அருள்வாக்கு இன்று

மார்ச் 31-ஞாயிறு

இன்றைய நற்செய்தி

யோவான் 20: 1-9


உயிர்ப்பு பெருவிழா

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

உயிர்ப்பு பெருவிழா
அருள்மொழி:

பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார், நம்பினார். யோவான் 20:8

வார்த்தை வாழ்வாக:

உயிர்ப்பு பெருவிழா புதிய காலத்தின் தோன்றலுக்கு மூல கல்லாய் அமைந்தது. இயேசுவின் உயிர்ப்பு ஒரு புது யுகத்திற்கு அச்சாரமாய் அமைந்தது. இயேசுவின் தலைமைச் சீடரான பேதுரு அன்று ஆதி திருச்சபைக்கு அளித்த மறையுரையே இன்றைய முதல் வாசகமாக அமைந்தது. யூதர்களுக்கு அஞ்சி மறைந்திருந்த சீடர்கள் ஆற்றல் பெற்று வெளிவரக் கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருபலமாக இருந்தது. அவர்கள் அழிந்து போகும் இவ்வுலக பொருள்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் அழியா வாழ்வு தரும் நிறைவாழ்வை பெறும் பொருட்டு தங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள் என்று சீடர்கள் அன்று அறிவித்தனர்.
தூய பவுலடிகளார் ஊணியல்பை கட்டுப்படுத்தி அன்பு - நீதி - நேர்மை - அமைதி - பொறுமை மதிப்பீடுகளை உயிர்த்த இயேசுவின் பலம் பெற்று சமுதாயத்தில் நிலை நாட்ட அழைப்பு விடுக்கின்றார். புனித பவுலடிகளார் வெற்று கல்லறையிலே மீட்பின் மறைபொருள் பொதிந்துள்ளது. நம் வாழ்வில் வெறுமை - துன்பம் - பொறாமை - சோதனை - வேதனை - ஏக்கம் - ஏளனம் போன்றவை கைவிடபடல் - நொறுக்கப்படல் புறக்கணிக்கப்படல் போன்றவை தொடரும்போது இறைமகனை நாம் துணை கொண்டு அனைத்தையும் முறியடிப்போம் என்பது திண்ணம்.

இறைவேண்டல்

உயிர்த்த இயேசுவே என் துயரங்களைப் புதைத்து விட்டு மீண்டும் உயிர்க்க வரம் தாரும் ஆமென்.

தவக்காலம்
தவக்கால தினசரி சிந்தனைகள் 2024


அன்பின்மடல் முகப்பு