அருள்வாக்கு இன்று

மார்ச் 8-வெள்ளி

இன்றைய நற்செய்தி

மாற்கு12: 28-34அருள் மொழி

இன்றைய புனிதர்


இறைவனின் புனித யோவான்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், “நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை” என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை. மாற்கு 12:34

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு அன்றைய சூழலில் திருச்சட்டத்தையே பற்றி வாதாடிக் கொண்டிருந்தவர்களை நோக்கி உன் கடவுள் ஒருவரே அவரை முழு உள்ளத்தோடும், ஆன்மாவோடும் ஆராதிப்பாயாக. அவரை அன்பு கூர்ந்து தன்னை அன்பு செய்வது போல் உனக்கு அடுத்திருப்பானையும் அன்பு செய்வாயாக என்று இயேசு கூறுகின்றார். இதனை அறிந்தவர்கள் மிகவும் தெளிவு பெற்றவர்களாய் நின்றார்கள். ஆம் இறைமக்களை கடவுள் ஒருவரே அவரது மக்கள் பலவிதம் அவர்களை எந்த நிலையிலும் கடந்து சென்று அன்பு செய்வது நாம் நமது இறைமகனுக்கு காட்டும் அன்பாகும்.

சுயஆய்வு

  1. நான் கடவுள் ஒருவர் என்பதை ஏற்கின்றேனா?
  2. அவரை அன்பு செய்து அடுத்தாரையும் அன்பு செய்கிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! மனித குலத்தின் மேல் கொண்ட அன்பினால் உமையே கையளித்தீர் இதனை உணரும் வரம் தாரும் ஆமென்.

தவக்காலம்
தவக்கால தினசரி சிந்தனைகள் 2024


அன்பின்மடல் முகப்பு