அருள்வாக்கு இன்று
ஏப்ரல் 29 - செவ்வாய்
இன்றைய நற்செய்தி
யோவான் 3:7-15

யோவான் 3:7-15
அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். யோவான் 3:15
இன்றைய நற்செய்தியில் உயிர்த்த ஆண்டவர் மோயீசன் பாலை நிலத்தில் பாம்பு உயர்த்தியது போல் மனுமகனும் உயர்த்தப்பட்டர். மீண்டும் உயிர்த்து சாவை வென்றார் என்பதை நம்புகின்ற அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். எனவே இறைமக்களாகிய நாம் உயர்த்த ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு அவரது போதனைகளை அடுத்தவரில் தடம் பதிக்கும்போது நாமும் நிலை வாழ்வு பெறுவோம். வாழ்கின்ற இந்த உலகம் நிலையற்றது. பொன்னும் பொருளும் உடன் வருவதில்லை. நாம் எதையெல்லாம் மண்ணுலகில் விதைக்கின்றோமோ அதையே ஒன்றுக்கு நூறாகப் பலன் பெறுவோம். அதுவே நிலைவாழ்வாகும் என்பனை உணர்ந்தவர்களாய் இறைவனை வேண்டுவோம்.
அன்பு இயேசுவே! நிலையில்லா உலகில் நிலை வாழ்வை அடைய எனக்கு வரம் தாரும்.ஆமென்.