகைய சூழ்நிலையிலும்‌ அவநம்பிக்கைக்கு ஆளாகக்கூடாது.

ஒரு வரலாறு ஆசிரியர்‌ “பிரஞ்சு புரட்சியைப்‌” பற்றி ஒரு நூல்‌ வெளியிட. விரும்பி, பல ஆண்டுகளாக அவர்‌ எழுதிய கைப்பிரதிகளைத்‌ தன்‌ நண்பரிடம்‌ கொடுத்து அவரது கருத்தை அறிய விரும்பினார்‌. அந்த நண்பர்‌ அப்பிரதிகளைத்‌ தன்‌ வீட்டில்‌ ஒரு மூலையில்‌ கட்டாக வைத்திருந்தார்‌. அவர்‌ வீட்டின்‌ வேலைக்காரி அப்பிரதிகளைப்‌ பழைய காகிதம்‌ என்று எண்ணி அதை அடுப்பில்‌ போட்டு தளித்துவிட்டாள்‌. இச்செய்தியைக்‌ கேட்ட. வரலாற்று ஆசிரியர்‌ மனமுடைந்து பல நாள்களாக உணவின்றி, உறக்கமின்றித்‌ தவித்தார்‌. கடைசியில்‌ அவர்‌ மீண்டும்‌ பிரஞ்சு புரட்சிபற்றி எழுதி நூலை வெளியிட்டு, உலகப்‌ புகழ்‌ பெற்றார்‌. நம்து வாழ்வு என்ற நூல்‌ எரிந்து சாம்பலாகப்‌ போன புத்தகம்‌ போன்று தோன்றலாம்‌. இருப்பினும்‌ அதை மீண்டும்‌ எழுதிப்‌ புதுப்‌ பதிப்பாகப்‌ பொலிவுடன்‌ வெளியிட முடியும்‌. அந்த நம்பிக்கையை நம்முன்‌ வாழும்‌ ஆவியார்‌ நமக்குக்‌ கொடுத்துக்‌ கொண்டே. இருக்கிறார்‌.

ஆனால்‌ சீடர்‌ கதவை அடைத்துக்‌ கொண்டிருந்ததுபோல்‌, தூய ஆவியார்‌ நுழையாத வண்ணம்‌ நமது இதயக்‌ கதவை அடைத்து வைத்திருப்பது தவறாகும்‌ “தூய ஆவியே! துணையாய்‌ வாருமே! இப்ப வாரும்‌! இறங்கி வாரும்‌ ! எங்கள்‌ மத்தியிலே” என்று மன்றாடுவோம்‌. அவர்‌ நிச்சயமாக நமது உள்ளத்தில்‌ வந்து புத்துயிர்‌ அளிப்பார்‌. . தூய ஆவியார்‌ நம்மீது பொழியப்படுவது நமது தனிப்பட்ட நன்மைக்காக மட்டுமல்ல, மாறாக, அது திருச்சபையின்‌ பொது நன்மைக்காகவே என்று இன்றைய இரண்டாம்‌ வாசகத்தில்‌ புனித பவுல்‌ கூறுகின்றார்‌. “அருள்‌ கொடைகள்‌ பலவகையுண்டு. ஆனால்‌ தூய ஆவியார்‌ ஒருவரே..... பொது நன்மைக்காகவே தூய ஆவியின்‌ செயல்பாடுகள்‌ ஒவ்வொருவரிலும்‌ வெளிப்படுகிறது” (1 கொரி 12: 4,7).

இன்று திருச்சபையில்‌ அருங்கோடைகளின்‌ மோதல்களைக்‌ கண்டு வேதனை அடைய வேண்டியிருக்கிறது. அருங்‌ கொடையாளர்கள்‌ திருச்சபையின்‌ ஒற்றுமையை வளர்ப்பதற்குப்‌ பதிலாகத்‌ திருச்சபையைப்‌ பிளக்கின்றனர்‌. கொரிந்து திருச்சபையில்‌ அருங்கொடைகளின்‌ மோதல்களைக்‌ கண்டு, “அன்பே தலைசிறந்தது” என்று அறுதியிட்டுக்‌ கூறுகின்றார்‌ திருத்தூதர்‌ பவுல்‌.

ஒரு வெள்ளாடு மே” என்று கத்தாமல்‌, “லா, லூ, லே” என்று கத்தியதாம்‌. ஏன்‌ அது அவ்வாறு கத்துகிறது? என்று கேட்டதற்கு, “நான்‌ பரவசப்பேச்சுப்‌ பேசுகிறேன்‌” என்றதாம்‌. ஒருவர்‌ மண்ணோர்‌ மொழியிலும்‌ விண்ணோர்‌ மொழியிலும்‌ பேசினாலும்‌, அவரிடம்‌ அன்பு இல்லை என்றால்‌, அது வெறும்‌ சப்தமேயன்றி வேறொன்றும்‌ இல்லை என்கிறார்‌ புனித பவுல்‌ (1 கொரி 13:1). உயிர்‌ அன்பில்‌ நிலைத்துள்ளது. அன்பில்லாதவரின்‌ உடல்‌ எலும்பு தோலால்‌ போர்த்தப்பட்ட வெற்றுடம்பே என்கிறார்‌ வள்ளுவர்‌.

அன்பின்‌ வழியது உயிர்நிலை அஃது இலரர்க்கு
என்புதோல்‌ போர்த்த உடம்பு (குறள்‌ 80).

எனவே, அருங்கொடைகளின்‌ பெயரால்‌ வீண்‌ குழப்பத்தையும்‌ பிரிவினையையும்‌ உருவாக்காமல்‌, அனைத்துக்‌ கொடைகளிலும்‌ தலைசிறந்த கொடையாகிய அன்பைத்‌ தூக்கிப்‌ பிடிப்போம்‌. ஒற்றமையை ஊட்டி வளர்ப்போம்‌. அப்போது உலகின்‌ இறுதி எல்லை வரைக்கும்‌ கிறிஸ்துவுக்குச்‌ சாட்சியம்‌ பகர்வோம்‌!

“தூய ஆவி உங்களிடம்‌ வரும்போது கடவுளது வல்லமையைப்‌ பெற்று... உலகின்‌ கடை எல்லை வரைக்கும்‌ எனக்குச்‌ சட்சிகளாய்‌ இருப்பீர்கள்‌” (திப 1:8).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

உயிர்‌ நாடி தூய ஆவி

ஆண்டவர்‌ இயேசு உயிர்த்தெழுந்து விண்ணேறிச்‌ சென்றதும்‌ மூன்று குட்டிச்‌ சம்மனசுக்கள்‌ ஓடிவந்து “ஆண்டவரே, தந்தையின்‌ திருவுளத்தை ஏற்று உலகில்‌ இறையாட்சியின்‌ சின்னமாகத்‌ திருச்சபையை நிறுவி விட்டு வந்திருக்கிறீரே, யாரிடம்‌ ஒப்படைத்து விட்டு வந்தீர்‌? அந்தத்‌ திருத்தூதர்களிடமா? தலைவன்‌ என்று நீர்‌ நினைத்தவரே, நியமித்தவரே உம்மை “அறியேன்‌” என்று மறுதலித்தார்‌. மற்றவர்களோ கோழைகளாகப்‌ பயந்து ஒடி ஒளிந்து கொண்டார்கள்‌. அவர்களை நம்பினால்‌ திருச்சபை உருப்படுமா? என்றெல்லாம்‌ புலம்பிய போது இயேசு சொன்னாராம்‌: “யாரையும்‌ - எந்தக்‌ கொம்பனையும்‌ நம்பியல்ல. ஆற்றல்மிக்கத்‌ தூய ஆவியை நம்பித்தான்‌. அதோ, புனித ஆவி புறப்பட்டுக்‌ கொண்டிருக்கிறார்‌. அவர்‌ பார்த்துக்‌ கொள்வார்‌”.
“உனது ஆற்றலாலும்‌ அல்ல, வலிமையாலும்‌ அல்ல. ஆனால்‌ எனது ஆவியாலே ஆகும்‌” - செக்கரியா 4:6.
கிறிஸ்தவனுக்கோ திருச்சபைக்கோ தூய ஆவியே ஆற்றல்‌, சக்கி, இயக்கம்‌!

கத்தோலிக்குத்‌ திருச்சபையின்‌ கடந்தகால வரலாற்றில்‌ அறியாத கடவுளாக (Unk॥0ற G௦0) மறக்கப்பட்ட கடவுளாக (forgotten paraclete) ஆவியானவர்‌ இருந்த காலம்‌ உண்டு. புதிய ஏற்பாட்டில்‌ தூய ஆவிக்கு வலுவான முக்கியத்துவம்‌ இருந்தும்கூட அவர்‌ எப்ப்டி மறக்கப்பட்டார்‌? என்பது புதிரானதுதான்‌. ஆவி என்ற சொல்லே அதற்குக்‌ காரணமாக இருக்குமோ!?”

கடவுள்‌ தந்தை யாக இருக்கிறார்‌ என்ற எண்ணமே உறவுக்கு வழிவகுக்கும்‌. கடவுள்‌ மகனாக” இருக்கிறார்‌ என்று சொல்லும்‌ போதே உறவுக்கு வழிபிறக்கும்‌. கடவுள்‌ ஆவியாக இருக்கிறார்‌ என்றால்‌... ஆவியோடு எப்படி உறவு கொள்வது?

தூய ஆவியைப்‌ புரிந்து கொள்ள ஐந்து அடையாளங்கள்‌ வழியாகத்‌ தன்னை வெளிப்படுத்தினார்‌.

1 பெருங்காற்று : “திடீரென்று கொடுங்காற்று வீசுவது - போன்று ஒர்‌ இரைச்சல்‌. வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள்‌ அமர்ந்திருந்த வீடு முழுவதும்‌ ஒலித்தது. (தி.ப.2:2)

2. தீ நாக்கு : “மேலும்‌ நெருப்புப்‌ போன்ற பிளவுற்ற நாவுகள்‌ ஒவ்வொருவர்‌ மேலும்‌ வந்து அமர்ந்ததை அவர்கள்‌ கண்டார்கள்‌ (தி.ப.2:3)

3. வெண்புறா : “தூய ஆவி புறா வடிவில்‌ தோன்றி அவர்‌ மீது இறங்கியது (லூக்‌.3:22)

4. நீரூற்று : “யாரேனும்‌ தாகமாயிருந்தால்‌ என்னிடம்‌ வரட்டும்‌... பருகட்டும்‌... அவருடைய உள்ளத்திருந்து வாழ்வு தரும்‌ தண்ணீர்‌ ஆறாய்‌ பெருக்கெடுத்து ஒடும்‌... தூய ஆவியைக்‌ குறித்தே அவர்‌ இவ்வாறு சொன்னார்‌ ' (யோவான்‌ 7:39)

5. திரு எண்ணய்‌ : “சாமுவேல்‌ எண்ணெய்‌... எடுத்து அவனைத்‌ திருப்பொழிவு செய்தார்‌. அன்று முதல்‌ ஆண்டவரின்‌ ஆவி தாவீதின்‌ மேல்‌ நிறைவாக இருந்தது. (1 சாமு.16:13)

இந்த ஐந்து அடையாளங்களிலும்‌ இழையோடும்‌ பொதுக்‌ கூறு ஒன்று உண்டு. காற்று வீசுகிறது, தீ எரிகிறது, புறா பறக்கிறது, தண்ணீர்‌ ஓடுகிறது, எண்ணெய்‌ ஊடுருவுகிறது... எல்லாமே இயக்கம்‌, சக்தி, ஆற்றல்‌, வல்லமை.

விவிலியத்தில்‌ தூய ஆவி வல்லமையாகவே சித்தரிக்கப்படு கிறார்‌. இயேசுவின்‌ பிறப்பை முன்னறிவித்த வானதூதர்‌ மரியாவிடம்‌ “தூய ஆவி உம்மீது வரும்‌. உன்னத கடவுளின்‌ வல்லமை உம்மேல்‌ நிழலிடும்‌”” (லூக்‌.1;35) என்றார்‌. பணி வாழ்வைத்‌ தொடங்கிய போது “இயேசு தூய ஆவியின்‌ வல்லமையுடையவராய்க்‌ கலிலேயாவுக்குத்‌ திரும்பிப்‌ போனார்‌” (லூக்‌.4:14) என்கிறார்‌ லூக்கா. கொர்னேலியுவின்‌ இல்லத்தில்‌ பேருரை ஆற்றிய பேதுரு குறிப்பிடுவார்‌: “கடவுள்‌ நாசரேத்து இயேசுவின்‌ மேல்‌ தூய ஆவியின்‌ வல்லமையைப்‌ பொழிந்தருளினார்‌ ” (தி.ப.10:38). உயிர்த்த இயேசு தன்‌ சீடர்களுக்குத்‌ தோன்றிச்‌ சொன்னது: “இதோ என்‌ தந்தை வாக்களித்த வல்லமையை நான்‌ உங்களுக்கு அனுப்புகிறேன்‌ ” (லூக்‌.24:49). விண்ணேறு முன்‌ “தூய ஆவி உங்களிடம்‌ வரும்போது நீங்கள்‌ கடவுளின்‌ வல்லமையைப்‌ பெற்று... எனக்குச்‌ சாட்சிகளாய்‌ இருப்பீர்கள்‌ ' (தி.ப.1;8) என்று பணித்தார்‌.

தூய ஆவியானவர்‌ விசுவாச அறிக்கையின்‌ ஓர்‌ உண்மையாக மாறுவதற்கு மூன்னரே, தொடக்க காலத்‌ தீராச்சபையில்‌ அனுயவத்தீன்‌ ஓம்‌ உயீருள்ள ஹய்ம்மையாக ஒருந்தார்‌ ' என்கிறார்‌ ஓர்‌ இறையியல்‌ அறிஞர்‌. இந்தக்‌ கூற்று முற்றிலும்‌ உண்மையே. திருத்தூதர்‌ பணிகள்‌ தொடக்க காலத்‌ திருச்சபையின்‌ வரலாறாகும்‌. அது தூய ஆவியின்‌ வரலாறும்‌ கூட, காரணம்‌? பக்கத்துக்குப்‌ பக்கம்‌ தூய ஆவியின்‌ அருளாற்றல்‌ செயல்படுவதைக்‌ காணலாம்‌.

.. திருச்சபைக்கு வாழ்வின்‌ உயிர்‌ நாடி தூய ஆவி. “இதோ இறுதி நாள்களில்‌ நான்‌ மாந்தர்‌ யாவர்‌ மேலும்‌ என்‌ ஆவியைப்‌ பொழிந்து அருள்வேன்‌. அவர்களும்‌ இறைவாக்கு உரைப்பர்‌” (தி.ப.2:17,18) பெந்தகோஸ்து நாளில்‌ பேதுரு ஆற்றிய முதல்‌ மறையுரை இது. திருத்தூதர்‌ பவுலுக்கு நற்செய்திப்‌ பணியின்‌ உயிர்நாடி தூய ஆவி. “நான்‌ பறைசாற்றிய செய்தி ஞானத்தின்‌ கவர்ச்சியான சொற்களில்‌ அமையவில்லை. ஆனால்‌ அது தூய ஆவியின்‌ வல்லமையை எடுத்துக்‌ காட்டுவதாக அமைந்தது. உங்கள்‌ நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானமல்ல. கடவுளின்‌ வல்லமையே” (1 கொரி. 2:4-5). திருத்தூதர்களைத்‌ திடப்படுத்துபவர்‌ மட்டுமல்ல, சிக்கலான நேரங்களில்‌ சரியானத்‌ தீர்வு காண வழிநடத்துபவர்‌ தூய ஆவி. விருத்த சேதனப்‌ பிரச்சனையில்‌ “தூய ஆவியாரும்‌ நாங்களும்‌ தீர்மானித்தோம்‌ ” (தி.ப.15:25) என்றார்‌ பேதுரு. சாட்சிய வாழ்வில்‌ இரத்த சாட்சிகளுக்கு வலிமைக்கும்‌ மகிழ்ச்சிக்கும்‌ ஊற்றாக இருந்தார்‌ தூயஆவி. எ.கா.ஸ்தேவான்‌. (தி.ப.7:55)

இவ்வாறு தூய ஆவியின்‌ வல்லமை தொடக்க காலத்‌ திருச்சபையில்‌ நிறைந்திருந்தது. அந்த வல்லமையைத்‌ தம்‌ அருள்கொடைகளால்‌ வளப்படுத்தித்‌ தொடக்க காலத்‌ திருச்சபையின்‌ அனுபவப்‌ பொருளானார்‌ தூய ஆவி. திருமுழுக்கில்‌, சிறப்பாக உறுதிப்‌ பூசுதலில்‌ நாமும்‌ அதே வல்லமையால்‌ நிரப்பப்படுகிறோம்‌.

காது இல்லாமல்‌ கேட்க முடியுமா? நுரையீரல்‌ இல்லாமல்‌ மூச்சு விட இயலுமா? தூய ஆவி இல்லாமல்‌ கிறிஸ்தவம்‌ ஏது? கிறிஸ்தவ வாழ்க்கை ஏது?

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஒருநாள் கொண்டாட்டம், வாழ்நாள் கொண்டாட்டம்

உயிர்ப்புப் பெருவிழா முடிந்து ஐம்பதாம் நாளான இன்று பெந்தகோஸ்து எனப்படும் தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா. பெந்தகோஸ்து என்ற சொல்லுக்கு ஐம்பதாம் நாள் என்று பொருள். இந்த ஐம்பது நாட்களில் தொடர்ந்து பல விழா நாட்கள் வந்துள்ளன. உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து, இறை இரக்கத்தின் ஞாயிறு, அதற்குப் பின் நல்லாயன் ஞாயிறு. சென்ற வாரம் விண்ணேற்றப் பெருவிழா இந்த ஞாயிறு தூய அவியாரின் பெருவிழா என்று வரிசையாக நாம் கொண்டாடி மகிழ பல ஞாயிறுகள் நமக்குக் கிடைத்துள்ளன. இனிவரும் நாட்களிலும் மூவொரு இறைவனின் திருவிழா, கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழா என்று விழாக்களும் கொண்டாட்டங்களும் தொடரும். ஒவ்வொரு விழாவையும் கொண்டாடினோம் அல்லது கொண்டாடுகிறோம் என்று சொல்லும்போது, எதைக் கொண்டாடுகிறோம், எப்படி கொண்டாடுகிறோம் என்பதைச் சிந்திப்பது நல்லது.

இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமான உண்மைகள். இந்த முக்கியமான உண்மைகள் முதன்முதலில் நிகழ்ந்தபோது, எக்காளம் ஒலிக்க, வாண வேடிக்கைகள் கண்ணைப் பறிக்க உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். இல்லையா? ஆனால், அப்படி நடந்ததாகத் தெரியவில்லையே! மாறாக, இந்நிகழ்வுகள் முதன் முதலில் நடந்தபோது, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாய் நடந்தன.
எப்போது எப்படி நடந்ததென்றே தெரியாமல் நிகழ்ந்த ஒரு முக்கிய மறையுண்மை உயிர்ப்பு. நெருங்கிய சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம் விண்ணேற்றம். இன்று நாம் எண்ணிப்பார்க்கும் தூய ஆவியாரின் வருகையும், அன்னை மரியாவுக்கும், சீடர்களுக்கும் அந்த மேலறையில் உண்டான மாற்றங்களைக் கூறும் ஒரு விழா. கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளான, அடித்தளமான இந்த மறையுண்மைகள் அனைத்துமே உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள்.

உலக விழாக்கள் கொண்டாடப்படுவதற்கென்று குறிப்பிட்ட 'பார்முலா' அல்லது இலக்கணம் உள்ளது. கொண்டாட்டம் எதற்காக என்பதைவிட, கொண்டாட்டம் எப்படி இருக்கவேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்தே இவ்விழாக்களின் முக்கியத்துவம் பிறருக்குத் தெரியவரும். பகட்டு, பிரமிப்பு, பிரம்மாண்டம் இவையே இவ்விழாக்களின் உயிர்நாடி. ஏன் இத்தனை ஆர்ப்பாட்டங்கள்? விழாவுக்கான உள் நோக்கத்தை விட, வெளித் தோற்றங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஆரவாரங்கள் இவற்றை பிறர் பார்த்தால், கேட்டால் போதும் என்ற நோக்கமே இவ்விழாக்களில் முக்கியம். இவ்விழாக்களைப்பற்றி அடுத்த நாள் கேட்டால் கூட நமக்கு ஒன்றும் நினைவிருக்காது. அல்லது, அவர்கள் செய்த ஆர்ப்பாட்டமே நமது நினைவில் நிறைந்து, நமக்கு எரிச்சலூட்டும். உலகக் கொண்டாட்டங்களின் இலக்கணம் இது.

‘கொண்டாட்டம்’ என்ற சொல்லுக்கே புது இலக்கணம் சொல்லும் விழாக்களை இயேசுவும் அவரைச்சுற்றி இருந்தவர்களும் கொண்டாடினர், நமக்குப் பாடங்களைச் சொல்லிச் சென்றனர். கொண்டாட்டம் என்பது எப்போதும் பிறரது கவனத்தை ஈர்ப்பதிலேயே அமையவேண்டும் என்று இல்லை. நாம் கொண்டாடும் விழாவின் உள் அர்த்தம் எவ்வளவு தூரம் நம் வாழ்வை மாற்றுகிறது என்பதில் நம் கவனம் இருந்தால், கொண்டாட்டங்கள் ஒருநாள் கேளிக்கைகளாக இல்லாமல், வாழ்நாளெல்லாம் நம்முடன் தங்கும் மாற்றங்களை உருவாக்கும். இத்தகையப் பாடங்களை நமக்குச் சொல்லித்தந்த விழாக்கள் - இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை ஆகிய விழாக்கள். இருபது நூற்றாண்டுகள் சென்றபின்னரும், இவ்விழாக்களில் நாம் புதுப்புது அர்த்தங்களைக் காண்பதற்குக் காரணம்?.. இவை முதல்முறை கொண்டாடப்பட்டபோது, ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல், ஆழமான அர்த்தங்கள் விதைக்கப்பட்டன. இன்று அந்த விதைகள் வேரூன்றி வளர்ந்து தொடர்ந்து கனி தந்து கொண்டிருக்கின்றன.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இன்று திருச்சபையின் பிறந்தநாள்!

பெந்தக்கோஸ்து பெருவிழா (Pentecost Solemnity). இது திருச்சபையின் பிறந்தநாள்! உயிர்த்த ஆண்டவர் வாக்குறுதி அளித்தபடி, தூய ஆவியார் நெருப்பு நாவுகளாகத் திருத்தூதர்கள்மீது இறங்கி வந்ததை இன்று நாம் கொண்டாடுகிறோம்.
மறையுரைத் தலைப்பு: "தூய ஆவியார்: திருச்சபையின் உயிர் மூச்சு!"

இன்றைய நற்செய்தியில் (யோவான் 20:19-23) இயேசு சீடர்கள்மீது ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்கிறார். இது ஒரு புதிய படைப்பின் தொடக்கம்.

1. பயத்தைப் போக்கும் வல்லமை (Power over Fear) முதல் வாசகத்தில் (திருத்தூதர் பணிகள் 2:1-11), கதவுகளைப் பூட்டிக்கொண்டு பயந்து போயிருந்த சீடர்கள், தூய ஆவியாரைப் பெற்றவுடன் வீதிக்கு வந்து துணிச்சலோடு நற்செய்தி அறிவிக்கிறார்கள்.
• சிந்தனை: தூய ஆவியார் நம்மிடம் வரும்போது, நம் வாழ்வின் பயங்கள் மறைந்து "சாட்சியம் பகிரும்" துணிச்சல் பிறக்கிறது. நாம் முடங்கிக் கிடக்கப் பிறந்தவர்கள் அல்ல, முழங்கப் பிறந்தவர்கள்!
2. பன்முகத்தன்மையில் ஒற்றுமை (Unity in Diversity)
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் எருசலேமில் கூடியிருந்தனர். தூய ஆவியார் வந்தபோது, அவர்கள் அனைவரும் ஒரே மொழியில் கடவுளின் வியத்தகு செயல்களைப் புரிந்துகொண்டனர்.
• விளக்கம்: பாபேல் கோபுரத்தின்போது மனிதன் பிரிந்தான்; பெந்தக்கோஸ்து திருநாளில் தூய ஆவியார் அனைவரையும் இணைக்கிறார். இரண்டாம் வாசகம் (1 கொரிந்தியர் 12:3-13) கூறுவது போல, நாம் வெவ்வேறு கொடைகளைக் கொண்டிருந்தாலும், ஒரே உடலாகிய திருச்சபையில் இணைக்கப்பட்டுள்ளோம்.
3. பாவ மன்னிப்பின் அதிகாரம் (The Gift of Forgiveness)
இயேசு தூய ஆவியாரை வழங்கியபோது, "எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ அவை மன்னிக்கப்படும்" என்கிறார்.
• பாடம்: தூய ஆவியார் சமாதானத்தின் ஆவியார். அவர் நம் இதயத்தில் இருக்கும் கசப்புணர்வையும், பகையையும் நீக்கி, பிறரை மன்னிக்கும் ஆற்றலைத் தருகிறார்.

