அருள்வாக்கு இன்று

மார்ச் 6-புதன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 5:17- 18

இன்றைய புனிதர்


புனித கொல்ட்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

“ விண்ணும் மண்ணும் ஒழியாதவரை, திருச் சட்டத்திலுள்ள அனைத்தும் நிறைவேறாதவரை, அச்சட்டத்தின் மிகச்சிறியதோர் எழுத்தோ அல்லது எழுத்தின் ஒரு கொம்போ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். மத்தேயு 5:18

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு திருச்சட்டத்தின் முக்கிய கூறுகளைப் பற்றி விளக்குகின்றார். அன்று மோயீசன் வாயிலாக பெறப்பட்ட சட்டமானது பல நிலைகளில் அவை திரிக்கப்பட்டு பல்வேறு கருத்துக்களை கொண்டு அடித்தட்டு மக்களிடையே உறவை புண்படுத்தியது. எனவே தான் இயேசு திருச்சட்டங்களின் ஒரு வார்த்தையை கூட பிசகாமல் அனைத்தும் தன் மக்களை சென்றடைய வேண்டுமென இரண்டு சட்டங்களாக கொடுத்து அனைவரையும் அன்பு செய்ய கருத்துரை முன் வைக்கின்றார். இதனை நாமும் ஏற்போம்.

சுயஆய்வு:

  1. நான் எனக்கு அடுத்தாரை அன்பு செய்கிறேனா?
  2. அன்பின் அடிப்படையில் என் வாழ்க்கை அமைகிறதா?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே! உமது இரண்டு கட்டளைகளை எனது வாழ்வில் கடைபிடிக்க வரம் தாரும் ஆமென்.

தவக்காலம்
தவக்கால தினசரி சிந்தனைகள் 2024


அன்பின்மடல் முகப்பு