அருள்வாக்கு இன்று

மார்ச் 3-ஞாயிறு

இன்றைய நற்செய்தி

யோவான் 2:13-25

இன்றைய புனிதர்


புனித கத்தரின் ட்ரெக்ஸ்செல்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

மனிதரைப் பற்றி அவருக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார். யோவான் 2-25

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு மனிதர்களின் உள்ளத்தை ஊடுருவிப் பார்க்கும் ஆற்றல் உண்டு என்பதை உணர்த்துகின்றார். தான் மெசியாவாக இவ்வுலகில் பிறந்து 33 ஆண்டுகள் நிறைவுறும் வேளையிலும் அந்த மக்கள் அவரை மெசியாவாக ஏற்றுக் கொள்ளாமல் இருந்தனர். காரணம் மெசியா தங்கள் உயர்குடியில் பிறப்பார். நாங்கள் தான் கடவுளுக்குச் சொந்தமானவர்கள் என்ற அகந்தையோடு இருந்தனர். அப்படிபட்ட கயவர்களின் முகத்திரையை கிழித்தெறியவே இறைமகள் எளிமையின் கோலம்பூண்டார். மனிதைனம் அனைவரும் இறைவனில் ஒன்றே! தன் தந்தையின் விருப்பத்தை நிறைவு செய்யவே இவ்வுலகில் பிறந்தார்.

சுயஆய்வு

  1. நான் இறைமகனின் விருப்பத்தை நிறைவேற்றுகின்றேனா?
  2. அதற்கான முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உள்ளத்தின் இரகசியங்களை ஊடுருவிப் பார்க்கின்றவரே! எனது உள்ளம் உமது ஆலயமாக மாற வரம் தாரும். ஆமென்.

தவக்காலம்
தவக்கால தினசரி சிந்தனைகள் 2024


அன்பின்மடல் முகப்பு