அருள்வாக்கு இன்று
ஏப்ரல் 21-ஞாயிறு
இன்றைய நற்செய்தி
யோவான். 10:11-18
இன்றைய புனிதர்
புனித அன்செலம்
யோவான். 10:11-18
புனித அன்செலம்
நல்ல ஆயன் நானே: தந்தை என்னை அறிந்திருக்கிறார். நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். யோவான். 10:14
இன்றைய நற்செய்தியில் இயேசு நல்ல ஆயன் நானே என்கின்றார். அதாவது நல்ல ஆயன் என்றால் தன் ஆடுகளை நன்றாக அறிந்திருத்தலாகும். ஒவ்வொரு சிறு குட்டியின் தன்மைகளை அறிந்து அவற்றின் போக்கின்படி சென்று அவற்றை வேறுபாடின்றிப் பேணிக் காத்தலாகும். இயேசு ஆயன் உவமை வழியாக நமக்கு உணர்த்துகின்றார். வாழ்கின்ற உலகம் பல்வேறு சூழல்களைக் கொண்டுள்ளது. ஓநாய்களும் உண்டு. அதனூடே இருக்கும் ஆடுகளைப் பாதுகாப்பதும் சிதறிப் போனவற்றைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றிற்கு நன்மைத் தீமைகளை விலக்கிப் பராமரிப்பது அவரது கடமையாகும் என்பதை நமக்கு விளக்குகின்றார். இறைமகன் விடுக்கும் செய்தியை உள்வாங்கி நல்ல ஆயனாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.
அன்பு இயேசுவே! உமது ஆடுகளைப் பராமரிக்குமாற்றலை எனக்குள் பதிவு செய்ய வரம் தாரும். ஆமென்.