அருள்வாக்கு இன்று

ஏப்ரல்25-வியாழன்

இன்றைய நற்செய்தி

மாற்கு 16: 15-20

இன்றைய புனிதர்


புனித மாற்கு நற்செய்தியாளர்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்". மாற்கு 16: 15

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு நமக்குப் படைப்பிற்கெல்லாம் சென்று கிறிஸ்துவின் ஒவ்வொரு பணியையும் மூன்றாண்டு அவர் எதையெல்லாம் மண்ணுலகில் செய்தாரோ அவற்றையெல்லாம் அவரை அறியாத மக்களுக்கெல்லாம் சென்று அறிவிக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றார். நாமும் அவரது மறையுடலாக இருப்பதால் அவரது கனவை நனைவாக்க புறப்படுவோம் வாரீர். நிலைவாழ்வை அடையும் பொருட்டு நமது இந்த அழைப்பு இறைவார்த்தைகளை நமது வாழ்வாக்கிட நாம் தூயஆவியின் ஒளியில் விவிலியத்தை மறுவாசிப்பு செய்வோம். இன்றைய சூழலுக்கேற்ப வார்த்தை வழி நமது பயணம் அமையட்டும். அதற்கான வாய்ப்பினை உருவாக்கி நாமும் புனிதம் அடைவோம். அடுத்தவரையும் வாழ்வாக்குவோம்.

சுயஆய்வு

  1. நற்செய்தி என்னவென்பதை உணர்கின்றேனா?
  2. அதனை எனது வாழ்வில் கடைப்பிடிக்கிறேனா?

இறைவேண்டல்

உமது பணிக்காக என்னை உருவாக்கி, உமது அருளையும் எம்மேல் வழங்குவீர். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு