அருள்வாக்கு இன்று

மார்ச் 10-ஞாயிறு

இன்றைய நற்செய்தி

யோவான் 3:14-21

இன்றைய புனிதர்


டோமினிக் சாவியோ

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். யோவான் 3:15

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தந்தை தன் மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் நிலைவாழ்வு பெறுவர் என்று கூறுகின்றார். ஆம் அன்பர்களே! தந்தை தன் மக்களை அழிவு பாதையினின்று மீட்டெடுக்கவே இவ்வுலகிற்கு மரியின் வழியாக அனுப்பினூர். அவரை ஏற்று கொண்டவர்கள் மீட்பு பெற்றனர் என்பதை நாம் உணர வேண்டும். இயேசுவின் வருகை வறியோருக்கு வாழ்வும் சமத்துவம் சகோதரத்துவம் மலர்ந்து அனைவரும் இறைவனில் ஒன்று என்ற சமநிலை மாற வேண்டும் என்பதே தந்தையின் ஆவல். அதனை நிறைவு செய்யவே இந்தப் புவி இறங்கினார் இயேசு !

சுயஆய்வு

  1. நான் இயேசுவின் கட்டளைகளை ஏற்கிறேனா?
  2. அதன்படி வாழ்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேவுவே! நான் உமது மதீப்பிடுகளின் படி வாழ வரம் தாரும் ஆமென்.

தவக்காலம்
தவக்கால தினசரி சிந்தனைகள் 2024


அன்பின்மடல் முகப்பு