அருவியின் பயணம் ஆற்றை நோக்கி ஆற்றின் பயணம் கடலை நோக்கி கடலின் பயணம் வானம் நோக்கி கடவுளின் மைந்தன் பயணமோ தந்தையை நோக்கி தந்தையின் விருப்பமோ கல்வாரி நோக்கி இறை விருப்பம் வகுக்கப்பட்ட வியூகங்களில் பாடுகளின் விளிம்புதடவி நெகிழ்ந்த அனுபவம் சிலுவை பாதை சிலுவையே நீ கல்வாரி மலையில் நின்றபிறகுதான் இருண்ட ஆன்மாவிற்கு இயேசு எனும் ஒளி சுள்ளென்று உரைத்தது உன்னை ஊன்றினார்கள் பூமி வானத்தை உரசி எடுத்தது உன்னில் இயேசுவை அறைந்தார்கள் பூமி நடுங்கியது உன்னால் தான் உயிர்ப்பு எங்களுக்கு அறிமுகம் ஆனது உயிர்விட்டபொழுது நீ ஓரு சிறுகதை நாட்பட நாட்பட அனைவருக்கும் நீ ஒரு விடுகதை சிலுவை சிந்திய இயேசுவின் மொழிகள் உள்ளத்தை வருடியது சிலுவை வழியே மரணம் அழிந்தது மானுடம் உயர்ந்தது விசுவாசம் இல்லாதபோது சிலுவை ஒரு சுமைதான் நம்பிககைமட்டுமிருந்தால் சிலுவையும் ஒரு சிறகு தான்......![]()