அருள்வாக்கு இன்று

ஏப்ரல் 5-வெள்ளி

இன்றைய நற்செய்தி

யோவான் 21:1-14

இன்றைய புனிதர்


சிலுவையின் புனித ஜான் யோசேப்பு

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்: மீனையும் அவ்வாறே கொடுத்தார். யோவான் 21:13

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் உயிர்த்த இயேசு மூன்றாம் முறையாகத் தன் சீடர்களுக்குத் தோன்றி தான் எதைச் செய்கிறார் என்பதை தம் சீடர்கள் உணரும் வண்ணம் அப்பத்தையும் - மீனையும் கொடுத்துத் தன்னை வெளிப்படுத்துகின்றார். ஆம் சகோதரர்களே நாம் உயிர்த்த ஆண்டவரை மனதில் கொண்டு அவர் நாற்பது நாட்கள் தம் சீடர்களுக்குத் தன் உயிர்ப்பை வெளிப்படுத்துகின்றார். நாமும் இந்த நாற்பது நாட்கள் இறைமகனின் பிரசன்னத்தில் வாழ அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்தவர்களாய் நாம் உயிர்ப்பு காலத்தை நற்செயல்களால் வெளிப்படுத்துவோம்.

சுயஆய்வு

  1. நான் இயேசுவின் திருவிருந்தில் தகுந்த முறையில் பங்கேற்கிறேனா?
  2. என்னை முழுவதும் இறைவனுக்கு அளிக்க தயாரா?

இறைவேண்டல்

அன்பு உயிர்த்த இயேசுவே என்னையும் உமது பணியில் உடன் பணியாளியாக மாற்றியருளும் ஆமென்.



அன்பின்மடல் முகப்பு