அருள்வாக்கு இன்று
ஜனவரி 15,வெள்ளி
இன்றைய நற்செய்தி
மாற்கு 2:1-12
இன்றைய புனிதர்

புனித வனத்து சின்னப்பர்
மாற்கு 2:1-12
புனித வனத்து சின்னப்பர்
"நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ" என்றார். மாற்கு 2:11
இன்றைய நற்செய்தியில் இயேசு முடக்குவாதக்காரனுக்குக் குணமளிக்கின்றார். எப்படிஎனில் முடக்கு வாக்காரனை நோக்கி உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன உன்றார். அவன் நோய் குணமானது. இரண்டும் அவனுக்கு நடந்துள்ளது. பாவச்சுமையாலும் நோய்கள் தாக்கும் என்பதற்கு இது ஒரு சான்றாகும். தன் வினைத் தன்னைச் சுடும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
ஆம் இறைமக்களே, நாம் அடுத்தவருக்கோ அல்லது தமது உறவுகளுக்கோ மாசுபடியோ தவறு செய்யக் கூடாது. இறைவனின் படைப்பில் அனைவரும் ஒன்றே என்ற நிலை நமக்குள் உருவெடுக்க வேண்டும். அப்போது இறையரசை நாம் கட்டியெழுப்ப முடியும் பாவச்சுமையால் நோயின் பிடியில் சிக்கும் மாந்தரை நாமும் காக்கமுடியும். எனவே நாம் நம்மைத் தெளிவுபடுத்தி; கொள்ள மறைநூலை நன்கு பொருள்பட வாசித்துத் தியானிக்க வாழ்வாக்கிட ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.
அன்பு இயேசுவே! உமது வார்த்தைகள் பலவித ஆற்றலைக் கொண்டுள்ளது.