அருள்வாக்கு இன்று

மார்ச் 25-திங்கள்

இன்றைய நற்செய்தி

யோவான் 12: 1-11

இன்றைய புனிதர்


மங்கள வார்த்தை விழா

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள். ஆனால் நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை ; என்றார். யோவான் 12-8

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு ஏழைகளைப் பற்றி விவரிக்கின்றார். ஏழைகள் இவ்வுலகில் பலர் பேர் உண்டு எனது பிரசன்னம் என்றும் அவர்களோடு தான் இருக்கும். நீங்கள் ஏழைகள் பால் அன்பு கூர்ந்தால் அது எனக்கே செய்தவையாகும்ää நான் உங்களோடு இருக்க போவதில்லை என்பதை மறைமுகமாகச் சொல்கின்றார். ஆம் சகோதரர்களே இறைவன் என்றும் ஏழைகள் மத்தியில் உறைகின்றார். நமது பணியானது சமுதாயத்திற்குள் ஊடுருவும்போது இறைமகனின் மாட்சி வெளிப்படும் என்பதை மறவாதீர். எனவே தான் இயேசு ஏழைகளே நீங்கள் பேறு பெற்றவர்கள் என்று விளக்குகின்றார். நாம் இயேசுவின் சாட்சிகளாக வாழ்வோமா?

சுயஆய்வு

  1. நான் என் நிலை என்ன என்பதை உணர்கின்றேனா?
  2. என் அருகிலிருப்போருக்கு ஆறுதல் அளிக்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! ஏழைகளை இனம் கண்டு உதவும் மனம் தாரும் ஆமென்.

தவக்காலம்
தவக்கால தினசரி சிந்தனைகள் 2024


அன்பின்மடல் முகப்பு