அருள்வாக்கு இன்று
ஜூன் 25-புதன்
இன்றைய நற்செய்தி
மத்தேயு.7:15-20

மத்தேயு.7:15-20
அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா? மத்தேயு.7:16
அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள். இஃது இயேசுவின் வார்த்தைகள், இன்று சமுதாயத்தில் எதிரொலிக்கின்றன. 'விளையும் பயிர் முளையிலே தெரியும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்பது போல், ஒருவரது செயல்களைக் கொண்டு அவர் எதிர்காலத்தை அறியலாம். சிறுவயதில் புனித தொன்போஸ்கோ இளைஞர்கள்மீது அதிகக் கவலையும், அக்கறையும் கொண்டிருந்தனால் தான், தான் குருவானபிறகு இளைஞர்களுக்காகவே தன் வாழ்நாளைச் செலவழித்தார். எனவே நாமும் நமதுபிள்ளைகள் எதிர்காலம் நல்லமுறையில் அமையச் சிறுவயது முதலே அவர்களை இறைபற்றில் வளர்க்க அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
மரத்தைக் கொண்டே அதன் கனியை அறியலாம் என்று உரைத்த இயேசுவே! இளைய சமுதாயத்தைச் சிறுவயது முதலே ஞானவாழ்வில் வளர்த்திட அருள் தாரும். ஆமென்.