அருள்வாக்கு இன்று

மார்ச்11-திங்கள்

இன்றைய நற்செய்தி

யோவான் 4:43-54

இன்றைய புனிதர்


கோர்டோபாவின் புனித யூலோஜியுஸ்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

“உம் மகன் பிழைத்துக் கொள்வான்” என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர். யோவான் 4:54

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் சாகும் தருவாயில் இருந்த அரசு அலுவலர் மகனை அவர்கள் கேட்ட மாத்திரத்திலேயே ஒரே வார்த்தையில் குணம் பெற்ற செய்வார் என்பதை விசுவசித்த அவனின் பெற்றோர்கள், இயேசுவின் வார்த்தைகளை முழுமையாக நம்பினார்கள். அவர்கள் மகனும் சுகம் அடைந்தான். நம்பினோரை கை விடாதவர் நம் இயேசு. எனவே நாமும் நம் சுமைகளை-துன்பங்களை நோய்களை அனைத்தையும் அவர் பாதத்தில் நம்பிக்கையோடு வைப்போம். நாமும் இறைமகனின் அருள் அடையாளங்களையும் - புதுமைகளையும் சுவைப்போம். நம் வாழ்வில் நாம் புரியும் தொண்டிலும் இயேசுவை காண்போம்.

சுயஆய்வு

  1. நான் இயேசுவை விசுவசிக்கின்றேனா?
  2. எனது விசுவாசம் எப்படியுள்ளது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் மறையுடலின் ஓர் அங்கம் என்பதை உணரும் விசுவாசம் தாரும் ஆமென்

தவக்காலம்
தவக்கால தினசரி சிந்தனைகள் 2024


அன்பின்மடல் முகப்பு