அருள்வாக்கு இன்று

மார்ச் 27-

இன்றைய நற்செய்தி

மத்தேயு 26:14-45

இன்றைய புனிதர்


புனித ரூபர்ட்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர், “உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பானென உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். மத்தேயு 26-21

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு பந்தியில் உணவருந்திக் கொண்டிருந்தபோது உங்களுள் ஒருவன் காட்டிக் கொடுப்பான் என்று கூறுகின்றார். உறுதியாகக் கூறுகின்றார். அன்றைய சூழலில் இருந்த சீடர்களே பலர் பல விதமாக இருப்பதை மறைமுகமாக இந்தச் சமுதாயத்திற்கு உணர்த்துகின்றார். நாமும் பலர் இறைமகனை அறிந்தே அவரது இறைவார்த்தைகளை வியாபாரமாக நடத்தி பணம் சம்பாதிக்கின்றனர். இது இயேசுவையே பணத்திற்காக விற்பதாகும். வெளிநாட்டு உதவிகளைப் பெற்று தெருவுக்கு 4 சிற்றாலயங்களை எழுப்பிப் பணம் திரட்டும் நிலை என்று மாறும்?

சுயஆய்வு

  1. நான் என் சமுதாயத்தில் உறுதியாக ஊன்றியிருக்கின்றேனா?
  2. அலைபாயும் உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உம் நாமத்தை எங்கும் பறைசாற்றும் வரம் தாரும் ஆமென்.

தவக்காலம்
தவக்கால தினசரி சிந்தனைகள் 2024


அன்பின்மடல் முகப்பு