மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

ஆண்டவரின் திருமுழுக்கு விழா
மூன்றாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 40:1-5,9-11 | தீத்து. 2:11-14,3:4-7 | லூக்கா 3: 15-16,21-22

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


இதோ என் ஊழியன்! இவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன் (எசா. 42:1) என்று எசாயா ஒலித்த குரல், இதோ என் அன்பார்ந்த மகன். இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் (மாற் 1:11) என்று இயேசுவைப் பார்த்து ஒலித்தது. இயேசுவின் திருமுழுக்கில் கடவுளின் குரலை இயேசு புரிந்து கொள்கிறார். இதனால் இறைவனின் வல்லமை, ஆற்றல், சக்தி இறங்கி வந்து இயேசுவைப் புதிய தலைவராக உலகிற்குப் பிரகடனப்படுத்தி உலகத்திற்குள் அவரை அனுப்பி வைத்தது. புதிய உலகம் படைக்க, அதாவது மக்களினங்களுக்கு நீதி வழங்க, அறத்தை நிலைநாட்ட, குருடர்களுக்குப் பார்வை அளிக்க, கட்டுண்டவர்களை விடுவிக்க, இருளில் வாழ்வோருக்கு ஒளியாகத் திகழ இயேசு புறப்படுகிறார்.

மனித வாழ்வில் இயேசு சில நேரங்களில் போதிக்கிறார். சில நேரங்களில் வாதாடுகிறார். சில நேரங்களில் அமைதி காக்கிறார். சில நேரங்களில் நழுவிச் சென்றுவிடுகிறார். இவை அனைத்திற்கும் காரணம் அவர் பெற்ற திருமுழுக்கும், மன உறுதியும்தான் காரணமாகிறது.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அகதியாகச் சென்ற ஒருவர் கடினமாக உழைத்து ஓர் அழகிய வீட்டைக் கட்டினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு உள் நாட்டுக் கலவரத்தில் ஊரே சூறையாடப்பட்டது. ஊரோ யுத்த பூமியானது. அதில் இவரது வீடும் தரைமட்டமாக்கப்பட்டது. அப்போது இவரது மனைவி அழுகிறாள். பிள்ளைகள் கதறுகிறார்கள். இவர் மட்டும் அமைதியாக இருக்கிறார். இவரது நண்பர்கள் இவருக்கு ஆறுதல் சொன்னபோது அவர் சொன்னார்: இந்தியாவிலிருந்து நான் அகதியாக வந்தபோது எதையும் நான் கொண்டு வரவில்லை. அனைத்தையும் இங்கேயே மன உறுதியுடன் உழைத்துச் சம்பாதித்தேன். அதை இப்போது இழந்துவிட்டேன். என் வீட்டை மட்டும்தான் இழந்துள்ளேன். ஆனால் என் அறிவையோ, மன உறுதியையோ, திறமையையோ இழக்கவில்லை. என் மனைவி, மக்களை இழக்கவில்லை. நான் எதை இங்கு இழந்தேனோ அதை நிச்சயம் பெறுவேன் என்ற மன உறுதி எனக்குள்ளது என்றார். ஆம்! நம் ஆண்டவர் இயேசு தந்தையே! உமது கரங்களில் எனது ஆவியை ஒப்படைக்கிறேன் (லூக். 23:46) என்று சொல்லும்வரை மன உறுதியோடு மனித குல அநீத சக்திகளோடு போராடினார். சாதனை படைக்கும் சரித்திர நாயகனாக திகழ்ந்தார். மன உறுதியோடு பசித்தவர்க்கு உணவு கொடுக்கவும், வறுமையில் உள்ளவர் வளமை பெறவும், இருளில் இருப்பவனை ஒளிக்குக் கொண்டு வரவும், இருட்டடிப்பு செய்யப்பட்ட சமூகம் விடுதலை பெறவும் தம்மையே அர்ப்பணித்துக் கொண்டார்.

நாம் பெற்ற திருமுழுக்கு அனுபவம் நீதியை நிலைநாட்டவும், மன உறுதி பெறவும், சோதனைகளை வென்று சாதனை படைக்கவும், இறையரசுப் பணியில் ஈடுபடவும் நம்மை அழைக்கிறது. இயேசுவின் பணியில் நாம் தவறினால் நாம் பெற்ற திருமுழுக்கு வெறும் அர்த்தமற்ற சடங்காகிவிடும். அது தூய ஆவியை நமக்கு அளித்து, நம்மைப் புதுப்படைப்பாக மாற்றி நம்மை புதிய உலகம் படைக்க அழைக்கும் ஓர் இறை அழைப்பு.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

என் அன்பு மகன் நீயே!

இறைத் தந்தைக்கு இயேசுவை மிகவும் பிடிக்கும் (முதல் வாசகம்). காரணம் அவரது அன்பை நூற்றுக்கு நூறு பிரதிபலித்தவர் இயேசு (இரண்டாம் வாசகம்).

நன்மையைத் தவிர வேறு எதையும் இயேசு செய்யவில்லை (இரண்டாம் வாசகம்). இதோ ஓர் அழகான கதை ! இது நூற்றுக்கு நூறு கட்டப்பட்ட கதை : ஒருமுறை புனித யோசேப்பு, மரியா, புனிதர்கள், புனிதைகள், வானதூதர்கள் எல்லாரும் இயேசுவிடம் போய், பூலோகத்திற்கு ஒருநாள் பிக்னிக் போயிட்டு வரலாம் அப்படின்னு சொன்னாங்க.

சரின்னு ஆண்டவர் டூருக்கு ஏற்பாடு செய்தாரு. மோட்சத்தை பார்த்துகிறணுமே! அதுக்கு புனித பேதுருவை காவலுக்கு வச்சிட்டுப் போயிட்டாங்க. போறதுக்கு முன்னாடி புனித பேதுருவுக்கு ஒரு கட்டளை கொடுத்திட்டு போனாரு இயேசு. நான் வரும்வரைக்கும் யாரையும் மோட்சத்துக்குள்ளே அனுமதிக்கக்கூடாது. இதுதான் கட்டளை. சரின்னாரு பேதுரு.

எல்லாரும் பூமிக்கு டூர் கிளம்பிட்டாங்க. அந்தச் சமயம் பார்த்து ஒரு டெய்லர் மோட்சத்துக்கு வந்திட்டார். தையல்காரர் மோட்சத்துக் கதவைத் தட்டினாரு. நீங்க இயேசு வரும்வரைக் காத்திருக்கணும் ! ஆண்டவரோடும், மாதாவோடும் எல்லாரும் டூர் போயிருக்காங்க, அவுங்க வந்தாத்தான் நீங்க உள்ளே போகமுடியும். ஆண்டவருடைய உத்தரவு இல்லாம யாரையும் நான் உள்ளே விடக்கூடாது. இது ஆண்டவரின் கட்டளை என்று சொன்னார் பேதுரு.

அதற்கு டெய்லர், என்னை உங்களுக்கு அடையாளம் தெரியலியா? நான் வருஷா வருஷம் குழந்தை இயேசுவுக்குச் சட்டை தச்சிக்கொடுக்கிற டெய்லர். என்னை உள்ளே விட்டிடுங்க. இயேசு ஒன்னும் சொல்லமாட்டாரு அப்படின்னாரு.

ஓ! அந்த டெய்லரா நீங்க? சரி எப்படியோ நான் இயேசுவை சமாளிச்சிக்கிறேன்; நீங்க யாருக்கும் தெரியாம இந்த மூளையிலே அமர்ந்திருங்க அப்படின்னாரு பேதுரு. மோட்சத்தின் கதவு சாத்தப்பட்டது. வழக்கம்போல பேதுருவும் தூங்கிட்டாரு. நம்ம டெய்லர் அந்த சமயம் பார்த்து மோட்சத்தைச் சுத்திப் பார்க்கலாம்னு கிளம்பிட்டாரு.

அவருக்கு ஓர் ஆசை! ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து பூமியைப் பார்த்தாரே! நாமும் ஒருமுறை இந்த மோட்சத்திலிருந்து பூலோகத்தைப் பார்ப்போமேன்னு சொல்லி எட்டிப்பார்த்தார்.

அங்கே ஒரு கடை. எதை எடுத்தாலும் பத்து ரூபா அப்படிங்கிற கடை. அந்தக் கடையிலேயிருந்து 10 ரூபா பொறுமான பொருள் ஒன்றை ஒரு பொடியன் எடுக்கிறதை டெய்லர் பார்த்திட்டார்.

டெய்லருக்கு கோபம் வந்திட்டு. அந்தச் சிறுவனைத் தண்டிக்க விரும்பினாரு. சுத்திப்பார்த்தாரு. அங்கே மேரி பிஸ்கட் பாக்கெட்டுகளை மாதா அடுக்கி வச்சிருந்தாங்க. இயேசுவுக்கு என்ன பிஸ்கட் பிடிக்கும்? மேரி பிஸ்கட் ! ஏன்னா அவுங்க அம்மா பேரு மேரிதானே . பாக்கெட்டுகளில் ஒன்றை எடுத்து திருடின பையனை அடிச்சாரு டெய்லரு. அந்த சமயம் பார்த்து நீர் போனவங்க எல்லாரும் திரும்பி வந்திட்டாங்க. இயேசுவுக்குச் சரியான பசி. மேரி பிஸ்கெட்டை எடுத்து சாப்பிடப் போனாரு. ஒரு பாக்கெட் கொறைஞ்சிருந்ததை இயேசு கண்டுபிடிச்சிட்டாரு. பேதுருவைக் கூப்பிட்டு என்ன நடந்திச்சுன்னு கேட்டார் இயேசு. பேதுரு உண்மையைச் சொல்லிட்டாரு. டெய்லர் போயி இயேசு கால்லே விழுந்து அவருக்கிட்ட தான் செஞ்சதைச் சொல்லிட்டாரு.

அப்போ ஜீஸஸ் சிரிச்சிக்கிட்டே டெய்லருகிட்டே, உலகத்திலே தப்பு செய்றவங்களையெல்லாம் தண்டிக்க நினைச்சீன்னா, இந்த மோட்சத்திலே உள்ள பொருள்கள் உனக்குப் பத்தாது அப்படின்னாரு. அந்த டெய்லர் கொஞ்சம் குறும்புக்காரரு. ஜீசஸைப் பார்த்து, தப்பு செய்றவங்களைப் பார்த்தா உங்களுக்குக் கோபமே வராதா? அப்படின்னாரு.

அதற்கு இயேசு, நான் கோபப்படுவேன். ஆனால் யாரையும் என் கோபம் காயப்படுத்தாது; நான் தண்டிக்கமாட்டேன், கண்டிப்பேன் அப்படின்னாரு. இயேசு- அவர் காயப்பட்டவர்களை நேசிப்பார் ; நேசிப்பவர்களைக் காயப்படுத்தமாட்டார்.

இதனால்தான் நேசமே உருவான , அன்பே உருவான (1 யோவா 4:8) இயேசுவை விண்ணகத் தந்தைக்கு மிகவும் பிடிக்கும் (நற்செய்தி). அவரைப் போல விண்ணகத் தந்தையின் அன்பான மகள்களாக, மகன்களாக வாழ ஆண்டவர் இயேசு நமக்கு அருள்புரிவாராக.
மேலும் அறிவோம் :

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து (குறள் : 155).

பொருள் : அயலார் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்ளாமல் அவரைத் தண்டிப்போரைச் சான்றோர் ஒரு பொருளாகக் கருதி மதிக்கமாட்டார்கள். ஆனால் அயலார் செய்திடும் தீமையைப் பொறுத்தாற்றிக் கொள்வோரை அறவோர் அருமையும் அழகும் மதிப்பும் மிக்க பொன்னைப் போன்று போற்றிப் பேணிக்கொள்வர்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இக்காலத்தில் பிள்ளைகள் பொதுவாகப் பெற்றோர்களுக்குக் கீழ்ப்படிவதில்லை . ஓர் அம்மா தம் மகனிடம், "நான் உன்னைப் பெத்த அம்மாடா; என் பேச்சைக் கேளுடா" என்றதற்கு அவன், 'என்னைப் பெத்ததினால்தான் நீ 'அம்மா', இல்லேன்னா வெறும் 'சும்மா', பேசாம போமா' என்றான்.

ஒருவருக்கு ஐந்து ஆண்பிள்ளைகள் இருந்தும் அவரை யார் கேட்டாலும் அவர் தமக்கு ஒரே மகன்தான் என்று பதில் சொல்வார். ஏனெனில் அவருடைய ஐந்து மகன்களில் ஒருமகன் மட்டும்தான் அவருடைய பேச்சைக் கேட்டு நடந்தான்.

உலக மக்கள் அனைவருமே கடவுளுடைய பிள்ளைகள் என்றாலும், கடவுளால் சிறப்பாக அன்பு செய்யப்பட்டு அவரால் தேர்ந்துகொள்ளப்பட்ட இஸ்ரயேல் "இறைமக்கள்" என்று அழைக்கப் பட்டனர். ஆனால், அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியா மல், அவருடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறி, திமிர் பிடித்தவர் களாகவும் வணங்காக் கழுத்துடையவர்களாகவும் வாழ்ந்தனர்.

இஸ்ரயேல் மக்களைப் பற்றி இறைவன் இறைவாக்கினர் எசாயா வாயிலாகக் கூறியுள்ளது நமது நெஞ்சத்தைக் கனக்கச் செய்கிறது. “விண்வெளியே கேள்; மண்ணுலகே செவிகொடு ... பிள்ளைகளைப் பேணி வளர்த்தேன். அவர்களே! எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள்.., கேடுகெட்ட மக்கள் இவர்கள், ஆண்டவரைப் புறக்கணித்து விட்டார்கள்” (எசா 1:2-4).

இந்நிலையில், "என் கடவுளே உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகிறேன்" (எபி 10:7) என்று கூறிக்கொண்டே இவ்வுலகுக்கு வந்த கிறிஸ்து ஒருவரே கடவுளுக்கு உகந்த மகன். எனவேதான் கிறிஸ்து திருமுழுக்குப் பெற்றபோது, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" (லூக் 3:21) என்று கடவுள் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்ந்தார்.

கிறிஸ்து கடவுளுக்கு உகந்த மகன். ஏனெனில் அவர் 'கடவுளின் துன்புறும் ஊழியன்.' உண்மையில், கிறிஸ்து திருமுழுக்குப் பெற்றபோது, இறைவாக்கினர் எசாயா கடவுளின் துன்புறும் ஊழியன் குறித்து எழுதியுள்ள நான்கு கவிதைகளையும் நிறைவு செய்ய முன்வந்தார். அக்கவிதைகளில் ஒன்றுதான் இன்றைய முதல் வாசம். துன்புறும் ஊழியனின் சிறப்புப் பண்புகள் வருமாறு:
1. அவர்மீது கடவுளுடைய ஆவி தங்கும் (எசா 42:1).
2. நாள்தோறும் அவர் கடவுளுக்குச் செவிமடுப்பார் (எசா 50:4-5).
3, மனிதருடைய பாவங்களுக்குக் கழுவாயாக அவர் தம்மையே பலியாக ஒப்புக்கொடுப்பார், அதன் விளைவாகக் கடவுள் அவரை மகிமைப்படுத்துவார் (எசா 53:4-7).

கிறிஸ்து யோர்தான் ஆற்றில் பெற்றத் திருமுழுக்கு அவர் கல்வாரியில் சிலுவையில் பெறவிருந்த திருமுழுக்குக்கு முன் அடையாளமாகத் திகழ்ந்தது. "நான் பெறவேண்டிய திருமுழுக்கு ஒன்று உண்டு. அது நிறைவேறும் அளவும் நான் மிகவும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன்" (லூக் 12:50) என்று கிறிஸ்து கூறியது மேலே கூறப்பட்டுள்ள உண்மையை உறுதி செய்கிறது. கிறிஸ்துவைப்பற்றி எபிரேயர் திருமுகம் கூறுவது நமது ஆழ்தியானத்துக்கு உரியது. "அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்; அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்” (எபி5:8-9).

நாம் கிறிஸ்துவின் மகிமையில் பங்குபெற வேண்டு மென்றால் அவருடன் துன்புறுவது இன்றியமையாத ஒன்றாகும். "நாம் கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும். அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்குபெறுவோம்" (உரோ 8:17).

திருமுழுக்கு வாயிலாக நாம் கடவுளின் பிள்ளைகளாகும் பேறுபெற்றுள்ளோம், கடவுள் நமக்கு அச்சத்தின் மனப்பான்மையை அருளாமல், கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனநிலையைக் கொடுத்துள்ளார். எனவே அவரை அப்பா, தந்தையே என அழைக்கிறோம் (உரோ 8:15). நாம் பெயரளவில் மட்டுமல்ல, உண்மையிலேயே கடவுளுடைய மக்கள் (1 யோவா 3:1), எனவே, நாம் எங்கும், எதற்கும் அஞ்சக்கூடாது. உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படக்கூடாது.

மனநோயாளி ஒருவர் தன்னை எலியென்று நினைத்து, பூனையைக் கண்டால் பயந்து ஓடுவார், மனநல மருத்துவர் அவரிடம், "நீ மனிதன், எலி அல்ல" என்றார், அதற்கு அவர், "டாக்டர்! நான் மனிதன். எலி அல்ல என்பது உங்களுக்குத் தெரியும்; எனக்குத் தெரியும்; ஆனால் அது அந்தப் பூனைக்குத் தெரியுமா?" என்று கேட்டு அழுதார்.

நாம் கடவுளின் மக்கள் என்பது பேய்க்குத் தெரியுமா? என்றுக் கேட்டு நம்மில் பலர் அஞ்சி அஞ்சி சாகிறோம். இது தேவையா? கிறிஸ்து அலகையை இவ்வுலகின் தலைவன் என்று குறிப்பிட்டு, "இவ்வுலகின் தலைவன் வந்து கொண்டிருக்கிறான், அவனுக்கு என்மேல் அதிகாரம் இல்லை " (யோவா 14:31) என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

எவ்வாறு அலகைக்குக் கிறிஸ்துவின்மேல் அதிகாரம் இல்லையோ, அவ்வாறே அதற்கு நம்மீதும் அதிகாரம் இல்லை. நாம் இடம் கொடுக்கவில்லையென்றால், அலகை நமக்குள் நழைய முடியாது. "அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்போது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும். கடவுளை அணுகிச் செல்லுங்கள். அவரும் உங்களை அணுகி வருவார்” (யாக்கோபு 4:7).

ஆண்டவரின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடும் இன்று நமது திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்துக் கொள்வோம். ஒருமுறை திருமுழுக்குப் பெற்றவர்கள் மீண்டும் திருமுழுக்குப் பெறத் தேவையில்லை, திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்துக் கொண்டால் போதும். தீமைக்குக் காரணமாகிய அலகையையும் அதன் செயல்பாடுகளையும் விட்டுவிடுவோம். குறிப்பாக, காமம், குடிவெறி, களியாட்டம், போட்டி, பொறாமை, கட்சிமனப்பான்மை, ஜாதிவெறி, மொழிவெறி ஆகியவற்றைத் தூக்கி எறிவோம். கடவுளையும் திருச்சபையையும் நம்பி, புதுப்பிறப்படைந்து புதுவாழ்வு வாழ்வோம். " நாம் நெஞ்சில் நிறுத்த வேண்டியது: “ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது, அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ ” (2 கொரி 5:17).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

திருமுழுக்கு நீரின்றி அமையாது வாழ்வு

“திருஅவையிடம்‌ தண்ணீரும்‌ கண்ணீரும்‌ உள்ளன. திருமுழுக்கின்‌ தண்ணீர்‌. மனமாற்றத்தின்‌ கண்ணீர்‌” - இது கத்தோலிக்கத்‌ திருஅவையில்‌ பாவங்களைக்‌ கழுவிப்‌ போக்கும்‌ இரு அருள்‌ அடையாளங்களைப்‌ பற்றி தூய அம்புரோசியார்‌ சொன்னது.

பிறப்பு வழிப்‌ பாவத்தைப்‌ போக்கத்‌ திருமுழுக்கு.
பலவீனத்தால்‌ செய்யும்‌ பாவம்‌ தீர ஒப்புரவு.
நீரின்றி அமையாது உலகு (குறள்‌). திருமுழுக்கு நீரின்றி அமையாது கிறிஸ்தவ வாழ்வு. நீர்‌ - அது உயிர்கள்‌ தோன்றுமிடம்‌, வாழுமிடம்‌. “தொடக்கத்தில்‌ கடவுள்‌ விண்ணுலகையும்‌ மண்ணுலகையும்‌ படைத்தபோது ... நீர்த்திரளின்‌ மேல்‌ கடவுளின்‌ ஆவி அசைந்தாடிக்‌ கொண்டிருந்தது” (தொ.நூ. 1:1-2). உயிர்‌ அளிப்பவரல்லவா தூய ஆவி!

திருமுழுக்கின்‌ முன்னடையாளங்களாக நீரோடு தொடர்புடைய நிகழ்வுகள்‌ இரண்டு, பழைய ஏற்பாட்டில்‌ காணக்கிடக்கின்றன. 1. நோவா காலத்துப்‌ பெருவெள்ளம்‌ (1 பேதுரு 3:20,21) 2. விடுதலைப்‌ பயணத்தில்‌ செங்கடல்‌ (1 கொரி. 10:1-2)

இரண்டு நிகழ்வுகளுமே தீமையை அழிப்பது. நன்மையைக்‌ காப்பது. நோவா காலத்துப்‌ பெருவெள்ளத்தோடு ஒப்பிட்டு. திருமுழுக்கால்‌ நாம்‌ காப்பாற்றப்படுகிறோம்‌ என்றும்‌ இது கிறிஸ்துவின்‌ - உயிர்த்தெழுதல்‌ வழியாக நமக்கு மீட்பளிக்கிறது என்றும்‌ பேதுரு விளக்குகிறார்‌. செங்கடலைக்‌ கடந்து சென்றது இஸ்ரயேல்‌ மக்களை அடிமை வாழ்வினின்று விடுவித்தது. அவர்கள்‌ மோசேயோடு இணைந்திருக்கும்படி மேகத்தாலும்‌ கடலாலும்‌ திருமுழுக்கு பெற்றார்கள்‌ என்கிறார்‌ பவுல்‌.

யோர்தான்‌ ஆற்றுநீர்‌ நாமானுக்கு பாவத்திலிருந்தும்‌ நோயிலிருந்தும்‌ விடுதலை அளித்தது. பாவமே நோய்களுக்குக்‌ காரணம்‌ என்பது யூதர்களின்‌ பார்வை. நாமானின்‌ நோய்‌ நீங்கிற்று என்றால்‌ அவரது பாவம்‌ நீங்கியது என்றுதானே பொருள்‌!

அதே யோர்தானில்‌ இயேசு திருமுழுக்குப்‌ பெறுகிறார்‌. பாவ மன்னிப்புக்காக யூதர்களிடையே இருந்த துப்புரவுச்‌ சடங்கு திருமுழுக்கு. புற இனத்தாரை யூத சமயத்தில்‌ இணைக்கும்‌ சின்னமாகவும்‌ அது எண்ணப்பட்டது. செங்கடலையும்‌ யோர்தான்‌ ஆற்றையும்‌ கடந்து வாக்களித்த நாட்டில்‌ “நுழையாத எந்தப்‌ புற இனத்தவரும்‌ யூத சமயத்தைத்‌ தழுவுமுன்‌ திருமுழுக்குப்‌ பெற வேண்டும்‌. இயேசு பாவியும்‌ அல்ல (யோ. 8:46) பிற இனத்தாரும்‌ அல்ல. பின்‌ ஏன்‌ அவருக்குத்‌ திருமுழுக்கு? எனவேதான்‌ இயேசுவின்‌ தூய்மையைப்‌ பறைசாற்றும்‌ வகையில்‌ திருமுழுக்கு யோவான்‌ கேட்பார்‌: “நான்தான்‌ உம்மிடம்‌ திருமுழுக்குப்‌ பெற வேண்டியவன்‌; நீரா என்னிடம்‌ வருகிறீர்‌?” (மத்‌. 3:14).

இயேசுவின்‌ பதில்‌ “இப்பொழுது விட்டுவிடும்‌”. இது பொருத்தமில்லாததுதான்‌. ஆனால்‌ என்னுடைய வருகையின்‌ நோக்கத்திற்கு முற்றிலும்‌ பொருந்தியதே. தனிப்பட்ட நபராக அல்ல, பாவமற்றவராயினும்‌, பாவத்துக்கு ஆளான மனித குலத்தின்‌ பதிலாளாய்த்‌ தன்னைக்‌ கருதினார்‌. மனம்‌ வருந்த, பாவம்‌ எதுவும்‌ அவரிடம்‌ இல்லை. கழுவப்படக்‌ கறையும்‌ இல்லை. அது தந்தைக்கு ஏற்புடையது (மத்‌. 3:15). “நாம்‌ கிறிஸ்து வழியாகத்‌ தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள்‌ பாவம்‌ அறியாத அவரைப்‌ பாவநிலை ஏற்கச்‌ செய்தார்‌” (2 கொரி. 5:21).

இயேசு பெற வேண்டியது யோர்தான்‌ திருமுழுக்கு அல்ல. அது கல்வாரித்‌ திருமுழுக்கு. “நான்‌ பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும்‌ நான்‌ மிகவும்‌ மனநெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறேன்‌” (லூக்‌. 12:50). இயேசுவைப்‌ பொருத்தவரை அவரது இறப்பே அவருக்குத்‌ திருமுழுக்கு.

யோர்தானில்‌ இயேசு பாவிகளுக்கு ஒப்பானவராக இருந்தார்‌. கல்வாரியிலோ பாவிகளுடைய பாவங்களின்‌ முழுச்சுமையையும்‌ தாங்கினார்‌. யோர்தான்‌ திருமுழுக்கில்‌ பாவிகளோடு பாவியாகத்‌ தன்னை ஒன்றுபடுத்திக்‌ கொண்ட இயேசு, கல்வாரி இறப்பில்‌ பாவிகளோடே இறக்கின்றார் - வலதுபுறம்‌ ஒரு கள்வனும்‌ இடதுபுறம்‌ ஒரு கள்வனுமாக. பாவிகளின்‌ மத்தியில்‌ ஒரு பாவியாக உயிர்‌ விடுகின்றார்‌.

“இவரே என்‌ அன்பார்ந்த மகன்‌” (மத்‌. 3:17) என்று வானகத்‌ தந்தையால்‌ அறிவிக்கப்பட்ட இயேசு, கல்வாரி இறப்பில்‌ “இவரே கடவுளின்‌ மகன்‌” (மத்‌. 27:54) என்று நூற்றுவர்‌ தலைவனால்‌ அறிக்கையிடப்படுகிறார்‌. இயேசுவின்‌ பணி வாழ்வு அனைத்தும்‌ ஒரு திருமுழுக்கிலிருந்து மற்றொரு திருமழுக்கிற்கு அவரை கட்டுச்‌ சென்ற ஒரு பயண வாழ்வு.

நீரில்‌ மூழ்கி எழுவது கிறிஸ்துவோடு இறந்து புதைக்கப்பட்டு உயிர்த்துப்‌ புதுவாழ்வுக்குச்‌ செல்லும்‌ அனுபவத்தின்‌ அடையாளம்‌. “திருமுழுக்கினால்‌ கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும்‌ நாம்‌ அனைவரும்‌ அவருடைய சாவிலும்‌ அவரோடு இணைந்திருக்கிறோம்‌ என்பது உங்களுக்குத்‌ தெரியாதா? இறந்த கிறிஸ்துவை மாட்சிமிகு தந்‌தை உயிர்த்தெழச்‌ செய்தார்‌. அவ்வாறு நாமும்‌ புதுவாழ்வு பெற்றவர்களாய்‌ வாழும்படி திருமுழுக்கின்‌ வழியாய்‌ அவரோடு அடக்கம்‌ செய்யப்பட்டுள்ளோம்‌” (உரோமை. 6:3-4) (மேலும்‌ காண்க : கொலோ 2:12). முக்கியத்துவம்‌ அனுபவத்திற்குத்‌ தானே தவிர அடையாளத்துக்கு அல்ல.

தி.ப, 8:19-24இல்‌ காணும்‌ மந்திரவாதி சீமோனைப்‌ பற்றி எருசலேம்‌ ஆயர்‌ சிரில்‌ கூறுகிறார்‌: “மந்திரவாதி சீமோன்‌ தண்ணீருக்குள்‌ போனான்‌. ஆனால்‌ அவன்‌ கிறிஸ்துவோடு சாகவில்லை. தண்ணீரிலிருந்து வெளியே வந்தான்‌. ஆனால்‌ அவன்‌ கிறிஸ்துவோடு உயிர்க்கவில்லை”. எனவே திருமுழுக்கு என்பது தண்ணீருக்குள்‌ ழுழ்குவதும்‌ தண்ணீரிலிருந்து வெளியே வருவதும்‌ அல்ல. அது பாஸ்கா மறைபொருளில்‌ பங்கேற்பது. கிறிஸ்துவோடு பாவத்துக்கு இறப்பது. பழைய இயல்யைய்‌ புதைப்பது. புது வாழ்வுக்கு, அருள்‌ வாழ்வுக்கு இயேசுவோடு உயிர்ப்பு.

திருமுழுக்கு ஓர்‌ உன்னத இறையனுபவம்‌. தலையில்‌ தண்ணீர்‌ ஊற்றினாலும்‌ சரி, தண்ணீரில்‌ மூழ்கி நீச்சலடித்தாலும்‌ சரி. எல்லாமே அடையாளங்கள்தாம்‌. அருள்‌ அடையாளங்கள்‌ குறிக்கும்‌ அருள்‌ நிலையே முக்கியம்‌. திருமுழுக்கினால்‌ நாம்‌ 1: கடவுளின்‌ பிள்ளைகளாகிறோம்‌. 2. தூய ஆவியின்‌ ஆலயமாகிறோம்‌. 3. திருஅவையின்‌ உரிமையுள்ள உறுப்பினராகிறோம்‌.

வீணான வேண்டாத சர்ச்சைகளில்‌ மூழ்கி திருமுழுக்குச்‌ சிந்தனையை, அதன்‌ அழைப்பை, அர்ப்பண வாழ்வை இழந்து கொண்டிருக்கிறோம்‌. நெருப்புத்‌ திருமுழுக்குப்‌ பற்றி மத்‌. 3:11 பேசுகிறது. ஆவிக்காரர்கள்‌ யாரேனும்‌ அதனை முயன்று பார்த்து நெருப்பை அள்ளித்‌ தங்கள்‌ தலையில்‌ கொட்டிக்‌ கொள்ள முனைவார்களா? நீர்‌. நெருப்பு என்பதெல்லாம்‌ வெறும்‌ அடையாளங்களே; அடையாளத்துக்கு அழுத்தம்‌ கொடுத்து அனுபவ உண்மையைக்‌ குழிதோண்டிப்‌ புதைப்பதா?

பாவத்தை மன்னிப்பது நீரா? அல்ல. நீரில்‌ அசைவாடும்‌ தூய ஆவியாரே! திருமுழுக்கில்‌ செயல்படுவது நீரல்ல. ஆவியாரே. ஒரு துளி நீரிலும்‌ ஆவியார்‌ செயல்படுகிறார்‌. ஒரு கடல்‌ நீரிலும்‌ செயல்படுகிறார்‌. எனவே முழுக்குத்‌ திருமுழுக்குப்‌ பெறாதவர்களுக்கு மீட்பு இல்லை என்பது விவிலிய அறியாமை.

தண்ணீர்த்‌ திருமுழுக்கு இயேசுவை இரத்தத் திருமுழுக்குக்கு இட்டுச்‌ செல்கிறது. தன்‌ சீடர்களையும்‌ அந்த இரத்தத்‌ திருமுழுக்குக்கு அழைக்கிறார்‌ “நீங்கள்‌ என்ன கேட்கிறீர்கள்‌ என உங்களுக்குத்‌ தெரியவில்லை. நான்‌ குடிக்கும்‌ துன்பக்‌ கிண்ணத்தில்‌ உங்களால்‌ குடிக்க இயலுமா? நான்‌ பெறும்‌ திருமுழுக்கை உங்களால்‌ பெற இயலுமா?” (மார்க்‌. 10:38). இறையாட்சி விழுமியங்களுக்காக இரத்தம்‌ சிந்துதலையே உயர்ந்த திருமுழுக்காகக்‌ கருதுகிறார்‌ இயேசு: இந்த இரத்தத்‌ திருமுழுக்குக்குத்‌ தயாராக இல்லையென்றால்‌ தண்ணீர்த்‌ திருமுழுக்குக்‌ கூட எந்த அளவுக்கும்‌ பொருள்‌ உள்ளதாக இருக்கும்‌?

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஆண்டவரின் திருமுழுக்கு

மனித குலத்தை வேதனையிலும், வெட்கத்திலும் தலைகுனிய வைக்கும் வரலாற்றுக் காயங்களில் ஒன்று, இரண்டாம் உலகப் போர். அதிலும் குறிப்பாக, அந்தப் போரின்போது உருவாக்கப்பட்ட நாத்சி வதை முகாம்கள். அந்த வதை முகாம்களிலிருந்து உயிரோடு வெளியேறியவர்கள் வெகு சிலரே. அவ்விதம் வெளியேறியவர்களிலும் பலர், உடலாலும், உள்ளத்தாலும் நொறுங்கிப் போய், தங்கள் மீதி நாட்களை நடைப்பிணங்களாக வாழ்ந்தனர். மிகச் சிலரே, அந்த வதை முகாம்களிலிருந்து மனிதர்களாக வெளியேறினர். உடலளவில் நொறுங்கிப் போயிருந்தாலும், உள்ளத்தளவில் போதுமான நலத்துடன், நம்பிக்கையுடன் தங்கள் வாழ்வைத் தொடர்ந்தனர். அவர்களில் ஒருவர், விக்டர் பிராங்கல் (Viktor E.Frankl) என்ற ஆஸ்திரிய நாட்டு மேதை.

புகழ்பெற்ற நரம்பியல் நிபுணராகவும், மனநல மருத்துவராகவும் வாழ்ந்த விக்டர் பிராங்கல் அவர்கள், தன் வதைமுகாம் அனுபவங்களையும், அவற்றிலிருந்து தான் வெற்றிகரமாக வெளிவர தனக்கு உதவியாக இருந்த உண்மைகளையும் தொகுத்து, Man's Search for Meaning, அதாவது, "அர்த்தத்திற்காக மனிதனின் தேடல்" என்ற புகழ்பெற்ற நூலை எழுதினார். (Trotzdem Ja Zum Leben Sagen: Ein Psychologe erlebt das Konzentrationslager) - Nevertheless, Say "Yes" to Life: A Psychologist Experiences the Concentration Camp, அதாவது, "எப்படியிருந்தாலும், வாழ்வுக்கு 'ஆம்' என்று சொல்: வதை முகாமில் ஒரு மனநல நிபுணரின் அனுபவங்கள்" என்பதே, அவர் 1946ம் ஆண்டு வெளியிட்ட இந்த நூலுக்கு முதலில் கொடுக்கப்பட்ட தலைப்பு.

வதை முகாமில், தன்னுடன் இருந்தவர்களில் பலர், நச்சுவாயுச் சூளைகளில் உயிரிழந்தனர். இன்னும் பலர், அந்த வாயுச் சூளைகளுக்குச் செல்வதற்கு முன்னரே, உள்ளத்தால் இறந்து, நடைப்பிணங்களாக வலம் வந்தனர் என்று விக்டர் அவர்கள் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்த நடைப்பிணங்கள் நடுவில், தான் உயிரோடும், ஓரளவு உள்ள நலத்தோடும் வெளியேறியதற்கு இரு காரணங்கள் உண்டு என்று அவர் கூறியுள்ளார்.

அவ்விரு காரணங்களில் ஒன்று, தன் மனைவி, தன் மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கிறார் என்ற உணர்வு. அடுத்தது, தான் எழுதி முடித்திருந்த ஒரு புதிய நூலின் கைப்பிரதியை, தன் கண்முன்னே நாத்சி படையினர் அழித்துவிட்டதால், அந்நூலை மீண்டும் எப்படியாவது எழுதி முடிக்க வேண்டும் என்று தனக்குள் எழுந்த ஆவல், தன்னை வாழவைத்த இரண்டாவது காரணம் என்று விக்டர் அவர்கள் கூறியுள்ளார். அந்த வதை முகாமில், ஒவ்வொரு நாளும், விக்டர் பிராங்கல் அவர்கள், கற்பனையில் தன் அன்பு மனைவியோடு பேசி வந்தார். அந்த முகாமில் ஆங்காங்கே கிடைத்த காகிதத் துண்டுகளில், தான் எழுதப்போகும் நூலுக்குத் தேவையான குறிப்புக்களை எழுதி வந்தார்.

சூழ்நிலை எவ்வளவுதான் கொடூரமாக இருந்தாலும், இரு காரணிகள், மனிதர்களை வாழவைக்கும் சக்தி கொண்டவை. ஒன்று, தன்மீது அன்புகூரும் மனிதர்கள் உள்ளனர் என்ற உள்ளுணர்வு. இரண்டு, ஒன்றை செய்து முடிக்கவேண்டும் என்ற குறிக்கோள். இவை இரண்டும், விக்டர் பிராங்கல் அவர்களைப் போல பல்லாயிரம் உன்னத மனிதரை வாழ வைத்துள்ளன; அவர்கள் வழியே, இவ்வுலகையும் வாழ வைத்துள்ளன.

அன்புகூரும் மனிதர்கள் உள்ளனர் என்ற உள்ளுணர்வைப்பற்றி பேசும்போது, கருவில் தோன்றியது முதல், நம் ஒவ்வொருவரையும் தொடரும் அன்பு, பெற்றோரின் அன்பு என்பது முதலில் நம் நினைவில் பதிகிறது. தந்தை-மகன் உன்னத உறவைக் கூறும் பல கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். அவற்றில் என் மனதில் ஆழமாய் பதிந்த ஒரு கதை இது. ‘டீன்ஏஜ்’ இளைஞன் அலெக்ஸ், தன் தந்தையுடன் வாழ்ந்து வந்தான். இருவரிடையிலும் ஆழமான, அழகான உறவு இருந்தது. அலெக்ஸ், கால்பந்தாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்டவன். ஆனால், அவன் உடல், அந்த விளையாட்டிற்கு ஏற்றதுபோல் வலுமிக்கதாய் இல்லை. இருந்தாலும் அவனுக்கிருந்த ஆர்வத்தைக் கண்டு, பயிற்சியாளர், கல்லூரி கால்பந்தாட்டக் குழுவில் ஓர் இடம் கொடுத்தார். பல போட்டிகளில் விளையாடும் வாய்ப்புக்கள் அலெக்ஸுக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும், அவன் ஓரத்திலிருந்து, தன் குழுவினரை உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பான். தன் மகன் அலெக்ஸ் களமிறங்கி விளையாடவில்லையெனினும், அவனது குழு விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் அவன் தந்தை வருவார். உற்சாகமாய் கைதட்டி இரசிப்பார். ஈராண்டுகள் இப்படியே உருண்டோடின. முக்கியமான ஒரு போட்டி நெருங்கி வந்ததால், குழுவினர் அனைவரும் வெறியுடன் பயிற்சி பெற்று வந்தனர், அலெக்ஸையும் சேர்த்து. போட்டிக்கு முந்தின நாள், அலெக்ஸின் தந்தை இறந்துவிட்ட செய்தி வந்தது. பயிற்சியாளர், அலெக்ஸை அணைத்து, ஆறுதல் சொல்லி, வீட்டுக்கு அனுப்பிவைத்தார். போட்டியைப்பற்றிக் கவலைப்பட வேண்டாமென்று சொல்லி அனுப்பிவைத்தார்.

அடுத்த நாள், முக்கியமான அந்த போட்டியில், அலெக்ஸின் குழு சரிவர விளையாடவில்லை. எனவே, தோற்கும் நிலையில் இருந்தனர். விளையாட்டின் பாதி நேர இடைவேளையின்போது அலெக்ஸ் திரும்பிவருவதை, குழுவினர் பார்த்தனர். அதுவும், குழுவின் சீருடை அணிந்து, விளையாட வந்திருந்தான் அவன். கால்பந்தாட்டத்தின் மீது அவனுக்கு இருந்த ஆர்வம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனாலும், அதற்காக இப்படியா? தந்தையின் அடக்கம் முடிந்தும் முடியாமல், அவன் விளையாட்டுத்திடலுக்கு வந்தது, அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. அவனுக்கும், அவன் தந்தைக்கும் இருந்த நெருங்கிய உறவை அனைவரும் கண்கூடாகப் பார்த்திருந்தனர். எனவே, அவரைப் புதைத்த அன்றே அவன் விளையாட வந்திருந்ததை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

திடலுக்கு வந்த அலெக்ஸ், பயிற்சியாளரிடம் சென்று, "சார் இந்த இரண்டாவது பாதியில் தயவுசெய்து என்னை விளையாட அனுமதியுங்கள்" என்று கண்ணீரோடு கெஞ்சினான். ஏற்கனவே தன் குழு தோற்றுக்கொண்டிருந்தச் சூழலில், இவனை விளையாட அனுமதித்தால், நிலைமை இன்னும் மோசமாகுமே என்று பயிற்சியாளர் தயங்கினார். எனினும், அந்த இளைஞனின் மனதை உடைக்க விரும்பவில்லை. மேலும், கண்ணீர் நிறைந்திருந்த அலெக்ஸின் கண்களில் தெரிந்த ஆர்வம், பயிற்சியாளரை ஏதோ செய்தது. இனியும் இழப்பதற்கு என்ன இருக்கிறது, இந்த இளைஞனாவது திருப்தி அடையட்டுமே என்ற எண்ணத்தில், அனுமதி தந்தார். இரண்டாவது பாதியில், அலெக்ஸின் அற்புதமான விளையாட்டால், தோற்கும் நிலையில் இருந்த அவனது குழு வெற்றி அடைந்தது. அவனது குழுவினருக்கு ஆனந்த அதிர்ச்சி; எதிரணிக்கும் அதிர்ச்சி. ஆட்டத்தின் முடிவில் அலெக்ஸைத் தோள்களில் சுமந்து ஆரவாரம் செய்தனர். ஆரவாரம் எல்லாம் ஓய்ந்தபின், பயிற்சியாளர் அவனிடம், "தம்பி, என்னால் இதை நம்பவே முடியவில்லை. உனக்கு என்ன ஆயிற்று? எங்கிருந்து வந்தது உன் பலம், திறமை எல்லாம்?" என்று நேரடியாகவே கேட்டார்.

அலெக்ஸ் கண்ணீரோடு பேசினான்: "சார், என் அப்பா இறந்துவிட்டார் என்பது மட்டுமே உங்கள் அனைவருக்கும் தெரியும். அவருக்குப் பார்வைத் திறன் கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான். குழுவினரும், பயிற்சியாளரும் அதிர்ச்சியில் அவனைப் பார்த்தனர். அலெக்ஸ் தொடர்ந்தான்: "ஆம், என் அப்பாவுக்குப் பார்வைத் திறன் கிடையாது. ஆனால், எனது குழுவின் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் தவறாமல் வந்து என்னை உற்சாகப்படுத்தினார். இன்று, இந்த ஆட்டத்தைத்தான், முதன் முதலாக அவர் வானிலிருந்து கண்ணாரக் கண்டிருப்பார். நான் விளையாடுவதை அவர் முதல் முதலாகப் பார்க்கிறார் என்ற எண்ணமே, என் முழுத் திறமையை வெளிக்கொணர்ந்தது என்று நினைக்கிறேன். இதுவரை எனக்காக மட்டுமே விளையாடிவந்த நான், இன்று, அவருக்காக விளையாடினேன்" என்று, அலெக்ஸ் பேசப் பேச, அங்கிருந்தவர் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது... அதில், ஆனந்தக் கண்ணீரும் கலந்திருந்தது.

புறக்கண்களால் பார்க்கமுடியாத ஒரு தந்தை, தன் மகனை, அவனது கனவிலும், திறமைகளிலும் வளர்த்த கதை இது. புறக்கண்கொண்டு மனிதர்களால் பார்க்கமுடியாத விண்ணகத் தந்தை, தன் மகன் இயேசுவின் கனவுகளைத் துவக்கிவைத்த ஒரு நிகழ்வை இன்றைய நற்செய்தி நமக்குத் தருகிறது. இயேசு திருமுழுக்கு பெற்றதும், தந்தையாம் இறைவன், அவரை உச்சி முகந்து கூறும் உன்னத வார்த்தைகளை, இன்றைய நற்செய்தியில் இவ்விதம் கேட்கிறோம்: "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" (லூக்கா 3: 22)

தந்தையாம் இறைவனின் அன்பு தனக்கு உள்ளது என்ற உறுதியாலும், இவ்வுலகில் தான் ஆற்றவேண்டிய பணிகள் உள்ளன என்ற தாகத்தாலும் தூண்டப்பட்டு, இயேசு தன் பணி வாழ்வைத் துவங்கும் நிகழ்வே, அவரது திருமுழுக்கு நிகழ்வு. தன் வாழ்வையும், பணியையும் குறித்து உறுதியானதொரு முடிவெடுத்த இயேசு, தன் முதல் அடியை எடுத்துவைத்தார். அவர் எடுத்துவைத்த முதல் அடியை, தண்ணீரில், அதுவும் ஓடுகின்ற ஆற்று நீரில் எடுத்துவைத்தார். இது நம் சிந்தனைகளைத் தூண்டும் அழகான ஓர் அடையாளம்.

ஓடும் நீரில் நிற்கும்போது, நம் பாதங்களுக்கடியிலிருந்து பூமி நழுவிச் செல்வதைப் போன்ற உணர்வு எழும். இயேசு தன் பணியைத் துவக்கிய வேளையில், இஸ்ரயேல் சமுதாயம் பல வழிகளில் நிலையற்ற, நிலைகுலைந்த ஒரு சமுதாயமாக இருந்தது என்பதை, யோர்தானில் ஓடிய அந்த நீர் உருவகப்படுத்தியதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இனி தொடரும் தன் பணிவாழ்வில், தந்தையாம் இறைவனின் அன்பைத் தவிர வேறு எதுவும் இயேசுவுக்கு உறுதியளிக்காது என்பதை உணர்த்த, அவர், தன் பணிவாழ்வின் முதல் அடியை ஓடும் நீரில் எடுத்து வைத்தாரோ?

ஓடும் நீரில் மற்றோர் அழகும் உண்டு... தேங்கி நிற்கும் நீரை விட, ஓடும் நீரில், உயிர்கள் வாழவும், வளரவும் வாய்ப்பு அதிகம் உண்டு. இயேசுவும் ஓடும் நீரைப் போல் பலருக்கு வாழ்வளிக்க விரும்பியதால், ஓடும் ஆற்று நீரைத் தன் பணிவாழ்வின் முதல் அடையாளமாகத் தேர்ந்தெடுத்தாரோ?.

இயேசு, தன் திருமுழுக்கை, யோர்தான் நதியில் தனியே பெறவில்லை. மக்களோடு, மக்களாய் கலந்து, கரைந்து நின்றார். இயேசுவின் இந்தப் பணிவு, மக்களோடு மக்களாய் கரைந்துவிட அவர் கொண்ட ஆர்வம் ஆகியவை விண்ணகத் தந்தையை மிகவும் மகிழ்வித்தன.

தன் மகனோ, மகளோ அர்த்தமுள்ள, பெருமை சேர்க்கும் செயல்களைச் செய்யும்போது, அவர்களை அரவணைத்து, நெற்றியில் முத்தமிட்டு, ஆசீர்வதிக்கும், பெற்றோரைப் பார்த்திருக்கிறோம். நாமும் இந்த அரவணைப்பையும், ஆசீரையும் அனுபவித்திருப்போம். அதுதான் அன்று யோர்தானில் நடந்தது. மக்களோடு மக்களாகத் தன்னை முழுவதும் இணைத்துக்கொண்ட இயேசுவைக் கண்டு ஆனந்த கண்ணீர் பொங்க தந்தையாம் இறைவன் சொன்ன வார்த்தைகள்: "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்."

உள்ளப் பூரிப்புடன், உன்னத இறைவன் இந்த வார்த்தைகளை நம் ஒவ்வொருவருக்கும் சொல்லக் காத்திருக்கிறார். அன்னையும் தந்தையுமான இறைவன், நம்மை வாரி அணைத்து, உச்சி முகந்து, இந்த அன்பு மொழிகளை நம் ஒவ்வொருவருக்கும் சொல்லட்டும். குறிப்பாக, இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், இரக்கமே உருவான இறைவன், காயப்பட்டிருக்கும் ஒவ்வொரு மனிதரையும், காயப்படுத்தும் ஒவ்வொரு மனிதரையும் அரவணைத்து, தன் இரக்கத்தால் அவர்களை நலமாக்க வேண்டுமென மன்றாடுவோம்.

இறுதியாக, அன்புள்ளங்களே, அடுத்துவரும் நாட்களில் பொங்கல் திருவிழாவையும், உழவர் திருவிழாவையும் கொண்டாடவிருக்கிறோம். மழையாலும், வெள்ளத்தாலும் பயிர்களை இழந்து தவிக்கும் பல்லாயிரம் உழவர்களுக்கு, இறைவன் நல்வழி காட்டவேண்டுமென்று செபிப்போம். இயற்கை நம்மிடமிருந்து பறித்துக்கொண்ட விளைச்சலை ஈடுசெய்ய, நம் உள்ளங்களில் அன்பு, உதவி, உறவு என்ற பயிர்களை இறைவன் வளர்த்து, இந்த அறுவடைத் திருநாளை அர்த்தமுள்ளதாக மாற்ற உருக்கமாக செபிப்போம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இயேசுவின்‌ திருமுழுக்கு

முதல்‌ வாசகப்‌ பின்னணி (எசா. 42:14, 6-7)

கிழு எட்டாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ எருசலேமில்‌ வாழ்ந்தவர்‌ இறைவாக்கினர்‌ எசாயா, இவரின்‌ பெயரால்‌ வழங்கப்பெறும்‌ நூலை மூன்று பகுதிகளாப்‌ பிரிக்கலாம்‌,

1. அதிகாரங்கள்‌ 1-39: முதல்‌ எசாயா, கி.மு. 742-701 கடவுளுக்குச்‌ செவிகொடுக்காவிடில்‌ எருசலேம்‌ மக்களுக்கு அழிவு காத்திருக்கிறது என்று எச்சரிக்கை விடுக்கிறது.

2. அதிகாரங்கள்‌ 40-55: இரண்டாம்‌ எசாயா, கி.மு. 550-540 - கி.மு. 587-இல்‌ பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டு அடிமைகளாகத்‌ துன்பப்பட்ட மக்களுக்கு விடுதலையையும்‌ ஆறுதலையையும்‌ முன்னறிவிக்கிறது.

3. அதிகாரங்கள்‌ 56-66 - மூன்றாம்‌ எசாயா, கி.மு. 538-510 - எருசலேமுக்குத்‌ திரும்பி வந்த மக்களுக்கு 'இறைவன்‌ தம்‌ வாக்குறுதியை நிறைவேற்றுவார்‌” என்று நம்பிக்கை மொழிகளை உதிர்க்கிறது.

இரண்டாம்‌ எசாயாவில்‌ இடம்‌ பெறும்‌ நான்கு ஆண்டவரின்‌ ஊழியரைப்‌ பற்றிய பாடல்களுள்‌, முதலாவது பாடல்‌ இன்றைய முதல்‌ வாசகமாக அமைந்துள்ளது. இப்பாடலில்‌ வரும்‌ ஊழியர்‌” என்ற வார்த்தைக்குப்‌ பதிலாக மகன்‌” என்று பிரதியிட்டால்‌, இயேசுவின்‌ திருமுழுக்கின்‌ போது கேட்ட தந்தை கடவுளின்‌ கூற்றோடு ஒத்துப்போகிறது. இப்பாடல்‌ முழுவதும்‌ இயேசுவின்‌ வாழ்க்கையோடு மிகச்‌ சிறப்பாகப்‌ பொருந்துகிறது.

இரண்டாம்‌ வாசகப்‌ பின்னணி (தி.ப. 10:34-38)

செசாரியாவில்‌ உரோமைப்‌ படைப்பிரிவில்‌ நூற்றுவர்‌ தலைவராக இருந்தவர்‌ கொர்னேலியு. அவர்‌ யூத மதத்தைச்‌ சாராத புறவினத்தினராக இருந்தாலும்‌, இறைவன்‌ மேல்‌ பற்று கொண்டு, தம்‌ வீட்டார்‌ அனைவருடனும்‌ கடவுளுக்கு அஞ்சி நடந்தவர்‌ (தி.ப. 10:1-2). தாம்‌ கண்ட காட்சியின்‌ பயனாக, யோப்பாவில்‌ தங்கியிருந்த புனித பேதுருவுக்கு ஆளனுப்பி, தம்‌ இல்லத்திற்கு வரவழைத்து, அவரின் அருளுரையைக் கேட்கத் தயாராகவும் ஆவலாகவும் இருப்பதைத்‌ தெரிவிக்கிறார்‌. கொர்னேலியுவின்‌ இல்லத்தில்‌ தூய பேதுரு ஆற்றிய உரையின்‌ ஒரு பகுதிதான்‌ இன்றைய இரண்டாம்‌ வாசகமாக வந்துள்ளது. ஆவியால்‌ நிரப்பப்பட்டு, அற்புதங்கள்‌ பல செய்து, மரித்து உயிர்த்த இயேசுவுக்குச்‌ சாட்சியம்‌ கூறி, கடவுள்‌ மனிதரிடையே வேற்றுமைப்‌ பாராட்டூவதில்லை என்பதையும்‌ எடுத்துரைக்கிறார்‌ தூய பேதுரு.

நற்செய்தி வாசகப்‌ பின்னணி (லூக்கா 3:15-16, 21-22)

மெசியாவின்‌ வருகைக்கான வழியை ஆயத்தம்‌ செய்ய அனுப்பப்பட்டவரான திருமுழுக்கு யோவான்‌, இஸ்ரயேல்‌ மக்கள்‌ மனம்‌ மாற வேண்டுகோள்‌ விடுத்தார்‌. இந்த மனமாற்றத்தின்‌ அடையாளமாகத்‌ திருமுழுக்கும்‌ கொடுத்து வந்தார்‌. ஒரு வேளை யோவான்‌ தான்‌ மெசியாவாக இருப்பாரோ என்று தவறாக எண்ணியவர்களிடம்‌, தான்‌ மெசியா அல்லன்‌ என்பதைத்‌ தாழ்ச்சியோடு ஒப்புக்‌ கொள்கிறார்‌. மக்களுள்‌ ஒருவராக இயேசுவும்‌ அவரிடம்‌ திருமுழுக்குப்‌ பெற்று வேண்டிக்கொண்டிருக்கும்‌ போது, தூய ஆவி புறா வடிவில்‌ அவர்‌ மீது இறங்கி வருகிறார்‌. தந்தை கடவுளும்‌ 'இயேசு தம்‌ அன்பார்ந்த மகன்‌” என்றும்‌, அவரில்‌ தாம்‌ பூரிப்படைவதாகவும்‌ நற்சான்று அளிக்கின்றார்‌. படைப்பின்‌ தொடக்கத்தில்‌ கடவுளின்‌ ஆவியானவர்‌ தண்ணீரின்‌ மீது அசைவாடிக்‌ கொண்டிருந்தார்‌ (தொ.நூ. 1:2) மனிதரை தவிர படைப்பனைத்தையும்‌ தம்‌ வார்த்தையால்‌ உருவாக்கி, அவற்றால்‌ இறைவன்‌ பூரிப்படைந்தார்‌ (தொ.நூ. 1:3-4). இவ்வாறு படைப்பின்‌ தொடக்கத்தில்‌ நிகழ்ந்தவை அனைத்தும்‌ இயேசுவின்‌ திருமுழுக்கின்‌ போதும்‌ நிகழ்கின்றன. இயேசுவின்‌ திகுமுழுக்குப்‌ புது படைப்பிற்கு அச்சாரமாக அமைகிறது என்பகைக்‌ காட்டுகிறது.

மறையுரை

நாம்‌ இன்று இயேசுவின்‌ திருமுழுக்கு விழாவைக்‌ கொண்டாடுகிறோம்‌. இயேசு திருமுழுக்குப்‌ பெற்ற போது அவரைத்‌ தம்‌ மகன்‌ என தந்தை கடவுள்‌ வெளிப்படுத்தி அவர்‌ மீது தம்‌ ஆவியைப்‌ பொழிந்து அபிஷேகம்‌ செய்து, அவரை உலகின்‌ மீட்பராக அறிமுகம்‌ செய்து வைக்கிறார்‌,

இயேசுவுக்கேத்‌ திருமுழுக்கா? மனம்‌ திரும்புதலின்‌ அடையாளமாகவும்‌, மெசியாவின்‌ வருகைக்குத்‌ தயாரிப்பாகவும்‌ யோவான்‌ திருமுழுக்குக்‌ கொடுத்து வந்தார்‌. இயேசுவிடம்‌ பாவம்‌ இல்லை, அவரே மெசியாவாக இருப்பதால்‌ மெசியாவின்‌ வருகைக்குத்‌ தயாரிக்க வேண்டியக்‌ கட்டாயமும்‌ இல்லை. எனவே இயேசு ஏன்‌ இந்தத்‌ திருமுழுக்கைப்‌ பெற வேண்டும்‌? இது அவசியந்தானா? இதற்குப்‌ பல காரணங்கள்‌ கூறப்படுகின்றன. அவற்றுள்‌ சில: 1. கடவுளுக்கு ஏற்புடையதை (அதாவது அவர்‌ திருவுளத்தை) நிறைவேற்ற (மத்தேயு 3:15). 2. சமுதாயத்தால்‌ வெறுத்து ஒதுக்கப்பட்ட ஏழைகள்‌, வரிதண்டுவோர்‌, பாவிகள்‌ ஆகியவர்களோடு தமது ஒன்றிணைப்பைக்‌ காட்ட. 3. உலகினர்‌ அனைவரின்‌ பாவத்தைத்‌ தன்‌ மேல்‌ சுமந்துக்‌ கொண்டு அவற்றிற்குக்‌ கழுவாயாக. 4. இன்று தந்தை கடவுள்‌ தம்‌ பணிக்கு அங்கிகாரம்‌ அளித்தது போல தாமும்‌ யோவானின்‌ வழி தயாரிப்பு பணிக்கு அங்கிகாரம்‌ அளித்து, அனைவருக்கும்‌ பாவமன்னிப்பு அவசியம்‌ என்பதையும்‌, அவர்கள்‌ மனந்திரும்பி இறைவனுக்குச்‌ செவிமடுக்க வேண்டும்‌ என்பதையும்‌ மறைமுகமாகக்‌ காட்ட. தம்‌ திருப்பணி மூலம்‌ புதியப்‌ படைப்பை உருவாக்க இருக்கும்‌ இயேசுவைத்‌ தந்தை கடவுள்‌ இன்று தூய ஆவியினால்‌ அர்ச்சிக்கிறார்‌. மேலும்‌, “என்‌ அன்பார்ந்த மகன்‌ நீரே, உம்‌ பொருட்டு நான்‌ பூரிப்படைகிறேன்‌” என்று நற்சான்று பகர்கிறார்‌. இறைவன்‌ இறைவாக்கினர்‌ நாத்தான்‌ வழியாகத்‌ தாவீதுக்கு, “நான்‌ அவனுக்கு (அதாவது தாவீதின்‌ மகனுக்கு) தந்தையாய்‌ இருப்பேன்‌. அவன்‌ எனக்கு மகனாக இருப்பான்‌” என்று வாக்குறுதி தந்தார்‌ சோமு 7:14). இதன்‌ அடிப்படையில்‌ தாவீது வழிவந்த எல்லா மன்னர்களும்‌ இறைவனின்‌ மைந்தர்களாக எண்ணப்பட்டனர்‌. எனவே தான்‌ இவர்கள்‌ அரச கட்டில்‌ ஏறிய போது, “நீர்‌ என்‌ மைந்தர்‌, இன்று நான்‌ உம்மைப்‌ பெற்றெடுத்தேன்‌” (தி.பா. 2:7) என்ற திருப்பாடல்‌ இசைக்கப்பட்டது. மேலும்‌ இவர்கள்‌ அபிஷேகமும்‌ செய்யப்‌- பட்டார்கள்‌. ஆக இதே அரச அரியணையேற்ற பாடலை இசைத்து, ஆவியினால்‌ அபிஷேகம்‌ செய்து, இயேசுவின்‌ அரச, குருத்துவ, இறைவாக்குரைக்கும்‌ பணியை இன்று தொடங்கி வைக்கிறார்‌ தந்தை கடவுள்‌.

மேலும்‌, தந்தை கடவுள்‌ இயேசுவில்‌ பூரிப்படைவதாகக்‌ கூறுகிறார்‌. தந்தையின்‌ பூரிப்பிற்குக்‌ காரணம்‌ இயேசு கடவுளுக்கும்‌ மனிதருக்கும்‌ உகந்தவராக விளங்கியது தான்‌ (லூக்கா 2:52). திருமுழுக்கிற்குப்‌ பிறகு இயேசுவின்‌ பணி வாழ்வு தந்தையின்‌ பூரிப்பை இரட்டிப்பு ஆக்குவதாக உள்ளது:
1. இயேசு தந்தையின்‌ விருப்பத்தை நிறைவேற்றுவதையே தம்‌ உணவாகக்‌ கொண்டிருந்தார்‌.
2. எளியோர்‌ ஏழைகள்‌ மேல்‌ பரிவு கொண்டார்‌. ஆதரவு அற்றோரை அரவணைத்து, சமூக அநீதிகளைச்‌ சுட்டெரிக்கும்‌ நீதியின்‌ கதிரோனாக விளங்கினார்‌.
3. பசித்தோரின்‌ செவிக்கும்‌ வயிற்றுக்கும்‌ உணவளித்தார்‌,
4. நோயுற்றோரைக்‌ குணமாக்கித்‌ துன்புறுவோரின்‌ துயர்‌ களைந்தார்‌.
5. பல கட்டுகளிலிருந்து மக்களுக்கு விடுதலை அளித்தார்‌.
6. இறுதியில்‌ இறை விருப்பத்தின்படி உலகினர்‌ பாவம்‌ போக்கத்‌ தன்‌ இன்னுயிரை ஈந்து, பின்‌ உயிர்த்தெழுந்து, படைப்பு அனைத்தையும்‌ புதுப்பித்து நமக்குப்‌ புது வாழ்வைப்‌ பெற்றுத்தந்தார்‌. இவ்வாறு, இயேசுவின்‌ திருமுழுக்கில்‌ குறிப்பால்‌ உணர்த்தப்பட்ட புதுப்படைப்பு கிறிஸ்துவில்‌ நிறைவாகியது. சுருங்கக்‌ கூறின்‌, ஆண்டவரின்‌ ஊழியரைப்‌ பற்றிய அனைத்தும்‌ கிறிஸ்துவில்‌ நிறைவேறியது.

இயேசுவின்‌ திருமுழுக்கு நமக்குத்‌ தரும்‌ செய்திகள்‌ யாவை?

1. மூவொரு இறைவனின்‌ பெயரில்‌ திருமுழுக்குப்‌ பெற்ற நாம்‌ அனைவரும்‌ இயேசுவின்‌ இறப்பிலும்‌, உயிர்ப்பிலும்‌ பங்கு பெற்று மீட்படைந்து, தூய ஆவியால்‌ ஐயிஷேகம்‌ செய்யப்பட்டு, ஒரே வானகத்‌ தந்தையின்‌ பிள்ளைகள்‌ ஆனோம்‌.
2. ஒரே தந்தையின்‌ பிள்ளைகள்‌ என்பதால்‌ நம்மிடையே எவ்வித வேறுபாடுகளும்‌ இருக்கக்‌ கூடாது.
3. கிறிஸ்துவின்‌ வாழ்வு முழுவதும்‌ தந்தையைப்‌ பூரிப்படைய செய்வதாக இருந்தது. நாமும்‌ நம்‌ வாழ்வில்‌ தந்தையின்‌ திருவுளத்தை நிறைவேற்றி, இறையரசின்‌ மதிப்பீடுகளான அன்பு, நீதி, உண்மை, சமத்தவம்‌ ஆகியவை மண்ணில்‌ மலரச்‌ செய்து தந்தை கடவுளைப்‌ பூரிப்படையச்‌ செய்ய வேண்டும்‌.
4. திருமுழுக்கால்‌ கிறிஸ்துவில்‌ இணைந்துள்ள நாம்‌ அரச, குருத்துவ, இறைவாக்குரைக்கும்‌ பணியைச்‌ செவ்வனே செய்ய வேண்டும்‌. அரசப்பணி என்பது மற்றவர்களை இறை வெளிப்பாட்டிற்கு ஏற்ப வழிநடத்துவதாகும்‌. குருத்துவப்பணி என்பது நாம்‌ ஒவ்வொரு ஞாயிறும்‌ திருப்பலியில்‌ நம்மையே இறைவனுக்கு ஒப்புக்கொடுக்க அழைக்கிறது. இறைவாக்குரைக்கும்‌ பணி என்பது நமது சொல்லாலும்‌ செயலாலும்‌ நற்செய்தியை எடுத்துரைப்பதாகும்‌.

பிற மறையுரைக்‌ கருத்துக்கள்‌

இயேசு திருமுழுக்குப்‌ பெற்றவுடன்‌ செபத்தில்‌ ஈடுபட்டதாகப்‌ புனித லூக்கா கூறுகிறார்‌ (லூக்கா 3:21). இவரின்‌ நற்செய்திப்படி, இயேசு தம்‌ பணியைச்‌ செபத்துடன்‌ தொடங்கிச்‌ செபத்துடன்‌ நிறைவு செய்கிறார்‌ (லூக்கா 22:46). தம்‌ வாழ்வில்‌ பல முக்கிய செயல்களைச்‌ செய்த போது இயேசு செபிக்கிறர்‌. ௭. கா. பிறரைக்‌ குணமாக்கியபோது (லூக்கா 5:16), பன்னிருவரைத்‌ தேர்ந்தெடுத்தப்‌ போது (லூக்கா 6:12), உருமாறுவதற்கு முன்பு (லூக்கா 9:28-29) இயேசு செபிக்கிறார்‌. (காண்க. லூக்கா 11:1-2, 22:32, 39-46, 23:34, 46) இயேசுவின்‌ செப வாழ்வு நமக்கு ஒரு முன்மாதிரிகையாக அமைகிறது.
யோவானின்‌ தாழ்ச்சி. “இவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்‌ கூட நான்‌ தகுதியற்றவன்‌” (லூக்கா 3:15).
கிறிஸ்து தம்மையேத்‌ தாழ்த்தினார்‌. அதனால்தான்‌ கடவுள்‌ அவரை உயர்த்தினார்‌ (பிலிப்‌ 2:6-11).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பொதுக்‌காலம்‌ இரண்டாம்‌ ஞாயிறு

ஆண்டவரின்‌ திருமுழுக்குப்‌ பெருவிழா முதல்‌, கிறிஸ்து பிறப்புக்‌ காலம்‌ முடிந்து ஆண்டின்‌ பொதுக்காலம்‌ தொடங்கு கிறது. இந்நிலையில்‌ இன்றைய நற்செய்தி பகுதியாக இயேசு செய்த முதல்‌ புதுமையை நமக்குத்‌ தாயாம்‌ திருஅவை அருள்கின்றது. இந்த நற்செய்தி பகுதி பின்வரும்‌ உட்பிரிவுகளைக்‌ கொண்டது.

அ. நிகழ்வின்‌ முக்கிய கதாபாத்திரங்களின்‌ (இயேசு, அவரது தாய்‌, சீடர்கள்‌) அறிமுகம்‌, நோக்கம்‌ (திருமணம்‌) (வச. 1-2).
ஆ. மரியா தொடங்கி வைத்த செயல்பாடு (வச. 3-5).
இ. இயேசுவின்‌ செயல்பாடுகளும்‌, அதன்‌ விளைவுகளும்‌ (வச. 6-10).
ஈ. விரிவுரையாளரின்‌ விளக்கம்‌ (வச. 11).
உ. நிகழ்வின்‌ முடிவு - கதாபாத்திரங்கள்‌ விலகல்‌ (வச. 12).

இந்த நிகழ்வைப்‌ பல்வேறு நிலைகளிலிருந்து விளக்கலாம்‌ என்றாலும்‌ இந்நிகழ்வில்‌ வரும்‌ முக்கிய கதாமாந்தர்கள்‌ மரியா, இயேசு, சீடர்கள்‌ ஆகியோரின்‌ நிலை நின்று இதை விளக்கவும்‌, அதிலிருந்து நமது வாழ்வுக்கு சில பாடங்களையும்‌ கற்றுக்‌ கொள்ளவும்‌ முயல்வோம்‌.

1. மரியா தொடங்கி வைத்த செயல்பாடு (வச. 8)

நிகழ்ச்சி பற்றிய அடிப்படைத்‌ தரவுகளைத்‌ தந்தபின்‌ (யார்‌? எங்கே? எதற்காக?) வச.7-2ல்‌ இயேசுவின்‌ தாய்‌ மரியா நிகழ்ச்சியின்‌ முதல்‌ செயல்பாட்டைத்‌ தொடங்கி வைக்கிறார்‌. இது இந்நிகழ்ச்சி முடி.கின்றவரை சங்கிலித்‌ தொடரான பல செயல்பாடுகளுக்கு காரணமாய்‌ அமைகின்றது. அன்னை மரியா யாரும்‌ கண்டுகொள்‌ ளாத, கண்டுகொண்டாலும்‌ அதைப்பற்றிக்‌ கவலை கொள்ளாத ஒரு விடயத்தைக்‌ கண்டுபிடித்து, அதைப்பற்றிக்‌ கவலைப்பட்டு அதை இயேசுவின்‌ பார்வைக்கு, கவனத்திற்குக்‌ கொண்டு வருகின்றார்‌ (வச. 3).

2. இயேசுவின்‌ பதில்மொழி (வச. 4)

மரியா கவலையோடு இயேசுவின்‌ கவனத்திற்கு கொண்டு வந்த இந்த விடயத்தைப்‌ பற்றி இயேசு தரும்‌ இரு பதில்‌ மொழிகள்‌, ஒரு மகன்‌ தாய்க்குத்‌ தரும்‌ நலமான பதிலாக அமையாதது போல தோன்றுகின்றது. “அம்மா, அதைப்‌ பற்றி நாம்‌ என்ன செய்ய முடியும்‌? எனது நேரம்‌ இன்னும்‌ வரவில்லையே” (வச. 2) என்பது நமது கலாச்சாரம்‌ மற்றும்‌ கத்தோலிக்க பாரம்பரியம்‌ ஆகியவற்றைக்‌ கருத்தில்‌ கொண்டு மொழிபெயர்க்கப்பட்டவை. இதை இயேசு “பெண்ணே! இதைப்‌ பற்றி உனக்கும்‌, எனக்கும்‌ என்ன? எனது நேரம்‌ இன்னும்‌ வரவில்லையே?” என்றும்‌ மொழிபெயர்க்கலாம்‌ (காண்‌. ஆங்கில மொழிபெயர்ப்பு: 150 உடனே இயேசு தன்‌ தாயை மதிக்கவில்லை” என்று பிரிந்த சகோதரர்கள்‌ கூறும்‌ வாதத்திற்கு வலுசேர்ப்பதாக இப்பகுதியை எடுத்துக்கொள்ளக்‌ கூடாது. மாறாக இப்பகுதியை மரியா மீண்டும்‌ தோன்றும்‌ யோவா 79:26 உடனும்‌ இணைத்துக்‌ காண வேண்டும்‌. அங்கேயும்‌ இயேசு மரியாவை “பெண்ணே” என்று விளிப்பதை காண்கின்றோம்‌. இதற்கு ஓர்‌ ஆழ்ந்த இறையியல்‌ நோக்கம்‌ உண்டு. இதை முதல்‌ மனிதரின்‌ வீழ்ச்சியில்‌ வரும்‌ “பெண்‌'ணுடன்‌ ஓப்பிட்டு நோக்க வேண்டும்‌ (காண்‌. தொநா 315. அங்கு பெண்ணை தொடர்புபடுத்திக்‌ கடவுள்‌ தந்த வாக்குறுதி அல்லது முதல்‌ நற்செய்தி” இங்கு கானாவூரில்‌ நிறை வேறத்‌ தொடங்குகின்றது (காண்‌. யோவா 2:30, அதன்‌ நிறைவாக கல்வாரியில்‌ நிறைவடையும்‌ (காண்‌. யோவா 79:2௦. எனவேதான்‌ இயேசு “நேரம்‌” எனும்‌ சொல்லாடலைப்‌ பயன்படுத்துகின்றார்‌. அது இன்னும்‌ வந்துவிடவில்லை, அதாவது மீட்பை வென்‌ றெடுக்கும்‌ நேரம்‌ இன்னும்‌ வரவில்லை (அதாவது பாடுகளின்‌ நேரம்‌, உயிர்ப்பின்‌ மகிமையான நேரம்‌) என்பதை இயேசு மரியாவுக்கு சுட்டி க்காட்டுகின்றார்‌.

3. மரியாவின்‌ மறுமொாழி (வச. 5)

தாயின்‌ சுட்டிக்‌ காட்டுதலுக்கு (வச. 3) மகனின்‌ பதில்மொழி கொஞ்சம்‌ வித்தியாசமாய்‌ தோன்றியதென்றால்‌ (காண்‌. வச. 4) அதற்கு தாய்‌ தருகின்ற மறுமொழி இன்னும்‌ வித்தியாசமாய்‌ அமைகின்றது. அவர்‌ இயேசு சொன்னதை ஆமோதிப்பதாகவும்‌ தெரியவில்லை, எதிர்ப்பதாகவும்‌ தெரியவில்லை. மாறாக அவர்‌ கவனத்தை பணியாளர்கள்‌ பக்கம்‌ திருப்பி “துவர்‌ உங்களுக்குச்‌ சொல்வதெல்லாம்‌ செய்யுங்கள்‌” (வச. 3) என்கின்றார்‌. இதுவும்‌ மேலெழுந்த வாரியாக பார்க்கின்ற போது மரியா இயேசுவைச்‌ சரியாகப்‌ புரிந்து கொள்ளாததுபோல தோன்‌ றும்‌. அனால்‌ இதற்கு அடியில்‌ மரியாவின்‌ பிக ஆழமான பண்பு ஒன்று மிளிர்கின்றது. அதைப்‌ புரிந்துகொள்ள முயற்சி எடுப்போம்‌. இங்கு மரியா “இயேசுவின்‌ சொல்‌ அல்லது 'வார்த்தை' என்னும்‌ சொல்லாடலைப்‌ பயன்படுத்‌ துகின்றார்‌. யோவான்‌ நற்செய்தியின்‌ முதல்‌ அதிகாரத்தின்‌ துவக்கப்‌ பாடலை (யோவா 17-74) வாசித்த வாசகர்களுக்கு இந்த வார்த்தை “எது' அல்லது *யார்‌*, அதன்‌ ஆற்றல்‌ யாது? வரலாற்றில்‌ அது எப்படி நிகழ்ந்தது? என்பதெல்லாம்‌ தெரிந்திருக்கும்‌. இப்போது மரியா அவ்வாறு பாடலாக, உயர்‌ இறையியல்‌ கருத்தாக இருந்த “வார்த்தையை” அதன்‌ வல்லமையை முதன்‌ முதலாக வரலாற்று நிகழ்வாக, “நிகழ்ச்சிப்பகுதியில்‌ நிகழ்வதாக மாற்றுகின்றார்‌.

இதைப்‌ பற்றி இன்னும்‌ சிந்திக்கின்றபோது மரியாதான்‌ யோவான்‌ நற்செய்தியில்‌ முதல்‌ முதலாக *இந்த வார்த்தையின்‌” ஆற்றல்‌ மீது, இந்த வார்த்தையால்‌ என்னவெல்லாம்‌ கூடும்‌ என்று நம்பியவர்‌, தன்‌ நம்பிக்கையை இயேசுவின்‌ வார்த்தை” மீது முழுமையாக வைத்தவர்‌. அதனால்தான்‌, “அவர்‌ உங்களுக்குச்‌ சொல்வதெல்லாம்‌ செய்யுங்கள்‌” (வச. 5). அதாவது “அவரது வார்த்தையை செய்யுங்கள்‌” என்றார்‌.

அதைத்‌ தொடர்ந்து இயேசு, “இத்தொட்டி களில்‌ தண்ணீர்‌ நிரப்புங்கள்‌” (வச. 7) “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வை யாளரிடம்‌ கொண்டு போங்கள்‌” (வச. 8) எனும்‌ இரு சொற்‌ றொடர்களை வார்த்தைகளைப்‌! பயன்படுத்தினார்‌; மரியாவின்‌ சொற்றொடர்களில்‌ கூறவேண்டுமானால்‌ “சொன்னார்‌” (வச. 5). அவரது அந்த வார்த்தைகளின்‌ விளைவு பந்தி மேற்பார்வை யாளரின்‌ வார்த்தைகளில்‌ வெளிப்படுகின்றது. அதாவது இயேசு வின்‌ வார்த்தையினால்‌ தண்ணீர்‌ நல்ல இரசமாய்‌ மாறியிருந்தது, ஆறு கல்‌ தொட்டி அளவுக்கு நிறையவும்‌ இருந்தது.

மேலும் ‌இங்கு தண்ணீர்‌, இரசம்‌ என்பதை வெறுமனே திரவப்‌ பொருளாக பார்க்கக்கூடாது. தண்ணீரை “யூதரின்‌ தூய்மைச்‌ சடங்குக்கானது' (வச. 6) என்று குறிப்பிடப்படுவதன்‌ வழியாக அது யூத சமயத்தையும்‌, சடங்கு ஆசாரங்களையும்‌ குறிக்கும்‌. அது முமுமையின்‌ அடையாளமான ஏழுக்கு ஒன்று குறைய ஆறு இருந்தது. எனவே யூத சமயம்‌ நிறைவில்லாமல்‌, குறையாய்‌ வெறும்‌ தண்ணீராய்‌ இருந்தது. இயேசு எனும்‌ வார்த்தையால்‌ அவரது வருகையால்‌ அது அபரிவிதமான, தரமான ஒன்றாக மாற்றப்படுகின்றது. எனவேதான்‌ நற்செய்தியாளர்‌ இதை வெறும்‌ “புதுமை' என்பதோடு குறுக்கி விடாமல்‌ இதை இயேசுவின்‌ “முதல்‌ அரும்‌அடையாளம்‌' என்றும்‌ இயேசுவின்‌ மாட்சியின்‌ வெளிப்பாடு” (வச. 77) என்றும்‌ குறிப்பிடுகின்றார்‌. எனவே இயேசுவின்‌ வார்த்தை குறையாயிருந்த யூத சமயத்தை நிறைவான தாக்கி இறைமாட்சியை வெளிப்படுத்தும்‌ அடையாளமாகின்றது.

4. சீடர்களின்‌ நம்பிக்கை (வச. 11)

இந்நிகழ்ச்சியின்‌ தொடக்கத்தில்‌ குறிப்பிடப்படும்‌ சீடர்கள்‌ (வச. 2), மற்றெங்கும்‌ குறிப்பிடப்‌ படாமல்‌, நிகழ்ச்சியின்‌ இறுதியில்‌ இயேசுவின்மீது நம்பிக்கை கொள்வதாக குறிப்‌ பிடப்படுகின்றனர்‌ (வச. 7). இவர்கள்‌ ஏற்கெனவே முதல்‌ அதிகாரத்தில்‌ குறிப்பிடப்‌ படுகின்றனர்‌. (காண்‌. யோவா 1:35-57. அவர்கள்‌ மெசியாவை எதிர்பார்த்திருந்தவர்கள்‌. அவரை இயேசுவிலே “கண்டவர்கள்‌” (காண்‌.யோவா?1:41,45)_ஆனால்கானாதிருமண நிகழ்வுக்குபின்தான்‌ அவர்கள்‌ இயேசுவை மெசியா என நம்பினார்கள்‌. அவர்களின்‌ நம்பிக்கைக்குக்‌ காரணம்‌ இயேசு செய்த புதுமை என்பதைவிட, மரியா இயேசு எனும்‌ வார்த்தையின்‌ மீதும்‌, இயேசுவின்‌ வார்த்தை மீதும்‌ கொண்ட நம்பிக்கைதான்‌ என்றால்‌ மிகையாகாது. எனவே மரியாவின்‌ நம்பிக்கை, சீடர்களின்‌ நம்பிக்கைக்கு அடிப்‌ படையாய்‌ அமைந்தது. எனவேதான்‌ திருஅவுவை அவரை இயேசுவின்‌ 'தனிமுதற்‌சீடர்‌! என்று அழைக்கின்றது.

முடிவாக...

இந்நிகழ்ச்சி இயேசுவின்‌ அரும்‌ அடையாளமாகவும்‌, இறைமாட்‌சியாகவும்‌ பார்க்கப்பட வேண்டும்‌. இதில்‌ மரியாவின்‌ பங்கு அளப்பரியது. அவர்‌ இறைவார்த்தையை நம்பினார்‌, அதன்‌ ஆற்றலை நம்பினார்‌, இடர்களின்‌ நம்பிக்கைக்குக்‌ காரணமானார்‌. நாமும்‌ இறைவார்த்தையை நம்பி அன்னை மரியா வழியில்‌ இயேசுவின்‌ சீடராவோம்‌.

ஆண்டவரின்‌ திருமுழுக்கு மூன்றாம்‌ ஆண்டு

முதல் வாசகம் எசா. 40:1-5,9-11

எசாயா ஆகமத்தில்‌ 40 முதல்‌ 55 வரை உள்ள அதிகாரங்களை இரண்டாம்‌ எசாயா எழுதியதாக அறிஞர்‌ கூறுவர்‌. துன்புறும்‌ மக்களுக்கு ஆறுதல்‌ கூறும்‌ பகுதிகள்‌ இங்கு பல உள்ளன, வரவிருக்கும்‌ இறைவனின்‌ ஊழியர்‌ துன்பத்தின்‌ வழியாக வெற்றிவாகை சூடுவார்‌ என்ற இறைவாக்குகள்‌ இங்கு ஒலிக்கக்‌ கேட்கலாம்‌. பாபிலோனிய அந்நிய ஆட்சிமினின்று யூதஇனம்‌ விடுதலையடைந்தபின்‌ எழுதப்பட்டவை இவை.

இறைவாக்கினர்‌ இறைவனது குரலை எடுத்துரைக்கும்‌ எக்காளங்கள்‌

இறைவன்‌ மக்களைக்‌ கண்டிப்பதும்‌ தேற்றுவதும்‌ இவர்கள்‌ வழியாகத்தான்‌. “ஆறுதல்‌ கொடுங்கள்‌; நம்‌ மக்களைத்‌ தேற்றுங்கள்‌'' (40 : 1)என்கிறார்‌ உங்கள்‌ கடவுள்‌, சோர்ந்து போயிருப்போரே என்னிடம்‌ வாருங்கள்‌; நான்‌ உங்களைத்‌ தேற்றுவேன்‌ என்றார்‌ இயேசு... இயேசு பாலனைக்‌ கரத்தில்‌ தாங்கிய சிமியோன்‌ "இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை" அடைந்தவராய்‌, ஆண்டவரே உம்‌ அடியானை அமைதியாகப்‌ போகவிடும்‌ என்று பாடுகிறார்‌ (லூக்‌ 2:28). நீதியைவிட இறைவனின்‌ இரக்கத்தையே இயேசு வலியுறுத்தினார்‌. அக்கிரமங்களை மன்னிக்கும்‌ ஆண்டவர்‌ எம்‌ கடவுள்‌ (40 : 2) நாம்‌ ஒவ்வொருவரும்‌ இறைவனின்‌ இரக்கத்திற்கும்‌ மன்னிக்கும்‌ பெருந்தன்மைக்கும்‌ சான்றாக விளங்குகிறோம்‌. இதை நாம்‌ நாள்தோறும்‌ நன்றியுடன்‌ நினைவு கூறுகிள்றோமா?

இறைவாக்கினர்‌ இறைவனின்‌ வருகைக்காக வழியைக்‌ தயார்‌ செய்பவர்‌

வழிகள்‌ இரண்டு. ஆண்டவர்‌ கூறுகிறார்‌: "இதோ உங்களுக்கு இரண்டு வழிகளைக்‌ காட்டுகிறோம்‌. ஒன்று வாழ்வின்‌ வழி: மற்றது சாவின்‌ வழி” (எரே 21:8) இயேசுவும்‌ இடுக்கலான வழி, பரந்த வழிபற்றிக்‌ குறிப்பிடுகிறார்‌ (மத்‌ 7:13-14) ஆண்டவரை அடையும்‌ வழியில்‌ நடக்கவேண்டுமானால்‌. நமது குற்றம்‌, பாவம்‌ முதலிய மேடு பள்ளங்கள்‌ அகற்றப்பட வேண்டும்‌. நாம்‌ செய்யாது விட்டு விட்ட நற்செயல்களே பள்ளங்கள்‌: தீயசெயல்களால்‌ மலைபோல்‌ உயர்ந்து நிற்பவையே நம்‌ பாவங்கள்‌. பிறரை மீட்புக்கு அழைந்கும்‌ குரலாக உள்ளோமா? அல்லது மீட்புக்குத்‌ தடையாக இருக்கிறோமா?

இறைவாக்கினர்‌ இறைவனை அரசராக, ஆயராகச்‌ சுட்டுபவர்கள்‌

இறைவனை அரசனாகவும்‌ ஆயனாகவும்‌ எசாயா அறிமுகப்படுத்து கின்றார்‌. அவர்‌ கையிலே செங்கோல்‌: அவரைச்‌ சுற்றியும்‌ வெற்றிச்‌ சின்னங்கள்‌ (40:10). வல்லமையும்‌ நீதியும்‌ அலாது பண்புகள்‌. எனவே நாம்‌ எதற்றாம்‌ அஞ்சத்‌ தேவையில்லை, ஆண்டவர்‌ ஆயராகவும்‌ உருவகம்‌ செய்யப்பட்டுள்ளார்‌ (40 : 11). இந்த நல்லாயர்‌ இருக்கும்‌ பொழுது நமல்கென்ன குறைவு? (தி.பா 23). இவர்‌ ஆட்டுக்‌ குட்டிகளைக்‌ கூட்டிச் சேர்ப்பவள்‌: கட்டி அசவணைப்பவர்‌; சினையாடுகளை இளைப்பாறும்‌ இடத்திற்குக்‌ கூட்டிச்‌ செல்பவர்‌ (40 : 11). இறைவனது பரிவையும்‌ பாசத்தையும்‌ படம்‌ பிடித்துக்‌ சாட்டுகிறார்‌ (எசே 34 : 23-25 எரே 23 : 3-5). இறைவனது அன்பு எல்லையற்றது. அவரது வழியை மீறி, வேறுவழி செல்லுகையில்‌ என்னைப்‌ பின்‌ தொடர்ந்து ஐடுத்தாட்கொண்டு இரவணைத்திடும்‌ அன்பு அது. என்‌ அள்பை எப்படிக்‌ காட்டுவேன்‌?

(ஆயரபை் போல அவர்தம்‌ மந்தையை மேய்ப்பார்‌:
ஆட்டுக்‌ குட்டிகளைத்‌ தம்‌ கையால்‌ கூடச்‌ சேர்ப்பார்‌)

இரண்டாம் வாசகம் : தீத்து 2:11-14,3:4-7

பாவத்தால்‌ நாம்‌ இழந்துவிட்ட தெய்வீக வாழ்வை நமக்கு அளிக்கவே இயேசு மனிதராகப்‌ பிறந்தார்‌. தனது மாணத்தாலும்‌ உயிர்ப்பாலும்‌ இந்த அருள்‌ வாழ்வை நாய்‌ பெறுவதற்கு வழி செய்தார்‌. இந்த அருள்‌ வாழ்வை நாம்‌ நமது திருமுழுக்கில்‌ பெறுகிறோம்‌. இதை வளர்ப்பது நமது கடமை:

திருமுழுக்கு வழங்குவது நிறைவாழ்வு, அருள்‌

தெய்வத்‌ திருமகன்‌ ஒரு தனி மனிதனுக்காகவோ, அல்லது ஓர்‌ இனத்தார்காகவோ மனிதராகப்‌ பிறக்கவில்லை. ''எல்லா மக்களும்‌ மீட்பைப்‌ பெற்று, உண்மையின்‌ அறிவை அடைந்துகொள்ள வேண்டும்‌ என்பதே அவாது விருப்பம்‌. எனெனில்‌ கடவுள்‌ ஒருவரே. கடவுளையும்‌ மனிதனாயும்‌ இணைப்பவருப்‌ ஒருவரோ. இவர்‌ மனிதரான இயேசு கிறிஸ்துவே (1 திமொ 2 : 3-6) நாம்‌ கிறிஸ்து வழியாக, திருமுழுக்கில்‌ பெற்றுள்ள இறையருள்‌ நம்மிடமுள்ள இறைப்‌ பற்றின்மையையும்‌ உலக இச்சைகளையும்‌ அழிக்கிறது. பழங்காலத்தில்‌ கடவுளை இழந்து வாழ்ந்தோம்‌; அந்நிலை மாற அருள்‌ உதவுகிறது. அதே அருள நிகழ்காலத்தில்‌ நீதியிலும்‌ பக்தியிலும்‌ நாம்‌ வாழ வகை செய்கிறது; எதிர்காலத்தில்‌ இறைவனைச்‌ சந்திப்போம்‌ என்ற நம்பிக்கையும்‌ அளிக்கிறது (2: 13)இறைவனின்‌ மீட்புச்‌ செயல்‌ தம்மை எல்லா அக்கிரமங்‌களிலிருந்து மீட்கும்‌; நம்மைத்‌ நூயவர்களாக்கி நற்செயல்களில்‌ ஆர்வமுள்ளவர்களாக்கும்‌ (2:14). இறைவனின்‌ மீட்புச்‌ செயல்‌ நம்மை எல்லா அக்கிரமங்களிலிருந்தும்‌ மீட்கும்‌. நம்மைத்‌ தூயவர்களாக்கி நற்செயல்‌களில்‌ ஆர்வமுள்ளவர்களாக்கும்‌ (2 - 14). ஊனியல்பு வாழ்வு அழிந்து ஆவியார்‌ வாழ்வு தோன்றுவதே திருமுழுக்கின்‌ பயன்‌. திருமுழுக்கில்‌ நம்மை ஆட்கொண்ட தூய ஆவியார்‌, நம்‌ ஆருள்‌ வாழ்வை வளப்படுத்தி வளர்ச்சியடையச்‌ செய்ய வேண்டுவோம்‌.

திருமுழுக்கு வழங்குவது மீட்புக்கொடை

நமது திருமுழுக்கில்‌ இறைவனின்‌ இரக்கமும்‌ பரிவும்‌ நேயமும்‌ பிரசன்னமாகியுள்ளது. நமது தகுதியை முன்னிட்டோ, நமது நற்செயல்களை முன்னிட்டோ இறை அருள்‌ நமக்கு வழங்கப்பட வில்லை. இறைவனின்‌ இரக்கத்தால்‌, கொடையாக அது வழங்கப்பட்டுள்ளது (3- 4). “கடவுள்‌ நம்மை மீட்டு நமக்குப்‌ பரிசுத்த அழைப்பை அளித்துள்ளார்‌. தமது செயல்களை முன்னிட்டு அல்லாறு செய்யவில்லை. தாமே வகுத்த திட்டத்திற்கும்‌, தமது அருளுக்கும்‌ ஏற்பவே அவ்வாறு செய்தார்‌. இவ்வருள்‌ எல்லாக்‌ காலங்களுக்கும்‌ முன்னரே கிறிஸ்து இயேசுவில்‌ நமக்குக்‌ கொடுக்கப்பட்டது, இக்காலத்தில்‌ நம்‌ மீட்பராம்‌ கிறிஸ்து இயேசு உலகிற்குப்‌ பிரசன்னமானதால்‌ வெளிப்படையாயிற்று (2 திபொ 1:9-10)நமது மீட்பு நமக்கு இலவசமாக அளிக்கப்பட்ட கொடை என்பதை உணர்ந்து, அதற்காக என்றும்‌ நன்றி கூறவேண்டும்‌. “புதுப்பிறப்பைத்‌ தரும்‌ முழுக்கினாலும்‌ புத்துயிர்‌ அளிக்கும்‌ தூய ஆவியாராலும்‌ இறைவன்‌ நம்மை மீட்டார்‌ (3:5)

திருமுழுக்கில்‌ நாம்‌ பெற்ற அருள்‌ வாழ்வு, தூய ஆனியாரின்‌ துணையால்‌ வளரவேண்டும்‌. தூய ஆவியாரின்‌ வருகையால்தான்‌ நாம்‌ இறைவனுக்கு ஏற்புடையவர்களானோம்‌. இதை நாம்‌ தக்க வைத்துக்கொள்ள வேண்டும்‌ (எபே 2 :10)

இவர்‌ நம்மை எல்லா அக்கிரமங்களிலிருந்து மீட்கவும்‌, நம்மைத்‌ தூயவர்களாக்கி நற்செயல்களில்‌ ஆர்வமுள்ள ஒரினமாகத்‌ தமக்குச்‌ சொந்தமாக்கிக்‌ கொள்ளவும்‌, தம்மை நமக்காகக்‌ கைவயளித்தார்‌.

இன்றைய நற்செய்தி இரு பகுதிகளைக்‌ கொண்டுள்ளது. முதல்‌ பகுதியில்‌ (வ. 15-16) மக்களின்‌ எதிர்பார்ப்புப்‌ பின்னணியில்‌, திருமுழுக்கு யோவான்‌, சுருக்கமாக, ஆனால்‌ தெளிவாகத்‌ தம்‌ இயல்பையும்‌ பணியையும்‌ விளக்கி வரவிருக்கும்‌ இயேசு கிறிஸ்துவுக்குச்‌ சான்று பகர்கிறார்‌ (யோவா :19-37) அடுத்ததில்‌ (2 : 21-22) இயேசுவின்‌ திருமுழுக்கு அனுபவம்‌ விளக்கம்‌ பெறுகிறது.

இயேசு ஒருவர்‌

அக்காலத்தில்‌ இஸ்ரயேல்‌ மக்கள்‌ இறை மெசியாவுக்காக ஆவலோடு காத்திருந்தனர்‌. திருமுழுக்கரின்‌ நவவாழ்வ நெறிபோதனை இவற்றை வைந்து இவர்தான்‌ அவரோ எனப்‌ பலர்‌ எண்ணத்‌ தொடங்கினர்‌. திருமுழுக்கர்‌ உடனே நாம்‌ யார்‌ என்பதையும்‌ வர இருக்கும்‌ மீட்பரின்‌ உயர்வு யாது என்பதையும்‌ விளக்குகிறார்‌. நான்‌ ஒரு முன்னோடி மட்டுமே. வர இருப்பவரின்‌ அடியான்‌ நான்‌. வருபவர்‌ என்னைவிட மேலானவர்‌. தூய ஆவியாரால்‌ மக்களை நிரப்புவார்‌. அனைவருக்கும்‌ நடுவாய்‌ வந்து நல்லோருக்குச்‌ சம்பாவனையும்‌ தீயோருக்குத்‌ தண்டனையும்‌ அளிப்பார்‌ (காண்‌: மாற்‌ 25 : 31-46) என்கிறார்‌. திருமுழுக்கர்‌ வாக்குக்கு நாமும்‌ செவிமடுத்து மனந்திரும்புவோம்‌. இயேசுவை முழுமையாய்‌ ஏற்போம்‌; வெறும்‌ பதராக இல்லாமல்‌ நல்ல கோதுமையாய்‌ வாழ்ந்து மிகுந்த பலன்‌ தர வரம்‌ கேட்போம்‌.

தந்தையோடு இயேசுவின் உறவு

அடுத்து நாசரேத்தில்‌ வாழ்ந்து வந்த இயேசு மற்றவர்களைப்‌ போல திருமுழுக்கரிடம்‌ வந்து திருமுழுக்குப்‌ பெறுகிறார்‌. பாவமற்றவர்‌ அவர்‌; எனவே தம்‌ பேராலே அன்று பாவ மனுக்குலத்தின்‌ பேராலே பெறுகிறார்‌. கடவுளின்‌ அழைப்பை எற்று அவரைத்‌ தேடும்‌ இயக்கத்தின்‌ தலைவராக, தந்தையோடு தமக்குள்ள தனி உறவைத்‌ தம்‌ வெளியரங்கப்‌ பணி வழியாக அறிவிக்கத்‌ தொடங்குவதன்‌ அடையாளமாகத்‌ திருமுழுக்குப்‌ பெறுகிறார்‌. லூக்கா நற்செய்தியாளர்‌ “பெற்ற பின்‌” என்று மட்டும்‌ சடங்கைக்‌ கூறி விட்டு, இயேசுவின்‌ சொந்த அனுபவந்தை விவரிக்கின்றார்‌ (மாற்‌ 1:9-11). செபச்‌ சூழலிலே திருமைந்தன்‌ இறைத்‌ நந்தையோடு கொண்டுள்ள நெருங்கிய உறவு பறைசாற்றப்படுகிறது. புலப்படும்‌ உருவெடுத்து, தூயஆவியார்‌ அவர்மேல்‌ இறங்குகிறார்‌. தந்தை தரும்‌ திருப்பணியை உளமார ஏற்று சோதனையைவும்‌ போதனையையும்‌ தொடங்குகிறார்‌.

இயேசு நம்‌ செப மாதிரிகை

இயேசுவின்‌ வெளியரங்கப்‌ பணரியின்‌ முதற்செயல்‌ செபம்‌ (வ 21). இறுதிச்‌ செயலும்‌ செபமே (லூக்‌ 23, 34, 96. செபந்தில்‌ அவது பணி வளர்கிறது. தெளிவுறுகிறது. முக்கிய கட்டங்களில்‌ எல்லாம்‌ இயேசு செபிக்கிறார்‌ (லூக்‌ 5:16, 4:42, 6:12, 11-13,22:40-46).

செபத்தில்‌, அன்னை மரியாவைப்‌ போல (லூக்‌ 1: 26-38) இயேசு பெறும்‌ மிகச்‌ சிறந்த கொடை தூய ஆவியார்‌. தூய ஆவியாரால்‌ அவர்‌ அருள்பொழிவு பெறுகிறார்‌ (4:14-22;10:21) ஆவியாரால்‌ நிரம்பி ஆவியாரைப்‌ பொழிவதே அவரது வாழ்வு அவரது தூதுப்பணி (3:16). முக்கிய முடிவெடுக்க, வீரஅறிக்கையிட (திப 7 :55) போதிக்க பணி 13: 42) இவை போன்ற திருச்சபைப்‌ பணிக்கும்‌ தூய ஆவியே உள்ளுயிர்‌. அதுபோல்‌ நம்‌ விசுவாச வாழ்வுக்கும்‌ இந்தத்‌ தூய ஆவியாரே தேவை. உருக்கமாகத்‌ தந்தையிடப்‌ செபித்தால்‌ திண்ணமாய்‌ அவர்‌ இந்த ஆவியை நமக்கு அளிப்பார்‌ என இயேசுவே வாக்குறுதி அளித்துள்ளார்‌ (லூக்‌ 11:13).

இயேசு அமைதியின்‌ தூதர்‌

அன்பின்‌ அடையாளம்‌ புறா (உன் சங்‌ 2:14 5-2, 6:9). இறை மக்களிளத்தின்‌ அடையாளமும்‌ இதுவே (ஒசே 11 : 1, 74: 19) சமாதானத்‌ தூதர்களாக, மனுக்குலத்தின்‌ பிரதிநிதிகளாய்‌ இயேசுவைப்‌ போல்‌ நாமும்‌ தூய ஆவியாறைப்‌ பெறுவோம்‌... பெற்ற ஆவியாரைப்‌ பிறருக்கு வழங்குவோம்‌. நாம்‌ திருமுழுக்கு பெற்றபோது நிகழ்ந்த மறை உண்மையை மீண்டும்‌ மீண்டும்‌ வாழ்ந்து, இன்றும்‌ என்றும்‌ வானகத்‌ தந்தை நம்மேல்‌ அன்பு கூர்கிறார்‌ என்பதையும்‌, நாம்‌ அவளின்‌ அன்புப்‌ பிள்ளைகள்‌ என்பதையும்‌ இயேசுவைப்‌ போல்‌ ஆனுபவத்தால்‌ உணர்வோம்‌, பிள்ளைகளுக்குரிய வாஞ்சையோடும்‌ பற்றுறுதியோடும்‌. ஆமைதியோடும்‌ இறைந்தந்தைக்கு எதிலும்‌ ஊழியம்‌ புரிவோம்‌ லூக்‌ (4-8).

அன்பார்ந்த மகன்‌ இயேசு பொழியும்‌ தூய ஆவியாரின்‌ துணையால்‌ இயேசுவைப்‌ போல்‌, இறைத்தந்தையை “அப்பா, தந்தாய்‌ என அழைத்து (கலா 4: 6.உரோ 8:15) நாம்‌ இம்மையிலும்‌ மறுமையிலும்‌ நிலை வாழ்வை வாழ, பிறரையும்‌ இவ்விதம்‌ வாழவைக்க வாம்‌ கேட்போம்‌,

அவருடைய மிதியடி வாரை அவிழ்க்க நான் தகுதியற்றவன்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஒரு குரல் ஒலித்தது!

இன்று இயேசுவின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடுகிறோம். திருமுழுக்கு இயேசுவின் வாழ்வில் மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது:

(அ) இறைஅனுபவம்: நம் வாழ்வின் அனுபவங்கள் சில நம் அடித்தள அனுபவங்களாக மாறுகின்றன. அதாவது, நம் வாழ்வை முழுமையாகப் புரட்டிப்போடுகிற அனுபவங்களே அடித்தள அனுபவங்கள். எரியும் முட்புதரில் மோசே பெற்ற அனுபவம், எருசலேம் கோவிலில் எசாயா பெற்ற அனுபவம், திருத்தூதர்கள் மேலறையில் பெற்ற தூய ஆவியார் அனுபவம், பவுல் தமஸ்கு வழியில் பெற்ற அனுபவம் ஆகிய அனைத்தும் தொடர்புடைய மாந்தர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகின்றன. இயேசுவின் திருமுழுக்கு அனுபவம் அவருக்கு அடித்தள அனுபவமாக இருக்கிறது. தூய ஆவியாரின் காணக்கூடிய உடனிருத்தலையும் தந்தையின் குரல் வழி உடனிருத்தலையும் இயேசு இங்கே அனுபவிக்கிறார். ‘என் அன்பார்ந்த மகன் நீயே. உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்’ என்னும் தந்தையின் சொற்கள் அவருக்கு தொடர்ந்து அவருடைய பணி வாழ்வு முழுவதும் அவருக்கு ஆற்றல் தருகின்றன.

(ஆ) இறைவெளிப்பாடு: இறைவெளிப்பாடு நான்கு தளங்களில் நடக்கிறது: பெத்லகேமில் இடையர்களுக்கு, குடிலில் கீழ்த்திசை ஞானியர்களுக்கு, எருசலேம் ஆலயத்தில் சிமியோன் மற்றும் அன்னாவுக்கு, இன்று திருமுழுக்கு நிகழ்வில் உலக மக்கள் அனைவருக்கும். இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வு அவர் யார் என்பதை மற்றவர்களுக்குக் கடவுள் வெளிப்படுத்தும் இறைவெளிப்பாட்டு நிகழ்வாக அமைகிறது. இறைவெளிப்பாடு பெறுகிற அனைவரும் அந்த வெளிப்பாட்டுக்கு ஏற்ற பதிலிறுப்பு செய்ய வேண்டும்.

(இ) இறைப்பணி: இயேசு தம் பணிவாழ்வைத் தொடங்கும் – அதாவது தனி வாழ்வு விடுத்து பொதுவாழ்வைத் தொடங்கும் நிகழ்வாக அவருடைய திருமுழுக்கு நிகழ்வு அமைகிறது. இந்த நிகழ்வில், ‘நான் யார்? நான் யாருக்காக?’ என்னும் இரண்டு அடிப்படைக் கேள்விகளுக்கான தெளிவைப் பெற்றுக்கொள்கிறார் இயேசு. பழைய ஏற்பாட்டில் யோசுவா யோர்தான் ஆற்றில் இறங்கி இஸ்ரயேல் மக்களை வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் கொண்டுசென்றதுபோல, புதிய ஏற்பாட்டில் இயேசு (எபிரேயத்தில், ‘யோசுவா’) யோர்தான் ஆற்றில் இறங்கி புதிய இஸ்ரயேல் மக்களை பாவத்திலிருந்து மீட்கிறார்.

இந்த விழாவின் பின்புலத்தில் நமக்கு இயல்பாக மூன்று கேள்விகள் எழுவதுண்டு: (அ) இயேசுவே வயது வந்தபின்னர் தான் திருமுழுக்கு பெற்றார். அப்படி இருக்க, கத்தோலிக்கத் திருஅவையில் நாம் குழந்தைகளாக இருக்கும்போதே திருமுழுக்குப் பெறுவது ஏன்? (ஆ) பாவ மன்னிப்புக்கான திருமுழுக்கை யோவான் வழங்கினார் எனில், பாவமே அறியாத இயேசு அத்திருமுழுக்கைப் பெற வேண்டியதன் நோக்கம் என்ன? (இ) ‘அவர் தூய ஆவியால் திருமுழுக்கு கொடுப்பார்’ என்று இயேசுவைப் பற்றி யோவான் முன்னுரைக்கிறார் எனில், நாம் பெற வேண்டிய இந்த இரண்டாவது திருமுழுக்கு என்ன? இதுதான் ‘முழுக்கு ஸ்நானமா’? அல்லது இதுதான் ‘அபிஷேகம், இரட்சிப்பு பெறுதலா?’

விரைவாக இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டுவிட்டு, நம் சிந்தனைக்குள் நுழைவோம். (அ) திருமுழுக்கு நாம் தொடக்கப் பாவத்தைக் கழுவுகிறது. மேலும், திருமுழுக்கு என்பது திருஅவை என்னும் சமூகத்திற்குள் உறுப்பினராக மாறும் நுழைவுச் சடங்கு. ஆக, குழந்தையாக இருக்கும்போதே திருமுழுக்கு கொடுப்பதை கத்தோலிக்கத் திருஅவை முன்மொழிகிறது. (ஆ) இயேசு திருமுழுக்கு பெறுவதன் நோக்கம் பாவமன்னிப்பு அல்ல. மாறாக, இது மனுக்குலத்தோடு அவர் முழுமையாக ஒன்றித்திருந்ததையும், மற்றும் அவருடைய பொதுவாழ்வு அல்லது பணிவாழ்வின் தொடக்கத்தையும் குறிக்கிறது. (இ) ‘தூய ஆவியால் திருமுழுக்கு’ என்பது லூக்கா நற்செய்தியில் திருத்தூதர்பணிகள் நூலில் வரப் போகின்ற ஆவியார் அருள்பொழிவைக் குறிக்கின்றது. தூய ஆவியாரின் கொடைகளை நாம் உறுதிப்பூசுதல் அருளடையாளத்தில் பெறுகின்றோம். திருமுழுக்கில் நம்மேல் பொழியப்பட்ட ஆவி – தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் – இந்த அருளடையாளத்தில் உறுதிசெய்யப்படுகின்றார். ஆக, நாம் முழுக்கு ஸ்நானம், அல்லது ஆவியின் அபிஷேகம் அல்லது இரட்சிப்பு பெறத் தேவையில்லை.

இயேசுவின் திருமுழுக்கு நமக்குத் தரும் செய்தி என்ன?

(அ) இறைவனின் குரல்

பன்னிரு வயதில் ஆலயத்தில், ‘நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?’ எனக் கேட்கிற இயேசு, திருமுழுக்கு நிகழ்வில் தந்தையின் குரலை உலகறியக் கேட்கிறார். இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வில் மூன்று குரல்களைக் கேட்கிறோம்: ஆற்றங்கரையில் மக்களின் குரல், திருமுழுக்கு யோவானின் குரல், தந்தையின் குரல். மக்களின் குரல் எதிர்பார்ப்பும் ஏக்கமும் நிறைந்ததாக இருக்கிறது. யோவானின் குரல் இயேசுவின் முதன்மையையும் மேன்மையையும் அறிவிப்பதாக இருக்கிறது. தந்தையின் குரல் இயேசுவை மகன் என்னும் உரிமை பாராட்டுவதாக இருக்கிறது. ‘என் அன்பார்ந்த மகன் நீயே!’ என்னும் வாக்கியம் திபா 2-இன் பின்புலத்தில் பார்க்கும்போது அரசர் அரியணை ஏறும்போது பாடப்படும் பாடலாக உள்ளது. இயேசு அரச நிலை மெசியா என்ற இறையியலையும் நாம் இங்கே காண்கிறோம். முதல் வாசகத்தில், ‘ஆறுதல் கூறுங்கள். கனிமொழி கூறுங்கள்’ என்று கடவுளின் குரல் ஒலிக்கிறது.

நம் திருமுழுக்குச் சடங்கில், ‘எப்பத்தா’ (‘திறக்கப்படு’) என்னும் ஒரு பகுதி உண்டு. அதில், திருத்தொண்டர் அல்லது அருள்பணியாளர், ‘செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும், ஆண்டவர் இயேசு செய்தருளினார். நீ விரைவில் அவரது வார்த்தையை தந்தையாகிய இறைவனின் புகழும் மகிமையும் விளங்கக் காதால் கேட்கவும், அந்த நம்பிக்கையை நாவால் அறிக்கையிடவும் அவரே அருள்செய்தருள்வாராக!’ என்று சொல்லி, குழந்தையின் உதடுகள் மற்றும் காதுகளில் சிலுவை அடையாளம் வரைகிறார்.

‘குரல் கேட்டல்’ என்பது திருமுழுக்கு நிகழ்வில் முதன்மையான ஒன்றாக இருக்கிறது.

‘நீ என் அன்பார்ந்த மகன், மகள்’ என்னும் இறைவனின் குரல் இன்றும் நம் இதயத்தில் ஒலிக்கிறது. இந்தக் குரலை நாம் கேட்கத் தொடங்கினால் வெளியிலிருந்து வரும் எந்தக் குரலையும் – கோபக் குரல், பொறாமைக் குரல், சந்தேகக் குரல், அலறல் குரல் – அனைத்தையும் நாம் எதிர்கொள்ள முடியும்.

இறைவனின் குரலைக் கேட்கிற நாம் இறைவனின் குரலாக ஒலிக்க வேண்டும்.

(ஆ) இறைவேண்டல்

லூக்கா நற்செய்தியாளருடைய பதிவின்படி இயேசு திருமுழுக்கு பெற்றவுடன் இறைவேண்டல் செய்துகொண்டிருக்கிறார். இறைவேண்டலின்போதுதான் தந்தையின் குரலொலி கேட்கிறது. தூய ஆவி புறா வடிவில் இறங்கி வருகிறது. லூக்கா நற்செய்தியை இறைவேண்டலின் நற்செய்தி என அழைக்கிறோம். இயேசு செய்யும் முதல் இறைவேண்டல் இதுவே. இறைவேண்டல் என்பது நம் விண்ணப்பங்களைப் பட்டியலிடுவது அன்று, மாறாக, இறைவனுக்கும் நமக்கும் உள்ள நெருக்கத்தை உள்ளத்தில் உணர்ந்துகொள்வது. நமக்கும் இறைவனுக்கும் ஒரு தொடர்பை – ஏற்படுத்திக்கொள்வது. எப்படி நம் அலைபேசி அல்லது கணினியை இணைய இணைப்பில் நாம் தொடர்புபடுத்திக்கொள்ளும்போது தகவல் பரிமாற்றம் செய்ய நம்மால் இயல்கிறதோ, அதுபோலவே இறைவேண்டல் வழியாக நாம் கடவுளோடு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும்போது நாம் யாவற்றையும் செய்ய முடியும்.

இன்று இறைவேண்டல் என்பதை நாம் மிகவும் சுருக்கிவிட்டோம். விண்ணப்பங்களை எடுத்துரைக்க மட்டுமே இறைவேண்டல் செய்கின்றோம். இறைவேண்டல் என்பது நம் மனப்பாங்காகவும் உள்ளுணர்வாகவும் மாற வேண்டும். இதையே பவுல், ‘எப்போதும், இடைவிடாமல் இறைவேண்டல் செய்யுங்கள்’ (காண். 1 தெச 5:16-17) என எழுதுகிறார்.

(இ) இறைப்பற்று

கடவுளின் அருள் இயேசுவின் வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதை தன் குழுமத்துக்கு எடுத்துரைக்கிற தீத்து, ‘கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம்’ என எழுதுகிறார்.

நம் மரபில் – இந்து, இந்திய மரபில் – முடிஎடுத்தல் அல்லது முடிஇறக்குதல் என்ற ஒரு வழக்கம் உண்டு. இந்த வழக்கத்தின் பொருள், நம் தலையின் மணிமகுடத்தை கடவுளின் முன் இறக்குதல் ஆகும். வெற்றி பெற்ற மன்னன் முன்பாக தோல்வியுற்ற மன்னன் தன் மணிமகுடத்தைக் கழற்றி வைத்து, ‘இனி என்னை நீர் ஆளும்!’ என்று சொல்வதுபோல திருமுழுக்கு நிகழ்வில் நாம் நம் பெற்றோரின் விரல் விடுத்து இறைவனின் கரம் பற்றுகிறோம். நம் பற்றுகளை விடுத்து இறைவனைப் பற்றிக்கொள்வதில்தான் நம் நம்பிக்கையின் பயணம் தொடங்குகிறது.

இறுதியாக,

குழந்தையாக இருந்தபோது நாம் பெற்ற திருமுழுக்கு அருளடையாளத்தை நினைவுகூருவோம். நம் சார்பாக நம் பெற்றோரும் ஞானப்பெற்றோரும் நம்பிக்கை அறிக்கை செய்தார்கள். திருமுழுக்கின் உரிமைகளை நமக்குப் பெற்றுத்தந்ததோடு கடமைகளையும் ஏற்றார்கள். அவர்களை நன்றியோடு எண்ணிப்பார்ப்போம்.

நம் குடும்பம், பணி, பயணம் அனைத்துமே நாம் இறங்குகிற யோர்தான்.

இறைஅனுபவம், இறைவெளிப்பாடு, இறைப்பணி – இயேசுவுக்கு!

இறைக்குரல், இறைவேண்டல், இறைப்பற்று – நமக்கு!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
10........
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு