அருள்வாக்கு இன்று

ஏப்ரல்1-திங்கள்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 28:8-15

இன்றைய புனிதர்


புனித ஹியூக்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அப்பொழுது இயேசு அவர்களிடம், "அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்" என்றார். மத்தேயு 28:10

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் உயிர்த்துவிட்ட செய்தியைத் தன் சீடர்களுக்குப் போய்ச் சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்று சொல்லி அனுப்புகிறார். இறந்த இயேசு சொன்னபடியே உயிர்த்துவிட்டார். கண்டதையும் கேட்டதையும் மக்களுக்குப் பறை சாற்றுங்கள். ஏனெனில் கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். ஆனால் கிறிஸ்து உயிர்த்ததை மக்கள் அறிந்து கொண்டால் உண்மைக் கடவுள் அவர் தான் என்று சான்றுப் பகர நேரிடும் என்ற ஆதங்கத்தில் ”இயேசுவை யாரோ திருடிச் சென்று விட்டார்கள்” என்று சொல்லுங்கள் என்று யூதர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். பேசிக் கொண்டபடிப் பணத்தைப் பெற்றுக் கொண்டு சென்று விட்டார்கள். ஆனால் இது நாள்வரை இந்த வதந்தி யூதர்களிடையே பரவி வருகின்றது.

சுயஆய்வு

  1. உயிர்த்த ஆண்டவரைப் பறைச் சாற்ற என் முயற்சி யாது?
  2. "கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார்" என்றவரை அறிகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! எல்லாரும் எல்லாம் பெற்று இன்புற வேண்டிய வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு