அருள்வாக்கு இன்று

அக்டோபர் 19-சனி

இன்றைய நற்செய்தி

லூக்கா 12:8-12

இன்றைய புனிதர்


புனித ஐசக் ஜோக்ஸ், சிலுவையின் புனித பவுல்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.லூக்கா 12:12

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்கு எப்படிப் போய்ச் சமுதாய்தில் பணிச் செய்ய வேண்டும் என்றும் எவ்வாறு பேச வேண்டும் என்றும் கற்றுத் தருகின்றார். நாம் எப்பணிச் செய்ய முன்வந்தாலும் இறைவனின் வார்த்தை நம்முள்ளும் நம் அவருள்ளம் சங்கமாகி இருத்தல் அவசியம். நாம் செல்கின்ற இடத்தில் பேச வேண்டிய நேரத்தில், அடுத்தவரின் தேவை என்னவோ அதனை முன் கூட்டியே அறிந்த இறைவன் நம் வாயிலாகத் தம் தூய ஆவியானவரை நமது வழியாகப் பேசச் செய்வார். இதை நாமும் முழுமையாக விசுவசிக்க வேண்டும். இவ்வார்த்தைகளைக் கேட்போரும் ஏற்று முழுமை பெறத் தயாரக இருக்க வேண்டும். இதையே இறைமகன் நமக்குக் கற்றுத் தருகின்றார்.

சுயஆய்வு

  1. சமுதாயத்திற்குள் ஊடுருல் செய்ய என் பங்கு என்ன?
  2. அதற்காகத் தகுதியைப் பெற்றிருக்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இறைவா! உம் பணியை நான் திறம்படச் செய்யப் போதுமான அருள் வரங்களைத் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு