அருள்வாக்கு இன்று

ஏப்ரல் 8-திங்கள்

இன்றைய நற்செய்தி

லூக்கா 1:26-38

இன்றைய புனிதர்


ஆண்டவருடைய பிறப்பின் அறிவுப்பு

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

பின்னர் மரியா. “நான் ஆண்டவரின் அடிமை: உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார். லூக்கா 1:38

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் பிறப்பு கபிரியேல் வானத்தூதர் வழியாக மரியாளுக்கு வழங்கப்படுகின்றது. அந்த இறைவார்த்தைகளை கேட்ட மாத்திரத்தில் மரியா கலக்கமுறுகின்றார். இருப்பினும் கடவுளின் வல்லமையை வானத்தூதரின் வாயிலாக உணர்ந்த மரியா இறைவார்த்தையின்படியே எனக்கு நிகழட்டும் என்று ஏற்று கொண்ட இந்தத் தாய் பேறுபெற்றவள். வார்த்தை மனுவுருவானார். நம்மிடையே பிறந்தார். நமக்காகத் தன் உயிரையே பலியாக்கினார். எனவே தான் அன்னை மரியா விண்ணுக்கும் மண்ணுக்கும் உறவு பாலமாகத் திகழ்கின்றார். இது இறைவனின் திட்டம் அவரது திட்டத்தில் மரியாள் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கின்றார். இந்த உலகமாந்தருக்கு மரியாளின் பிறப்பும், செயல்பாடுகளும் பெரும்உயர்வை தருகின்றது. விண்ணுக்கும் மண்ணுக்கும் அரசியாக முடி சூடப்படுகிறன்றார்.

சுயஆய்வு

  1. இறைவார்த்தைகள் உயிருள்ளது என்பதை உணர்கின்றேனா?
  2. அந்த வார்த்தைகளின்படி வாழ எனது முயற்சி என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! இவ்வுலகில் வாழும் அனைத்துமாந்தரும் உமது அன்னையின் அரவணைப்பில் வாழும் அருள் தாரும். ஆமென்.



அன்பின்மடல் முகப்பு