பங்குத்தளம் மற்றும் இறைமக்களுக்கான செயல் திட்டங்கள் (CTA)

இந்தப் பெந்தக்கோஸ்து திருநாளில் நாம் செய்ய வேண்டியவை:
• கொடைகளைக் கண்டறிதல்: தூய ஆவியார் உங்களுக்குத் தந்துள்ள கொடை என்ன? (பாடுதல், போதித்தல், நிர்வாகம் செய்தல், பிறருக்கு உதவுதல்). அதைத் தூசு தட்டி உங்கள் பங்கின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துங்கள்.
• அன்பிய ஒருமைப்பாடு: உங்கள் அன்பியத்தில் மொழி, சாதி அல்லது பொருளாதார வேறுபாடுகள் இருந்தால், அதைத் தூய ஆவியாரின் உதவியோடு களைந்து எறியுங்கள். திருச்சபை என்பது ஒரு குடும்பம்.
• ஆவியின் கனிகள்: இந்த வாரம் உங்கள் வாழ்வில் அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, கனிவு, நன்னயம், நம்பிக்கை, மென்மை, இச்சையடக்கம் ஆகிய ஆவியின் ஒன்பது கனிகளில் ஒன்றை அதிகமாகப் பயிற்சி செய்யுங்கள் (கலாத்தியர் 5:22-23).
• செபம்: தினமும் காலையில் "தூய ஆவியாரே வாரும், என் இதயத்தை உமது அன்பின் நெருப்பால் எரியச் செய்யும்" என்று செபியுங்கள்.

மறையுரைச் சுருக்கம் (The Core Message)

"மின்சாரம் இல்லாத விளக்கு எப்படி ஒளிராதோ, அதுபோலத் தூய ஆவியார் இல்லாத கிறிஸ்தவ வாழ்வு ஒளிராது. அவர் நம் வாழ்வின் ஆற்றல்; நம் பயணத்தின் வழிகாட்டி!"

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தூய ஆவி பெருவிழா

முதல் வாசகப் பின்னணி (தி.ப. 2:1-11)

திருத்தூதர் பணி, திருத்தூதர்கள் ஆவியானவர் நாளில் தூய ஆவியில் நிரம்பப்பட்டதை தெளிவுற விளக்குகிறது. நற் செய்தியாளர் லூக்காவின் திருத்தூதர் பணி திருத்தூதர்களின் மேல் ஆவியானவர் பொழியும் நிகழ்வை மையப்படுத்ததாது, இந்த நிகழ்வினால், திருத்தூதர்கள் எவ்வாறு திருச்சபையில் பணிகளை உலகத்தின் கைகளிலை வைக்கும் பரப்பினார்கள் என்பதை சிறப்பிக்கிறார். பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேலில் மக்கள் ஆவியானவர் மக்கள்மீது பொழியப்படுகின்ற நாளுக்காகக் காத்திருந்தனர். அது இன்று நிறைவேறுகிறது.

ஆவியானவர் கிறிஸ்துவின் வார்த்தையால் இவ்வலகை ஒரு புதுபடைப்பாக மாற்றுகிறார். அன்று சீனாய் மலையில் கடவுள் நெருப்பின் வழியில் மக்களுக்குத் தோன்றினார். பத்துக் கட்டளைகளை மோயிசனுக்கு கொடுத்தார். இன்று தூய ஆவி நெருப்பு நாக்கு வழியில் புதிய உடன்படிக்கையை உருவாக்குகிறார். எனவேதான் திருத்தூதர்கள் பலவேறு மொழிகளில் பேசினாலும், மக்கள் தம்மம் மொழிகளில் பூரித்து கொள்கிறார்கள். இவ்வாறு மொழியாலும், இனத்தாலும், பலவேறு வேறுபாடுகளாலும் பிரிந்திருந்த மனித குலத்தைக் கடவுள் தூய ஆவியின் வழியாக ஒன்று சேர்க்கிறார். இந்த ஆவியானவரின் பெருவிழாவில்தான் சீடர்கள் உயிர்ப்பு பெருவிழாவின் மிகிழ்ச்சியை முழுமையாகப் பெறுகிறார்கள்.

இரண்டாம் வாசகப் பின்னணி (1கொரி. 12:3ஆ-7)

கொரிந்து நகர கிறிஸ்தவர்களுக்கு இந்தப் பலவேறு பிரச்சனைகளில் ஒன்று தூய ஆவியின் கொடைகளை பற்றியது. கொரிந்து மக்கள் தம்மிடம் ஆன்மிக கொடைகள் இருப்பதாக உணர்ந்தனர். எனவே பலவுலடிகள் அவர்களுக்குக் கொடையை சோதனைக்கு உட்படுத்துகிறார். யாராவது கிறிஸ்துவ விசவாசத் திற்கு சான்று பகரவில்லையென்றாலும், திருச்சபையில் பணிக்காக தங்களுக்கு கொடைகளை பகிரவில்லையென்றாலும் அவர்களிடம் தூய ஆவியின் கொடை இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறார். தூய ஆவியானவர் கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையை வழிநடத்தவுதற்காக அனுப்பப்பட்டிருக்கிறார். எனவே ஒவ்வொரு கிறிஸ்தவரும் பெற்றிருக்கும் ஆவியானவரின் கொடைகள் கிறிஸ்தவ சமுதூயத்த ஒன்றிய சமுதமாக மாற்ற வேண்டும்.

நற்செய்தி வாசகப் பின்னணி (யோவான் 20:19-28)

கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவும், தூய ஆவியின் வருகையும் பெருவிழாவும் நமக்குப் பேருண்மை ஒன்றை தெளிவாப்படுத்துகின்றன. “கிறிஸ்துவே உயிர்த்த ஆண்டவர்” என்பதை நமக்கு இப்பேருண்மை விளக்குகிறது. கிறிஸ்து தந்தையாய் கடவுளின் வெளிப்பாடு.

இதை “தந்தை என்னை அனுப்புவது போல நாங்களும் உங்களை அனுப்புகிறோம், தூய ஆவியைப் பெற்று கொள்ளுங்கள்” என்ற வார்த்தையின் மூலம் விளக்குகிறார். தந்தையாய் கடவுள் தூய ஆவியை அனுப்புவதன் வழியாக “இயேக தனது மகன்” என்பதை உறுதிப்படுத்துகிறார். அந்த ஆவியானவர்தான் அங்கு இயேகவின் சீடர்களை ஒன்றுபடுத்தினார். பதிய திருச்சபையாக அவர்களை உருவாக்கினார்.

மறையுரை:-

ஆவியானவர் நாளன்று சீடர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள். ஆவியானவர் என்றால் “ஜம்பதம் நாள்” என்று பொருள். ஆவியானவர் நான்கு பாஸ்கா காலம் நிறைவு அடைகிறது. பழைய ஏற்பாட்டில் பெந்தெகோஸ்தே திருவிழாவானது அறுவடையில் விளைந்த முதல் கனியைக் கடவுளுக்கு நன்றியாக ஒப்பக் கொடுத்தார்கள். இந்தத் திருவிழவில் அனைத்து இஸ்ரயேல் மக்களும் எருசலேம் கோவிலில் ஒன்றுகூடிச் சிறப்பு செய்தார்கள். சீனாய் மலையில் கடவுள் கொடுத்த பத்தாக்கட்டளைகளை இத்திருவிழா நினைவு கூறுகிறது.

இயேகவின் காலத்தில், இயேகவின் உயிர்ப்பிற்கு பின், ஏற்குறைய 120 சீடர்கள் ஒன்ராகக் கூடினார்கள். அவர்கள் செபத்திலும், இயேகவின் போதனைகளை நினைவு கூர்ந்தும், அடுத்து என்ன செய்வது என்பதை பற்றி விவாதித்தும் வந்தார்கள். பெர்தேகோஸ்து நாளில் ஆவியானவர் அவர்கள்மீது அக்னி நாக்கு வடிவில் இறங்கி வந்தார்.

அன்று தூய நாளாக இருந்ததால், தெருமுழுதும் நிறைய மக்கள் இருந்தார்கள். தூய ஆவியை பெற்ற சீடர்கள், “இயேசுவே ஆண்டவர்” என்று போதித்தார்கள். அங்கிருந்த மக்கள் ஒவ்வொருவரும் தம் மொழியில் கேட்டார்கள்.

தூய ஆவியானவர் தம் அருளினால் மக்களின் இதயங்களையும், காதுகளையும் தொட்டார். எனவே ஏற்குறைய 3000 மக்கள் கிறிஸ்தவர்களாக வாழத் திருமுழுக்கு பெற்றார்கள். இவர்கள் அனைவரும் ஆலியின் அருளினால் அறுவடையில் விளைந்த முத்தர்க்கிகள். இவ்வாறு பதிய கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்தவின் அருளால் பதுபிற்படைந்த பதிய உடன்படிக்கையின் மக்கள்.

**ஆவியானவர் நாளின் ஆவியானவர்**

ஆவியானவர் உலகம் படைக்கப்பட்டதிலிருந்து செயல்பட்டு வந்திருக்கிறார். மக்கள் அனைவரையும் வழிநடத்தி வழிநடத்தினார். மனிதர்களுக்குக் கடவுளின் திட்டத்தை வெளிப்படுத்தியும், வாழ்வின் மறைபொருளை விளக்கியும், இறைவாக்குகளை இறைவாக்கினர் வழியாக எடுத்துரைத்தும் வழிநடத்தினார். பதிய ஏற்பாட்டில் அந்த ஆவியானவர் தூய திருமுழுக்கு போவாவின சக்தி வாய்ந்த இறைவார்ததை வெளிப்படுத்தவும் காரணமாக இருந்தார்.

இயேசு திருமுழுக்கு பெறும் போதும், மக்கள் பணியில் ஈடுபடும் போதும் தீவிரமாகச் செயல்பட்டார். இயேசுகிறிஸ்து ஆவியின் வல்லமையால் முழுமையாக நிரம்பப்பட்ட போதனையும் பதுமகளையும் பரிந்திடும் இறுதியில் சிலுவையில் இறை திட்டத்தை நிறைவேற்றவும் மன உறுதியை அவருக்குக் கொடுத்தார்.

பெத்தேகோஸ்தே நாளில் ஆவியானவர் முதல்முறையாக, இயேசுவை பின்பற்றிய அனைத்து சீடர்களையும் முழுமையாக ஆட்கொண்டு, சீடர்களுக்கு இயேசுவை பற்றி அறிவிக்க மனதிடனைத் தருகிறார். இன்று தான் இயேசுவின் உடலான திருச்சபை பிறந்தது. எனவே இன்று திருச்சபையின் பிறந்தநாள். இன்று நாம் ஒவ்வொருவரும் பிறந்தநாள் வாழ்த்து செல்வத்தில் தப்பு எதுவுமில்லை. பெத்தேகோஸ்தே நாளில் சீடர்கள் தங்களை பணினை முன்முறையாக முழுமையாகப் பரிந்து கொள்கிறார்கள். பணி தெளியை பெற்றவர்கள் ஒற்றைமயின் உறைவிடமாக அமைகிறார்கள்.

1. ஆவியானவர் ஒற்றுமையின் பாலம்

பழைய ஏற்பாட்டில் தொ.நூ.11:4-இல் கடவுளுக்கு இறையாகத் தம் பெயரை நினைவாட்ட முற்பட்டபோது மொழி குழப்பம் ஏற்பட்டது. பாபேல் கோபுரம் அகங்காரத்தால் மனிதன் பிறிந்ததை சட்டிக்காட்டுகிறது. மக்கள் உலகம் முழுவதும் சிதறுக்கப்பட்டார்கள். சிதறுண்டு போன மக்கள் தூய தூய தூய ஆவியின் வரையையால் மொழிகுழப்பம் நீங்கித் தம்மம் மொழியில் புரிந்து கொள்கின்றனர் (தி.ப. 2:6-8).

தூய ஆவியில் திருமுழுக்கு பெற்ற ஒவ்வொரு கிறிஸ்தவனின் கடமையைத் தூய ஆவி தம் அருட்பொழிவால் தெளிவாக்குகின்றார். எனவே சீடர்களிடம் இரங்கிவரும் தூய ஆவியினவரின் பொழிவு நம் ஒவ்வொருவரையும் ஒற்றுமையின் பாலமாகச் செயலாற்ற அழைக்கிறது. நாம் ஒவ்வொருவரும் ஒற்றுமையின் பாலமாகச் செயல்படுகிறோமா?

2. வீரர்களை உருவாக்கிய நான்

தூய ஆவியின் வரையக்கு முன்னாள், சீடர்கள் கோழையாகவும், உயிருக்கு அச்சி பயந்து ஒழியவாக்காகவும் இருந்தனர். சமய, அரசியல் தலைவர்களுக்கும், ஏன் அரண்மனை பணிப்பெண்களுக்கும் கூடப் பயந்தனர். இயேசுகை மறுதலித்தனர். இயேசுகை காட்டி கொடுத்தனர். தப்பி ஒடினர். தூய ஆவியானவரோ கோழைகளை வீரர்களாக, பாமரார்களை மீட்பின் செய்திக்குச் சாட்சிகளாக (தி.ப. 2:24-32), உயிர் பணயம் வைத்துச் சிறை செல்ல, துணிவு பெறும் மனிதர்களாக மாற்றுகின்றார்.

அச்சத்துடன் இருந்த அவர்கள், மாடிமேல் நின்று கொண்டு, “நீங்கள் தான் இயேசுகை சிலுவையில் அறைந்து கொன்றீர்கள்” (தி.ப. 2:23) என்று முழக்கமிட்டனர். ஆவியால் நிரம்பிய ஒவ்வொருவரும் இதைப் பணியைச் செய்ய அழைக்கப்படுகின்றோம். நம்பிக்கை தர, வாழ்வு தந்து வாழ்வை மேம்படுத்த, பயம் நீக்கி வாழ்வின் பாதை காண, மாற்று மதிப்பீடுகளைத் தரச் சிறப்பு அழைப்பைத் தூய ஆவியின் பணியில் செயல்பட நாம் அனைவரும் அழைக்கப்படுகின்றோம். இன்று நாம் நம்மையே மதிப்பீடு செய்வோம். கிறிஸ்துவைப் பற்றி அறிவிக்க நாம் நம்மையே மாற்றிடுவோம். கிறிஸ்துவைப் பற்றி அறிவிக்க நாம் வீரர்களாக இருக்கின்றோமா? அந்தியை சுட்டுக்காட்ட, வன்முறையை வெறுத்து ஒதுக்க, என்ன செய்யப்போகிறோம்?

3. வாழ்வளிக்கும் ஆவியானவர்

எசக்கியேல் இறைவாக்கினர் வாபிலாகக் கடவுளின் ஆவி உலர்ந்த எலும்புகளுக்கும் உயிரளிக்க கூடியவர் என்று விளக்கப்படுகிறது (எசே 33:10). எஸ்ரா, நெகேமியா புத்தகங்களுக்கும் இறந்து போன நாட்டை, கடவுளின் ஆவி புதுவாழ்வுக்கு இட்டுச் செல்லக் கூடியது என விளக்குகின்றன. அந்த வாழ்விற்குக்கூடிய ஆவியானவர் அன்று திருத்தாதர்களின் மேலும் இறங்கி வந்தார். பயத்தினால் இறந்தவர்களை, உயிர்க்கொடுத்து உற்சாகம் மூட்டினார். புதுவாழ்வு கொடுத்தார். அந்த ஆவியானவரத்தான் நாமும் திருமுழுக்கினபோதும், உறுதிபூசுதலும் பெற்ற திடமடைகிறோம். எனவே நமது வாழ்வு ஆவிக்குரிய வாழ்வாக இருக்கிறதா? கிறிஸ்தவ மதிப்பீடுகளின்படி நாம் உயிருடன் இருக்கிறோமா?

4. ஆவியானவர் நம்மைப் பொது நன்மைக்கு அமைத்துச் செல்பவர்

பணிகளைப் பொறுத்தமட்டில் தூய ஆவியானவர் தரும் கொடைகளின் செயல்பாட்டில் வேறுபட்டிருந்தாலும் எல்லாமே இயல்பிலே ஒரே தன்மையைக் கொண்டவர்கள். ஆவியின் கொடையை பெற்ற பலர் இறைவாக்கு பணியாளராக,தொண்டாற்றும் உள்ளம் கொண்டவராக, கற்று கொடுப்பவராக, ஊக்மூட்டுபவராக, பிறருக்கு தாராளமாக வழங்கும் உயர்ந்த மனம் கொண்டவராக, தலைமை பொறுப்பேற்று செயல்படும் தலைவராக, இரக்க செயலை முகமலர்ச்சியுடன் செய்யக் கூடியவராக, செயல்பட வேண்டும் (உரோ 12: 6-8).

திருமுழுக்கு என்றும் அருட்சாதனம் வழியாகப் பெற்ற தூய ஆவியானவரில், பணிவேற்றுமை என்பது தூய ஆவியின் கொடையே, ஆனால் இயல்பில் அனைவரும் சமமானவர், எனவே எல்லோரும் அவர்வர் தூய ஆவியிடம் பெற்றுகொண்ட கொடைகளை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். பேதுரு கோர்னேலியலின் வீட்டில் பிற இனத்தவர்மீதும் தூய ஆவி பொழியப்பட்டதை கண்டபோது, தூய ஆவியின் முன் அனைவரும் சமம் என்பதை கற்றுக்கொண்டார் (தி.ப. 10:34,35).

தூய ஆவியைப் பெற்றுள்ள நாம், நமது கொடைகள் அனைத்தையும் பொது நன்மைக்காக நம்மிடம் (1கொரி. 12:7) கொடுக்கப்பட்டுள்ளது எனப் பவுல் தம் திருமுகத்தில் தெளிவுபடுத்துகிறார்.

5. வாழ்வுக்கு

நாம் கிறிஸ்துவின் ஆவியால் திருமுழுக்கு பெற்றிருந்தோமென்றால், நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவை பற்றி மற்றவர்களுக்கு அறிவிக்கிறோமா? தூய ஆவியின் வலிமையை நம்மிடம் நாம் உணர்கிறோமா? அவர் செயல்பட நம்மை அப்பணிக்கிறோமா? இன்று நாம் யாராக வாழ்கிறோமா? சீடர்களை போலவா அல்லது சீட்களின் செய்தியைக் கேட்டு மனமாறிய கூட்டத்தைப் போலவா அல்லது சீட்களின் செய்தியைக் கேட்டு எந்தவித பாதிப்பும் இல்லாமல் சென்ற மற்ற கூட்டத்தைப் போலவா? சிந்திப்போம். ஆவியானவரை பெற்ற நாம், புதுவாழ்வு பெறுகிறோம்! பொதுநன்மைக்காக நம்மையே அப்பணிப்போம்! ஒற்றுமையாகப் பாடுபடுவோம், கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் வீரர்களாக வாழ்வோம்.

பிற மறையுரைக் கருத்துக்கள்

• பெந்தகோஸ்தே பெருவிழா சீனாய் மலையில் இறைவன் கட்டளைகளைத் தந்ததன் ஆண்டு நினைவுப் பெருவிழா! அதே நாளில் தூய ஆவி சீடர் மேல் இறங்கி வருவது, நாம் 'புதிய இஸ்ரயேல்' எனப் புரிந்து கொள்ள இவ்வழி நம்மை அழைக்கிறது.

• திருச்சபையில் மூலம் தூய ஆவியானவர்! அவரே அதன் இயக்கு சக்தி. நம்மிடமிருந்து கொண்டு அவர் திருச்சபையைச் சிறப்பிக்கிறார். ஆகவே ஆவியின் கனிகளால் (கலா. 5:19-21) நாம் நிரப்பப்பட்டுபோது திருச்சபையை நாம் வலுப்படுத்துகின்றோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தூய ஆவியார்‌ பெருவிழா

திப 21-11 1 கொரி 12:3-7, 12-13 யோவா 20:19-23

இன்று தாயாம்‌ திருஅவை மீட்பின்‌ வரலாற்றில்‌ மிக முக்கியமான திருவிழாவைக்‌ கொண்டாடுகின்றது. கராய ஆவியார்‌ திருத்தூதர்கள்‌ மீதும்‌, சீடர்கள்‌ மீதும்‌ பொழியப்பட்ட உன்னதமான நிகழ்வை இன்று நினைவு கூர்கன்றோம்‌. எனவே, இன்றைய இறைவார்த்தைகள்‌ அனைத்தும்‌ தூய ஆவியாரைப்‌ பற்றியே அமைந்துள்ளன. நற்செய்தி, ஆண்டவர்‌ இயேசு தாம்‌ உயிர்த்த பிறகு சீடர்களுக்கு அமைதி என வாழ்த்தியதோடு அவர்கள்மீது ஊதி தூய ஆவியை அளித்ததை விவரிக்கின்றது. இன்று நமது சிந்தனைக்கு முதல்‌ வாசகத்தை அடிப்படையாகக்‌ கொண்டு இறைவாக்கு நமக்கு தருகின்ற செய்திகளை கண்டறிய முயல்வோம்‌.

திருத்தூதர்‌ பணி நூலின்‌ இரண்டாம்‌ அதிகாரத்தின்‌ ஒன்று முதல்‌ பதின்மூன்றாம்‌ வசனம்‌ வரையிலான பகுதியை இருபெரும்‌ பிரிவுகளாகப்‌ பிரிக்கலாம்.

1. தூய ஆவியாரின்‌ வருகை (வச.1-4).
      2. கூடியிருந்தோரின்‌ எண்ணங்கள்‌ (வச. 5-13).

1. தூய ஆவியாரின்‌ வருகை (வச.1-4)

பெந்தகோஸ்தே விழாவைப்‌ பற்றிய ஆதி குறிப்புகள்‌ லேவி 23:15-22 இல்‌ ஏற்கெனவே காணக்கிடன்றன. தூய ஆவியின்‌ வருகையைப்‌ பற்றி லூக்கா விவரிக்கின்றபோது அது நடந்த சூழலை முதலில்‌ தருகின்றார்‌. இது மக்கள்‌ பெருந்திரளாக கூடி வருகின்ற நாளில்‌ நிகழ்கின்றது. உலகின்‌ பல்வேறு திக்குகளிலிருந்து மக்கள்‌ அங்குவந்து கூடியதால்‌, தூய ஆவி இறங்கிவந்த... இந்த முக்கியமான செய்தி உலகின்‌ பல திசைகளுக்கு எளிதாய்‌ சென்றடையக்‌ கூடிய வாய்ப்பு அதிகமாக இருந்தது. இந்தப்‌ பெந்தகோஸ்தே திருவிழா இஸ்ரயேல்‌ வரலாற்றில்‌ மோசே வழியாக திருச்சட்டம்‌ வழங்கப்பட்டதையும்‌ நினைவுகூறும்‌ நானாகவும்‌ இருந்தது. எனவே, அன்று பழைய ஏற்பாட்டின்‌ இறைபயக்களாக அல்லது இறை சமூகமாக அவர்கள்‌ ஒன்றிணைக்கப்பட்டனர்‌.

புதிய ஏற்பாட்டில்‌ நிகழும்‌ இந்த ஆவியார்‌ பொழியப்பட்ட நிகழ்வில்‌ இயேசுவை நம்புவோரின்‌ இறை சமூகம்‌ ஒன்றிணைக்கப்‌ பட்டு உருவாக்கப்படுகின்றது.

தூய ஆவியாரின்‌ வருகையைப்‌ பற்றி குறிப்பிடும்போது புனித லூக்கா இரு வெளி அடையாளங்களின்‌ மூலம்‌ அதை விவரிக்கின்றார்‌.

1. கொடுங்காற்று வீசுவது போன்று ஒர்‌ இரைச்சல்‌.
      2. நெருப்புப்‌ போன்ற பிறவுற்ற நாவுகள்‌. இவை இரண்டின்‌ பின்‌ பல கருத்துக்கள்‌ உள்ளன. அவற்றை அறிய முயல்வோம்‌.

1. கொடுங்காற்றின்‌ இரைச்சல்‌

காற்று மற்றும்‌ அதன்‌ ஓசை ஆகியவை இறை செயல்‌ பாட்டின்‌ அடையாளங்களாக விவிலியத்தில்‌ பல இடங்களில்‌ காணக்கிடக்கின்றன (காண்‌. திவெ6]; திபா 135:7; நீமொ 30:4; யோவா 3:8). மேலும்‌ இறைவாக்கர்‌ உயிர்‌ மூச்சுக்கு இறைவாக்‌ குரைத்து உலர்ந்த எலும்புகளை உயிர்பெற்றெழச்‌ செய்ய பணிக்கப்படுகின்றார்‌ (எசே 37:9).

காற்றும்‌ இறை வருகைக்கு தயாரிக்கும்‌ ஒன்றாக, இறை உடனிருப்பை பறைசாற்றும்‌ ஒன்றாக பார்க்கப்படுகின்றது (காண்‌! அர 1911-12). சுழற்காற்றும்‌, புயல்காற்றும்‌ (நாகூம்‌ 1:3) அவரது வழிகளாக காணப்பட்டன. எனவே, பெருங்காற்று இறைவன்‌ பெரும்‌ ஆற்றலோடு வரலாற்றில்‌ செயல்படுவதன்‌ அடையாளமாய்‌ திகழ்னெறது.

2. நெருப்பு யோன்ற பிறவுற்ற நாவுகள்‌

பழைய, புதிய ஏற்பாடுகளில்‌ நெருப்பும்‌, தீப்பிழம்பும்‌ இறைவனின்‌ அடையாளங்களாக வெளிப்பாடுகளாக இருந்துள்‌ ளன (காண் எசே 1:4-13; எசா 6:7, லூத்‌ 3:16; 12:49). மேலும்‌ இந்த நெருப்பு பிளவுற்ற நாவுகள்‌ போல இருந்தன என லூக்கா குறிப்பிடுகின்றார்‌.

நாவு பேச்சை குறித்து காட்டுகின்றது. இங்கு இது நற்செய்தி அறிவிக்கப்படுவதை குறிக்கும்‌. எனவேதான்‌ நாவு போன்ற நெருப்பாய்‌ வந்த தூய ஆவியை பெற்றுக்கொண்ட திருத்தூதர்‌ பேதுரு உடனடியாக நற்செய்தி அறிவிக்கன்றதை காண்கின்றோம்‌ (காண்‌.திப 2:14-36).

மேலும்‌, நாவு மொழியையும்‌ குறிக்கும்‌. பாபேவின்‌ நாவு பல்வேறு மொழிகளாக பிளவுபட்டுபோனது. இங்கு தூய ஆவி யாகிய நெருப்பு நாவு பல மொழியினரையும்‌ ஒரே நற்செய்தியால்‌ இணைக்கின்றது.

மேலும்‌ பழைய ஏற்பாட்டின்‌ ஆண்டவரின்‌ ஆவி ஒருவர்‌ மீது வந்து இறங்குகின்றபோது, அதுஎதற்காக அனுப்பப்பட்டதோ அதுவரை அது அவரோடு தங்கியிருந்தது. ஆனால்‌ இங்கு திருத்தூதர்கள்‌ மற்றும்‌ சீடர்கள்‌ மீது பொழியப்பட்ட ஆவி அவர்களோடு என்றும்‌, அவர்கள்‌ வாழ்நாள்‌ முழுவதும்‌ தங்கி யிருந்தது. திருமுழுக்கு மற்றும்‌ உறுதிப்பூசுதல்‌ வழியாக நாம்‌ பெறுகின்ற தூயஆவியார்நம்மோடுளந்நாளும்‌ உடனிருக்கின்றார்‌.

1. ஆவி அருளப்பட்டதின்‌ உடனடி விளைவுகள்‌

தூய ஆவியால்‌ நிரப்பப்பட்டவர்கள்‌ தூய, விண்ணக, அருளால்‌ நிறைக்கப்பட்டனர்‌. அவர்களுக்கு துணிச்சலும்‌, நம்பிக்கையும்‌ வந்தது. துன்பங்களும்‌, பயங்களும்‌ மறைந்து போயின. தூய ஆவியின்‌ தரண்கெலால்‌ அவர்கள்‌ பேசத்‌ தொடங்னெர்‌. ஆண்டவரின்‌ புகழை பாடத்‌ தொடங்கினர்‌. 77 ஆம்‌ வசனம்‌ இன்னும்‌ குறிப்பாக அவர்களின்‌ மொழிகளில்‌ கடவுளின்‌ மாபெரும்‌ செயல்களை பேசினர்‌. அதாவது அவர்கள்‌ கடவுள்‌ மீட்பின்‌ வரலாற்றில்‌ செய்த அரும்பெரும்‌ செயல்களைப்‌ பற்றி பேசியிருக்க வேண்டம்‌ (காண்‌. இச 3412; திபா 66:3). இன்னும்‌ குறிப்பாக இறைவன்‌ இயேசு வழியாக நிகழ்த்திய வல்ல செயல்கனைப்பற்றி பேசியிருக்கலாம்‌ (காண்‌. மத்‌ 11:20-23; 13:54-58) அல்லது தூய ஆவி பொழியப்பட்ட நிகழ்வின்‌ காரணத்தையும்‌, அர்த்தத்தையும்‌ பேசியிருக்கலாம்‌.

இங்கு குறிப்பாக அவர்கள்‌ அயல்‌ மொழியில்‌ பேசியதாகக்‌ குறிப்பிடப்படுகின்றது. இது ஏதோ அங்கொன்றும்‌, இங்கொன்றுமாக அயல்மொழி வார்த்தைகளை உச்சரிப்பது அல்ல. மாறாக, முழுமையான ஒருவர்‌ தன்‌ தாய்மொழியில்‌ அழமான விஷயங்களை பேசுவதுபோல இயல்பாய்‌, சாதாரண மாம்‌ ஆவியின்‌ வழிநடத்துதலோடு பேசினர்‌. இவ்வாறு ஆவி யானவர்‌ பல்மொழி பேசிய மக்கள்‌ திரளை ஒன்றுபடுத்துகின்றார்‌.

2. கூடியிருந்தோரின்‌ எண்ணங்கள்‌ (வச 5-13)

எருசலேமில்‌ கூடியிருந்த இறைப்பற்றுள்ள யூதர்கள்‌ (இவர்கள்‌ இரு வகையினர்‌: யூதர்கள்‌, யூதம்‌ தழுவியர்கள்‌) மற்ற நாட்டு இன மக்கள்‌ இந்த நிகழ்வுக்கு தங்களின்‌ பதிலிருப்பை, தங்களின்‌ உள்ளக்‌ கிடக்கையை வெளிப்படுத்துகன்றனர்‌. அவர்‌ களின்‌ கண்ணோட்டத்தின்படி இது ஒரு புதுமை. கலிலேயர்கள்‌ இயல்பிலே கல்லாதவர்கள்‌, பிற மொழிகளை கஊற்றுத்தேறும்‌ அற்றல்‌ இல்லாதவர்கள்‌ அல்லது அந்த வசதி வாய்க்கப்படாத வர்கள்‌. இவர்கள்‌ இத்தனை இன மக்களின்‌ மொழிகளில்‌ பேசுவது என்பது, ஆண்டவரின்‌ வல்ல செயல்களை ஒவ்வொருவரும்‌ புரிந்து கொள்ளும்படி எடுத்துச்‌ சொல்வது என்பது, அவர்களுக்கு ஓர்‌ அற்புதமாக, புதுமையாகப்பட்டடது. அவர்கள்‌ குழம்பிப்‌ போனார்கள்‌. திக்குமுக்காடிப்‌ போனார்கள்‌.

இத்தகைய ஆற்றலும்‌, சக்தியும்‌ கொண்ட இதயங்களை, இனெங்களை ஒன்றாய்‌ பிணைக்கின்ற ஆவியானவர்‌ நம்‌ எல்லோருக்கும்‌ அருளப்பட்டிருக்கின்றார்‌. புனித பவுடையார்‌ கூறுவதுபோல “அருள்‌ கொடைகள்‌ பலவைகை உண்டு. ஆனால்‌ தூய ஆவியார்‌ ஒருவரே” (1 கொரி 12:4).

அகவே, இந்த ஆவி இணைக்கும்‌ ஆவி. இந்த ஆவியை பெற்றுக்கொண்ட நாம்‌ இணைக்கும்‌ கருவிகளாக, இணக்கத்திற்கு உழைக்கன்றவர்களாக இருக்கவேண்டும்‌. ஏனெனில்‌ பவுலடியார்‌ மீண்டும்‌ கூறுவாா்‌:

“நாம்‌ எல்லாரும்‌ ஒரே தூய ஆவியால்‌ ஒரே உடலாய்‌ இருக்கும்படி திருமுழுக்குப்‌ பெற்றோம்‌. அந்த ஒரே ஆவியையே பானமாகவும்‌ பெற்றோம்‌” (1 கொரி 12:13). அந்த ஆவி தருகின்ற அருள்‌ வளங்களை, கொடைகளை பொது நன்மைக்காக சிறப்பாக இதயங்களின்‌, சமூகத்தின்‌, திருஅவையின்‌ இணக்கத்திற்காக பயன்‌ படுத்துவோம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தூய ஆவியார்‌ பெருவிழா

முதல் வாசகம் திப 2:1-11

தனது மீட்புப்‌ பணியை வெற்றிகரமாக முடித்த இயேசு கிறிஸ்து, மாட்சிமையுடன்‌ விண்ணோக்கிச்‌ சென்று, தான்‌ ஏற்கனவே வாக்களித்தபடி இறை ஆற்றலாம்‌ தூய ஆவியானவரை அனுப்புகிறார்‌. ஆவியானவரின்‌ தனிப்பட்ட ஆற்றலை நிறைவாகப்‌ பெற்று, பல மொழிகளில்‌ பேசி, திருச்சபையின்‌ அகில உலகத்‌ தன்மையை திருத்தூதர்கள்‌ அன்று வெளிப்படுத்தினார்கள்‌.

நன்றி விழா

யூதர்கள்‌ மூன்று பெரும்‌ விழாக்களைக்‌ கொண்டாடினர்‌. அவை பாஸ்கா திருவிழா, பெந்தகோஸ்து விழா, கூடாரத்‌ திருவிழா. “பெந்தகோஸ்து” என்பதற்கு ஐம்பதாவது நாள்‌ என்று பொருள்‌. அதாவது செங்கடலைக்‌ கடந்து பாஸ்கா விழா முடித்த ஐம்பதாவது நாள்‌. இந்த பெந்தகோஸ்து நாளில்‌ தூய ஆவியார்‌ ஏன்‌ தன்னை வெளிப்படுத்தி திருத்தூதர்கள்‌ மீது வந்து, திருச்சபையைத்‌ துவக்கிவைக்க வேண்டும்‌?

பெந்தகோஸ்து திருநாள்‌ அறுவடை விழா என்றும்‌, முதற்கனிகள்‌ விழா என்றும்‌ அழைக்கப்பட்டது (விப 23 : 16; எண்‌ 28 : 26). அறுவடை காலத்தின்‌ இறுதியில்‌, தாங்கள்‌ பெற்ற அறுவடைக்காக நன்றியின்‌ நாளாகவே இந்நாள்‌ தொடக்கத்தில்‌ கொண்டாடப்பட்டது. அன்று யூதர்கள்‌ புதுப்‌ பலனுக்குரிய காணிக்கைகளை இறைவனுக்குப்‌ பலியாக்கினார்கள்‌ (லேலி.23:15-17). இவ்வாறு பாஸ்கா விழாவில்‌ தொடங்கிய அறுவடையும்‌ அதையொட்டிய நன்றி உணர்வும்‌ பெந்தகோஸ்து விழாவில்‌ நன்றிப்‌ பலியோடு நிறைவுற்றது. இத்தகைய ஒரு நன்றித்‌ திருநாளின்போது இறைவன்‌ தன்‌ ஆற்றலையும்‌ கொடைகளையும்‌ தந்து திருத்தூதர்களை உறுதிப்படுத்தி, திருச்சபையை நிறுவியது மிகப்‌ பொருத்தமே.

பெந்தகோஸ்து பற்றிய இன்னொரு யூத மரபும்‌ உண்டு. இறைவன்‌ தங்களோடு சீனாய்‌ மலையில்‌ உடன்படிக்கை செய்து, சட்டத்தை அளித்த நாளின்‌ ஆண்டு விழாவாகவும்‌ பெந்தகோஸ்து திருநாள்‌ கொண்டாடப்‌ பட்டது. உடன்படிக்கை செய்த நாள்‌ இஸ்ரயேல்‌ மக்கள்‌ வாழ்க்கையில்‌ ஒரு பெருநாள்‌... தங்களைக்‌ கடவுளின்‌ மக்களாக ஏற்படுத்திய நாள்‌ அது. அதே திருநாளில்‌ தூய ஆவியார்‌ இறங்கி வந்து ஒரு புதிய இனத்தை, அதாவது திருச்சபையை ஏற்படுத்தியது சாலப்‌ பொருத்தமே.

புது உலகக்‌ தோற்ற விழா

பெந்தகோஸ்து நாளில்‌ தூய ஆவியானவர்‌ வந்த நிகழ்ச்சியை லூக்கா வருணிக்கும்போது, பழைய ஏற்பாட்டில்‌ சீனாய்‌ மலையில்‌ இறைவன்‌ இறங்கி வந்து, உடன்படிக்கை செய்துகொண்ட நிகழ்ச்சியைப்‌ பின்னணியாகக்‌ கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது (விப 19:16-19). சீனாய்‌ நிகழ்ச்சியில்‌ கார்மேகம்‌, பேரிடி, மின்னல்‌, எக்காள ஒலி, நெருப்பு ஆகிய அறிகுறிகள்‌ யாவே கடவுளின்‌ பிரசன்னத்தைக்‌ குறித்தன. அதே போலத்தான்‌, தூய ஆவியார்‌ வருகையின்போது பெருங்காற்று இரைச்சலிட்டு வருகின்றது; நெருப்பு நாவுகள்‌ தோன்றுகின்றன.

சீனாய்‌ உடன்படிக்கை வழியாக இஸ்ரயேல்‌ மக்கள்‌, அரச குருத்துவத்‌ திருக்கூட்டமாகவும்‌, தூய மக்களாகவும்‌ மாறி ஒரு புது யுகத்தினுள்‌ நுழைந்தனர்‌ (விப 19:6). அதேபோல, தூய ஆவியாரின்‌ கொடையால்‌ திருச்சபை, “தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாக, அரச குருத்துவத்‌ , திருக்கூட்டமாக, பரிசுத்த குலமாக, இறைவனுக்குச்‌ சொந்தமான மக்களாக உருவாகிறது” (1 பேது 29). மீண்டும்‌ ஒரு புதுயுகம்‌ பிறக்கிறது.

தூய ஆவியாரைப்‌ பெற்ற திருத்தூதர்களும்‌ சீடர்களும்‌ அயல்‌ மொழிகளில்‌ பேசி அனைவரின்‌ கவனத்தையும்‌ கவர்ந்ததாக நாம்‌ வாசிக்கிறோம்‌ (திப 2:4-13). அயல்மொழிகளில்‌ பேசியது ஆவியாரின்‌ ஆற்றலுக்கு ஓர்‌ அடையாளமே. இறையரசு உலகமெங்கும்‌ பரவ இருக்கிறது ; நற்செய்தி நான்கு திசைகளையும்‌ எட்டும்‌ ; பல இனங்கள்‌, பல மொழிகள்‌ பேசும்‌ மக்கள்‌ அனைவருமே இறையாசில்‌ ஒன்றிப்பார்கள்‌. இயேசு கிறிஸ்து என்ற ஒரே மீட்பரின்‌ கீழ்‌ செயல்படுவார்கள்‌ என்பதற்கு ஒரு அடையாளமே அயல்மொழிகளில்‌ பேசி அனைவரும்‌ புரிந்துகொள்ளும்‌ செயல்‌.

ஆவியானவர்‌ அருளியபடி அயல்மொழிகளில்‌ பேசத்‌ தொடங்கினர்‌ (திப 2:4).

இரண்டாம் வாசகம் 12: 3-7,12-13

பவுலடியார்‌ எழுதிய திருமுகங்களுள்‌ அவர்‌ கொரிந்தியருக்கு எழுதிய முதல்‌ திருமுகம்‌ ஒரு தனித்தன்மை வாய்ந்தது. அது திருச்சபை என்ற அமைப்புப்‌ பற்றிய கருத்துரைகளைக்‌ கொண்டது. திருச்சபையில்‌ நிலவ வேண்டிய ஒற்றுமைபற்றி பவுலடியார்‌ ஆழ்ந்த இறையியலை அதில்‌ தருகிறார்‌. தான்‌ வாழ்ந்த காலத்தில்‌ குறிப்பாக, கொரிந்து சபையில்‌ எற்பட்டிருந்த பிரிவுகளே பவுலடியாருக்கு இவ்வாறு எழுதத்‌ தூண்டியிருக்கலாம்‌ (கொரி 110-16). இயேசு கிறிஸ்துவின்‌ தொடர்ச்சி யாகவே விளங்கும்‌ திருச்சபை, அது தலத்திருச்சபையானாலும்‌, பிளவுபட்டிருக்க முடியாது. ஏனெனில்‌ அதன்‌ தலையாகிய இயேசுகிறிஸ்து பிளவுபட்டவர்‌ அல்லர்‌.

வரங்கள்‌ பல, ஆவியார்‌ ஒருவரே..

தூய ஆவியாரின்‌ ஆற்றல்‌ மகத்தானது. திருச்சபை வாழ்வின்‌ அடிப்படை துய ஆவியானவரே. ஆகவேதான்‌ புனித பவுலடியார்‌ “தூய ஆவியின்‌ ஏவுதலாலன்றி “இயேசு ஆண்டவர்‌” என்று யாரும்‌ சொல்லமுடியாது” (1கொரி.12:3) என்கிறார்‌.

திருச்சபையில்‌ நாம்‌ விசுவசிக்கும்‌ ஆண்டவர்‌ ஒருவரே. அவரது ஆற்றலாகி திருச்சபையில்‌ செயல்படும்‌ தூய ஆவியானவரும்‌ ஒருவரே. ஆனால்‌ ஆவியாரின்‌ வரங்கள்‌ பல தரப்பட்டவை. பல்வேறு மக்களில்‌ பல்வேறு விதமாக ஆவியானவர்‌ தன்‌ வரங்களைப்‌ பொழிகின்றார்‌. உதாரணமாக ஞானம்‌ நிறைந்த பேச்சு ஒரு வரம்‌, அறிவாற்றல்‌ இன்னொரு வரம்‌, ஆழ்ந்த விசுவாசம்‌, நோய்களைக்‌ குணமாக்குதல்‌, இறைவாக்கு உரைத்தல்‌, பரவசப்‌ பேச்சு பேசுதல்‌, ஆவிகைளைத்‌ தேர்ந்து தெளிதல்‌ போன்ற வரங்களும்‌, தேவைக்கேற்ப தூய ஆவியாரால்‌ வெவ்வேறு நபர்களுக்கு அளிக்கப்படுகின்றன.

ஒரு குறிப்பிட்ட சபையில்‌ வெவ்வேறு வரங்கள்‌ செயல்படுவது அந்தச்‌ சபையின்‌ வளர்ச்சிக்கும்‌ முழுமைக்கும்‌ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த வரங்களை வழங்கும்‌ ஆவியானவர்‌ எவ்வாறு ஒருவராக இருக்கிறாரோ, அதேபோல இந்த வரங்களைப்‌ பெறும்‌ சபையினரும்‌ ஒருமித்துச்‌ செயல்படவேண்டும்‌. இவ்வாறு ஒருமித்த செயல்பாடே சபைக்குச்‌ சான்று தரும்‌. எந்த ஒரு தனி வரமும்‌ தனி மனிதனின்‌ பெருமைக்காக அன்று.

ஆவியாரில்‌ அனைவரும்‌ ஒன்‌றே

திருச்சபையில்‌ நிலவ வேண்டிய ஒற்றுமையைப்‌ பற்றியும்‌, ஆவியாரின்‌ வரங்கள்‌ தனிநபரின்‌ பெருமை என்ற பீடத்திற்குப்‌ பலியாகக்‌ கூடாது எனவும்‌ வலியுறுத்திய பவுலடியார்‌, இக்கருத்தை மீண்டும்‌ வலியுறுத்த ஒர்‌ உவமையைத்‌ தருகிறார்‌. “உடல்‌ ஒன்று, உறுப்புகள்‌ பல; உடலின்‌ உறுப்புகள்‌ பல வகையாயினும்‌ ஒரே உடலாய்‌ உள்ளன; கிறிஸ்துவும்‌ அவ்வாறே என்க.” (கொரி 1212).

கிறிஸ்துவின்‌ உடலே திருச்சபை. உடலில்‌ பல. உறுப்புகள்‌ உள்ளதுபோல திருச்சபையிலும்‌ பல்வேறு உறுப்புகள்‌ உள்ளன. பல உறுப்புகள்‌ சேர்ந்துதான்‌ உடல்‌ அமைகிறது. பல உறுப்பினர்கள்‌ சேர்ந்தே திருச்சபையும்‌ உருவாகிறது. அவ்வாறெனில்‌, பிளவுபட்ட திருச்சபை ஒரு முரண்பாடாகிறது. தன்‌ பூத உடலோடு தொடர்ந்து இயேசு கிறிஸ்து வாழவில்லை. ஆனால்‌ திருச்சபை என்ற உடலிலே அவர்‌ உறுதியாக தொடர்ந்து வாழ்கிறார்‌. பவுலடியார்‌ காலத்தில்‌ திருச்சபையில்‌ இருந்த பெரும்‌ இனங்கள்‌ இரண்டு : யூதர்கள்‌, பிறவினத்தார்‌ அல்லது கிரேக்கர்‌. காலாகாலமாகத்‌ தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்‌ யூதர்கள்‌; புதிதாக அழைக்கப்பட்டவர்கள்‌ பிறவினத்தார்‌. இவர்களுக்குள்‌ எந்த வேற்றுமையும்‌ இருத்தலாகாது என்று அடிக்கடி வலியுறுத்துகிறார்‌ பவுலடியார்‌ (எபே 4:4-6, கலாத்‌ 3:28; கொலோ 3:11).

“இனி யூதரென்றும்‌ கிரேக்கரென்றும்‌ இல்லை; அடிமையென்றும்‌ உரிமைக்‌ குடிமகனென்றும்‌ இல்லை; ஆணென்றும்‌ பெண்ணென்றும்‌ வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள்‌ யாவரும்‌ ஒன்றாய்‌ இருக்கிறீர்கள்‌” கலாத்‌ 3:28).

ஆம்‌; இயேசு கிறிஸ்து நமக்கு அளித்துள்ள அடிப்படை மதிப்பீடுகள்‌ ஒற்றுமை, ஏற்றத்‌ தாழ்வுகள்‌ பாராட்டாமை... குறிப்பாக, தமிழகத்‌ திருச்சபையில்‌ நிலவும்‌ சாதி வேறுபாடுகள்‌ ஒரு மகத்தான முரண்பாடு என்று சொன்னால்‌ மிகையாகாது.

வரங்கள்‌ பலவகை: ஆவியானவரோ ஒருவர்தான்‌ (1கொரி 12:4)

நற்செய்தி : யோவா 20 : 19-23

உயிர்த்த இயேசு சீடருக்குத்‌ தோன்றி ஆவியாரை அவர்களுக்கு அளித்தது இன்றைய வாசகம்‌. உயிர்த்த இயேசு அளிக்கும்‌ கொடைகளான சமாதானம்‌, பாவமன்னிப்பு ஆகியவை ஆவியாரின்‌ பிரசன்னத்தின்‌ வெளிப்பாடுகள்‌. பாவமன்னிப்புப்‌ பெற்று, சமாதான வாழ்வு வாழ இவ்வாசகம்‌ தூண்டுகிறது.

ஆவியாரின்‌ கொடை சமாதானம்‌

ஆவியானவரின்‌ பலன்களாக அமைதி, பொறுமை, சாந்தம்‌ (கலா 5 : 22) முதலியவற்றைச்‌ சுட்டுவார்‌ பவுலடியார்‌. உயிர்த்த இயேசுவும்‌ இருமுறை “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” (20 : 19-21) என்று கூறியே ஆவியாரை அளிக்கிறார்‌. இங்கு அமைதி என்ற சொல்‌ நிறைவை, முழுமையைக்‌ குறிக்கும்‌. பிறருடன்‌, கடவுளுடன்‌, நம்முடனே நமக்கிருக்க வேண்டிய உறவு நிறைவைச்‌ சுட்டும்‌. இத்தகைய நிறையுறவை இயேசு ஒருவர்தான்‌ தர முடியும்‌. எனவேதான்‌ “அமைதியை உங்களுக்கு விட்டுச்‌ செல்கிறேன்‌; என்‌ அமைதியை உங்களுக்கு அளிக்கிறேன்‌. நான்‌ உங்களுக்கு அளிக்கும்‌ அமைதி உலகம்‌ தரும்‌ அமைதி போலன்று”” (அரு.14 : 27) என்பார்‌ இயேசு. இந்த அமைதி ஆவியாரே. அவர்‌ நம்மோடிருக்கும்போது, அவர்‌ நமது “துணையாளராய்‌ ” (14 : 26) இருக்கும்போது நம்மிடம்‌ சாந்தம்‌, பொறுமை, அமைதி குடிகொள்ளும்‌. ஆவியார்‌ நமக்களிக்கும்‌ சாந்தம்‌ மயான அமைதியன்று ; மாறாக, நம்மை அன்புச்‌ செயல்களுக்குத்‌ தூண்டும்‌ உறவு ஆகும்‌. எனவே நம்மை இவ்வுறவுநிலை முழுமையும்‌ ஆட்கொள்ள ஆவியாரிடம்‌ வேண்டுவோம்‌. சமாதான நிறைவுக்காக வேண்டுவோம்‌. அப்போது நாம்‌ அமைதி பெறுவோம்‌; பிறரும்‌ இவ்‌ அமைதியை அடைய நாம்‌ ஏற்ற கருவிகளாவோம்‌. “வாரும்‌ தூய ஆவியாரே!”

ஆவியாரின்‌ கொடை பாவமன்னிப்பு

கிறிஸ்து திருச்சபைக்கு அளித்த வரங்களுள்‌ மேலானதொன்று பாவமன்னிப்பு. “மண்ணுலகில்‌ நீங்கள்‌ எதெல்லாம்‌ அவிழ்ப்பீர்களோ அதெல்லாம்‌ விண்ணுலகிலும்‌ அவிழ்க்கப்பட்டதாகவே இருக்கும்‌” (மத்‌.18:18; 16:19). இப்பாவ மன்னிப்பு கிட்டுவது தூய ஆவியாராலேதான்‌. எனவேதான்‌ இயேசு, “தூய ஆவியைப்‌ பெற்‌ றுக்கொள்ளுங்கள்‌ " (20 : 22) என்றவுடனே, “எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்‌ (20 : 23) என்பார்‌. “நீ வந்து கொலையுண்ட இவர்களுக்குள்‌ புகு. அப்பொழுது இவர்கள்‌ உயிர்‌ பெறுவர்‌" (சேக்‌ 37:9) என்று உலர்ந்த எலும்புகளுக்கு ஆண்டவர்‌ கூறிய சொற்கள்‌ நமக்கும்‌ பொருந்தி அமைகின்றனவா? பாவங்களினால்‌ காய்ந்து உலர்ந்துவிட்ட நமக்கு மன்னிப்பளித்து, உயிருள்ள அன்பு நீர்‌ நம்மில்‌ பெருக்கெடுத்து ஒட உதவுபவர்‌ ஆவியாரன்றோ? அந்த ஆவியாரிடம்‌ இவ்வுயிரளிக்கும்‌ நீரை நமக்கு நிரம்பத்‌ தரவும்‌, இதன்வழி, பாவத்தினால்‌ உலர்ந்துபோன பல்வேறு இதயங்களிலும்‌ இவ்வுயிர்‌ நீரைப்‌ பாய்ச்சும்‌ சாதனங்களாக நாம்‌ அமையவும்‌ வேண்டுவோம்‌. “கடவுளே, தூயதோர்‌ உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்‌; உறுதி தரும்‌ ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்‌” (திபா 51:10).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அருள்பொழிவும் அனுப்புதலும்

இன்று நம் தாய்த்திருஅவை தனது பிறந்த நாளாம் தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறது. பிளவுண்ட நாவுகள் இறங்கி வந்து பிளவுபட்ட மானுடத்தை அன்று இணைத்தன.

‘தூய ஆவியானவர் திருவிழா’ நம்முள் நிறைய கேள்விகளை எழுப்புகிறது: (1) இவரை எப்படி அழைப்பது? ‘தூய ஆவி’ என்று அழைப்பதா? அல்லது ‘தூய ஆவியார்,’ அல்லது ‘தூய ஆவியானவர்’ என்று அழைப்பதா? (2) ‘தந்தை’ மற்றும் ‘மகன்’ என்னும் இருவருக்குள் இருக்கும் உறவே தூய ஆவி என்றும், இந்த தூய ஆவியே மூவொரு இறைவன் என்று கற்பிக்கும் கத்தோலிக்க திருஅவை, கணவன்-மனைவி-பிள்ளை என்ற உருவகத்தையும் கொடுக்கின்றது. ஆனால், இந்த உருவகம் அடுத்த பிரச்சினைக்கு வழி வகுக்கிறது. ‘தூய ஆவியானவர்’ உறவின் கனியாகிய குழந்தை என்றால், அது அல்லது அவர் மற்ற இருவரைவிட சிறியவர் என்று ஆகிவிடுவதில்லையா? (3) ‘தந்தை உலகைப் படைத்தார்,’ ‘மகன் உலகை மீட்டார்,’ ‘தூய ஆவி உலகை வழிநடத்துகிறார்’ என்று அவர்களின் செயல்கள் அடிப்படையிலான புரிதலும் தூய ஆவியானவரைப் பற்றி நமக்கு முழுமையாகச் சொல்வதில்லை. (4) இன்று ‘பெந்தகோஸ்தெ’ என்றழைக்கப்படும் பிரிந்த சபையினர் தூய ஆவியானவரை மட்டுமே இறைவனாகக் கருதுகின்றனர். பொட்டு அணியக்கூடாது, பூ அணியக் கூடாது, வெள்ளைநிற ஆடைதான் அணிய வேண்டும் என்று சொல்லி நம் தெருக்களில் வழிநடக்கும் இவர்கள், ‘நீங்கள் அக்கினி அபிஷேகம் பெற்றுவிட்டீர்களா?’ என்று கேட்கிறார்கள். மற்றும் (5) ‘அருங்கொடையாளர்கள்’ (‘கரிஸ்மேடிக்ஸ்’) என்று தங்களையே அழைக்கும் ஒரு சிறு பகுதியினர், நம் திருஅவை மரபிற்குள் இருந்துகொண்டே ஒரு மாற்று வழிபாட்டு முறையையும் முன்வைக்கின்றனர்.

பவுல் எபேசு நகரில் எதிர்கொண்ட கேள்விதான் இங்கே நினைவிற்கு வருகிறது: ‘தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே!’ (காண். திப 19:1-10)
இந்த நாளின் பொருளைப் புரிந்து கொள்ளுமுன் ‘தூய ஆவி’ என்னும் பெயரைப் புரிந்து கொள்வோம். விவிலியத்தில் ‘தூய ஆவி’ என்ற பெயர் நான்கு நிலைகளில் கையாளப்படுகின்றது:

(1) ‘ஆண்டவரின் ஆவி.’ எபிரேயத்தில் ‘ருவா’ என்ற வார்த்தையை ‘ஆவி’ என்று மொழிபெயர்க்கிறோம். இந்த ‘ஆவி’ தான் படைப்பின் தொடக்கத்தில் நீரின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தவர் (காண். தொநூ 1:2). ஆதாமின் உடலுக்குள் ஊதப்பட்டவர். அரசர்கள் மற்றும் இறைவாக்கினர்கள்மேல் இறங்கி வந்தவர். இயேசுவின் திருமுழுக்கின்மேல் அவர்மேல் இறங்கி வந்தவரும், அவரை பாலைநிலத்திற்கு அழைத்துச் சென்றவரும், ‘ஆண்டவரின் ஆவி என்மேல் உளது’ என்று இயேசு தொழுகைக்கூடத்தில் சொன்னவரும் இவர்தான்.

(2) ‘இயேசுவின் ஆவி.’ தன் உயிர்ப்புக்குப் பின் தன் சீடர்கள் மேல் ஊதுகின்ற இயேசு, ‘தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்’ (யோவா 20:22) என்கிறார். இங்கே தூய ஆவியானவர் இயேசுவின் கொடையாக, அவரிடமிருந்து ஊற்றெடுக்கின்றார்.

(3). ‘மூவொரு இறைவனில் ஓர் ஆள்.’ தன் இறுதி இராவுணவில் சீடர்களின் பாதங்களைக் கழுவிவிட்டு அவர்களோடு தொடர்ந்து உரையாடும் இயேசு (காண். யோவா 13 -1 6) அவர்களிடம், ‘தூய ஆவியானவர்’ என்னும் துணையாளரைத் தான் அனுப்பவதாகவும், அவர் அவர்களுக்கு எல்லாவற்றையும் கற்பிப்பார், நினைவூட்டுவார் என்றும் வாக்களிக்கின்றார். இங்கே இயேசு மூவொரு இறைவனின் மூன்றாம் ஆளைச் சுட்டிக்காட்ட ‘தூய ஆவி’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார். இந்தப் புரிதலை பிற்கால திருமடல்களிலும் பார்க்கின்றோம். உதாரணத்திற்கு, கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமடலை நிறைவு செய்யும் பவுல், ‘ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!’ (2 கொரி 13:13) என எழுதுகின்றார்.

(4). தூய பவுலடியாரின் திருமடல்களுக்கு வரும்போது அங்கே புதியதொரு புரிதலைப் பார்க்கின்றோம். ‘ஊனியல்பு,’ ‘ஆவிக்குரிய இயல்பு’ என்று இருதுருவ வாழ்க்கை நிலைகளை எடுத்துச் சொல்லும் பவுல், ஒரு கட்டத்தில் ‘ஆவிக்குரிய இயல்பு’ என்பது இயல்பாகவே நம் ஒவ்வொருவரிடமும் இருப்பதுபோல எழுதி முடிக்கின்றார் (காண். கலா 5:16-26).

இந்த நான்கு புரிதல்களில் எந்தப் புரிதலை நாம் எடுத்துக் கொள்வது என்ற குழப்பத்திலிருந்து நாம் தெளிவாவதற்கே தூய ஆவியானவரின் துணை தேவைப்படுகிறது!

திருத்தூதர்கள் மேல் இன்று தூய ஆவியானவர் இறங்கி வந்த நிகழ்வை வாசிக்குமுன் முதல் ஏற்பாட்டில் தூய ஆவியானவர் எப்படி இருந்தார் என்பதைப் புரிந்து கொள்வோம்: (அ) ‘ஒருசிலருக்கு மட்டுமே தூய ஆவியானவர்.’ முதல் ஏற்பாட்டில் தூய ஆவியானவர் ஒருசிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டார். குறிப்பாக, அரசர்கள் மட்டும் இறைவாக்கினர்கள். ஆக, ஒரே அரண்மனையில் இருந்தாலும் அரசர்மேல் தூய ஆவியானவர் இருப்பார். ஆனால், அரசி மேலோ, பணிப்பெண் மேலோ இருக்கமாட்டார். இறைவாக்கினர்மேல் இருப்பாhர். ஆனால், சாதாரண மக்கள்மேல் இருக்க மாட்டார். (ஆ) ‘நிபந்தனைக்குட்பட்டவர்.’ தூய ஆவியானவர் ஒருவருக்கு கொடுக்கப்படுவதுபோல அவரிடமிருந்து திரும்பவும் எடுத்துக்கொள்ளப்படுவார். உதாரணத்திற்கு, சிம்சோன் பிறக்கும்போதே ஆண்டவரின் ஆவி அவருக்குள் இருக்கின்றார். அவரின் குழந்தைப் பருவத்தில் அவரை ஆட்டுவிக்கின்றார். ஆனால், அவரின் தலை மழிக்கப்பட்டபோது, அவரிடமிருந்து ஆவியானவர் விலகுகின்றார். அதேபோல, சவுல் அரசராக அருள்பொழிவு செய்யப்பட்டபோது அவர்மேல் தூய ஆவியானவர் இருக்கிறார். ஆனால், தாவீதின் மேல் பொறாமை கொண்டு அவரை அம்பு எய்து கொல்ல முயலும்போது, ஆண்டவரின் ஆவி அவரைவிட்டு அகல்கின்றார். (இ) ‘அவர் ஒரு ஆற்றல்.’ தூய ஆவியானவர் என்பவர் ஆற்றல், அல்லது சக்தி. அவர் ஒரு மனிதர் அல்லர்.

இந்த மூன்று புரிதல்களும் இன்றைய முதல் வாசகத்தில் புரட்டிப்போடப்படுகின்றன: (அ) ‘அனைவருக்கும் தூய ஆவி.’ திருத்தூதர்களும், அன்னை மரியாளும் தூய ஆவியானவரைப் பெறுகின்றனர். மேலும் இவர்கள் கைகளை விரிக்கும் அனைவர்மேலும் தூய ஆவியானவர் அருளப்படுகின்றார். (ஆ) ‘நிபந்தனைகள் அல்லாதவர்.’ ஒருவருக்கு ஒருமுறை வழங்கப்படும் தூய ஆவி அவரிடமிருந்து திரும்ப எடுக்கப்படுவதில்லை. அவர் தூய ஆவியின் ஆற்றல் பெற்ற வாழ்க்கையை வாழவில்லை என்றாலும், அந்த ஆவியானவர் அழியாத முத்திரையாக அவரின் உள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றார். (இ) ‘அவர் ஒரு மனிதர்.’ மூவொரு இறைவனின் மூன்றாம் நபராக இருக்கும் இவர் வெறும் ஆற்றல் அல்லது சக்தி மட்டுமல்ல. மாறாக, மூன்றாவதாக இருக்கின்ற ஒரு மனிதர். இவர் வழியாகவே நாம் கடவுளை, ‘அப்பா, தந்தையே’ என அழைக்கிறோம்.

இவ்வாறாக, முதல் ஏற்பாட்டுப் புரிதலைவிட இரண்டாம் ஏற்பாட்டுப் புரிதல் மாறுபட்டு நிற்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தின்படி (காண். திப 2:1-11) தூய ஆவியானவர் பெந்தக்கோஸ்து என்னும் நாளில் திருத்தூதர்கள்மேல் பொழியப்படுகின்றார். எதற்காக இந்த நாளை இறைவன் தெரிவு செய்ய வேண்டும்? இதற்கு ஐந்து காரணங்களைச் சொல்கின்றது வரலாறு:

  1. ‘பெந்தக்கோஸ்து’ என்னும் சொல்லுக்கு ஐம்பதாவது நாள் என்பது பொருள். இது அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதத் திருவிழா. பாஸ்கா திருவிழாவுக்குப் பின் ஐம்பதாவது நாள் இது கொண்டாடப்பட்டது (காண். லேவி 13:15). யூதர்கள் தங்கள் முதற்கனிகளை தங்கள் இல்லங்களுக்கு கொண்டு வந்த இந்த நாளில்தான் திருத்தூதர்கள் ஆவியின் கொடைகளை முதற்கனிகளாகப் பெறுகின்றனர்.
  2. மோசேக்கு சீனாய் மலையில் பத்துக் கட்டளைகள் கொடுக்கப்பட்டதை இந்த நாளில்தான் யூதர்கள் நினைவுகூர்ந்தனர். இந்தக் கட்டளைகள் நமக்கு வெளியில் இருப்பவை. ஆனால் எரேமியா புதிய கட்டளைகள் நமக்கு உள்ளேயே இருக்கும் (31:33) என முன்னுரைக்கின்றார். நம் உள் உறையும் கட்டளையாக, நம் மனச்சான்றின் ஒளியாக இங்கே இறங்கி வருகிறார் தூய ஆவியானவர்.
  3. மோசே மலைக்கு ஏறிச்சென்று கட்டளைகளைப் பெற்று வந்ததுபோல, இயேசு விண்ணேற்றம் அடைந்து தூய ஆவியானவரை அனுப்புகின்றார்.
  4. மலையிலிருந்து இறங்கி வந்த மோசே வெறும் சத்தங்களை மட்டும் எழுப்பினார் என்றும், அந்தச் சத்தங்களை அங்கே கூடியிருந்த மக்கள் 70 மொழிகளில் கேட்டனர் என்றும் சொல்கிறது தாக்குமா 26 என்னும் ரபிக்களின் விளக்கவுரை. இதேபோல, தூய ஆவியால் நிரப்பப்பட்ட திருத்தூதர்களின் பேச்சை அங்கே கூடியிருந்தவர்கள் தத்தம் மொழிகளில் கேட்கின்றனர்.
  5. தோரா அல்லது சட்டம் யூதர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. ஆனால், தூய ஆவியானவர் எல்லாருக்கும் கொடுக்கப்படுகின்றார். மேலும், இங்கே இறங்கி வரும் பிளவுண்ட நாவுகள், முதல் ஏற்பாட்டு பாபேல் நிகழ்வையும் நினைவூட்டுகின்றன (காண். தொநூ 11:1-9). தங்களுக்கென்ற ஒரே நகரம், ஒரே மொழி, ஒரே கோபுரம் எனக் கட்ட விரும்பியவர்களின் நாவுகள் பிளவுபடுகின்றன. இங்கே பிளவுபட்ட நாவுகள் எல்லாரையும் இணைக்கின்றனர். அங்கே கோபுரம் கட்டி மக்கள் கடவுளிடம் ஏறிச் செல்ல விரும்பினர். இங்கே கடவுளே தன் ஆவியானவரின் வழியாக இறங்கி வருகின்றார்.

முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் இரண்டு நிலைகளில் துணிச்சல் பெறுகின்றனர்:

அ. அவர்களின் நா கட்டவிழ்க்கப்படுகிறது. அவர்கள் வெவ்வேறான மொழிகளில் (க்ளோசலாலியா) பேசத் தொடங்குகின்றனர். மொழி அவர்களுக்கு இனி தடையல்ல.

ஆ. அவர்களின் இல்லக் கதவுகள் திறக்கப்படுகின்றன. ‘எல்லாம் முடிந்தது!’ என பயந்து கொண்டு, விரக்தியிலும், கவலையிலும் சோர்ந்திருந்தவர்கள் தங்களின் கதவுகளைத் திறந்து வெளியே வருகின்றனர். இனி யாரும் அவர்களை அடைத்து வைக்கவோ, அவர்களின் வேகத்திற்கு தடை போடவோ முடியாது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், ‘அருள்கொடைகளும் அவற்றின் பயன்பாடும்’ என்று பேசுகிற பவுல், ஆவியாரே அனைத்து அருள்கொடைகளின் ஊற்றாக இருக்கிறார் என்று குறிப்பிடுகிறார். திருஅவையின் உறுப்பினர்கள் அனைவரையும் ஒரே உடல் என முன்மொழிகிற பவுல், இந்த உடலை இயக்குகிற ஆன்மாவே தூய ஆவி எனக் குறிப்பிடுகிறார்.

நற்செய்தி வாசகத்தில், உயிர்த்த ஆண்டவர் தம் திருத்தூதர்கள்மேல் ஊதி, ‘தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்!’ என்கிறார். படைப்பின் தொடக்கத்தில் முதல் மனிதர் மேல் தம் ஆவியை ஊதுகிறார் கடவுள். இங்கே தம் சீடர்களைப் புதிய படைப்பாக்குகிறார் இயேசு.

இவ்வளவு பெரிய இறையியல் ஆராய்ச்சியை இன்றைய வாழ்வோடு நாம் எப்படி பொருத்திப் பார்ப்பது?

எளிதான உருவகத்திலிருந்து தொடங்குவோம். நாம் இருக்க, இயங்கக் காரணம் நம்மில் இருக்கும் உயிர். இந்த உயிர் உடலில் எங்கு இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. சுவாசத்தில் இருக்கிறது என்றால், இரத்தம் வெளியேறும்போது நாம் ஏன் இறக்கிறோம்? இரத்தத்தில் இருக்கிறது என்றால் இறந்தவர் ஏன் வாய் திறக்கிறார்? உயிர் எங்கு இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. ஆனால், உயிர் இல்லை என்றால் இயக்கம், வெப்பம், இருப்பு என எல்லாம் நின்றுவிடுகிறது. தூய ஆவியாரை இந்த உயிருக்கு ஒப்பிடலாம்.

நம் உடலில் உயிர் குடியிருப்பதை பல நேரங்களில் மறந்துவிடுவதுபோல, தூய ஆவியாரின் இருத்தலையும் பல நேரங்களில் மறந்துவிடுகிறோம்.

இன்றைய நாள் நமக்கு வழங்கும் அழைப்புகள் எவை?

(அ) அருள்பொழிவு

திருமுழுக்கின் வழியாகவும், உறுதிப்பூசுதல் வழியாகவும் நம்மேல் பொழியப்பட்ட ஆவியார் நமக்குத் தந்த அருள்பொழிவை நினைவில் கொண்டு வாழ்வது.

(ஆ) அனுப்புதல்

தங்களுக்குள்ளே பூட்டிக் கிடந்தவர்களை தங்களுக்கு வெளியே அனுப்புகிறார் ஆவியார். நமக்குள்ளே எழும் எண்ணங்கள் பல நேரங்களில் நம்மை சிறைப்படுத்துகின்றன. நமக்கு வெளியே நோக்கி தொடர்ந்து நகர நம்மை அழைக்கிறார் ஆவியார்.

(இ) ஆவியார்

மூவொரு இறைவனில் நாம் அடிக்கடி மறக்கிற ஓர் ஆள் தூய ஆவியார். இந்த ஆவியாரின் துணையை வேண்டி நாம் மன்றாடுவோம். இவரிடம் கேட்கும் அனைத்தும் நமக்குக் கிடைக்கின்றன. ஏனெனில், இவர் வழியாகவே நாம் கடவுளிடம் பேசுகிறோம்.

இறுதியாக, ‘பரத்தைமை, கெட்ட நடத்தை, காம வெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம்’ – இவற்றோடு, பொய், சந்தேகம், வெறுப்பு, எரிச்சல், பழிவாங்குதல், புறங்கூறுதல், கெட்ட வார்த்தை பேசுதல், திருட்டு, ஏமாற்றுதல் என கூட்டிக்கொள்ளலாம்! – போன்ற உடல் சார்ந்தவற்றை விடுத்து, இறப்பின் காரணிகளை விடுத்து, ‘அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம்’ (காண். கலா 5:22-23) ஆகியவற்றை நோக்கி நம் மனத்தை எழுப்பும்போது அங்கே அவர் அசைவாடுகின்றார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

துணிவோடு ஒற்றுமையை விதைப்போம்‌

திப 19:1-10இல்‌ சொல்லப்படும்‌ ஒரு நிகழ்வு இது. மலைப்பாங்கான பகுதி வழியாக எபேசு நகருக்குச்‌ செல்லும்‌ திருத்தூதர்‌ பவுல்‌, அங்கு திருமுழுக்குப்‌ பெற்ற கிறிஸ்தவர்களைப்‌ பார்த்து “நீங்கள்‌ தரய ஆவியைப்‌ பெற்றுக்‌ கொண்டீர்களா ?” என்று கேட்டபோது “தரய ஆவி என்று ஒன்று உண்டு என்று கூட நாங்கள்‌ கேள்விப்பட்டதில்லையே” என்று அவர்கள்‌ பதில்‌ தருகின்றார்கள்‌. இன்று கத்தோலிக்கர்கள்‌ நமக்குத்‌ தூய ஆவியாரைத்‌ தெரியும்‌. அவர்‌ மூவொரு கடவுளில்‌ மூன்றாம்‌ ஆள்‌, இயேசுவால்‌ தரப்பட்ட துணையாளர்‌ என்று தெரியும்‌. ஆனாலும்‌, தூய ஆவியாரின்‌ முக்கியத்துவத்தை நாம்‌ உணர்வதே இல்லை.

இன்றைய நாள்‌ பல முக்கிய மறையுண்மைகளை நமக்கு விளக்குகின்றது.

1. இன்று தய ஆவியார்‌ பெருவிழா -- திருதுவையின்‌ வழிபாட்டில்‌ தூய ஆவியாருக்கென்று நாம்‌ கொண்டாடுகின்ற ஒரே ஒரு திருவிழா இதுதான்‌.

2. இன்று புதிய இஸ்ரயேல்‌ மக்களாகிய நமக்குப்‌ பெந்தகோஸ்துப்‌ பெருவிழா -.- பெந்தகோஸ்து என்பது செங்கடலைக்‌ கடந்து கொண்டாடிய பாஸ்கா விழாவின்‌ 50ஆம்‌ நாள்‌. கடவுள்‌ சீனாய்‌ மலையில்‌ இறங்கி வந்து பத்துக்‌ கட்டளைகளைத்‌ கந்த நாள்‌. புதிய ஏற்பாட்டு இஸ்ரயேல்‌ மக்களாகிய நமக்குச்‌ சாவு என்ற செங்கட்லை இயேசு கடந்து உயிர்ப்பு என்கின்ற பாஸ்காவைக்‌ கொண்டாடியதன்‌ 50ஆம்‌ நாள்‌. தூய ஆவியாராம்‌ கடவுள்‌ நம்பிக்கையாளர்மீ து இறங்கி வந்த நாள்‌.

3. இன்று திருச்சபையின்‌ பிறந்த நாள்‌ -- வெறும்‌ 12 பேராக இருந்த கிறிஸ்தவச்‌ சமூகம்‌ தூய ஆவியாரால்‌ நிரப்பப்பட்ட பிறகு, அந்த சமூகத்தின்‌ தலைவராக இருந்த பேதுரு நீண்ட மறையுரை ஆற்றி 3000 பேருக்குத்‌ திருமுழுக்குக்‌ கொடுக்கிறார்‌. ஆவியாரின்‌ ஆற்றலோடு திரு அவை என்னும்‌ மாபெரும்‌ அமைப்பு உருவான நாள்‌ இது.

இன்று நாம்‌ தரய ஆவியாரால்‌ இயக்கப்படும்‌ மக்களா கூடருக்கின்றோமா ? அல்லது ஊனியல்பினால்‌ இயக்கப்படும்‌ மக்களாக இருக்கின்றோமா ? என்பதுதான்‌ இன்றைய நாள்‌ நம்முன்‌ வைக்கும்‌ கேள்வி. தூய ஆவியால்‌ ஒரு மனிதன்‌ இயக்கப்பட்டால்‌ அவரிடம்‌ இரண்டு பண்புகள்‌ இருக்கும்‌.

1. ஒற்றுமை - தொநூ 11:1-9இல்‌ தன்‌ பெயரைக்‌ குறித்துப்‌ பெருமை கொண்ட ஊனியல்பால்‌ இயக்கப்பட்ட மனிதன்‌ உயர்ந்த கோபுரம்‌ ஒன்றைத்‌ தன்‌ பெருமையின்‌ அடையாளமாகக்‌ கட்டுகின்றான்‌. கடவுள்‌ மனிதனின்‌ மொழியைக்‌ குழப்புகின்றார்‌, ஒருவர்‌ பேசுவது இன்னொருவருக்குப்‌ புரியாதபடி, மனிதன்‌ பிளவுபட்டுப்‌ போகின்றான்‌. அதே மனிதன்‌, இன்றைய முதல்‌ வாசகத்தில்‌ ஆவியாரால்‌ இயக்கப்படும்போது ஒருவரது பேச்சை எல்லாரும்‌ தத்தம்‌ மொழிகளில புரிந்து கொள்கின்றனர்‌. இங்கே ஆவியாரால்‌ ஒற்றுமை உருவாகின்றது. இன்று நாம்‌ ஒற்றுமையை உருவாக்குகின்றவர்களா ?

2. துணிவு - தூய ஆவியாரைப்‌ பெற்றுக்கொண்ட சீடர்கள்‌ பெற்ற மிகப்பெரும்‌ கொடை துணிவு. அதுவரை பூட்டிய அறைகளுக்குள்‌ முடங்கிக்‌ கிடந்தவர்கள்‌, அதன்பின்‌ எருசலேம்‌, யூதேயா, சமாரியா தொடங்கி உலகின்‌ கடையெல்லைவரை இயேசுவுக்குச்‌ சான்று பகர்கின்றார்கள்‌. இன்று நம்மிடம்‌ தவறுகளைத்‌ தட்டிக்‌ கேட்கின்ற, துன்பங்களைத்‌ தாங்கிக்கொண்டு இயேசுவுக்குச்‌ சான்று பகர்கின்ற, அநீதியை எதிர்த்து அறச்சினத்தோடு கேள்வி கேட்கின்ற துணிவு இருக்கின்றதா ?

ஒற்றுமையும்‌ துணிவும்‌ கொண்டு, ஆவியாரின்‌ விழாவைக்‌ கொண்டாடுவோம்‌. அவரால்‌ இயக்கப்படுகின்ற மக்களாக வாழ்வோம்‌

.
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு