புனித பெர்னார்து
சந்தியாகு
புனித பெர்னார்து (1096-1153) பிரான்சு நாட்டில் பர்கண்டி என்ற நகரில் 1091 ஆம் ஆண்டு பிறந்தார். பிரபு குலத்தில் தோன்றிய இவருக்கு சிறந்த முறையில் கல்வி கற்க இவரது பெற்றோர் வசதி செய்து கொடுத்தனர், இளம் வயதிலிருந்தே தாய் இவரை இறை பக்தியில் வளர்த்தார்.
பெர்னார்து தனது படிப்புகளை முடித்த நேரத்தில் உலகச் செல்வாக்கு அனைத்தையும் பெற்று வாழக்கூடிய குழ்நிலை இருந்தும் உலகத்தைத் துறந்தார். புளித பெனடிக்ட் தொடங்கிய மிகக் கடுமையான ஒழுங்குகளூடன் கூடிய சிஸ்டோர்ஷியன் துறவு மடத்தில் தனது 22 ஆம் வயதில் வந்து சேர்ந்தார். துறவற வாழ்வின் உயர்வைப் பற்றி இவர் எவ்வளவு வாய் சாதகத்துடன் பேசினார் என்றால், இவருடைய உடன்பிறந்த நான்கு சகோதரர்களும், ஒரு மாமனும் இவரோடு சேர்ந்து கொண்டனர். இவர்களுடன் மேலும் 30 இளைஞர்கள் பெர்னார்துவின் முன்மாதிரிகையால் இம்மடத்தில் சேர்த்தனர். பெர்னார்துவின் தாய் இறந்த பின்பு இவரது தந்தையும் வந்து துறவியாகி விட்டார்.
ஞான வாழ்வில் பெர்னார்து அடைந்த முன்னேற்றத்தைக் கண்ட தலைவர் புது மடம் ஒன்றை நிறுவும்படி இவரை அனுப்பினார்.
கிளேர்வோ என்னும் இடத்தில் புதிய மடம் அமைக்கப்பட்டது. இவரது திறமை, ஆர்வம். அமைதி, அன்பு, புனித வாழ்வு இவற்றைக் கண்டு பலர் இங்கு வந்து சேர்ந்து துறவற வாழ்வை மேற்கொண்டனர். அடுத்த சில ஆண்டுகளில் 138 புதிய மடங்கள் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டன, 12 ஆம் நூற்றாண்டின் மாமனிதர் என்றால் பெர்னார்தைத் தவிர வேறு யாருமிருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு இவர் புகழ் ஒங்கியது.
இரண்டாம் சிலுவைப் போருக்கு மக்களைத் தயார் செய்யும் பணியை புளித பெர்னார்து ஏற்றுக்கொண்டார். ஏராளமான பேர் போருக்குத் தங்களை ஆயத்தம் செய்த கொண்டு புறப்பட்டனர். பிரான்சுடன் ஜெர்மனியும் போரில் சேர்ந்து கொண்டது. இருப்பினும் தோல்வியைச் சந்தித்தனர் பெர்னார்து தனிமை, தவம், செபம் இவற்றை எவ்வளவு அன்பு செய்தாரே, அந்த அளவிற்கு அவருடைய ஆன்மீகத் தொண்டு வெளி உலகிற்குத் தேவைப்பட்டது. அடுத்தடுத்து வந்த திருத்தந்தையர்கள் இவரின் ஆன்மீக ஆலோனையை இடைவிடாது நாடினர்.
பெர்னார்து தனது 82 ஆம் வயதில் விண்ணகம் சென்றார். இவர் மரியன்னை மீது மிகுந்த பக்தி உள்ளவர். இவரது சபைத் துறவிகள் ஒவ்வொரு நாளும் இரவ படுக்கச் செல்லுமுன் மாதாவின் சுரூபத்தின் மூன் கூடி "கிருபை தயாபத்திறுகு மாதாவாக இருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க” எனும் செபத்தை செபிக்கும்படி ஏற்பாடு செய்தார்.
“கவனமின்றி செபிக்கிறவன் தன் மன்றாட்டுக்கு சுடவுள் இரங்குவார். என்று எதிர்பார்க்கலாகாது. எனெனில் கெட்டுப்போன தானியத்தை ஆலையில் போட்டு நல்ல மாவு கிடைக்கும் என எதிர்பாக்கிறவனுக்கு அவன் சமம்” என்று கூறியுள்ளார்.