அருள்வாக்கு இன்று
மார்ச் 16-சனி
இன்றைய நற்செய்தி
யோவான் 7 40-53
இன்றைய புனிதர்
புனித ஹெர்பர்ட்
யோவான் 7 40-53
புனித ஹெர்பர்ட்
காவலர் மறுமொழியாக, “அவரைப் போல எவரும் என்றுமே பேசியதில்லை” என்றனர். யோவான் 7: 46
இன்றைய நற்செய்தியில் இயேசுவை அன்றைய காவலர்கள் அவரைப் போல எவருமே பேசியதில்லை என்று இயேசுவின் போதனைகளைக் கேட்டு மதிமயங்கி போனார்கள். எப்படி எனில் அவரது போதனை நீதி-நேர்மை-அன்பு-பகிர்வு- சமத்துவம் மிக்கதாக இருந்தது. எனவே அவரது வார்த்தைகள் அவர்கள் காவல் பணியையே செய்ய முடியாமல் தடுத்தது. இன்று நாம் என்ன நிலையில் இருக்கின்றோம் சிந்திப்போம். இத்தவக் காலம் நமது வாழ்வை புரட்டிப் பார்க்கும் காலம். நமது கவனம் இறை செயல்பாட்டிற்குள் இருக்க வேண்டும். இறைவனது பாடுகள் நமக்குப் புகட்டும் பாடம் என்ன என்பதை சிந்திப்போம் வாழ்வில் செயல் வடிவம் கொடுப்போம்.
அன்பு இயேசுவே! உமது அருகிலிருந்து அன்பு செய்யும் வரம் தாரும் ஆமென்.