அருள்வாக்கு இன்று
அக்டோபர் 11-வெள்ளி
இன்றைய நற்செய்தி
லூக்கா 11:15-26
இன்றைய புனிதர்
மொலோகை புனித டேமியன்
லூக்கா 11:15-26
மொலோகை புனித டேமியன்
நான் கடவுளின் ஆற்றலால் பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா! லூக்கா 11:20
இன்றைய நற்செய்தியில் இயேசு தன் தந்தையின் வல்லமையை அவாில் மாட்சியுருவதை மக்களிடையே விளக்குகின்றார். எப்படிஎனில் தந்தை கட்டளைபடியே இவ்வுலகிற்கு வந்தார். அவரது மக்களைப் பாவபிடியினின்றும், அசுதத்த ஆவிகளின்றும், பிணிகளினின்றும் மீட்டு எடுக்கவே அவரது மண்ணக வருமை. இதனை உணராத சீடர்களிடம் இறைவனின் மாட்சிமை அவருள் ஒளிர்வதால் தான் அசுத்த ஆவிகள் ஒடுகின்றன. அசுத்த ஆவிகள் விலகியபின் அவர்களோடு தூய ஆவியானவரே ஆட்சி செய்கின்றார் என்பதே இதன் கருப்பொருள். இதுவே இறையாட்சி. என்று விளக்குகின்றார். இறையாட்சியில் எல்லாரும் எல்லாம் பெற்று இன்புற்று வாழ்வதேயாகும். இதற்குத் தகுந்தபடி நமது வாழ்வு அமைந்தால் தான் இறையாட்சியின் விழுமியங்களை நாம் சுவைக்க முடியும்.
அன்பு இயேசுவே! நான் இவ்வுலகத் தீய மாயைகளின்று விடுபட்டு உமது இறையரசின் விழுமியங்களைச் சுவைத்திடும் வரம் தாரும். ஆமென்.